Thursday, March 14, 2013

சிறையிலாவது மூன்று வேளை சாப்பிடுவோம் -மருத்துவர் ச.ராமதாஸ்


பாதிப்புகள் எங்களுக்கு... பலன்கள் எல்லோருக்கும்!

மருத்துவர் .ராமதாஸ்

14-6-1987 அன்று தருமபுரியில் தொடர் சாலை மறியல் போராட்ட விளக்க மாநாடு-பேரணி. பழைய தருமபுரியிலிருந்து டி.என்.வி. வினோபா தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னிய இளைஞர்களின் பேரணியை இன்றைய கட்சித் தலைவரும் அன்றைய கொளத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான ஜி.கே. மணி தொடங்கி வைக்க, ஆயிரக்கணக்கான வண்டிகள் அணிவகுத்தன. தோழர் இனமுரசு மாநாட்டைத் தொடங்கி வைக்க, .அருணாசல படையாட்சி மாநாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்க, மாவட்டத் தலைவர் கே.இராமசாமி கவுண்டர், டி.பொன்னுசாமி கவுண்டர், கே.பெருமாள், டி.கோபாலன் எம்.சி, டி.கே.ஆறுமுகம் எம்.சி, பெரியசாமி எம்.சி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் .இராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
வேங்கை புலியன், சீ.கோ.மணியன், டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம், வன்னியர் சங்கப் பொதுச் செயலாளர் பு.தா.இளங்கோவன், இறுதியாக நான் பேச அதிகாலை 2 மணியளவில் மாநாடு நிறைவுற்றது.
26.6.1987 அன்று திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலத்தில் வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம் ..எஸ். தலைமையில் என்னுடைய முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் செப்டம்பர் 17 முதல் 23 வரை தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென நாள் குறிக்கப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 25-க்கும் மேற்பட்ட பேரணிகள், மாநாடுகள் பல லட்சம் பேர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனு, லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், 6.5.1986 அன்று சாலை மறியல் மூலம் காட்டிய எழுச்சி, 19.12.1986 அன்று மத்திய அரசு கவனத்தை ஈர்க்க நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம், மாணவர்கள் நடத்திய பட்டை நாமப்பட்டினி போராட்டம் இவையெல்லாம் நடத்தியும்கூட அரசு கூப்பிட்டுப் பேசவில்லை. அத னாலே ஒரு வாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கான தீவிரப் பிரசாரத்தில் மூன்று மாதங்களுக்கு மேலே வன்னியர் சங்கத்தினுடைய செயல் வீரர்கள் இறங்கினார்கள்.
செப்டம்பர் 17 இல் தான் வகுப்புரிமைக்குக் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள். அவரவர்கள் தலையை எண்ணிக்கொண்டு அதற்கேற்ற விகிதாசார பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். அதுதான் சமூகநீதி என்று துணிந்து சொல்லிப் போராடியவர் அவர். எனவே அவர் பிறந்த நாள் செப்டம்பர் 17-இல் போராட்டத்தைத் தொடங்குவது பொருத்தம் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்த அரசு பெரியார் வழிவந்தது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைபவர்கள், ஆண்டுக்காண்டு பெரியார் சமாதியில் மலர் வளையம் வைப்பதிலும், சிலைக்கு மாலை போடுவதிலும் அரசு செலவிலே விழா எடுத்து அவருக்குப் புகழாரம் சூட்டுவதிலும் குறைவைக்காத இவர்கள், பெரியாரின் கொள்கையை முன்வைத்துப் போராடி வரும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கையை அசட்டை செய்து வந்தனர். எனவேதான் போராட்டம்.
வன்னியர் சங்கக் கூட்டம் எங்கு நடந்தாலும் அரசாங்கம் தமது ஒற்றர் கூட்டத்தை அனுப்பி வைத்தது. சங்கத்தின் முன்னணிப் பேச்சாளர்கள் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்பட்டன. என்னைச் சுற்றிலும் காவல்துறையின் கண்காணிப்பு. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்தும் அவற்றை அசட்டை செய்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்களை வழிக்குக் கொண்டுவரும் வகையில் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்தப் போராட்டத்தின் தேவையை மக்கள் மத்தியில் விளக்குவதற்காக நாடு தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தொடர் சாலை மறியல் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன.
தென்னார்க்காடு மாவட்டம் கொஞ்சிக்குப்பம், செஞ்சிவட்டம் தாதம்பட்டி, பல்லவர்மேடு, தஞ்சை புதுப்பட்டினம், விழுப்புரம், சேர்ந்தனூர், சேலம் சின்னபுதூர், விருத்தாசலம் ஒன்றியம் மு.பட்டி, சென்னை ஈக்காடுதாங்கல், காஞ்சிபுரம், சிங்கப் பெருமாள்கோவில், வலங்கைமான், வல்லம் ஒன்றியம் கடம்பூர் முதலான எண்ணற்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைத் தயார் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது எங்கள் கைவசம் இருந்த ஒரே பத்திரிகை கனல். ‘அரசுக்கும் அனைத்து சாதி மக்களுக்கும் வேண்டுகோள்என்ற தலைப்பில் நான் எழுதிய தலையங்கத்தில் பிற சாதி மக்களை நோக்கி, ‘எங்கள் சாதி மக்களுக்காகவும் நாங்கள் பொதுவான கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் குதித்து விட்டோம்! முதற்களப்பலியாக நாங்கள் எங்களை இந்தத் தியாகப் போராட்டத்தில் தீர்மானித்து இறங்கி விட்டோம்!
எங்களை நெஞ்சார வாழ்த்தி வழி அனுப்பி வையுங்கள், பாதிப்புகள் எங்களுக்கானாலும் பலன்கள் எல்லோருக்குமாக இருக்கட்டும் என்ற நோக்கத்தோடு செல்லும் வன்னியப் போராளிகளை உளமார வாழ்த்துங்கள்! ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடும் காலம் வரும்போது அனைவரும் திரண்டெழுந்து ஆதிக்கச் சக்தியினை வீழ்த்திக் காட்டுவோம்என குறிப்பிட்டிருந்தேன்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் ஊர்க்கூட்டம் (கிராமக்கிளை), ஒன்றியக் கூட்டம், மாவட்டக் கூட்டம் என ஒவ்வொன்றும் இரண்டிரண்டு முறை கூட்டப்பட்டது. சுவரெழுத்து விளம்பரம், சினிமா சிலைடுகள், சுவரொட்டிகள் மூலமும் மக்கள் மத்தியில் தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. குடும்பத்துக்கு ஒரு ரூபாய் வீதம் வன்னியர்களிடமிருந்து போராட்ட நிதி திரட்டப்பட்டது. இவற்றையெல்லாம் செம்மையாகச் செய்வதற்காகப் போராட்டக் குழு, விளம்பரக் குழு, பிரசாரக் குழு, தொண்டர்படைக் குழு, நிதிக் குழு என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்களின் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வன்னிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழ்நாட்டில் நடத்தாமல் பாண்டிச்சேரியில் நடத்தினோம். இதனால் எங்கள் திட்டம் தமிழகப் போலீஸுக்கு எட்டாமல் போனது. சாலை மறியலுக்குத் திட்டமிட்ட ஏற்பாடுகளை வன்னியர் சங்கம் செய்தது. வயல்வெளிகளின் மறைவான பகுதிகளில், கரும்புத் தோட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்பே பாசறைகள் அமைக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து 30-9-1987 நாளிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகை இவ்வாறு எழுதியது, ‘செயலிழந்த போலீஸ்என்னும் தலைப்பில். தமிழக போலீஸ் சற்றுத் தடுமாறிப் போனது உண்மை! ரகசிய போலீஸ் பிரிவு காரணம் தேடித் தலைகுனிந்து நிற்கிறது.
நாவன்மை உள்ள ஒரு மூத்த அமைச்சர்கூட இன்டலிஜென்ட்ஸ் பீரோ என்ன பண்ணிக்கிட்டிருக்குன்னு தெரியலை. இவ்வளவு பெரிசா நடக்கும்னு முன்கூட்டித் தகவல் தந்திருந்தால், 16-ஆம் தேதி இரவே போக்குவரத்துகளைச் சென்னையிலேயே தடுத்திருக்கலாம். முதலமைச்சர் ஊரில் இல்லாத நேரத்தில் இப்ப எல்லாமே கையை மீறிப் போய்க்கிட்டிருக்குஎன்று உயர் அதிகாரி ஒருவரிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
பாண்டிச்சேரியில் கூட்டம் நடத்திப் போராட்டத்துக்குத் திட்டமிட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இப்போது காரணம் சொல்வது வெறும் சப்பைக்கட்டு. பல மாதங்களாகவே கிராமம் கிராமமாகக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய எந்தத் தகவலும் போலீஸுக்குத் தெரியாது. போராட்டம் தீவிரமான பகுதிகளில் குறைந்தபட்சம் 144 தடை உத்தரவு போட்டிருக்க வேண்டும். அதையும்கூடச் செய்யவில்லை, என்று ஜூனியர் விகடன் எழுதியது. காவல்துறையின் கவனத்தில் மண்ணைத் தூவும் வகையில் போராட்ட உத்திகள் வகுக்கப்பட்டன என்பதற்கு மேற்கண்ட பத்திரிகைச் செய்தி சான்று. இந்தப் போராட்டக் குழுவுக்கு நான் தலைமை ஏற்றேன். போராட்டக் குழுவின் உத்திமுறை குறித்து மேற்படி கட்டுரையின் ஆசிரியர்களான சௌபா, வேல்ஸ் ஆகியோர் அக்கட்டுரையில் பின்வருமாறு எழுதுகின்றனர்.

போராட்டக் குழுக்களின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை போலீஸ் முன் கூட்டிக் கைது செய்துவிட்டால்...? ராமதாஸ் இதை எதிர்பார்த்தார். இந்த மாதம் 17-ம் தேதி போராட்டம் தொடங்குகிறது என்கிற தறுவாயில் 12-ம் தேதியே வன்னியர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, கிராம அமைப்பாளர், தலைவர், செயலர் இக்குழுக்களின் முக்கியஸ்தர்கள் அனைவருமே தலைமறைவானார்கள்! 13-ம் தேதி முன்னெச்சரிக்கைக் கைது செய்யக் கிளம்பிய போலீஸ், எங்கே வெறுங்கையோடு போனால் மேலதிகாரிகளிடம்பாட்டுகேட்க வேண்டுமோ என்று டீ குடிக்கப்போனவன், வயக்காட்டுக்குப் போனவன் எல்லோரையும் மாய்ந்து மாய்ந்து கைது செய்து 14-ம் தேதி அலுத்துப்போனது


 இந்தச் சந்தர்ப்பத்தில் பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்த ராமதாஸும், கிராமங்களில் மறைந்திருந்த வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளும் மாறுவேடத்தில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றார்கள். சாலை மறியல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு கிராமத்திலும் தாங்கள் நியமித்திருந்த இளைஞர்களைச் சந்தித்துக் கூறினார்கள். 15 மற்றும் 16-ம் தேதி முழுவதும் ஐந்து குழுக்களின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம்களைப் போல் தாடி குல்லாவுடனும், மேல் மருவத்தூர் பக்தர்களைப் போல் வெவ்வேறு வேடங்களில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்


 இவர்களின் செயல்பாட்டை நேரடியாகப் பார்வையிட்ட ராமதாஸும் 15, 16 தேதிகளில் தென் ஆர்க்காடு மாவட்டக் கிராமங்களில்தான் மாறுவேடத்தில் அலைந்து கொண்டிருந்தார்," என்பது எங்களுடைய போராட்டத் தயாரிப்பு நிலை குறித்த பத்திரிகையாளர்களின் மிகச் சரியான கருத்துக் கணிப்பாகும்.
சிறையிலாவது மூன்று வேளை சாப்பிடுவோம்என்று தலைப்பிட்டு 18.9.1987 தேதியில் வெளிவந்த தராசு இதழில் இந்தப் போராட்ட நேரத்தில் என்னிடம் பேட்டி கண்ட .எஸ்.மணி, சங்கத்தின் முக்கியப் பிரமுகர்களை முன்கூட்டியே கைது செய்து விட்டால், போராட்டம் நடக்குமா? என்ற வினாவை என் முன்வைத்தார். அதற்கு அளித்த பதிலைக் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்கள் மக்கள் எப்படியும் போராடுவதென்று தீர்மானித்து விட்டார்கள்.
கடந்த போராட்டங்களில்கூடப் பலர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்கள். ஆனால் என்ன நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரையும் கைது செய்ய இயலாமல், கெஞ்சிக் கேட்டு வீட்டுக்கு அனுப்பினர், காவல்துறையினர். அப்படியிருந்தும் பல்லாயிரக்கணக்கில் கைதானோம். இந்தப் போராட்டத்திலாவது அரசு, எங்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சிறையிலாவது, எங்களில் பலருக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழிகிடைக்குமே?" என்பது தராசு இதழில் வெளிவந்த செய்தியாகும். எங்கள் போராட்டம் திடீரென்று உருவானதல்ல, 8 ஆண்டுகள் போராடியும் நீதி கிடைக்கவில்லை, போராடுவதைத் தவிர இனி வேறு வழியே இல்லை என்பதனை விளக்கும்.
1.5.1987 முதல் 26.6.1987 வரை தராசு பத்திரிகையில்எங்கள் போராட்டம் எதற்காக?’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றையும் எழுதி வந்தேன். எங்கள் மக்களின் வாழ்வுரிமையை மையமாகக் கொண்ட தோடர்சாலை மறியல் போராட்டம் 1987 செப்டெம்பர் 16 நள்ளிரவிலிருந்தே திட்டமிட்டவாறு தொடங்கப் பட்டது.
(தொடரும்)

thanx - kalki

Wednesday, March 13, 2013

ஹரிதாஸ் படம் கொரிய மொழிப் படமான 'மாரத்தான்’ படத்தின் தழுவலா? இயக்குநர் குமரவேலன் பேட்டி

''ஹரி பேசினா எனக்கு சந்தோஷம்!''

க.நாகப்பன், படம்: கே.ராஜசேகரன்

ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க அப்பாதான் முதல் ஹீரோனு படத்துல ஒரு வசனம் வரும். அது என் அப்பா ஜி.என்.ரங்கராஜனை மனசுல வெச்சு நான் எழுதின வசனம். 



 'கல்யாணராமன்’, 'கடல் மீன்கள்’, 'மீண்டும் கோகிலா’னு அவர் இயக்கிய 17 படங்களில் ஏழு படங்களுக்கு கமல் சார்தான் ஹீரோ. 'என் மகன் இயக்கிய படம்’னு சொல்லி என் அப்பா பெருமைப்படும் அளவுக்கு ஒரு படம் எடுக்கணும்னு நினைச்சேன். இப்போ 'ஹரிதாஸ்’ பார்த்துட்டு அப்பா பூரிச்சு நிக்கிறார்.



 ஒரு இயக்கு நரா ஜெயிச்சதைவிட, ஒரு மகனா ஜெயிச்சது தான் இன்னும் மனசுக்கு நிறைவா இருக்கு!''- செல்போன் ரிங்டோன்களுக்கு இடையில் சின்ன தாகச் சிரிக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் ஆழ்மனதைப் புரியவைத்த 'ஹரிதாஸ்’ படத்தின் இயக்குநர்


.
'' 'நினைத்தாலே இனிக்கும்’, 'யுவன் யுவதி’ படங்களின் இயக்குநரிடம் இருந்து 'ஹரிதாஸ்’ மாதிரி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை...''



'' 'நினைத்தாலே இனிக்கும்’ படம் 'மேக்கிங் தெரிஞ்ச டைரக்டர்’னு பேர் வாங்கிக் கொடுத்தது. அடுத்து, ஒரு காமெடிப் படம் பண்ணலாம்னு 'யுவன் யுவதி’ பண்ணேன். அது எதிர்பார்த்த விளைவு கொடுக்கலை. சினிமாவுக்குள் இருந்தாலும் எனக்கான சினிமா எதுனு குழப்பமா இருந்துச்சு. என்னைப் புதுசா அடையாளப்படுத்திக்கணும்னு தோணுச்சு. 



அப்போ 'ஹரிதாஸ்’ கதைக்கான விதை 'ஹரி’கிட்ட இருந்தே எனக்குக் கிடைச்சது. என் நெருங்கிய உறவினரின் பையன் ஹரி, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு இருந்தான். ஹரியின் மனநிலை இயல்பு நிலையில் இருக்கணும்னு அவனைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல், ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தாங்க அவன் பெற்றோர். அங்கே அவனைப் பார்த்துக்க முடியாதுனு டி.சி. கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு அரசாங்கப் பள்ளியில் அனுமதி கேட்டப்ப, அங்கேயும் தயங்கினாங்க. 'எனக்குச் சில மாசம் அவகாசம் கொடுங்க. நானும் அவன்கூடவே இருந்து பார்த்துக்கிறேன். அவன் சகஜ நிலைமைக்குத் திரும்புற வாய்ப்பைக்கூட மறுத்துடாதீங்க’னு ஹரியின் அம்மா கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க. 



தினமும் வகுப்பில் ஹரி பக்கத்தில் உட்கார்ந்து, பாடத்தைக் கவனிக்கிறது எப்படி, டாய்லெட்ல யூரின் போறது எப்படினு பொறுமையாக் கத்துக்கொடுத்தாங்க. இப்போ ஹரி ரெண்டாவது படிக்கிறான். பள்ளியில் சேர்ந்தப்போ, அவன் கடைசி ரேங்க். இப்போ கூடப் படிக்குற நாற்பது மாணவர்கள்ல ஹரிதான் முதல் ரேங்க். இதுதான் 'ஹரிதாஸ்’ உருவான கதை!''



''ஆனா, கொரிய மொழிப் படமான 'மாரத்தான்’ படத்தின் சாயல் இருக்கே உங்க படத்தில்?''



''ஆட்டிஸம் சம்பந்தமா 'மாரத்தான்’ படமும் சேர்த்து நூறு படங்களாவது வந்திருக்கும். ஒவ்வொரு படத்தின் ஒன் லைனும் ஒண்ணுதான். ஆனா, நான் படமாக்கினது ஒரு உண்மைக் கதை. 'ஹரிதாஸ்’ல க்ளைமாக்ஸ் மட்டும் எப்படி முடிக்கலாம்னு யோசிச்சப்போ, கால்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம்னு பல சாய்ஸ்கள் இருந்தன. அப்போ 'மாரத்தான்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்ல ஓட்டப்பந்தயத்தை ஃபிக்ஸ் பண்ணினேன்.



 மத்தபடி, அந்தப் படத்தை இமிடேட் பண்ணவோ, அப்பட்டமா தழுவவோ இல்லை. இதுல என் வேலையைவிட ஹரி கேரக்டரின் உணர்வைக் கச்சிதமா உள்வாங்கிட்டு வெளிப்படுத்தின ப்ருத்விராஜ்தாஸ்தான் பெரும் பாராட்டுக்கு உரியவன்!'' என்று குமரவேலன் ப்ருத்வியைப் பார்க்க, அவன் பேசத் தொடங்கினான்.



''நான் கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல்ல செவன்த் படிக்கிறேன். எனக்கு யோகா தெரியும். உடம்பை நெகிழ்வா வெச்சுப் பழகிட்டதால, வெறிச்சுப் பார்க்கிறது, கையைக் கோணலாக்கி, காலைக் குறுக்கி நடக்கிறதுனு சுலபமா செய்ய முடிஞ்சது. ஆட்டிஸம் ஸ்கூல்ல போய்ப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். அதுல சில குழந்தைங்க நம்மளைவிடப் புத்திசாலியா இருக்காங்க. 


ஷூட்டிங்ல சில சீன்ல நடிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கும். அழுதுருவேன். அப்புறம் குமரவேலன் அங்கிள், 'செல்லம்... ராஜா... உன் கையிலதான் என் படமே இருக்குடா’னு கொஞ்சிக் கேட்பார். 'சரி... எனக்கு சிக்கன் தந்தூரி மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க’னு சொல்லிட்டு நடிச்சுக்கொடுத் துடுவேன். ஆனா, கையை உதறி உதறியே மூணு மாசம் பழகிட்டேனா, இப்பவும் என் கை உதறலைக் கட்டுப்படுத்த முடியலை. ஹரி இன்னும் எனக்குள்ள அப்படியே இருக்கான். க்ளைமாக்ஸ்ல நான் 'அப்பா’னு ஒரு வார்த்தை பேசுவேன். ஆனா, நிஜ ஹரி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசினது இல்லை. அவன் பேசினா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்!''



ப்ருத்வியின் புன்னகை அவ்வளவு அழகாக இருக்கிறது!


நன்றி - விகடன்

தயாநிதி தகராறு வித் அருள்நிதி - என்ன நடந்தது? அருள் நிதி பேட்டி

போட்டி பலமா பயங்கரமா இருக்கு!''


க.நாகப்பன்
லயோலால பி.காம். சேரும்போது, 'ஸ்டூடன்ட் யூனியன்ல சேரமாட்டேன்’னு நான் உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் என்னை காலேஜ்லயே சேர்த்துக்கிட்டாங்க. அங்கே படிச்சு முடிக்கிற வரை நான் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில்கூடக்கலந்துக் கிட்டது இல்லை. அப்படி ஒரு அப்பாவி. இப்போதான் சினிமா பக்கம் வந்திருக்கேன். ஒவ்வொண்ணாக் கத்துக்கிறேன்... ஒவ்வொரு படமும், ஒவ்வொரு நாளும் புதுசா இருக்கு!'' - 'தகராறு’ படத்துக்காக வளர்த்திருக்கும் தாடி தடவிச் சிரிக்கிறார் அருள்நிதி.


 '' 'தகராறு’னு டைட்டிலே தாறுமாறா இருக்குதே?''


''நிறைய டைட்டில் யோசிச்சோம். எந்த டைட்டில் வெச்சாலும் அதுல முதல் பாதியோ, ரெண்டாவது பாதியோ ஏற்கெனவே ரிஜிஸ்டர் ஆகியிருந்தது. 'எல்லா டைட்டிலும் ஒரே தகராறா இருக்கே?’னு யோசிச்சப்ப, துரை தயாநிதி அண்ணன்தான் டக்குனு 'தகராறுன்னே டைட்டில் வெச்சிரலாம்’னு சொன்னான். பேப்பர்ல 'தயாநிதி தகராறு வித் அருள்நிதி’னு நியூஸ் வந்துச்சா... எல்லாரும் பரபரப்பாகிட்டாங்க. வில்லங்கமான டைட்டில்வெச்சா, வேகமா ரீச் ஆகிடலாம்போல!''


''என்ன தகராறு பண்ணப்போறீங்க?''



''நான் நடிச்ச படங்கள்ல இதில் காமெடிக்கு ஸ்கோப் அதிகம். நானும்... பவன், முருகதாஸ், தருண் சத்யானு என் மூணு நண்பர்களும் பீரோ திருடுறது தான் கதை. ஒரு தடவை திருடும்போது ஹீரோயினைப் பார்த்து, லவ் பண்ண ஆரம்பிச்சிருவேன். படம் பாருங்க... ரொம்ப ஜாலியா இருக்கும்!''



''உதயநிதியும் நீங்களும் சேர்ந்து படம் பண்றதா பேச்சு வந்ததே?''



''சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தா, அண்ணனோட நிச்சயம் நடிப்பேன். ஆனா, உதயநிதி அண்ணனைப் பார்த்தா, பயமா இருக்கு. முதல் படத்திலேயே அவ்ளோ பெரிய ஹிட் கொடுத்துட்டார். இப்போ 'இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பிஸியாகிட்டார். அவர்கிட்ட இருந்து நான் நிறையக் கத்துக்கணும்!''



''நீங்க நிஜத்துலயும் 'மௌனகுரு’தான்னு இனியா கிண்டல் பண்ணி இருந்தாங்களே?''



''பொதுவா, பெண்கள்கிட்ட பேசும்போது ரொம்பக் கூச்சப்படுவேன். ஆனா, இப்போ பரவாயில்லை. படத்தில் கூட நடிக்கும் ஹீரோயின்கள் ஏதாவது பேசினா, பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சிட்டேன். அதே சமயம் தேவை இல்லாமப் பேசமாட்டேன். மௌன குருவா இருப்பதில் தப்பில்லையே!''
''நீங்க நடிக்க வந்த பிறகு நிறைய ஹீரோக்கள் அறிமுகமாகிட்டாங்க. யாரையெல்லாம் கவனிக்கிறீங்க?''



''அதர்வாகிட்ட ஒரு ஃபயர் தெரியுது. ஸ்கூல்ல அதர்வா என்னை விட மூணு வருஷம் ஜூனியர். ஆனா, சினிமாவில் நானும் அதர்வாவும் ஒரே நேரத்தில்தான் என்ட்ரி ஆனோம். சடசடனு முன்னேறி மூணாவது படத்துலயே பாலா சார் டைரக்ஷன்ல நடிக்கும் அளவுக்குத் தன்னை மெருகேத்திட்டார் அதர்வா. என்னை இம்ப்ரெஸ் பண்ண இன்னொருத்தர் 'அட்டகத்தி’ தினேஷ். 


'மௌனகுரு’வில் ஃபாத ரோட மகனா சின்ன ரோல் நடிச்சி ருப்பார். ஆனா, விடாமப் போராடி 'அட்டகத்தி’ சான்ஸ் பிடிச்சு அசத்திட்டார். 'கும்கி’ படத்தில் விக்ரம் பிரபுவே கண்ணுக்குத் தெரியலை. பாகன் பொம்மனாதான் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் இருந்தார்.  'கடல்’ படத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பும் பிடிச்சிருந்தது. போட்டி பலமா, பயங்கரமா இருக்குங்க!''



நன்றி - விகடன் 

Tuesday, March 12, 2013

தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி பவர் ஸ்டார் பேட்டி @ ஆனந்த விகடன்

"அந்த ஊறுகாயே நான்தான்!''

க. ராஜீவ் காந்தி, படம்: ஜெ.தான்யராஜு
பவரைச் சந்தித்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை மாற்றங்கள்? இப்போது எல்லாம் கோடம்பாக்கத் தில் படத்துக்குப் பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போடுகிறார்கள். (ரஜினியைக்கூட சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தோடு  எழுதுவது இல்லை. ஆனால், சீனிவாசனை பவர் ஸ்டார் போடாமல் எழுத முடியவில்லை. என்ன கொடுமை பவர்?)



 அந்த வகையில் பவரைத் தன் 'அழகன் அழகி’ பட புரமோஷனுக்காக ஆடவைத்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. ஷூட்டிங் ஸ்பாட்டில் படுவேகமாக வந்த பவர் (பிஸியா இருக்காராமாம்) முதல் வேலையாக அருகில் இருக்கும் ஃபேன் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார் (விக் பறந்துரும்ல?) டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாஸ் டான்ஸ் மூவ்மென்ட்ஸை விளக்குகிறார். ''



ஓ... மை கேர்ள் நெவர் மிஸ் யூ... ஓ... ஓ...'' இதுதான் பாடல் வரி. கையில் ரோஜாப்பூ வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு கையை மேலே தூக்கிப் பாட வேண்டும். ரிகர்சலின்போது சரியாகச் செய்து குட் வாங்கும் பவர், கேமரா ஸ்டார்ட் ஆனதும் சொதப்புகிறார்.



அவர் கைகளை மேலே தூக்க, ஆவிக்குரிய செய்திகள் போன்ற கூட்டங்களில் ஆசீர்வாதம் வழங்குவதுபோல் ஆகிவிடுகிறது மூவ்மென்ட். கட்... திரும்ப பவருக்கு சொல்லித் தருகிறார்கள். அடுத்த ஷாட்டில் ஓ.கே. ஆகிறது. சும்மாவா... ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஐந்து லட்சமாச்சே? மூவ்மென்ட் ஆடி முடித்து (!) டயர்டாகி வந்த பவரிடம் பேசினோம். 



 ''தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி ஆகிட்டீங்களே?''



(வாயெல்லாம் பல் தெரிகிறது) ''அப்படிலாம் இல்லை சார். இப்ப ஆரம்பக் கட்டத்துலதான் இருக்கேன். இன்னும் நிறைய வளரணும். இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நானும் சந்தானமும் நல்லா காமெடி பண்றோம். அதனால வண்டி ஓடிக்கிட்டு இருக்கு!''



''ஒரு கோடி சம்பளம் கேட்கிறீங்களாமே?''



''நான் கேட்கிறேன். ஆனா, யாரும் கொடுக்க மாட்டேங்குறாங்களே? வாய்ப்பு இருக்கும்போதே பயன்படுத்திக்கணும் சார். இப்போ நார்மலான சம்பளம்தான் வாங்குறேன்!''



'' 'லத்திகா’ படம் ரிலீஸ் ஆனப்ப 'எனக்கு அஞ்சு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க’னு சொன்னீங்க. இப்போ கூடியிருக்குமே?''



''ரசிகர்கள் எண்ணிக்கையில ஒரு கோடியை எப்பவோ தொட்டுட்டேன் சார். மன்றங்கள் மூலமா கணக்கெடுக்கச் சொல்லியிருக்கேன். சீக்கிரமாவே அறிவிக்கிறேன். எல்லாத்துக்கும் காரணம், என்னோட ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். நான் சிரிச்சா அவங்க சிரிக்கறாங்க... நான் அழுதா அவங்க அழுறாங்க. அவங்கதான் எனக்கு எல்லாமே!''



''ஒரு கோடி ரசிகர்களை வெச்சுக்கிட்டு ஒரு பாட்டுக்கெல்லாம் ஆடலாமா?''



''சாப்பாட்டுல பல வகை இருந்தாலும் ஊறுகாய் இருந்தாத்தானே ருசி. அந்த ஊறுகாய் நான்தான். தமிழ் சினிமால சந்திரபாபுவுக்குப் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடற ஆண் நான் மட்டும்தான். இது பெருமைதானே? யார் கூப்பிட்டாலும், நான் ஆட ரெடி!''



''இப்ப 'லத்திகா’ படத்தை ரீ ரிலீஸ் பண்ணா நல்லா ஓடுமே?''


(சீரியஸாக யோசிக்கிறார்) ''நல்ல ஐடியாவா இருக்கே? என் ரசிகர் மன்ற நிர்வாகிகள்கிட்ட பேசுறேன். அவங்க ஓ.கே. சொன்னா, தமிழ்நாட்டுல ஒரு திருவிழா நடத்திரலாம்!''



''சரி... நீங்க சி.எம். ஆனா முதல் உத்தரவு என்ன போடுவீங்க?''



(பதறுகிறார் ஐயைய்யோ... இப்பதான் ஒரு ரவுண்டு ஜெயிலுக்குப் போய்ட்டு வந்திருக்கேன். இன்னொரு ரவுண்டு உள்ளே போகணும்னு ஆசைப்படறீங்களா? வேணாம் சார்... என்னை விட்ருங்க ப்ளீஸ்!''



நன்றி - விகடன்

சி.பி.செந்தில்குமாரை நக்கல் அடித்த ஆனந்த விகடன்,அட்ரா சக்க அதிர்ச்சி

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?
பேங்க் அக்கவுன்ட் இருக்கிறதோ இல்லையோ, இப்போவெல்லாம் நம் தமிழர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது. பல்லு விளக்கியதைப் பத்து வரிகளில் ஸ்டேட்டஸாகப் போடும் சில அற்ப ஆன்மாக்கள் உலாவும் இதே ஃபேஸ்புக்கில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக நீங்கள் உருவாவது எப்படி என்பதற்காகச் சின்னதாய் ஒரு கோர்ஸ்.




முதலில் காலை வணக்கம். அலுவலகம் போனதும் சேகுவேரா முகம் தெரியும் கோப்பையில் காபி நுரைத்துப்பொங்கும் படத்தைப் போட்டு தூய யுனிகோடு தமிழில் 'காலை செவ்வணக்கம்...’ என்று தட்டுங்கள். சிட்டுக்குருவி பற்றிய தலையங்கம், மன்மோகன் சிங்கின் மந்தமான பொருளாதாரக் கொள்கை, பசி பட்டினியைப் பொருட்படுத்தாத ப.சி பட்ஜெட் எனப் பத்திரிகைகளில் வரும் அலசல் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் அடித்து அப்படியே ஸ்டேட்டஸ் ஆக இறக்கிவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 



ஆர்வக்கோளாறில் அம்புட்டையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணினால், முதலுக்கே மோசம் பாஸ். நீங்க காப்பி பேஸ்ட் போராளி என்பது தெரிஞ்சு மானம் மல்லாக்கப் பறக்கும். எடுக்கவோ தொடுக்கவோங்கிற கதையா அழகா அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் கட் பண்ணி ஒரு பாரா எழுதினாலே போதும். எந்தக் காரணத்தைக்கொண்டும் ரெண்டு பாரா எழுதி காலையிலேயே எழவைக் கூட்டிறாதீங்க. ஏன்னா, இப்போது எல்லாம் மொபைல் ஃபோன்லயே ஃபேஸ்புக் பார்க்கிற வங்கதான் அதிகம். நீங்கபாட்டுக்கு பத்து பாராவை ஸ்டேட்டஸா ஆர்வக்கோளாறுல இறக்கிவெச்சீங்கன்னா டக்குனு 'மொக்கை போடுறானே சவத்து மூதி’னு கடந்து போயிருவாங்க.


அடுத்து தமிழ் வெப்சைட்களை ரெகுலரா ஒருவாட்டி காலையில எந்திரிச்சதும் படிச்சிருங்க. அதில் வரும் வித்தியாசமான செய்திகளைக் க.க.க.போ பண்ணி உங்கள் ஸ்டைலில் உல்டா அடிங்களேன். 'பெண் கிடைக்கலை... பணத்துக்கும் எருமைக்கும் பெண்ணை விலைக்கு வாங்கும் ம.பி மாப்பிள்ளைகள்’னு ஒரு மேட்டர். அதை நீங்க எப்படி எழுதணும்னா 'இந்தியாவில் பெண்களின் விகிதாச்சாரம் படிப்படியாகக் குறைந்து அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.



 கடந்த பத்தாண்டுகளில் பெண் சிசுக் கொலைகள், கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் பலியான பெண்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதன் விகிதம் 90 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது என்கிறது அதிர்ச்சியூட்டும் சர்வே ஒன்று’ என நீங்களே கண், காது, மூக்கு வைத்து அதிர்ச்சியூட்டும் 'இல்லாத சர்வே’யைப் போட்டு கூகிள் இமேஜில் ஒரு பெண் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து இருக்கும் சில்-அவுட் போட்டோவையோ பெண்ணின் கையில் விலங்கு போடப்பட்டு ரத்தம் ஒழுகும் காட்சியோ போட்டு இந்த மேட்டரை ஷேர் செய்தால், ஃபேஸ்புக்கில் இதற்காகவே உலாவும் சகப் போராளிகளால் அதிகம் லைக் பண்ணப்படும்.



சில நேரங்களில் முதல் ஸ்டேட்டஸாக எதைப் போடலாம் என தடுமாற்றம் வரலாம். ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம். எஃப்.எம். ரேடியோவில் யாழ் சுதாகர் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாட்டுப் போடுவது காதில் விழுகிறதா... கூகிள் இமேஜ் தேடுபொறியில் 'புக்ஸ் வித் ஸ்டூடண்ட்ஸ்’ எனத் தேடுங்க... தலைகீழாக மண்டையைப் பிய்த்துக்கொண்டு படிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் போட்டோக்கள் கடகடவெனக் கொட்டுகிறதா? 



அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு 'புத்தகங்களே கவனமாக இருங்கள், எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் ஓப்பனிங்கோடு கல்வி முறையை 'சாட்டை’ படத்து வசனங்களால் சாடுங்கள். என்னது, 'சாட்டை’ பட வசனங்கள் தெரியாதா? 'சாட்டை பட விமர்சனம்’ எனத் தேடுபொறியில் தேடினால், கொட்டும். உங்களுக்காகவே மாய்ந்து மாய்ந்து படத்தின் வசனங்களை தியேட்டரில் இருந்தே எழுதும் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் போன்றோர் இருக்கிறார்கள். அது போன்ற வலைப்பூக்களை நல்லா ஈயடிச்சான் காப்பி அடிச்சுக்கங்க. அப்புறம் என்ன? அசத்துங்க.


தலைகீழா நின்னாவது சுடுதண்ணீரை வெயில்ல குடிச்சுட்டு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடும் நிஜப் போராளிகளுக்கு நட்புக் கோரிக்கை கொடுத்திருங்க. அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். ஓசியில வடை சுடுறது எப்படி? ஷேரிங் நல்லதுன்னு டீச்சர் சொல்லித்தரலையா? அதுபோல நல்ல விஷயம் எவனாச்சும் எங்கிட்டாவது ஷேர் செஞ்சா கவனமா அதை நீங்க கொத்திக்கிட்டு வந்து, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கும் 50 பேருக்காவது ஷேர் பண்ணுங்க. அப்படி செஞ்சீங்கனாதான், வெளில இருந்து உங்க புரொஃபைலைப் பார்க்கிறவங்களுக்கு இந்த மனுஷன் இப்படியா 24 மணி நேரமும் மத்தவங்களுக்காக உழைச்சுக்கிட்டும் சிந்திச்சுக்கிட்டும் இருப்பான்னு  உயர்வா நினைப்பாய்ங்க. நீங்க ஷேர் செஞ்சுட்டு சாட்டிங்ல கீதாவோட கடலை போடுறதெல்லாம் அவிய்ங்களுக்குத் தெரியவாப் போகுது?



அப்புறம் என்ன பட்டையக் கௌப்புங்க... குட்டையக் குழப்புங்க... ஃபேஸ்புக் போராளியாக வாழ்த்துகள். சாருக்கு ஒரு சே குவேரா தேனீர் சட்டை பார்சேல்ல்ல்!


-ஆர்.சரண்

நன்றி - விகடன்

டெல்லி கேங்க் ரேப் ராம்சிங்க் கொலையா? தற்கொலையா? மர்மங்கள்

மருத்துவ மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளி ராம் சிங் திகார் தற்கொலை

 

புதுடில்லி:டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராம்சிங், திகார் சிறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டனர். 


இவர்களில், டில்லி, ஆர்.கே.புரத்தை சேர்ந்த ராம் சிங், 33, அவரது சகோதரர், முகேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்.பாலியல் பலாத்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட, பஸ்சின் டிரைவராக செயல்பட்டது, ராம் சிங். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக, ராம் சிங் சேர்க்கப்பட்டிருந்தான். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது.

சிறை எண்-3:


குற்றவாளிகளில் ஒருவன், மைனர் என்பதால், அவன் மட்டும், சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளான். ராம் சிங் உள்ளிட்ட, மற்ற ஐந்து பேரும், டில்லி திகார் சிறையில், தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.குற்றவாளிகள், தற்கொலை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால், ஐந்து பேருமே, திகார் சிறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு வெளியில், தனியாக ஒரு காவலர், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.ராம் சிங், சிறை எண்-3ல் அடைக்கப்பட்டிருந்தான். அதே அறையில், மேலும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை, விசாரணைக்காக, ராம்சிங், கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தான்.

இந்நிலையில், நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், குற்றவாளிகளை எழுப்புவதற்காக சென்றார். அப்போது, சிறை அறைக்குள், ராம் சிங் தூக்கில் தொங்கியதை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ராம் சிங்கை, தூக்கிலிருந்து இறக்கிய அதிகாரிகள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

உடையால் கயிறு:


தான் அணிந்திருந்த உடைகளை, ஒன்றன் பின் ஒன்றாக முடிந்து, கயிறு போல் திரித்து, அறையின் மேல் பகுதியில் உள்ள கிரில்லில் தூக்கிட்டு, அவன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள தீனதயாள் மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக, ராம்சிங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி, சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஆச்சர்யத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
 
 
 
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர், மம்தா சர்மா கூறுகையில்,"" சிறைக்குள் இருக்கும் ஒரு கைதியை, சிறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை என்றால், அந்த சிறை அதிகாரிகள், எதற்காக வேலை செய்கின்றனர் என, தெரியவில்லை,'' என்றார். திகார் சிறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான, கிரண் பேடியும், இதே சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.ராம் சிங்கின் தற்கொலை குறித்து, பல்வேறு தரப்பினரும், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
 
 
ராம் சிங், கடந்த சில நாட்களாகவே, கடும் மன உளைச்சலில் இருந்தான். சரியாக உணவு சாப்பிடுவதும் இல்லை. சக கைதிகள், ராம் சிங்கை தாக்கும் அபாயம் இருந்தது. இதனால், அவன் பயத்தில் இருந்தான். ராம் சிங்கிற்கு, ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.ஒருகை, சரியாக செயல்படாத நிலையில், எட்டு அடி உயரத்தில் உள்ள கிரில்லில், தூக்கு போடுவது, சாத்தியமற்ற ஒன்று. அவனுடைய உடைகளையே, கயிறு போல் திரித்து, தூக்கு போடுவதற்காக பயன்படுத்தியதாக கூறுவதும், நம்பும்படியாக இல்லை.
 
 
 
அந்த அறையில், ராம்சிங் மட்டும், தனியாக அடைக்கப்படவில்லை. மேலும் சில கைதிகளும், உடன் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல், ராம்சிங் தூக்கிட்டு கொண்டதாக கூறுவதையும் நம்ப முடியவில்லை. அந்த அறைக்கு வெளியில், பாதுகாவர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அவருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என கூறுவதும், ஆச்சர்யமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
 
 
.ராம் சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மற்ற நான்கு குற்றவாளிகளும், தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின், ஷீலா தீட்ஷித் கூறுகையில்,""இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானால் தான், இந்த விஷயம் பற்றி, கருத்து தெரிவிக்க முடியும்,'' என்றார்.
 
 
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் சகோதரர் கூறியதாவது:ராம் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம். அது நடக்காமல் போய் விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது என்பதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தந்தை ஆவேசம்:ராம்சிங் தந்தை கூறியதாவது:என் மகன், தற்கொலை செய்யவில்லை. அவனை, திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இந்த உண்மையை மறைக்கின்றனர். பிரேத பரிசோதனையை, எங்களுக்கு முன், வெளிப்படையாக நடத்த வேண்டும்.
 
 
 இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் மகனை, ஏற்கனவே சிறைக்குள் தாக்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ராம்சிங், தற்கொலை செய்யும் நபர் அல்ல. இந்த விஷயத்தில், ஏதோ சதி நடந்துள்ளது. விசாரணைக்காக, முழு ஒத்துழைப்பு அளித்து வந்தான். விசாரணை, விரைவாக நடப்பதில், அவனுக்கு முழு திருப்தி இருந்தது. சிறை அதிகாரிகள் தான், அவனை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, வி.கே.ஆனந்த் கூறினார்.திகார் சிறை வட்டாரங்கள் கூறியதாவது:திகார் சிறை, கடுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. 
 
 
சிறையில், கண்காணிப்பு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு பணிகளில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆகியோர், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சிறையின் அன்றாட நடவடிக்கைகளை, டில்லி போலீசார், கவனித்து வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும், திகார் சிறையில், 18 பேர் இறந்துள்ளனர். இவற்றில், 16 இறப்புகள், இயற்கையாக நிகழ்ந்தவை. மற்ற இரண்டும், தற்கொலை சம்பவங்கள். தற்போது, ராம் சிங்கையும் சேர்த்து, கடந்த, 15 மாதங்களில், இதுவரை, மூன்று பேர் தற்கொலை மூலம், உயிரிழந்துள்ளனர்.
 
 
இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. "" ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராம்சிங் தற்கொலை சம்பவத்தை அடுத்து, திகார் சிறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். திகார் சிறையில், பாதுகாப்பு விஷயத்தில், பெரிய அளவில் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
ராம்சிங் மரணம், தற்கொலை தான் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் தொடர்பான, விசாரணை முடிந்தால் தான், உண்மை நிலவரம் தெரிய வரும். ராம்சிங் கொலை செய்யப்பட்டதாக, சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்தால் தான், நடந்தது என்ன என்று தெரிய வரும். 
 
 
திகார் சிறையில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இல்லை. இதனால், ராம்சிங் அடைக்கப்பட்டிருந்த அறையில், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.திகார் சிறை முழுவதையும், எலெக்ட்ரானிக் சாதன கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து, நான் எந்த பதிலும் அளிக்க முடியாது. திகார் சிறை கட்டுப்பாடு, உள்துறை அமைச்சகம் வசம் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிக்கும், குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறித்து, மத்திய அமைச்சரவையில், இன்று விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
 
 
 
மக்கள் கருத்து 
 
 
1. குற்றவாளி ராம் சிங் யின் கூட்டாளிகள் 4 பேருடைய உடலில் போதை மாத்திரை அல்லது தூக்க மாத்திரை அதிக அளவில் கலக்கப்பட்டு உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவ்வாறு கண்டு பிடிக்கபட்டால் அது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியின் வேலை தான் .....ராம்சிங் யின் கை முறிந்து உள்ளதாள் இது நடை பெற சாத்தியமே இல்லை .....ஒவ்வொரு பிரச்சனை முடிந்தவுடன் உளவு துரையின் மூலம் மக்களின் நாடி துடிப்பை துளியமாக கனிகிறது இந்த அரசு 
 
 
 
 ..........பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரரின் தலையை துண்டித பின் மக்கள் மொத்தமாக இந்த கற்பழிப்பு சம்பவத்தை மறந்துவிடுவார்கள் என்று கணக்கிட்டு ஏமார்ந்தவுடன் சுதாகரித்து கொண்ட மதிய அரசு அடுத்தடுத்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி பின் அதனுடன் இந்த தூக்கு மரணத்தையும் மக்கள் நியாபகம் வைத்துகொண்டால் இந்த கற்பழிப்பு சம்பவத்திலிருந்து /பிரச்சனையிலிருந்து காங்கிரஸ் கட்சி சற்று கரையை போக்கலாம் என்று உளவு துறை ஆலோசனை வழங்கி இருக்கலாம் அதனால் இந்த நாடகம் நடந்து ஏறி இருக்காலாம் .............கடந்த 24 மணி நேரத்தில் மற்ற நால்வரின் உணவு ...உடலில் அதிக அளவில் தூக்க மாத்திரை /போதை மாத்திரை கலந்து உள்ளதா என்று கண்டுபிடிப்பது திருபத்தை ஏற்படுத்தலாம்


2. அரசாங்கத்திற்கு தன்னால் இவ்வளவு செலவு ஆகிறதே என்று எண்ணி உயிரை விட்டானோ என்னவோ??? எது எப்படியோ குறைந்த பட்சம் அவன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கமோ என்கிற கோணத்தில் விசாரிப்பது நல்லது......அரசாங்கத்திற்கு பாதுகாப்பு செலவை மிட்சபடுத்திய இவன் செயல் விநோதமானது தான்.....இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது......மேற்குறிப்பிட்ட குற்றசாட்பட்ட பெயர்களை வைத்து பார்த்தால் அவர்கள் உயர் ஜாதியினர் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம்..... இப்போதெல்லாம் தனி மனித ஒழுக்கம் இல்லாதது மற்றும் குற்றங்கள் செய்வது சமுதாயத்தில் அணைத்து பகுதியிலும் பரவிவிட்டது என்பது மாபெரும் வேதனைக்குரியது....சமயமும்,மதமும்,சமூகமும் மற்றும் பெற்றோரும் அவர்களின் கடமையை திறம்ப செய்யாததும் அவர்களுக்கு கொடுத்த அதீத சுதந்திரமும் தான் இந்த குற்றத்திற்கு காரணம் என்றால் அது மிகையாகாது....


3.இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில் ........ ஒரு கைதி ...... அதுவும் விசாரணை கைதி ...... விடியற்காலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் ....... சிறைத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ..... வார்டன்கள் எங்கே போனார்கள் ....... மற்ற கைதிகள் கூட இதை கவனிக்கவில்லையா ...... கண்காணிப்பு கேமராக்கள் எப்படி "கண்டு கொள்ளாமல்" இதை விட்டன ...... யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை? ..... பல சந்தேகங்கள் ........ விடை எங்கே ....


4. சிறையில் அவனைப் பரிசோதித்து வந்த மனநல மருத்துவர்கள் செயல்பாடு சரியில்லை என்கிறார் கிரண் பேடி .... தூக்கு தண்டனைக் கைதிக்குக் கூட இந்தப் பரிசோதனை நடப்பது உண்டுதான் .... ஆனா இவனுக்கெல்லாம் மனநிலை சரியா இருந்து நாட்டுக்கு என்ன ஆகணும் ????... 

5. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த நாட்டில் ஜெயிலுக்குள்ளே போனாலும் வெளியே இருந்தாலும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பான இடமே இல்லை இந்த நாட்டில். காவல் துறை நினைத்தால் எதுவும் செய்யலாம் போல் இருக்கிறது. முறைப்படி தண்டனை கொடுக்கவேண்டிய இடம் ஜெயில். முரட்டுத்தனமாக தண்டிக்க கூடாது. அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இந்த அரசு தான். ஊரெங்கும் மது கடைகள், சினிமா, சின்னத்திரை கிளுகிளுப்புகள், இன்டர்நெட் ஆபாசம், முக்கியமாக இலவசம், வேலை இன்மை, எதிலும் லஞ்சம், அரசியல் அராஜகம், இப்படிஎல்லாம் இருந்தால் மக்களின் போக்கு இப்படி தான் இருக்கும்....



நன்றி - தினமலர்

Monday, March 11, 2013

புரட்சித்தீ பற்றி எரிகிறது ! ஸ்தம்பித்தது தமிழகம்

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது! ( படங்கள் ) 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 2200 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.




மேலும், இலங்கை உடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசுவாமி உருவ பொம்மையை எரி்த்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 70 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி அளி்த்தது. இதையடுத்து காரல்மார்க்ஸ் தலைமையில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் காதர்மொய்தீன் கல்லூரி மாணவர்கள்  3 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மக்கள் கருத்து 



1. ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் நாலு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்!!! துவங்கிவிட்டோம் நல்ல செயல் என்று அதன் முடிவை அறுவடை செய்யும் வரை போராடுவோம்!!! வெற்றி கிடைக்கவில்லையெனினும் பரவாயில்லை!!! முயற்சி செய்த திருப்தியாவது இருக்கும்!!!



2, இது கட்டாயம் தேவையானது. இந்தியாவினால் அழிக்கபட்ட ஈழத்தமிழர் போராட்டமும் அதனான் அடிமையாக்கப்பட்ட ஈழத்தமிழலர் விடுதலை தமிழ் நாட்டு மாணவர்களால் பெற கடவுள் ஆசிர்வதிபாராக.
ஈழத்தமிழன் போராட முடியாது. அங்கே அது அடக்கப்பட்டுவிட்டது. மற்றைய நாடுகளில் எல்லாம் தமிழன் சிறுபாமண்மை. அந்த நாடுகள் தமிழனுக்கு மதிப்பு கொடுப்பதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் போராட முடிகிறது. தாய்த்தமிழன் தான்மற்றத்தமிழனை காப்பாற்ற வேண்டும். 




3. மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.--- இதெல்லாம் தவறு. உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். எவனாவது தவறான உசுப்பேத்தலின் பெயரில் விட்டில் பூச்சியாகாமல் ஜாக்கிரதையாக போராடவேண்டும். 



4. இப்போராட்டம் தமிழர்களை ஒன்றுபடுத்தும் போராட்டம்; இதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டின்,தமிழர்களின் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்; மத்திய அரசாங்கத்தை உலூக்கும் போராட்டம்; தேவை அமைதியான அதே சமயம் அழுத்தமான , விட்டுக்குடுக்காத போராட்டமாக இருக்கவேண்டும். லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அடக்கப்பட்டதன் விளைவே இன்று தமிழகம் முழுவதும் போராட்டம். இந்த தருணத்தில் வைகோ போன்ற தலைவர்கள் மக்கள் சக்தியை ஓன்று திரட்டி மொத தமிழகமும் இதில் பங்குபெற செய்யவேண்டும். இப்பொழுது ஒற்றுமை இல்லாவிட்டால் இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் ஒற்றுமையாக போராடமுடியாது. மக்களே நியமாக போராடும் மாணவர்கள் பின்னால் அணி திரளுங்கள் . 




5.  மனித உரிமை விதிகள் எல்லா கல்லுரிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.பின் பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

குழு நிலையில் மனித உரிமைகளாக மக்கள் கருதுவதை அரசுக்கு எடுத்து செல்லலாம்.அதற்குரிய பதில், அரசு விதிகளாக சுட்டப்படும் நிலையில் நாட்டு நடப்பு, அரசுக்கொள்கைகள் பின் பற்றும் சூழல் வரும்.
நாட்டு நடப்பு நிர்வாகம் செய்யும் முதல்வர் மக்களுக்கு போராட்டம் அரசு கொள்கைகளுக்குட்பட்டதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.உண்ணாவிரதம் இருந்தாலும் கோரிக்கையை பெற்று தக்க அரசு விதிகளின் பால் பதில் சொல்லிவிட்டால் , தக்க நடவடிக்கை எடுக்க அரசு யந்திரத்தை அணுகி விட்டால் போராட்டத்தின் நோக்கம் முற்று பெறுகிறந்தென்ற வகையில் அரசுக்கு அதற்கு மேல் பொறுப்பு இல்லை.

காவல்பணி சட்ட ஒழுங்கு துறை தர வேண்டியதில்லை.மொழி, மதம், இனம், சாதி இவற்றினடிப்படையில் எடுக்கப்படும் தீர்வு தனி மனித நம்பிக்கை.பொது நடப்பாகாது.என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டவர்.சார்பின்மை அரசுக்கொள்கை.சுயனிர்ணயத்தன்மை, நல்லிணக்கம், ஒற்றுமை இவை அரசுக் கொள்கை என அறிவுறுத்த முதல்வர் கடமைப்பட்டவர்.

அரசு விதிகளின் படி நெறிப்படுத்தப்பட்ட கோரிக்கையை அரச்சு செயலகத்துக்கு தந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரும் கடமை பெற்றவர்.


சர்வதேச நீதி மன்றத்தில் தன் நிலைப்பாட்டை ஆதரிக்க சொல்லி யாரும் வற்புறுத்த முடியாது.ஆதரவு அல்லது எதிர்ப்பு சர்வதேச அமைப்புகளை பொறுத்தவரை வெறும் வாக்குகளல்ல.அன்னிலைப்பாடு ஏன் என்ற தெளிவு, விளக்கம், தீர்வை முன்னடத்தும் சான்றுகள்.

இது போன்ற நிகழ்வுகள் தரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு சிந்திக்க , செயல்பட விடாத அவசர சூழலை தரும்.போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்து கட்சி தொண்டர்களின் ஒப்பம் பெற்று அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிப்பது அரசு நடை முறை என அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகை, விழாக்களின் போது தரும் வாழ்த்து செய்திகள் ஏன் நடைமுறையாகவில்லை நஎன்பதை அரசியல் சதலைவர்கள் சிந்திக்க வேண்டும்.சுயனிர்ணயத்தன்மை, சிந்திக்க அனுமதிக்கும் தளம்.கருத்து சுதந்திரம், நெற்ப்படுத்தி அரசுக்கொள்கைகளை ஏற்றுக்கொல்ள தரும் வாய்ப்பு.முதல்வர் பயனாக்குவாரா?.

கட்சி நிலைப்பாடும், தேர்தலும் , முதல்வரையும், மக்கள் பிரதினிதிகளையும் அரசுக்கொள்கைகள் நிறுவ தயங்கும் சூழல் ஏற்படுத்துமெனில், கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக அரசால் மாற்றம் கொள்ள செய்வது அவசியம்




லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்! 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், இன்று தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, முதலில் கல்லூரி அருகேயும், பின்னர் கோயம்பேடு அருகிலும்  உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், நேற்று இரவு கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்களை காவல்துறை விடுவித்தது.


இந்நிலையில் அவர்கள் இன்று மாலை  தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


தங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தியும், லயோலா மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன் 


 எனது ட்வீட்ஸ்


1. இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி 1 கூடங்குளம் போராட்டம் 2 நாடு தழுவிய மாணவர்கள் பிரம்மாண்டப்போராட்டம்



2. ஒவ்வொரு புரட்சி ந்டக்கும்போதும் எகத்தாளங்களைத்தாண்டியே வந்திருக்கிறது.



3. நாளை - முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு மாண்வர் போராட்டம் முன்னிலைப்படுத்தப்படும் நாள்


4. வெற்றி பெறுவதில் மட்டும் வீரம் இல்லை.போராட்டமே ஒரு வெற்றியே!



5. புரட்சித்தீ பற்ற வைக்கப்பட்டு விட்டது.சிலர் தீக்குச்சி தீர்ந்து விட்டது என எள்ளி நகையாடுகின்றனர்.காட்டுத்தீ பரவி விட்டதை அறியாமல்


6. முன்னே பாய்வதற்கு முன் சில அடிகள் பின்னோக்கி போக வேண்டி இருக்கும்.அது பின்னடைவு அல்ல


7.