Showing posts with label சம்சாரம். Show all posts
Showing posts with label சம்சாரம். Show all posts

Tuesday, March 22, 2011

சமையல் பண்ணமாட்டேன்னு சலம்பல் பண்ணும் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg 

பொதுவா கணவன்மார்களை மிரட்ட இந்த பொண்டாட்டிங்க வெச்சிருக்கற 2 ஆயுதங்கள்ல சமையல் 2வது ஆயுதம்..முதல் ஆயுதம் என்ன?ங்கறதை தனி பதிவா தலையணை மந்திரம் போடும் தலைவியிடம் தப்பிப்பது எப்படி?ன்னு மறுக்கா போடறேன்..( மணி மேகலைப்பிரசுரம் ரேஞ்சுக்கு போய்ட்டமே...)

பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க..( சுமாரா நீ எத்தனை சம்சாரத்தை பார்த்தே..?)எனக்கு எப்படித்தெரியும்னா எல்லாம் கேள்வி ஞானம்தான்.(நான் பார்த்த எல்லா சம்சாரமுமே சுமாராத்தான் இருந்தது,..)

அவங்க வீட்டு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு நம்மால வர முடியாம போச்சுன்னா, ( தண்டம் வேற முட்டுக்கோல் வேற.. )அவங்க கேட்ட பொருள் ஏதாவது வாங்கித்தர முடியாம போச்சுன்னா( வாங்கற சம்பளம் ரூ 5000 ஆனா 5 லட்சம் ரூபாக்கு நெக்லஸ் கேட்டா),வீட்டுக்கு லேட்டா வந்தா இப்படி 10 பைசாவுக்கு பெறாத சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இந்த டெக்னிக்கை அவங்க யூஸ் பண்ணிக்குவாங்க..
http://www.newsonweb.com/newsimages/June2010/eb637c18-3465-49a8-8bb1-9c0972d798a31.jpg
எனக்கு தலை வலிக்குது... என்னமோ மாதிரி இருக்கு.. இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு அவங்க குப்பற படுத்துக்குவாங்க.. நாம என்னடா பண்றதுன்னு மல்லாக்க படுத்து யோசிப்போம்.. ( நாமளும் குப்புற படுக்கலாம்.. அப்புறம் நமக்கும் ,அவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லாம போயிடுமே. #கோபமா இருக்கறப்பக்கூட நமக்கு பிரஸ்டீஜ் முக்கியம்).)

நமக்கு மட்டும் பசிக்குதே.. அங்கே பசியே எடுக்காதா?ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்லை... ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.. 

ஹோட்டல்ல போய் சாப்பிட நமக்கு கையாலாகாது...சரி நாமே சமைக்கலாம்னு நினைப்போம்...அப்பாடா.. இப்போதான் மேட்டருக்கு வந்தேன்.. இந்தப்பதிவுல சுயமா சமைப்பது எப்படி?ன்னு பதிவர்களுக்கு சொல்லப்போறேன்..இது ஆண்களுக்கு மட்டுமானது...ஏதோ எனக்கு தெரிஞ்ச அரை குறை ஞானத்தை வெச்சு டிப்ஸ் தர்றேன்...இதைப்படிக்கிற பெண்கள் யாராவது அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொனை (குறை) சொன்னா நான் கடுப்பாகிடுவேன்.. (அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)
http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ஒரு டம்ளர் அரிசியை ஒரு குண்டாவுல போட்டு அதுல ஒரு சொம்பு தண்ணி ஊற்றி ஊற வைங்க..( தண்ணி மட்டும் ஊத்துனா போதும்.. அதுவா ஊறும்..)

அரை மணி நேரம் ஊறனும். அதுக்குள்ள கடைக்கு பொடி நடையா போய் தயிர் அரை லிட்டர் வாங்கிட்டு வந்துடுங்க..இப்போ வீட்டுக்கு வந்து ஊறுன அரிசியை களையனும்.. அதாவது அந்த தண்ணியை கீழே ஊத்தனும். வை கோ வை அம்மா கழட்டி விட்ட மாதிரி..மறுபடி தண்ணி ஊத்தி மறுபடி களையனும்.. இப்போ 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும்.

அதாவது எவ்வளவு அரிசி போட்டமோ அதை விட 2 மடங்கு...கடைல வாங்குன அரிசி பழையதா இருந்தா இந்த பதம். அதுவே புது அரிசியா இருந்தா அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊத்தனும்..

குக்கர்ல 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும். அப்புறம் குக்கருக்குள்ள அரிசி குண்டாவை வைக்கனும்.அப்புறம் குக்கர் மூடியை டைட்டா மூடனும்..குக்கர் வெயிட் போட மறக்கக்கூடாது...இப்போ அடுப்புல குக்கரை வெச்சுட்டீங்க..10 நிமிஷம் டைம் ஆகும்.
http://thumbs.dreamstime.com/thumblarge_242/1204260906YAxDh5.jpg
அதுக்குள்ள ரசம் ரெடி பண்ணிடலாம்.அது ரொம்ப ஈஸி.. பி ஜே பி காரங்க வேட்பாளர் லிஸ்ட் ரெடி பண்ற மாதிரி.. எந்த கஷ்டமும் இருக்காது..முதல்ல புளி கொஞ்சம் எடுத்து ஒரு சின்ன குண்டாவுல போட்டு ஊற வைக்கனும்..( தண்ணீர் ஊற்றி)

இப்போ பெரிய அடுப்புல அரிசி வெந்துட்டு இருக்கும். சின்ன அடுப்புல புளிக்கரைசல் குண்டாவை வைங்க..2 தக்காளி எடுத்து வாஷ் பண்ணி  4 பாகமா அறிந்து புளிக்கரைசல்ல போடுங்க..அப்புறம் ரசப்பொடி 2 ஸ்பூன் போடுங்க.. 4 நிமிஷத்துல கொதிக்க ஆரம்பிக்கும்,, சீரகப்பொடி ஒரு ஸ்பூன் போடுங்க.. அப்புறம் கறி வேப்பிலை,கொத்து மல்லி தழை கொஞ்சம் போடுங்க.. 

கொஞ்சம் உப்பு போடுங்க..(ஏன் கொஞ்சம் உப்பு போட சொல்றேன்னா அதிக உப்பு போட்டு சாப்பிட்டா நமக்கு கோபம் வந்துடும்.. ஹி ஹி .. முடிஞ்சவரை குடும்பஸ்தங்க ரோஷம் இல்லாம இருப்பதே நல்லது.. )இப்போ தள புள தள புளன்னு கொதிக்கும்.. வாசம் கம கமன்னு வரும்.. சப்போஸ் வாசமே வர்லைன்னாக்கூட என்ன வாசம் ஆஹா அப்படின்னு நாக்கை சப்புக்கொட்டிக்கனும்..( எல்லாம் வெறுப்பேத்தத்தான்.. ஹி ஹி )

இப்போ ரசத்தை இறக்கி வெச்சுடுங்க.. சின்ன அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க..இப்போ குக்கர் விசில் அடிக்கும்..2 சவுண்ட் விடும் வரை பொறுத்திருக்கவும். அப்புறம் கேஸ் அடுப்பின் வேகத்தை தணிக்கவும் .7 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD6nypfysSGGXNe2sLDCj-KK5XzCxbHT0IUwcyNhoIXSrl7if_sloBZDRfXVbDkf8HU9PN2xl6M2mbp-Ys4Tf4IO4SeLdY-Tgz4t1MO7emKgAXvFH2FytFB4VGkGMlv0uhI2Uc08-2Ire-/s1600/002.jpg
இப்போ 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. அவசரப்பட்டு இப்பவே மூடியைத்திறந்தா அம்மா கார்த்திக்கை தூக்கி வீசுன மாதிரி மூடி தூக்கி அடிக்கும். வெயிட் ப்ளீஸ்...


இப்போ சாப்பாடு, ரசம், தயிர் ரெடி... சாப்பிடுங்க.. சாம்பார் எங்கே?ன்னு கேட்கறீங்களா? நாம்பளே சாம்பார் மாதிரி தான் இருப்போம்...ஹி ஹி 

இந்தப்பதிவு ஹிட் ஆகித்தொலைத்தால் அடுத்தடுத்து தக்காளி சாதம் செய்வது எப்படி? லெமன் சாதம் செய்வது எப்படி? போன்ற பல பதிவுகள் வரும்.. ஹி ஹி 

இந்தப்பதிவு வழக்கம் போல் ஊத்திக்கிச்சுன்னா மறுபடி இதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி மீள் பதிவாக வரும்.. ஹி ஹி

டிஸ்கி 1 - சினிமாவைத்தவிர இவனுக்கு எந்த மேட்டருமே தெரியாது போலன்னு இனி யாரும் எள்ளி நகையாட மாட்டாங்க...இந்தக்கொடுமைக்கு அந்த கொடுமையே தேவலாம்கற முடிவுக்கு வந்துடுவாங்க..

டிஸ்கி 2 - நான் ஏதோ என் சம்சாரம் கூட சண்டை போட்டுட்டனோன்னு யாரும் நினைக்க வேனாம், என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ..(இதுல கூட சினிமா டைட்டில்). அப்போ என் பொண்டாட்டி கெட்டவாளா?ன்னு சண்டைக்கு வர வேணாம்..

(மன்னிப்பு)  டிஸ்கி 3 - இது வழக்கமா நான் போடறது தான்.இந்தப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தினால் சாரி.. தாவணி சுடி  மிடி. இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்..

டிஸ்கி 4 - டைட்டில்ல சலம்பல் எனும் வார்த்தை வந்துள்ளதே அதுக்கு அர்த்தம் என்ன? என்பவர்களுக்கு  ஹி ஹி எனக்கே தெரியாது.. சமையல், சம்சாரம்,சமாளிப்பு இந்த 3 வார்த்தைகளுக்கும் எதுகை மோனையா எனக்கு ஒரு வார்த்தை தேவைப்பட்டுச்சு...அதுக்கு தகராறு, அலம்பல்,போன்ற அர்த்தங்கள் இருக்குன்னு நினைக்கறேன்..

டிஸ்கி 5  - படம் 2 - ல் இருக்கும் பெண் அணிந்திருக்கும் சேலை சண்டே மண்டே சாரியாம்.. அப்படினா அந்த 2 நாள் மட்டும் தான் அதை கட்டனுமா?ன்னு கேட்டேன்.. அதுக்கு காரணம் யாருக்கும் தெரியல.. ஹி ஹி