Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Tuesday, November 17, 2015

எப்படி இருக்கிறது வாழ்க்கை?

எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை.

ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது.

கேள்வி- பதில்

அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன.
உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும்.

ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்துகொள்ளப்படுவதில்லை; ஏற்றுக்கொள்ளவும் படுவதில்லை. “ஏன் விற்பனைக் குறியீட்டை அடையவில்லை...?”; “ஏன் வேலையை முடிக்கவில்லை...?”, “ஏன் இந்தச் சேவை வழங்கப்படவில்லை...?”.

இவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் அவற்றைச் சொல்ல நேர்கிற தருணங்கள் தலையைக் குனியவே வைக்கின்றன. பதிலாக சுடுமொழியையும், அவமானத்தையுமே பெறுகின்றன.
இதைத்தான் முன்னோர்கள் “சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கிறது..?” என்று குறிப்பிட்டார்கள். இவற்றைத் தவிர்க்க நினைத்தால் வீட்டிலேயே முடங்க வேண்டியதுதான் என்பதுதான் யதார்த்தம்.

ஈடாகும் இழப்பு

சரி, இவற்றிலிருந்து மீண்டு நமது சமநிலையை எப்படித் தக்க வைத்துக் கொள்வது...?

விவசாயத்தில் சாத்தியமான எல்லா முறைகளையும் பயன்படுத்தி அதிக லாபம் பெற ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ (integrated farming ) உதவுகிறது.
நண்பர் ஒருவரின் இத்தகைய பண்ணையில் கோழி,மாடு,தென்னை,தோட்டப்பயிர்கள், பூக்கள்...என கலவையான காட்சிகள் கிடைக்கும். “கோழீல நட்டம். ஆனா கறிவேப்பிலைல லாபம்...” என்பார்.” “தென்னைல பூச்சித்தாக்குதல். அந்த நட்டத்தை முருங்கைக்காய் தாங்கிக்கிச்சு...” என்பார்.

ஒன்றினால் ஏற்படும் இழப்பு இன்னொன்றின் மூலம் சரிசெய்யப்படுகிறது.
குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடும் போது ஒரு குழந்தை அடிவாங்கும்தான். இன்னொன்று தள்ளிவிடும்தான். ஆனால், வேறு கைகள் “எங்க வீட்ல செஞ்சது...”என்று எதையாவது தரும்.

சிற்றில் சிதைத்தல், சிறு வீடு கட்டல், சிறுபறை முழக்கல், ஊஞ்சல் ஆடல் , செல்போன் நோண்டல், சடையை இழுத்தல், “ உன் பேச்சு கா...” எனக்கூறல், பழம் விடுதல், சமாதானம் செய்தல்..என இவர்களின் ஆளுமைகள் விரிந்து , இந்தக் குழந்தைகளுக்கு சகிப்புத் தன்மை,விட்டுக் கொடுத்தல்,பகிர்தல், புரிந்து கொள்ளல்... போன்றவை இயல்பாகவே வந்து விடும்.

ஒன்றின் இழப்பை , இன்னொரு வரவின் மூலம் சரிசெய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த விவசாய முறை, குழந்தை வளர்ப்பு முறைகளைப் போல ஒருங்கிணைந்த வாழ்க்கையை வாழ முடிந்தால்...?

பல திசைகள்

ஒரு பெரிய நிறுவனத்தில் உடன் பணி செய்த இருவரை நினைவு கூர்கிறேன். பாஸிடம் வசவு வாங்கித் திரும்பும்போது அவமானச் சுவடுகளை அந்த அறையிலேயே துடைத்தெறிந்து மீள்வார்கள்.

ஒருவர் தனது எஞ்சிய நேரத்தில் ஃபினாயில், வாஷிங் பவுடர் தயாரிப்பவர். இன்னொருவர் தான் வளர்க்கும் நாயை “அவன் நாயாகப் பிறந்து விட்டானே “என்று வருந்திப் பேணுபவர்; “ இவ்வளவு திட்டு வாங்கியும் கூலா இருக்கறீங்க “என்றால் “ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். அதுல உண்மை இருந்தா நாம எடுத்துக்கணும். இல்லீனா, தட்டிவிட்டுட்டுப் போய்ட்டே இருக்கணும்.”என்பார்கள்.

ஃபினாயிலும், பிராணியும் அவர்களை வேறு பாதையில் அழைத்துச் செல்கின்றன. ஒரேவிதமான வாழ்க்கை தரும் களைப்புக்கு அங்கே இளைப்பாறல் கிடைக்கிறது. புத்துணர்வுடன் அவர்கள் மீள்கிறார்கள்.

எனவே, உங்களின் கவனம், அவமானம்,காயங்களிலிருந்து திசைதிரும்பி, வேறொன்றின் பக்கம் மையம் கொள்ளுமானால், அது உங்களைச் சேதத்திலிருந்து காப்பாற்றக் கூடும். ஒன்றின் ஆற்றல் இழப்பு இன்னொன்றினால் சரி செய்யப்படக் கூடும்.

உங்களுக்கு எதிரில் பல திசைகள் இருந்தால் ஒரே இடத்தில் நிற்க மாட்டீர்கள்.

மலையேறுதல், பாராசூட்டில் குதித்தல், கோல்ஃப் ,பிலியர்ட்ஸ், நட்சத்திர ஓட்டல்களில் இரவு ஆட்டங்கள், ஸ்கூபா, கார் ரேஸ்...( ! ) என்றெல்லாம் ஈடுபடுகிற அளவுக்கு நேரம் இருக்குமானால் நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சலித்துக் கொள்கிறவர்கள், அந்நிய மொழி கற்கலாம்; இதுவரை செய்திராத புதிய உணவைத் தயாரிக்கலாம்; தொடர்பற்றுப் போன நண்பர்களைத் தேடிப்போகலாம். நண்பர் ஒருவர் அவராகவே ஆர்மோனியம் பயின்றார். அதில் முதலில் தப்பியோடுவது இசை. அப்புறம் அவரது அன்றாட எரிச்சல்கள்.

ஒரேவிதமான வாழ்க்கையைவிட, இந்த ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வரத் தொடங்கும். அந்தத் திசை திருப்பலில் விரும்பத்தகாத சூழல்களிலேயே நீங்கள் நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். நகர்ந்திருப்பீர்கள்..!

thanks the hindu

Tuesday, July 14, 2015

சினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை!

பெரும்பாலான திரைப்படங்கள், பெரிய ஸ்டூடியோக்களின் வாயிலாகவே தயாரிக்கப்படுகின்றன. அப்படி இல்லாமல், சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் படங்களும் வருகின்றன. இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று இப்படங்கள் அழைக்கப்படுகின்றன.
சுருக்கமாக ‘இன்டி ஃபில்ம்ஸ்’ (Indie films). இப்படிப்பட்ட படங்களில் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். இந்த ‘இன்டி’ படங்கள் இன்றுவரை பல ஜாம்பவான்களை அளித்திருக்கின்றன. இந்த வகைப் படங்கள் பற்றியும், ஒரு சிறந்த ‘இன்டி’ இயக்குநர் பற்றியும் இந்த வாரம் கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே இந்த ‘இன்டி’ படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.
இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers' Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ‘இன்டி’ படங்கள் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் ‘இன்டி’ படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.
 s
டேவிட் லிஞ்ச், தனது ‘எரேசர்ஹெட்’ (EraserHead) படம் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்துக்கு ஏராளமான ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன. உடனடியாக ஜார்ஜ் லூகாஸ் இவரிடம் வந்து, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கச் சொல்லிக் கேட்கிறார். ஆனால், சுதந்திரமான இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடமே போய் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் லூகாஸின் அழைப்பை லிஞ்ச் நிராகரித்தார். இனியும் தன்னிஷ்டத்துக்கே படங்கள் எடுக்க வேண்டும் என்பதே டேவிட் லிஞ்ச்சின் விருப்பமாக அப்போது இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அமெரிக்க மக்கள் மீது இந்த ‘இன்டி’ படங்கள் செலுத்திய ஆதிக்கம் மறக்க முடியாதது. ஸ்டூடியோக்களின் மசாலா கலந்த, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் மக்களை எப்போதெல்லாம் அலுப்பாக்கினவோ, அப்போதெல்லாம் ‘இன்டி’ படங்களே நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியுள்ளன. பல புதிய இயக்குநர்கள் இப்படங்களில் அறிமுகமாகி, இன்றளவும் மிகப் பிரபலமாகவும் விளங்குகின்றனர். அதேசமயம், ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ (Reservoir Dogs) போன்ற ‘இன்டி’ இயக்குநர்களுமே தற்போது ஸ்டுடியோக்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
இப்போதும் ‘இன்டி’ படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் சிறந்த இயக்குநர்களில் ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch) முக்கியமானவர். 1980-ல் ‘பெர்மனெண்ட் வக்கேஷன்’ (Permanent Vacation) படத்துடன் தனது ‘இன்டி’ வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஜார்முஷ். இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் பனிரண்டாயிரம் டாலர்களே. அந்தப் பணமும், NYU திரைப்படக்கல்லூரியில் இவருக்கு ஸ்காலர்ஷிப்பாகக் கிடைத்த பணம். அதைக் கல்லூரியில் கட்டாமல் அதை வைத்துப் படம் எடுத்துவிட்டார் ஜார்முஷ். இதன்பின்னர் 1984-ல் ‘ஸ்டிரேஞ்சர் தன் பேரடைஸ்’ (Stranger Than Paradise) படத்தை 1,25,000 டாலர்களில் எடுத்து வெளியிட்டார்.
உலகெங்கிலும் உள்ள நல்ல சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த படம் இது. கான் திரைப்பட விழாவில் Camera d'Or என்ற, சிறந்த முதல் படத்துக்கான விருது இப்படத்துக்குக் கிடைத்தது (காரணம், ‘பெர்மனெண்ட் வெகேஷன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை). இப்படத்துக்குப் பின்னர் பல படங்களை அவ்வப்போது எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஜார்முஷ். இவரது படங்களில் டெட் மேன், கோஸ்ட் டாக், காபி அண்ட் சிகரெட்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
குறிப்பாக, ‘காபி அண்ட் சிகரெட்ஸ்’ படம் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மொத்தம் பதினோரு குறும்படங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்களில் அவ்வப்போது ஜார்முஷ் எடுத்த குறும்படங்களின் தொகுப்பு இது. ஆனால் இந்தக் குறும்படங்கள் எல்லாமே, காபியையும் சிகரெட்களையும் மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் கதாபாத்திரங்கள், காபியை அருந்திக்கொண்டே சிகரெட்களைப் புகைத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றினூடே நடக்கும் பேச்சுகள்தான் படம்.
‘Don't let school get in the way of your education’ என்ற மார்க் ட்வெய்னின் மேற்கோள் ஜார்முஷுக்குப் பிடித்தமான மேற்கோள். 'திரைப்படக் கல்லூரியில் படித்த 70 சதவீத விஷயங்களை நான் மறக்க வேண்டியிருந்தது. அங்கு கற்றுக்கொண்ட 30 சதவீத விஷயங்களே இன்றுவரை எனக்கு உதவுகின்றன' என்று சொல்லியிருக்கிறார். இவரது படங்களைக் கவனித்தால், ஹாலிவுட் போன்று ஒரு குறிப்பிட்ட திரைக்கதையமைப்பை (ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, ப்ளேக் ஸ்னைடர் இத்யாதி) பின்பற்றும் படங்களாக இவரது படங்கள் இருக்காது.
அந்தத் திரைக்கதை அமைப்புகள் சொல்லும் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு என்பதெல்லாம் அப்படியப்படியே பின்பற்றும் நபரல்ல ஜார்முஷ். அவரைப் பொருத்தவரை, ஒரு இயக்குநராக, தனது உணர்வுகளைத் திரைப்படமாக எடுக்கவே விரும்புகிறார். 'ஆடியன்ஸ் விரும்புவதைக் கொடுப்பது என் வேலை அல்ல' என்பது ஜார்முஷின் கருத்து. இதனாலேயே ஹாலிவுட்டின் மசாலாத்தனம் நிறைந்த படங்களைக் கிண்டல் செய்யும் ஜார்முஷின் பல பேட்டிகளையும் நீங்கள் படிக்கலாம்.
‘இன்டி’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் படங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பல வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் சிறந்த இயக்குநர்களில் பலர் இங்கிருந்து வந்தவர்களே. இன்னும் பலரும் இதிலிருந்து அவசியம் தோன்றுவார்கள். யாருக்கும் அஞ்சாமல், வளைந்துகொடுக்காமல் மனதில் தோன்றும் கருத்துகளையும் உணர்வுகளையும் பேசும் ஜிம் ஜார்முஷ் போன்ற இயக்குநர்கள், மசாலா மலிந்த ஹாலிவுட்டுக்கு அவசியம் தேவைதான். அப்போதுதான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் அரைத்த மாவு நிரம்பிய குரல்கள் மட்டுப்பட்டு, புதிதான குரல்கள் அங்கே கேட்கத் தொடங்கும். இது உலகம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விஷயம்தானே?
தொடர்புக்கு [email protected]

நன்றி -த இந்து

Monday, March 05, 2012

சாருநிவேதிதாவின் எக்செல் நாவல்- ஒலக மகா எலக்கியம்- புத்தக (!!) விமர்சனம்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு அவர்கள் இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்செல்.. அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும்.. விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க .. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான்.. கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் ஸ்டோரி ஓடும்.. நாவலோட கடைசி அத்தியாயத்துல எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து தேரை நிலை சேர்த்துவாரு.. 

அந்த டெக்னிக்ல அண்ணன் சாரு 6 வெவ்வேற டிராக்ல கதையை ஓட்டறாரு.. அதாவது

http://images.indiaplaza.in/books/9788/1849/9788184932041.jpg

1. முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்.. ( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு... )

2. ரெண்டாவது டிராக் - குமுதம் பத்திரிக்கைல ” கதவைத்திற காயத்ரி, கவிதா யாராவது வரட்டும்”னு ஒரு ஆன்மீகக்கட்டுரை எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றாலும்  ஜஸ்ட் லைக் தட் 3 நிமிட குறும்படம் சன் டி வி ல வந்ததால அகில உலக ஃபேமஸ் ஆன உலகம் போற்றும் உத்தமர், ஒழுக்க சீலர், கலியுக ராமர், சந்நியாசி மத்தியானந்தா, சாயங்காலனந்தா, நைட்டானந்தா, மிட் நைட்டானந்தா  அவர்கள் ரஞ்சிதா என்ற குணச்சித்திர நடிகையுடன் ஆன்மீகப்பணி ஆற்றும் நிலை பார்த்து பக்தர்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைஞ்சாங்களே.. அந்த மேட்டர்ல சாருவின் மனைவி சாமியார்க்கு ஒரு லெட்டர் எழுதியதை சாமியார் மீடியாவிடம் பப்ளிஷ் பண்ணி சாருவின் மானத்தை டைட்டானிக் ஏத்துனாரே அதுக்கு பதில் அடி + தன்னிலை விளக்கம்.. ( இதுல ஒரு காமெடி என்னன்னா என் மனைவி அப்படி எல்லாம் லெட்டரே எழுதலைன்னு சொன்னவர் அப்புறம் ராம்தாஸ் விட கேவலமா ஒரு பல்டி அடிச்சு அப்படியே அவர் தான் லெட்டர் எழுதுனார்னே வெச்சுக்குவோம்அதை அவர் பப்ளிஷ் பண்ணுனது நியாயமா?ன்னு அனுதாப ஓட்டு வாங்கும் எம் எல் ஏ மாதிரி பம்மறாரு)

3. மூணாவது டிராக் - ஆ ராசா ஒரு லட்சம் அண்ட் சொச்சம் கோடி  அடிச்சாரே அவர் அந்தரங்க காரியதரிசி  சாதிக் பாட்சாவின் ஆவி தன்னிலை விளக்கம் சொல்ற மாதிரி கொஞ்சம் பக்கங்கள்.. ( அநேகமா அவை ஜூ வி, நக்கீரன் கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்)

4. நான்காம் டிராக் - இதுலதான் நாவலோட மெயின் மேட்டர்.. அண்ணன் எழுதுனதுல சைடு, பார்டர், எல்லாத்துலயும் மேட்டர் இருந்தாலும் மெயின் கதை இந்த டிராக்ல தான் வருது.. அதாவது அண்ணன் கணக்கு பண்ணுன லேட்டஸ்ட் ஃபிகர் பேரு அஞ்சலி.. அந்த பாப்பாவோட சுய சரிதையை பாப்பாவே சொல்ற மாதிரி  வருது.. அநேகமா நோகாம நோம்பி கும்பிட்டுட்டாருன்னு நினைக்கறேன்.. பாப்பாவையே அந்த கதையை டைப் பண்ணச்சொல்லி ஊடால விட்டுட்டாரு போல.. 

 அதாவது அஞ்சலி சின்ன வயசுலயே  திவாகர் அப்டிங்கற ஆளால பால் இயல், மோர் இயல், தயிர் இயல் பலாத்காரம் பண்ண முயற்சி செய்யப்பட்டு அதுல 50 % வெற்றி மட்டுமே அடைஞ்ச ஆள்.. அந்த திவாகர் வேற யாரும் இல்லை, அஞ்சலியோட அம்மாவுக்கு புது பாய் ஃபிரண்ட்.. மீன்ஸ் பாய்ல படுத்திருக்கும்போதும் நட்போட இருப்பாங்க.. 

அஞ்சலிக்கு திவாகர் என்னென்ன கொடுமை எல்லாம் செஞ்சார்னு சொல்றதையே சினிமால காட்டி இருந்தா 4 ரீல் வரும்.. அப்புறம் அஞ்சலி க்கு மேரேஜ் ஆகிடுது.. புருஷன் தண்டம்.. ( அப்டி கதையை கொண்டு போனாத்தானே கிளு கிளுப்பு வரும்?) 

உதயாவோட தூய நட்பு அஞ்சலிக்கு கிடைக்குது.. இந்த கதைல வர்ற உதயா அண்ணன் சாருதான்.. அஞ்சலியும், உதயாவும் பரிமாறிக்கொள்ளும் கில்மாக்கடிதங்கள், சேட்கள் இதைவெச்சே 60 பக்கங்கள் கிளு கிளுப்பா நகர்த்திடறாரு..

தமிழன் கேப்ல கெடா வெட்றவன் ஆச்சே.. அதை நிரூபிக்கும் விதமா அண்ணன் சாரு இந்த அஞ்சலி கதை ஊடால நைஸா தன்னோட பராக்கிரமங்களை அள்ளி விடறாரு.. அதாவது அண்ணனுக்கு வயசு 60 ஆனாலும் 20 மாதிரி அல்ல அல்ல உலக அளவுல தான் தான் கில்மா மன்னன்கறாரு.. 

இந்தக்காலத்துல வயக்காட்டுல, டிராக்டர்ல ஏர் ஓட்டறவனே அரை மணி நேரத்துக்கு ஒருதடவை ரெஸ்ட் எடுத்துக்கறான்.. ஆனா அண்ணன் விடாம 2 மணி நேரம்  நான் ஸ்டாப்பா உழைப்பேன்னு அடிச்சு விடறாரு.. கின்னஸ் சாதனையாளர் போல.. 

அஞ்சலி பாப்பா ஒரு ஃபிரான்ஸ் கேர்ள் போல.. அதனால ஆங்காங்கே ஆங்கில கவிதைகள், ஆங்கில உரையாடல்கள் எஸ் எம் எஸ் கள், சேட்கள் எல்லாம் வருது.. அதை எல்லாம் ஸ்கிப் ஆகி போனா சீக்கிரமா படிச்சுடலாம்.. 

இதை மட்டுமே தனி நாவலா கொண்டு போய் இருந்தா ஒரு வேளை மனம் கவரும் நல்ல நவீனமாக வந்திருக்கலாம்..

இந்த கதை டிராக்ல அண்ணன் சேலம் சித்த வைத்திய சாலை, பழநி டாக்டர்ஸ் ரேஞ்சுக்கு இறங்கி பல சித்த வைத்திய, கில்மா மருத்துவ உத்திகள், ஐடியாக்கள் எல்லாம் குடுக்கறார்.. 

5. ஐந்தாம் டிராக் - அண்ணன் சாருவுக்கு இலக்கிய உலகத்துல அராத்து (இவர் ட்விட்டர்லயும் இருக்கார்), மனுஷ்ய புத்திரன்,ஆர்னிகா நாசர் போன்ற எழுத்தாளர்கள் நண்பர்களா இருக்காங்க.. இந்த 3 பேரில் ஒருவரை அல்லது மூன்றும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கி  கொக்கரக்கோ அப்டின்னு ஒரு எழுத்தாளரோட பள்ளிப்பருவ நிகழ்வுகளை கொஞ்சம் சொல்றாரு.. இது கொஞ்சம் சுவராஸ்யமா இருக்கு.. 

ஆனா சர்க்கரை பொங்கல்ல கல்லா, பிரபு தேவா- நயன் தாரா தெய்வீகக்காதல்ல நுழைந்த ஹன்சிகாவா அண்ணன் தன்னையே ஒரு ஹோமோன்னு அறிவிச்சு பெருமைப்பட்டுக்கறாரே அதுதான் உறுத்துது.. சீரியசா கதை போய்ட்டு இருக்கும்போது நாம என்ன கேள்வி கேக்கனும்னு நினைக்கறோமோ அந்த கேள்வியை கொக்கரக்கோவை விட்டே கேக்கற மாதிரி கதை நடை செல்வது நல்ல யுக்தி.. 

6. ஆறாம் டிராக்  -சினிமால கோக்குமாக்கான சீன் உள்ள படமா இருந்தாலும் அறிவுரை சொல்ற மாதிரி சில சீன் வைப்பாங்க.. அது சென்சாரை கன்வின்ஸ் பண்ண உதவும்.. அந்த மாதிரி நாவலுக்கு சம்பந்தமே இல்லாம ஐயப்பன் சாமி 18 படிகள் பற்றிய விளக்கங்கள், தேவாரப்பாடல்கள் ,  சித்தர்கள் பற்றிய குறிப்புகள்  அப்டின்னு அண்ணன் அள்ளி விடறாரு.. அதை நாவல் படிச்ச ஆட்கள்ல 90% பேரு அப்டியே ஸ்கிப் ஆகித்தான் படிப்பாங்க.. ஆனாலும் அண்ணனுக்கு கவலை இல்லை../ ஏன்னா யாராவது நாவலை குறை சொன்னாக்கூட என் நாவல்ல யூஸ்ஃபுல் மேட்டர் இருக்குன்னு காட்டிக்கறதுக்காகவும் அது தேவைப்படுது போல.. 

 இதுல என்ன காமெடின்னா சித்தர்கள் ராஜ்ஜியம்னு ஒரு வலைப்பூ பற்றி குறிப்பிட்டு அண்ணன் லிங்க் குடுத்திருக்காரு.. தோழி என்ற புனை பெயரில் எழுதும் அவருக்கு இது நல்ல அங்கீகாரம் தான்.. . 

முதல் வசந்தம் குங்குமப்பொட்டுக்கவுண்டர் -ஹிட்ஸ் வந்ததுன்னு சந்தோஷமாவும் இருந்துக்குங்க, அதே சமயம்  சாக்கிரதையாவும் இருந்துக்குங்க.. அவரிடம் கேட்காமல் அண்ணன் 3 பதிவை அப்படியே சுட்டு போட்டிருக்காரு, அதுக்கு பிராயசித்தமா லிங்க் குடுத்துட்டார் போல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s640/Balu-mahendra-010808.jpg



 குப்பையில்  பொறுக்கிய மாணிக்கங்கள்


1. ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்... ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் அப்டினு யாரோ சொன்னாங்களாம்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை..


2.  தமிழிலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழின் ஆகச்சிறந்த  எழுத்தாளர்களெல்லாம்  எப்படி மறக்கடிக்கப்பட்டார்களோ அதே போல் நானும் மறக்கடிக்கப்படுவேன்

3. இரவு 7 மணிக்குள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் இந்தியர்கள் 50 வயதில் நோயில் விழுவதும், மிட் நைட்டில் 2 மணிக்கு சாப்பிடும் சீனர்கள் 90 வயது வரை ஆரோக்யமாகவும் வாழ்வது இயற்கையின் முரண்பாடு


4. வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிது பைத்தியக்காரத்தனம் வேண்டும்

5. சாமியாரின் பேச்சு நடைபெற்ற இடம் மிகச்சிறிய இடம்./.  ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறிய  இடத்தில் 16,000 பேர்  கூடுவதற்கு எப்படி அனுமதி அளித்தது?மேலும் ஒருவர் இடையில் வெளீயே போக நினைக்கும்போது அவர்களை அனுமதிக்கவில்லை, அப்படித்தடுப்பது சட்டத்துக்குப்புறம்பானது இல்லையா? ( WRONGFUL CONFINEMENT)

6.  உன்னை காதலிக்கும் பெண்கள் அனைவருமே எப்படி ஒரு கூடை சோகங்களை  கை வசம் வெச்சிருக்காங்க?நீ ஏதும் பண்ட மாற்று வேலை செய்கிறாயா?

7.  பெண்கள் அனைவரும் ஹீரோவைத்தேடி வாழ்க்கை முழுக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.. அவர்கள் பழைய வில்லன்களை எல்லாம் இன்றைய ஹீரோ ஆக்குகிறார்கள்

8. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சோகமாக ஆக்கிக்கொள்வது ஒரு வித மன நோய்.. அப்படிப்பட்ட பெண்கள் மன நல நிபுணரை பார்க்கலாம், அல்லது புது காதலரை காதலிக்கலாம்

ஓக்கே .. ஓவர் ஆல் நாவல் எப்படி இருக்கு? யார் எல்லாம் படிக்கலாம்?

கில்மா ரசிகர்கள், ஃபிகர்களை செட் பண்ணுவது எப்படி? சேட்டிங்கில் ஆண்ட்டிகளை மடக்குவது எப்படி?, வெறும் வாய்லயே மங்கலம் பாடி மங்களத்தை கரெக்ட் பண்ணுவது எப்படி? போன்ற பல அரிய கேள்விகளை மனதில் தக்க வைத்துள்ள ரசிக மகா ஜனங்கள் இதை படிக்கலாம்..

 யாரெல்லாம் படிக்கக் கூடாது?  தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்,கண்ணியமானவர்கள்,ஒரு இல் ஒரு சொல் என்று வாழ்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள்,இவங்க எல்லாம் படிக்கக்கூடாது..

நாவல் மொத்தம் 435 பக்கங்கள்.. அதுல ஆங்கில வசனங்கள், ஜோதிட பக்கங்கள், சபரிமலை சுலோகங்கள் போன்ற வெகுஜன மக்கள் ஒதுக்கும் பக்கங்கள் போக  403  பக்கங்கள்.. படிக்க மொத்தம் நாலரை மணி நேரம் ஆகுது.. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ள சராசரி வாசகனுக்கு 6 மணி நேரம் ஆகலாம்.. 


விகடன் மார்க் போட்டால் - 40