ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மற்றும் ஐந்து நண்பர்கள் 6 பேரும் நண்பர்கள் . குடிகாரர்கள் . ஒரு நாள் குடித்து விட்டு மட்டை ஆகி இருக்கும்போது ஒரு வாக்குவாதத்தில் ஒரு நண்பர் பாட்டில் குத்துப்பட்டு இறந்து கிடக்கிறார் அவர் எப்படி இறந்தார் ? யார் அவரைக்கோலை செய்தது ? என்பது மப்பில் இருந்த மற்ற ஐவருக்கும் தெரியவில்லை . டெட் பாடியை எங்காவது புதைத்து விடலாம் என நினைத்து காரில் கிளம்புகின்றனர் . வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் மீதி திரைக்கதை
க்ளைமாக்சில் அந்தப்பிணத்தைப்புதைக்கும்போது அந்த உடலில் ஒரு அசைவு தோன்றுகிறது . உயிர் இருப்பதை அனைவரும் உணர்கிறார்கள் . ஆனால் புதைத்து விடலாம் என்று இருவரும் ஹாஸ்பிடல் கொண்டு போகலாமா? என மூவரும் யோசிக்கிறார்கள் . இதில் ஐவருக்கும் கை கலப்பு மற்றும் வாக்கு வாதம் உருவாகிறது .இறுதியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக கபில் வேலவன் கச்சிதமாக நடித்திருக்கிறார் . முடிவு எடுக்கும் திறன் கொண்ட ஒரே ஆண் இவர் தான் இந்தக்குழுவில் . ஆல்பா மேல் . மற்ற அனைவரும் கோழைகள் , பயந்தாங்கோலிகள் . தக்சா ,குணவந்தன் தனபால் , , அர்ஜுன் தேவ் , சம்பா சிவம் ஆகிய ஐவரும் முகத்தில் பயத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . டி வி சீரியலில் வருவது போல படம் முழுக்க இருவர் அழுது கொண்டே வருவது எரிச்சல் உண்டாக்குகிறது ( ஒரு வேளை பெண்களின் மனம் கவரவோ என்னவோ? )
ஐந்து பேரில் ஒருவர் எஸ்கேப் ஆகி ஓடுவது ,அவரைத்தேடி , துரத்தி மற்றவர்கள் போவது , பெட்ரொல் பங்க்கில் அவர்களை சந்தேகமாகப்பார்ப்பது . கார் டிக்கிக்கதவில் ரத்தக்கறை படிந்திருப்பது , கோவில் திருவிழாக்கூட்டம் கடக்கையில் டென்ஷன் ஆவது , ஒரு வழிப்பறிக் கும்பலிடம் மாட்டிக்கொள்வது என திரைக்கதையை சுவராஸ்யப்படுத்த பல சம்பவங்கள் வருகின்றன
அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் தான் ஒளிப்பதிவு .பிரமாதபப்டுத்தி இருக்கிறார் . ஒரு காருக்குள் இரவில் நடக்கும் கதை என்பதால் இவருக்கு சவாலான பணி . காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் சாலையைக்காட்டும்போது கலக்கலான ஒளிப்பதிவு
அநிலேஷ் எல் மாத்தியூ தான் இசை .இரண்டு பாடல்கள் சுமார் ரகம் .பின்னணி இசை பரவாயில்லை ரகம் .
மகேந்திரன் பாண்டியன் தான் ஆர்ட் டைரக்ஸன் . திரு விழா செட்டிங்க் அருமை .
ஒளிப்பதிவு எந்த அளவுக்கு படத்துக்குப்பெரிய பிளசோ அந்த அளவு ஒலிப்பதிவு மைனஸ் .வசனமே புரியவில்லை . பாதிநேரம் அழுது கொண்டே இருப்பதாலும் .அனுதாபத்தைப்பெற கதறிக்கொண்டே இருப்பதாலும் வசனங்கள் ஒன்றும் புரியவில்லை
சபாஷ் டைரக்டர்
1 பெண் கதாப்பாத்திரமே இல்லாமல் ஒரு படம் தரலாம் என்ற துணிச்சல்
2 ஒரே கார் ,ஒரே இரவு என்பதால் அதிக அலைச்சல் இல்லை .துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம்
3 படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பதட்டத்தை உருவாக்கியது . ஆடியன்ஸுக்கு கதையுடன் ஒரு கனெக்ட்டிவிட்டி உருவாக்குவது மிக முக்கியம் .பெரிய பெரிய இயக்குனர்களே அதை செய்யத்தவறும்போது அறிமுக இயக்குனர் செய்திருப்பது சபாஷ் போட வைக்கிறது
ரசித்த வசனங்கள்
படம் முழுக்க கெட் ட வார்த்தைகள் தான் ஐவரும் பேசுகிறார்கள் .எதுவும் ரசிக்கும்படி இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பேனிக் அட் டாக் வந்து ஒருவன் துடித்துக்கொண்டிருக்கிறான் . அவனுக்குத்தண்ணீர் தராமல் வெட்டியாகப்பேசிக்கொண்டிருக்கிறார்கள்
2 ஆறு பேர் பயணிக்கும் காரில் ஒரு வாட் டர் பாட்டில் கூடவா இருக்காது ?
3 ஒரு ராத்திரி முழுக்க எங்கெங்கேயோ அலைகிறார்கள் காரில் .ஆனால் போலீஸ் செக்கிங்கே ஒரு இடத்தில் கூட இல்லை
4 அழுக்கோண்டே இருப்பது .பயத்தில் கத்திக்கொண்டே இருப்பது எரிச்சலைக்கொடுக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ (கெட் ட வார்த்தைகள்)
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான படங்கள் பார்ப்பவர்கள் , சினி பீல்டில் ஒர்க் செய்பவர்கள் பார்க்கலாம்.பொது ஜனங்களுக்குப்பிடிக்ககாது . விகடன் மார்க் 41 ரேட்டிங்க் 2.25 / 5
0 comments:
Post a Comment