Thursday, January 09, 2014

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? (பொங்கல் ஜல்லிக்கட்டு)

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா?: பொங்கல் ஜல்லிக்கட்டு கவுண்டவுன் ஸ்டார்ட்!

எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...

* "விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.

* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.

* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் "சபாஷ் சரியான போட்டி" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.


* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. "இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றும், "அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.

* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார். மதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால். தனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார். அது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை.

* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள். தம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.


* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.

Current events
* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.


* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.

* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.

* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.


* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.

* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.

* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.

* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார்? அல்லது இருவருமா? நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும். 


thanx - dinamalar

'வீரம்' - முன்னோட்டம்

நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கும் படம் 'வீரம்'. ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. 


அஜித், தமன்னா, வித்தார்த், சந்தானம், வித்யூ ராமன், அப்புக்குட்டி என ஒரு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து இயக்கியிருக்கிறார் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. 


அண்ணன் திருமணம் செய்து கொண்டால் தான் 4 தம்பிகளும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த கதைக்குள் எப்படி தமன்னா வருகிறார், வில்லன்களை எப்படி அஜித் எதிர்கொள்கிறார். இறுதியில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து, தம்பிகளும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதே 'வீரம்' படத்தின் கதை. 


எப்போதுமே அடிதடி பண்ணிக்கொண்டிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலை வைத்துக் கொள்கிறார்கள். அந்த வக்கீல் வேடத்தில் சந்தானம் தனது காமெடி பங்களிப்பை அளித்திருக்கிறார். முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

 
படத்தில் முதல் டீஸர், இரண்டாவது டீஸர், டிரெய்லர், பாடல்கள் என 'வீரம்' சம்பந்தப்பட்டவை வெளியான போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்தின் அனைத்து பாடல்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது 'வீரம்' ஸ்பெஷல். 


அஜித்தின் வேஷ்டி சட்டை லுக், டிரெய்லரில் அஜித் போட்டிருக்கும் குத்தாட்டம் என அவரது ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட காத்திருக்கிறார்கள். மக்களிடையேயும், பாக்ஸ் ஆபிஸிலும் தனது புஜத்தை சிலுப்பிக் கொண்டு 'வீரம்' சீறுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும். 



வேட்டி கட்டிய அஜித்.. வெளுத்து வாங்கும் விஜய்: பொங்கல் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...

 

சாதாரணமாக பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பே தீபாவளி பண்டிகை முடிந்துவிடும். ஆனால் இந்த முறை தமிழக தியேட்டர்களுக்கு பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பு தீபாவளி வருகிறது. அஜித், விஜய் இருவரின் படங்களும் இந்த மாதம் பத்தாம் தேதி அதிரடியாக ரிலீஸாவதே இதற்கு காரணம். 7 வருடங்கள் கழித்து தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில் அஜித் - விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கிறது. 2001ல் தீனா - ப்ரெண்ட்ஸ், 2002ல் பகவதி - வில்லன், 2003ல் திருமலை - ஆஞ்சநேயா, 2006ல் ஆதி - பரமசிவன், 2007ல் போக்கிரி - ஆழ்வார் என்று பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டவர்கள் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 


ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டுவந்துள்ள இந்தப் படங்களின் ஹைலைட்தான் என்ன என்று 'ஜில்லா' இயக்குநர் நேசனிடமும், 'வீரம்' இயக்குநர் சிவாவிடமும் கேட்டோம். 


வீரம் படத்தின் முக்கியத்துவத்தை பற்றி இயக்குநர் சிவா நம்மிடம் கூறியவை: 


 
முதல் முறையாக அஜித் முழுப்படமும் வேஷ்டி, சட்டையில் நடித்துள்ளார். இதுவரைக்கும் வந்த அஜித் படங்களில் இல்லாத அளவிற்கு இறங்கி அடிச்சிருக் கார். இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதையில் இதற்கு முன் அஜித் நடித்த தில்லை. அதுதான் 'வீரம்' படத்தின் முதல் ஹைலைட். 


நீண்ட நாட்கள் கழித்து தமன்னா தமிழில் நடித்திருக்கிறார். அஜித், தமன்னா காம் பினேஷன் மிகவும் புதியதாக இருக்கும். டான்ஸ் காட்சிகளில் இருவரும் அசத்தியி ருக்கிறார்கள். 


படத்தோட பாடல்கள் பெரிய ப்ளஸ். ஒவ் வொரு பாடலுக்கும் அஜித் ரசிகர்களால் ஆடாமல் இருக்க முடியாது. 


சந்தானம், தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் படத்துக்கு மற்றொரு பிளஸ். படத்தில் நிறைய நடிகர்கள் என்பதால் மிக கஷ்டப்பட்டு 110 நாட்கள் படம் பிடித்தோம். 


அண்ணன் - தம்பி பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே கண்டிப்பா பேசப்படும். படத்துல மட்டும் அஜித் தம்பிகளுக்கு அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்குமே அவர் அண் ணனாக இருந்தார். 


ஒரு குடும்பத்துல சின்ன குழந்தைகள், அவங்களோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என மொத்த குடும்பமும் படத்துக்கு வந்தாங்கன்னா, எல்லாரையும் சந்தோஷப்படுத்துற படமா ‘வீரம்' இருக்கும். இதை 100% நம்பிக் கையோட சொல்றேன். 


படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி. இடைவேளையின்போது வரும் இந்த சண்டைக்காட்சி மிக பிரம்மாண்டமாக வந் துள்ளது. சண்டை இயக்குநர் செல்வா அதற்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். அதோடு கிளைமேக்ஸ் காட்சியிலும் ஒரு முக்கிய சண்டைக்காட்சி இருக்கிறது. 


இவ்வாறு இயக்குநர் சிவா கூறினார். 



‘ஜில்லா’ படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இயக்குநர் நேசன் நம்மிடம் கூறியவை: 

 
விஜய், மோகன்லால்னு இரண்டு மாஸ் ஸ்டார்களை வைச்சு நான் பண்ணி யிருக்கும் கமர்ஷியல் காக்டெய்ல் ‘ஜில்லா'. இரண்டு பேருமே சேர்ந்து வரும் காட்சிகள் பட்டையைக் கிளப்பும். 


ஒப்பனிங் சாங்கில் இரண்டு பேரும் சேர்ந்தே முழுப்பாட்டுக்கும் ஆடியிருக்காங்க. ரொம்ப பிரம்மாண்டமாக கலர்ஃபுல்லா எடுத்திருக்கோம். ஓப்பனிங் பாட்டுலயே பாக்குறவங்களை எல்லாம் ‘ஜில்லா’ கட்டிப் போட்டுரும்.. 


இதற்கு முன் விஜய்யுடன் காஜல் அகர் வால் சேர்ந்து நடித்திருந்தாலும், ‘ஜில்லா'வில் அவர்களின் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு புதுசா இருக்கும்.


விஜய், சூரி சேர்ந்து பண்ணியிருக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பொங்கல் தான். நிறைய காட்சிகளை படம்பிடித்த போது நானே கட் சொல்ல முடியாமல் சிரித்தேன். 


படத்தோட பாடல்கள் ஏற்கனவே ஹிட். அதுவும் விஜய் பாடியிருக்கும் ‘கண் டாங்கி' பாடலை ஜப்பானில் ஷுட் பண்ணி யிருக்கோம். 


கமர்ஷியல் படத்துக்கு பஞ்ச் வசனங்கள் தான் முக்கியம். ஆனா இதுல பஞ்ச் வசனங்கள்னு எதுவுமே கிடையாது. வசனங்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கும். 


விஜய்யோட சண்டைக்காட்சிகள் எல்லாம் மாஸா இருக்கும். ரோப் இல்லாம, டூப் இல்லாம நிறைய சண்டைக்காட்சிகளை இதில் விஜய் செய்திருக்கார். 


க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 100 ஏக்கர் சோளக்காட்டில் 6 கேமரா வைத்து பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். விஜய், மோகன்லால் ரெண்டு பேருமே வில்லன் களுடன் மோதும் அந்த காட்சியில் தீப்பொறி பறக்கும். 


படம் பார்க்க தியேட்டர்குள்ள வந்தீங்கன்னா படம் ஆரம்பிச்சதுல இருந்து, முடியுற வரை ஒவ்வொரு சீனும் விசில் அடிச்சு, சந்தோஷப்படற மாதிரி எடுத்திருக்கோம். 


இவ்வாறு நேசன் கூறினார். 


‘வீரம்' இயக்குநர் சிவா, ‘ஜில்லா' இயக்கு நர் நேசன் இருவருமே பரீட்சையை எழுதி விட்டார்கள். மக்களின் வழங்கப் போகும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

 

 thanx -tamil hindu


Wednesday, January 08, 2014

ஜில்லா - திரைக்கதையின் மூலக்கதை வெளியானது. விஜய் அதிர்ச்சி

konjam padinga Ida :):)

Writer:

(dialogue and story)

Stars:


Jeeva ...
Machi reddy
Sundeep Kishan ...
Chinna
Vennela Kishore ...
Goli
Sai Kumar ...
Loki
Pavithra Lokesh ...
Mother
Ruby Parihar ...
Heroine
Jaya Prakash Reddy ...
Bangaru Naidu
Reshmi ...
Nadia
Parihar Ruby ...
Heroine
Sharvanand ...
Hero
Surekha Vani ...
Sister

மோகன்லாலின் வளர்ப்பு மகனான விஜய்!

Vijay becomes Mohanlals Foster Son
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலூன்றி 85வது படமாக ஜில்லாவை தயாரித்திருக்கிறார் ஆர்.பி.செளத்ரி. எந்தவொரு படத்தையும் அத்தனை சுலபத்தில் ஓ.கே பண்ண மாட்டார். அவரிடம் கதை சொல்லச்சென்றாலே டைரக்டர்களை பிழிந்து எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான தயாரிப்பாளர் செளத்ரி.

அப்படிப்பட்டவர் மோகன்லால்-விஜய்யை இணைத்து தயாரித்திருக்கும் படத்திற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதோடு இந்த படத்தில் நடித்துள்ள விஜய், தலைவா தோல்விக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல், மோகன்லால் ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால், அந்த கதையில் வலுவில்லாமல் என்ட்ரி கொடுக்கவே மாட்டார். ஆக, பல ஜாம்பவான்களில் ஆளுமையோடு நேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ஜில்லா.

சூப்பர் குட் பிலிம்சின் பூவே உனக்காக படத்தில் நடித்த விஜய்க்கு ஜில்லா 6-வது படமாகும். மதுரை மண்வாசனையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார் விஜய். இப்படம் செளத்ரி இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லாவை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருப்பவர்கள், கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.

இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் மோகன்லால், ஜில்லாவில் நடித்ததற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளாமல் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறார். மேலும் இதுவரை தனது படங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரிய பப்ளிசிட்டி செய்து படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், ஜில்லா இன்னும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம் மோகன்லால்.
 
 
 
\thanx = dinamalar 
 
 
 
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. படத்தின் 20 விநாடி டிரைய்லர் கடந்த 1ந் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஏற்கனவே இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி விட்டது. இப்போது டீசரும் ஹிட்டாகியிருக்கிறது. ஆனாலும் 10ந் தேதி படம் வெளிவருமா? என்ற கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சொல்லி விஜய் படத்தை ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஒரு மறைமுக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜில்லாவில், மோகன்லால் நடித்திருப்பதால் அப்படி தடுத்தால் வேறுவிதமான பிரச்னைகள் வருமா என்கிற கோணத்திலும் தடுக்க நினைப்பவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அனைத்தையும் தாண்டி ஜில்லா வெற்றி உலா வரும் என்று நம்புவோம்.
 
 
 

மூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Jilla got U certificate
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குனரும் கட்டுக்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து படத்துக்கு யு சான்றிதழை வழங்கினர். படம் ஜாலியா இருந்ததாகவும், இது ஒரு மாஸ் எண்டர்டயிண்மெண்ட் என்றும் படம் பார்த்த தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர். மூன்று கட்டில் இரண்டு ஆக்ஷன் காட்சியில் வரும் வன்முறையும், ஒரு கட் மதுரை பக்கம் சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை என்றும் கூறுகிறார்கள்.

யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கு கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். நாளை (ஜனவரி 3)வரிவிலக்கு குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிட இருக்கிறார்கள்.


Making lot of gossips to Jilla says : Producer R.B.Chowdary
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீசாகிறது. ஜில்லா படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை, டப்பிங் முடியவில்லை. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அளித்துள்ள விளக்கம்.

ஜில்லா பற்றி வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள். படத்தின் அத்தனை பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. பாடல்களும் ரெடியாகிவிட்டது. அதை புரூப் பண்ணத்தான் விஜய் தன் தயாரிப்பாளர்களுக்கு உதவி தொகை வழங்கிய விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு விட்டோம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து வரும் மிகப் பெரிய படம் இது. எங்கள் நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில் வரும் படம் அதனால் பிரமாண்டமாக இதனை ரிலீஸ் பண்ணுகிறோம். தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறோம். கேரளாவில் வழக்கமாக மோகன்லால் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களை விட இரண்டு மடங்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 25ந் தேதி டிரைய்லர் ரிலீசாகிறது. ஜனவரி 10ந் தேதி ஜில்லா கண்டிப்பாக ரிலீசாகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.

புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.



#அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

 
குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன். 



அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

.
#இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

 
நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது. 



#நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

 
பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன். 



#இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

 
அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. 



என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


#இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


 
எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


#ஷூட்டிங் எப்போது?


 
தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


thanx - tamil hindu

ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே

1. சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி



============================



2  மோகன் லால் ன் மனைவி சுசித்ரா ஜில்லா பார்த்து பாராட்டினார் - செய்தி # அப்போ விஜய் மனைவி ஏன் எதுவுமே சொல்லல? கேப்பமில்ல கேள்வி



===========================



3 சார்.ஜில்லா ல பஞ்ச் டயலாக்கே இல்லைனு பேட்டி குடுத்தீங்க.டீசர் ல பஞ்ச் பேசறாரே?



 அது படத்தில் வரும் " வில்லன்" க்கானது அல்ல ;-)



==========================



4  என் புருசன் ஒரு படத்துல நடிச்சா நானே அதைப்பார்க்க மாட்டேன் # சும்மா



========================



5   விஜய் - என்னை எதிர்த்தவங்க இந்த ஜில்லா விலேயே இருக்க மாட்டாங்க்.



ஜெ - என்னை எதிர்த்தா ஜில்லா வே இருக்காது


=====================


6   எல்லா பெரிய தியேட்டரும் பிளான் பண்ணி வளைச்சுப்போட்டுட்டோம்.எப்டி நம்ம சாமார்த்தியம் ? "



 பச்ச" முத்து - ஹூம்.விதி முன் நாம் எம்மாத்திரம்?



========================



7   அந்த அல்லா வே வந்தாலும் ஜில்லா வெற்றியைத்தடுக்க முடியாது



.அவர விடுங்கண்ணா.ஆடியன்ஸ் வரனும் இல்ல?


===================



 லாங்க் ஜம்ப்,ஹை ஜம்ப் ல சாதனை செய்யனும்னா அதிக தூரம் பின்னால போய் ஓடி வரனும்,அது பின் வாங்கல் அல்ல # ஆந்திரா ரிலீஸ் தள்ளி வைப்பு



====================



9 ஜில்லா ல ஜெ இல்ல.ஆனா ஜெ இருக்கு. குழப்பாதே ,எப்டி? JILLA = J ILLA ( ஜெ இல்ல) , ஆனா JILLAA ல ஜெ இருக்கு


======================



10 ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே.இது எதேச்சையானதா? திட்டமிட்ட செயலா?



=========================


11  கொச்சின் பிராஞ்ச் ஆபீஸ் ல இருக்கும் சக ஆபீஸ்.(லேடி) ஸ்டாf போன்" ஜில்லா விமர்சனத்தில் மோகன் லால் ,விஜய் பற்றி கலாய்ப்பு வரிகள் கூடாது



=======================



1`2 வீட்டை விட்டு வெளியே வர முடியாத பெண்கள் ட்வீட் உலகம் எட்டிப்பார்க்கையில் ஓட்டுக்க்குள் நத்தையாய் ஆக்கி அவர்களை சங்கடப்படுத்தாதீர்கள்



=================================


13. வீரத்துக்கு டிரஸ் கோடு ரெடி.தமிழனின் ட்ரேட் மார்க்.ஜில்லா க்கு டிரஸ் கோடு ஜிலுஜிலு கலர் சர்ட்டா? # அடுத்த சண்டையை ஆரம்பிப்போம்



==================



14. ஆபீஸ் ல 2 விஜய் ரசிகைங்க கோவிச்சுக்கிட்டாங்க.சமாதானப்படுத்த விஜயைப்புகழ்ந்து 2 ட்வீட் போடனுமாம் ;-)))



====================



15 ரேஸ் ல ஜெயிச்சதுக்கப்"புறம் பேசுவோம் ";-))
===================


17  விஜய் ஓப்பனா வம்புக்கு இழுக்கறார்.அஜித் அவர் பாட்டுக்கு அவர் வழில போறார்.எந்த வம்புக்கும் போகாம பொறுமையா இருப்பதும் வீரம் தான்



====================


18 ஒரு நல்ல விவசாயி தன் வயலில் உள்ள விளைச்சல் பற்றி நல்லதை எடுத்துச்சொல்வான்.ஆனா தமிழன் பக்கத்து வீட்டு விவசாயி பத்தி கோள் சொல்வான்



====================


19 ஆரம்பம் ல அட்டகாசம் தான்.ஆனா அப்புறமாத்தான் டவுசரைக்கழட்டிடறாங்க . # ஜில்லா வசனம் ஏதாவது உள்குத்தா?


=============================


20  ஜில்லா ,வீரம் எது ஜெயிக்கும்?னு துல்லியமா கணிக்க முடியல.டப் பைட்டா இருக்கும்னு தோணுது # ஐ ஆம் வெய்ட்டிங். என்ன நான் சொல்றது?


===================



21 தலைவா தோல்விக்குப்பின்னும் ஜில்லா தியேட்டர் புக்கிங் மாஸ்.ஆரம்பம் வெற்றிக்குப்பின்னும் வீரம் தியேட்டர் புக்கிங் 2 ம் இடம் தான்.ஏன்?



===================


22  ஜில்லா ட்ரெய்லர் ல காஜில் லா வை சரியா காட்டலை.அவரும் ( காஜில் அகர்வால் ) சரியா காட்டலை. படத்திலாவது காட்டு காட்டு னு காட்டுவாரா?



=======================



23. சார்.கதைப்படி மோகன் லாலை வில்லன் கொலை செஞ்சுடறான்.பழி உங்க மேல விழுது.நீங்க வில்லனைக்கொல்றீங்க.



பிரமாதம் சார்.கொன்னுட்டீங்க


====================


24 ட்ரெய்லர், டீசர் = ு 2 ல் எது முன்னிலை வகிக்கும்னு கணிக்க முடியல.ஆனா வீரம் கதை ஓட்டம் எப்டி போகும்னு தெரியுது.ஜில்லா யூகிக்க முடியல



=======================



25   ஜில்லா ட்ரெய்லர் புத்திசாலித்தனமாகத்தொகுக்கப்பட்டிருக்கு.கதையை யூகிக்க முடியலை .குட் ;-)))



=========================


26   மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்தப்பாடுபடும் இளைய தளபதி வாழ்க ! அண்ணே! டீ இன்னும் வர்ல



=======================



27 பெரிய ஸ்டார்ங்க படமும் ,முதல் திருமணத்தின் (ARRANGED MARRIAGE ) முதல் இரவும் 1,பெரிய எதிர்பார்ப்போடுதான் உள்ளே காலடி எடுத்து வைப்போம்


=====================



28 விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரவேண்டும்- ! நேசன்.."# முருகா ! ஒளி மயமான எதிர்காலம் இப்பவே எனக்கு தெரியுது



===================


29 1, ஜில்லாவில் விஜய் கலர் புல் சர்ட்டில் கலக்கலான தோற்றம் 2 ராமராஜன் மதம் மாறினார் #,2ம் வேறு வேறு செய்திகள்



==================


30  ஹீரோ - நான் அடிச்சா அது மரண அடியா இருக்கும்.



 வில்லன் - அண்ணா!,நீங்க நடிச்சாலே மரண அடி தானுங்க்ணா

=============================




Tuesday, January 07, 2014

பாலுறவு - பிரான்ஸில் கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

அண்மைக் காலத்தில், ஊடகங்களில் அடிக்கடி நாம் சந்திக்கும் பாலியல்பற்றிய செய்திகள் மூலம் விரும்பத் தகாத ஒரு ‘புகழ்’ இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. 


உலகின் எந்தச் சமூகத்திலும் இது போன்ற வக்கிரங்கள் இருக்கத்தான் செய் கின்றன என்றாலும், இங்கே இந்த நிகழ்வுகள் அத்துமீறி நிகழ்வதாகத் தோன்றுகிறது. உளவியல், சமூகவியல்ரீதியில் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனிதர்களிடையே பெரும்பாலும் பாலியல், பாலுறவுகுறித்த ஆரோக்கியமான பார்வை கள் வேரூன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

 
பிரான்ஸில் அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘உலகின் சிறந்த காதலர்கள்' என்று பெயர்பெற்ற பிரெஞ்சுக்காரர்கள் ‘வாழ்க்கையில் பாலுறவு அளிக்கும் இன்பத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை' என்பது சரியா, தவறா என்ற கேள்விக்கு 70% பேர் தவறு என்று பதிலளித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதை வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகளில் பிரபலமான, சிக்மண்ட் ஃப்ராய்டு முன்வைத்த பாலியல் முக்கியத்துவத்தின் அடிப்படையிலான கோட்பாடு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுவது தெரியும்


. 1900-ல் சமூகத் தடைகளும் கட்டாய சுயகட்டுப்பாடுகளும் நிறைந்த சமூகப் பின்னணியில் அவர் அறிமுகப்படுத்திய இந்தக் கருத்து, பாலியல் விவகாரங்களில் அதீத சுதந்திரம் பெற்று, பின்னர் சிறிதுசிறிதாக மரபின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற சூழலில் மக்களுக்குப் பெருமளவில் ஏமாற்றத்தையும் அதி ருப்தியையும் அளித்துவிட்டதென்று பல சிந்தனையாளர்களும் உளவியலா ளர்களும் கருதுகின்றனர். 


தெளிவு பிறக்கும் காலம்?

 
பிரெஞ்சில் ‘தத்துவச் சிந்தனை இதழ்' என்ற பெயரில் வெளிவரும் மாத இதழின் ஆசிரியர் அலெக்ஸாந்தர் லாக்ர்வா, “மேலை நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, பின்னர் அதுதான் எல்லாமே என்றாகிவிட்ட பாலியல் பிரச்சினையில் ஒருவேளை இன்று தெளிவு பிறக்கும் நேரம் வந்துவிட்டதா?” என்ற கேள்வியை எழுப்புகிறார். 


மார்ச் 2013 இதழில் பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இந்தப் பிரச்சினைபற்றிய தங்கள் கருத்துகளைஆழமாகவும் வெளிப் படையாகவும் எழுதியிருந்தார்கள். தொழில்ரீதியில் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் செயல்படுவதாக நினைக்கத் தூண்டும் இரண்டு பிரபலங்களிடையே நிகழ்ந்த அசாதாரணமான நேர்காணல் ஒன்று இந்த இதழில் கவனத்தைக் கவரும் பகுதியாக இருக்கிறது. முதலாமவர், ஆந்த்ரே கோன்த் - ஸ்போன்வில். (பிற‌ப்பு 1952) தத்துவச் சிந்தனையாளர், சோர்போன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் உதவிப் பேராசிரியர். 


பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், 2012-ல் தத்துவ அகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இரண்டாமவர், ஓவிதி. (பிறப்பு 1980): முன்னாள் பாலியல் பட நடிகை, தயாரிப்பாளர், தற்போது பாலியல் கல்வி நிபுணர். இளம் வயதிலேயே போதைப்பொருட்க‌ள், மதுபானம் இவற்றை மறுத்து, தீவிரமாக சைவ உணவு மட்டுமே உண்ணும் வாழ்க்கை முறையை மேற்கொண்ட இவர், பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் பட்டம்பெற்று, ‘பாலியலும் தத்துவமும்’ (2012) என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். 


பாலுறவு வெகுளித்தனமானதல்ல

 
‘‘இனப்பெருக்கத்துக்கு அவசியமான உடலுறவு என்ற‌ செயல்பாடு, என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒருபோதும் முற்றி லும் வெகுளித்தனமானதல்ல. மற்ற உயிர்களிடம் காணப்படும் வெகுளித் தனமான பாலியல்பு மனித குலத்தில் இருப்பதில்லை. எப்போதும் அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்து கொண்டே இருக்கிறது; அதைப் பற்றி தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட எண்ணங்களுக்கு அந்த நோக்கமானது ஊட்டமளித்து, சில சமயங்களில் ஆபத்தான பின்விளைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது” என்பது இவருடைய கருத்து. 



இதே கருத்தை இன்னும் ஆழமாக, வரலாற்றுப் பின்னணியில் பார்க்கிறார் கோன்த்-ஸ்போன்வில். கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளாக நிலவிய ஒழுக்க நியதிக் கட்டுப்பாடுகளையும் குறிப்பாக, மதத் தலைவர் தூய அகஸ்டீன் கருத்துப்படி, பாலியல் ஒரு பாவச்செயல் என்றும் இனவிருத்தியைத் தவிர, வேறுவிதமான பாலியல் தொடர்புகள் தகாதவை என்றும் இருந்த நிலையையும் சுட்டிக்காட்டி, அதிலிருந்து சமூகம் விடுபட்டு வெகுதூரம் வந்துவிட்டதை நினைவுபடுத்துகிறார். 



ஆனால், ‘‘சமூகம் ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குப் போய்விட்டது. அரக்கத்தனம், பாவம் என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாலியல் அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டது. ஒழுக்க நெறிக்கும் பாலியலுக்கும் இடையே எப்போதுமே இறுக்கமான ஓர் உறவு இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பண்டைய கிரேக்க சிந்தனை, ஒருவிதத் தயக்கத்தையும் நிதானத்தையும் மேற் கொண்டிருக்கிறது’’ என்கிறார் இவர். 



சுவாரஸ்யமான ஒரு பார்வை


 
நிர்வாணிகள் சங்கத்தில்கூட அதன் அங்கத்தினர்கள் உடலுறவு கொள்ள வரும்போது, மறைவான இடத்தைத் தேடிப் போகிறார்கள். “இவ்வளவு இயல்பான ஒரு செய‌லுக்கு ஏன் மறைவைத் தேடிப் போக வேண்டும்?” என்ற இக்கட்டான கேள்வியை போன்வில் எழுப்புகிறார். “ஏனென்றால், இந்த அளவுக்கு ஒரு மிருகத்தைப் போலத் தான் ஆகிவிட்டதாக உணரும் மனிதனின் ஆழ்மனதில் ஒருவித சங்கடம் இருக்கிறது. பசி எடுத்து உண்பதும் மிருகத்துக்கு இருப்பதைப் போன்ற ஓர் இச்சைதான்;



 இருந்தாலும், உண்ணும்போது வேறு பலவிஷயங்களைப் பற்றி நினைக்கவோ பேசவோ மனிதனால் முடிகிறது. இந்த இச்சை மனிதனை முழுமையாக விழுங்கிவிடுவதில்லை. மிருக இயல்புக்கும் மனிதத்தன்மைக்கும் இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் பாலியல்பின் தன்மை, தாக்கம், விளைவு ஆகியவற்றை ஆய்வுசெய்ய வேண்டும்” என்கிறார். 



ஆண் - பெண் இருபாலரிடையேயும் இருக்க வேண்டிய பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் இவர்கள் இருவருமே பரிந்துரைக்கிறார்கள். இது ஓர் லட்சியக் கனவுபோலத் தோன்றினாலும் இளைஞர்களின் கல்வித் திட்டத்தில் இந்த அம்சத்தை வலியுறுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் பாலியல் பலாத் காரங்கள் குறைய வாய்ப்பிருக்கும். பலாத் காரத்தின் மூல காரணங்களை அறிய முடியும். 


தத்துவ சிந்தனையாளர் ஆந்த்ரே கோன்த் -ஸ்போன்வில்லின் கருத்துப்படி, மூன்று விதிகளுக்கும் உட்பட்ட பாலியல் உறவுதான் ஒழுக்கரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதி பெறுகிறது. 


சுதந்திரம், சமத்துவம், பரஸ்பர மரியாதை. இந்த மூன்று நிபந்தனைகளையும் வலியுறுத்து வதென்பது, பாலியல் பலாத்காரம் கொடுமையான ஒரு செயல் என்பதையும், பாலியல் தொழில் ஒருபோதும் திருப்தி அளிக்காது என்பதையும், பல திருமணங்கள் செய்துகொள்வது எப் போதும் பிரச்சினையைத்தான் வளர்க்கும் என்பதையும் நன்றாக உணரச் செய்யும். 


எங்கே மனிதத்தன்மை?


 
நேர்மையான அரசியல், சீரிய ஒழுக்க நெறி, கலை, ஆன்மிகம் போன் றவை தங்களுக்குண்டான முக்கி யத்துவத்தையும் செயல்பாடுகளின் சுய அதிகாரத்தையும் இழக்காமல் முறையாகப் பேணிவந்தால், மனித சிந்தனையைப் பாலியல் முற்றிலுமாக ஆக்கிரமிக்காது. பாலுறவைத் தவிர, மற்ற பல விஷயங்களில் மனிதன் தன் னுடைய சிந்தனையைச் செலுத்துவது மிக அவசியம். “பாலுறவுக்கு நியாயமான இடம் கிடைக்க வேண்டுமானால், முழு இடத்தையும் அதுவே எடுத்துக்கொள்ளக் கூடாது” என்கிறார் அவர். 



ஆஸ்திரியக் கவிஞர் ரெய்னர் மாரியா ரில்கே ( 1875- 1926) ‘இளம் கவிஞருக்குக் கடிதங்கள்' என்ற புத்தகத்தில் “ஆணைவிட மனிதத் தன்மைக்கு மிகவும் நெருங்கியிருப்பவள் பெண்...” என்று சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டும் கோன்த்-ஸ்போன்வில், “இங்கே மனிதத் தன்மை என்று ரில்கே குறிப்பிடுவது, மற்றவர்களிடம் கனிவாகவும் பரிவுடனும் இருத்தல்” என்கிறார். 



இந்தக் கோணத்தில் அது வன்முறை, காட்டுமிராண்டித்தனம், மனிதாபிமானமற்ற செயல்கள் இவற்றுக்கு எதிரானது. பாலுறவை மனிதாபிமானமுள்ளதாக ஆக்குவதில் ஆணைவிடப் பெண்ணின் பங்கே அதிகம். ‘காதலும் பாலியலும்’ என்ற அவருடைய புத்தகத்தில் சொல்கிறார்: “முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு மனிதச் சமூகம், ஒருபோதும் காதலை அறிந்திருக்க முடியாது; பாலியலும் போரும் மட்டுமே அதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்!” 



- by வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், சமூக விமர்சகர், இருமுறை செவாலியெ விருதுபெற்றவர். தொடர்புக்கு: [email protected] 


thanx  - the hindu


readers view 

1. stanislas Perianayagam at Government

 
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- சொல்லி சொல்லியே மறைவில் தேடக் கற்பிக்கப்பட்டவர்கள் நாம்!இன்றோ கனிவும் பரிவும் இன்றி மனிததன்மையைக் கைவிட்ட அதீத பாலுறவுச் சிக்கல்கள் தலை விரித்தாடுகின்றன.இள வட்டங்கள்தாம் இப்படி என்றால் நம்ப முடியா அரசியல் கிழடுகளின் கொட்டம் -நீதிபதியின் கயமை-ஊடகவியலாளரின் திரை மறைவு-அரசியல் நாற்காலியின் பின்தொடரல் -ஆசிரியர்களின் அடாத ஒழுக்கமின்மை வெளிச்சத்திற்கு வருகின்றன. பிரான்சின் தெளிவு நமக்கில்லை...? எல்லாமே ரகசியம் என்பதன் பேரால் அசிங்கங்களே ஆட்சி செலுத்தி வருகின்றன.



பாலுறவு தான் இன்பத்தின் உச்சம் என்பது அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது.நமக்கோ அதுதான் உயர்வாகப் புரிகிறது.சுதந்திரம்,சமத்துவம் ,பரஸ்பர மரியாதை என்பதன் மேல் கட்டமைக்கப் படும் பாலுறவுதான் தாம்பத்தியத்துக்கும் பெருமை சேர்க்கிறது.திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராக காட்டப்படும் சித்திரம் இங்கேதான்!வேலி தாண்டிய பாலுறவு வெள்ளாமையை விளைவிக்காது.பாலியல்,பாலுறவு பற்றிய ஆரோக்கியமான பார்வைகள் இங்கே பகிரப்பட-விவாதிக்கப்பட வேண்டும்!...




2  ஒரு அருமையான கட்டுரை .ஸ்ரீராமிற்கு நன்றி. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் என்பது பெரும்பாலும் ஒரு ஆண் தன் தாழ்வுமனப்பான்மையையும், இந்த சமூகத்தின் மேல் தனக்கு இருக்கும் வெறுப்பையும் வடிக்க பயன் படுத்திக்கொள்ளும் ஒரு வடிகாலாகவே உள்ளது.இது நாட்டில் பெருகிவிட்ட வர்க்க பேதத்தின் குறியீடு.மொத்தத்தில் இது ஒரு நோய்.ஆனால் குற்றமாக சித்தரிக்கப்படுகிறது.



3   பாலுறவு என்பது மனித இயல்பு,இயற்கை.இயற்கை சீரழிவு,பேரிடர் எல்லாம் இயற்கைக்கு எதிரானா முரண்களில்,வரையறை மீறல்களில் உண்டாவதே!சிம்மன் ப்ராஇட் போன்றவர்கள் மனித இயல்பையும்,இயற்கையும் அறியாத வீணர்கள்.தங்களின் யூத சமுக சிந்தனையில்,இன வெறியில் மனித குலத்தை நாசமாக்கியவர்கள்.இவரை போன்ற தத்துவவாதிகளும் மனித குலத்தை தங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கற்பனையால் உலகை நாசப்படுத்தி விட்டார்கள்


.அதை மேற்க்கத்திய உலகம் மெல்ல மெல்ல உணர்ந்து வெளியேறி வருகிறது.பாலுணர்வின் அடிப்படை இனப்பெருக்கமும்,உள அமைதியும்.இனப்பெருக்கம் மனித வளத்தின் ஆதாரம்;மனிதனுக்குரிய கடமையை,பொறுப்பை,இலக்கை கற்ப்பிக்கும்.இது மனிதனின் அறிவை முதிர்ச்சியடைய செய்யும் அனுபவங்களை பெற்று தரும்,வளர்ச்சியை நோக்கி உந்தி தள்ளும்.இதை முடக்க நினைக்கும் எல்லா தீர்மானங்களும்....அது துறவாயினும்,குடும்ப கட்டுப்பாடாயினும் இயற்கைக்கு எதிரான வீண் விரயம்.அதன் விபரீதத்தை தான் உலகம் இன்று அனுபவிக்கிறது


முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?

1. சுவாமி ! வர்ணாசிரமம் னா என்ன?



பல கலர்ங்க ஆசிரமத்தில் இருந்தா அது வர்ணாசிரமம்.பிகர்ங்க வர்லைன்னா எனக்கு ரொம்ப சிரமம்




==================


2, லேடி - டாக்டர்.உடனடியா நான் குண்டாகனும்.ஏதாவது குறுக்கு வழி இருக்கா?



நேர் வழியே இருக்கு.மேரேஜ் பண்ணிக்குங்க.உண்டானா குண்டாகலாம்



=================


3, பொண்ணு சொந்தமா பியூட்டி பார்லர் வெச்சிருக்கு.100 பவுன் போட்டு கட்டிட்டுப்போங்க..



பொண்ணு அழகு நிலையத்துக்குத்தானே ஓனர்? அழகுக்கே அதிபதியா?



===================


4, டாக்டர்,என்ன சாப்பிட்டா உடம்பு, டக்னு வெயிட் குறையும்?



எதுவுமே,சாப்பிடாம, 10 நாள் இருந்தா 4 கிலோ வெயிட் குறையும்



=====================


5, டியர்! எப்போ எந்திரிச்சீங்க?



நீ எப்போ என் பக்கத்தில் வந்தியோ அப்பவே!



=================


6, லீவ் ல இருக்கும்போது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ?



 ஆபீஸ் டைம் ல பர்சனல் கால் பேசக்கூடாது னு நீங்க மட்டும் சொல்லலாமா?



---==========



7, மிஸ் பாமா! உங்களுக்கு மேரேஜா?



ஆமா.


மாப்ளை யாரு?


என் முறை மாமா.



 என்ன பண்றார்?



 ஹோட்டல் ல புரோட்டா மாஸ்டர்.


=====================

 8.டீச்சர்.என் பையன் பிரமாதமா டான்ஸ் ஆடறான்.பாட்டு நல்லா பாடறான்.ஆனா நெம்பர் ஒன் னா வர முடியலையே? ஸ்கூல்ல?



 மேடம்.அதுக்கு நல்லாப்படிக்கனும்



======================


9.மேடம்.லீவ் வேணும்.



எதுக்கு?



என்னமோ உங்க சொத்துல பங்கு கேட்கற மாதிரி கேட்கறீங்க? மாசா மாசம் 2 நாள் லீவ் கோட்டா இருக்கில்ல?



=========================


10மிஸ்! எதுக்காக தலையில் இத்தனை க்ளிப் ,ஹேர் பின் ?



 முடி பறக்காம இருக்கத்தான்.



 ஓஹோ! காத்துக்கு விக் கழண்டுக்குமா?


========================


11.பேங்க் மேனேஜரைபார்க்கனும்.



மிஸ் புஷ்.அதுக்கு நீங்க பேங்க் போகனும்.இது ஹோட்டல்


=====================


12, மிஸ்! Sorry என்னை மன்னிச்சிருங்க !! னுஎதுக்கு 2 மொழில?



அட.மாப் கீஜியே ஜி !



=================



13. சீனியர்ங்கற முறைல டைட்டில் ல உங்க பேரையே முதல்ல போடச்சொல்லிட்டேன்.



அது சரி .சம்பளம் மட்டும் என்னை விட 10 மடங்கு வாங்கிக்கிட்டீங்க்ளே? ;-)



========================



14. கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.


இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?


=============================


15  இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க.



பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.



============================



16. ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.




ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?



=========================



17, டாக்டர்,முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?



டெய்லி ஷாம்பு போடாம ஃபெவிகால் போட்டு குளிங்க,அப்டியே தலையோட ஒட்டிக்கும்



===========================



18   லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது .



நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்



========================


19   ஆபீஸ் க்கு ஏன் லேட்?



முதல் பஸ் மிஸ் ஆகிடுச்சு.




 ஓஹோ .2 வது பஸ் மிசஸ் ஆகிடுச்சு.3 வது பஸ்.டைவர்ஸ் ஆகிடுச்சா? என்னம்மா சால்ஜாப் இது?



=====================



20   டாக்டர்.ஆண் மூலம் அரசாளுமாமே?



 நீ போய் ஸ்ட்ரெக்சர் ல படு.ஆபரேசன் ல பிழைச்சா பார்ப்போம்


==========================