Tuesday, June 03, 2025

THE VERDICT(2025) -த வெர்டிக்ட் (தமிழ் ) சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா + க்ரைம் த்ரில்லர் )

         


               

முழுக்க முழுக்க   அமெரிக்காவில்    படப்பிடிப்பு  நடந்த  தமிழ்ப் படம் இது . அதனால்  பெரும்பாலான  வசன ங்கள்  ஆங்கிலத்தில் தான் இருக்கும்.தமிழ்  சப் டைட்டில்  உண்டு . முதல்   பாதி முழுக்க கோர்ட் ரூம் டிராமா . பின் பாதி க்ரைம்    த்ரில்லர் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கோடீஸ்வரி   விதவை தனிமையில் இருக்கிறார் , . வாரிசு இல்லை . அவரிடம் 25 வருடங்களாக  ஒரு ஆள்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறான் நாயகி  ஒரு மிடில் கிளாஸ் பேமிலி . நாடக  நடிகை ஆக இருந்தவர் இப்போது ஷேர்  மார்க்கெட்  கன்சல்டடண்ட் ஆகப்பணி ஆற்றுகிறார் . ஒரு முறை  அந்த கோடீஸ்வரியுடன்  அறிமுகம் ஆகி பழக்கம் ஏற்படுகிறது . அவரின்  பணத்தை  எந்த சேரில் முதலீடு செய்யலாம் என  ஐடியா கொடுக்கிறாள் நாயகி . . இதைத்தொடர்ந்து  நாயகி அடிக்கடி  அந்த கோடீஸ்வரி  யின் பங்களாவுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார் . அந்தக் கோடீஸ்வரி க்கு  ஆஸ்துமா ட்ரபிள்  உண்டு . அடிக்கடி  மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டு .


ஒரு கட்டத்தில்  நாயகியின் பணிவிடைகள் , பழக்க வழக்கங்கள் பிடித்துப்போய் நாயகிக்கு  தன சொத்தின் பெரும்பகுதியை உயில் ஆக எழுதி வைத்து விடுகிறார் . இந்த விஷயத்தை  நாயகியிடமும் சொல்லி விடுகிறார் .நாயகிக்கு  ஒரு காதலன் உண்டு . அவனுக்குப்பெரிய சம்பாத்யமோ ., வேலையோ இல்லை . ஒரு பிரைவேட்  ஹாஸ்பிடலில்  நர்ஸ் ஆக வேலை செய்கிறான் . நாயகி   தன காதலனிடம்  இந்த   சொத்து   விஷயத்தைப்பகிர்கிறாள் .கோடீஸ்வரி  இடம்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிறானே  அவனுக்கு நாயகியைக்கண்டால் ஆகாது . காரணம்  நாயகி இல்லை எனில்  சொத்து  பூரா தனக்கு வரும் என நினைக்கிறான் 


 இப்படியான   சந்தர்பப்த்தில்   அந்தக் கோடீஸ்வரி  மூச்சுத்திணறி  இறக்கிறார் .அது  இயற்கை மரணமா ? கொலையா?   யார்   அதை  செய்திருப்பார்கள் ? 1   நாயகி  2  நாயகியின் காதலன்  3 கோடீஸ்வரி  இடம்  பட்லர் ஆக வேலைக்கு இருக்கிற ஆள்  இந்த கேஸ்   தான்   கோர்ட்டில் நடக்கிறது . முதல்   பாதி  முழுக்க    வாத  , பிரதிவாதங்கள்  நடக்கிறது . 


 கோர்ட்  தீர்ப்பு   என்ன  கிடைத்தது ?  தீர்ப்புக்குப்பின்  நடந்த   அதிர்ச்சி  ஊட்டும்  சம்பவங்கள்   என்ன?   என்பதை திரையில் காண்க 


கோடீஸ்வரி    ஆக  சுஹாசினி  நடித்திருக்கிறார் . இவரது  நடிப்பு எனக்குப்பிடிக்கும் .ஆனால்  இவர் பல இடங்களில் செயற்கையாக சிரிப்பார் .அது   பிடிக்காது . இவருக்கு   அதிக   வாய்ப்பில்லை . வந்த வரை ஓகே ரகம் 


  நாயகி ஆக சுருதி   ஹரிஹரன்  பிரமாதமான   நடிப்பு .கலக்கி விட் டார் .  குறிப்பாக கோடீஸ்வரி   இறக்கும்  காட்சியில்  அவரது   முகத்தில்    தெரியும் பதட்டம் கிளாசிக்


 நாயகி  சார்பில் வாதாடும்   வக்கீல் ஆக  வரலடசுமி சரத்குமார் .கம்பீரமான நடிப்பு .கோர்ட்டில் அவர் உடல் மொழி  ,  வாதிடும் பாங்கு டயலாக் டெலிவரிஅனைத்தும் அற்புதம் 


 நாயகியின் காதலன் ஆக பிரகாஷ் மோகன்தாஸ்     நடித்திருக்கிறார் . ஒரு கமல்  ஹாசனோ , தனுஷோ , சிம்புவோ  நடித்திருக்க வேண்டிய ரோல் இவருடையது . ( அதாவது  பெண் பித்தன் வேடம் ) ஆனால்  அந்த கேரக்டருக்கு வலு சேர்க்கும் அளவுக்கு இவர் நடிப்பு இல்லை . எங்க ஊர்ப்பக்கம் ஒருபழமொழி   சொல்வார்கள் .செத்துப்போனவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்தது போல என்று  , அது மாதிரி தான்  அவரது நடிப்பு தேமே  என்றிருந்தது . ஒரு ரகுவரன்  அல்லது  பிரகாஷ்  ராஜிடம்   தந்திருந்தால்  பின்னிப்பெடல்   எடுத்திருப்பார்கள் 

ஜுரி களில்  ஒருவராக   வரும்   வித்யு லேகா  ராமன்  நடிப்பு கன   கச்சிதம் 


ஒளிப்பதிவு  அர்விந்த் கிருஷ்ணா . கோர்ட்  ரூமில்  படமாக்கப்பட் ட  காட் சிகள்  தரம் . வெளிப்புறப்படப்பிடிப்பும் பிரம்மாண்டமான நேர்த்தி . ஆர்ட்   டைரக்ஸன்  நந்தினி முத்யம் , கோர்ட்ரூம் செட்டிங்க் செம . ஆதித்யா  ராவின்  இசையில்   பாடல்கள்   சுமார் ரகம்    தான் .பின்னணி இசை  கூட இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாம் .


 கதை , திரைக்கதை எழுதி   இயக்கி இருப்பவர்  கிருஷ்ணா சங்கர் 


சபாஷ்  டைரக்டர்

1  கோர்ட்டில்   நடக்கும்   வாத , பிரதி வாதங்கள்  மிக இயற்கையாக   அமைத்த விதம் . வழக்கமான தமிழ்ப்படங்களில் காட்டுவது போல  ஓவர் ஆக்டிங்க் இல்லை 


2   கோர்ட்   தீர்ப்பு வந்த பின்  படமே  முடிந்து விட்ட்து  என நினைக்கும்போது  ஒரு புது திரைக்கதை  உருவாவது அருமை . பாதிப்படம்  அதற்குப்பின் தான் 



3  நாயகி , வக்கீல்  ஆகிய   இருவர் நடிப்பும் அருமை 


4 கொரோனா  கால  கட்டத்தை   சாமார்த்தியமாகப் பயன்படுத்திய விதம் 



  ரசித்த  வசனங்கள் 

1  குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் அப்பாவிகள்!தான் 


2  சின்ன விஷயங்களைப்பண்ணி  யாரும் நல்லவங்க ஆகிட ,முடியாது 


3 விதில  உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? 


வாழ்க்கை ல  எனக்கு நம்பிக்கை இருக்கு 



4  நான்  ஏழை தான் , ஆனா பேராசை  இல்லை மத்தவங்க  பணம்  மேல  பொறாமை   இல்லை 


5  கைல   10 பைசா   கூட இல்லைன்னாதான் பணத்தோட  அருமை , மதிப்பு தெரியும் 


6 கோர்ட்டுக்குத்தேவை  1  எவிடென்ஸ்  2 மோடிவ் 


7  நமக்கு முன்னே  10,000  அடி தள்ளி பிரச்சனை இருக்குன்னா   அதை முதலிலேயே பார்த்துடுவேன் 


 ஆனா   10 அடி   தூரத்த்தில்    இருக்கும் பிரச்சனையை கவனிக்க மாட் டீங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஹாஸ்ப்பிடலில்  சிசிடிவி கேமரா  இருக்கும் என்பது  அங்கே  பணிபுரியம்  நர்சுக்குத்தெரியாதா? அப்படி  ஈசியாக மாட்டுவாரா? 


2 ஒரு கோடீஸ்வரி , ஆஸ்துமா ட்ரபுள் உள்ளவர்  தனக்கென   தனி நர்ஸ்   வைத்துக்கொள்ள மாட் டாரா? 


3  நாயகியின்   காதலன்   எந்த நம்பிக்கையில்;  நாயகியின் வக்கீலிடம்  சில ரகசியங்களை வெளியிடுகிறான் ? 


4  எனக்கு ஒரே  ஆளிடம்  இருக்கப்பிடிக்காது  , மலருக்கு மலர்  தாவுவேன் என  டயலாக் பேசும்  ஆள் எப்படி  ஒரே ஆளிடம் 10 வருசமாக  குப்பை கொட்டுகிறான் ? 


5 ஜாக்கிசான்  உட்பட  பல கோடீஸ்வரர்கள்   தங்கள்   சொத்துக்களை   அநாதை ஆசிரமங்களுக்குத்தான் எழுதுகிறார்கள் . ஆனால்  இதில்  ஒரு கோடீஸ்வரி  அறிமுகம் அதிகம் இல்லாத  ஆளுக்கு  150 மில்லியன் டாலர்   சொத்து எழுதி   வைப்பது ஓவர் 


6  ஒரு பிரபல  லேடி   வக்கீல்  உண்மைகளை ரகசியங்களைக்கண்டு பிடிக்க  ஒரு பொம்பளைப் பொறுக்கியிடம் காதலி ஆக நடிப்பார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - யூகிக்கக்கூடிய   ட்வீஸ்ட்களுடன்   ஒரு சராசரி  க்ரைம் த்ரில்லர்  படம் , பார்க்கலாம் . ரேட்டிங்க்  2.75 . 5  . விகடன் மார்க் யூகம் - 41 

0 comments: