டாங்கே(2024) படத்தின் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் வசனகர்த்தாவாக அப்போது வளர்ந்து வந்த விக்னேஷ் ஸ்ரீகாந்த் அர்ஜூன் தாசிடம் ஒரு கதை சொன்னார்.2 வருடங்கள் கழித்து அறிமுக இயக்குநராக அதே கதையை எடுத்திருக்கிறார்.டாக்சிக்,டி சி மாதிரி வன்முறைப்படங்கள் வந்து தலைவலி தந்த சமயத்தில் இந்த ரொமாண்டிக் டிராமா எப்படி வந்திருக்கிறது?என்பதைப்பார்ப் போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் கடந்த எட்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறான்.அதற்காக சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட்டும் எடுத்துக்கொண்டிருக்கிறான்.காலே ஜ் படிக்கும்போது ஏற்பட்ட காதல் தோல்வி தான் இதற்குக்காரணம்.இப்போது ஓரளவு சரியாகி வருகிறான்.
ஒரு நாள் நாயகன் பைக் ரிப்பேர் ஆகி ரோட்டில் நிற்கும்போது நாயகி காரில் வந்து லிப்ட் கொடுக்கிறாள்.நாயகன் காலேஜில் படிக்கும்போது நாயகி அவனுக்கு ஜூனியர் மாணவி.சகஜமாகப்பேசிக்கொண்டிருந் தவள் திடீர் என ஐ லவ் யூ சொல்கிறாள்.
நாயகி எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நாயகன் மீது காதல் வசப்பட்டிருந்தாள்.ஆனால் அதை சொல்ல சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.தயங்கிக்கொண்டிருந் தாள்.இப்போது துணிச்சலாக சொல்லி விட்டாள்.
நாயகன் ஆரம்பத்தில் நாயகியின் காதலை ஏற்கவில்லை.அவளை அலைக்கழிக்கிறான்.எறும்பு ஊறக்கல்லும் தேயும் என்பது போல் ஒரு கட்டத்தில் நாயகியின் காதலுக்கு ஓக்கே சொல்கிறான்.
இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.
இப்போதுதான் கதையில் ஒரு ட்விஸ்ட்.நாயகனின் முன்னாள் காதலி நாயகனுக்கு போன் பண்ணி நாம் இருவரும் சந்திக்கனும்,ஒரு முக்கிய மேட்டர் பேசனும் என்கிறாள்.
இருவரது சந்திப்பில் முன்னாள் காதலி சில காரணஙகளுக்காக நம் காதலை பிரேக்கப் செய்திருந்தேன்.ஆனால் இப்போ எனக்கு ஓக்கே என்கிறாள்.
திருமணத்துக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் நாயகன் என்ன முடிவெடுத்தான்?என்பது தான் மீதி திரைக்கதை.
நாயகனாக அர்ஜூன் தாஸ் .ரசவாதி(2024) யில் நாயகனாக ,குட் பேட் அக்லி(2024) யில் வில்லனாக ,கான் சிட்டி(2026)படத்தில் மீண்டும் நாயகனாக நடித்த அர்ஜூன் தாஸ் இதுவரை சைக்கோ,ரவுடி,பொறுக்கி மாதிரி கேரக்டரில் நடித்தவர் முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக் மாதிரி லவ்வர் பாய் வேடத்தில் நடித்திருக்கிறார்.முதல் பாதிப்படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வருபவர் பிளாஸ்பேக் காலேஜ் லவ் ஸ்டோரியில் கலகலப்பான நபராக வலம் வருகிறார்.இரு மாறுபட்ட கேரக்டர்களையும் சரியாக செய்திருக்கிறார்.
நாயகியாக அதிதிஷங்கர்.மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி (இதயத்தைத்திருடாதே) நாயகி கிரிஜாவின் கேரக்டர் டிசைனை+ சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா கேரக்டர் டிசைனை நினைவுபடுத்தும் துடுக்குத்தனமான கேரக்டரில் அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.பல இடங்களில் அவரது முக பாவனைகள் அருமை.சில இடங்களில் ஓவர் ஆக்டிங்க்.
இன்னொரு நாயகியாக, ,முன்னாள் காதலியாக சோனா ஒலிக்கல் சுமாரான அழகு தான்.நடிப்பு பர்பெக்ட்.
இரு நாயகிகள் இருக்கும் காதல் கதையில் இருவருமே சம அழகிகளாக காட்டினால் தான் நாயகன் யாரைத்தேர்ந்தெடுப்பானோ என்ற சஸ்பென்ஸ் எடுபடும்.
இவர்கள் மூவர் போக டிராவிட் செல்வம், தேவதர்சினி ஆகியோர் நடிப்பும் குட் .
ஹேசம் அப்துல் வகாபின் இசையில் பாடல்கள் ஆறும் தேனாறு. செம மெலோடிஸ்.
அர்விந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு கண்ணுக்குள் ஒத்திக்கொள்ளலாம்.இரு நாயகிகளின் க்ளோசப் ஷாட்சும் அழகு.
நாஸ் தான் எடிட்டிங்க்.பின் பாதி கொஞ்சம் இழுவை.இன்னமும் ட்ரிம் செய்திருக்கலாம்.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீ காந்த்
சபாஷ் டைரக்டர்
1 இயக்குநர் மணிரத்னம் + கவுதம் வாசுதேவ் மேணன் இருவரும் சேர்ந்து செய்த கலவை போல இயக்குநர் காட்சிகளைப்படமாக்கிய விதம் அருமை.
2 பிரமாதமான ஒளிப்பதிவு,செம ஹிட் மெலோடி பாடல்களைத்தந்த இசை ,வசனங்கள் மூன்றும் முத்துக்கள் மூன்று என சொல்லத்தக்கவை.
3 க்ளைமாக்சில் நாயகன் இரு நாயகிகளில் யாரைத்தேர்ந்தெடுக்கிறான்?அதற் கான காரணம் என்ன?என்பதை பர்பெக்ட்டாக சொன்ன விதம் பிரமாதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 முதல் பாதி காதல் கதை மாதிரி பின் பாதியில் வரும் பிளாஸ்பேக் காதல் கதை மனதில் ஒட்டவில்லை.நமக்கு ஒரு எமோஷனல் கனெக்ட்டே ஆகவில்லை.
2 பிளாஸ்பேக் காதல் கதையில் வரும் முன்னாள் காதலி தன் அப்பா பரிசாகக்கொடுத்த மோதிரம் மிஸ் ஆனதும் அப்பா யதேச்சையாய் இறந்ததும் நாயகன் பரிசாகக்கொடுத்த செயின் தொலைந்ததால் நாயகனும் பிரிவார் என நினைத்து பிரேக்கப் சொல்வது ஒட்டவே இல்லை.ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை.
3 மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட ஆனந்த தாண்டவம் ,சில்லுனு ஒரு காதல் ,உன்னை நினைத்து , உட்பட பல படங்களில் பார்த்து சலித்த அதே டெம்ப்ளேட் கதை தான்.
4 இரு நாயகிகளும் லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது சலிப்படைய வைக்கிறது.
,5 காமெடி ஆர்டிஸ்ட்களை புக் பண்ணிய அளவு அவர்களுக்குக்காமெடி டிராக் அமைக்கவில்லை.
6 நாயகி அதிதி ஷங்கர் எட்டு வருடங்களாக காதலை ஏன் சொல்லாமல் இருந்தார்?என்பதற்கும், இப்போது மட்டும் திடீர் என ஏன் சொல்கிறார்?என்பதற்கும் காரணம் சரியாக சொல்லப்படவில்லை.
ரசித்த வசனங்கள்
1 உன் பர்த் டே எப்போ?சொல்லு.
மூணு மாசத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு.ட்ரை பண்ணாத.
என் பர்த் டே எப்போ?னு சொல்லு?
நீ என்ன மதர் தெரேசாவா?
ஓஹோ.எங்கே?மதர் தெரேசா பர்த் டே எப்போ?சொல்லு.
2 ஹாய்...ரகு...நான் தான் அஞ்சலி...
இங்கே என்ன பண்றே?
Flirt பண்றேன்.
3 நீ தப்பான ஆள் பின்னால சுத்தறே.
ஓ.நீ அந்த மாதிரி டைப்பா? (Gay)
4 ஒரு வேளை நான் உன்னைத்துரத்தி வர்றதை நிறுத்திட்டா நீ என்ன செய்வே?
நீ நிறுத்த மாட்டே.
ஒரு வேளை நிறுத்திட்டா?
நான் உன்னைத்தேடி வருவேன்.
5. நீ நல்லா பொண்ணா இருந்தா உன்னைக்கையெடுத்துக்கும்பிடறேன் ,என்னை சுத்தி வர்றதை நிறுத்து
6 ஆமா,உனக்கு ஏன் என்னைக்கண்டதும் காதல் ?
நான் ஒரு நல்ல தமிழ்ப்பையன்,நீ ஒரு நல்லகேரளப் பொண்ணு.நீ எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்ததில்லையா?
7 நீ ஆட்டோ கிராப் பார்க்கலையா?விண்ணைத்தாண்டி வருவாயா ?இந்த கிராஸ் கல்ச்சர் லவ் ( மாநிலம்.விட்டு மாநிலம்) எல்லாம் பெய்லியர் தான்.
டிராஜடினு நீயா ஏன் முடிவு பண்றே?இது காதல்.
8 உன் செக்சுவாலிட்டி என் புரிதலுக்கு அப்பாற்பட்டதா இருக்கலாம்.
9 என் கை ல சந்தோஷம் கிடைச்சாக்கூட என்ன பண்றதுனு தெரியாது.
10 பத்துப்பக்கத்தைத்தொலைச்ச மாதிரி இருக்கேன்.
11 என்னுடையை முழு எமோஷனல் ஸ்பெக்டரமை நீ ஆக்ரமித்துக்கொண்டாய்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
லிப் லாக் காட்சிகள் இருக்கின்றன.
CPS கமெண்ட் - காதலர்கள் ,புதுமணத்தம்பதிகளுக்குப்பிடிக் கும்.வன்முறை,ரத்தம் இல்லாத ஜாலியான படம் வேண்டும் என நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 2.5 /5.ஆனந்த விகடன் மார்க் யூகம். 41 குமுதம் ரேங்க்கிங்க் யூகம் ஓகே.
| Once More | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Vignesh Srikanth |
| Written by | Vignesh Srikanth |
| Produced by | Yuvaraj Ganesan |
| Starring | |
| Cinematography | Aravind Viswanathan |
| Edited by | Nash |
| Music by | Hesham Abdul Wahab |
Production company | Million Dollar Studios |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |