Showing posts with label ரஞ்சிதா. Show all posts
Showing posts with label ரஞ்சிதா. Show all posts

Saturday, June 09, 2012

ஆர்த்திராவ் நித்யானந்தாவை மாட்ட வைத்தது எப்படி? ஜூ வி கட்டுரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSISw0op29irRYN6ssutfJQSnKXqiOMuhhzks500ZH5E2gfii9WB2WrRZheiovnsg3QCBX8ZwLgoAIBvLupgq6uY1XPD4mUrifln42DiA_29PvI89Nc-LNgB8Vjo_UMz3VMvnak0zq-c8/s1600/Swamiji+with++NIYF.JPG''நித்தியானந்தரை என் குருவாக​வும் கடவுளாகவும் நினைத்து ஆறு வருடங்களாக அவரது தீவிர பக்தையாக இருந்தேன். இன்று ஏமாந்து உங்கள் முன் நிற்கிறேன்...'' என்று சோகத்துடன் சொல்கிறார் ஆர்த்தி ராவ். 




யார் இந்த ஆர்த்தி ராவ்?


 14.3.10 ஜூ.வி-யில் 'கேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும், 12.6.11 ஜூ.வி-யில் 'வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்..?’ என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையில் ரஞ்சிதா, 'நான் நித்தியானந்தருடன் இருப்பதைப் போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என வழக்கு தொடர்ந்து இருப்பதையும், வீடியோ விவகாரத்தில் ஆர்த்தி ராவுக்கு முக்கியப் பங்கு இருப்​பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.



அதைப் பற்றிதான் இப்போது கன்னட சேனல் ஒன்றில் ஆர்த்தி ராவ் வாய் திறந்திருக்கிறார். ''நான் நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அங்கேயே ஒருத்தரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டேன்.


 எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். அப்போதுதான் என் பயணம் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 

சி.பி - ஓஹோ.. அவர் தான் உங்களை பயன் படுத்துனார்.. அதை சாக்கா வெச்சு இப்போ நீங்க உங்க சுய நலத்துக்கு அந்த மேட்டரை பயன் படுத்திக்கறீங்க? 

 http://www.envazhi.com/wp-content/uploads/2010/12/ranjitha-123211.jpg


'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன் - ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பினேன்.

சி.பி - அடடா.. ஜீவ முக்தி  அடையறதுதுதான் ஆன்மீகப்பணியா?  அய்யய்யோ, மதுரைல எத்தனை பேர் இப்படி ஜீவ முக்தி அடைஞ்சுட்டு இருக்காங்களோ தெரியலையே?


லெனின் கருப்பன் என்னிடம், 'ஜீவ முக்தி என்று பொய் சொல்லி நித்தியானந்தர் ஏமாற்றுகிறார்’ என்று சொன்னார். அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் நித்தியானந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. நித்தியானந்தரின் அறைக்குள் இருக்கும் ஏர் பியூரிஃபையர் மெஷினுக்குள் ரகசிய கேமரா ஒன்றை நான் பொருத்தி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கேமராவை எடுத்து ஓடவிட்டுப் பார்த்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. கேமராவை வேறு யாராவது வைத்திருந்தால்கூட, நான் அதை மார்ஃபிங் என்று நினைத்திருப்பேன். நானே வைத்ததால் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உடனே, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்''


 என்கிறார்.



ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா என்ன சொல்கிறார்?


''கடந்த 2004-ம் ஆண்டு கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் ஆர்த்தி ராவ் என்ற பெண் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். ஆசிரமத்தில் ஒரு பக்தையாகத்தான் வந்து போவாரே தவிர அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. ஹெர்பீஸ் டூ என்ற அந்தக் கொடிய பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது. 


ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, என் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் எனக்கும் அந்த நோய் வந்திருக்க வேண்டும் அல்லவா..?

 சி.பி - அது எப்படி வரும்? நீங்க தான் புத்திசாலித்தனமா காண்டம் யூஸ் பண்றதா  ஐரோப்பா கண்டமே சொல்லுதே?

அமெரிக்காவில், குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நித்தியானந்தரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை செய்திருக்கிறார். அவர் ஒரு ஃபிராடு. அமெரிக்கப் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி. இன்றுவரை அவர் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். லெனின் கருப்பனோடு சேர்ந்து ஆசிரமத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார்.


 பொய்யான ஒரு வீடியோவைத் தயாரித்து ரஞ்சிதாவை மிரட்டி இருக்கிறார். ரஞ்சிதாவும் அப்போதே போலீஸில் புகார் செய்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.


இப்போது நான் மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர்தான், இந்த ஆர்த்தி ராவைத் தூண்டி விட்டு எனக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார்கள். ஆர்த்தி ராவ் விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.


தலை சுத்துதுடா சாமி!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBLFbH6cGUPbhjtNdFyEmvNO4w_SaYaN8zwqJC_nb9Mks36yiVh4ArWmZSLZHd6i5G8jfmZCGvdz3eBtw8wTv1tWINMLiCu2n1EqTuPjrIWuDccSB6uqVhBEvYnwcMfA2uP44FVG9OT6i/s1600/ranjitha.jpg

Wednesday, May 16, 2012

ஜெயேந்திரர் ரஞ்சிதாவிடம் பம்முவது ஏன்? கோர்ட் காட்சிகள்

திலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். 
கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார்.


 சி.பி - சாமியார், ஆதீனம் இந்த மாதிரி துறவிகள் எதுக்கு சுற்றுப்பயணம்கற பேர்ல ஊர் சுத்தறாங்க? மனசுக்குள்ள ஜனாதிபதின்னு நினப்பா? 


 ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. 


சி.பி - இதெல்லாம் ஒரு பிரச்சனையா?  அவர் தான் இந்துக்கள் அனைவர்க்கும் காது குத்தி மொட்டை போட்டுட்டாரே.. போதாதா?


அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது.



சி.பி - ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.. நித்தி எப்போதும் ஜிஞ்ஜிதா வுடன் தான் இருக்கிறார் என்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பலருடன் இருப்பார். 10 ஓடு 11 தான் அவர் ஹி ஹி 


''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா.



 



எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார்.



 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார்.


ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார்.

http://2.bp.blogspot.com/-M98tr8t_cvE/TlsDzGnQAnI/AAAAAAAAC_8/IhqGJPIaeWo/s1600/Actress-Ranjitha-Hot-First-Night-Pictures.jpg


ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.


ஜெயேந்திரரின் கருத்தை அறிய,  காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.


 அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர்.


இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம்.


சி.பி - விடம்மா விடம்மா.. இதெல்லாம் பெரிய மேட்டரா? டைம் லைன்ல ஏடாகூடமா பேசிட்டு டி எம் ல கால்ல விழறது தமிழர்களூக்குபுதுசா என்ன? அட்ஜஸ் பண்ணிக்குங்க..  


http://schlaepfer-beck.ch/wp-content/uploads/2011/08/ranjitha-i0.jpg


மக்கள் கருத்து 


1.ஜெயந்திரர் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்க வேண்டும். மடாதிபதி என்பதால் யாரை வேண்டுமானாலும் நிந்திக்கலாம் என்ற அகங்காரம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா விஷயத்திலும் பின்பற்றலாம். இனி "பேச்சுரிமை" என்று அசிங்கமாக (தேர்தல் மேடைகளில் ஜெஜெ-வை திட்டியது ஒரு உதாரணம் - இதில் எல்லா கட்சிகளும் அடக்கம், ஜெஜெ ஒரு உதாரணமே), ஆபாசமாக, பூடகமாக பேசுவது குறைந்தால் மக்கள் குறைகளை, தேவைகளை பற்றி பேசுவார்களோ என்னமோ?

காஞ்சி மடாதிபதி என்றால் என்ன? இன்னமும் எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும் ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மனிதரை தங்கள் தலைவராக அல்லவா ஒரு கூட்டமே (அல்லது சமுதாயமே) ஏற்று கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் இது போல கீழ்தரமாக பேசுபவர்கள் என்ற எண்ணத்தை அல்லவா இது தோற்றுவிக்கிறது.

பகிங்கரமாக மன்னிப்பு கேட்டால் இவரின் மதிப்பு கூடுமே தவிர குறையாது (குறைவது போல தோன்றினாலும்). தன் தவறை உணர்ந்து அதற்காக தைரியமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தெளிவானவர் என்று. இதனை மூடி மறைத்தால் அது இவருக்குதான் இன்னமும் அசிங்கம் - ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி அவமானப்பட்டவர்..


2.Cavitha3
ரஞ்சிதா இந்தியாவின் பலம் மிக்க பெண்களில் ஒருவர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே. ஒரு பெண்ணின் உடலுக்கு இவ்வளவு சக்தியா
3. Senthilnathan3
இந்த சாமியார்கள் சண்டை மாமியார்கள் சண்டைய மிஞ்சிடும் போலிருக்கே!
4.
Thiyagarajan4 Hours ago
எதற்காக ஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ! நித்தி மொட்டையா போட்டுக் கொண்டு ஆதீனகர்த்தா ஆகியுள்ளார்? ரஞ்சிதா நித்தி கூடவே இல்லையா? உண்மையைத்தானே கூறியுள்ளார் ! உண்மை சுடும் ! சுடட்டுமே !
5. Suresh6 Hours ago
ஒரு பிராடிற்கு உன்னொரு பிராடு மேல் இருக்கும் வயிற்றெரிச்சல். வேறென்ன சொல்ல. 
1.சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே?
  பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?


பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும்.


'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டு​களாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்!



2. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே? 



கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள்.



நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்!





3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே? 


இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது!




4. புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே? 


காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!



5.   2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்? 



உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது.


122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்து​கின்றன இந்தக் காட்சிகள்!



6.மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே? 


உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்!



7. கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே?


அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!



அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு!



8. ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்? 


தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது.


'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்!



9. லோக் பால் மசோதா அவ்வளவுதானா? 


இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டு​விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

Monday, April 30, 2012

நித்யானந்தா - மதுரை -ஆதீனம் - ரஞ்சிதா - கிடாவெட்டு

:"http://www.onlinesrilanka.com/plog-content/thumbs/events/ranjitha-and-nithyananda-press-meet/large/2595-ranjitha130711_9.jpg"நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல், ரஞ்சிதா வந்து செல்கிறார்,'' என மதுரையில் சாமியார் நித்யானந்தா கூறினார்.


 சி.பி - சும்மா ரீல் உடாதீங்க.. ரஞ்சிதா ஆசிரமத்துக்கு வந்தாரு, ஓக்கே, எப்போ போனாரு? ஹி ஹி , அவருக்கு குடி இருக்கும் கோயிலே உங்க ஆசிரமம் தானே?

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக முடிசூட்டிய பின், முதன்முறையாக நேற்று மடத்திற்கு வந்த சாமியார் நித்யானந்தா, ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவித்தார். நித்யானந்தாவுக்கும் அணிவிக்கப்பட்டது.


சி.பி - அந்த தங்க கிரீடத்தை மார்வாடில வெச்சு உருக்கி ஒட்டியானமா மாத்தி ரஞ்சிதாவுக்கு தரப்போறாராம்.. கிசு கிசு



மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான நான்கு கோவில்களுக்கு இந்தாண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


சி.பி - அதுக்கு தை (THIGH) ஸ்பெஷலிஸ்ட்  நடிகை ரம்பாவை வரச்சொல்லிட்டா எதுகை மோனையா ரம்பாபிஷேகம் இன் கோயில் கும்பாபிஷேகம்னு நியூஸ் டைட்டில் வைக்கலாம். 


.:மடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்.
சி.பி - ஆதீனம் பதவி எனக்கு, ரஞ்சிதா உனக்கு அப்டினு ஏதாவது டீலிங்கா? 
 
மே 5ல், திருவண்ணாமலையில் ஆதீனத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க பாதுகை வழங்கப்படும். ஜூன் 5ல் கனகாபிஷேகம் செய்யப்படும். நானும், எனது சீடர்களும் மற்றும் அசையும், அசையா சொத்துகளும் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்.



சி.பி - அசையும் சொத்துகளை வளைச்சுப்போடறதுல நித்யா கில்லாடி ஆச்சே?


என்னை நியமிக்க முதலில் ஆதீனம் தான் விருப்பம் தெரிவித்தார். "என் மீது வதந்திகளை பரப்பி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அது உங்களுக்கு(ஆதீனம்) பிரச்னையை ஏற்படுத்துமே' என கேட்டேன். அதற்கு அவர், "உங்களை கண்டு உணர்ந்த பின், பீடாதிபதியாக்கா விட்டால், அது வரலாற்று பிழையாகி விடும். எது வந்தாலும் அதை எதிர்கொள்வோம்' என்றார்.


 சி.பி - இப்போ நடந்தது வரலாற்றுப்பிழை இல்லைய்யா.. அழிக்க முடியாத அவமானம்..


"சிடி' விவகாரத்தில், எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல் ரஞ்சிதாவும் வந்து செல்கிறார்.



சி.பி - அது ஆன்மீகப்பயிற்சி அல்ல.. கட்டிப்பிடி வைத்தியம் வித் எ குட்டி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9SXt91vhfqaTbOBgoQot4EYGM42tUIS7iGadDMdT6GROBJrBx_-w7lTf69NWPy6GNFa6ityU2cOwWiAsICN0v-M1CHRgUhXHjEeuIpDdN_XEQVtizSy6ZCPqnM5BBDgguwuO5lU28vqw/s1600/Actress+Ranjitha+Latest+Press+Meet+Photos+%25288%2529.jpg

ரஞ்சிதா வரவில்லை: விரைவில், 100 கிராமங்களில், பள்ளி, கல்லூரிகள் கட்டுவது குறித்து ஜூன் 5ல் அறிவிப்பேன். ஆதீன மடத்தை நிர்வகிக்க 50 ஆண், பெண் சீடர்களை அனுப்பி உள்ளேன், என்றார். நேற்று, மதுரை ஆதீன மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரஞ்சிதா வரவில்லை என நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.


சி.பி - 50 ஜோடிங்க நிர்வாகம் பண்ண வரப்போறாங்களா? ஐ ஜாலி. மதுரை போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்..?

ஆதீன உத்தரவுப்படி...:"ஆதீனம் போன்று நீங்களும் அரசியல் ஈடுபாட்டுடன் இருப்பீர்களா? பெங்களூருவில் வசிக்கும் நீங்கள், மதுரை ஆதீன மடத்திற்கு அடிக்கடி வருவீர்களா, இல்லை இங்கேயே தங்குவீர்களா? பெங்களூருவை போன்று "ஹீலிங்' பயிற்சி மடத்தில் நடத்தப்படுமா? என நிருபர்கள் அடுத்தடுத்து கேட்டதற்கு, "ஆதீனம் என்ன உத்தரவிடுகிறாரோ, அதன்படி நடப்பேன்' என்ற நித்யானந்தா, "லண்டனில் வெளிவரும் பத்திரிகை ஒன்று, பாப்புலரான 100 பேரில் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளது,' என்றார்.



சி.பி - ஆமா அந்த பாப்புலர்ல  பல டிக்கெட்டுங்க பேர் எல்லாம் பார்த்தேன்.. 

"நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்':""நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர் அவர்,'' என மதுரை ஆதீனம் கூறினார்.


சி.பி - அந்தாளுக்கே பல நோய் இருக்காம்..   அப்படியே உங்க நோயை அவர் குணப்படுத்தி இருந்தா  அவரை ஜி ஹெச் ல கவுரவங்கெட்ட டாக்டர் ஆகி இருக்கலாம்.. எதுக்கு மதுரை ஆதீனம் ஆக்கி இருக்கீங்க?

ஆபாச "சிடி' சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஏப்., 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 


சி.பி - வெறும் கண்டனம் மட்டும் தானா? போராட்டம் எல்லாம் பண்ணலையா? ஆன்மீகம் தழைக்கனும்னா அந்தாளை ஊரை விட்டு ஒதுக்கனும்



இச்சூழலில், நேற்று நித்யானந்தாவுடன் மதுரை திரும்பிய ஆதீனம் கூறியதாவது :


சி.பி - அய்யய்யோ , அந்தாள் கூடவா ஒரே கூப்பேல வந்தீங்க.. ஆபத்தாச்சே? ஆண், பெண் பாகுபாடே பார்க்க மாட்டாரே/

ஞானம், புலமை, போர்க்குணம் உடைய நித்யானந்தா கிடைத்தது, நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர். நோய் இருந்தால் அவரை அணுகுங்கள்.நித்யானந்தாவை தேர்ந்தெடுத்ததற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பது, அவர்களின் அறியாமை, பொறாமையைக் காட்டுகிறது. நித்யானந்தாவை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.


சி.பி - ஓஹோ, நீங்க தான் விளக்கு பிடிச்சு பார்த்தீங்களா?

http://moviegalleri.net/wp-content/gallery/ranjitha-press-meet/ranjitha_press_meet_178.jpg

யாரை நியமிக்கலாம் என எட்டு ஆண்டுகளாக தேடுதல் இருந்தது. பெங்களூருவில் நித்யானந்தாவை சந்தித்தபோது, அவரை நியமிக்கலாம் என உள்ளத்தில் உதித்தது. அங்கு அவருக்கு பக்தர்கள் அதிகம் என்பதால், அங்கேயே முடிசூட்டினேன்.ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இப்பதவியை அவர் பெறவில்லை. அத்தொகை கொடுத்தது குருவுக்கு செய்யும் பாதகாணிக்கை. மீனாட்சி அம்மன் கோவில் 1865க்கு முன், மதுரை ஆதீன கட்டுப்பாட்டில் இருந்தது. பின், அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் கோவிலை ஆதீனம் நிர்வாகத்திற்கே தரவேண்டும் என நித்யானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.


சி.பி - ஒரு கேடி கொடுத்தாரே ஒரு கோடி.. அதற்குப்பின்னணியில் ஒரு லேடி

எனக்கு ஓராண்டாக போலீஸ் பாதுகாப்பு இல்லை. மீண்டும் கேட்டுள்ளேன். ஆதீன மடத்தில் ஓட்டல் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை. காலி செய்ய கூறியுள்ளேன். அதேபோல், மதுரை ஜாரிபுதுக்கோட்டையில், மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன். இரண்டையும் ஒப்படைக்காத பட்சத்தில், போலீசில் புகார் செய்வேன், என்றார்.

ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.


சி.பி - தூக்கி நிறுத்தப்போறீங்களா? அவர் வந்தா எல்லாரையும் படுக்க வெச்சுடுவாரே?


http://www.cinemahour.com/gallery/cinenews/72674952ranjitha1.jpg
மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.


சி.பி - குத்தாட்டத்துக்கு  ரஞ்சிதா வர்லையா? ஏன்?  தன் செட்டப் தான் தனக்கு மட்டும் தான், சொந்தம் தான் அதை நான் விட்டுத்தர மாட்டேன்னு அண்ணன் பாடுனாரா?



சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பின், அவர் கூறியதாவது:சூழ்நிலை கைதிபல்வேறு தடைகளை (நித்யானந்தா சீடர்கள்) தாண்டி, அவரை சந்தித்தேன். அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்.நித்யானந்தாவை நியமித்தது குறித்து கேட்டதற்கு, "இதுகுறித்து யாரிடமும் பேச முடியாது. யாருக்கும் தகுதி கிடையாது' என்றார். எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து, மடத்தில் ஏற்பட்டுள்ள சூழலை மாற்ற வேண்டும்,'' என் றார்.பின், ஆதீனத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் கோஷமிட்டனர். பதிலுக்கு, நித்யானந்தா சீடர்கள் கோஷமிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரை போலீசார் வெளியேற்றினர்.

பல வழக்குகள்:அர்ஜுன் சம்பத் கூறியதாவது :ஆதீன மடத்தில் நடந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரிசை, முன்கூட்டியே தேர்வு செய்து, பயிற்றுவித்து, சிவதீட்சை கொடுத்த பின் தான் நியமிப்பர். ஆனால், பல வழக்குகள் உடைய, சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை திடீரென தேர்ந்தெடுத்தது ஏன்? முறையாக தேர்வு நடந்ததா என, ஆதீனம் விளக்க வேண்டும் என்றார். 

https://bharatabharati.files.wordpress.com/2012/04/nithy-embraced-by-female-disciple.jpg?w=468



1.  ஆசிரமத்தில் ரஞ்சிதாவை அனுமதிப்பது ஏன்?நித்யானந்தா விளக்கம் # இவரு பெரிய RTO , நேஷனல் பர்மிட் கொடுத்துட்டு, அதுக்கு விளக்கம் கொடுக்குது


-----------------------------


2.  மதுரை இனி மனோரஞ்சிதம் என அழைக்கப்படும் - மதுரை ஆதீனம் அதிரடி அறிவிப்பு! ஜெ திகைப்பு, கலைஞர் கெக்கலிப்பு!


------------------------------

3. மதுரை மீனாட்சி அம்மன்.. பார்த்து பத்திரமா இருக்கவும், கோயில் பிரகாரக்கதவை உட்புறமாக தாளிட்டுக்கொள்ளவும் ஹி ஹி # நித்தி தான் ஆதீனம்


--------------------------------

4. மதுரை வாழ் பெண்களுக்கு ஒரு அபாய அறிவிப்பு, நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகி விட்டார், அவரவர் கற்பை பத்திரமாக பார்த்துகொள்க, தொலைந்தால் அரசு பொறுப்பல்ல


---------------------------


5.  சிவன் - ஹாய் , பார்வதி! ஏன் கோயிலுக்கு வெளியே நிக்கறே?


 மதுரை மீனாட்சி - உள்ளே நித்யானந்தா இருக்காரு


------------------------------

http://api.ning.com/files/hgYIDJnwI-qQaztTXOcd8ZR9jVoEFo8Ty-QuehU7cFfLVjuHLj484AsvdcSCnrP52IcjqyI9fY77uatr6Lgb9LuLVoD9WB*q/sannidhanam.jpg?width=600

6. எல்லா பெண்களூம் ரொம்ப சிரமத்துல இருக்காங்க.. 

 ஏன்? 

 குரு ஆசிரமத்துல இருக்காரே?


---------------------------------------

7. லேடி - குருவே! சித்தி அடைய  என்ன செய்யனும்? 


குரு - முதல் கட்டமா (COT டமா) நீ நித்தியை அடையனும்



--------------------------

8. முன்னாள் மதுரை ஆதீனத்துக்கு இளைப்பு நோய், அதை நித்தி சரி செஞ்சதால ஆதீனம் பதவி அளீக்கப்பட்டதுன்னா அது இந்து மதத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. அப்புறம் ஆளாளூக்கு சித்த வைத்தியர்களையே ஆதீனமா போட ஆரம்பிச்சுட்டா?

-------------------------

9. "ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்".#இவரிடம் இந்த பணம் எப்படி வந்தது? சில நாட்களுக்கு முன்னர் தான் பத்திரிக்கையாளர் மத்தியில் "நான் சாமியார் என்னிடம் பணம் இல்லை" னு  சொன்னாரே?


--------------------------

10. ரஞ்சிதா இனி ரஞ்”சீதா” - மதுரை ஆதீனம் அறிவிப்பு # ஆ” தீனா”


-------------------------


11. மேடம், உங்களுக்கு வந்த வீசிங்க் ட்ரபுள் எப்படி சரி ஆச்சு?


  ரஞ்சிதா -எல்லாம் குருவின் ஆசி + “ கை” ராசி


------------------------------

12. கண்ணா! என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு # கண்ணே! ஆசிரமத்தில் சேலைக்கு என்ன வேலை?


------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy0h_dSmvYC7J_JyV9PrxFkC1FRKDpHE4uYCPJP3pTqBVkpvzQCElhpDP4MoqKu51Fr9kWQrWsV_CGiKLqwrVGeT7CeaWCqxA4l5yGSc_jbljhs_cf01hRrj1Rr-fcnDiuVmLrxVlJaRsk/a

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்.