Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, December 12, 2015

ஜிஎஸ்டி 40% விதித்தால் ஆலைகளை மூடுவோம்: கோக் நிறுவனம் அறிவிப்பு

மதுரா அருகே சட்டாவில் உள்ள கோக கோலா ஆலை. | கோப்புப் படம்: பிடிஐ.
மதுரா அருகே சட்டாவில் உள்ள கோக கோலா ஆலை. | கோப்புப் படம்: பிடிஐ.
கடந்த வாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நிர்ணயிப்பது தொடர்பான பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் அவருடைய குழு சமர்பித்தது. அந்த அறிக்கையில் காற்றடைக்கப்பட்ட பானங்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகள் சிலவற்றை மூடிவிடுவோம் என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோகோ கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் தலைவர் வெங்கடேஷ் கினி கூறுகையில், ``இந்தியா முழுவதும் 56 ஆலைகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள ஆலைகளை மூடி விடுவோம் என்று தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி விவகாரத்தில் எந்தவொரு நகர்வும் எங்கள் தொழிலில் பல மாறுதல்களை ஏற்படுத்தும், அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். 30 லட்சம் சில்லரை வணிகர்கள், ஆயிரக் கணக்கில் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒட்டுமொத்த சூழ்நிலையை பாதித்துவிடும் என்று தெரிவித்தார்.

குளிர்பான நிறுவனங்களுக்கு தற்போது உற்பத்தி வரி 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. அனைத்து குளிர்பான நிறுவனங்களும் ரூ. 14,000 கோடியை உற்பத்தி வரியாக செலுத்தி வருகின்றன. இதில் கோகோ கோலா மற்றும் பெப்ஸிகோ நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் காற்றடைக்கப்பட்ட குளிபானங்களின் தனிநபர் நுகர்வு சர்வதேச அளவில் மிகக் குறைவு என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வரியை உயர்த்தும் முடிவை அரசாங்கம் எடுத்தபோது நாங்கள் நுகர்வோர் மீது வரியை விதிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இதனால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தின் விலை ரூ.10 லிருந்து 12 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உடனடி விளைவாக தேவையின் அளவு குறைந்தது. இப்போது 40 சதவீத பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் விலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கினி தெரிவித்தார்.

மேலும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சியடையும் நிறுவனம். இந்தியாவில் ஏற்கனவே 250 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. 2020-ம் ஆண்டிற்குள் இன்னும் 500 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறோம் என்று கோகோ கோலா இந்தியா துணைத்தலைவர் அம்ஜத் தெரிவித்துள்ளார்.


-தஹிந்து


  • Saravanan Madras  India
    மூடிட்டு (ஆளைய ) கிளம்பிடு... நாங்க இளநீர் இல்லன்ன எங்க ஊர் ஜிஞ்சர் சோடா, சர்பத் குடிசிகிறோம்.
    955
    about 2 hours ago
     (1) ·  (0)
     
    Kannan Up Voted
    • NKN Krishnamoorthy  India
      அமிலத்தில் அளவுக்கு அதிகமான சர்க்கரைக் கடைக்கோப்பட்டுள்ளது. குறைந்தத் 120$ ஜிஎஸ்டி விதிக்கப்படவேண்டும்.
      5950
      about 2 hours ago
       (1) ·  (0)
       
      • SSelvaraju  India
        இளநீர் இருக்குது
        about 2 hours ago
         (1) ·  (0)
         
        senthamillselvan Up Voted
        • TT.K.Shanthi  India
          gst can be increased so that cococola will run away from india
          about 2 hours ago
           (0) ·  (0)
           
          • RRam  Kuwait
            யாரை மிரட்ட இந்த மிரட்டல்? போனா ரொம்ப நல்லது. செய்றவன் சொல்ல மாட்டான் சொல்றவன் செய்ய மாட்டான்.
            860
            about 2 hours ago
             (2) ·  (0)
             
            senthamillselvan · Kannan Up Voted
            • RRamachandran.S  India
              மூடினால் என்ன நாடு குடியா மூழ்க போகிறது ... நல்ல விஷயங்களை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்
              about 2 hours ago
               (3) ·  (0)
               
              • ரியாஸ்  India
                நல்ல காரியம் உடனே செய்யுங்கள். பத நீர், இள நீர் போன்ற எங்களின் பாரம்பரிய பானங்களை அருந்தி நலமாக வாழ்வோம்.

              Thursday, August 06, 2015

              அப்துல்கலாமே கோபப்பட்ட தருணம்

              இளைய சமுதாயத்தினர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அனைத்துத் துறைகளுக்கும் தலைமையேற்று அவர்கள் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் அமரர் கலாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
              கோபப்பட்ட கலாம்
              அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரிடம் நேர்காணல் நடத்த அனுமதி கோரினேன். ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுவது எதனால்?’ என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரிக்கப்படவிருந்த உரைச் சித்திரத்துக்காக அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
              நான் இந்த விஷயத்தைக் கூறியதும் சட்டென்று அவர் முகத்தில் லேசான கோபம் பிரதிபலித்தது. அவர் இயல்புக்கு மாறான சற்றுக் கடுமையான குரலில் ‘‘இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா சார்?’ என்று கேட்டார். ‘‘எனக்கு வரும் இ-மெயில்களைப் பாருங்கள். “நாட்டு முன்னேற்றத்துக்காக எந்த வழிமுறைகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று மாணவர்களும் இளைஞர்களும் அந்த இ-மெயில்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கின்றனர்’’ என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
              அரசியலிலும்...
              மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது அவர்களின் எதிர்கால லட்சியம், இலக்கு குறித்துக் கேள்வி கேட்பார். ஆனால், யாருமே அரசியலில் இறங்கப்போவதாகவோ அமைச்சர்களாக மாறப்போவதாகவோ சொல்லாததால், ‘‘ஏன் நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை?’’ என மாணவர்களை அவர் கேட்பது வாடிக்கை. அரசியலைத் தூய்மைப்படுத்த இன்றைய இளைஞர்கள் அரசியலிலும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிடுவதுண்டு.
              பொதுவாகப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயிலும் பெரும்பாலான மாணவர்கள், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும், படித்த கல்வித் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டும் என்பதில்தான் விருப்பம் கொண்டிருப்பார்கள். கல்வியால் தனக்குக் கிடைத்த பலன்களைப் பயன்படுத்தி, தங்களைச் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என ஆழமாக யோசிப்பதில்லை.
              சின்னது குற்றமே
              மாணவர்களின் இத்தகைய மனப்போக்கை தனது கருத்தில் கொண்டுதான் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது சின்னதாகக் குறிக்கோள் வைத்துக்கொள்வது ஒரு குற்றம் (small aim is a crime) என வலியுறுத்தினார்.
              மிகப் பெரிய இலக்குகளை மாணவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என எப்போதுமே எடுத்துரைத்து வந்தார். மாணவர்களின் அளவுகடந்த ஆற்றலைத் தேசத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவரே ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டார்.
              ஏவுகணைப் பணிகளில் மாணவர்கள்
              நாம் முதல் முறையாக ஏவுகணைகளை 100 சதவீதம் நமது நாட்டுத் தயாரிப்புகளாக உருவாக்க முனைப்புடன் பாடுபட்டபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களை ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்க வைத்தார். அக்னி ஏவுகணையை தயாரிக்கும் பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
              அனைத்து விண்வெளித் திட்டங்களிலும் தனது வெற்றிகளுக்குப் பக்கபலமாக இருந்தது துடிதுடிப்பாற்றலும் ஆர்வப் பெருக்கும் கொண்ட இளம் அணியினர்தான் என்பதைத் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.
              நானும் ஒருநாள்...
              வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய குணாம்சங்களை ஒவ்வொரு இளைஞரும் தனக்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய கலாம், தனது வாழ்க்கையில் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
              ‘சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும், நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற நம்பிக்கையைத் தனக்குள் வேர்விட வைத்ததால்தான் தனது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது என்றும், சாதனை நாயகன் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
              சுய கட்டுப்பாட்டு நெறிகள்
              சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தம் பொதிந்த ஆலோசனையைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் :
              “மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன்.
              ஒவ்வொரு மாணவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நிஜமாக்கிக் காட்டுவதில்தான் ஒவ்வொருவருமே வேறுபடுகிறோம். சுய கட்டுப்பாட்டு நெறிகளைப் பின்பற்றிச் செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும்.”
              தீர்க்கதரிசியின் நம்பிக்கை
              நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் உலக அரங்கில் நமக்கு இன்னமும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பையும் இளைய தலைமுறையினரிடம்தான் அப்துல் கலாம் ஒப்படைத்துள்ளார்.
              நமது தேசம் வலுவான, வளமையான, வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உயர்வடையும் என்பதில் திட்டவட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது சுயசரிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கதரிசிகளின் நம்பிக்கை என்றுமே பொய்ப்பதில்லை.
              “மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருசில ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம் உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அவரது சுயசரிதையின் இறுதி வரிகள்.
              அவரது நம்பிக்கை கட்டாயம் நிறைவேறவே செய்யும்.
              - கட்டுரையாளர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நூல்களை தமிழாக்கம் செய்தவர்.


              நன்றி - த இந்து

              Thursday, November 13, 2014

              ரோகித் சர்மா WIN 3 உலக சாதனைகள்

              • சாதனையைக் கொண்டாடும் ரோஹித் சர்மா | படம்: கே.ஆர்.தீபக்
                சாதனையைக் கொண்டாடும் ரோஹித் சர்மா | படம்: கே.ஆர்.தீபக்
              • படம்: கே.ஆர்.தீபக்a
                 
                 

                ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

                 
                படம்: கே.ஆர்.தீபக்
              இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோஹித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா.

              கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

              மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோஹித்.

              ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, இன்று மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார்.

              முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோஹித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோஹித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.
              ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போது கோலி ரன் அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆக, ரோஹித் சர்மா இரட்டைச் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

              சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

              ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 



              264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா: இந்தியா 404 ரன்கள் குவிப்பு

               

              • ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்கள், முதன் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் 250 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்திய ரோகித் சர்மா. | படம்: பிசிசிஐ
                ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்கள், முதன் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் 250 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்திய ரோகித் சர்மா. | படம்: பிசிசிஐ
              கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது.
              264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.
              சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர், சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.
              தோனி வாழ்த்து:
              தோனி தனது ட்விட்டர் பதிவில் ரோஹித்திற்கு இரட்டைச்சத சாதனைக்காக வாழ்த்து கூறியுள்ளார், அதில், “ரோஹித் இன்று ஆட்டமிழக்காமல் இருந்தால் நிச்சயம் 250 ரன்கள் எடுப்பார்” என்று கூறியிருந்தார். தோனியின் இந்த எதிர்பார்ப்பை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் 173 பந்துகளில் 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார்.

              லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும். ரோஹித் அரை சதம் எடுக்க 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். முதல் 100 பந்துகளில் 100, பிறகு 150 ரன்களை 125 பந்துகளில் எட்டினார். 200 ரன்களை 151 பந்துகளில்ம் 250 ரன்களை 166 பந்துகளில் எட்டினார். கடைசி 50 ரன்கள் 15 பந்துகளில் எடுக்கப்பட்டது.

              2 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் காயம் காரணமாக விலகியிருந்தார். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது சதம் கண்டார். ஆனாலும் அணித் தேர்வு அதற்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதால் அவரால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை.

              இன்று வந்தார், வென்றார். ராபின் உத்தப்பாவுடன் 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 128 ரன்கள் 58 பந்துகளில் விளாசப்பட்டது. உத்தப்பா இதில் 16 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்முனையில் இருந்து ரோஹித் சர்மாவின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

              பவுண்டரிகளும் சிக்சர்களும் கண்களுக்கு பெரிய விருந்து என்று இர்பான் பத்தான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

              டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரஹானே 28 ரன்களுக்கு நன்றாக ஆடினார். அவர் லெக் திசையில் திருப்பி அடிக்க நினைத்து மேத்யூஸ் பந்தில் எல்.பி. ஆனார். அம்பாத்தி ராயுடு 8 ரன்களில் எரங்காவின் அபார பந்தில் பவுல்டு ஆனார்.

              13-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் என்று இலங்கை கட்டுப்பாட்டில்தான் இந்தியா இருந்தது.

              அதன் பிறகு கோலியும், ரோஹித்தும் இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 202 ரன்களை 25 ஓவர்களில் சேர்த்தனர். கோலி 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சற்றே தயங்கி 2-வது ரன்னை ஓடி ரன் அவுட் ஆனார்.

              39-வது ஓவரில் இந்தியா 261/3 என்று இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 11 ஓவர்களில் 143 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா மட்டும் 112 ரன்களை விளாசியுள்ளார்.

              இந்த இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு ஆடினார் ரோஹித் சர்மா. இலங்கை பந்து வீச்சாளர் குலசேகரா, 9 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மீண்டும் அழைக்கப்பட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 7 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார்.

              மொத்தம் 300 பந்துகளில் 173 பந்துகளை ரோஹித் சர்மா சந்தித்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் ரோகித் மட்டையிலிருந்து வந்ததுதான்.

              அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் இரட்டை சதம் எடுக்கும் போது ரோஹித் சர்மா 16 சிக்சர்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் என்றால் இன்றைய அதிரடி இரட்டைச் சத உலக சாதனையில் 33 பவுண்டரிகளை அடித்து பவுண்டரி சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

              சச்சின் டெண்டுல்கர் தனது சாதனை இரட்டைச் சதத்தில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சேவாக் 219 ரன்களை எடுத்த போது, 25 பவுண்டரி 7 சிக்சர்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளை தனது இரட்டைச் சதத்தில் அடித்து சாதனையை தன்வசமாக்கினார்.

               thanx - the hindu



              Friday, May 30, 2014

              பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்

              முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

              அந்த 10 முன்னுரிமைகளாவன:

              1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

              2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

              3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

              4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

              5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.

              6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

              7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

              8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

              9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

              10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்.
              இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
              மேலும் மாநில அரசுகள் முன்மொழியும் விவகாரங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்குமாறு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

              நாடாளுமன்றச் செயல்பாடு குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், சபாநாயகர் ஜூன் 6ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். 


              • UNNIKRISHNAN THAMPI  from Kuwait
                நமஸ்தே ஜி மக்கள் குறை திர்க்கும் மோடி ஜி வாழ்த்துக்கள் -பாரத்மாதக்கி ஜெய் .
                about 16 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
              • Thangadurai  
                Doing this 10 quote we are proved
                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
                அமைச்சர்கள் செவி கொடுத்து கேட்டார்களா?
                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • M.Siva  from Bangalore
                முதல்ல பெட்ரோல்,டீஸல்,காஸ் விலைகளை குறைத்து மக்கள் தலைமேல் சுமந்துள்ள பாரத்தை குறைத்தாலே இந்த மோடி ஆட்சிக்கு வெற்றிதான்.. செய்யமுடியுமா..?, இந்த 10 திட்டங்களும் செயல்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது வேண்டும்..100 நாட்களில் ஆரம்பிக்கதான்முடியும்..
                about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Abdul Jailani  from Salem
                அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
                about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Donald  from Dubai
                சூப்பர்....
                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • SRINIVASAN G  
                தங்க யு ஜி
                about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • g.r.rajagopal  from Kolkata
                நல்ல தொடக்கம் காலாவகாசம் வேண்டும் நிர்வாக சீர்திருத்தம் அவசியம் பொறுத்திருந்து பார்ப்போம்.
                about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • syed Ziaudeen  from Sharjah
                நீங்களும் இந்தியன், நானும் இந்தியன்.ஜாதி ,மதம் ,சிறுபான்மையினர், பெரும்பாயினர் -என்று பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்தீர்கள் என்றால் மக்கள் மனதில் இடம் பெறலாம் .சோனியா காந்தி இடம் மன்மோகன் சிங்க் ,கேட்டது மாதிரி மற்றவர்களிடம் கேட்கவேண்டாம் .இந்தியாவுக்கு வரும் காலங்கள் நல்லதாகவே நடக்க பிராத்தனை செய்வோம்
                about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • ஜான்  from Bangalore
                விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை இல்லையா.
                about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Ragam Thalam  from Chennai
                நூறு நாட்களில் விலைவாசியை குறைத்தாலே மக்களின் 50% கவலை தீர்ந்துவிடும்.
                about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • ஜெ.பி  from Chennai
                அரசியல் வாதிகளை நம்பாமல் நேர்மையான அதிகாரிகளை துணைக்கு வைத்துகொண்டால் இந்த 10 விசயங்களையும் செவ்வனே திட்டமிட்டுள்ள நாட்களுக்குள் முடித்து வெற்றி பெறலாம் !ஏதேனும் ஒரு திட்டம் தொடங்கினால் எப்படியேனும் ஏதேனும் ஒரு விஷயம் ஒரு சாராருக்கு பாதகமாக இருக்கும் (உ .ம் உள்கட்டமைப்பு,நீராதாரம், சாலைகள்) அதை ஆராய்ந்து திறம்பட கையாண்டால் வெற்றி நிச்சயம் !
                about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • R.selvam  
                மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
                about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Muthuaiyer  from Hyderabad
                இந்த 10 திட்டங்களும் நல்லவைதான். ஆனால் கால அவகாசம் கொடுத்திருப்பதுதான் குறைவாய் இருக்கிறது. ஆனால் இந்த அரசு இவற்றை திறம்படச் செய்யும் என்ற நம்பிக்கை கண்டிப்பாய் இருக்கு.
                about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Prabhakar  from Muscat
                அரசியல்வாதிகளால் கேட்டு போனோம் என்று சொல்லும் அரசு அதிகாரிகளுக்கு மாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
                about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • A.Gomathinayagam  from Chennai
                பழைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள் தான் தொடர்கிறார்கள் 'அவர்களை கொண்டு விரைவாக மக்களுக்கு நன்மைகளைஅளிப்பது பெரிய சவால்
                about 19 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
              • கா.சந்திரமோகன்.சேலம்.  
                இந்தியாவின் நிஜமான சூப்பர் ஹீரோவின் சிறப்பான பத்து அடிப்படை திட்டங்கள்.அருமை.
                about 20 hours ago ·   (1) ·   (6) ·  reply (0) ·  promote to News Feed
              • CHITHIRAI SELVAN  from Kovilpatti
                இந்த நிலைமை நீடிச்சா santhosam தான்
                about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Gopinath Govindarajan at Advocate 
                மோடி அவர்களின் பத்து கட்டளைகளையும் செம்மையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவது அரசு அதிகாரிகளின் செயல்பட்டை பொறுத்துதான் உள்ளது. ஆகவே அரசு அதிகாரிகள் அனைவரும் நமது பாரத பிரதமரின் எண்ணங்களை வெறும் எழுத்து வடிவிலான அறிவிப்பாக நினைக்காமல் அரச கட்டளையாக பாவித்து செயல்படுத்தவேண்டும் – கோபிநாத், வழக்கறிஞர், கோவை
                about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • THIRUMOORTHI  from Mumbai
                அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
                about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
                THIRUMOORTHI   Up Voted
              • abdul kareem  from Dubai
                காங்கிரசிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா போன்ற உணர்வு ஏற்படுகிறது
                about 20 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • malarvel kai.aravinthkumar  from Salem
                புதிய இந்தியாவில் உள்ளாது போல் உள்ளது.
                about 20 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
                indian  · இனியன்   Down Voted
              • சபரி ராஜ்  
                பிரதமரின் உத்வேகம் அனைத்து அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் திட்டங்கள் மக்களை சீக்கிரம் சென்றடையும்.
                about 20 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
                sarguns   Down Voted
              • Mauroof Dubai  from Dubai
                மோடியின் 10 கட்டளைகள் - "நமோ தஸ்". இவர் சார்ந்த கட்சி கொள்கையின் படி இவை 11 கட்டளைகளாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விடுபட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், அதை 11-வது கட்டளை என்று சொல்ல மாட்டேன். விடுபட்ட அந்த ஒன்றுதான் கட்டளை எண் 1. அறிவிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட 10 கட்டளைகளும் செவ்வனே நிறைவேற நம் (பாஜக-வின்) தாய்ச் சபை (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் நமது (பாஜக-வின்) அசூர வளர்ர்சிக்கு பேருதவியாய் இருந்துவரும் Corporate என்றழைக்கப்படும் பெருநிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் ஆதரவைப் பெற்றிட உறுதி பூணுதல்/அரும்பாடு படுதல்.
                about 21 hours ago ·   (5) ·   (18) ·  reply (0) ·  promote to News Feed
                indian   Up Voted
              • Natheem  from Chennai
                நீங்க சொல்ற இந்த 9, 10 பாயிண்ட் பத்தி சரியா புரியல? ஆர் எஸ் எஸ்-ஓட கொள்கைதான பி ஜே பி அரசோட கொள்கை. உங்களோட 3 முக்கிய கொள்கை 1- அயோத்தியில் ராமர்கோவில் கட்டனும் 2- காஸ்மிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குற 370 சட்டபிரிவை நீக்கணும் 3- சேது சமுத்திர திட்டத்த நிறைவேற்ற கூடாது. இதைதான உங்களோட கொள்கைன்னு சொல்றீங்க? முதல் 100 நாளோட அரசின் பணின்னு இத குறிபிற்றுகீங்க ஆனா அதுவே பி ஜே பி ஆட்சியோட கடைசி 100 நாலா இருக்கும் அத மறந்துராதிங்க.
                about 21 hours ago ·   (11) ·   (58) ·  reply (0) ·  promote to News Feed
                m Eleyas  Up Voted
                sabaaa  · Ravi Chandran  Down Voted
              • nagalakshmi  from Mumbai
                இவை அனைத்தையும் செய்து முடித்தால் மகிழ்ச்சி ....
                about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • stanislas Perianayagam at Government from Mumbai
                மோடியின் பத்து முன்னுரிமைகளை இரண்டாக சுருக்கலாம்.முதலாவது,மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கை .இரணடாவது அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை.எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்பது ஆட்சி முறைமைக்கு முற்றிலும் பொருந்தும்.முடிவுகளில் தவறுகள் நேரிடலாம்;நேரிடும்.எனினும் வெள்ளை உள்ளம் படைத்த அணுகுமுறை அனைத்து தரப்பையும் ஈர்க்க வல்லவை.ரகசியம் என்பதே சுயநலத்தின் விளைவாக மட்டுமே இருக்க முடியும்...
                about 21 hours ago ·   (1) ·   (0) ·  reply (1) ·  promote to News Feed
                • M.Siva  from Bangalore
                  அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்..ஆனால் நல்ல முயற்சி.. வெற்றிபெற அனைவரும் முயற்சிக்கவேண்டும் ..
                  about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Mohammed Nayeem  from Vellore
                Saying is Easy But doing is?
                about 22 hours ago ·   (5) ·   (2) ·  reply (1) ·  promote to News Feed
                Natheem   Up Voted

              நன்றி - த இந்து