Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, November 11, 2015

இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

நாளை (நவம்பர் 12-ம் தேதி) முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள ரயில்வே, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.
முதல் முன்பதிவு பயண அட்டவணை, ரயில் கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.
இதற்காக நவம்பர் 12-ம் தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை ரயில் நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையின் போக்குவரத்து நெருசலில் அரை மணிக்கு முன்பாக ஆன் லைனில் முன் பதிவு செய்து விட்டு ரயிலைப்பிடிக்க போனால் ரயில் நம்மை விட்டு போய் குறைந்தது 2 மணி நேரமிருக்கும்.
    2250
    about an hour ago
     (0) ·  (0)
     
    • S
      Siva  from India
      தற்போது உள்ள நடுப்பு பதிவு (Current Booking) முறையை இணைய வழியிலும் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் நீண்ட தூர வண்டிகளில் (எடு) தில்லி - கன்னியாகுமரி இடையில் இருந்து பயணிக்க நினைப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக பதிவு செய்ய முடியாது. எனவே பயணச் சீட்டு பரிசோதகர்களும் மின்னணு முறையில் பரிசோதிக்க ஆரம்பித்தால்தான் முழுமையான பயன் கிட்டும்.
      12250
      about 3 hours ago
       (0) ·  (0)
       
      • B
        Babu  from Saudi Arabia
        Thanks easy way to reach people...
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • AS
          Amith Sha  from India
          இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள கரண்ட் ரேசெர்வேசன் நடைமுறை தான்.ஆன்லைன் வசதி பண்ணிருக்காங்க. பழைய மொந்தைல புது கள்.
          about 4 hours ago
           (0) ·  (0)
           
          • D
            Durai  from India
            சுத்த ஹம்பக் . டிக்கெட் இருந்தால்தானே ! எல்லாம் கலெக்ஷன் ட்ரிக் . ரயில்வே நிர்வாகம் பயணிகளிடமிருந்து பல வழிகளில் பல ரூட்டுகளில் காசு சம்பாதிக்க வகை செய்துகொள்கிறது .
            185
            about 5 hours ago
             (2) ·  (0)
             
            RAJA · ram Up Voted
            • D
              Dawood  from India
              இது மறைமுகமாக அதிகக் கட்டணம் வசூளிப்பதுபோல் இருக்கிறது. தனியார் பேருந்துகளில்தான் இந்தமுறையில் ஏய்க்கிறார்கள் என்றால் அரசு அதனையேதான் செய்கிறது.,
              170
              about 6 hours ago
               (2) ·  (1)
               
              RAJA · ram Up Voted
              yours Down Voted
              • இந்த ஏற்பாடு எல்லோருக்கும் உண்டா அல்லது தத் கால் பயணிகளுக்கு மட்டுமா ?
              thanx - the hindu

              Tuesday, August 11, 2015

              விசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்

              சட்டத்தின் ஆட்சியையும், எல்லா மக்களுக்கும் நீதியையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, உண்மையில் என்ன நிலையில் இருக்கிறது? அதன் கைகளில் அப்பாவிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதை ‘விசாரணை’ படத்தின் டிரைலரே ரத்தம் உறையச் சொல்லிவிடுகிறது. உலகப்புகழ் பெற்ற வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடவிருக்கும் 20 படங்களில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’-யும் இடம்பெற்றுள்ளது. போட்டிப் பிரிவில் வெனிசில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்பதே விசாரணை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
              கோவையிலிருந்து 1983-ல் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று பொய்யான குற்றச்சாட்டில் அப்பாவியாய் சிக்கிய மு.சந்திரகுமாரின் கதை இது. மூன்று நண்பர்களுடன் சட்டவிரோதக் காவலில் 13 நாட்கள் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட மு.சந்திரகுமார் என்ற ஆட்டோ சந்திரன், தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘லாக்கப்’ நாவல் தான் ‘விசாரணை’யாக மாறியுள்ளது.
              “இந்தியாவில் காவல் துறையினரால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களின் அனுபவம் இது. எத்தனையோ துயரங்கள் பதிவாகாமலேயே போயிருக்கின்றன. சந்திரகுமார் தனது 13 நாள் சிறை அனுபவங்களை ஒரு டைரி போல எழுதியதன் மூலம் ஒரு காலகட்டத்தின் பதிவாக மாற்றியுள்ளார். அந்த நாவலில் இருந்த உண்மை என்னை ஈர்த்தது. ஆடுகளம் முடித்த பிறகு, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பெரிய ஹீரோவை மையமாக வைத்துக் கதை பண்ணாமல் யதார்த்தமாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது எனது நண்பர் பரிந்துரைத்த புத்தகம்தான் ‘லாக்கப்’.” என்றார் இயக்குநர் வெற்றி மாறன்.
              ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கும் ஆட்டோ சந்திரனின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி என்று அலைந்த இவருக்கு வாழ்வையே திருப்பிப் போடும் அனுபவம் நேர்ந்தது ஆந்திராவில். குண்டூரிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தெருவோர உணவு விடுதியில் பரிசாரகனாக வேலை கிடைத்தது. தினப்படிக் கூலி என்பது அவருக்கும் அவரைப் போன்ற நாடோடி நண்பர்களுக்கும் சந்தோஷமான விஷயமாக இருந்துள்ளது.
              “நாள் முழுவதும் வேலை. அதற்கப்புறம் சினிமா பார்ப்பது, இரவில் நண்பர்களுடன் எதிர்காலத்தைப் பற்றி கனவுகளுடன் அசைபோடுவது என்று இருந்தபோதுதான் திருட்டுவழக்கில் என்னையும் மூன்று நண்பர்களையும் கைது செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற அநாதைகள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளை காவல்துறை எப்படி நடத்துகிறார்களோ அதேபோலவே நாங்களும் நடத்தப்பட்டோம். 13 நாட்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டோம். நாங்களாகப் போராடித்தான் நீதிமன்றத்தின் பார்வைக்கே செல்ல முடிந்தது. பத்துக்கு பத்து அடி பரப்பளவே கொண்ட சின்ன அறையில் மார்ச் மாத வெயிலில் வழியும் வேர்வையுடன் மிருகங்கள் போல அடைக்கப் பட்டிருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. எங்களை ஜாமீன் எடுப்பதற்கோ, எங்களைத் தேடி காவல் நிலையத்துக்கு வருவதற்கோ யாரும் கிடையாது. அந்தக் கதையைத்தான் என் முதல் நாவலாக எழுதினேன்” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
              நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையைக் கழித்துள்ளார் சந்திரன்.
              இவர் எழுதிய 160 பக்கம் கொண்ட லாக்கப்புக்கு 2006-ம் ஆண்டில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் வகிக்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் ‘சிறந்த மனித உரிமைகள் ஆவணம்’ என்ற விருதைக் கொடுத்தது.
              தமிழ் மட்டுமல்ல இந்திய வெகுஜன சினிமாக்கள் அனைத்திலும் காவல் துறையினர் கேலியாகவும் ஊழலாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளையில், என்கவுண்டர் செய்யும் போலீஸ் நாயகர்கள் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைவதும் சாத்தியமாகவே உள்ளது. மோதல் சாவுகள் மட்டுமல்ல; காவல் கொலைகளும், சித்திரவதைகளும், காவல் நிலையத்தில் நடக்கும் வல்லுறவுச் சம்பவங்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் ‘விசாரணை’ டிரைலரைப் பார்க்கும் போது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
              ஒரு நாவலின் கதையை எடுத்து திரைக்கதையை உருவாக்கி, அதை எழுதிய எழுத்தாளருக்கு சரியான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அரிதான போக்கு இது. விசாரணை திரைப்படத்தின் இறுதியில் கதாசிரியரைப் பற்றிய ஆவணப்படமாக ஒன்றரை நிமிடப் படம் ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்குச் செய்யப்பட்டிருக்கிற ராஜமரியாதை இது” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
              நடிகர் தனுஷும், வெற்றி மாறனும் ‘காக்கா முட்டை’-க்குப் பிறகு தயாரிப்பாளர்களாக இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இரண்டு திரைப்படங்களும் உலகத் திரைப்படவிழாக்களுக்குச் சென்ற பெருமையையும் பெற்றுவிட்டன.
              இப்படத்தின் மூலம் வெற்றி மாறன், காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னர் இருக்கும் குரூரமான யதார்த்தத்தையும், சொல்லப்படாத குமுறல்களையும் விசாரணை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நிஜமான அரசியல் திரில்லருக்கான நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இந்தப் படம் மூலம் அது சாத்தியப்படலாம்.

              நன்றி- த இந்து

              Sunday, May 08, 2011

              ஃபேரன் லவ்லி போடும் ஃபிகர்களே.. உஷார்.... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinTvXUfS6TI2RC9JGbKJvrQ6TfJori1XmsBQUVg4emGY68cL8X81UswOB4eic8OxlvcBp5LAvrxCv1AzPNbd1dauXmwMMxpGeGv6Vbj9bKM0uKu1mgGE8LcjGxRDI6d6-2PQ5EYCe4HeL2/s1600/actress-tamanna-still-02.jpg

              1. மழை பெய்த ராத்திரி.. எத்தனை பேர் வீட்டில் O.T டியூட்டியோ?#சரசாலஜி

              ----------------------------


              2. 5 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அரை மணி நேரம் குதிக்கும் மேனேஜரே ஃபங்க்சுவாலிட்டி பரமசிவன்கள் எல்லாம் என்னத்தை செஞ்சு கிழிச்சான்க?

              ------------------------



              3. பஸ்ஸில் ஏறும் பெக்கர்ஸ் முதல் ஆளிடம் காசு வாங்கி விட்டால் தொடர்ந்து நிறைய காசு வருது #ஆட்டு மந்தை மக்கள்

              ------------------------

              http://www.zonkerala.com/movies/actresses/sandhya/malayalam-actress-sandhya.jpg

              4. பஸ்சில் எல்லா சீட்டுகளும் ஃபுல் ஆன பின்பே பஸ்ஸில் ஏறுகிறான்.ஸ்டேண்டிங்கில் நிற்கும் வாய்ப்பு #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 1

              -------------------------


              5. பஸ்ஸில் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா ஒரு கிளான்ஸ் பார்த்து விட்டு பின் திரும்பி நின்று கொள்ள வேண்டியது #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 2

              -------------------------


              6. பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது சன்மானம் வந்திருக்கா?என நான் போஸ்ட் மேனிடம் கேட்கும்போது எல்லாம் எனக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே

              http://www.cafeboys.com/wp-content/uploads/2007/08/maya-kannadi-05.jpg
              -----------------------


              7. நல்லவனாக இருக்கும் ஆணின் மனம் அலை பாயத்தொடங்குவதே பெண் தன் முந்தானையை சரி செய்யும்போதுதான் # லேடீஸாலஜி

              -------------------


              8. அறிஞர் அண்ணாவுக்கும்,இன்றைய ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம-மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என ஆண் நினைப்பது#ஜெண்ட்ஸாலஜி

              ----------------


              9.காதலை முதலில் சொல்லும்போது ஆண் படபடக்கிறான். சீக்கிரம் சொல்லித்தொலைடா என பெண் தடதடக்கிறாள் மனதில்- தில் தில் மனதில் #லவ்வாலஜி

              deersss.jpg


              -------------------------


              10. ஃபேரன் லவ்லி போடும் பெண்கள் தங்கள் பிரத்யேக நறுமணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள் # நுகர்வோர் ரிப்போர்ட்

              ------------------------- 

              Friday, February 11, 2011

              பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்



              மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
              தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.

              நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.


              படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு
              படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்‌ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்‌ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
              பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

              இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
              டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.

              வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.


              1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
              ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.

              2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.
              3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
              யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?

              மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?

              4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?

              ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?

              5. இந்தப்படம் ஓடுச்சா?

              படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
              படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?

              6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?

              7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..

              ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?

              8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?

              மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.

              9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..

              10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?
              11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்‌ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.

              12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.

              13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)
              14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.

              15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.
              16. சார்.. கூல் டவுன்..
              உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.

              17. என்னை அடிச்சு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.

              18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.

              19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?

              பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
              கரப்பான் பூச்சிக்கே ரியல் லைஃபில் பயப்படுபவர்தான் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ என ஒரு வாரு வாரி இருப்பது வெல்டன் ராதா பாரதி என சொல்ல வைக்கிறது.அதே போல் சீரியஸான இந்தக்கதையில் முடிந்த வரை எங்கெல்லாம் காமெடி மசாலாவை தூவ முடியுமோ அங்கெல்லாம் கலகலப்பாய் கொண்டு செல்வது இயக்குநரின் ஸ்பெஷல் டச்.
              ஆனால் அதே சமயம் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
              எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும் எல்லாருமே எம் ஏ சைக்காலஜி முடித்தவர் போல் தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.

              பிருத்வி எனும் பப்லுவை ஆக்‌ஷன் ஸ்டார் ஆக காண்பித்து தமிழ் சினிமா ஹீரோக்களை செம இறக்கு இறக்குனது கலகல.. ( நிஜத்தில் இவரது முதல் படத்துக்கு கால்ஷீட் கேட்டு ஒரு முன்னணி ஹீரோவை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார்.. அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டி தீர்த்துக்கொள்கிறார்.)

              காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
              1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?

              ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.

              2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.

              3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்

              ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..

              மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..
               
              ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,
               
              எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
               
              எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

              diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்