Showing posts with label காதல் கதை. Show all posts
Showing posts with label காதல் கதை. Show all posts

Friday, June 08, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai13.jpg
படத்தோட டைரக்டர் கொங்கு மண்டலம்.. நம்ம ஏரியா -கோவைக்காரர்.. அவருக்கு வாழ்த்துகள்.. ரொம்ப செலவில்லாம மினிமம் பட்ஜெட்ல ஒரு தரமான படம் தர முயற்சித்ததற்கு....

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா ஈங்கூர் என்ற கிராமத்தில் இருந்த சுப்பாத்தா ஸ்பின்னிங்க் மில்ல நடந்த சில நிர்வாகப்பிரச்சனைகள், போனஸ் பிரச்சனைகள், மில் மூடப்பட்டது, முதலாளி வர்க்கத்தின்  ஈகோ இவை தான் கதைக்களன்.. ஆனா படத்துல உடுமலைப்பேட்டைல நடந்த மாதிரி காட்டறாங்க.. 

 கதையை கேட்ட புரொடியூசர் ரொம்ப ட்ரையா (DRY)  இருக்கே..ன்னு யோசிச்சிருக்கனும்.. அதனால திருப்பூர் மாவட்டம் மண்ணறை ( ஊத்துக்குளி ரோடு ) கிராமத்தில் உள்ள பிரைட் பிராசசர்ஸ் டையிங்க் கம்ப்பெனியில் நடந்த ஒரு லவ் ஜோடி, அவங்க அக்காவின் நிறைவேறாத காதல் இதை எல்லாம் கிளைக்கதையா வருது.

மில்லுல ஒர்க் பண்ற ஹீரோவும், ஹீரோயினும் லவர்ஸ்.. ஆனா அந்த கிராமத்துல ஜாதிப்பிரச்சனை அஜீத் தூக்கி அதாவது தலை . தூக்கி ஆடுது.. ஹீரோயினோட அக்கா லவ் மேரேஜ் பண்ணிக்கறா.. 4 மாசம் தனியா வாழ்றா.. அப்புறம்  அம்மா வீட்டுக்கு 3 மாச கர்ப்பத்தோட மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வர்றா.. அம்மாக்காரியே விஷம் வெச்சு கொன்னுடறா.. இது படம் பார்த்த லாலி பாப் சாப்பிடற குழந்தைக்குக்கூடத்தெரியுது, ஆனா வேற யாருக்கும் தெரியலை.. இடை வேளை.. ( படம் போட்டு 48 நிமிஷங்கள்லயே இடைவேளை)

ஹீரோயின் லவ் மேட்டர் தெரியுது.. அம்மாக்காரி அடிக்கறா.. மில்லுல வேலை செய்யற சூப்பர் வைசர் ஹீரோயின் வீட்டுக்கு தன் அம்மாவோட வந்து பொண்ணு கேட்குறான், இவங்க தர்லை.. உடனே அவன் விஷம் குடிக்கற மாதிரி அவங்க வீட்டுக்கு முன்னால ஆக்ட் குடுக்கறான்.. அதை பார்த்து பயந்து ஹீரோயினோட தாய் மாமன் ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலி பண்ணப்பார்க்குறான்.. இந்த ஹீரோயினோட  அம்மா பேக்கு போல் விஷம் சாப்பிட்டு இறந்துடுது.. லவ் ஜோடிக சேருது இவ்ளவ் தான் கதை..


ஹீரோ ஹேமச்சந்திரன்  அழகா இருக்கார்.. நல்லா நடிக்கறார்.. காதல் காட்சிகளில் யதார்த்தம்.. பாடல் காட்சிகளில் உற்சாகம் .. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. 

 ஹீரோயின் நந்தனா..  ஆள் பார்த்தவுடன் தந்தனா பாட சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை.. கேரளா வனப்பு மட்டும் கொஞ்சம் பார்வையை தாழ்த்தும்போது தெரிகிறது ( அதாவது நம்ம பார்வையை ) குண்டு முகம்.. என்ன ஆச்சரியம்னா படம் பூரா இவரை கண்ணியமாக காட்டியதுதான்.. ஒரு இடத்துல கூட அவர் ஆடை விலகல..  அப்படியே அச்சு அசல் உடுமலைப்பேட்டை கிராமத்துப்பெண்ணை கண் முன் நிறுத்துகிறார்.. அவரை லிப்ஸ்டிக் கூட போட விடாமல் மிதமான  ஒப்பனையில் வலம் வர விட்டது இயக்குநர் சாமார்த்தியம்.. விழிகள், புருவங்கள் கூடுதல் கூட்டல் அதாங்க அடிஷனல் பிளஸ்

எம் எஸ் பாஸ்கர்  வந்தவரை ஓக்கே.. ஹீரோயின் அம்மாவாக நடித்தவர் அழுத்தமான நடிப்பு.. சபாஷ்.. படத்தில் காமெடிக்காட்சிகள் இல்லாதது ஒரு குறை.. 




http://chennaionline.com/images/gallery/2011/June/20110607034918/Krishnaveni-Panchalai-Movie-Photos-101.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல  1957 ல , 1967 ல நடக்கிற மாதிரி சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கு .. அதுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. அந்தக்கால தினமணி பேப்பர், தினத்தந்தி பேப்பர், சேர், கட்டில், இண்ட்டிரியர் டெக்ரேஷன் ஆஃப் த பங்களா  எல்லாம் அபாரம்


2.பிரமாதமான பாடல்கள் 4.. அனைத்தும் படமாக்கப்பட்ட விதம் கவிதை..ஆலைக்காரி பஞ்சாலைக்காரி,ஆத்தாடி ஒரு பறவை பறக்குதோ ,ரோஜா மலரே, உன் கண்கள் முன்னாலே என பாடல் வரிகள் - வைரமுத்து + தாமரை.. சபாஷ்


3. ஆத்தாடி ஒரு பறவை  பாடல் காட்சிகளில் நீர் நிலைகளில் பறவைகள்,தண்ணீர்ப்பாம்பு, என ஒளிப்பதிவு செம  செம


4. ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் தரும் காட்சியில்  ஹீரோயின் சிலிர்க்கும் காட்சியில் அதே போல் சிலிர்க்கும் சேவல் ஷாட், கன்னுக்குட்டியின் குதூகலம் படமாக்கப்பட்ட விதம் அழகு.. 


5. படத்தில் வசனங்கள் ரொம்பவே ஷார்ப்  அண்ட் ஸ்வீட்.. தேவையான இடங்களில் மட்டுமே பாத்திரங்கள் பேசுகின்றன




http://chennai365.com/wp-content/uploads/movies/Krishnaveni-Panchalai/Krishnaveni-Panchalai-Stills-02.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. பொதுவா பஞ்சாலைல வேலை செய்யறவங்க எப்பவும் முகம் எல்லாம் புழுதியா, பஞ்சு அடைச்சு அழுக்கா தான் இருப்பாங்க.. ஆனா படத்துல வர்ற ஹீரோயின் உட்பட எல்லா லேடிஸும் என்னமோ முதலிரவுக்கு போற முத்தழகி மாதிரி 4 முழம் மல்லிகைப்பூவோட கலக்கலா வர்றாங்க.. ஹீரோ மற்றும் ஆண் கேரக்டர்கள் எல்லாம் அப்போதான் கோயில்ல இருந்து வர்ற கோயில் காளை மாதிரி நெற்றியில் விபூதி , பவுடர் உடன் அழகா இருக்காங்க.. ஒரு பயலை கூட வேலை செஞ்சு களைச்ச மாதிரி காட்டலை.. ஆனா படம் கதைக்களன் பூரா பஞ்சாலை.. 


2. மில் டைம் 10 மணிக்கு.. ஒரு லேடி 10.35க்கு வர்றா, கேட்ல வாட்ச்மேன் ( செக்யூரிட்டி) என்னம்மா இவ்ளவ் லேட்டா வர்றே? 5 நிமிஷம் , 10 நிமிஷம்னா பரவாயில்லைன்னு சொல்றான்.. அதே லேடி உள்ளே போறப்ப சூப்பர்வைசர்  4 பேர் கிட்டே பொத்தாம் பொதுவா கேட்கறான்.. “ ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் லேட் லேட் தான்.. 4 பேர்  ஆளுக்கு ஒரு நிமிஷம்னா  4 நிமிஷம் புரொடக்‌ஷன் பாதிக்கப்படுதே? அப்டிங்கறான்


3. ஹீரோ தன் காதலியின் அக்கா மேரேஜை முன்னால நின்னு நடத்தி வைக்கறான், ஆனா ஹீரோயினுக்கு அது தெரியலை. எந்தக்காதலன் தன் காதலிக்கு தெரியாம  காதலியோட அக்காவுக்கு மேரேஜ் பண்ணி வைப்பான்.. என் கிட்டே கூட சொல்லாம அப்படி என்ன என் அக்கா கூட உனக்கு நட்பு? அப்டினு அவ கேட்கமாட்டாளா?


4. அக்காவோட துணிகள் எனக்கு பத்தலை, எல்லாத்தையும் அவ கிட்டே கொடுக்கவா? அப்டின்னு ஹீரோயின் கேட்டதும் அம்மாக்காரி அவ டிரஸ்சை எல்லாம் எரிக்கறா.. ஏன் எரிக்கனும்? ஜாக்கெட் தான் பத்தாது.. ஏன்னா ஹீரோயின் ரெட்டை நாடி , அவங்கக்கா ஒற்றை நாடி, ஆனா புடவைக்கு என்ன சைஸ் வேண்டிக்கிடக்கு?அப்படியே கோபமா இருந்தாலும் ஏதாவது அநாதைக்கோ, பிச்சைக்காரிக்கோ கொடுக்கலாமே? ஏன் எரிக்கனும்?

5. மில்லுல வேலை செய்யற தொழிலாளர்கள் எண்ணிக்கை 300 -ன்னு ஒரு இடத்துல டயலாக் வருது.. ஆனா  ஒரு சீன்ல மில் ஏற்பாடு செய்யும் டூர்ல வேன்ல 16 பேர் மட்டும் தான் வர்றாங்க.. மீதி 284 பேருக்கும் உடம்பு சரி இல்லையா? போனஸ் பிரச்சனை பற்றி பேச்சு வரும்போது  கூட்டத்துல  8 வரிசைல சேர்  போட்டிருக்கு ,8 *  8 = 64 பேர் தான் இருக்காங்க.. மில்லுல உள்ளே காட்டறப்போ எப்பவும் 4 பேர் தான் காட்டறாங்க.. என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் மில்லுல லேபர்ஸ் வேலை செய்யறதை கொஞ்சம் பிரம்மாண்டமா காட்ட வேணாமா? க்ளைமாக்ஸ்ல செட்டில்மெண்ட் பேசறப்பக்கூட  100 பேரைத்தான் காட்டறீங்க.. 


6. ஹீரோயினை பெண் கேட்க ஒரு கூட்டம் வருது.. ஹீரோயினோட அம்மாவும்,  தாய்மாமாவும் பாய்ல உக்காந்திருக்காங்க.. ஆனா பெண் கேட்டு வந்தவங்க வெறும் தரைல உக்காந்திருக்காங்க.. இதுதான் தமிழர் பண்பாடா? அவங்க ஏழையாவே இருந்தாலும் அவங்க தரைல உக்காந்து வந்த விருந்தாளிங்களை  பாய்ல உக்கார வைப்பாங்க.. 

7.  மில் ஓனர் ரொம்ப நல்லவர், ஆனா லேபர்ஸை பேச்சு வார்த்தைக்கு ஏன் கூப்பிடவே இல்லை.. ?


8 .. ஈங்கூர் சுப்பாத்தா மில்லுல 18% போனஸ் குடுத்தாங்க.. கோவை லக்‌ஷ்மி மில்லுல 24% போனஸ் குடுத்தாங்க.. ஆனா இந்தக்கதைல  25 % போனஸ் கொடுப்பதாவும் லேபர்ஸ் 28 % ஒரு சாராரும், இன்னொரு சாரார் 30 % போனஸ் கேட்பதாவும் வசனம் வருது.. மில் ஓனர் 45% தர ஓக்கே சொல்றார்... தமிழ் நாட்ல எந்த மில்லுல போனஸ் 45% தர்றாங்க?உயர்ந்த பட்சமே 28% தான்


9. அப்படிப்பட்ட நல்ல மில் ஓனர் லாஸ் ஆனதும் லேபர்ஸ் எல்லாம் வீம்பா இருப்பது நம்பற மாதிரி இல்லை. போன வருஷம் மாதிரியே 45% போனஸ் வேணும்னு கேட்பதும் சரி அல்ல.. நம்பகத்தன்மை இல்லை.. 

10.. லேடீஸ் லோ கலெக்டரா ( பொம்பளை பொறுக்கி ) வர்ற வில்லன் ஹீரோயின் கிட்டே கல்யாணம் வரை போறதெல்லாம் ஓவர்... அவன் என்ன பெண்களையே பார்க்காதவனா?


11.. படத்தோட நீளம் ரொம்பக்குறைவு.. 113 நிமிஷம் தான் ஓடுது.. ஹீரோயின் அக்கா சாகறப்ப நமக்கு பரிதாபமே வர்லை.. ஏன்னா அவங்க காதல் போர்ஷன் காட்டவே இல்லை.. ஹீரோயின் அக்கா செத்ததும் அக்கா வீட்டுக்காரர் அப்பவே செத்திருக்கனும்.. என்னமோ தப்பிச்சு ஓடற மாதிரி காட்டி அப்புறம் அவர் தற்கொலை செய்வதும் நம்பற மாதிரி இல்லை.. 

12. படத்தின் முக்கிய விஷயம் ஹீரோயின் அம்மா ஏன் அவ்வளவு ஆங்காரமா பெத்த பெண்ணையே விஷம் வெச்சுக்கொல்றாங்க? என்பதை சரியா காட்டலை.. 


13. ஓப்பனிங்க் ஷாட்ல  கைல கன் இருந்தும் அதுல சுட்டு தற்கொலை செய்யாம மில் ஓனர் கார்ல பெட்ரோல் ஊற்றி அதுக்குள்ள உக்காந்து தீ பற்ற வைத்து சாவது நம்பவே முடியலை.. தீப்பற்றிட்டா தற்கொலை செய்யற எண்ணன் உள்ள  ஆள் கூட எரிச்சல், வலி தாங்காம கத்துவான், அங்கேயும் இங்கேயும் ஓடுவான்.. அவர் பொம்மையா இருக்கார் 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai01.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  நம்ம ஜாதிக்காரங்களா இருந்தா விசுவசமா வேலை பார்ப்பாங்க.. கூடவே இருப்பாங்க.. 


 நோ நோ நல்லா  வேலை பார்க்கறவங்க, நல்லா வேலை பார்க்காதவங்க என ரெண்டே வகைதான்


2. கவர்மென்ட் மாப்ளைன்னா ஊர் ஊரா போகனும்.. ஆனா மில் மாப்ளைன்னா நிரந்தரம் , அதனால மில் மாப்ளையே பாரு


3. ஏய்.. எதையாவது விட்டுட்டுப்போய்ட்டியா?

 ம்

 இதுவா பாரு


4. ட்ரிங்க் ட்ரிங்க் ( சைக்கிள் பெல்)

என்ன எதையாவ்து விட்டுட்டுப்போறியா?

 ம் ம் ம் 


5. பூ வாங்கித்தர்றேன்.. உனக்கு என்ன பூ பிடிக்கும்?

 ஏன்? எனக்கு என்ன பூ பிடிக்கும்னு உனக்குத்தெரியாதா?


6. ஏய்.. நான் உனக்குக்குடுத்தேனே, அதை திருப்பிக்குடு.. 

 வெச்சுக்கோன்னு சொல்லித்தானே கொடுத்தே.. 


7. ஒரு வருஷத்துல இந்த லேபர்ஸ்  மிச்சப்படுத்தறதே தீபாவளி போனஸ் தான்


8. லைட் இருக்கு.. ஆனா அதை போடாம ஏன் லாந்தர் விளக்குல படிக்கறே?

 நான் படிச்சுட்டு இருக்கறது மாக்ஸிம் கார்க்கி புக், அப்படித்தான் படிக்கனும்


9. கண்டவங்களையும் சொந்தக்காரங்கன்னு சொல்லிட்டு திரியறதுக்கு அவ செத்துப்போனதே , எவ்வளவோ மேல்


10. எத்தனை நாளைக்கு லேபர்ஸ் ஓனரை தேடி வர்றது? இப்போ எங்க டர்ன்.. அவங்க எங்களைத்தேடி வரட்டுமே? 


11. அடச்சே.. காரியத்தையே கெடுத்துட்டானே?


ஏன் கோவிச்சுட்டு போறான்?

 ம்.. இரு கேட்டு சொல்றேன். 

12.  சார்.. உங்க கிட்டே இருக்கற தாராள குணத்தையும், தொழிலையும் போட்டுக்குழப்பிக்காதீங்க


13. சிக்கலான நேரங்களில் எடுக்கப்படும் நேர்மையான முடிவுகளில் கூட சில சமயங்களில் தவறுகள் நேர்ந்து விடுகின்றன


14. ஜாதி விட்டு ஜாதி மாறி லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு நகரம் தான் பெஸ்ட்.. 




http://moviegalleri.net/wp-content/gallery/tamil-actress-nandhana-stills/krishnaveni_panjalai_actress_nandhana_stills_5794.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39



எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி..பி கமெண்ட் - காதலர்கள், மில் தொழிலாளிகள் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் விதமாய் கண்ணியமான காட்சி அமைப்புகள்.. இந்தப்படத்தின் ப்ரொமோவில் ஓவராய் பில்டப் கொடுத்தது தேவையற்றது

 ஈரோடு ராயல்-இல் படம் பார்த்தேன்


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai19.jpg

Monday, May 21, 2012

கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்



http://i.imgur.com/eEV91.jpgஷேர் ஆட்டோல முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோவும் ஹீரோயினும் போறப்ப ஒரு பொறம்போக்கு வேணும்னே ஹீரோயின் மேல இடிக்கறான்.. ஒரு தடவை இடிச்சிருந்தா ஹீரோ சும்மா உட்டிருப்பாரு.. 2 டைம் இடிக்கறான்.. அவனுக்கு ராசியான நெம்பர் 2 போல..உடனே ஹீரோ ஸ்டாப்ல இறங்குனதும் பப்ளிக் டாய்லட்ல அந்த நாயை போட்டு குமுறு குமுறுன்னு குமுறுறாரு.. ஐ மீன் ,அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடறாரு.. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல நல்ல  அபிப்ராயம் வந்துடுது..

 ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.. வில்லன் டைரக்டா ரேப் பண்ணுவான்.. ஹீரோ  லவ் பண்ணி டூயட் பாடி கரெக்ட் பண்ணி அவ சம்மதத்தோட அதை செய்வான்.. இது புரியாம பல பேக்குங்க ஊர்ல இருக்கு

 ஹீரோவும், ஹீரோயினும்  அடிக்கடி சந்திக்கறாங்க , ஊரை சுத்தறாங்க.. எல்லா ஹோட்டல்லயும் சாப்பிடறாங்க.. ஒரு நாள் ஹீரோ வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிடறாங்க.. ஹீரோ மட்டும் தனியா இருக்காரு.. நானா இருந்தா பிட் படம் பார்த்திருப்பேன்,.. அந்த தத்தி இன்னும் 1998 ல இருந்து வெளில வர்லை. சரோஜா தேவி புக் படிக்குது..

 ஹீரோயின்க்கு பிறந்த நாள்.. அவ தன் காதலை சொல்ல ஹீரோ வீட்டுக்கு வர்றா.. அவளை பார்த்ததும் அந்த தத்தி ஹீரோ அந்த கில்மா புக்கை ஒளிச்சு வைக்கறான்.. நானா இருந்தா கற்றதும் பெற்றதும் உனக்கும் இந்தான்னு குடுத்திருப்பேன்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு..






http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/Nov13/Swasika/normal/Swasika_20175.jpg

 அப்புறம் திடீர்னு லூஸ் மாதிரி ஹீரோயினை ஹீரோ டைட்டா கட்டிப்பிடிக்கறாரு.. கிட்டத்தட அட்டெம்ப்ட் ரேப் மாதிரி.. ஹீரோயின் மிரண்டு போய் ஓடிடுது..  ஜெயேந்திரர்ட்ட இருந்து தப்பிச்சு ஓடுன எழுத்தாளர் அனுராதா ரமணன் மாதிரி..( பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம்)

இப்போ 2 பேருக்கும் சண்டை.. பிடிக்கலைன்னா ஃபோன் நெம்பர் மாத்திட்டு போய்ட்டே இருக்கனும்.. அந்த கேனை ஹீரோயின் என்ன பண்றா .. உன்னை எனக்குப்பிடிக்கலை, நீ செஞ்சது தப்பு அப்டினு அடிக்கடி மீட் பண்ணி சொல்றா..

 ஹீரோயினுக்கு வேற பக்கம் நிச்சயம் ஆகிடுது.. மேரேஜ் அன்னைக்கு முந்தின நாள் ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயினை கன்வின்ஸ் பண்ணி “ கடைசியா ஒரு தடவை நீ வந்து பேசு”ன்னு சொல்றான்.. நானா இருந்தா “ டேய் கேனை... எனக்கு மேரேஜ், நான் எப்படி அங்கே வர முடியும், அவனை வேணா மண்டபத்துக்கு கூட்டிட்டு வா”ன்னு சொல்லி இருப்பேன்..

 ஆனா அந்த கேனை ஹீரோயின்  மண்டபத்துல இருந்து எஸ் ஆகி முன்னாள் காதலன் வீட்டுக்கு போறா.. அதுக்குள்ள அந்த அவசரத்துல பிறந்த அவசரக்குடுக்கை ஹீரோ தற்கொலை பண்ணிக்கறார்..இவ ஹேரே போச்சுன்னு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை மேரேஜ் பண்ணிக்கறா.. இவ்ளவ் தான் கதை ( ஆனா ஹீரோயினுக்கு ஹீரோ செத்தது தெரியாதுன்னு கேவலமான ட்விஸ்ட் வேற )


ஹீரோ ஆள் ஜம்முன்னு தான் இருக்கார்.. ஆனா கேரக்டர் தான் வீக்.  சாதாரண விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை பண்ணிக்கற அளவு வீக் மைண்ட்??? டூயட் காட்சிகளில், காதல் கலாய்ப்புக்காட்சிகளில் பாஸ் மார்க் ..


ஹீரோயின் ஆள் கும்முன்னுதான் இருக்கு. 60 மார்க் தேறும். அலங்கார வளைவுகள் பிளஸ் பாயிண்ட்ஸ்.


ஆர் சுந்தர் ராஜன் , புரோட்டா சூரி 2 பேர் இருந்தும் காமெடி வறட்சி. வடிவேல் மாதிரி காரணத்தை சொல்லிட்டு அடிடா எல்லாம் செம கடி.. வடிவேல் மாதிரி பண்ண த்தான் அவர் இருக்காரே?




http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3628_L_galvpf.gif


மனம் கவர்ந்த வசனங்கள்


1. எந்த சோப் போட்டு குளிச்சாலும் நீ வெளுக்கப்போறதில்லை, ஏன் ரிஸ்க் எடுக்கறே?


2. இப்போ நான் சொன்ன தத்துவம் அரிஸ்டாட்டில் சொன்னது..


 அதானே. சொந்தமா நீங்க எப்போதான் சொல்லி இருக்கீங்க?



3. BAG  ல பாருங்க....

 ஒண்ணும் தெரியலையே?


 யோவ்.. என்னை சுத்தி சுத்தி வந்து பார்த்தா என்ன தெரியும்? என் ஹேண்ட் பேக்ல பாருய்யா  ( அடங்கோ ,... அடேய் அடேய் அவ்ளவ் அப்பாவியாடா நீ ?)


4. உன் கவிதையை நான் படிக்கறதை விட நீயே படிச்சுக்காட்டினா  ரொம்ப நல்லாருக்கும். ( தக்காளி.. நீ கை நாட்டா?).


5. நமக்கு செய்யப்படும் அதீத வசதிகள் நம்ம குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது


6. சிம்மே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போட்டாலும் பரவாயில்லை, பேட்டரியே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போடறியே?


7. என்னது? நீ குடிக்க மாட்டியா? இதுக்கு நம்பற மாதிரி ஒரு காரணம் சொல்லு


அப்பா என் மேல வெச்சிருக்கற நம்பிக்கை தான் நான் குடிக்காததுக்கு காரணம்..


8. பிசிராந்தையார் பிசிராந்தையார்னு

 2 பேரா?



ம்ஹூம், ஒருத்தர்தான்.....



9.  டீல நாட்டுச்சர்க்கரை போட்டுக்குடிச்சா நல்லாருக்கும், உடம்புக்கும் நல்லது..


10. அவ யார் கூப்பிட்டாலும் போவா .

 யோவ்!!!!!


நல்லது கெட்டது நடந்தா வீட்டுக்கு யார் கூப்பிட்டாலும் போவான்னேன்.


11. சொல்லாம போயிட்டானேன்னு ஃபீல் பண்ணக்கூடாது/..அதான்..

 ஆமா, இவர் மேல் லோகத்துக்கு போறப்பக்கூட எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டுத்தான் போவாரு..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_78226435185.jpg
பாரதியார் சொன்னாரே நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை வேணும்னு
 அதை ஃபாலோ பண்றாங்களாம்
12. சாராயம் குடிச்சு செத்தவன் சமாதில சாராயம் வெச்சு படைக்கறாங்க, ஃபிகரால உயிரை விட்டவன் சமாதில அந்த ஃபிகரையா வெச்சு படைக்கறாங்க



13.  நான் ஏன் இப்போ பிராந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்னா .உன் மனசுல இருக்கற காதல்ங்கற மனப்பிராந்தியை அகற்றத்தான்


14. இந்த விஷயம் முகத்துக்கு முன்னால நின்னு மன்னிப்பு கேட்கற விஷயம் இல்லை.. முதுகுக்கு பின்னால நின்னு கூனிக்குறுகி மன்னிப்பு கேட்கற விஷயம்


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை வைத்துக்கொண்டு அதை 13 ரீல் இழுத்த தைரியம்.. தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த நுணுக்கம்


2. ஹீரோ  ஹீரோயின் செலக்‌ஷன்.. காதல் காட்சிகளில் கண்ணியம்..




http://www.tamilnow.com/movies/gallery/kandathum-kanathathum/kandathum-kanathathum-6426.jpg


இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. காதலையே இன்னும் வெளீல சொல்லாத ஒரு பயந்தாங்கொள்ளி காதலன் கில்மா புக்கை படிச்சுட்டு காதலியை மிஸ் யூஸ் பண்ண ட்ரை பண்ணுவானா?


2. காதலி அதாவது ஹீரோயின் முத முதலா ஹீரோ வீட்டுக்கு உள்ளே வர்றா.. நித்தியானந்தா ஆசிரம பெட்ரூமுக்குள்ள வர்ற மாதிரி பெப்பெரெப்பேன்னு வருவாளா?  அப்பா அம்மா வீட்ல இல்லைங்கற மேட்டர் அவளுக்கு தெரியாது.. அப்போ அவ என்ன பண்ணுவா? காலிங்க் பெல் அடிச்சுட்டோ, கதவை தட்டிட்டோ வருவா.. ஆனா ஹால், தாண்டி அவ பாட்டுக்கு உள்ளே வந்துடறாளே?


3. காதலியை பார்த்ததும் கில்மா புக்கை காதலன் ஏன் மறைக்கறான்? அவ தன்னை தப்பா நினைச்சுடக்கூடாதுன்னுதானே? அப்படி நினைக்கறவன் கட்டிப்பிடிச்சு ரேப் பண்ண மட்டும் ட்ரை பண்ணுவானா?

4. சரி, ஆனது ஆகிடுச்சு... பயங்கர கோபத்துல ஹீரோயின் வெளில கிளம்பறா.. போறவ தலைவிரி கோலமா, டிரஸ் எல்லாம் கலைஞ்ச போஸ்ல தெருவே வேடிக்கை பார்க்க அப்படியா போவா?வில்லன்கள் 10 பேரு துரத்தி வர்றாங்களா? காதலன் தானே? அதுவும் அவ முறைச்சதும் அவன் பம்மிக்கிட்டு தேமேன்னு சும்மா தான் நிக்கறான்.. நின்னு நிதானமா தன்னை சரி பண்ணிட்டுத்தானே வருவா?


5. கோவிச்சுக்கிட்டு போனவ  வேற ஊருக்கு போலாம், அல்லது அவனை டோட்டலா அவாய்டு பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு  அடிக்கடி அவனை மீட் பண்ணி உன்னை பார்க்கவே பிடிக்கலை, சாரின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்காளே?


http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg


6. இடைவேளைக்குப்பிறகு எப்படி கதையை நகர்த்தறதுன்னு தெரியாம திரு திருன்னு விழிக்கறீங்க.. ஹீரோ சோகப்பாட்டு, சரக்கு அடித்தல்னு செம போரா கதை நகருது..

7. இந்தக்காலத்துல எத்தனையோ தப்பு பண்ணிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாம வாழும் பலர் மத்தில ஜஸ்ட் கில்மா புக்கை படிச்சதாலும், அதனால உணர்ச்சி வசப்பட்டு காதலியை கட்டிப்பிடிசதாலும் ஒருத்தன் குற்ற உணர்ச்சில தற்கொலை செய்வது எல்லாம் ஓவர்


8. என் ஐடியா என்னான்னா ஹீரோயின் அவ வீட்ல தனியா இருக்கறப்ப பாத்ரூம்;ல குளிக்கறப்ப ஹீரோ எண்ட்டர் ஆகறார்,.. கட்டிப்பிடிக்கறார்னு சீன் வெச்சிருந்தா மேலே சொன்ன அத்தனை லாஜிக் மீறலும் பணால் ஆகி இருக்கும், எங்களுக்கும் ஒரு சீனாவது மிச்சம் ஆகி இருக்கும்..

9. க்ளைமாக்ஸ் மகா சொதப்பல்.. ஹீரோவை ஹீரோயின் ஏத்துக்கிட்டு மேரேஜ் பண்ணி இருக்கனும்.. அதை விட்டுட்டு அவனை தியாகி ஆக்கி ஹீரோயினை துரோகி ஆக்கியது ஓவரோ ஓவர்


10. ஹீரோவோட  ஃபிரண்ட் தலை எல்லாம் களைஞ்சு 2 கிலோ முடியோட கேவலமா இருக்கார்.. அவரை முன்னே பின்னே பழக்கம் இல்லாத  ஹீரோயின் அவரை நம்பி மிட் நைட்ல எப்படி ஆட்டோல கழுத்துல கைல 30 பவுன் நகையோட போவார்? அது கூட தேவலை.. அதே ஃபிரண்ட் அம்போன்னு ஹீரோயினை நீங்க தனியா மண்டபத்துக்கு போய்க்குங்கன்னு அனுப்பறார்.. ஆட்டோ டிரைவர் பாட்டுக்கு கடத்திட்டு போய்ட்டா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXbq8XlxN9RYhyphenhyphenoo-ktbjJgZYGVrXduwL6AUmw3rFYQezGyiIvtslZ1mxUSBTAo_ae9YmOazzLCNwAtQjI5cJHYPfR0cSH7zEG79j5Rm2iZsc0gtsDHWGHHPFswa1qLdMY7vFjls_rn30/s1600/Kandathum+Kanathathum+Movie+Stills+Photos+Kandathum+Kanathathum+New+Pictures.jpg


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி -

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3

Friday, May 18, 2012

ராட்டினம் -சினிமா விமர்சனம்



http://moviegalleri.net/wp-content/gallery/raattinam-movie-posters/raattinam_movie_posters_lagubaran_swathi_7789.jpg

ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு 65 மார்க் ஃபிகரை 2 வருஷமா லவ்வறான், ஆனா அவ கிட்டே சொல்லலை.. ஹீரோ கடுப்பாகி  ஹெல்மட் போட்டுட்டு ரோட்ல அந்த வழியா வர்ற முகம் தெரியாத ஒரு ஃபிகர்ட்ட ஐ லவ் யூ சொல்லி அவ கிட்டே திட்டு வாங்கி “ பார்த்தியா.. இந்த மாதிரி டக்னு காதலை சொல்லிடனும்”கறான்.. அப்புறம்  பார்த்தா அந்த ஹெல்மேட் பார்ட்டி தான் ஹீரோயின்.. பாப்பாவுக்கு 60 மார்க் தான்.. ஹீரோயின் தோழியை விட ஹீரோயின் ஒரு மாற்று கம்மியா இருக்கனும் என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.

 எல்லா படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயின் பின்னால அலைஞ்சு அவளையும் லவ் பண்ண வெச்சுடறான்..  2 பேர் வீட்டுக்கும் மேட்டர் தெரியுது.. இடைவேளை.. 

 ஹீரோவோட அண்ணி கவுன்சிலர்.. அண்ணன் தான் அந்த பதவிக்கு காரணம்.. மேலிடம் மூலமா பிரஷர்.. ஹீரோயின் அப்பா பெரிய அரசியல்வாதி.. பயங்கர பிரஷர் குடுக்கறாங்க.. ஹீரோ , ஹீரோயின் ஓடிப்போய் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா சேஸ் பண்ணி பிடிச்சிடறாங்க .. என்ன ஆச்சுங்கறதுதான் க்ளைமாக்ஸ்.. 

 படத்தோட இயக்குநர்தான் ஹீரோவோட அண்ணன்.. படத்தோட ஹீரோதான் உதவி இயக்குநர்.. ரொம்ப சவுகர்யமா போச்சு.. ஹீரோவுக்கு நடிப்பு சரியா வர்லைன்னாக்கூட அண்ணன் கேரக்டர் தம்பியை அடிக்கற மாதிரி 2 சீன் வெச்சு பளார் பளார்னு அடிச்சுக்கலாம்.. 

ஹீரோ பேரு லகுபரன்.. ரொம்ப சாதாரண , எளிமையன முகம்.. யதார்த்தமான நடிப்பு. மனதில் தங்கும்படி உழைப்பு..  காதல் காட்சிகளில் வேதியியல் சரியா வேலை செய்யலைன்னாலும்  நல்ல எதிர்காலம் இருக்கு.. 

 ஹீரோயின் பேரு ஸ்வேதா .. பாந்தமான முகம்.. வட்ட முகம்.. புருவம் ரொம்ப அடர்த்தி.. பாப்பாவுக்கு என் தனிப்பட்ட அட்வைஸ் அதை கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கிட்டா  நல்லாருக்கும்.. பிளஸ் டூ படிக்கற மாணவி மாதிரி ரொம்ப இளமையா இல்லை.. கொஞ்சம் முதிர்ச்சி தெரியுது.. முகத்துல ..  சிரிக்கும்போதும் அழும்போதும் சம அழகு.. வெட்கப்படும்போது செம அழகு. கண்கள் ரொம்ப பெரிசு. கண் மட்டும் தான் .. ஆடை உடுத்தி வரும் நளினம், காட்சி அமைத்த விதத்தில் கண்ணியம் காட்டி சமீபத்தில் வந்த எந்த தமிழ்ப்படத்திலும் இவ்வளவு  கண்ணியமாக நாயகியை காட்டலை.. வெல்டன்.. 


ஹீரோவின் அண்ணியா வர்ற கேரக்டர் செம .. ஷேப்... எதிர்காலம் உண்டு.. ஹீரோவின் நண்பன், ஹீரோயின் அண்னன், இன்ஸ்பெக்டர் என பெரும்பாலான கேரக்டர்கள் புதுமுகங்களே.. அவர்களிடம் இயல்பாக நடிப்பு வாங்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ்

http://l.yimg.com/bt/api/res/1.2/8MRT_77VWp8Rgcm0dGTZcQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/16485969033.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் பேங்க் வந்து அங்கே செல்லான் ஃபில்லப் பண்ற மாதிரி அதுல தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் எதார்த்தமான காட்சி


2. ஒரு பாடலில் ஹீரோ கடல் கரை ஓரம் நிற்க கடல் அலைகள் அவரை சுற்றி ஒரு வட்டம் போட்டு ஓடும் அழகுக்காட்சி


3. ஹீரோயின் தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம்) சாப்பிடும் காட்சியில் அவரது உதட்டு நிறமும், பழ நிறமும் மேட்ச்சுக்கு மேட்ச்.. ( ஹீரோயின்  பக்கத்துல இருந்தா சேம் பிஞ்ச்-னு சொல்லி கன்னத்தை கிள்ளி இருக்கலாம்)

4. அசத்தும் நிலவு அப்படியே அழகு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. செம ஹிட் ஆகிடும்..  ஏத்து எத்து இது ஏற்றுமதி ஊரு பாடலும் ஓக்கே ரகமே 

5. நீட்டி முழக்காமல் படத்தை கனகச்சிதமாக 2 மணி நேரத்தில் முடித்தது ( கட் அடிச்சுட்டு போறவங்களுக்கு ரொம்ப ஈசி)

 6. எளிமையான காதல் கதை,கண்ணியமான நெறியாள்கை, நேர்மையான, யதார்த்தமான முடிவு



http://dinamani.com/Images/article/2011/8/17/cin4.jpg

இயக்குநரிடம்  சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோ ஹீரோயினுக்கு பரிசா குடுத்த ஃபோன் பற்றி பெண் வீட்டுக்கு தெரிஞ்சுடுது.. நான் பெண்ணோட அப்பாவா இருந்தா முதல் வேலையா அந்த ஃபோனை தூக்கி எறிஞ்சிருப்பேன்.. அல்லது அட்லீஸ்ட் சிம் கார்டையாவது கடாசி இருப்பேன். ஆனா ஹீரோயின் அப்பா ஏன் லூஸ் மாதிரி அந்த ஃபோனை ஒளிச்சு வைக்கறார்? ( அந்த ஃபோன் இருந்தாத்தானே ஹீரோயின் காண்டாக்ட் பண்ற ஒரே சோர்ஸ்?)

2. ஹீரோயின் வீட்டை விட்டு வெளீல  போகக்கூடாதுன்னு தடை விதிச்சு டென்ஷன், டெம்ப்போ எல்லாம் ஏத்தி விட்டு கேனத்தனமா எந்த அப்பாவாவது தன் மகள் காதலன் பரிசாக்குடுத்த செல் ஃபோனை அவ கண்ல படற மாதிரி ஹால்ல சோபா மேல வெச்சிருப்பாரா?


3. ஹீரோயினை சொந்தக்காரங்க வீட்டுக்கு லீவ்ல  ஒரு மாசம் கூட்டிட்டு போய் டேரா அடிக்கறப்ப ஹீரோயினால ஹீரோ கூட நோ காண்டாக்ட்.. ஏன்னு ஹீரோ மறுபடி கேட்கும்போது “ நீ வாங்கிக்குடுத்த செல் ஃபோன் எங்கேன்னு தெரியலை, காணோம்கறா ஹீரோயின்.. நான் கேட்கறேன்.. ஒரு மாசத்துல பக்கத்துல ஏதாவது ஒன் ருப்பி காயின் பூத்ல இருந்து கூட பேச முடியலையா? அட்லீஸ்ட் ஏதாவது ஒரு ஜொள் பார்ட்டி இருந்தான்னா அவன் கிட்டே ஃபோன் வாங்கி ஜஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்க முடியாதா?


4.  ஹீரோயின் படம் பூரா ரொம்ப பயந்த சுபாவமா கம்மிய குரல்ல மென்மையா பூனை மாதிரி பேசுது , ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல முத முத ஹீரோ கிட்டே பேசறப்போ  வைஜய்ந்தி ஐ பி எஸ் மாதிரி மிரட்டலான குரல்ல பேசுது ( 2 குரலும் வேற வேற, தொனியும் 100% மாறுது )


5. ஹீரோ ஓப்பங்க்ல தன் நண்பன் காதல்க்கு உதவறப்போ சைக்கிள்ல போறாரு.. தன் காதல்னு வந்ததும் பைக்ல போறாரு... அது ஏன்?


6.  ஓப்பனிங்க்ல அந்த 65 மார்க் ஃபிகர் தான் லவ்வற பையன் தண்ணி அடிக்கற பார்ட்டின்னு தெரிஞ்சதும் உடனே அவனை வெறுக்கறா.. இந்தக்காலத்துல 98 % பசங்க சரக்கு சங்கர லிங்கங்களாத்தான் இருக்காங்க.. இதெல்லாம் ஒரு காரணமா/ ?


7. வீட்ல ஏகப்பட்ட பிரச்சனையா இருக்கு... எல்லாருக்கும் காதல் விஷயம் தெரிஞ்சுடுது.. பலத்த காவல் வேற .. இந்த டைம்ல மிட் நைட்ல ஹீரோ பைக்ல வந்து  ஹீரோயின் வீட்டுக்கு முன்னால நின்னு  கேனம் மாதிர் ஹாரன் குடுக்கறார்..அப்போ ஹீரோயின் அப்பா போலீஸ்க்கு ஃஃபோன்  பண்ணி 2 நிமிஷத்துல வர வெச்சுடறாரே அது எப்படி? வா வா என்னை வந்து பிடிச்சுக்கோன்னு ஹீரோ அங்கேயே நிக்கறாரு.


8. ஹீரோவோட அண்ணன் கொலை செய்யப்பட்டது தெரிஞ்சதும் ஹீரோ மட்டும் தனியா இழவு வீட்டுக்கு போகாம ஹீரோயினையும் கூட்டிட்டே போறாரே? அடியாளுங்க வந்து கூட்டிட்டு போவாங்கன்னு தெரியாதா?


9 . ஹீரோயின் யூஸ் பண்ற  ஸ்கூட்டி ஓப்பனிங்க் ல ஆரஞ் கலர்.. அப்புறம் சில சீன்ஸ் சிவப்பு கலர், அப்புறம் மறுபடி ஆரஞ்ச் கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?


10. க்ளைமாக்ஸ் யதார்த்தம் ஓக்கே, ஆனா என்ன சூழ்நிலைல அப்படி ஆச்சுன்னு அவங்க தரப்பு விள்க்கத்தை இன்னும் விபரமா காட்டி இருக்கலாம். ( ஏன்னா படம் தான் 2 மணி நேரம் மட்டும் ஓடற சின்னப்படமா இருக்கே?)


http://www.haihoi.com/Channels/cine_gallery/Raattinam-Tamil-Movie-Stills-05_S_158.jpg
a


மனம் கவர்ந்த வசனங்கள்


1. யோவ்.. போலீஸ்.. நான் ஒரு டிக்கெட் தான்யா.. ஆனா நீ பொழைக்கற இந்த பொழப்புக்கு என் கூட வந்தீன்னா இதை விட அதிகமா சம்பாதிக்கலாம்



2. சார்... அந்த பொண்னுகிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்கோ?

 எதிர்த்து பேசறியா? பேண்ட்டை கழட்டுடா


 அய்யய்யோ, நான் ஜட்டியே போடலையே?


3. சார்..சார்.. என் வண்டியை இங்கே நிறுத்திட்டு போறேன்.. கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?


டேய்./. இது என்ன பைக் ஸ்டேண்டா-? போலீஸ் ஸ்டேஷனா?


4.  டிக்கெட் -ஊர்ல லவ் பண்றவங்க எல்லாரும் என் கிட்டே வந்துட்டுதான்யா இருக்கானுங்க..

5. இப்பவெல்லாம் பொண்ணுங்க நீட்டா டிரஸ் பண்றவங்களை கண்டுக்கறதே இல்லை -கசக்கு முசக்குன்னு ஒரு சர்ட், கிழிஞ்ச அல்லது கிழிச்சு விட்ட ஜீன்ஸ் பேண்ட் போட்டாத்தான் பாக்குதுங்க.


6. டேய்.. அது என்னை பார்த்து சிரிக்குதுடா..

 அந்த ஆண்ட்டி உன்னை பார்த்து மட்டும் இல்லை, ஊர்ல இருக்கற எல்லாரையும் பார்த்துத்தான் சிரிக்குது


7. பொண்ணை பார்த்தா உடனே ஐ லவ் யூ சொல்லனும்.. 2 நிமிஷத்துல ஓக்கேவா? இல்லையா?ன்னு ரிசல்ட் தெரிஞ்சுக்கனும்.. அதை எல்லாம் விட்டுட்டு பொழப்பை கெடுத்துட்டு இப்படி 2 வருஷமா அவ பின்னால சுத்திட்டு இருக்கியே?


8. இவளுக்காகவா இவ்ளவ் சீன் போட்டே?2 ரூபாக்கு குச்சி ஐஸ் வாங்கி குடுத்திருந்தாலே வந்திருப்பாளே?5 ரூபா சிகரெட்டை வேஸ்ட் பண்ணிட்டியே?






http://tamilmaxs.in/wp-content/gallery/raattinam-movie-press-show-function-photos/actress_-swathi_-at_-raattinam_-movie_-press_-show-10.jpg

9. சுமாரா இருக்கற என் பின்னாலயே பசங்க வர்றப்போ சூப்பர் ஃபிகரா இருக்கற உன் கிட்டே பசங்க வர மாட்டாங்களா?


10. அவனவன் ஆள் கையை காட்டிட்டா எல்லாரும் அமீர் கான் தான்


11. லவ் மேட்டர்ல எல்லாம் எடுத்தோமா? கவிழ்த்தோமா?ன்னு இருக்கக்கூடாதுடா.. முதல்ல பார்க்கனும், அப்புறம் சிரிக்கனும், அப்புறம் இம்ப்ரஸ் பண்னனும், கடைசியா டைம் பார்த்து லவ்வை சொல்லனும்..

 இதே எழவைத்தான் என் லவ் மேட்டர் ஓடிட்டு இருக்கறப்ப சொன்னேன்


12. பொண்ணை பெத்தா மட்டும் போதாது.. ஒரு வயசு வந்த பின் அவளை கண்காணிக்கனும்.. கண்ல விளக்கெண்ணெய் ஊத்தி பார்க்கனும்


13. அங்கே இருக்கறது எங்கண்ணண்டா..

 அதனால என்ன?

 அவன் கூட இருக்கறது ஒரு டிக்கெட்


 அப்போ உங்கண்ணன் தான் உன்னை பார்த்து பயப்படனும்.. நீ ஏன் பயப்படறே? வா, பில்லை அவன் தலைல கட்டலாம்


14. இப்போ நாம என்ன தான் அக்கறையா  பேசுனாலும் அது அவளுக்கு கேட்காது எதிரியாத்தான் நம்மை பார்க்கத்தோணும்


15. ஆம்பளை நமக்கே இவ்ளவ் பிரச்சனைன்னா அவளுக்கு என்ன பிரச்சனையோ? எப்படி இருக்காளோ? உடனே அவளை பார்க்கனும் போல இருக்குடா..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEwdwtmsJ1SHGv0RzvYq5zvFqOeX2kEf7X51CEXoqbjb-7UtMY7RSW5gq_vTzHRkguAOLi3JBjTx7Xk8RsBaLIXgw892G5lTiTaTeH4-4O_Ohc7CZID2nVkUwxi5JEWLPR5_QDBLwT8Sk/s1600/Raattinam+Heroine+Swathi+Cute+Photos+Stills+Tamil+Actress+Swathi+New+Photoshoot+images+(3).jpg

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மதிப்பெண் - 42

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி கமெண்ட் - காதலர்கள் , பெண்ணை பெற்றவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய  படம்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyYAkGe7_uwjoPE6H9xHJP6fefe62qGdBJ4fomCYNVO6kCpNTB_UTP0fPcbOQSE8rYO6OigORlrrC44u2uwfTyV3VpT6FhfbltzjUeBSnzXUSGJA6OQ0hswYdDaUb-z1dl17W9qROTVJY/s1600/Raattinam+Latest+Movie+Stills+Photos+%25281%2529.jpg

Wednesday, April 25, 2012

மை - வல்லமையா? சிறுபிள்ளை வெள்ளாமையா? - சினிமா விமர்சனம்

அமைதிப்படைல கொஞ்சம், புதிய மன்னர்கள்ல கொஞ்சம்,கொள்ளைக்காரன்ல கொஞ்சம்  எல்லாத்தையும்  மிக்ஸ் பண்ணுனா மை ரெடி.. படத்தோட பின் பாதில காட்டுன ஆர்வத்தையும், கட்டுக்கோப்பையும் முன் பாதில காட்டி இருந்தா படம் க்ளிக் ஆகி இருக்கும்.. இருந்தாலும் நல்ல முயற்சியே.. லோ பட்ஜெட் படங்களை வரவேற்கலாம்.. 

 ஹீரோ ஒரு  டேக் கேட்சர்.. அதாவது எடுபுடி, அல்லக்கை.. ஏதோ ஒரு வீணாப்போன கட்சியின் வெட்டிப்பேச்சாளன்.. நம்ம டாக்டர் ராம் தாஸ் அரசியல்ல ஈடுபட்ட நேரம் போக மரம் வெட்டுன மாதிரி அவன் பேசுனது போக ஊர்ல அங்கங்கே திருடறான்... ஆனாலும் அவன் நல்லவன்.. ஏன்னா தமிழ் சினிமா ஹீரோன்னா ஹீரோயினையே ரேப் பண்ணாலும் அவன் நல்லவன் தான்.. 

ஹீரோயின் ஒரு தனியார்  டி வி ஓனர் காரு.. பாப்பா பிரின்சிபிள் என்னான்னா மானங்கெட்டுப்போய்  மானாட மயிலாட மாதிரி புரோகிராம் நடத்தி டி ஆர் பி ரேட்டை குப்புன்னு ஏத்தி அதுல வர்ற வருமானத்தை  வாங்கி அதுல சோறு சாப்பிடனும்னு அவசியம் இல்லை.. மக்கள் டி வி மாதிரி , புதிய தலை முறை மாதிரி மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி புரோகிராம் பண்ணுனா போதும்கற கோட்பாடு உள்ளவ.. 

 ஹீரோவும், ஹீரோயினும் சின்ன வயசுலயே க்ளாஸ் மேட்ஸ்... அதனால ஹீரோ பிட்டை போடறான்.. ஹீரோயின் மு்றைக்கறா..  இதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம்கற மாதிரி அவன் நயன் தாரா பின்னால பம்புன பிரபு தேவா மாதிரி சுத்தறான்..




 தெருல ஒரு மெண்ட்டல் ( மன நிலை குன்றியவர்) அழுக்கு டிரஸ்சோட குளீக்காம இருக்கு.. அந்தாளை வசூல் ராஜா எம் பி பி எஸ் ல கமல் ரெடி பண்ணுன மாதிரி க்ளீன் பண்ணி  அவனை நீட் பண்றார். உடனே ஹீரோயினுக்கு லவ் வந்துடுது.. இதுல என்ன காமெடின்னா ஹீரோவே கிட்டத்தட்ட அவனை மாதிரியே குளீக்காம , ஷேவிங்க் பண்ணாம  கேவலமாத்தான் இருக்காரு.. ஒரு வேளை அவனைப்போய் நான் குளிப்பாட்டி சுத்தம் பண்ணினா ஹீரோயின் என்னை லவ் பண்ணும்னு நினைக்கறேன்.. 

 டாக்டர் ரியாஸ்க்கு ஃபோன் போட்டு கேட்டா அது என்னமோ க்ளீனோ ஃபோக்கஸ்சோ செட்டப் வியாதியாம் ஹி ஹி .. சரி கதைக்கு வருவோம்.. இப்போ இடைவேளை வரப்போகுது// என்ன கண்டிஷன்? ஹீரோயின் போடுவாங்க? “ நீ பெரிய ஆளா வந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன் “  ( மேடம் நான் 6 அடி .. ஓக்கே வா? ஹி ஹி )

இடைவேளைக்குப்பிறகுதான் படம் சூடு பிடிக்குது.. வார்டு கவுன்சிலரா நின்னு ஹீரோ ஜெயிச்சு மேயராகிடறார்.. அதாவது ஊர் மேயற பயல் இப்போ மேயர் ஹி ஹி இப்போ ஏற்படும் போராட்டத்தில் ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடக்கும் சுவராஸ்யமான மோதல்களே மிச்ச படம்.. 

 ஹீரோ விஷ்ணுப்பிரியன்.. அண்ணன் ஆல்ரெடி இலக்கணம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தவர் தான் .தூள் ஹிட்டுக்குப்பின் அருள்னு ஒரு டப்பா படத்துல விக்ரம் நடிச்சாரே அந்த கெட்டப்..  நல்ல நடிப்பு.. டயலாக் டெலிவரில கொஞ்சம் தடுமாற்றம்.. மற்றபடி நல்ல எதிர்காலம் உண்டு.. 

 ஹீரோயின் ஸ்வேதா பாசு.. ஃபிகர் செம ஹோம்லி..  70 மார்க் போடலாம்.. மேற்குவங்காளம் பூர்வீகம்.. பாப்பா நம்ம ஊரு பேபி ஷாலினி மாதிரி.. சின்ன வயசுல இருந்தே கலைச்சேவை... கண்ணு அழகு.. கன்னம் அழகு.. லிப்ஸ் இருக்கே நேச்சுரல் ரோஸ்.. கலர்.. அவ்ளவ் தான்.. அதுக்கு மேல வர்ணீக்க மாட்டேன்.. மீ எ டீசண்ட் மேன் ஹி ஹி


ஜெயப்பிரகாஷ் தான் வில்லன்.. சூப்பர் நடிப்பு..  ஆர்ப்பாட்டம் ஏதும் பண்ணலை.. ஆனா மன்சை கவர்கிறார்..




 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது 10 வது ,மாசம்.. 

 அப்படியா? கங்கிராட்ஸ்.. 

 யோவ்... இது சாதா 10 ய்யா.. 


2.  நீ கொடுத்தை செக்கை பேங்க்ல போடவே வேண்டியதில்லை.. சும்மா இப்படி கீழே போட்டாலே பவுன்ஸ் ஆகிடும் போல  ( ஜோக் டேக்கன் ஃப்ரம் ஆனந்த விகடன் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு)

3. முகத்தை பார்த்து பேச தைரியம் இல்லையா? 

 அப்படி இல்லை.. உன் முகத்தை பார்த்தா கிஸ் அடிக்கத்தோணும்... 


4. மாப்ளை கிட்டே பெரிய வண்டி கேட்கப்போறேன்.. 

 யூ மீன் லாரி? அந்தாள் கிட்டே பைக்கே இல்லையாம்.. 

5.  குத்துக்கல்லாட்டம் இருந்துட்டு பேச்சைப்பாரு ராஸ்கல்ஸ். 

6. மாமா.. உங்க பொண்ணை விட உங்களைத்தான்  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பேசாம நான் உங்களையே கட்டிக்கிடவா? ( ஐஸ் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ்)


7. மீடியான்னா என்ன வேணாலும் காட்டலாமா? க்ரைம் ஸ்டோரி போடறேன்னு சொல்லி எப்படி ரேப் பண்றது? எப்படி மர்டர் பண்றது? எல்லாம் கத்துக்கொடுத்துடுவீங்க போல .. 

8. எனக்கு மூடு இல்லை

 மூடிட்டு கிளம்புடா முதல்ல. 

9. அவ்வ்வ்வ்வ். ஜூஸ் குடுத்து அப்புறமா ஃபியூஸ் பிடுங்குவாங்களோ?

10.  பிச்சைக்காரரா அவரு?

 நோ.. மன நலம் பாதிக்கப்பட்டவர்

 ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi85C-TEJPU8-tj-aOjUYDWe73wdPis-0kbSgIOUc3IY308oRgvhftU3HK3IWCOpyYhnlRGJKtKx3eyC5s2yS1i3lChj-XP5CxJs0gUUBncgJklgEu7s8z0mo8Mkg4WeotJRapyZzNTE84/s400/swetha+basu+prasad+hot+photos1.jpg
11. நாய்க்கடிங்கறது சாதாரண விஷயம் இல்லை.. நகம் பட்டாக்கூட 3 நாள் ட்ரீட்மெண்ட் எடுக்கனும்.. கடி பட்டா 10 நாள் சிகிச்சை.. 

12. எங்கம்மாவுக்குப்பிறகு நான் பயப்படற ஒரே ஆள் நீ தான்.. 

13.  சொல்றேனேன்னு வருத்தப்பட வேண்டாம்.. பன்னிக்குட்டியா இருந்தாலும் ( பன்னிக்குட்டி ராம்சாமியா இருந்தாலும் ) ஓட்டுன்னு இருந்தா மதிச்சுதான் ஆகனும்,.. 

14,  என்னால எதுவும் இனி பண்ணமுடியாது.. 5 வருஷம் விட்டுடு.. அப்புரம் பார்க்கலாம். கூட்டத்துக்கு பேசப்போ.. 

 சுயேச்சையா நிக்கறேன் தலைவரே.. 5 வருஷம் கழிச்சு மறுபடி பார்ப்போம்.. 

15. டேய் டேய் என்னை நம்பாதிங்கடா.. பணத்தை வாங்கிட்டு துரோகம் பண்ணாலும் பண்ணிடுவேன்

16. பொண்ணுன்னு இருந்தா புகுந்த வீடு போய்த்தான் ஆகனும், மனுஷன்னு இருந்தா மாறித்தான் ஆகனும்

17. அரசியல்ல மட்டும் தான் ஏமாத்தறதுக்கு ராஜ தந்திரம்னு பேரு( அப்போ எங்க தானைத்தலைவர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரின்னு சொல்றாங்களே அவர்  துரோகியா?

18. எனக்கு ஓட்டு போட்டா எந்த பொருளும் திருடு போகாது.. ஏன்னா திருடனே நான் தான்.. என்னை கவுன்சிலர் ஆக்கிட்டா நான் என் வேலைஅயை பார்ப்பேன்.. இல்லைன்னா நான் மறுபடி திருட வந்துடுவேன் ஹி ஹி 

19. மூணாவது தெருல சரோஜான்னு ஒருத்தி இருக்கா. நான் சொன்னா கேட்பா.. அவ ஓட்டுக்கான பணத்தையும் என் கிட்டே கொடுங்களேன்// 

 டேய் நாயே.. அவ பேரைச்சொல்லி ஆல்ரெடி 3 பேரு பணம் வாங்கிட்டாங்க.. ( முப்பெருந்தேவி போல )

20.  காசு மட்டும் இல்லைன்னா ஒயிஃப் கூட பக்கத்துல படுக்க விட மாட்டா.. ( சரி கொஞ்சம் தள்ளித்தான் படேன்.. அவ துங்குன பின் ட்ரை.. ஹி ஹி )

21.. நான் இப்போ லவ்வர், மேயர், கணவர் அப்டினு 3 போஸ்ட் பார்த்துக்கறேன்

22. இருவருக்குமே ஓட்டு போடுவதாக வாக்கு கொடுத்துட்டு வேறு ஒருவருக்கு ஓட்டு போடுவதாக சொல்றீங்களே. இது நியாயமா?

நம்ம பணத்தை கொள்ளையடிச்சு நமக்கே கொடுக்கிறாங்க. அவங்ககிட்ட நியாயமா நடக்கலாமா?




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  பின் பாதி திரைக்கதை மிகச்சிறந்த பலம்.. செம ஸ்பீடு.. பர பரனு காட்சிகள் பறக்குது

2. ஹீரோயின் செலக்‌ஷன்.. அவரது அலட்டல் இல்லாத பாந்தமான நடிப்பு.. 

3.  கடவுளைக்கண்டால் என் அன்புக்கு நன்றி சொல்வேன், போடு போடு சக்கை போடு,தேவதை போல் இவள்” என 3 பாட்டு கேட்கற மாதிரி இருக்கு.. 

4. பெண்களும் பார்க்கும்படி ரொம்ப கண்ணியமான காதல் காட்சிகள்.. வன்முறை அதிகம் இல்லாதது ஒரு பிளஸ்

5. ஹீரோவாக வரும் தீப்பொறி சுனாமி சுப்புவின் பேச்சைக் கேட்டு வேட்டி தீப்பிடிக்கும் என்று பில்டப் கொடுத்துவிட்டு, அவர்களே பத்த விடுவது செம காமெடி.. 

6.பேங்க் லோன் ஆட்களிடம் சுப்பு அண்ட் கோ செய்யும் ஆர் பார்த்திபன் பாணி கலாட்டாக்கள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3y6OIXSAKLtCKwU34jCdpDz4wG8TK7nR5CJt86WftzArnM2ngXgInVfL9pJJQd6AZ05zXVuKc1rXjtVpHQxzMcd9ZvuXYevpHUu0BNCJPhsZsYNy0FTx7IOhYzWwveLpkG72y-q-zu9DV/s1600/4.jpg

 இயக்குநர் கோபாலன் அவர்களிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோ வில்லன் கிட்டே பேசிட்டு இருக்கும்போது  அவருக்கு ஒரு கால் வருது.. அவர் கட் பண்றார்..  மறுபடியும் வருது.. எகெயின் கட் பண்றார்.. இப்போ 3 நிமிஷம் கழிச்சு அதே நம்பருக்கு ஃபோன் பண்ணனும்னா கால் ரெஜிஸ்டர்ல போய் ரிசீவ்டு கால்ல தேடுனா அந்த நெம்பர் வருமே அப்படியே கால் பண்ணலாமே.. ஏன் தனியா நெம்பர் டைப் பண்றார்?

2.  கேப்டன் பிரபாகரன் படத்துல மன்சூர் அலிகான் பேசுன ஃபேம்ஸ் டயலாக்கை அப்படியே சுட்டு இருக்கீங்க.. கொஞ்சமாவது மாத்தி இருக்கலாம்.. ( 10 வருஷம் கழிச்சு ஒருத்தன் பகையாளீயா வருவான்னு  தெரிஞ்சா அவனை  இப்பவே போட்டுத்தள்ளிடுவான் அவன்.. )


3. வில்லன் ஏன் க்ளைமாக்ஸ்ல தனியா வந்து ஹீரோ கிட்டே மாட்டிக்கறாரு? அவ்ளவ் பெரிய அரசியல் தலைவரு தனியாவா வருவாரு? இப்போ எல்லாம் அல்லக்கைங்களே அஞ்சாறு பேர் கூட அலையுதுங்க. 

4..ஹீரோவுக்கு லவ் ஃபெயிலியர் ஏதும் இல்லை, ஏன் தாடி? ரோட்ல இருக்கற பிச்சைக்காரனைக்கூட சுத்தமா பார்க்க ஆசைப்படும் ஹீரோயின் ஹீரோவை குளிச்சு ஷேவிங்க் பண்ணுன்னு சொல்ல மாட்டாரா?

5.  ஒரு சாதாரன கவுன்சிலர்க்காக ஸ்டேட் மினிஸ்டர் அப்படி பம்புவாங்களா?அவன் ஃபேமில இருக்கற லேடீஸை கிட்நாப் பண்ணி மிரட்னா போதாதா?

6. பணபலம் உள்ள கட்சிக்கு எதிரா ஹீரோ கவுன்சிலர் ஆகறது அழகிரியை எதிர்த்து மதுரைல சாதா ஆள் ஜெயிக்கற மாதிரி நம்பவே முடியல

7. க்ளைமாக்ஸ்ல மாசமா அதுவும் நிறை மாசமா இருக்கும் ஹீரோயின் வயிற்றில் கிட்டத்தட்ட ஒரு அடி ஆழம் கடப்பாறை அல்லது வாள் மாதிரி ஆயுதத்தால தாக்கப்பட்டு ( சொருகிட்டான்) அவ, அவ குழந்தை எல்லாம் பிழைச்சுக்குச்சுன்னா எப்படி? அதுக்கு அந்த சீனையே  வேற மாதிரி எடுத்திருக்கலாம்

8. செகண்ட் ஆஃப்ல அரசியல்ல அதகளம் பண்ணுன நீங்க முதல் பாதில காதல் காட்சிகள்ல இன்னும் ஸ்கோர் பண்ணி இருக்கலாம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwW1DEpKwgaLqnSvbzK7VTA63Y6vq1KS0n4OBTzlO6mP6Fq8vMC9y3Dwj1yJMz00Sx1J8LWFmiX0roCaJ1Kk_GL8YpHtZPWiymLzSiaQG0g3rNWAtBQ_IDBzsbawNvujc0PRD7-57KhXg/
 எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர் பார்க்கும் குமுதம் ரேங்க் -  ஓக்கே

 சி.பி  கமெண்ட்.. - லோ பட்ஜெட் நல்ல படங்களை ஆதரிப்பவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் விதத்தில் தான் படம் இருக்கு

 ஈரோடு ஆனுரில் படம் பார்த்தேன்