Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Monday, March 25, 2013

2013 மாணவர் புரட்சி! - 456

2013 மாணவர் புரட்சி!





a

thanx - ju vi 


readers view

1.இது தமிழ் நாட்டில் காங்கிரஸை ஒழிக்கும் போராட்டமாக மாறியே ஆக வேண்டிய நிலைமை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் ஒரு சரியான தலைமைக்குழுவை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 1948 முதல் இன்று வரை சிங்களர்கள் செய்த அத்தனை கொடுமைகளையும், அதற்கு துணை போனவர்கள் பற்றிய செய்திகளையும் தொகுத்து ஒரு கையேடாக ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் பதிப்பித்து அவற்றை நாடெங்கும் உள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

மக்களுக்கு இந்த பிரச்சனை பற்றிய முழு விபரமும் தெரிந்தால் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்வோர் இதை சரியாக கையாள்வார்கள். இல்லையெனில் இது இத்தாலிய சமாச்சாரமாகவே இருக்கும்.


2. நான் பள்ளிகூடம் படிக்கும்போது ஜெயவர்த்தனேவை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றது நினைவில் நிழலாடுகிறது... மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்... அதே நேரத்தில் படிப்பிலும் கவனமாக இருங்கள்... ஏனெனில் படிப்பும் முக்கியமாச்சே...



3 நன்றி..நன்றி...நன்றி..கொடுமையாய் மாண்டுபோன அந்த அப்பாவி சனங்களின் சார்ப்பில் என் நன்றிகள் !! கோரமான மரணத்தை ...வலியை செய்த ....செய்ததையதுக்கு உதவி செய்த எல்லா ************* தண்டனை ...எதாவது கிடைக்க வேணும். அப்பவாது அந்த அப்பாவிகளின் ஆத்மா கொஞ்சமாவது ஆறுதல் அடையும். நடை பிணமாய் அந்த வலியுடன் வாழும் மிச்சமான உயிர்களுக்கும் ஒரு சின்ன ஆறுதல். நினைத்து பார்க்க முடியாத ...தாங்க முடியாத ..தினம் தினம் ..நெஞ்சு வலியோடு நாம் வாழும் வாழ்வு. எமக்கே அப்படி என்றால் ..அதை அனுபவித்தவர்கள் எப்படி வாழ்வார்கள் ? 21 centure ல் இதை செய்துவிட்டு ......ஒ ..சொல்ல வார்த்தை வருகுது இல்லை.



4. ஜெயா செய்த நல்ல காரியம் எதுவெனில், கல்லூரியின் முன்பு மட்டும் புரட்சி செய்த கல்லூரி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியதால், வீதியெங்கும், ஊரெங்கும், மாவட்டம்தோறும், மாநிலம் எங்கும் எழுச்சியின் முழக்கம். விடாதீர்கள், விடுதலை, நீதி கிடைக்கும் வரை.

Monday, March 11, 2013

புரட்சித்தீ பற்றி எரிகிறது ! ஸ்தம்பித்தது தமிழகம்

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது! ( படங்கள் ) 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 2200 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.




மேலும், இலங்கை உடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசுவாமி உருவ பொம்மையை எரி்த்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 70 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், லயோலா மாணவர்களை விடுதலை செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவபட்டன், சாயல்ராமன் ஆகியோர் களத்தில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவை கண்டித்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் லயோலா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் காரல்மார்க்ஸ் மாணவர்களை இன்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பின்னர், 100 மாணவர்களை திரட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இதற்கு காவல்துறை அனுமதியளிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி அளி்த்தது. இதையடுத்து காரல்மார்க்ஸ் தலைமையில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடி காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

சென்னை அடையாறில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் காதர்மொய்தீன் கல்லூரி மாணவர்கள்  3 ஆயிரம் பேர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மக்கள் கருத்து 



1. ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் நாலு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்!!! துவங்கிவிட்டோம் நல்ல செயல் என்று அதன் முடிவை அறுவடை செய்யும் வரை போராடுவோம்!!! வெற்றி கிடைக்கவில்லையெனினும் பரவாயில்லை!!! முயற்சி செய்த திருப்தியாவது இருக்கும்!!!



2, இது கட்டாயம் தேவையானது. இந்தியாவினால் அழிக்கபட்ட ஈழத்தமிழர் போராட்டமும் அதனான் அடிமையாக்கப்பட்ட ஈழத்தமிழலர் விடுதலை தமிழ் நாட்டு மாணவர்களால் பெற கடவுள் ஆசிர்வதிபாராக.
ஈழத்தமிழன் போராட முடியாது. அங்கே அது அடக்கப்பட்டுவிட்டது. மற்றைய நாடுகளில் எல்லாம் தமிழன் சிறுபாமண்மை. அந்த நாடுகள் தமிழனுக்கு மதிப்பு கொடுப்பதினால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் போராட முடிகிறது. தாய்த்தமிழன் தான்மற்றத்தமிழனை காப்பாற்ற வேண்டும். 




3. மதுரையி்ல் பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வங்கிக் கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணிகள் செய்ய முடியாமல் தவித்தனர்.--- இதெல்லாம் தவறு. உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். எவனாவது தவறான உசுப்பேத்தலின் பெயரில் விட்டில் பூச்சியாகாமல் ஜாக்கிரதையாக போராடவேண்டும். 



4. இப்போராட்டம் தமிழர்களை ஒன்றுபடுத்தும் போராட்டம்; இதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டின்,தமிழர்களின் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்; மத்திய அரசாங்கத்தை உலூக்கும் போராட்டம்; தேவை அமைதியான அதே சமயம் அழுத்தமான , விட்டுக்குடுக்காத போராட்டமாக இருக்கவேண்டும். லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அடக்கப்பட்டதன் விளைவே இன்று தமிழகம் முழுவதும் போராட்டம். இந்த தருணத்தில் வைகோ போன்ற தலைவர்கள் மக்கள் சக்தியை ஓன்று திரட்டி மொத தமிழகமும் இதில் பங்குபெற செய்யவேண்டும். இப்பொழுது ஒற்றுமை இல்லாவிட்டால் இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைக்கும் ஒற்றுமையாக போராடமுடியாது. மக்களே நியமாக போராடும் மாணவர்கள் பின்னால் அணி திரளுங்கள் . 




5.  மனித உரிமை விதிகள் எல்லா கல்லுரிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.பின் பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

குழு நிலையில் மனித உரிமைகளாக மக்கள் கருதுவதை அரசுக்கு எடுத்து செல்லலாம்.அதற்குரிய பதில், அரசு விதிகளாக சுட்டப்படும் நிலையில் நாட்டு நடப்பு, அரசுக்கொள்கைகள் பின் பற்றும் சூழல் வரும்.
நாட்டு நடப்பு நிர்வாகம் செய்யும் முதல்வர் மக்களுக்கு போராட்டம் அரசு கொள்கைகளுக்குட்பட்டதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்.உண்ணாவிரதம் இருந்தாலும் கோரிக்கையை பெற்று தக்க அரசு விதிகளின் பால் பதில் சொல்லிவிட்டால் , தக்க நடவடிக்கை எடுக்க அரசு யந்திரத்தை அணுகி விட்டால் போராட்டத்தின் நோக்கம் முற்று பெறுகிறந்தென்ற வகையில் அரசுக்கு அதற்கு மேல் பொறுப்பு இல்லை.

காவல்பணி சட்ட ஒழுங்கு துறை தர வேண்டியதில்லை.மொழி, மதம், இனம், சாதி இவற்றினடிப்படையில் எடுக்கப்படும் தீர்வு தனி மனித நம்பிக்கை.பொது நடப்பாகாது.என்பதை முதல்வர் மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டவர்.சார்பின்மை அரசுக்கொள்கை.சுயனிர்ணயத்தன்மை, நல்லிணக்கம், ஒற்றுமை இவை அரசுக் கொள்கை என அறிவுறுத்த முதல்வர் கடமைப்பட்டவர்.

அரசு விதிகளின் படி நெறிப்படுத்தப்பட்ட கோரிக்கையை அரச்சு செயலகத்துக்கு தந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரும் கடமை பெற்றவர்.


சர்வதேச நீதி மன்றத்தில் தன் நிலைப்பாட்டை ஆதரிக்க சொல்லி யாரும் வற்புறுத்த முடியாது.ஆதரவு அல்லது எதிர்ப்பு சர்வதேச அமைப்புகளை பொறுத்தவரை வெறும் வாக்குகளல்ல.அன்னிலைப்பாடு ஏன் என்ற தெளிவு, விளக்கம், தீர்வை முன்னடத்தும் சான்றுகள்.

இது போன்ற நிகழ்வுகள் தரும் அழுத்தம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு சிந்திக்க , செயல்பட விடாத அவசர சூழலை தரும்.போராட்டத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் தெளிவான நிலைப்பாட்டை தெரிவித்து கட்சி தொண்டர்களின் ஒப்பம் பெற்று அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிப்பது அரசு நடை முறை என அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகை, விழாக்களின் போது தரும் வாழ்த்து செய்திகள் ஏன் நடைமுறையாகவில்லை நஎன்பதை அரசியல் சதலைவர்கள் சிந்திக்க வேண்டும்.சுயனிர்ணயத்தன்மை, சிந்திக்க அனுமதிக்கும் தளம்.கருத்து சுதந்திரம், நெற்ப்படுத்தி அரசுக்கொள்கைகளை ஏற்றுக்கொல்ள தரும் வாய்ப்பு.முதல்வர் பயனாக்குவாரா?.

கட்சி நிலைப்பாடும், தேர்தலும் , முதல்வரையும், மக்கள் பிரதினிதிகளையும் அரசுக்கொள்கைகள் நிறுவ தயங்கும் சூழல் ஏற்படுத்துமெனில், கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக அரசால் மாற்றம் கொள்ள செய்வது அவசியம்




லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் வாபஸ்! 
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், இன்று தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, முதலில் கல்லூரி அருகேயும், பின்னர் கோயம்பேடு அருகிலும்  உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர், நேற்று இரவு கைது செய்யப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்களை காவல்துறை விடுவித்தது.


இந்நிலையில் அவர்கள் இன்று மாலை  தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். லயோலா கல்லூரி முதல்வர் ஜெயராஜ், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


தங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தியும், லயோலா மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன் 


 எனது ட்வீட்ஸ்


1. இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி 1 கூடங்குளம் போராட்டம் 2 நாடு தழுவிய மாணவர்கள் பிரம்மாண்டப்போராட்டம்



2. ஒவ்வொரு புரட்சி ந்டக்கும்போதும் எகத்தாளங்களைத்தாண்டியே வந்திருக்கிறது.



3. நாளை - முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் போராட்டம் பின்னுக்குத்தள்ளப்பட்டு மாண்வர் போராட்டம் முன்னிலைப்படுத்தப்படும் நாள்


4. வெற்றி பெறுவதில் மட்டும் வீரம் இல்லை.போராட்டமே ஒரு வெற்றியே!



5. புரட்சித்தீ பற்ற வைக்கப்பட்டு விட்டது.சிலர் தீக்குச்சி தீர்ந்து விட்டது என எள்ளி நகையாடுகின்றனர்.காட்டுத்தீ பரவி விட்டதை அறியாமல்


6. முன்னே பாய்வதற்கு முன் சில அடிகள் பின்னோக்கி போக வேண்டி இருக்கும்.அது பின்னடைவு அல்ல


7.