இந்தப்படத்தை நண்பர் பெங்களூர் பிரேம் கனடாவில் இருந்து பரிந்துரைத்தபோது விபரம் அறிய டைட்டிலை டைப்பி கூகுளில் தேடினேன் . 2018ம் ஆண்டு வெளியான எவரு தெலுங்குப்படத்தின் ஹிந்தி வெர்சன் எனக்காட்டியது .விட்டேன் . த இன்விசிபிள் கெஸ்ட் என்ற ஸ்பானிஷ் படத்தின் தெலுங்கு பட் டி டிங்கரிங் வெர்சன் தான் எவரு தெலுங்கு. ஹிந்தியில் பதலா என்ற டைட்டிலில் வந்தது பிறகு எதற்காக அதே தெ லுங்கு வெர்சனை ஹிந்தியில் டப் செய்ய வேண்டும் ? என நினைத்தேன் . குழப்பம் நீங்கியது . அது வேறு படம் இது வேறு படம்
1997ல் நடந்த மலைநாடு மர்டர் என்ற உண்மை சம்பவம் தான் கதை . அதே லொக்கேஷனில் ஷூட் செய்து இருக்கிறார்கள் 11/4/2025 அன்று திரை அரங்குகளிலே ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது ஜீ 5 ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
25 வருடங்களாக குற்றமே நடக்காத ஊர் அது .முதல் முதலாக அந்த ஊர் பெரிய மனிதர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் ஒரு இளைஞன் அவன் தான் அந்த ஊருக்கு முதல் முதலாக கம்ப்யூட் டரைக்கொண்டு வந்தவன் . (கதை நடக்கும் காலகட் டம் 1990 ) அவன் மேல் போலீஸ் சந்தேகப்பட்டு அவன் வீ ட்டுக்குப்போனால் அவனும் இறந்து கிடக்கிறான் . இந்த இரு மரணங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சந்தேகிக்கிறது . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக , போலீஸ் ஆபீசர் ஆக ரங்கையனா ரகு அருமையாக நடித்து இருக்கிறார் . துப்பறியும் சீன்கள் அருமை . நாயகி ஆக பாவனா கவுடா அழகு முகத்துடன் இளமைப்பொலிவுடன் வருகிறார் ( இவர் நம்ம ஊர் பாவனா அல்ல )நாயகி மீது ஒருதலையாக ஆசைப்படும் இளைஞன் ஆக சித்து மூலிகனி நடித்து இருக்கிறார் .இவர் வில்லன் ஆக மாறும் சீன்கள் மிரட்டல் எனில் நாயகி வில்லி ஆக மாறும் சீன்கள் செம .
கொலை செய்யப்படும் ஊர்ப்பெரியவர் ஆக சரத் லோகிதாசவா நல்ல நடிப்பு . உதவி துப்பறிவாளர் ஆக வரும் ரவி சங்கர் கவுடா கச்சிதமான நடிப்பு . போலீஸ் ஆபீசரையே சந்தேகப்படும் சீன அருமை
சரண் ராஜின் இசையில் படத்துக்குப்பெரிய வேகம்கொடுக்க முடியவில்லை .அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு அருமை . 1990 ல் நடக்கும் கதை என்பதால் லைட்டிங்கில் பழைய பாணியை கடைப்பிடித்தது குட் . பரத்தின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது ,முதல் அரை மணி நேரம் ரொம்ப ஸ்லோ ..கதை , திரைக்கதை கிருஷ்ணராஜ் ( இது உண்மை சம்பவம் ) இயக்கம் ஜனார்த்தன சிக்கன்னா
சபாஷ் டைரக்டர்
1 முதல் அரை மணி நேரம் ,கடைசி அரை மணி நேரம் இரண்டும் இழுவை . ஆனால் மெயின் கதையை சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார் . ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை இழுத்து விட் டார்
2 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நாயகிக்கு ஒரு கிஸ் சீன் வைத்தது
3 ரசிக்க வைக்கும் வசனங்கள்
ரசித்த வசனங்கள்
12 மனம் அபாயகரமானது .நம் பேச்சை அது கேட்காது சரி எது ? தப்பு எது ? அதுக்குத்தெரியாது
13 மனசு தான் என்ன விரும்புதோ அதை அடைய முயற்சிக்கும்
14 சில உறவுகள் நீண்ட தூரம் பயணிக்காது
15 பாஸாம்பரம் என ஒரு மூலிகை செடி .அதை தண்ணீரில் 3 நாட்கள் ஊற வைத்தால் அதன் விஷம் தண்ணீரில் இறங்கும் . அந்தத்தண்ணீரை உணவில் கலந்தால் மரணத்திற்குக்காரணம் கண்டு பிடிக்க முடியாது
16 சாமி பூஜைக்கே பூ பறிப்பதாக இருந்தாலும் ஒரே செடியில் பூ பறிக்கக்கூடாது .செடி தான் என்றாலும் அதுக்கும் வலிக்கும் தானே ?
17 குற்றவாளிக்குத்தரும் பெரிய தண்டனை மன்னிப்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வெளிநாட்டில் வசிக்கும் காதலனை வர வைக்க நாயகி தன் வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு எடுப்பது அபத்தம் . ஆனால் உண்மை சம்பவம் ஆச்சே ?
2 நாயகி மீது ஒருதலையா க ஆசை வைக்கும் வில்லன் நாயகியின் காதலன் இங்கே வந்து விடக்கூடாது எனபதற்காக நாயகியி ன் வருங்கால மாமனாரைக்கொ லை செய்ய முடிவு எடுப்பது அபத்தம்
3 இன்ஸ்பெக்ட்டர் தன அம்மாவைக்கொலை செய்ய முடிவு எடுப்பது நம்ப முடியவில்லை .நந்தா க்ளைமாக்சில் உல்டா வடிவம் தான் . ஆனால் நந்தாவில் அ ழுத்தமான காரணம் இருந்தது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U / A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பொறுமை ரொம்ப வேண்டும் . ஆனால் சுவாரஸ்யமான கதை தான் . ரேட்டிங்க் 2.5 / 5
Agnyathavasi | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Janardhan Chikkanna |
Written by | Krishna Raj |
Produced by |
|
Starring | |
Cinematography | Advaitha Gurumurthy |
Edited by | Bharath MC |
Music by | Charan Raj |
Production company | Dakshayini Talkies |
Release date |
|
Running time | 122 minutes |
Country | India |
Language | Kannada |
0 comments:
Post a Comment