Showing posts with label சர்வே. Show all posts
Showing posts with label சர்வே. Show all posts

Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


Friday, March 25, 2011

ஆளும் தி மு க அதிர்ச்சி.... விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள்...காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSeQ3uz3yUFOxjjYS_ayOZ0nlfAEGoltEhBz9h9x3bA-PE2qQICGa30jCu7Ovsi5E73sKgx7FDm6McpWP1z9F1-BfKqnwvv7-bJwJu3eM_g6wmoAjwOBPYRYKv3oL8cTg6jx1qhuqoZYww/s1600/parisutham.JPG 

கூட்டணிகள் இறுதியாகி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி,  பிரசாரப் பயணமும் தொடங்கிவிட்டது. ஆனால், 'கதாநாயகர்கள்’ மனதில் என்ன இருக்கிறது?!  (வேறென்ன.. ?  குழப்பம்தான்...)


 தமிழகத் தேர்தல் களம் எந்த அலையும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோலத்தான் இப்போது தளும்பிக்கொண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் விகடனின் சர்வேக்கள் மக்களின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதி பலித்தன

.( எல்லா சஞ்சிகைகளும் அப்படித்தான் சொல்லிக்கறாங்க..)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு என்று தனித் தனியாக சர்வேக்களை வெளியிட்டோம். இந்தத் தேர்தல் களத்தின் காலம் மிகக் குறுகிவிட்டதால், ஒட்டுமொத்தமாக மக்களின் மனசையும் அறிய பொது சர்வே எடுக்கப்பட்டது!

( எப்படியோ உங்களுக்கு வேலை மிச்சம்)


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க கழற்றிவிடப்பட்ட பரபரப்பான சூழல் ஒரு பக்கம்... இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று வீதிக்கு வீதி பேசப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை மறுபக்கம்... தேர்தல் சூடு பரவிய சூழலில் மக்களிடையே நம் படை ஊடுருவியது 

.(ஊடுருவுனது நீங்கதான்னு தெரியுமா? மாறு வேஷத்துல ஊடுருவுனீங்களா?)

மார்ச் 19, 20 தேதிகளில் விகடன் நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100 பேர்கொண்ட குழு, மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் எனத் தமிழகம் முழுக்கப் புகுந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, சர்வே கேள்வித் தாளை நீட்டியது விகடன் படை! 

(அய்யய்யோ கொஸ்டீன் பேப்பரா..?எஸ்கேப்னு யாரும் ஓடலையா?)
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற காட்சிகள் இன்னமும் அரங் கேறாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மக்களின் மனநிலை இது.
(செல்லாது செல்லாது)


தேர்தல் பிரசாரம் பட்டையைக் கிளப்பும்போது, அதில் தெறிக்கும் அனல் குற்றச்சாட்டுகளும், பரஸ்பரப் புகார்களும், பணம் - பலம் விளையாட்டுக்களும், வாக்காளர்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். இருந்தாலும், இன்று இதுதான் தமிழக மக்கள் மனசு!
(மனம் விரும்புதே யாரை யாரை.. அறியாமலே.. சசம்ஜு சக்கும் சஜம்சு ஜக்கும்... அய்யய்யோ மறந்தேனடா... யார் கிட்ட நான் பணம் வாங்குனேண்டா...வேட்பாளர் பேரே தெரியாதடா.....#நேருக்கு நேர்)


''நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது அ.தி.மு.க. கூட்டணி. காங்கிரஸ் தந்த குடைச்சலில் தி.மு.க-தான் குட்டையைக் குழப்பிட்டு இருந்தாங்கன்னு பார்த்தா, 'நாங்க மட்டும் இளைச்சவங்களா?’னு அதிரடி பண்ணி, ஜெயலலிதா நல்லா காமெடி பண்ணினார். அவர் ஜெயிக்கக் கிடைச்ச நல்ல வாய்ப்பை அவரே குறைச் சுக்கிட்டார்'' என்ற குரல்களைப் பல இடங்களில் கேட்க முடிந்தது. 

  (போயஸ் தோட்டத்தில் ஓர் ஆண்ட்டி...அவர் நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி...கொண்டு வந்தார் ஒரு கூட்ஸ் வண்டி.. அதை மதிக்காம,மதிக்காம போட்டுடைத்தார்டி...கலைஞர் தான் இந்நாட்டு மன்னர்...)

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்து இருக்கிறது. ''தலைநகரைவிட்டு தலை தப்பிச்சாப் போதும்னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுறார். அவருக்கே எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு. அதைப் பயன் படுத்திக்காம, வெற்றி பெறுவோம்கிற மமதையில் ஜெயலலிதா தப்பான முடிவு களை எடுத்துட்டார். அவரை நினைச்சுப் பரிதாபப்படக்கூட முடியலை'' என்றார் ஸ்ரீரங்கத்துக்காரர்  ஒருவர். 

( தோல்வி நிலையென நினைத்தால் ....தோழி நிலையை நினைக்கலாமா?மானத்தை இழந்தோம்.. வெட்கத்தை இழந்தோம்.. ரோஷத்தை இழக்கலாமா? #ஊமை விழிகள்)


ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தத் தேர்தலில் 'கொஞ்சமாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறது சர்வே. 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டுப் போடுவேன்’ என்று சுமார் 46 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதே நேரம், சுமார் 26 சதவிகி தத்தினர் 'இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னதும் முக்கிய விஷயமாகும்.

(என்ன என்ன நினைக்குது ஏதோதோ நினைக்குது. வண்ன வண்ன ஊழல்கள் கோடி ரூபா...)

வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பலர், 'இது வைகோவுக்குச் இழைக்கப்பட்ட அநீதி’ என்றே கருத்துச் சொல்கிறார்கள்.
( நீ இல்லை என்றால் கூட்டணீயில் இல்லை ஒரு கலவரமே.. ஏ  ஏ ஹே..உன்னோடு வந்தாலும், உன்னோடு நின்றாலும் தோல்வி தோல்வி....)


''ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ.ராசா கைது, சி.பி.ஐ. சோதனை, சாதிக் பாட்சா தற்கொலை என்று தி.மு.க கட்சி மேல் விழுந்த ஊழல் கறையால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த அம்மா இப்பவே ஆட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று தேனி ஏரியாவில் அலுத்துக்கொண்டார்கள் மக்கள்.

( ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா?)


உசிலம்பட்டியில், 'ஜெயலலிதா வந்தா, சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும். அதிகாரிங்க பயப்படுவாங்க. நிர்வாகம் சரியா நடக்கும். அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்? கலைஞர் வந்தா, டி.வி, மிக்ஸிலாம் கிடைக்கும். அதனால கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன்’ என்றார் ஒரு பெரியம்மா.


(மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே இது மாறுவதெப்போ..தேறுவதெப்போ நம்ம கவலே..)

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியைவிட ஜெயலலிதாவே கூடுதல் சதவிகிதத்தைப் பெற்று இருப்பது வியப்பு. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியைவிட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது, ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது

. ( அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..நான் தாண்டா ஒரு மிக்ஸிக்கு ஓனர்..)


தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2,081 வாக்காளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் கட்டங்களில் இடம்பெற்றுஉள்ளன