Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, March 20, 2014

மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும்: விஜயகாந்த் @ ஊட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 
 
 
நரேந்திர மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். 



ஊட்டியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில அவர் பேசியது: 


"தமிழக மக்களுக்கு நரேந்திர மோடி நன்மை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. 


ஊட்டியில் உள்ள படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். இதுவரை யாருமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. 


ஊட்டியில் ஏழை மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட இல்லை. 


நான் படத்தில்தான் நடிப்பேன். நேரில் நடிக்கத் தெரியாது. இனி, என் மகன் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா வல்லரசாக நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும். குஜராத்தில் மிகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். 


டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கும் ஜெயலலிதா அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்கு ஏதேனும் இலக்கை நிர்ணயித்திருக்கிறதா?
ஊட்டியைப் பொருத்தவரை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு ஏதாவது செய்திருக்கிறதா? 


மினி பஸ்சில் எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் இருக்கிறது. அதை வெறும் ஓவியம் என்கிறார்கள். இலவசங்களை விலையில்லா பொருள்கள் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின் வெட்டு, தண்ணீர் பிரச்சினை. ஆனால், குடிநீரை விலைக்கு விற்கிறார்கள். இதுதான் ஆட்சியா? 


விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. 


13 மாதங்களில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா, இப்போது யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க வாக்கு கேட்டு வருகிறார்கள். நான் 20 எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைப் பார்த்தேன். எந்தப் பிரச்சினையிலும் பிரதமரைப் பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மக்களை எப்படிப் பார்ப்பார்? 


திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் வாக்களித்தால், அவர்கள் ஊழலுக்குத் துணைபோகிறார்கள் என்றுதான் அர்த்தம். 


அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா குடிநீர்... இப்படி எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக்கடை என்று பெயர் வையுங்களேன். 


நரேந்திர மோடி என்ன குஜராத்தில் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்களா? நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில் பார்த்தேன். ஒரு மதுக்கடை கூட இல்லை. அதுதான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியா முழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராக வேண்டும்.
நம் கூட்டணிக்கு சண்டை சச்சரவுகள் வரக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையுடன் இந்தத் தேர்தலில் செயல்பட வேண்டும்" என்றார் விஜயகாந்த். 

thanx - the hindu

Thursday, October 10, 2013

இந்தியா முழுக்க மோடி அலை வீசுகிறதா? - பொது மக்கள் கருத்து , தமிழ் அருவி மணியன் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.


தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...



இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.


மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?

காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு 


தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...

இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?

நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி  
செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...

"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?

அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?

தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார். 


மக்கள் கருத்து 



1 தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே. ஆகவே பிஜேபி, தேமிதிக்க, மதிமுக இணைந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் சேர்வதை தடுத்து விடலாம். பிஜேபி- தேமுதிக- மதிமுக கூட்டணி சுமார் 20% வாக்க்குகளை பெரும். நாகர்கோயில் தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெரும். தேமுதிக மதிமுக பூஜ்யம்தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக திமுக படுதோல்வியை அடையும். காங்கிரஸ் புதுசெர்ரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும். திமுக காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சி கூட்டணி சுமார் 32% சத வாகுகளை பெரும். ஆகவே மும்முனை போட்டி என்று வந்தால் அண்ணா திமுக கூட்டணி தமிழ்நாட்டில் சுமார் 44% வோட்டுகளை பெற்று 38 எம்பி தொகுதிகளை கைப்பற்றும். 



2 வரும் தேர்தலில் மக்கள் திரும்பவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், எந்த ஆண்டவனாலும் இந்தியாவை காப்பாத்த முடியாது......மணியன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு அபாக்கிய சூழ்நிலை வரக் கூடாது என்று பாடுபடுகிறார்... 




3 பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மணியன் மீது எவ்வளவு கண்டனங்கள், பாய்ச்சல்கள். அப்பப்பா. இதுகாறும் பொது வாழ்வில் நேர்மையாளராக இருந்துள்ளார், ஊர் சொத்தை கொள்ளை அடிக்கவில்லை. ஆனால், அது எல்லாம் மறந்து விட்டது. பா.ஜ.க.வை தொட்டவுடன் அவர் பாவியாகி விட்டார். ஊரை அடித்து உலையில் போட்டு, பா.ஜ.க.வை திட்டியிருந்தால் மணியன் நல்லவர். அப்படிதானே. இப்போது புரிகிறது. தவறு அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம்தான் இருக்கு....



வேண்டாம் வேண்டாம்னு கத்தியும் வலிய வலிய போயி பேசி பாகிஸ்தான் நம்மை கிராமத்து பெண் போல் அழுகிறார்கள் என்று அசிங்க படுத்தியும்,, அப்படி சொல்லவே இல்லை என்று கயிறு திரித்தார்கள். அப்படி சொன்னதை, பாகிஸ்தான் மெடிஆகலும் பத்திரிகைகளும் ஆதாரத்துடன் போட்டுவிட அதெல்லாம் சும்மனாச்சுக்கு என்றார்கள். எல்லாம் மத சார்பின்மை படுத்தும் பாடு. இதில் கவுரவம் பாக்கணுமாம். மண்ணு மோகன் வெச்சிருக்கார். கேளுங்க. ஒரு ரூபாய்க்கு மூணு கிலோ கவுரவம். 


 5 எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். இலங்கை தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் அப்படி யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள். 


6  காந்தி , காமராஜ் ஆகியோரின் கொள்கைக்கு எதிரான ஆர் எஸ் எஸ் சின் செல்ல பிள்ளை மோடியை இவர் ஆதரிப்பது , படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.... மன்மோகன் சிங் ஆட்சியால் 1990 க்கு பிறகு இந்தியாவின் மதிப்பு ஆயிரம் மடங்கு வுயர்ந்துள்ளது என்பதை இவர் காந்தி கண்ணாடி போட்டு பார்த்தல் தான் தெரியும்.... இருட்டில் எரியும் மின்விளக்கு கண் கூசுகிறது என்று கூலிங் கிளாஸ் போடுபவருக்கு அது தெரியாது.... ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பொது அதுவும் அப்படித்தான் ..


.. நேற்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை , மூன்றில் ஒரு குழந்தை குஜராத்தில் எடை குறைவான பிள்ளை , குறைந்த அளவு உணவு கூட இல்லாத குழந்தை என்று வந்துள்ளது , அதை மோடி அமைச்சரும் ஒத்து கொண்டுள்ளார்....மற்றொன்று குஜராத் பாகிஸ்தான் எல்லையில் மாநில அரசின் கண்காணிப்பு திருப்தி கரமாக இல்லை என்று....கக்கூஸ் கட்டுவேன் என்று சொல்லும் மோடி அதை உபயோக்கிக்க முதலில் உணவு வேண்டும் என்று எண்ண தோன்றவில்லை ... அதை காங்கிரஸ் உணவு பாது காப்பு சட்டம் மூலம் அளிக்க விளைகிறது.... காந்தி யின் பெயரில் அரசியலில் கள்ள கணக்கு போட வேண்டாம்.... 


7 1990 க்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதென்னவோ உண்மை மாதிரி தெரிந்தாலும் அது ஒரு மாயைத் தோற்றம்தான். இந்தியாவில் இருந்த அனைத்து விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இப்படியே போனால் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சுயசார்பு நிலையிலிருந்த இந்தியாவை வெளி நாட்டிடம் கையேந்த வைத்ததைத் தவிர மன்மோகன் அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. சும்மா வெறுமனே குஜராத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பெரிதாக்காமல் மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை காட்டினால் நல்லது. ஊழல், ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற நிலையில் இருக்கிற மத்திய அரசு....



நன்றி = தினமலர்



Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Sunday, December 30, 2012

இந்தியாவின் நம்பர் 1 unisex salon and spa வீணா பேட்டி

நேச்சுரல்ஸின் புத்தாண்டு பரிசு!

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

Naturals Unisex Salon and Spa வின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி Naturals Women! மங்கையர் மலர் வாசகிகளுக்கு நன்கு அறிமுகமான நேச்சுரல்ஸ் வீணாவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டி...
அழகு என்றால் என்ன?
ஒருவரின் உடல் அமைப்பு, ஆடை, ஆபரணங்கள், தலை அலங்காரம் போன்றவற்றில் மட்டுமே இல்லை அழகு. அழகை விலை கொடுத்து வாங்க முடியாது! நல்ல குணம், கற்பனைத் திறன், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை இவற்றின் வெளிப்பாடே அழகு. அந்த வெளிப்பாடு அவரவர் மனம் பொறுத்து அமையும்.
இந்தியாவின் நம்பர் 1 1 unisex salon and spa என்ற இடத்தை எப்படிப் பிடித்தீர்கள்?

எங்களிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உள்ளன்போடு உபசரிக்கிறோம். அவர்களது மனதிற்குப் பிடிக்கும் வண்ணம் அவர்களை அழகூட்டுவதை முழு மனதோடு செய்கிறோம். நாங்கள் கையாளும் franchise model-ம் இந்தச் சாதனைக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.
அழகுப் பராமரிப்பு - ஆண்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
6, 7 வருடங்களுக்கு முன் ஆண்கள் சலூனிற்குப் போவது என்பதே ஹேர்கட்டுக்கு மட்டும்தான் என்று இருந்தது. ஆண்களுக்குத் தனி ப்யூட்டி பார்லர் தேவையா? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் தங்களது அழகைப் பராமரித்துக் கொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். வாக்சிங்கைத் தவிர அவர்களும் பெடிக்யூர், மேனிக்யூர், ஃபேஷியல், ஹெட் மசாஜ், கலரிங் போன்றவற்றை விரும்பிச் செய்து கொள்கிறார்கள்.
பெண்களின் கண்ணோட்டத்தில் ஏதாவது மாற்றம்?

பணக்கார வீட்டுப் பெண்கள்தான் பார்லருக்குப் போவார்கள் என்ற எண்ணமும் தற்காலத்தில் மாறிவிட்டது. வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் (maids) கூட இன்று பார்லருக்கு வரும் ஓர் ஆரோக்கியமான போக்கை நாங்கள் பார்க்கிறோம். வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால்தான் பார்லருக்குப் போக வேண்டும் என்ற நிலைமாறி இன்று மாதத்தில் ஒருமுறை பார்லருக்குச் சென்று தன் தோற்றத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
Naturals Unisex Salon and Spa வழியாக கொடிகட்டிப் பறக்கிறீர்கள். அப்படியிருக்க, Naturals Women துவக்கக் காரணம்?
நிறையப் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள வரும்போது privacy வேண்டும் என்று விரும்புகிறார்கள். கரூர் போன்ற சிறு நகரங்களில் மட்டும் அல்லாது மாநகரங்களில் கூட ஆண்களின் கண்களுக்கு முன்னால் பார்லரில் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களது இந்தத் தயக்கத்தைப் போக்கவே naturals women இன்னும் ஆறே மாதங்களில் பிறந்து வளர்ந்தும் விடுவாள்.
Naturals Women இதில் என்னென்ன ஸ்பெஷல்கள் இருக்கின்றன?

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படும் பார்லராக அது இருக்கும். ரிசப்ஷன் தொடங்கி பார்லரில் பணி செய்பவர்கள் வரை அனைவருமே பெண்கள்தான். பெண்கள்தான் இதில் உரிமை பெற்றவர்களாகவும் இயங்கப் போகிறார்கள். Naturals Women பார்லர்களில், வாடிக்கையாளர்களுக்கு, அழகு சேவை தவிர இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு pre natal மற்றும் post natal சேவைகளும் வழங்கப்படும்.
உரிமம் (Franchisee) பெற்றவராக இருக்க கல்வித் தகுதி?
கல்வித் தகுதி என்பதை விட அழகு கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நிறைய படித்தவர்களும் சரி, அவ்வளவாக படிக்காதவர்களும் சரி தங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தாலேயே நேச்சுரல்ஸின் உரிமம் பெற்றவர்களாக மாறி இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு முதலீடு தேவை?

Naturals Womenக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் 20 முதல் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
உங்களிடம் உரிமம் எடுத்துக் கொள்பவர்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
முதலில் இடத் தேர்வு செய்து தருகிறோம். இது முக்கியமான ஒன்று. மக்கள் நடமாட்டம் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து அவர்களுக்குத் தெரிவிப்போம். அடுத்து man power. பார்லரில் வேலை செய்வதற்குத் தகுதியான நபர்களை நாங்களே தேர்வு செய்து அனுப்புவோம், அதன்பின் marketing support தருகிறோம். அவர்கள் உரிமம் எடுத்த மூன்றே மூன்று மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அவர்கள் எட்ட நாங்கள் அனைத்து விதங்களிலும் உதவுகிறோம்.
உரிமம் பெற்ற கிளைகள் அனைத்திலும் எதிலும், எங்கும், எப்போதும் சீரான தரம். எப்படிச் சாத்தியம்?

போர்ட் வைப்பதிலிருந்து, சலூனுக்குள் வரும் வாடிக்கையாளரை உபசரிப்பது வரை எங்களது அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சிறப்பான சேவையைத்தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். எங்களது ஏரியா மேனஜர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாரா வாரம் சென்று அனைத்து சலூன்களையும் மேற்பார்வை செய்து வருகிறார்கள்.
உங்கள் உரிமம் பெற்றவர்களின் வெற்றிக்குக் காரணம்?
தங்களது பொன்னான நேரத்தையும் மனதையும் ஆர்வத்தையும் கவனத்தையும் முக்கிய முதலீடாக போட்டதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம். பணம் போட்டோமா இதோ வெற்றி வந்து விடும் என்பது இதில் கிடையாது.
Franchise India வழங்கும் மிகச் சிறந்த franchisor என்ற விருதை சமீபத்தில் Naturals வாங்கி இருக்கிறதே?

franchising எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு, எங்களிடம் உரிமம் பெற்றவர்களோடு சுமுகமான நட்புறவை வளர்த்துக் கொண்டோம். அவர்கள் வளர்ச்சியில் தனியொரு அக்கறையும் நாங்கள் காட்டியதற்குக் கிடைத்த விருது இது என்றே சொல்ல வேண்டும்.
உங்களது ட்ரெயினிங் அகாடமி பற்றி...
இரண்டு வார காலம் தொடங்கி எட்டு வார காலம் வரை பயில நிறைய வகுப்புகள் எங்கள் அகாடமியில் இருக்கின்றன. மேக்-அப், ஹேர் ஸ்டைலிங் என இப்படி நிறைய பாடங்கள் இருக்கின்றன. யார் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம்.
வேலை வாய்ப்பு?
எங்கள் ட்ரெயினிங் அகாடமியில் பயில்பவர்களுக்கு நாங்களே வேலை வாய்ப்பும் வழங்குகிறோம்