Showing posts with label புதுப்படம். Show all posts
Showing posts with label புதுப்படம். Show all posts

Wednesday, September 22, 2010

வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

 
ஒரு புலனாய்வுப்படத்துக்கு ஆடை வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட படமோ என வியக்கும் வண்ணம் போலீஸ் ஆஃபீஸராக வரும் ஹீரோக்கள் இருவருக்கும் யூனிஃபார்மிலும் சரி,சிவில் டிரஸ்ஸிலும் சரி கலக்கலான டிரஸ்ஸிங்க் சென்ஸோடு எடுக்கப்பட்ட படம் இது.

ராஜநீதி என்ற பெயரில் கேரளத்தில் சக்கைபோடு போட்ட மலையாள டப்பிங் படம்தான் இந்த வந்தேமாதரம்.கதை என்று புதிதாக ஏதுமில்லை,விஜய்காந்தின் மாமூல் ஃபார்முலாதான்.பாகிஸ்தான் தீவிரவாதி,இந்தியாவில் சதி,ஹீரோக்கள் முறியடிப்பு என புளித்துப்போன கதைதான்.ஆனால் காட்சி அமைப்பில் ,திரைக்கதையில் வித்யாசமும்,வேகமும் காட்டி இருக்கிறார்கள். 



அர்ஜூன் எந்த பில்டப்பும் தராமல் சாதாரணமாக அறிமுகமாகும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏர்ஹோஸ்டலாக வரும் சினேகாவும்,உளவுத்துறை அதிகாரியாக வரும் மம்முட்டியும் படத்தின் ஓப்பனிங்கில் வரும் பாடல் காட்சியான சஞ்சீவனா என் ஜீவனா பாடலில் சினேகாவுக்கு கிளாமர் தூக்கல் ரகம்.(எனக்கு ஒரு சந்தேகம்,இங்கே போர்த்தி நடிக்கும் நடிகைகள் ஆந்திராவில்,கேரளாவில் மட்டும் தாராளம் காட்டுவது ஏன்?

எடுத்துக்கொண்ட கேஸ் படிப்படியாக முன்னேறி வரும்போது,வெற்றிகரமாக ஹீரோக்கள் நடந்து வரும்போது போடும் பின்னணி இசை அசத்தல் ரகம்.தொடர்ந்து வரும் கன்யாகுமரி,தேங்காய்பட்டினம் லொக்கேஷனும்,ஒளிப்பதிவும் அற்புதம்.



எனக்குத்தெரிந்து தீவிரவாதியை விசாரணை செய்கையில் அதிகபட்ச சித்திரவதை காட்டப்பட்டது (தமிழில்)திருப்பதிசாமி இயக்கி,விஜய்காந்த் நடித்த நரசிம்மா தான்.(நம்பவே முடியாத காட்சி அமைப்புகள்).அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது இந்தப்படத்தின் சித்திரவதைக்காட்சிகள்.விசாரணை நடக்கையில் எமோஷனல் ஆகும் மம்முட்டி அருகில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் மேல் கை வைக்கும் ஆவேச நடிப்பு தூள்.

ரியாஸ்கானின் குத்துப்பாட்டுக்கான ஆட்டம்,இயக்குநர் ராஜ்கபூரின் வில்லத்தன நடிப்பு எல்லாம் அருமை.அர்ஜூன் ரியாஸ் சம்பந்தப்பட்ட சேஸிங்க் காட்சிகள் செம பரபரப்பு( கமலின் விக்ரம் படத்துக்குப்பின்)அனிமல் பிளானட் சேனலில் சிறுத்தை மானை துரத்துவது போல என்ன ஒரு விறுவிறுப்பு?



 

கஷ்டப்பட்டு பிடிக்கப்பட்ட வில்லனின் கையாள் டாக்டர் 2 ஹீரோக்கள் முன்னிலையில் சர்வ சாதரணமாக தற்கொலை செய்வது எப்படி?
செல்ஃபோனில் வில்லன் பேசும்போது சிக்னல் லொக்கேட்டர் வைத்து பேசும் இடத்தை கண்டறிவதை பாமரனும் கை தட்டும் விதத்தில் படமாக்கிய இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

அதே போல் பாம் பிளாஸ்ட் சீன் மிக தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்க் என அனைவரும் கை கோர்த்து கலக்கிய சீன் என பெயர் வாங்கிய சீன்.அவ்வளவு களேபரத்திலும் வில்லன் பேஷண்ட் வேஷத்தில் தப்பிக்கும் சீன் செம விறு விறுப்பு.






நான் நினைக்கிறேன்,இந்தப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஓடிக்கொண்டே எழுதியிருப்பார் என,அவ்வளவு நேர்த்தி,லாவகம்,வேகம்.இதெல்லாமே இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு ஸ்பீடு கம்மி.பாட்ஷா உட்பட பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களின் திரைக்கதை முன் பாதி வேகமாகவும், பின் பாதி சுமாராகவும் அமைந்து விடும் மர்மம் என்னவோ?

பெலிக்கான் பறவை மூலம் சேதி பரப்பும் பாகிஸ்தானின் உளவாளி ஐடியா செம தூள் என்றால் அதை மம்முட்டி & கோ முறியடிப்பது செம ஸ்மார்ட்,ஆல் கிரடிட்ஸ் கோ டூ டைரக்டர்.(ALL CREDITS GO TO DIRECTOR)

கீழே கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்க மேலே அர்ஜுனும்,வில்லனும் போடும் ஃபைட் சீன் நல்ல கற்பனை.அதை அழகியல் நேர்த்தியோடு படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்.


 

ரசனையான சீன்கள்.

1.விவசாயிகள் தற்கொலைக்குபோவதற்கு என்ன காரணம் என்பதை தண்ணிர்க்கஷ்டத்தின் வலியோடு படமாக்கிய டாக்குமெண்ட்ரி

2.தேசிய நதி நீர் இணைப்பின் தேவையை,அதன் முக்கியத்துவத்தை அழகாக விளக்கிய விதம்

3.க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் ஜாக்கிசான் நடித்த  THE SPANISH CONNECTION (தெ ஸ்பானிஷ் கனெக்‌ஷன்) படத்தில் வருவது போல் அர்ஜூன் வில்லனை ஜம்ப்  பண்ணி நெஞ்சில் உதைக்கும் டூப்ப்  போடாமல் எடுக்கப்பட்ட அந்த ரிஸ்க் ஷாட்

4. குத்தாட்டப்பாடலான 1,2,3,4 பாட்டில் குத்தாட்ட நாயகியின் லோ கட் சீன் கிளாமரை கலரிங் லைட் அடித்து மறைத்த சாமார்த்தியம் ( ஏற்கனவே சிங்கம் படத்தில் அனுஷ்கா நடித்த காதல் வந்தாலே பாட்டு  படமாக்கிய விதம் போல் இருந்தாலும்)

படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

1.தீவிரவாதியின் மகளுக்கு 5 வயது என வசனத்தில் வருகிறது,ஆனால் காட்சி அமைப்பில் 10 வயது ஆன மாதிரி காண்பித்தது,

2.தீவிரவாதியை மகள் செண்ட்டிமெண்ட் காண்பித்து  மடக்க முயல்வது.99% தீவிரவாதிகள் குடும்பம் இல்லாத ,அதை துறந்தவர்கள்தான்.

3.அப்படியே அதை ஒப்புக்கொண்டாலும் மகளாக நடிக்க வைக்க 1008 பேர் இருக்க ஹீரோவின் மனைவியையே தேர்ந்தெடுப்பதும்,முக்கியமான தருணத்தில் சினேகாவை அம்போ என வில்லனின் பாசறைக்குள் அனுப்பி அவரை உயிரிழக்க வைப்பதும்.

சில வசன பளிச்கள்

1.குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது,சார்,இனி இவன் மேல நான் கை வைக்கலாமா?

ஓ,தாராளமா,இனி காலே வைக்கலாம்.

2.என்னது,இப்போ  டாக்டருக்கே டிரீட்மெண்ட் தரவேண்டியதா இருக்கு?

இந்தப்படம் எந்திரன் ரிலீஸ் ஆகும் வரை தங்கு தடை இன்றி அனைத்து செண்ட்டர்களிலும் ஓடும்.ஆக்‌ஷன் பிரியர்களுக்கும்,சி பி ஐ டைரி குறிப்பு,மாதிரியான கேரள புலனாய்வுப்படங்களை  ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான படம்.


Saturday, September 18, 2010

365 காதல் கடிதங்கள் - சினிமா விமர்சனம்



பருத்திவீரன் படம் ஹிட் ஆன சமயத்தில் வெளிவந்த ஒரு ஆங்கில படத்துக்கு 300 பருத்தி வீரர்கள் என டைட்டில் வைத்த மாதிரி இந்தப்படத்துக்கு 365 காதல் கடிதங்கள் என டைட்டில் வைத்து உள்ளார்கள்.வைத்த டைட்டிலை கரெக்ட் பண்ண ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு வருடம் தினசரி ஒரு கடிதம் அனுப்புவது மாதிரி ஒப்பேற்றி இருக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன?16 வயசுப்பையன் கூடப்படிக்கும் 16 வயசுப்பொண்ணை லவ் பண்ணுகிறான்.(இந்த காலத்தில் 16 வயசுப்பையன் 34 வயசுப்பெண்ணை லவ் பண்றதுதான் ஃபேஷன் - உபயம் கிரண் நடித்த வாலிபமே வா.)+2 பாஸ் பண்ணினால் காதலை ஏற்றுக்கொள்வதாக ஹீரோயின் கூறுகிறாள்.(ஆஹா,என்னே ஒரு கஷ்டமான கண்டிஷன்?)கஷ்டப்பட்டு பாஸ் ஆன ஹீரோ ஹீரோயின் வாயால் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறான்.இந்த சமயத்தில் ஹீரோயின் இட மாற்றம் காரணமாக சென்னை செல்கிறாள்.அட்ரஸ் குடுத்துவிட்டு.ஹீரோ கடிதமாக போட்டுத்தள்ளுகிறான்.பதிலே இல்லை.ஹீரோயின் அம்மா அதை ஒளீத்து வைக்கிறாள்.4 வருடங்கள் கழித்து ஹீரோயின் ஹீரோ ஊருக்கு வந்து ஹீரோவை சந்திக்கும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறாள். 6 வருடங்கள் சிகிச்சை செய்தும் குணம் ஆகாததால் ஹீரோயின் தந்தை அவளை கருணைக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.உடனே ஹீரோ தற்கொலை செய்துகொள்கிறார்.அவர் இறந்ததும் ஹீரோயினுக்கு பழைய நினைவு திரும்பி விடுகிறது.


  
ஹீரோ செலக்‌ஷன் மஹா மட்டம்.ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்.தன்னை ஹீரோ பார்க்கும்போது பெருமிதமும்,வெட்கமும் கலந்த நாணச்சிரிப்பு உதிர்ப்பது அருமை.மற்றபடி தேறாத கேஸ்.

ஓப்பனிங்க் சீனில் ஹீரோ இன்ஸ்பெக்டர் மனைவி என தெரியாமல் ஏடாகூட போஸில் ஃபோட்டோ எடுத்து மாட்டுவது வறட்சியான காமெடி.டீ கொண்டு வர்றவனுக்கு எல்லாம் டீட்ட்ய்ல் சொல்லனுமா என அறிமுகமாகும் கருணாஸ் காமெடி எடுபடவில்லை.

பொக்கிஷம் படத்தில் சேரன் கடித இலக்கியத்தை மையமாக வைத்து கதை எழுதும்போதே புத்திசாலித்தனமாக கதைக்களம் 1980 களில் செல்ஃபோன் அதிக உபயோகத்தில் இல்லாத காலம் என்பது மாதிரி பீரியட் ஃபிலிம் ஆக்கி விட்டிருந்தார்.ஆனால் இந்தப்படத்தில் ஹீரோயின் கையில் செல்ஃபோன் வைத்திருக்கிறார்,ஆனால் ஒரு முறை கூட ஹீரோவுடன் ஃபோனில் பேசாமல் லெட்டரையே நம்பி இருப்பது திரைக்கதையில் முதல் சறுக்கல்

ஹீரொயின் பாத்திரப்படைப்பில் கோட்டை விட்டாரா, அல்லது எடிட்டரின் தவறா தெரியவில்லை ஹீரோயின் ஒரு காட்சியில் ஹீரோவை காதலிப்பது போலவும் அடுத்த காட்சியில் இது வெறும் நட்புதான் என சொல்லுவது போலவும் அமைந்து பார்வையாளர்களை குழப்புகிறது.

என் 20 வருஷ அனுபவத்தில் மப்புல இருக்கறவன் கல்லை சரியா போட்டதே இல்லை,  போடுடா பார்ப்போம் என குடிகாரனை உசுப்பேற்றும் காமெடி ஓகே ரகம்.நட்பு படத்தில் செந்தில் 10 பைசா பைத்தியமாக வந்தது மாதிரி இதில் முத்துக்காளை மல்லிகா பைத்தியமாக வருகிறார்.அவர் நடிப்பு ஓவர் ஆக்டிங்.சுத்தமா சிரிப்பே வர்லை,எரிச்சல்தான் வருது.

ஹீரோ ஹீரோயினுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறார்.அதற்கு ஜாஸ்மின் இல்லம் என பெயர் வைக்கிறார்.பேசாமல் படத்துக்கு மல்லிகை இல்லம் என டைட்டில் வைத்திருக்கலாம்.

சைக்கிள் தேவதை சாலையில் ஐஸ் மழை பாடல் காட்சி நல்ல ரசனையாக 
எடுக்கபட்டுள்ளது. முதல் மழை முதல் முத்தம் பாடல் காட்சி முதல் மழை என் மனசுக்குள் தெறித்திட்ட என்ற பாடல் வரிகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

 365


படத்தில் நம்ப முடியாத சீன்கள்.

1.ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த வீட்டில் கள்ளக்காதலர்கள் ஒதுங்கும் இடத்தில் ஹீரோவும்,ஹீரோயினும் கம்பைன் ஸ்டடி பண்ணுவதும்,அதை ஹீரோவின் அப்பாவே பார்த்து பூரிப்பதும்
(கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வானாம் -உபயம் திண்டுக்கல் ஐ லியோனி)

2.ஹீரொயின் காலில் ஹீரோ விழுந்து கெஞ்சியதும் ஹீரோயின் காதலிக்க ஒத்துக்கொள்வது. (காதலையே கேவலப்படுத்தி விட்டார்கள் கூடவே ஆண் வர்க்கத்தை)

3.எந்தத்தந்தையாவது கோமா ஸ்டேஜில் இருக்கும் மகளை கருணைக்கொலை செய்ய முன் வருவாரா?( உளவியல் நிபுணர் ஒருவரிடம் விசாரித்தேன்,சான்ஸே இல்லை என்றார்.வயதானவர்கள் என்றால் ஓகே,இள வயதுப்பெண்ணை கொலை செய்ய யாரும் நினைக்க மாட்டார்களாம்.)

4. 6 வருடங்கள் கழித்து ஹீரோவை சந்திக்க வரும் ஹீரோயின் ஏன் இத்தனை நாட்களாக கடிதமே போடலை என ஏன் கேட்கலை?ஜஸ்ட் லைக் தட் போயிடறாரே?

5. எந்த ஸ்கூலில் பிட் அடித்த மாணவனை உடனே டி சி குடுத்து அனுப்புகிறார்கள்?

படத்தில் வரும் ரசனையான சீன்கள்

1.காதலியின் மேல் உதட்டில் தோன்றும் வியர்வைத்துளிகளை இங்க் ஸ்பில்லரால் காதலன் சேகரிப்பது.(காதல் என்றாலே பைத்தியக்காரத்தனங்களின் தொகுப்புதானே)

2.என்னால என் காதலியை மறக்க முடியலை என உதார் விடும் எடுபிடியிடம் கருணாஸ் “எங்க முதலாளியைப்பார்,9 பேரை வெச்சிருந்தார்,எல்லாரையும் அப்பப்ப மறந்துடுவார் என அவரை வாருவது

படத்தில் வரும் ரசனையான வசனங்கள்

1.அதிக சோகத்தையும்,அதிக சந்தோஷத்தையும் தருவது காதல் மட்டும்தான்.

2. மரணம் என்பது இறைவன் தர்ற சுகமான தூக்கம்.

3.செம கட்டையா நிக்குதே பொண்ணு,என்னய்யா பஞ்சாயத்து?  ம்,கட்டை பஞ்சாயத்து.

4.அறிவாளி வேலையை தேடிப்போவான்,புத்திசாலியை வேலை தேடி வரும்.

5.டேய்,எப்படியாவது ட்ரை பண்ணி என்னை கரெக்ட் பண்ணறதுலயே நீ குறியா இருக்கேடா.

ஆனா முடியலையே.

6.அந்தப்பொண்ணைப்பார்த்தா தப்பானவளா தெரியலை,செத்துப்போன என் ஆத்தா மாதிரியே இருக்கா.

உன் ஆத்தா ஜீன்ஸ் போட்டிருக்குமா?

7. மூளை வளரனும்னு உன் பையனுக்கு முட்டைக்காபி போட்டுத்தர்றே,உன் பையன் பரீட்சைல முட்டை வாங்கக்கூடாதுங்கறதுக்காக காப்பி அடிக்கறான்.

8.உன் பிள்ளை ராமர் மாதிரியா?

 ஆமாமா,ஒரு பொண்ணுக்கு காதல் பாலம் போட்டுட்டு இருக்கான்

சமீப காலமாக வரும் காதல் படங்களில் ஒரு மோசமான க்ளிசே வருகிறது. அது க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது.இது மாபெரும் தவறு என்பதை அந்த படங்களின் தோல்வி உணர்த்துகிறது.

இந்தப்படம் பி சி செண்ட்டர்களில் ஏழு நாள் ஓடினாலே அது ஏழாவது அதிசயம்தான்.