Skip to content

Wednesday, January 29, 2014

தமிழ் நாட்டின் தசரத சக்ரவர்த்தி VS மதுரை ராமர் யார் பக்கம் நியாயம் ? -அயோத்தி மக்கள் கருத்து

ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்னதைக் கேட்டு என் இதயமே நின்றுவிடும் போல இருந்தது': திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான பேட்டி

மு.க.ஸ்டாலினை பற்றி மு.க.அழகிரி வெறுக்கத்தக்க வகையில் பேசியதைத் தன்னால் பொறுத்தக்கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கூறினார்.


திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?



பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்; முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை.



ஆனால் கடந்த சில மாதங்களாக மு.க.அழகிரி, தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு, இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு - பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.


அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியைக் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். அவருக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.


அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24 ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார்.



அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.


நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும். கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.


அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அது கழகத்தின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கமளித்து பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?


என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.


இந்த இயக்கம் அண்ணா காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ இது போன்ற சோதனைகளையெல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும். தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14வது வயது முதல் இந்த 91வது வயது வரையில் பல தியாகங்களைச் செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய உங்கள் மூலமாக இந்தச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.


அழகிரி மன்னிப்பு கோரினால் தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?


இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.


அழகிரி ஏதோ முறைகேடுகள் நடந்ததைப் பற்றி குறிப்பிட்டு அதைக் கேட்பதற்காகத் தான் உங்களைச் சந்தித்ததாகச் சொல்கிறாரே?


எந்த முறைகேடு பற்றியும் எனக்குத் தெரியாது.


காங்கிரஸ் கட்சி உங்களிடம் கூட்டணி வைக்க முன் வந்தால் உங்கள் கருத்து என்ன?



காங்கிரஸ் கட்சி எங்களைத் தேடி வருவதாக நான் ஜம்பம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவரை யொருவர் அரவணைத்து அணி சேருவது அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடைபெற வேண்டிய விஷயங்களாகும்.


தே.மு.தி.க.வோடு தி.மு.க. கூட்டணி சேருவது பற்றி?


நாங்கள் முதலிலே அதைப் பற்றிச் சொல்லி விட்டோம். அதற்கு மேல் தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர நாங்கள் அல்ல.


  • mu.saravanakumar தெய்வம் நீயென்றுணர்
    "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது".....சீஸன் 2 சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
    about 22 hours ago ·   (62) ·   (11) ·  reply (0)
    Subramanyam · ponnambalam Srinivasan · hhj · Raja Mani · Sivasankaran · Santhappan Santhappan  Up Voted mu.saravanakumar 's comment
    alfo · Devaraj · nsathasivan  Down Voted mu.saravanakumar 's comment
    •  ram from Chennai
      திரு .கருணாநிதி அவர்கள் எடுத்த நடவடிக்கை சரியானதே . கட்சியில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை தலைவருக்கு எழுத்துமூலம் தகவல் தெரிவித்திருக்கவேண்டும் அல்லது பொதுகுழ்கூட்டப்பட்டபொது கூட்டத்தில் பேசிருக்கவேண்டும். அதைவிடுத்து பொதுக்குழு கூடத்திற்கு போகாமல் தனியார் தொலைக்காட்சிக்கும் , நாளிதழ்ழுக்கும் சட்டாம்பிள்ளையாக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள் .
      about 21 hours ago ·   (23) ·   (5) ·  reply (0)
      Devaraj  Down Voted ram 's comment
      •  Devaraj 
        அய்யா மஞ்ச துண்டாரே ! உங்களுடைய குடும்ப நிகழ்வுகளை அம்பல படுத்தி கட்சியும் குடும்பமும் ஒன்று என்பதை நிரூபித்து விடீர்கள். வசதிக்கு ஏற்ப வார்த்தை ஜாலம் செய்ய கூடியவர் நீர் என்பதை உலகம் அறியும். அழகிரி மீதான நடவடிக்கை எடுக்க பட்ட விதம் அனைவர் மனத்திலும் பல ஐயபாடுகளை எழுப்பி உள்ளது. ஒன்று விஜயகாந்த் யை வலை போட்டு இழுக்க, ரெண்டு கட்சியில் வயதான நீர் தான் கட்டு பாட்டில் வைதூலீர் என்பதை நிலை நாட்ட, மூன்று கட்சியின் பொருளாதரத்தை உம்முடைய குடும்பத்தின் கட்டுபாட்டில் கொண்டு வர நீர் செய்யும் சாணக்கிய தனம் என்பது. சில காலங்கள் கழித்து, கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, என்று கூறி கொண்டு பொது மக்களை நீங்கள் ஏமாற்றும் கலையை நாங்கள் மறக்க மாட்டோம். மீண்டும் ஒரு குடும்ப விழாவில் பட்டு பீதாம்பரம் கட்டி கொண்டு எல்லோருடைய காதில் பூ வைக்கும் நாள் ரொம்ப தூரம் இல்லை.
        about 21 hours ago ·   (43) ·   (11) ·  reply (0)
        Raja Mani  Up Voted Devaraj 's comment
        •  A.SESHAGIRI from Mumbai
          பகுத்தறிவுவாதிகள் (!)ஆருடம் கணிப்பதைப்பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படவேண்டும்?
          about 21 hours ago ·   (11) ·   (3) ·  reply (0)
          Subramanyam  Up Voted A.SESHAGIRI 's comment
          • முத்தமிழ் வித்தகர் ???? (மூணாம் கிளாஸ் பாஸ்??) வினை வைத்தவன் வினை அறுப்பான் பழமொழி தெரியாதா?
            about 21 hours ago ·   (5) ·   (5) ·  reply (0)
            Devaraj  Up Voted NS RAMAN's comment
            nsathasivan · nsathasivan  Down Voted NS RAMAN's comment
            • இது மக்கள் தி மு க பக்கம் (திசை ) திரும்ப செய்யும் நிகழ்ச்சியா? (பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை மு க அவர்களே உணர்வீர்கள். ) மறுபக்கம் ஏன் என்றால் மக்கள் திசை திரும்ப செய்யும் நிகழ்ச்சியாக தே மு தி க, இப்போது செய்யும் பம்மாத்து,தேர்தல் முடிவு வேறு மாதிரி வந்தால் விஜயகாந்த் சாயம் வெளுதுவீடும்....................மக்கள் பார்த்து கொண்டுதன் இருகிறார்கள்
              about 21 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
              •  Mmuthu Kumar from Coimbatore
                அண்ணன் என்னட தம்பி என்னடா அவசராமன் ulagathile
                about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                •  Mmuthu Kumar from Coimbatore
                  அதனை சோதனையும் நீங்க தங்கறீங்க என்ன மனம் uruthi
                  about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                  • கலைஞர் கூறுகிறார்:தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காக ஏற்படுத்தப் பட்டது என்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களுக்காக கட்சியில் பதவிகளை உருவாக்குவது எந்த விதத்தில் நியாயம்.?தயாநிதி அரசியலிலும் கலாநிதி தொழில் துறையிலும் இருப்பதைப் போன்றுதன் குடும்பத்திலும் கலைஞர் ஸ்டாலினுக்கு அரசியலையும் ,கல்விக்கூடங்களை கனிமொழிக்கும் கொடுத்து அழகிரிக்கு தொழிற்கூடங்கள்,வாகன விற்பனை நிலையங்களையும் வாரி வழங்கி குடும்பத்தில் சிக்கல் வராமல் பார்த்திருக்க வேண்டும்.எல்லோரும் அரசியலுக்கு வந்தால் குடுமிப்பிடி சண்டைதான்.
                    about 20 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
                    abu  Down Voted Sheik Sindha Mahabooth Subukani's comment
                    •  Mohan Ramachandran at I am doing my own business
                      ஓட்டப்பம் வோட்டை சுடும் தன் வினை தன்னை சுடும் .பட்டினத்தாரின் பொன் மொழி காலத்தால் அழியாதது
                      about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
                      Mathu  Up Voted Mohan Ramachandran's comment
                      •  Vignesh from Jeddah
                        அதுசெரி 5 நாள் கழித்தா அறிக்கை விடுறது ??????????
                        about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                        • இந்திய தண்டனை சட்டத்தின் படி தணடிக்கபட வேண்டிய ஒரு குற்றம் ந்டக்க போவதாக அறிகுறி இருப்பது போல ஒரு சூழ்நிலை உருவாகிறதோ என்று ஐயம் ஏற்படுகிற வகையில் அல்லவா இருக்கிறது கலைஞரின் ஓபன் ஸ்டேட்மெண்ட்....இது இரு தரப்பிரன்ரிடமும் பெரும் கலவ்ரத்தை அல்லவா ஏற்படுத்தும்.. . இது தி.மு.க விற்கே கெடுதலாச்சே..கலைஞர் அவசரபட்டுவிட்டார்.. ..கே.தியாகராஜன், சீர்காழி.
                          about 19 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
                          •  Conjivaram from Chennai
                            தமிழ் அறிஞர் கலைஞருக்கு தெரியாதா? பாடு பட்டு பணத்தை தேடி பணத்தை புதைத்துவிட்டு கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் .. கூடு விட்டு இங்கு ஆவி தான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்த பணம் .. சிறுவனாக பள்ளியில் நான் படித்த வரிகள் .. கலைஞர் குடும்பத்தை பணப்பேய் பிடித்து ஆட்டு கிறது .. நேர்வழியில் வந்த பணம் நிலைக்கும் .. குறுக்கு வழியில் வந்தபணம் குடும்பத்தை அழிக்கும் .. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் .. வாழ்கையில் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இது .. நேர்மையை கடைபிடியுங்கள் .. வாழ்வாங்கு நிம்மதியான வாழ்க்கை அமையும் ..
                            about 19 hours ago ·   (6) ·   (1) ·  reply (0)
                            Sivasankaran  Up Voted Conjivaram 's comment
                            •  M. from Coimbatore
                              இன்று தன் மகனை பற்றி இன்னொரு மகன் சொன்னதை கருணாநிதியால் தாங்கி கொள்ள முடியவில்லையே.. அன்று.. எம்.ஜி.ஆர். உடல் நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது, இதே தி.மு.க வினர் என்னவெல்லாம் பேசினார்கள்.. "எம்.ஜி.ஆர். இறந்து விட்டார், உடல் ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறது.." என்றல்லாம் தமிழக மக்களின் வயிறு எரிய தேர்தல் பிரச்சாரம் செய்தார்களே .. அப்போது கண்கள் கலங்கவில்லையே.. இந்த கருணாநிதியை முதல்வர் ஆக்கினவர் எம்.ஜி.ஆர். தி.மு.க என்ற கட்சியை அரச பீடம் ஏற்றியவர் அவர். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..
                              about 19 hours ago ·   (10) ·   (1) ·  reply (1)
                              •  s 
                                அப்படி எம் ஜி ஆர் இறந்து விட்டார் என்று தி மு க வினர் சொல்லவில்லை. ஜெயலலிதாதான் எம் ஜி ஆர் செயல்படமுடியாமல் இருக்கிறார். எனவே முதல்வர் பதவியை தனக்கு பெற்றுத்தரும்படி துரோகத்தனமாக ராஜீவ் காந்திக்கு ரகசியமாக கடிதம் எழுதினாரே?.
                                about 13 hours ago ·   (4) ·   (2) ·  reply (0)
                              •  knvijayan Kn proprietor at S D Worksfrom Bangalore
                                1969-இல் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இந்திரா சஞ்சீவ ரெட்டியை தோற்கடித்தபோது இந்திராவை ஆதரித்த கருணாநிதி இன்று தன்னுடைய கட்சியில் ஒழுங்கு வேண்டும் என்று சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல்தான்.
                                about 19 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
                                • மக்கள் ஆட்சி!!
                                  about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                  •  SAMPATH, from Chennai
                                    கட்சியில் யாரைப் பார்த்தாலும் ஸ்டாலின் அச்ச உணர்வோடு பார்க்கிறார் 30 வருடங்களுக்கு மேலாக தந்தையின் நிழலில் அரசியல் செய்துகொண்டிருக்கும் ஸ்டாலின் தனியாக ஒரு முழுமையான பத்திரிகையாளர் ச்ந்திப்பைக்கூட ந்டத்தமுடியாதவராக உள்ளார். அவரை நம்பி கட்சியை நடத்தமுடியாது என்பதை கருணாநிதி உணரவேண்டும். முதலில் ஸ்டாலினுக்குள்ள அதிகாரத்தைக் குறைக்கவேண்டும். ஸ்டாலின் முதலில் தன தந்தையிடமிருந்து ஓரளவிற்காவது அரசியலைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
                                    about 18 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)
                                    mu.saravanakumar  Down Voted SAMPATH, 's comment
                                    •  ARUNKUMAR, from Chennai
                                      ஸ்டாலினால் தி.மு.க கட்சி வளர்சசிபெற்றதைவிட வைகோவிலிருந்து, பல்வேறு தலைவர்களை இழந்ததுதான் மிச்சம்போல தெரிகிறது. ஸ்டாலின் தன்னை எதிர்ப்பவர்களைப் பழிவாங்குவதில்தான் குறியாக இருக்கிறாரே தவிர, கட்சி வளர்ச்சியில் உண்மையான அக்கறைகொண்டு செயல்படுவதாக தெரியவில்லை. கட்சிக்குள் தனக்கு வேண்டியவர்கள் என்று சிலரை வைத்துக்கொண்டு, கருனாநிதியிடத்திலும், பொதுக்குழுவிலும் என்று அவர்கள் மூலமாக தனக்கு வேண்டாதவர்களைப பழிவாங்கி வருகிறார்.
                                      about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (1)
                                      •  s 
                                        சுத்த அபத்தம்
                                        about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                      •  esspeepathi from Madurai
                                        விஜய்காந்தின் வரவுக்காக நடத்தப்படும் நாடகம் என்றே நினைக்கத்தோன்றும். என்றுமே கட்சி தலைவர் என்பதை விட தகப்பன் என்ற கோத்த இவருக்கு அதிகம். விஜயகாந்த் வருவார் தேர்தலுக்குப்பின் அவருக்கு கிடைக்கும் அர்ச்சனையை (இருக்கவே இருக்கார் திருமா, வீரமணி) எண்ணிபார்க்கவேண்டும். கதை வசனம் நடிப்பு எல்லாமே தலைவர் சிறந்தவர்.
                                        about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                        • கண்கள் பனித்தது இதயம் இணைத்தது என்ற வாக்கியம் வெகு விரைவில் வரவும்
                                          about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                          •  rajesh from Suri
                                            அன்று வைகோ இன்று அழகிரி. பதவிக்காக தன் மகனின் முகத்திலும் சானிப்பூச தயங்கவில்லை இந்த வாழும் வள்ளுவர். ஒரு குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. இதற்கு ஒப்புவாக “இழிவுடை மூப்பு உரகதத்தின் துவ்வாது (39).” என்று முதுமொழிக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.
                                            about 16 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
                                            •  m.sankaralingam from Irvine
                                              ஈ.வெ.கி. சம்பத், கண்ணதாசன்,பண்ருட்டி ராமசந்திரன்,எம்.ஜி.ஆர், வை.கோ .தா.கிருஷ்ணன், இவர்களை எல்லாம் ஓரம் கட்டி அண்ணா ஆரம்பித்த கழகத்தை தன் குடும்பக் கட்சியாக மாற்றிய பாவம் இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
                                              about 15 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                              sai  Up Voted m.sankaralingam 's comment
                                              • நடிப்பு அருமையிலும் அருமை!!!!அன்று,ஈழப் போரின்போது ப சி உடன் சேர்ந்து நடத்திய நாடகத்தைவிட இந்த நாடகம் மிகவும் அருமை!!அன்று தமிழ் இனத்தைக் கேவலபடுத்தி காட்டிக் கொடுத்தீர்! இன்று, இழந்த செல்வாக்கைப் பிடிக்கவும்,கட்சிதனைப் பிடித்திடவும் மகன்களை வைத்து நாடகம் போடுகிறீர்!தன்னலத்திற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள்.எனவே உங்களை எவருமே நம்பமாட்டார்கள்!
                                                about 14 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
                                                Sivasankaran  Up Voted வேந்தன்,புதுக்கோட்டை. 's comment
                                                •  Senthil 
                                                  நான் நீ என்றல் உதடுகள் ஒட்டாது..... நாம் என்றல் தன உதடுகள் ஓட்டும்... கலைஞர்
                                                  about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                  •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
                                                    தனது 14 வயது முதல் 91 வயது வரை எத்தனையோ தியாகங்களைச் செய் ததாகக் கூறுகிறாரே, உங்களுக்கு ஏதாவது அவரது தியாகங்கள் குறித்து தகவல் தெரியுமா? சுயதம்பட்டம், நாட்டினையும் மக்களையும் வஞ்சிப்பது, தமிழ்நாட்டின் நான்கு தலைமுறையினருக்கு மது என்னும் அரக்கனை அறிமுகப் படுத்தி தமிழகத்தினை நன்கு சுரண்டியது 2ஜி தொலைதொடர்பு ஊழலை இந்தியாவிற்கு பரிசாக அளித்தது ஆகியவைதான் தியாகம் என்று நினைக்கிறாரா?. இல்லை இந்தியாவையே விலைக்கு வாங்க வசதியும் வாய்ப்பும் அமைந்தும் போகட்டும் போ என்று விட்டு விட்டதை தியாகம் என்கிறாரோ? காலை ஏழு மணிக்கு பேசியதையும் அடாவடி அரசியல் செய்துவரும் மகனைக் குறித்தும் எது சொன்னாலும் தகும், மக்கள் மனம் உருகப் பேச வசனங்களைத் தயார்படுத்திக்கொண்டு வந்தது போல் தான் உள்ளது. .
                                                    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                    •  s 
                                                      கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற கலைஞர் அழகிரி மிது எடுத்த நடவடிக்கை சரியானதே. இதில் தந்தை மகன் என்ற பேச்சுக்கே இடமில்லை தன மகனையே தேர்க்காலில் இட்டு கொன்று மனுநீதிச்சோழன் நீதியை நிலை நாட்டியதும் திருவாரூரில்தான். அதைப்போல்தான் கலைஞரும் செயல்பட்டிருக்கிறார். இதில் மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் குற்றம் காண்பதில் அர்த்தமேயில்லை அம்மா நித்தம் ஒரு அமைச்சர் மாற்றம் செய்கிறார். கட்சி நிர்வாகிகளை சகட்டுமேனிக்கு பந்தாடுகிறார் ஏன் தன உ பி ச வையும் பரிவாரங்களையும் கூண்டோடு வெளியேற்றினார் பிறகு சேர்த்துக்கொண்டார். ஏன் எதற்கு யாருக்காவது தெரியுமா? தி மு க வில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றும் எல்லா நடவடிக்கைகளும் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமே மேலோங்கிய கட்சியினர் தி மு க வை விமர்சனம் செய்ய யோக்யதை வேண்டும் அல்லவா?
                                                      about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                      • இந்த நாடகத்தின் மூலம் ஸ்டாலின்-ஆ..அழகிரியா- என்ற சர்ச்சையை துவக்கி இறுதியில் தன் குடும்பத்தில் இருந்து ஒருத்தரே தனக்கு பின் திமுக தலைமை ஏற்பார் என்பதை கருணாநிதி உறுதி படுத்தியிருக்கிறார்....இந்த வெட்கங்கெட்ட தனத்துக்கு அரசியல் இராஜதந்திரம் என்ற பெருமை வேறு..
                                                        about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                        • This is a Mr.M.Karunanithi a another poltical and family drama .
                                                          about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                          •  vijayan Vijayan from Bangalore
                                                            கட்சியை கலைஞர் ஜனயகபூர்வமுரையில் நடத்தவில்லை என்பதே இப்பிரச்சனைகளுக்கு காரணமாகும் கட்சியில் பலர் ஸ்டாலினைவிட திறன்படைத்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறைத்துவிடுவதில் சாமர்தியாசாலி மன்னர் காலத்தை போற்றுவர் கலைஞர் மன்னர் ஆட்ச்யில்வாரிசுபோட்டி இருந்தது அழிவும் இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது
                                                            about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                            •  thiru from Suri
                                                              வாரிசுரிமைப் போரின் நியாங்களை கருணாநிதி அறிவித்துள்ளார். 14 வயது முதல் 91 வரை அவர் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் என்ற உருக்கமான வார்த்தைகள் எல்லாம் தி.மு.க.வில் தனது மகன்களின் தலைமையை நிலைநாட்டுவதே. ஜனநாயகத்துக்கு அவமானம்.

                                                            தலைவர் சொல்வது அபாண்டம்!- கருணாநிதி பேட்டி குறித்து மு.க.அழகிரி கருத்து




                                                            தலைவர் என் மீது இப்படியொரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று மு.க.அழகிரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.



                                                            தி.மு.க. தலைவரின் பேட்டி ஒளிபரப்பானபோது விருதுநகர் மாவட்டத்தில் இருந்த மு.க.அழகிரி, அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மதுரை திரும்பிய அவர், தன் வீடு முன்பு உள்ள அலுவலகத்தில் அமர்ந்து கருணாநிதியின் அந்தப் பேட்டியை டி.வி.யில் பார்த்தார். பின்னர் கோபம், வேதனை கலந்த முகத்தோடு வீட்டுக்குள் எழுந்து சென்றார் மு.க.அழகிரி.


                                                            கருணாநிதியின் பேட்டிக்கு அவரது எதிர்விளைவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பகல் 1.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் அவரது வீட்டு முன் திரண்டனர். ஆனால், அழகிரி வீட்டில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.


                                                            பின்னர் மாலை 5 மணிக்கு அழகிரி பேட்டியளிக்க இருப்பதாக அனைத்து நிருபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை மீடியாக்காரர்கள் மைக் வைப்பதற்கு இரு டேபிள்கள் போட்டு, நிருபர்கள் அமர சேர்கள் போடப்பட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


                                                            மாலை 6 மணி அளவில் பத்திரிகையாளர்கள் முன் வந்தமர்ந்த மு.க.அழகிரி, கவலை தோய்ந்த முகத்தோடு பேச ஆரம்பித்தார். அவர் பேசியதாவது:


                                                            “உங்களுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன். நான் என்ன சொல்லப் போகிறேனோ அதை மட்டும்தான் நீங்கள் எழுதிக்கொள்ள வேண்டும். ஆரம்பிக்கலாமா? என்று கேட்டுவிட்டு மளமளவென பேச ஆரம்பித்தார். அவரது பேட்டி.


                                                            இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வெளியான தலைவரின் பேட்டியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன் என்றால் பழியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது குற்றச்சாட்டை பிறந்தநாள் வாழ்த்து சொன்னதாக ஏற்றுக்கொள்கிறேன்.


                                                            சஸ்பெண்ட்தான் பரிசு


                                                            ஜன. 24-ம் தேதி காலையில் நான் தலைவரைச் சந்தித்து பல நியாயங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களுடைய குற்றச்சாட்டுகளையும், ஒன்றிய செயலாளர்களுடைய குற்றச் சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைவரிடத்தில் காட்டினேன். அதற்குக் கிடைத்த பரிசுதான் என்னைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நியாயத் துக்காக, தொண்டர் களுக்காகப் போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்துள்ளது.


                                                            பேக்ஸ் மூலம் தகவல்கள்


                                                            ஆனால், அன்றைய தினம் என்னை கட்சியில் இருந்து விலக்கியபோது பொதுச் செயலாளர் அவர்கள், என்னை விலக்கியதற்கான காரணங்களை எல்லாம் சொல்லியிருந்தார். அவர் சொன்ன காரணங்கள் எதிலும், தற்போது தலைவர் சொன்ன குற்றச்சாட்டுகள் இல்லை. இப்போதுகூட பொதுச் செயலாளர் என்னிடம், ‘ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் கட்சிக்குச் சொல்லாமல், நேரடியாக தலைவரிடம் சொன்னீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.


                                                             உள்கட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள் மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. பல மாவட்டச் செயலாளர்கள் இதுகுறித்து என்னிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக தொண்டர்களுடைய, ஒன்றியச் செயலாளர்களுடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவாலயத்துக்கு பேக்ஸ் செய்யப்படுகின்றன. ஆனால், அவை எல்லாம் மறைக்கப் படுகிறது. தலைவர், பொதுச் செயலாளர் பார்வைக்கே போய்ச்சேருவதில்லை. அதனால் தான் அறிவாலயத்தில் போய் சொல்வதைவிட, நேரடியாகத் தலைவரிடம் சொல்லலாம் என்றுதான் நான் வீட்டுக்கே சென்று தலைவரிடம் சொன்னேன்.


                                                            பரிசீலனை தேவை


                                                            நான் மீடியாக்களிடம் பேசு வதையும் ஒரு குற்றச்சாட்டாகக் கூறியுள்ளார்கள். ஆனால், என்னை சஸ்பெண்ட் செய்த பிறகுதான் மீடியாக்களிடம் பேசவே ஆரம்பித்தேன்.


                                                            மதுரை வருவதற்கு முன்பு 26-ம் தேதி துரைமுருகனையும் அவரது இல்லத்தில் சந்தித்து, அவரிடமும் இந்தப் புகார்கள் குறித்து விளக்கி நியாயம் கேட்டேன். இதை எல்லாம் பரிசீலிக்குமாறு கூறினேன்.


                                                            இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (அழகிரியின் கண்கள் கலங்கின. கண்ணீர் திரண்டது) நான் என்றைக்குமே தொண்டர்கள் பக்கம்தான் இருப்பேன். அவர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். தலைவர் நல்லா இருக்கணும், நல்லா வாழணும். (இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் இருந்து அழகிரியின் பேட்டியை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த துரை தயாநிதி, வேகமாக வெளியே வந்து பி.எம்.மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகளின் காதில் ஏதோ சொன்னார். (உடனே, அவர்கள் அழகிரியைத் தொட்டு பேட்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தார்கள்)


                                                            100 ஆண்டுக்கு மேல் வாழணும்


                                                            தலைவர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும். அவருக்கு முன்னால் நாங்கள் இறந்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.


                                                            இதைத்தான் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினேன். அவருடைய கண்ணீர் என்னுடைய பிணத்தின் மீது விழவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று சொல்லி முடிக்கிறேன்” என்று கூறிய அழகிரி விருட்டென எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால், தலா 10 கேள்விகளுடன் வந்திருந்த அனைத்து நிருபர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.


                                                            காரியாபட்டியில் ஆலோசனை


                                                            முன்னதாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அழகிரி,. மாவட்ட துணைச் செயலர் எஸ்.எம்.போஸ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.


                                                            அதன் பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, “எஸ்.எம்.போஸ் அண்ணன் மகன் திருமண விழாவுக்கு வர முடியாததால் இப்போது வந்தேன். தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை நீங்களே பார்க்கிறீர்கள். தென்மாவட்டங்களில் தொண்டர் களின் எழுச்சிக்கு என்னுடைய நடவடிக்கைகளே காரணம்" என்றார்.




                                                            • நல்ல நாடகம் பாஸ் எல்லாரும் நம்பிட்டாங்க
                                                              about 17 hours ago ·   (9) ·   (0) ·  reply (0)
                                                              •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
                                                                உங்கள் தலைவரையும் அவரது நாடகங்களையும் நன்கு அறிவீர்கள்! ஐந்து நாட்கள் கழித்து பேட்டி கொடுப்பது கூட விஜயகாந்தின் விருப்பம் ஸ்டாலின் வழியாக வந்ததன் விழாவாகக் கூட இருக்கலாம். அவசரம் வேண்டாம். அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்பதை மக்களுக்கு நீங்கள் புரிய வைப்பதில்தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும். உங்கள் குருவும் தந்தையாருமான தலைவரது கடந்த 40 ஆண்டு பேட்டிகளைப் போட்டுப் பார்த்து தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் ஆற்று நீர் போல யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் (தேக்கக்கூடாது) துதிபாடிகளை மட்டும் தள்ளி வைத்தால் உங்களுக்கும் அரசியல் எதிர்காலம் உண்டு. இப்பவே முன்னுக்குப் பின் மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
                                                                about 12 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
                                                                •  mano.k k from Bangalore
                                                                  மதுரை மன்னனே. அஞ்சா நெஞ்சனே.. பொருத்தது போதும் . பொங்கி எழுங்கள் அண்ணனே.. அரம்பியுங்கள் போட்டி தி. மு. க ? உடையட்டும் கட்சி. வாழட்டும் தமிழக மக்கள்..
                                                                  about 11 hours ago ·   (7) ·   (0) ·  reply (0)
                                                                  •  Vaidhyanathan Sankar from Chennai
                                                                    கடமை,கண்ணியம் ,கட்டுப்பாடு என்று முழங்கும் இவர்களின் வீட்டு விவகாரங்கள் வீதிக்கு வந்தது வியப்பிலும் வியப்பே.
                                                                    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                                    • இன்னுமா தமிழகம் ஒங்கள நம்புது !
                                                                      about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                                                      •  shanmugam.k from Chennai
                                                                        ஹா,ஹா,ஹா,,,,ஹி,ஹி,ஹி ,,,இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்போது பிரிச்சு நாட்டுக்கு ஒப்படைக்கபோகிறீங்க
                                                                        about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                                        •  ram from Chennai
                                                                          தாய் நாலடி பாய்ந்தால் ... குட்டி 14 அடி பாயும் .கலைஞர் வாரிசாட்சே சும்மாவா ! மெகா தொடர் போய்கிட்டிருக்கு . மக்களுக்கும் செய்தி ஊடகங்களுக்கும் நல்ல விறுவிறுப்பான பொழுதுபோக்குதான் ,a

                                                                        நன்றி - த தமிழ் இந்து

                                                                        கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில்

                                                                        1.காங்கிரசில் எல்லோரும் குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்- ஞானதேசிகன் # கரகோஷம் கூட எதிரொலிக்காதுங்க்ணா.ஒரு கை ஓசை எப்டி?



                                                                        ================



                                                                        2  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்...# கோச்சடையான் ரிலீஸ் ஆனா எத்தனை பேர் மொட்டை போட்டுவாங்க்ளோ?



                                                                        =======================



                                                                        3 ஓடும் ரெயிலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகாரிக்கு நிரந்தர படுக்கை வசதி# படுத்துத்தூங்கிடுவாரு! யார் கிரிமினலை பிடிப்பாங்க?



                                                                        ===========================



                                                                        4 ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை # நம்ம பொருளாதாரக்கொள்கையே சந்தி சிரிச்சுக்கிடக்கு.




                                                                        ============================ 



                                                                        5 மதுரை தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் அதிரடி நீக்கம்: -அன்பழகன் . # மொத்தமாவே அஞ்சா நெஞ்சனுக்கு 5 பேர் தான் ஆதரவு போல 



                                                                        ================================



                                                                        6 இந்திய பொருளாதாரம் இயற்கையிலேயே பெண் தன்மை கொண்டது: ஆடிட்டர் குருமூர்த்தி # அதான் நம்ம வசப்பட மாட்டேங்குதா?




                                                                        ==========================


                                                                        7  இளையராஜாவுக்கு இசையமைக்க தெரியாது - சாரு நிவேதிதா !# பச்சை பச்சையா எழுதறவர் பொய் சொல்ல மாட்டாரு.அண்ணன் சட்டையைப்பாத்தீங்களா?ப்ளூ கலரு



                                                                        ===========================


                                                                        8  மு.க. அழகிரி நீக்கத்தால் குடும்ப அரசியல் பழி நீங்கியது: கி.வீ # ஓரவஞ்சனைப்பழி ஓரமா வந்து ஒட்டிக்குச்சே?



                                                                        ===========================



                                                                        9  விஜய்காந்த்துடன் கூட்டணிக்காக அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய மு க# கருப்பு MGRருக்காக சிவப்பு கருணாநிதியைக்கட்சியை விட்டு துரத்துவதா?



                                                                        ========================



                                                                        10அழகிரி நீக்கத்தால் திமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது -்மு க # கழகத்தின் அகராதியில் திமுக = ஸ்டாலின் .அவர் வளர்ச்சிக்கு பாதிப்பில்லை

                                                                        ===========================



                                                                        11 3வது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி # காலை வாரி விடுவது ,ரைடு விடுவதுன்னா பொண்ணுங்க தான்யா சாம்பியன்



                                                                        ==========================


                                                                        12 போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி. # போகி போகி வயிறு எரியும்



                                                                        =======================



                                                                        13 அழகிரி நீக்கம் மூலம் திமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது - கி வீரமணி # அடடா அதைத்தான் ஆல்ரெடி கமல் எடுத்துட்டாரே? மெனக்கெட்டு ஏன் திமுகவும்?



                                                                        =======================



                                                                        14 கூட்டணி பற்றி தேமுதிக விடம் இருந்து பதில் வராததற்கு நான்.பொறுப்பல்ல - மு க # யானை பள்ளத்தில் போய் படுத்தா தரை மட்டம்



                                                                        ======================


                                                                        15  திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் - ஜவாஹிருல்லா எம் எல் ஏ # அவர் வருவாரா? உடைந்து போன கட்சியை ஒட்ட வைக்க அவர் வருவாரா?



                                                                        ====================



                                                                        16  திமுகவின் சொத்தை சிலர் அபகரிக்கப்பார்க்கிறார்கள் - அழகிரி # விட்ராதீங்கண்ணே! நமக்கு மானம் மரியாதையை விட சொத்து தான் முக்கியம்


                                                                        ========================



                                                                        17 அழகிரியின் நீக்கம் திமுகவை பாதிக்காது - மு க # திமுக பெற வேண்டிய வெற்றியை பாதிக்கும்



                                                                        ========================


                                                                        18 சிதம்பரம் கோயில் வளாகத்திற்குள் காரில் வந்து ஜெயேந்திரர் தரிசனம் # கார் காலம்னு சமாளிக்க வழி இல்ல.மாட்டுனாரு


                                                                        ========================




                                                                        19 கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில் தொடங்கியது! # பள்ளிக்கூடம் போகலாமா?,அதுக்கு பாஸ்போர்ட்ட வாங்கலாமா?



                                                                        =======================


                                                                        20  திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது! - மு.க.அழகிரி # ரொம்ப லேட் பிக்கப்ண்ணே நீங்க



                                                                        ===================================

                                                                        Tuesday, January 28, 2014

                                                                        தெகல்கா தருண் தேஜ்பால் vs பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்

                                                                        கடந்துபோன ஆண்டு பல வகைகளில் நம்மைப் பாலியல் வன்முறை பற்றிய புரிதலை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. சட்ட வரையறைகளின் போதாமைகள் பற்றியும் பொதுபுத்தியின் கயமைகளைப் பற்றியும் ஊடகங்களின் பரபரப்புச் செயல்பாடுகளைப் பற்றியும் அது நம்மை விவாதிக்க வைத்துள்ளது. ஏராளமான மக்கள் தெருவில் இறங்கிப் பாலியல் வன்முறைக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள். இரு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இவை முக்கியமானவை.



                                                                        குறிப்பிட்ட சில சம்பவங்களில்தான் இப்படிப்பட்ட போராட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஆதங்கமும் கோபமும் பலருக்கும் இருந்தாலும் இந்த விவாதம் வன்முறைக்கு எதிரான பெண்களின் வரலாற்றுப் போராட்டத்தில் அதனளவில் ஒரு முன்னோக்கிய அடி என்பதை நாம் மறுக்க முடியாது.


                                                                        இந்தப் புரிதலைப் பல பெண்கள் தம்மீது, தம் உடல்மீது, தம் மாண்பின் மீது பலத்த காயங்களைச் சுமந்துகொண்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது இதில் முதன்மையான விஷயம்.


                                                                        தெகல்கா இதழில் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால்மீது தெகல்காவின் இளம் பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்தான் இந்த விவாதத்தின் இப்போதைய முக்கியச் செய்தி.


                                                                        முதல்நாள் இரவு தேஜ்பால் தெகல்காவிலிருந்து விலகுகிறார் என்று செய்தி வந்தது. “ஒரு தவறான புரிதலில் எடுத்த முடிவு பொருந்தாத செயலாக மாறி இப்போது நாம் நம்பும் அனைத்தையும் பிரச்சினைக் குள்ளாக்கியிருக்கிறது. அந்தச் செய்தியாளரிடம் நான் ஏற்கனவே நிபந்தனைகளற்ற மன்னிப்புக் கோரிவிட்டேன். பரிகாரம் வெறும் வார்த்தைகளால் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னைச் சாட்டையால் அடிக்கும் தவத்தை நான் மேற்கொள்ள வேண்டும். எனவே நான் அடுத்த ஆறு மாதத்திற்குத் தெகல்கா வின் ஆசிரியர் பதவியிலிருந்தும் தெகல்கா அலுவலகத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ளும் முடிவை முன்வைக்கிறேன்” என்ற ஒரு ‘இலக்கியத்தரம் வாய்ந்த சுயபரிசோதனை, சுய தண்டனை மற்றும் சுய தீர்ப்பை’ எழுதிச் சம்பவத்தை முடிக்க அவர் முற்பட்டார்.




                                                                        தெகல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் பொதுவெளியில் பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் குரல் கொடுத்து வந்தவருமான ஷோமா சௌத்ரியிடம் பாலியல் வன்முறைப் புகாரை அந்த நிருபர் அளித்தார். அதன் நகலும் வெளியானது.
                                                                        கோவா போலிஸார் நடவடிக்கையைத் தொடங்கிப் பிரச்சினையைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு சென்றதும் தேஜ்பாலின் தரப்புப் புகார் அளித்த பெண் நிருபரின் மீது அவதூறுகளைவீச ஆரம்பித்தனர்.


                                                                         அதுதானே நம் தேசிய பண்பாடு! அந்தப் பெண்ணின் விருப்பத்தோடுதான் கோவாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லிஃப்டில் 'அவர் வேண்டாம் என்று மறுத்தும்' தான் அவரிடம் “பொருந்தாத” செயலில் ஈடுபட்ட தாகத் தேஜ்பால் சொன்னார். கோவா போலிஸ் அவரை விசாரிக்க முயற்சி செய்தவுடன் தேஜ்பால் ஆதரவாளர் கள் என்ற போர்வையில் இலக்கியவாதிகளும் பத்திரிகை யாளர்களும் அவருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்திச் சமூக வலைதளங்களிலும் பத்திரிகை களிலும் அவதூறுகளை அள்ளித்தெளிக்கத் துவங்கினர்.



                                                                        ஒரு குற்றம் நடந்ததற்குப் பாதிக்கப்பட்டவரையே காரணமாக்குவது ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடு. தருண் தேஜ்பாலும் அவரது ஆண் நண்பர்களும் இலக்கிய மற்றும் பத்திரிகை சகாக்களும் அவருக்கு வக்காலத்து வாங்குவது அவர்களின் 'புரிதலின் உணர்வு நிலையின்' வெளிப்பாடு.



                                                                        இந்த அவதூறுகளுக்குச் சட்ட ரீதியாகவும் பெண்ணிய நோக்கிலும் பதில் சொல்ல முடியும், பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
                                                                        தேஜ்பால் மீது பாலியல் குற்றத்திற்கான குற்றச்சாட்டை அளித்துள்ள இளம் பத்திரிகையாளர் தன் அறிக்கையில் குறிப்பிடுவது:



                                                                        “கடந்த இரு வாரங்களாக எனக்குக் கிடைத்துள்ள பரந்துபட்ட ஆதரவு என்னை நெகிழச் செய்துள்ளது. அதேசமயம் என்னுடைய புகாரை ஒரு தேர்தல் கால அரசியல் சதியாகச் சித்திரிக்கும் முயற்சிகள் என்னை மிகவும் பாதிக்கின்றன. என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். கீழ்க்காணும் வாதங்களை வைக்கிறேன்.



                                                                        பெண்கள் தங்களுடைய வாழ்வையும் தங்கள் உடல்களையும் தமக்கானதாக அவற்றின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தும் போராட்டம் நிச்சயமாக ஒரு அரசியல் போராட்டம்தான். ஆனால் பெண்ணிய அரசியலும் அதன் கவலைகளும் நம்முடைய குறுகிய கட்சி அரசியல் உலகத்திலிருந்து மிகவும் விரிந்து பரந்தவை. எனவே பாலினம், அதிகாரம் மற்றும் வன்முறை குறித்து எழும் ஒவ்வொரு முக்கிய விவாதத்தையும் தங்களைப் பற்றிய ஒன்றாக மாற்ற முனையும் அரசியல் கட்சிகளின் உளவேட்கையை அவர்கள் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”




                                                                        ஆனால் இந்தச் சர்ச்சைகளிலும் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சர்ச்சைக்குப் பதிலாக நிலவும் ஒரு கனத்த நிசப்தத்திலும் ஒரு விஷயத்தைப் பார்க்கத் தவறுகிறோம். அது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் வலி. இந்த வலி உடல்ரீதியாக மனரீதியாக அவர்களை ஆழ்த்தும் நிராதரவான, தனிமையான துக்கம் நிறைந்த வெற்றிடம் நம்முடைய விவாதங்களில் கவனம் பெறுவதேயில்லை.



                                                                        தெகல்கா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட இளம் நிருபர் தான் மிகவும் மதித்த தன் தந்தையின் நண்பரான தன் தோழியின் தகப்பனான, எழுத்தாளர், இந்திய ஊடகவியலின் சூப்பர்மேன் என்று பலராலும் கருதப்படும் தேஜ்பாலால் மிகக் கீழ்த்தரமான முறையில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய புகார் கடிதங்களில் அவருடைய அதிர்ச்சியும் குழப்பமும் துயரமும் கோபமும் வெளிப்படுகின்றன.



                                                                        “ஓயாத வலிநிறைக்கும் இச்சம்பவத்தின் மிகக் கடினமான பகுதி இதற்கான சரியான வார்த்தை, வரையறையைக் கையாள்வதுதான். என்னை நான் ஒரு “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவளாக” பார்க்கத் தயாராக இருந்தேனா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள், உடன் பணிபுரிவோர், ஆதரவாளர்கள், எதிரிகள் அனைவரும் என்னை அப்படிப் பார்ப்பதை ஏற்கத் தயாராக இருந்தனரா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு குற்றத்தைப் பாதிக்கப்பட்டவர் வரையறுப்பதில்லை, சட்டமே வரையறுக்கும். இந்தச் சம்பவத்தில் சட்டம் தெளிவாக இருக்கிறது. தேஜ்பால் செய்தது சட்ட வரையறைப்படி பாலியல் வன்புணர்வுதான்.

                                                                        பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் அவற்றைத் தடுக்கப் புகார் அளிக்கும் தயக்கங்களில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் விவாதப் படுத்தியிருக்கிறார்.


                                                                        தேஜ்பாலின் மதவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளின் பேராலும் தெகல்காவின் சிறப்புமிக்க பத்திரிகைச் செயல்பாடுகளின் பெயராலும் தேஜ்பாலின் உலகத்தரம் வாய்ந்த எழுத்தின் பெயராலும் அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வலியை, துயரத்தைப் பற்றி ஒரு அணுவளவு புரிந்துணர்வும் இல்லாமல் புறந்தள்ளிக் கருத்துக்களை, அவதூறுகளை அள்ளிவீசுவது கீழ்த்தரமான ஆதிக்கச் செயல்பாடேயன்றி வேறெதுவும் இல்லை.


                                                                        எந்தக் கொம்பனையும் பெண் விஷயத்தை வைத்து வீழ்த்திவிடலாம் என்று ஒரு இளம் ஆண்பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். அதைப் படித்தால் இந்த ஆண்கள்தான் எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிற்கு வெளியே வந்து, தங்களைத் தூண்டிலில் சிக்கவைக்க ஓயாமல் அலையும் பெண்களின் பிடியில் சிக்காமல், பணிபுரிந்து வருகிறார்கள் என்ற பரிதாபம்தான் தோன்றுகிறது.



                                                                        ஊடகங்களில் பெண்கள்



                                                                        ஆண், பெண் பணிபுரியும் எல்லாத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. ஏனெனில் பாலியல் வன்முறை பாலியல் சார்ந்ததோ செய்யும் தொழிலால் தீர்மானிக்கப்படுவதோ ஆண்களின் மரபணுக்கோளாறோ மேலைக்கலாச்சார ஊடுருவலோ அல்ல. அது அதிகாரம் பற்றியது.



                                                                        ஆசிரியர்களாகவும் மருத்துவத் தாதிகளாகவும் இருப்பதே பெண்களுக்கு உகந்த பாதுகாப்பான வேலைகள் என்ற நிலை உடைபட்ட கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்கள் ஒரு பெரும் புயலென உள்நுழைந்து பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியத் தொழிலிலும் தாதிகளுக்கும்கூடப் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது அவர்கள் நடத்தும் போராட்டங்களிலிருந்து பார்க்க முடிகிறது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால்பதித்து முன்னகரும்போது அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உரியது என்று நம்பும் ஆண்களின் மேதாவித்தனங்களும் உடைந்து நொறுங்குகின்றன.

                                                                        தமிழக ஊடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண் நிருபர்களை மிகக் கேலியாகவும் ஏதோ அலங்காரப் பொருட்களாகவும்தான் தமிழ் ஆண்பத்திரிகையாளர்கள் தொடக்கக் காலத்தில் எதிர்கொண்டனர். உடை குறித்த பாலியல் ததும்பும் கேலியை எதிர்கொள்ளாமல் பெண்ஊடகவியலாளர்கள் ஒரு நாளைக்கூடக் கடக்க முடியாது.


                                                                         எழுதும் கட்டுரைகளோ தொகுக்கும் தொலைக்காட்சி செய்தியையோவிடத் தோற்றம், அவள் அணியும் உடை இவைக் குறித்துக் கிடைக்கும் வழிசல்கள்தான் அதிகம்.



                                                                        “சென்னைப் பெண்கள்லாம் பார்த்தாலே படுக்க ரெடி” “நீங்கள்லாம் இப்படி இறுக்கமா டிரெஸ் போட்டுட்டு வந்தா எப்படி மனுஷன் பிரஸ் மீட்ட கவனிக்க முடியும்?” “இப்படிக் கையத் தொடைமேல வச்சிப் பேசாதம்மா, என்னமோ ஆகுது எனக்கு.” செய்தி அறைகளில் எதிர்கொண்ட உரையாடல்களை இப்படி எழுதிக்கொண்டே போகலாம்


                                                                        .
                                                                        முதலில் வருவது அதிர்ச்சியும் அவமானமும்தான். யாராவது பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். நீங்காத அருவருப்பு பல நாட்களுக்கு உறுத்தும். அவநம்பிக்கையும் குற்ற உணர்ச்சியும் வந்து வந்து போகும்.



                                                                        ஆனால் இதுகுறித்துப் புகார் அளிப்பது அல்லது இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்வது என்பதுகூடப் பெரும்பாலும் சாத்தியமில்லை. அப்படிப் பேசுபவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் சாத்தியம். ஆனால் அப்படிப் பேசுபவர் செய்தி ஆசிரியராகவோ தலைமை நிருபராகவோ இருந்தால் அது வேலையில் ஒதுக்கப்படுவதிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் போய் முடியும். சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜாமீது அளிக்கப்பட்ட புகாரைப் பார்த்தால் இது புரியும். தொடர்ந்து அந்தச் செய்தி வாசிப்பாளர் அதிகாலை ஷிஃப்டிற்கு ஒதுக்கப்பட்டார் என்பது அவர் விலகிச்செல்ல முயன்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை.



                                                                        தெகல்காவின் பெண்பத்திரிகையாளருக்கும் ஒரு வாரம் தேவைப்பட்டது தன்மீது நிகழ்ந்த வன்முறையைப் புகாராகப் பதிவு செய்ய. இந்த மன உளைச்சலை, அலைகழிப்பை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலிமீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள சட்ட மாணவி தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.



                                                                        ஏ.கே.கங்குலி விவகாரமே அந்த மாணவி, அவர் தற்போது வழக்கறிஞர், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துக் கங்குலியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுதிய ஒரு வலைப்பதிவில்தான் வெளியில் வந்தது.



                                                                        “காந்தி ஒருமுறை கூறினார், ‘வாதங்களைவிட மிகப் பலம் வாய்ந்த ஒன்று என்னிடம் இருக்கிறது, அதன் பெயர் அனுபவம்’ என்று. இந்த வார்த்தைகளில் இருந்துதான் நான் எழுதும் இந்தப் பதிவிற்கான சக்தி, மதிப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய அனுபவம் மட்டுமல்ல, ஆனால் நம் நாட்டில் இப்போது நடந்துவரும் விவாதத்தில் அந்த அனுபவம் கொண்டுவரக்கூடிய வெளிச்சத்திலிருந்து இதை எழுதுகிறேன்”



                                                                        என்று தொடங்கி அவர் நாட்டின் மிக உயர்ந்த நீதிபீடமாகத் தங்களுடைய இறையாண்மையை மிகத் தெளிவாகக் கட்டிக்காத்துவரும் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கக் கட்டுமானத்தை அசைத்துப் போடப்போகும் தன் கட்டுரையைத் தொடர்கிறார். கடந்த டிசம்பர் மாதம் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கோரப் பாலியல் வன்முறையை எதிர்த்து வரலாறு காணாத ஒரு போராட்டத்தைத் தில்லி தன் வீதிகளில் கண்டது. அதே மாதத்தில் தன் கல்லூரி இறுதியாண்டின் விடுப்பில் சட்ட உதவியாளராக நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் பணிபுரிந்த அந்த மாணவி அவரின் தாத்தா வயதொத்த ஏ.கே.கங்குலியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அதை அவர் கடந்த நவம்பரில்தான் வலைப்பதிவாகப் பதிந்தார்.



                                                                        “ இந்தச் சம்பவத்தில் என்னைத் துன்புறுத்தியது எது? இந்தச் சமூகத்தின் வளர்ப்பான நான் அந்தப் பிரச்சினையிலிருந்து உடனடியாக வெளி யேறிவிட்டேன். ஆனால் அதுவா என்னை மிகவும் பாதித்தது? நான் 'ஏற்கவே முடியாத' ஒன்றை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்பதா என்னைப் பாதித்தது? நான் மிக அதிகமாக அதை யோசிக்க யோசிக்க எனக்குப் பிடிபட்டது இதுதான்.எனக்கு நேர்ந்ததைப் பற்றிப் பேசவோ ஏன் யோசிக்கவோ ஒரு கட்டமைப்போ மொழியோ எனக்குத் தட்டுப்படவில்லை என்பதுதான். என்னுடைய குழப்பத்தின் இயலாமையின் மையமாக இருந்தது.


                                                                         அந்தச் சம்பவம் என்னை ஆழமாகப் பாதித்த அதே நேரத்தில் எனக்கு அவர்மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. பதிலாக நான் பெரிதும் மதித்த ஒருவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது பற்றிய அதிர்ச்சியும் வலியுமே உணர்ந்தேன். எல்லையற்ற சோகம்தான் என்னை மிகத் தீவிரமாகப் பற்றிக்கொண்ட உணர்வு. ஆனால் இப்படிப்பட்ட மனநிலை எனக்குப் புதிதாக இருந்தது. இப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றிச் ‘சரியான’ எதிர்வினையாக நான் நினைத்திருந்தவற்றோடு முற்றிலும் மாறாக அவரின் செய்கைகளை நான் புரிந்துகொண்டு அவரை மன்னிப்பதும் இல்லையென்றால் நான் அவரை ‘நல்ல மனிதர்’ என்றே தொடர்ந்து நினைப்பதும் ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு என்று பட்டது.



                                                                        இந்த மனநிலை அன்று தில்லியில் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்திய தீவிரமான அறச்சீற்றத்திற்கு முன் முற்றிலும் வேறுபட்டும் இருந்தது.”
                                                                        தன்னை மிகவும் காயப்படுத்திய பாலியல் வன்முறையை எதிர்த்துத் தில்லி போராட்டக்காரர்களைப் போல் சீற்றத்துடன் தன்னால் எதிர்கொள்ள இயலவில்லை என்பதைக் குறித்துத் தொடர்ந்து அந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.



                                                                        இதேபோல் தெகல்கா விவகாரம் வெளியில் வந்த மூன்றாவது நாள் ஒரு பெண் பத்திரிகையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனக்கு ‘தி ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும்போது ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வலைப்பதிவு எழுதியுள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஒரு சீனியர் பிசினஸ் செய்தியாளர் குறித்துத் தான் அளித்த புகார்கள் பலனில்லாமல் போனது குறித்தும் எழுதும் அவர் “அது என்னுடைய முதல் வேலை, அதை விட்டால் எனக்கு வேலை கிடைக்காது என்று நான் அப்போது நினைத்ததால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியபோது அதை நான் நம்பினேன்.” அதற்குப் பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்ததாலும் அவரைத் தவிர வேறு பெண் நிருபர்களும் பாதிக்கப்பட்டதாலும் அந்த ஆண் செய்தியாளர் அவரிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தது என்று கூறும் அவர், “அத்தனை புகார்களுக்குப் பின்னும் அவர் வேலையில் இருந்து நீக்கப்படவில்லை. விடுப்பில் சென்று பின் ராஜினாமா செய்தார்” என்று குறிப்பிடுகிறார்



                                                                        . “என்னைப் பொருத்தவரை என் வாழ்வின் மிகக் கடினமான நாட்கள் அவை. அவர் என்னிடம் பேசியவை, என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் பட்ட நரகவேதனை. நான் புகார் அளித்தபின் என்னுடன் பணிபுரியும் ஆண்கள் என்னைப் பார்த்த விதத்தையும் நான் மறக்கமாட்டேன். சிலர் ‘அய்யோ நான் உன்னுடன் பேசமாட்டேன். நானும் துன்புறுத்தினேன் என்று நீ நாளை சொல்லிவிட்டால்’ என்று கிண்டல் செய்தார்கள். நான் வேலையை விட்டு விலகிய நாளில் பலர் என்னிடம் ‘நான் ஒரு பத்திரிகையாளரின் வேலையைக் கெடுத்து அவர் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறினார்கள்” என்று அவர் எழுதுகிறார். ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் மிகச் சாதாரணமாக நடைபெறுவதையும் ஊடகங்களின் பெண்வெறுப்பு மனநிலையையும் வெளிக்கொண்டுவந்திருக்கும் தெகல்கா விவகாரம் பெரும் பனிக்கட்டியின் ஒரு சிறு நுனிதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.




                                                                        இதுபோலப் பலரும் கடந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் அதுகுறித்த தங்கள் புகார்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாதது குறித்தும் பொதுவெளியில் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பலரும் படித்தவர்கள், சுய சம்பாத்தியமும் ஆளுமையும் உள்ளவர்கள்.



                                                                        ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலைப் பொதுவாக வெளியில் சொல்லத் தயங்கும் சமூகம் இது. மேலும் அதிர்ச்சியும் அவமானமும் வலியும் நிறைந்த இந்த அனுபவத்தைப் பேசுவதற்குக்கூட வெளியற்றதாகவே குடும்பக் கட்டமைப்பு இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் புகார் அளிக்க முன்வருவது மிகப் பெரிய விஷயம். இப்படியான துணிச்சலும் நியாய உணர்வும் உள்ள பெண்களின் கண்ணீரின் ரத்தத்தின் மேல்தான் பெண்களைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் எழுந்துள்ளன. இந்தச் சட்டங்கள்தான் ஓரளவிற்காவது நமது அரசு சமத்துவத்தை நம்புகிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும் சான்றுகள்.




                                                                        அதேசமயம் ஒரு வன்முறையைச் சந்திக்கும் பெண் மேலும் அதை வெளியில் சொல்லக்கூட முடியாமல் குமைந்து போவது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. ஒரு சமூகமாக நாம் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள பெண்களின் வலிகளைப் புரிந்துணர்வோடு பார்க்கப் பல ஒளிவருடத் தூரத்தைக் கடக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தப் பயணம் தொடர்கிறது. ஏனெனில் “எலிகளுக்குப் பூனைகளால் என்றைக்குமே விடுதலை கிடைக்கப் போவதில்லை.” அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விடுதலையைத் தவிர வேறெதுவும் போதுமானதில்லை.




                                                                        பாலியல் வன்முறை குறித்தும் பெண்கள் சுயாதீனமாகச் செயல்பட அவர்களுக்கு இருக்கும் மறுக்க முடியாத உரிமை குறித்தும் உடல்சார்ந்த வன்முறைகள் நிகழும்போது ஒரு பழமையான சமூகத்தில் தன் விடுதலையை நோக்கி அடியெடுத்துவைக்கும் பெண்கள் உணரும் வலிநிறைந்த அலைக்கழிப்புகள் குறித்தும் மிக அத்தியாவசியமான விவாதம் தொடங்கப்பட்டுள்ளது.



                                                                        பாலியல் வன்முறை அடிப்படையில் ஆண்-பெண் சமத்துவத்தை மறுக்கவும் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றவும் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட கருவி என்ற புரிதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேண்டும். பாலியல் வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் இதைப் பற்றிப் பேச ஒரு வெளியை, ஒரு மொழியை நாம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பான நம்பத்தகுந்த அமைப்புகள் வேண்டும். பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்ணின் உடல், மனவலிகளையும் காயங்களையும் புரிந்துணர்வோடு பார்க்கும் நாகரீகத்தையும் நியாய உணர்வையும் நம் சமூகம் பெற வேண்டும்.


                                                                        thanx - kaalachuvadu

                                                                        ராகுல் காந்தியின் சொதப்பல் பேட்டி யும் , பிரபல ட்வீட்டர்களின் காமெடி கும்மியும்


                                                                        ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ராகுல் நேர்காணல்

                                                                        'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது.


                                                                        இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார்.


                                                                        'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது நபராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார் ராகுல் காந்தி.


                                                                        இந்திய அரசியல் கட்டமைப்புகளில் ஏதோ தவறு இருப்பதாகவும், இந்தக் குறைபாடுகளால் அன்றாடம் மக்கள் அவதியுறுவதாகவும் தெரிவித்தார். அப்படிப்பட்ட அமைப்புகளை, தாம் வெறுப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் நிகழ்த்திய சாதனைகள் என பசுமைப் புரட்சி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையில் பட்டியலிட மறக்கவில்லை.


                                                                        ராகுல் காந்தி நேர்காணலில் மிகவும் வலுவிழந்த பகுதி என்றால், அது மோடி பற்றிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பகுதியே ஆகும். மோடி தொடர்பான கேள்விகளில் இருந்து தப்பிக்கவே ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டினார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்தாமல், அதை மேலும் தூண்டிவிட்டார் என்று கூறிய ராகுல், "இது மாதிரியான சம்பங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதைய தேவை என்னவென்றால், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே" என விவாதத்தின் போக்கையே மாற்றினார்.


                                                                        இதேபோல் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது, கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்காத ராகுல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது, ஆனால் குஜராத் கலவரத்தை தூண்டியதே பாஜகதான் என்றார்.


                                                                        மோடி மீதான அச்சத்தால் அவருடன் சரிசமமாக ஒப்பிடப்படுவதை தவிர்க்கிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு எந்தவித அச்சமும் இல்லை, தேர்தல் தோல்வி பயம் இல்லை; ஆனால் அரசியலில் தன் தந்தை அனுபவித்த துயரங்களையும், அவரது மரணத்தையும் எப்போதும் மறந்ததில்லை என்றார்.


                                                                        காங்கிரஸ் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்போதும் மெளனம் சாதிப்பது ஏன் என்றதற்கு, "இது தொடர்பாக என் கருத்துகள் அனைத்தையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து விட்டேன்" என்றார். இது, பிரதமரிடம் தாம் தெரிவித்துவிட்டதாகவும், பிரதமர்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குறைகூறும் தொணியில் பேசினார்.


                                                                        இப்படி எல்லா கேள்விகளுக்கும் தொடர்பு இல்லாமல், தெளிவான பதில் அளிக்காமல் பேசிய ராகுல் காந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்தன. ராகுல் சிறுபிள்ளை போல் பேசுவதாக கேலி செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, வியப்பூட்டும் வகையில் "நான் இப்போது இங்கே ஏன் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய கேள்வி" என்றார்.


                                                                        ராகுல் காந்தி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார் என டைம்ஸ் நெள சேனல் தெரிவித்திருந்தாலும், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அவர் தைனிக் பாஸ்கர் இந்தி பத்திரிகைக்கு பேட்டியளியிருந்தது குறிப்பிடத்தக்கது.\\\\

                                                                        ட்வீட்டாளர்களை ஜோக்காளர்களாக்கிய ராகுல் பேட்டி!




                                                                        மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'டைம்ஸ் நெள' சேனலுக்கு அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ இல்லையோ... இணையவாசிகளின் கற்பனைத் திறனுக்கு ஊக்கியாக இருந்திருக்கிறது.




                                                                        குறிப்பாக, சமூக வலைத்தளமான ட்விட்டரில், ட்வீட்டாளர்கள் ஜோக்காளர்களாகி, நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான ட்வீட்களால், ராகுலை ட்ரெண்டிங்கில் வலம் வரச் செய்தனர்.


                                                                        ட்விட்டரின் டாப் 10 ட்ரெண்ட்டிங்கில்

                                                                         முதல் 8 இடங்களை ராகுலே ஆக்கிரமித்திருந்தார். #RahulSpeaksToArnab | #ArnabVsRahul | #FranklySpeaking | #ComedyNightsWithPappu | Pappu | RTI | Women Empowerment முதலான ஹேஷ்டேகுகள் ஏற்றத்தில் இருந்தன.
                                                                        ராகுல் பேட்டியைத் தொடர்ந்து வந்த எண்ணற்ற ட்வீட்களில் மிகவும் பிரபலமானவற்றில் சில இங்கே:


                                                                        நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், ராகுல் காந்தி,

                                                                        அது இது எது நிகழ்ச்சியின் மாத்தி யோசி சுற்றை விளையாடிக்கொண்டிருந்தார்.


                                                                        @Chingakutty

                                                                        அர்னாப்: நம் தேசத்தை ஏலியன்கள் படையெடுத்தால் என்ன செய்யலாம்?
                                                                        ராகுல்: காங்கிரஸ்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


                                                                        @TheUnRealTimes

                                                                        வாழ்க்கை உங்களுக்கு ராகுல் என்ற பெயரைத் தந்தால்,
                                                                        அதோடு டிராவிட்டை இணைத்துக் கொள்ளுங்கள்
                                                                        காந்தியை அல்ல


                                                                        @dhiry2k

                                                                        இன்று, நாம் அனைவரும் ஞானவான்கள் ஆனோம்.
                                                                        எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்மிடம் பதில் உள்ளது.
                                                                        "பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தகவல் அறியும் உரிமை சட்டம்"


                                                                        @Viram

                                                                        இந்த ராகுல் காந்தி பேட்டியில் கேள்விகள் இருந்தன,
                                                                        பதில்களும் இருந்தன


                                                                        ஆனால் இரண்டுக்குமான தொடர்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


                                                                        @bhogleharsha

                                                                        ராகுல் காந்திட்ட உங்க பேரு என்னன்னு கேட்டா கூட 'empowering the women'ன்னு பதில் சொல்லுவாரு போல! :>


                                                                        @BalaramanL


                                                                        ஆர்.டி.ஐ-இன் விரிவாக்கத்தைக் கேட்காமல் இருந்து,
                                                                        ராகுல் காந்தியை தர்மசங்கடப்படுத்தாமல் விட்டதற்கு
                                                                        அர்னாப் கோஸ்வாமிக்கு பத்மபூஷண் விருது கொடுக்க வேண்டும்


                                                                        @arnab_chak


                                                                        இந்த பேட்டி என் கல்லூரி பிராக்டிகல் தேர்வுகளை ஞாபகப்படுத்துகிறது.
                                                                        'நீ என்ன கேள்வி கேட்டாலும் எனக்குத் தெரிந்த பதிலைத் தான் சொல்லுவேன்'


                                                                        @it_saurabh


                                                                        ஒவ்வொரு முறையும் காங்கிரஸ், நரேந்திர மோடிக்கு தோண்டும் குழியில்
                                                                        ராகுல் காந்தி குதிக்கிறார்


                                                                        @rishibagree


                                                                        ராகுல் காந்தி அவர்களே, 2+2 எவ்வளவு?


                                                                        அர்னாப், பெண்கள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும். அரசியலை மாற்ற வேண்டும். அடுத்த கேள்வி?


                                                                        @maheshmurthy

                                                                        அடிப்படை பிரச்சினை என்னவென்றால்,
                                                                        ராகுலுக்கு முதல் கேள்வி புரியும்போது
                                                                        அர்னாப் 3-வது கேள்வியை கேட்டு முடிக்கிறார்.


                                                                        @reviewero


                                                                        நம் நாட்டில் உள்ள பெண்கள் ஜனத்தொகையை விட அதிக முறை
                                                                        'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்' என்கிற வார்த்தைகளை ராகுல் காந்தி இப்போது சொல்லிவிட்டார்


                                                                        @i_Psycho


                                                                        இது இரு வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போல் உள்ளது.
                                                                        அர்னாபின் கேள்விகள், ராகுலின் பதில்கள்.


                                                                        @gauravkapur


                                                                        மோடிக்கு, பேச விருப்பமில்லை
                                                                        ராகுலுக்கு, பேசத் தெரியவில்லை
                                                                        கேஜ்ரிவால், பேச்சை நிறுத்தவில்லை


                                                                        @daddy_san


                                                                        அர்னாப்: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
                                                                        ராகுல்: கோழிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், முட்டைக்கு தகவல் அறியும் சட்டத்தைத் தரவேண்டும்.


                                                                        @chandana

                                                                         நன்றி - த தமிழ்  இந்து 

                                                                        எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு

                                                                        1. முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய் # இரட்டை இலைக்கு மேட்ச் க்கு மேட்ச்?



                                                                        =====================


                                                                        2 காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது: ஞானதேசிகன்"#,சிங்கம் தான் சிங்கிளா இருக்கும்.காங்கிரஸ் கோஷ்டியோட கூட்டமாத்தான் இருக்கும்



                                                                        ======================



                                                                        3 எப்படி ஏளனம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் -ராமதாஸ்.# .என்ன ஓட்டு வேணாலும் ஓட்டிக்குங்க.ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்கங்கறாரா?



                                                                        =====================



                                                                        4கும்பகோணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கட்டி போட்டு நகை கொள்ளை.# செலவுக்குப்பணம் கேட்டு சம்சாரம் தர்லைனா ஆளை வெச்சு இப்டி புடுங்கிக்கனும்



                                                                        ==========================


                                                                        5  சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளவேணாம்-மத்ய அரசு # கட்டுன பணத்தை எல்லாம் ஜில்லா வாரியா திருப்பிக்கொடுத்துடற மாதிரி


                                                                        ======================


                                                                        6 பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி # வாக்கு சேகரிக்க மட்டும் கறிவேப்பிலையா பயன்படுத்திக்குவீங்க?



                                                                        ======================



                                                                        7 பிறந்தநாள் வரை அமைதி காக்க தொண்டர்களுக்கு மு.க.அழகிரி வேண்டுகோள்..# அதுக்குப்பின் பொங்கல் வைக்கப்போறாரா?



                                                                        ===========================



                                                                        8 என்னை நீக்கியதால் நஷ்டம் பூராவும் திமுகவுக்குத்தான்.-் மு.க.அழகிரி # லாபம் பூரா எனக்குத்தான் - ஜெ



                                                                        =====================



                                                                        9 இயற்கை உணவுகளால் 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா! # மெகா சைஸ் அப்பளமா இருந்தவர் மிளகாய் வத்தலா சுருங்கிட்டா எவன் பாப்பான்?


                                                                        ======================




                                                                        10 பாரீஸ்: 80 முறை கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது # ஒரு தடவை யே சரியா எந்த வேலையையும் இந்த பொம்பளைங்க செய்யமாட்டாங்க போல



                                                                        =======================



                                                                        11 ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம்ஸ்ட்ரைக் # ஏன்? நீங்க சத்தம் இல்லாம ரீமேக்கி காசு பாக்கனுமா?


                                                                        ====================



                                                                        12 பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி # நல்ல வேளை எஸ் ஜே சூர்யா இயக்கலை



                                                                        ======================



                                                                        13 இந்தியாவுடன் நெருக்கம் : ஜப்பான் விருப்பம் # ஏற்கனவே இந்தியா ஒரு தீபகற்ப நாடு என்பதை நினைவில் கொள்ளவும் , ஜப்பான், நிப்பான், தப்பான்



                                                                        ========================



                                                                        14 பிப்ரவரியில் ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா திருமணம் # என்ன . இந்த வருசம் நடிகைங்க மேரேஜ் ஸ்பெஷலா? ஆளாளுக்கு தாலி கட்டிக்கறாங்க ?



                                                                        ================



                                                                        15 தனிமையில் வாழவே விரும்புகிறேன் : சல்மான்கான் # பகல் ல தானே?


                                                                        ==================



                                                                        16  விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி # அடடா, அப்போ இனி கில்மாப்பாட்டு எழுத மாட்டீங்களா?



                                                                        ====================


                                                                        17 நேபாளத்தில் சுஷில் கொய்லாரா புதிய பிரதமராகிறார்...# மணீஷா கொய்ராலா பரம்பரையோ?


                                                                        =================



                                                                        18  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 👉இந்தியாவுக்கு காங்கிரசிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும்🎆 -எடியூரப்பா"#சரி.உங்க



                                                                        ளுக்கு என்ன கிடைக்கும்?


                                                                        ===================




                                                                        19  ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு # சிம்பு ,ஆர்யா யுவர் அட்டென்சன் ப்ளீஸ்



                                                                        ===================



                                                                        20 எனக்கு பதவி ஆசை இல்லை: ராகுல்  #  பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசை எல்லாம் துறந்த துறவியே! அதிசயப்பிறவியே!ஓடாத புரவியே!






                                                                        ================================

                                                                        தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு.....

                                                                        1. கூட்டணி யே இன்னும் முடிவாகலை .அதுக்குள்ள கருத்துக்கணிப்பு வர ஆரம்பிச்சிடுச்சு # குத்து மதிப்பு குருசாமிகள் ,இந்தியா.டு டே


                                                                        ==================


                                                                        2 அனுஷ்கா ரசிகனின் டைரி வாசகம் - அனு தினமும் அனு தினமே!



                                                                        ====================



                                                                        3 டி பி ல நாம கலராத்தெரியனும்னா ஆரஞ்சு பல்பை எரிய விட்டு எதித்த மாதிரி நின்னு போட்டோ எடுத்துக்கனும் போல ;-))



                                                                        =====================



                                                                        4 பொண்டாட்டி பெட்டர் ஆப் னா மச்சினி யை பெஸ்ட் குவாட்டர் னு சொல்லலாமா? னு ஒரு குடிமகன் கேட்டாரு



                                                                        ======================



                                                                        5 ரம்மியும் காதலும் ஒண்ணு: 'ரம்மி' இயக்குநர் பாலகிருஷ்ணன் # ஆமா சீட்டாட்டத்துல ரம்மி சேர்றதும் , வாழ்க்கைல காதலர் சேருவதும் கஷ்டம்



                                                                        ==================



                                                                        6 டி எல் ல 17 டாக்டர்கள் பாலோ பண்றாங்க.இதுல சோகம் என்னன்னா ஒரு நர்ஸ் கூட பாலோ பண்ணலை



                                                                        =================


                                                                        7 சிவபெருமான் நேத்து நைட் போன் பண்ணாரு.சுமங்கலிப்பெண்கள் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறுனா தீர்க்க சுமங்கலி ஆகிடுவாங்களாம்



                                                                        =================


                                                                        8 சந்தன மரத்தில் கருநாகப்பாம்பு ஏறுவதைப்போல் உன் முதுகில் ஜடை



                                                                        ==================


                                                                        9 ஆபீஸ்லயே லஞ்ச் சாப்பிட்டா லஞ்ச் டைம் அரைமணி நேரமாம்.வெளில போய் சாப்ட்டா 1மணி நேரமாம் # டிபனை ஆபீஸ் திண்ணைல வெச்சு சாப்ட்ரனும்



                                                                        ====================


                                                                        10 பஸ் ல ஏறும் பிகர்ஸ் ல U நெக் ஜாக்கெட் பிகர் ,Vநெக் ஜாக்கெட் பிகர் எத்தனை ஏறுதுனு பாய்ன்ட் போட்டு விளையாடிட்டிருக்கோம் #,உருப்புட்ருவோம்


                                                                        ==================



                                                                        11 பொதுவா பொண்ணுங்க பேசும்போது தலையை ஆட்டி ஆட்டி பேசுவாங்க.ஜிமிக்கி அணிந்த பெண்கள் இன்னும் அதிகமா #,அடுத்த டைம் நோட் பண்ணிப்பாருங்க


                                                                        =============


                                                                        12   பெண்ணிடம் பேசும்போது நாமா ஒரு டாபிக்கை ஆரம்பிக்கக்கூடாதாம்.அவங்க ஆரம்பிக்கும் மொக்கை டாபிக் க்கு ம் குடுத்தா போதுமாம் # லேடீசாலஜி



                                                                        =====================



                                                                        13  பெண்கள் கைக்குட்டை பயன்படுத்தும்போது மைனா தன் அலகை துடைப்பது போல் கவிநயத்துடன் இருக்கும்


                                                                        ==================


                                                                        14 உன் பக்கம் நியாயம் இருந்தாலும் ஆபீசில் உயர் அதிகாரிகளிடம் குரல் உயர்த்திப்பேசாதே # ஆபீஸ் விதி



                                                                        ==============



                                                                        15 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பேஷன் கற பேர் ல அழகிய நீள மயில் தோகைக்கூந்தலை பாப் கட்டிங்கா மாத்திக்கறதில் என்ன நன்மைன்னா ஆயில் செலவு மிச்சம்


                                                                        ====================



                                                                        16 பீக் அவர் காலை 7 டூ 9 என்று தெரிந்தும் அந்த நேரத்தில் வெளியே போய் " அப்ப்ப்பா ஒரே டிராபிக் நெரிசல் "என சலித்துக்கொள்பவன் தான் தமிழன்



                                                                        ====================



                                                                        17 ஓவர் லோடு ஏற்றுவதைத்தடுக்க ஒவ்வொரு படகிலும் மேக்சிமம் கெப்பாசிட்டி எத்தனை பேரை ஏத்தலாம்னு எழுதி வைக்க அரசு உத்தரவிடனும்



                                                                        =====================



                                                                        18 தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு தன்னை பேர் சொல்லிக்கூப்பிட்டாக்கூட கோபப்படமாட்டான் தமிழன்



                                                                        ==================================



                                                                        19 விமானத்தில் பயணிக்க பறவை போல் பறக்கத்தெரிய்த்தேவை இல்லை.ஆனா படகு ,கப்பல் ல பயணிக்க மீன் போல் நீந்தத்தெரிஞ்சிருக்கனும்



                                                                        ======================




                                                                        20  பொண்ணுங்க வர்ற நேரத்துக்குஅலாரம் வெச்சு எந்திரிச்சு வணக்கம் வெச்சு 10 நிமிசம் கடலை போட்டுட்டு பின் போர்வையைப்போத்தி தூங்குபவன்தான் தமிழன்



                                                                        =============================