Monday, January 21, 2013

கடல்-துளசி-15 - லிப் கிஸ்-ஏன்? - ஓ பக்கங்கள் ஞாநி ???? VS மணிரத்னம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAHmoyVck_8G2iLYlVZOE0N2bFoixi3uf5QK0WZYqnKhLBRVQ_YbnPqHy7DpT55JrRvNA7NxeJogylp0O66qcYCIZK6Xscwt-eFQvWGWi03Io8kBNFvSOszoLqkxiv2Z1g_yoiHSTTbg5w/s1600/Kadal+Unseen+Movie+Posters+(4).jpg

ஒரு முத்தம்; பல கேள்விகள்!

ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.


 http://tamilspicy.com/wp-content/plugins/wp-o-matic/cache/acabe15c6d_kadal-nenjukule-picturized.jpg



நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் :

15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா?

படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா?

பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா?

இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா?

தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"


இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 http://www.cutmirchi.com/upimages/1358430697_0.jpg




உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.


இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.


அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.


சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.


தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.


இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.


http://newindianexpress.com/incoming/article1423224.ece/ALTERNATES/w460/Thulasi.jpg

அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.


என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.


எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.


பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.


காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.



thanx - kalki , pulavar tharumi

http://moviegalleri.net/wp-content/gallery/thulasi-nair-at-kadali-audio/actress_thulasi_nair_hot_photos_kadali_audio_launch_0407aa0.jpg

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 7

Photo
1. டாக்டர்க்கு விளையாட்டு புத்தி ஜாஸ்தி ஆகிடுச்சு 


ஏன்?



ஆபரேஷன் தியேட்டர் ல பேஷண்ட் கிட்டே  ஒரு கிட்னி இங்கே இருக்கு, இன்னொரு கிட்னி எங்கே?ன்னு கவுண்டமணி மாதிரி கேட்டாராம்



------------------------


2. தலைவர் பயங்கர அப்பாவி 


அதுக்காக ராட்டை சுற்றும் நெசவாளர் இனம் தான் ராட்டினமா? அப்டினு கேட்பதா? 



-----------------------------


3. சுவாமி ! எனக்கு குழந்தை வரம் வேண்டும் 


 பெண்ணே! ஆசிரமத்துக்கு வருகை தரும்  அனைத்துப்பெண்களுக்கும் அந்த வரம் உண்டு 




-------------------------


4.ஜட்ஜ் - கடந்த 5 வருஷமா உங்களால வாய் பேச முடியாதபடி பக்கவாதத்தால  பாதிக்கப்பட்டிருக்கீங்களா? 


 கைதி - எஸ் யுவர் ஆனர் , நான் பேசியே 5 வருஷம் ஆகுது 



------------------------------


5. உங்க பையன் பேரண்ட்சை ரொம்ப மதிக்கற பையனாமே?  உங்க  2 பேரையும் எப்படி கூப்பிடுவான்?  டாடி - மம்மி ? அப்பா - அம்மா?


 நோ . போடா போடி ... அவன் சிம்பு ரசிகன் 




--------------------------



இனிய காலை வணக்கம் நண்பர்களே...


6. இது பயங்கர திகில் படம்னு எப்படி சொல்றே? 



வில்லன் படம் பார்க்க வரும் ஆடியன்சையும் திரைல இருந்து வெளில வந்து கொலை பண்றானாம்



--------------------



7. டெங்கு காய்ச்சல் பற்றி தலைவர் கட்டுரை எழுதி இருக்காராமே?


ஆமா, சங்க இலக்கியத்துல , டெங்கு இலக்கியத்துல எல்லாத்துலயும் தான் அத்துபடின்னு காட்டிக்க 



------------------------

8. மாப்பிள்ளை வீட்டில் - பொண்ணு கிட்டே சில  கேள்விகள் கேட்கனும்


 யெஸ் ஆர் நோ டைப் கொஸ்டினா கேளுங்க . அதான் அவளுக்கு ஈசி



----------------


9. என்னது? மனித நெக்லஸ் போராட்டமா?


ஆமா, மனித சங்கிலி போராட்டம் அவுட் ஆஃப் ஃபேஷனாம்



----------------------


10. தலைவரே!  கறுப்பு சட்டையை ஏன் கழட்டீட்டீங்க?



சபரி மலைக்கு போய்ட்டு வந்தாச்சு




-------------------------



என்னை ஏதோ செய்தவளே !
நெஞ்சை பூ போல் கொய்தவளே ....!!



11.  நேர்மை தெய்வீகமானதுன்னு  ஏன் தலைவரே சொல்றீங்க?



 அதை யாரும் பார்த்ததே இல்லையே?



----------------------


12. கேஜ்ரிவால் பற்றி என்ன நினைக்கறீங்க? தலைவரே?



அவர் யாரு? காஜல் அகர்வால் ஃபேமிலியா?



----------------------


13. தலைவர் பாசறையில் பாடம் பயின்றவன் நான்



 ஓஹோ! பாசாங்கு பண்றதுல மன்னன்னு சொல்லு



---------------------


14. ஜட்ஜ் - இப்போ தீர்ப்பு சொல்லப்போறேன் உனக்கு சாதகமான தீர்ப்பா? பாதகமான தீர்ப்பா? கெஸ் பண்ணு பார்ப்போம்?


 கைதி - எனக்கு சாதகமான தீர்ப்பு சொல்லிட்டா உங்களுக்கு பாதகம் இல்லை




-------------------------



15. தொழில் தர்மம்னா என்ன தலைவரே?


 அரசாங்கப்பணத்தை நைஸா எப்படி நம்ம சொந்தத்தொழிலுக்கு தர்மமா போட்டுக்கறது என்பதே தொழில் தர்மம்




---------------------------------


ஹேப்பி பர்த்டே 'சின்ன கவுண்டர்' சந்தானம்..;-)
ஹேப்பி பர்த்டே 'சின்ன கவுண்டர்' சந்தானம்..;-)



16. தலைவர் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்றே?


 அமைச்சர் கிட்டே “ ஊழலே செய்ய வேணாம்னு சொல்லலை, மாட்டிக்கற மாதிரி  செஞ்சு என்னை மாட்டி விட்றாதீங்கன்னு தான் சொல்றேன்கறாரே?



--------------------------



TV டுடே

Sunday, January 20, 2013

சொய்ங் சொய்ங்க் பாடகி மகிழினி. பேட்டி @ விகடன்

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்!

ஆ. அலெக்ஸ் பாண்டியன்
படங்கள் : ஜெ.வேங்கடராஜ்
ங்கேயும் காதல்...’, 'என்னமோ ஏதோ’, 'காதல் ஒரு பட்டர்ஃப்ளை’ என மென்மெலடிகளால் மனம் மயக்கிய ஆலாப் ராஜு, 'நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா’, 'ஆடி போனா ஆவணி’ என கார்டன் வீடுகளில்கூட கானாவை உலவவிட்ட கானா பாலா, 'கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்’ என ஒரே பாட்டில் உச்சம் தொட்ட கிராமியக் குயில் மகிழினி மணிமாறன், 'வேர் இஸ் த பார்ட்டி’, 'வணக்கம் வாழவைக்கும் சென்னை’ பாடல்களில் பீட் ஏற்றி, பல்ஸ் பிடித்த முகேஷ், 'கன்னித் தீவுப் பொண்ணா... கட்டெறும்புக் கண்ணா’வாடா வாடா பையா’ என சகல தளங்களிலும் இறங்கிக் குத்திய எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், 'செங்க சூளக்காரா...’, 'அடியே இவளே... ஊருக்குள்ள திருவிழாவாம்’ என ஐஸ்க்ரீம் குரலில் வித்தியாசம் காட்டி விருதுகள் தட்டிய அனிதா...




 உலகத் தமிழர்கள் சமீபமாக அடிக்கடி முணுமுணுத்த இந்தப் பாடல்களுக்குத் தங்கள் குரல் மூலம் உயிரும் உணர்வும் சேர்த்த பின்னணிப் பாடகர்கள் இவர்கள். ஐ.டி. இளைஞன், கிராமத்துப் பெண், கிடார் இசைஞன் எனப் பல்வேறு பின்னணியில் இருந்து வந்து முத்திரை பதித்த இந்தத் தலைமுறை இளைஞர்களைச் சங்கமிக்கவைத்தேன். கோரஸ் கச்சேரியில் இருந்து இங்கே கொஞ்சம்...


''நான்தான் இந்தச் சந்திப்பின் காம்பியர். அப்பதான் கடைசியா நம்மளைப் பத்திப் பேசிக்கலாம். முதல்ல சிறந்த பின்னணிப் பாடகர்களா விகடன் தேர்ந்தெடுத்த கானா பாலாவுக்கும் மகிழினி மணிமாறனுக்கும் வாழ்த்துகள். இப்போ ஒரே பாட்டில் பட்டையைக் கிளப்பிய மகிழினி... நீங்க பேசுங்க...'' என்று லீட் கொடுத்தார் கார்த்திகேயன்.



வெட்கமும் ஆர்வமும் விழிகளில் பிரதிபலிக்கப் பேசத் தொடங்கினார் மகிழினி. ''எனக்கு வேடந்தாங்கல் பக்கம் ஒரு கிராமம். என் கணவர் நாட்டுப்புறப் பாடலாசிரியர். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 'சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் அவர் எழுதின பாட்டை நான் பாடினேன். அப்போ என் போன் நம்பரை யாரோ கேட்டுக் குறிச்சுக்கிட்டாக. அப்புறம் கிராமத்துத் திருவிழாக்கள்ல பாடிட்டு இருந்தேன். 



இப்போ திடீர்னு ஒரு நாள் இமான் அண்ணா போன் பண்ணிக் கூப்பிட்டாரு. சும்மா வந்தேன். பாடவெச்சாரு. இப்போ என்னை எல்லாருக்கும் தெரியுது. எல்லாமே கனவு மாதிரி இருக்கு... வேற ஒண்ணும் சொல்லத் தெரியலை!'' என்று நெகிழ்ந்தார், இன்னமும் வெள்ளந்தித்தனம் விலகாத மகிழினி. ''மகிழினிக்கு இனி எல்லாமே மகிழ்ச்சிதான்'' என்று அவருடைய தோள் இறுக்கிய அனிதா, கானா பாலா பக்கம் பார்வையைத் திருப்ப, குஷியாக ஆரம்பித்தார் பாலா.



''நான் ஒரு வக்கீலுங்க. ஆனா, அது பார்ட் டைம்தான். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதப் பாடல்களை கானா ஸ்டைல்ல பாடிட்டு இருந்த டிவோஷனல் சிங்கர்தான் என் அடையாளம். சினிமாவுக்கு வரணும்னு 25 வருஷமாப் போராடிக்கிட்டு இருந்தேன். ஆனா, சொல்லிக்கிற மாதிரி எதுவுமே நடக்கலை. எதிர்பார்க்காத ஒரு சமயத்துல 'அட்டகத்தி’ டைரக்டர் ரஞ்சித் என்னை வரச் சொன்னார்.



 'ஒன்சைட் லவ். அதுவும் ஃபெயிலியர். இதான் சிச்சுவேஷன். ஒரு பாட்டு எழுதிக்குடுங்க’னு சொன்னார். 'நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியு மா’னு எழுதிக் குடுத்துட்டு, அதைப் பாடியும் காமிச்சேன். அப்படியே ஸ்டுடியோல பாடுங்கனு சொல்லிப் பாடவெச்சிட் டாங்க. இப்போ பெரிய பெரிய ஆளுங்கள்லாம் என்னைப் பாராட்டுறாங்க. ஆனா, எனக்கு பாட்டுப் பாட ஆசை இல்லை. எழுதத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் அருளால என்ன வாய்ப்பு கிடைச்சாலும் பயன்படுத்திக்குவேன்!'' என்று நிறுத்த,



''என்ன ஒரு பணிவு... சூப்பர் சார்'' என்று பாராட்டிய கார்த்திகேயன், ''இப்போ யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்றேன்... ஆக்சுவலா, ஆலாப் ராஜு ஒரு சிங்கரே கிடையாது'' என சஸ்பென்ஸ் வைத்தார். ஆலாப் முகம் கலவரமாக, ''ஆரம்பத்துல நீ ஒரு கிடார் பிளேயரா இருந்தியே... அதைச் சொல்ல வந்தேன்பா. ப்ப்பா... பையன் எப்படிப் பயப்படுறான் பாருங்க...'' என்று கார்த்திகேயன் சொல்ல, கலகலவெனச் சிரித்துவிட்டார் ஆலாப்.



''ஆமா... நான் பேசிக்கலா ஒரு கிடாரிஸ்ட். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். போர்டு மீட்டிங், எம்.டி. ரெவ்யூனு தினமும் மண்டைக் காய்ச்சலா இருக்கும். 'அடப்போங்கப்பா’னு அதெல்லாம் தூக்கிக் கடாசிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். 'பொல்லாதவன்’ல கிடார் வாசிச்சேன். 'கோ’ படத்துல 'என்னமோ ஏதோ’ பாட்டுக்குக் கூப்பிட்டப்போ, கிடார் வாசிக்கத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். பார்த்தா, அந்தப் பாட்டை என்னையே பாடச் சொல்லிட்டார் ஹாரிஸ் சார். முதல் பாட்டே நல்ல ஹிட். இப்போ வரை ஆல் இஸ் வெல்!'' என்கிற ஆலாப்பின் தோள் தட்டி, ''நீ இன்னும் நல்லா வருவீங்க பிரதர்'' என்றார் முகேஷ்.



''அடுத்து வரப் போற பாடகி அவங்க குரலைப் போலவே மென்மையானவங்க!'' என்று கார்த்திகேயன் இன்ட்ரோ கொடுக்க, அவரை ஒரு முறை முறைத்துவிட்டு ஆரம்பித்தார் அனிதா.  ''நான்தான் இந்த செட்லயே சீனியர். இளையராஜா சார் என்னை அறிமுகப்படுத்தினார். ரொம்ப வருஷமா மெலடி மட்டுமே பாடிட்டு இருந்தேன். 'ஏன் மெலடி மட்டுமே பாடுற? உன் குரலுக்கு எல்லாப் பாடல்களுமே பாடலாமே’னு உற்சாகப்படுத்துன இமான் சார், அவரே 'வாடா வாடா பையா’ பாட்டுல என்னைப் பாடவும் வெச்சார். அந்தப் பாட்டுக்கு அப்புறம்தான் பளிச்னு எனக்கு ஒரு அடையாளம் கிடைச்சது. 'வாகை சூட வா’ படத்துல பாடுன 'செங்க சூளக்காரா’ பாட்டுக்கு விருதுகள் குவிஞ்சது... நான் நினைச்சே பார்க்காதது!'' என்றார் நெகிழ்வாக.



''நம்ம எல்லாருக்கும் சென்னைதான் வந்தனம் சொல்லுச்சு. ஆனா, சென்னைக்கே வந்தனம் சொன்ன நம்ம அண்ணன் முகேஷ§க்கு ஒரு ஓ...'' என்று கார்த்திகேயன் வார, ''உன்னை என்னமோனு நினைச்சேன். நல்லாப் பேசவும் செய்றியே!'' என்று அவருக்கு கவுன்ட்டர் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினார் முகேஷ்.



''சின்ன வயசுல இருந்தே பாடகன் ஆகணும்னு ஆசை. ரொம்ப வருஷமா ஸ்டேஜ் ஷோக்களில் பாடிட்டு இருந்தேன். பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் சினிமாவில் டிக்கெட் கிடைச்சது. அதுவும் ரஹ்மான் சார் மியூஸிக்ல. இருந்தாலும், அடுத்தடுத்து பளிச் பளிச்னு ஹிட்ஸ் அமையலை. 'வேர் இஸ் த பார்ட்டி’க்கு அப்புறம் 'வணக்கம் வாழவைக்கும் சென்னை’ நல்ல ஓப்பனிங் கொடுத்திருக்கு. இப்ப மெலடி, ஹிட் பீட் ரெண்டுலயும் ஃபோகஸ் பண்றேன். ஓ.கே... இப்போ எல்லாரை யும் கலாய்த்த திருவாளர் கார்த்திகேயன் அவர்கள் திருவாய் மலர்ந்தருள்வார்!'' என்று அவரை நெட்டினார்.



''விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து பாட்டு பாட்டுனுதான் திரிஞ்சேன். மூணு வயசுல சங்கீதம் கத்துக்கிட்டேன். 13 வயசுலயே மேடையில பாட ஆரம்பிச்சேன். 'ஆறு’ படத்தில் முதல் பாடல். அப்புறம் 'வாடா வாடா பையா’ நல்ல ஓப்பனிங். இப்போ 'கன்னித் தீவுப் பொண்ணா... கட்டழகுக் கண்ணா’ பாட்டு டாப் கியர் தட்டிருச்சு. அந்த உற்சாகத்துலதான் எல்லாரையும் கலாய்ச்சுட்டு இருந்தேன். இப்போ இந்தச் சந்திப்பை இனிதே நிறைவு செய்ய... திருமதி மகிழினி 'சொய்ய்ங்... சொய்ய்ங்...’ பாடுவாங்க!'' என்று கார்த்தி சொல்ல, அழகாகப் பாடத் துவங்கினார் மகிழினி. கூடவே, அத்தனை குரல்களும் சேர்ந்துகொள்ள, அங்கு நடந்தது தமிழகத்தின் செல்லக் கச்சேரி.


நன்றி - விகடன் 

கோவை பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருப்பது ஏன்? ஷோபா டே லொள் பேட்டி @ விக்டன்

ஷோபாடே ஒரு சந்திப்பு

 http://librarykvpattom.files.wordpress.com/2008/07/ldh1.jpg
ஷோபாடே இதுவரை எழுதியுள்ள நாவல்கள் நான்கு மட்டுமே. எழுதத் துவங்கியது 1988-க்குப் பிறகுதான். வரப்போகிற இவரது ஐந்தாவது புத்தகம் இந்தியக் காதல் மற்றும் செக்ஸ் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. பிரபல மற்றும் பிரச்னைக்குரிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குடன் இணைந்து எழுதுகிறார் ஷோபாடே.


 'செக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்’ என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. ஆனால், ஷோபாடேக்கு இதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை. 
''இந்த ஆண்களுக்கு செக்ஸ் எழுதப்படுவதுபற்றி ஓ.கே-தான். ஆனால், போயும் போயும் ஒரு பெண் செக்ஸ் எழுதுவதா என்பதுதான் அவர்களது கோபம். பாரதமாதாவின் பண் பாட்டுப் போர்வை கிழிந்துவிட்டதே எனும் ஆத்திரம்!'' என்கிறார் ஷோபாடே. பரபரப் பான எழுத்துபோலவே ஷோபாடேவின் வாழ்க்கையும் விறுவிறுப்பானது.


பம்பாய் கொலாபா ஏரியாவில் மேல்தட்டு ஃபிளாட் ஒன்றின் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார் ஷோபாடே.


''சொல்லுங்க... நீங்க எந்தப் பத்திரிகை?''

''ஆனந்த விகடன்.''

''ஓ... உங்க பத்திரிகைபற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கேன். ஒரு அரசியல் ஜோக் வெளியிட்டதுக்காக ஜெயிலுக்குப் போகும்படியா ஆனது உங்க ஆசிரியருக்குத்தானே?''

''ஆமாம்!''

''அராஜகம். சரி... பேட்டிக்கு நான் தயார். நீங்க கேள்விகளைத் தொடங்கலாம்...'' சட்டென்று விஷயம் தொடுகிறார்.


''வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத  புகழும் பத்திரிகைகள் ஆதரவும் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. இந்த பப்ளிசிட்டிக்குக் காரணம், உங்க பொதுஜனத் தொடர்பா அல்லது நீங்கள் கிளர்ச்சியூட்டும்படியாக செக்ஸ் எழுதுவதா?''


''நான் ஒண்ணும் செக்ஸ் எழுதும் முதல் இந்தியப் பெண் இல்லையே. எனக்கு 20 வருஷங்களுக்கு முன்னாடியே கமலாதாஸ் எழுதிட்டாங்க. அந்தக் காலகட்டத்தில், நான் இப்போ எழுதுறதைவிட அதிகமாவே எழுதியிருக்காங்க. அதனால், கதாபாத்திரங்களோட செக்ஸுவல் நினைப்புகளை மறைக்காமல் எழுதுவது மட்டுமே என் பாப்புலாரிட்டிக்குக் காரணம்னு சொல்லிட முடியாது. நீங்க சொல்ற மாதிரி என் பொதுஜனத் தொடர்பும் ஒரு முக்கியக் காரணம்.


 நான் ஏற்கெனவே ஸ்டார் டஸ்ட், சொஸைட்டி, செலிப்ரிட்டி பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன். அதுவும் தவிர, இன்னைக்கும் நாலு வெவ்வேறு பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியா எழுதுறேன். இதனால் பத்திரிகை உலகம் மொத்தமும் எனக்குப் பரிச்சயம்.


பத்திரிகைக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர ஏஜென்ஸியில் கொஞ்ச காலம் காப்பிரைட்டராப் பணிபுரிஞ்சிருக்கேன். அதுக்கும் முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். இதனால், மீடியாவில் எல்லாருக்கும் என்னைத் தெரியும். நான் எழுதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பதால், 'அட... நமக்குத் தெரிஞ்ச வங்களாச்சே’ங்கிற சந்தோஷத்தோட இவங்க எல்லாம் என்னைச் சந்திச்சுப் பேட்டி எடுக்க வர்றாங்க. இதை நான் எதுக்கு மறுக்கணும்?!''



''நீங்க பத்திரிகையாளராக ஆனது எப்படி?''


''அது ஒரு இனிமையான விபத்து. படிக்கிற காலத்தில் பத்திரிகையாளரா ஆகணும்கிற மாதிரி எந்தக் கனவும் கிடையாது. மெள்ள மெள்ள என் வாழ்க்கை திசைமாறி... பத்திரிகை, எழுத்துனு செட்டில் ஆயிடுச்சு. இது ஒருவகைப் பரிணாம வளர்ச்சி... அவ்வளவுதான்!''


'' 'டைம்’ பத்திரிகையில் பேட்டி வெளிவரும் அளவுக்கு என்ன சாதிச்சுட்டோம்னு நினைக்கிறது உண்டா?''


''சாதிச்சதால்தான் பாராட்டி எழுதினாங்கன்னு திட்டவட்டமா நம்புறேன். எப்படி சத்யஜித்ரே படங்கள் மூலமா இந்தியா என்றாலே வறுமைதான், பட்டினிதான், பிச்சைக்காரர்கள் மட்டுமே இருப்பாங்கங்கிற ஒரு பிரமை வெளிநாட்டவங்க மத்தியில் உருவாச்சோ... அதே மாதிரி இந்தியப் பெண் கள்னாலே அடிமைத்தனம்தான்கிற சிந்த னையை அவங்களுக்கு ஊட்டி, இங்கு உள்ள சில கதாசிரியைகள் புண்ணியம் கட்டிக் கிட்டாங்க.


இதனால் இந்தியப் பெண் எழுத்தாளர்கள்னாலே ஸ்டீரியோ டைப்பா நம் ஊர்ப் பெண்களோட வரதட்சணைப் பிரச்னை, குடிகாரக் கணவன்கிட்ட உதைபடும் கொடுமை, மாமியார் பிடுங்கல்னு சுத்திச் சுத்தி ஒரே மாதிரிதான் எழுதுவாங்கனு ஒரு தியரி அங்கே காலங்காலமா இருக்கு. அதில் இருந்து வித்தியாசப்பட்டு, இந்திய நகரத்துப் பெண்களின் செக்ஸுவல் சிந்தனைகள், சுதந்திரப்போக்குனு நான் எழுதும்போது... வெளிநாட்டவங்களுக்கு அது ஆச்சர்யமா இருக்கு.''


''இந்திய செக்ஸ்பத்தி என்ன நினைக்கிறீங்க?''


''இந்தியாவைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது பெரும்பாலும் கல்யாணத்துக்குப் பிறகுதான். இதில் பிரச்னை என்னன்னா, கல்யாண வாழ்க்கையில் செக்ஸைப் பிரவாகமாக உணரவோ அல்லது அனுபவிக்கவோ இங்கே பலருக்கும் புரிவது இல்லை.''


''அதனால்தான் செக்ஸ்பற்றி அதிகம் எழுதறீங்களா?''


''என்னைச் சுற்றி நடக்கற விஷயங்கள், நான் பார்க்கிறது... அனுபவித்தது... எல்லாத்துலயும் 'செக்ஸ்’ ஒரு முக்கிய அம்சமா இருக்கே... அதனால எழுதறேன். என் முதல் புத்தகமான சோஷியலைட் ஈவினிங்ஸை மூணே மாசத்தில் எழுதினேன். அதில் மேல்தட்டின் கள்ளக்காதல் விவகாரங்களையும், 'போரடிக்குது... இந்த வாழ்க்கை வேணாம்’னு விலகும் பணக்காரப் பெண்களையும் சுட்டிக் காட்டியிருந்தேன். இத்தனைக்கும் அதில் 'செக்ஸ்’ அவ்வளவா கிடையாது. ஆனாலும், அந்தப் புத்தகமேகூட நம் ஊர்ல பலருக்கும் அதிர்ச்சியா இருந்தது.


ஒண்ணு சொல்லட்டுமா... நான் எழுதுறதைப் படிச்சுட்டு யாரும் ரோட்டிலேயே கட்டிப் பிடிச்சுப் புரளப்போறது இல்லே. பின்னே எதுக் காக நான் செக்ஸ் எழுதுறதுபத்தி இவ்வளவு கேள்விகள் எழணும்?’


''பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது விஷ§வல் மீடியாவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்... உங்கள் ஐடியா எப்படி?''



''ஸ்டார் டி.வி. வந்துவிட்ட பிறகு, விஷ§வல் மீடியாவின் தாக்கமும் மவுசும் அதிகமாகி இருக்கிறது. ஆனால், என்னை மாதிரி குடும்பப் பைத்தியங்களுக்கு எல்லாம் விஷ§வல் மீடியா செட் ஆகாது. ஸ்டுடியோவுக்குப் போவது... பிரத்யேகமாக மேக்கப் போட்டு கேமரா முன் நிற்பது... பல்வேறு இடங்களுக்கும் யூனிட்டோடு அலைவது..


. போன்றவற்றுக்கு எல்லாம் எனக்கு நேரமும் இல்லை... பொறுமை யும் இல்லை. 'அப்படியானால், ஷூட்டிங்கை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே. நீங்களே தொகுத்தளியுங்களேன்!’ என்றுகூட எனக்கொரு அழைப்பு வந்தது. 'நாலாபக்கமும் வயர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டு இருக்க... என் வீடு ஒன்றும் ஸ்டுடியோ அல்ல... ஸாரி!’ என்று பதில் சொல்லிவிட்டேன்.''


'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு தமாஷ் மொழி உண்டு. இது ஷோபாடேயின் வீட்டில் நிதர்சனம். ஷோபாடேக்கு விவாகரத்து ஆன முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள். திலீப்டேவுக்கும் தனது முதல் மனைவி (அவர் உயிரோடு இல்லை!) மூலம் இரண்டு குழந்தைகள். பிறகு, ஷோபாவுக்கும் திலீப்டேவுக்கும் திருமணமாக... இருவருக் கும் பிறந்தது இரண்டு குழந்தைகள்.


மொத்தத்தில் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகளோடும் (நால்வர் டீன் ஏஜில்!) இருக்கிறார்கள், இந்தத் தம்பதியினர்.


கணவர், குழந்தைகள்பற்றி ஷோபா சொன்னார்...


''என் கணவர் டே ஒரு வங்காளி. ஷிப்பிங் கம்பெனி நடத்துகிறார். குழந்தைகளோடு வீட்டில் உட்கார்ந்தபடிக்கே எழுதுவது மாதிரி சொர்க்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தஸ்து மிக்க பத்திரிகை ஆசிரியர் வேலைக்கே முழுக்குப் போட்டேன். வீட்டில் முழு நேர இல்லத்தரசியாக இருப்பதால், நம் வசதிக்குத் தக்கபடி எழுதுவதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்பட முடிகிறது. அதை மீறி, கடைக்குட்டிகள் இரண்டும் பக்கத்தில் நின்று தொல்லை கொடுத்தாலும் அதையும் ரசித்துக்கொண்டே எழுதப் பழகிவிட்டது. அதுதான் பிடிச்சும் இருக்கு!'


'
''உங்கள் குழந்தைகள் உங்கள் எழுத்துகளைப் படிப்பது உண்டா? என்ன சொல்கிறார்கள்?''


''என் நாவல்களைப் படித்தால், அதைச் சரியான முறையில் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு இன்னும் வயதோ பக்குவமோ இல்லை. அவர்களாகப் படிக்கவும் இல்லை. மற்றபடி, நான்கு வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் என் பகுதிகளைப் (சிஷீறீuனீஸீs) படிப்பார்கள். 'இது போர்’, 'இது சூப்பர்’, 'இது சுமார்’ என்றரீதியில் எந்தப் பயமும் இன்றி கமென்ட் அடிப்பார்கள்.''


''நாற்பத்தைந்து வயதில் இரண்டு சின்னக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது சிரமமாக இல்லையா?''


''ஒரு சிரமமும் இல்லை. அவர்களது தினசரி விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேலையாட்கள் இருக்கிறார்கள். மற்றபடி அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்தாலும் பதில் சொல்ல வீட்டில்தான் நான்


எப்போதும் இருக்கிறேனே.


இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளின் பேச்சு எனக்கு ரொம்ப ரசிக்கிறது. என் குட்டிப்பெண், 'நீ ஏன் தாலி அணிவது இல்லை?’ என்று என்னைக் கேட்கிறாள். அதோடு இல்லாமல் 'தாலி அணிந்துதான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்!’ என்கிறாள். அவளுக்கு எங்கள் ஃபிளாட்டில் வசிக்கும் தமிழ்க்காரப் பெண் ஒருத்தி பயங்கரத் தோழி. அதனால்தான் அப்படி!''
''சமைப்பது உண்டா?''


''இல்லை. என் கணவர் வீட்டில் இருக்கும்போது, நான் கிச்சனில் இருப்பதைவிட, அவர் அருகே நான் இருப்பதுதான் அவருக் குப் பிடிக்கும்.''



விடைபெறும் தருணத்தில், ''தெற்குப் பக்கம் வந்தால், உங்கள் கலாசாரம், ரசனை எல்லாம் ரொம்ப அதிர்ச்சிகரமாய் இருக் கிறது!'' என்றார்.


''எங்களுக்கும் உங்கள் ஊர்ப் பக்கம் வந்தால் அப்படித்தான் தோன்றுகிறது!'' என்றோம்.


''அதற்கில்லை... அங்கெல்லாம் வந்தால் நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்கிற அளவுக்கு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அண்மையில் கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன்... அங்கே பெண்கள் ரொம்பக் கட்டுப்பெட்டிகளாக இருந்தார்கள். இத்தனைக்கும் நான் பார்த்த பெண்களிடம் பணத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!'' என்றார்.



''பெண்களின் சுதந்திரத்தைப் பணமா நிர்ணயிக்கிறது?'' என்று நாம் கேட்க...
''அதுவும் சரிதான். பெண் தன் நிலையில் தெளிவாக இருந்தால் பொருளாதாரம் அவளை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால், தெளிவான புத்திசாலிப் பெண்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்பதுதான் இந்திய லாஜிக் ஆயிற்றே!'' என்றார் ஷோபாடே அழுத்தமான புன்னகையோடு.



- சுபா வெங்கட்

நன்றி - விகடன்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjqO65j9XS7wQjKwRsEfcnd3qkrP93HvZl7eBArC8aDcpcghcMIqXRToO4Ge4ZtHMQ1iaqKAKOWpCdc8OEYwYZE20fvonHLUAjRoyKr9DDfrNABLle3_J4vHThpIOxaiS4XIYoRGe_3hid/s1600/shobha+de.jpg

ஆரோ த்ரீ டி எபக்ட்ல எடுத்தும் கிராண்ட் ஓப்பனிங் கிடைக்கலையே , ஏன்?

1. கோபம் கொல்வது ஆண்களுக்கே உரித்தான குணம் , புருஷன் கிட்டே மட்டும் கோபம் கொள்வது பெண்களுக்கே உரித்தான குணம் 


---------------------------


2. கமல் ரசிகரின் டேபிளில் - விடாமுயற்சி..” விஸ்வரூப(ம்)” வெற்றி 



-------------------------


3. தலைவா பட டைரக்டர் அஜித் ரசிகர்னு நினைக்கறேன், நண்பன், துப்பாக்கி ல கிடைச்ச நல்ல பேரை ஒழிச்சுக்கட்டாம விஜயை விட மாட்டார் போல 




------------------------


4. மேடம், முத படத்துல 15 வயசுலயே இப்படி நெருக்க்க்கமா நடிச்சிருக்கீங்களே? 



 துளசி ( இளசி ) - அலைகள் ஓய்வதில்லை பார்க்கலை? தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 



-----------------------------


5. சுதா - ஹாய் ஸ்ரீ!செக் யுவர் DM.




 DR ஸ்ரீ - டெயிலி இதே வேலையாப்போச்சு , டி எம் என்ன பேஷண்ட்டா? எதுக்கு செக் பண்ணனும்? 



----------------------------



6,. ராதா - வாம்மா , கார்த்திகா , துளசி , ஷூட்டிங்க் ஸ்பாட்ல என்ன நடந்ததுன்னு அவங்கவங்க எக்ஸ்பீரியன்சை சொல்லுங்க , நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு 




--------------------------------


7. கார்த்திகா ( மைண்ட் வாய்ஸ் ) - அக்கா நாமளே அடக்கி வாசிக்கறோம், 15 வயசுலயே நம்ம தங்கச்சி ச்சீ ச்சீ # கடல் லிப் கிஸ் லிப் லாக் 



-------------------------


8. கார்த்திக் டூ ராதா - கடல் ல லிப் லாக் கிஸ் சீன் இருக்காம், எப்படியோ நாம சம்பந்தி ஆகிடுவோம் போல 




----------------------------


9. தமிழ் மொழியின் முதல் எதிரி ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு # அப்போ தமிழர்களின் முதல் எதிரி நாமளா தலைவா? 




---------------------------


10. நான் தண்ணியடிச்சா அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் # நல்ல வேளை , ஒரு நிமிஷம் அப்டியே நான் ஷாக் ஆகிட்டேன் 




------------------------


11. டியர், நீ சொன்னா சரிதான்னு நான் எது சொன்னாலும் ஒத்துக்கனும், ஓக்கே..



. யா ஒக்கே டன்,  பை த பை யார் அந்த சரிதா?




------------------------------


12. அண்ணனுக்கு எட்டலை, தம்பிக்கு எட்டும் # உதா 1 . அழகிரி, ஸ்டாலின், சி எம் போஸ்ட் 2 சூர்யா, கார்த்தி , அனுஷ்கா




------------------------------



13. அன்புடன் அனு , இந்த டி எம்மைப்படித்ததும் அழித்து விடவும் - இப்படிக்கு சொம்புடன் சிம்பு # சும்மா




-------------------------


14. கமலியர்கள் = தாமரைப்பூவின் இதழ்கள் போல் மென்மையான பெண்கள் ( கி மு )





--------------------------


15. ஆரோ த்ரீ டி எபக்ட்ல எடுத்தும் உங்க படத்துக்கு கிராண்ட் ஓப்பனிங் கிடைக்கலையே ,ஏன்?



 யாரோ திருடி டிவிடி எடுத்து வித்துட்டாங்க போல




-----------------------------


16. கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை என்னுடையது -் சந்தானம் # ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்.உங்களுக்கு மட்டும் ஏன் இப்டி ஒரு டீலிங்?




-------------------------------------


17. 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி: சோனியா பெருமிதம் # கோஷ்டியா ?ஊழலா ?மேடம் ?




--------------------------------



18. சினேகாவுடனான காதல் நல்லது.- பிரசன்னா . காதலான சினேகா் நல்லதல்ல..- நாக் ரவி



-----------------------------


19. ஊழலை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் - சோனியா # மேடம்.ஊழலைக்கூட சகிச்சுக்கலாம்.ஆனா இந்த ஊழல் வாதிகள் கருத்து சொல்றதை ., முடியல




-----------------------------


20. பசங்க எழுதுவது எல்லாம் லட்டு தமிழ், பொண்ணுங்க எழுதுவது எல்லாம் ஜிலேபி தமிழ்



-------------------------


21. ஏய் மிஸ்டர்! முன்னே பின்னே உங்களை நான் பார்த்ததே இல்லை, லவ் லெட்டர்  தர்றீங்களே?



மிஸ்! நான் பார்த்துட்டனே முன்னே , பின்னே


------------------------


22. சார், நீங்க சொன்ன படியே யாருக்கும் லஞ்சம் தர்லை .



குட் , மிஸ்!  பாதியை ஃபாலோ பண்ணீட்டீங்க  # லஞ்சம் தவிர் , நெஞ்சம் நிமிர்




-----------------------------


23. ஆமை ”புகுந்த வீடு” உருப்படாதுன்னா  ஆமை மேரேஜ்க்குப்பிறகும் பிறந்த வீட்லயே தான் குடித்தனம்பண்ணனுமா?





-------------------------


24. நிருபர் - மேடம், உங்களுது அரேஞ்ஜ்ட் மேரேஜா? அரேஞ்ஜ்டு மேரேஜா?




நடிகை - இப்டிக்கா 1 அப்டிக்கா 1




----------------------------------------------------------





“-
25.டியர்! உனக்காக காத்திருக்கும் தருணங்களால் பாதி வாழ்க்கை முடிஞ்சுடுச்சு !




 அய் ஜாலி , அப்போ உனக்கு 50 எனக்கும் 50               



---------------------


26.

Saturday, January 19, 2013

பிரியாணி - கலக்கலான காமெடி ஃபிலிம் - வெங்கட்பிரபு பேட்டி

பிரிhttp://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc7/c9.0.403.403/p403x403/421019_424850067585441_567857404_n.jpgயாணி பிளேபாய்!

கி.கார்த்திகேயன்
'ஹலோ... சிக்கன் பிரியாணி மேக்கிங் இல்லை... உங்க 'பிரியாணி’ படத்தோட மேக்கிங் கேட்டேன்?'
 
சார்... இது அஜித் சார் சொல்லிக் கொடுத்த ஃபார்முலா. உங்களுக்காக கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்றேன். மொதல்ல பாஸ்மதி அரிசி சார்... நல்ல பிராண்ட் அரிசியா வாங்கிக்கணும். அப்புறம் செம ஸ்பைஸி மசாலா தேவைப்படும். அது கையால் அரைச்சதா இருந்தா சூப்பர். அப்புறம் அரிசியைக் களைஞ்சு போட்டு, சிக்கனைக் கழுவி....''



கண் சிமிட்டிச் சிரிக்கிறார் வெங்கட்பிரபு. கோலிவுட்டின் கொண்டாட்டமான இயக்குநர். ''என் 'பிரியாணி’ டமால் டுமீல் சிரிப்புப் பட்டாசு. டைட்டில்ல வெங்கட்பிரபு டயட்னு இருக்கும். ஆனா, அன்லிமிடெட் கொண்டாட் டம் கியாரன்ட்டி. இதுவரை கார்த்தியே பார்க்காத கார்த்தியை 'பிரியாணி’யில் அவருக்குக் காட்டியிருக்கோம். செம ஸ்டைலிஷா ஆளை மாத்தியாச்சு. மாஸ் ஹீரோ சாயலே இல்லாம, ஏதோ தேனாம்பேட்டை சிக்னல்ல பஸ்ஸுக்குக் காத்திருக்கிற பையன் மாதிரி இருப்பார். 


கிட்டத்தட்ட ஒரு காஸனோவா கேரக்டர் பண்ணியிருக்கார். தாடி, கேடி, அடிதடினு திரிஞ்சிட்டு இருந்தவரை பிளேபாயா மாத்துறதுக்காக, மீசையை ட்ரிம் பண்ணி, உடம்பை டைட் பண்ணி, செம டிரில் வாங்கிட்டோம். என்னங்க... இந்த ஹன்சிகா நேர்ல இவ்ளோ பப்ளியா இருக்காங்க. ஐஸ்க்ரீம் பொண்ணுங்க. ஆனா, மனசைக் கல்லாக்கிக்கிட்டு அவங்களை வெயிட் குறைக்கச் சொல்லி இன்னும் ஸ்லிம் ஆக்கினோம். பொண்ணைப் பார்க்கிறப்பலாம் காதலிக்கத் தோணும்.


ரெண்டு பேர் எல்.கே.ஜி-யில் இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். அவங்க அப்படியே வளர்றாங்க. அவங்க பண்ற சேட்டைகள்தான் படத்தோட காமெடி, டிராஜடி, காதல் எல்லாமே. இப்பதான் முதல்முறையா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, இந்தப் படத்தில் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமத்தியா பத்திக்கிச்சு. 'வேணும்னா பாருங்க... எங்க ரெண்டு பேருக்கும்தான் இந்த வருஷத்தோட 'பெஸ்ட் பேர்’ அவார்டு கொடுப்பாங்க’னு கார்த்தி அவ்வளவு நம்பிக்கையா இருக்கார். அந்த பெஸ்ட் பேர், கார்த்தி - ஹன்சிகா இல்லை. கார்த்தியும் ப்ரேம்ஜியும். ரெண்டு பேரும் சும்மா அள்ளு கிளப்பியிருக்காங்க!'



''ஓ... 'மங்காத்தாவுல அஜித்தை வில்லனாக்கி அதிர்ச்சி கொடுத்த மாதிரி, இந்தப் படத்தில் ப்ரேம்ஜியை ஹீரோவாக்கி ஷாக் கொடுக்குறீங்களா?'




''ஐயையோ, இப்படி எல்லாம் யோசிச்சு எனக்கு அதிர்ச்சி கொடுக்காதீங்க நண்பா! கார்த்தித£ன் ஹீரோ. சிங்கிள் ஹீரோ படம் இது. படம் முழுக்க ப்ரேம்ஜி அவர்கூடவே டிராவல் பண்ணுவார். தன்னையும் அறியாம கார்த்தி பண்ற தப்புக்கு எல்லாம் பலியாகிட்டே இருப்பார் ப்ரேம்ஜி. கடைசியில் ரெண்டு பேரும் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டுவாங்க. அதுல இருந்து எப்படி வெளியே வர்றாங்கங்கிறதுதான் பிரியாணி ரெசிப்பி!



இது யுவன் மியூஸிக் பண்ற நூறாவது படமாகவும் அமைஞ்சது ரொம்ப ஹாப்பி. செம ஜாலி சவாரி!''


''அஜித், கார்த்தினு டாப் ஹீரோக்களின் 'மோஸ்ட் வான்டட் டைரக்டரா இருக்கீங்க. ஆனா, சட்டுனு பார்த்தா ரெண்டு, மூணு படங்களில் நடிக்கிறீங்க. இன்னும் நடிப்பு ஆசை துடிச்சுட்டே இருக்கா?''



''அப்படி இல்லைங்க... 'விழித்திரு’ படத்தில் நான் நடிக்கிறது ரொம்பச் சின்ன ரோல். ஆனா, அர்த்தம் நிறைஞ்சதா இருக்கும். இயக்குநர் மீரா கதிரவன் அந்தப் படத்தில் நான்தான் நடிக்கணும்னு சொல்லி வந்து நின்னப்போ, 'தலைவா... தொழில் இப்பதான் நல்லாப் போயிட்டு இருக்கு. 


அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிறேனே... முடி கொட்டி, வெயிட் எல்லாம் போட்டு ஒரு மாதிரி இருக்கேன். இப்பப் போய் நடிக்கச் சொல்றீங்களே?’னு பாலீஷா சொல்லி மறுத்தேன். ஆனா, அவர் விடாப்பிடியா நின்னு கதை சொன்னார். மெல்ட் ஆகிட்டேன். நல்ல கதை. ஒரே ராத்திரியில் நடக்கிற சம்பவங்கள்தான் படம். என்னால் முடிஞ்ச சின்ன விஷயத்தை பண்ணிக் கொடுத்திருக்கேன்.


 மத்தபடி, நம்ம பேட்டை எப்பவும் டைரக்‌ஷன்தான். என் படங்கள்லகூட நடிக்கக் கூடாதுனு தெளிவா இருக்கேன். அதுவும் போக, எங்க வீட்ல ஏற்கெனவே ப்ரேம்ஜினு ஒரு மகா நடிகன் கொடுக்கிற டார்ச்சர் பத்தாதா?'


 http://vanavilfm.com/wp-content/uploads/2012/07/sneha-prasanna-reception-stills01-275x244.jpg

'
''சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க... எது பிடிச்சிருந்தது?''


''ரொம்பப் பிடிச்சது 'வழக்கு எண் 18/9’. மத்தபடி, 'அட்டகத்தி’, 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு ரசிகர்களோட குட் புக்ஸ்ல இருக்கும் எல்லாப் படங்களும் பார்த்தேன். 'அட்டகத்தி’ ரஞ்சித் 'சென்னை28’-ல என் கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தான். அந்தப் படத் துக்கு ஸ்டோரி போர்டு வரையுறதுக்காக சேர்த்துக் கிட்டேன்.


 ஆனா, ஒரு சின்ன கார்ட்டூன்கூட அவன் வரையலை. ஏன்னா, நான் அவனுக்கு ஸ்டோரியே சொல்லலை. அந்தப் படத்துல என்னங்க ஸ்டோரி இருந்துச்சு. ஆனா, இப்போ 'அட்டகத்தி’யில் அட்டகாசப்படுத்திட்டான். இப்போ வர்ற பசங்க மிரட்டுறாங்க. உங்களை எல்லாம் பார்த்தா பயமா இருந்தாலும், ஆல் தி பெஸ்ட் பசங்களா!''  



'' 'ஏப்ரல் மாதத்தில்’, 'உன்னைச் சரணடைந்தேன்’ சமயங்கள்ல, இன்னைக்கு இருக்கிற வெங்கட்பிரபு பத்தி ஏதாவது ஐடியாவாவது இருந்ததா?'



''சுத்தமா இல்லைங்க. இப்ப நான் இப்படி இருக்கேன்னா அதுக்குக் காரணம், என் நட்பு வட்டம்தான். அதுவும் என் மேல் நானே வைக்காத நம்பிக்கையை என் நண்பன் எஸ்.பி.பி.சரண் வெச்சான். என்னை நம்பி ஒரு படம் எடுத்தான். 'சென்னை 28’ வெற்றி என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ருச்சு. என்னதான் திறமை, வசதி எல்லாம் இருந்தாலும், உங்களைத் தாங்கித் தூக்கிவிடுறதுக்குன்னு ஒரு ஆதரவு வேணும். அது நட்பா இருக்கலாம், குடும்பமா இருக்கலாம், அப்படி உங்களைச் சுத்தி இருக்கிற நல்ல மனசுக் காரங்ககிட்ட உங்களை முழுசா ஒப்படைங்க... எல்லாமே நல்லதா நடக்கும்!''


 ''நன்றி - விகடன்


http://reviews.in.88db.com/images/Biriyani-movie-launch/Biriyani-movie-launch-photos.jpg

சிவா மனசுல சக்தி ( 2009) - சினிமா விமர்சனம்

http://cineidentity.com/wp-content/uploads/2011/08/Siva-Manasula-Sakthi.jpgகூரியர் ஆஃபீஸ்ல வேலை செய்யற ஹீரோவை ஹீரோயின் மிலிட்ரிமேனா?ன்னு லூஸ் மாதிரி கேக்குது ,  இதுக்கு முன்னால மிலிட்ரி ஆளுங்களையே பார்க்காதவர் போல . கூரியர் பாய் ஆன ஹீரோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஆமாங்கறார். ஹீரோயின் அவர் பங்குக்கு தான் ஒரு ஏர் ஹோஸ்டல்னு ஒரு பொய்யை அள்ளி விடறார். முதல் ரயில் சந்திப்புல இவங்க 2 பேரும் சந்திப்பு பின் அடிக்கடி  மீட்டிங்க், கலாட்டா , ஊடல் , காதல் ஆகுது . இவங்களோட ஜாலி கலாட்டா சந்திப்புகள் தான் கதை 

எம் ராஜேஷ் தான் இந்தப்படத்தோட முதல் ஹீரோ . இவரோட படங்கள்ல எப்பவும் கதை 1 தான் , திரைக்கதை சம்பவங்கள் மட்டும் கொஞ்சம் மாறும் , ஆனா எல்லாப்படங்களும்  ஹிட் .


ஜீவா தான் ஹீரோ . இவருக்கு ரொமாண்டிக் காட்சிகளை விட சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் காட்சிகள் நல்லா கை கொடுக்குது. டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப மோசம் இதுல . நல்லா நீட்டா பண்ணி இருந்திருக்கலாம்,. 


 அனுயா தான் ஹீரோயின். பெரும்பாலான தமிழர்களுக்குப்பிடிக்காத சதுர முகம். அளவில் மாறுபட்டாலும் அழகில்  ஒன்று பட்ட இரு உதடுகள் . இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் அபாரம். எந்த டிரஸ் போட்டாலும் டைட்டா போடனும் என்ற இவரது உயரிய லட்சியம் வாழ்க . பாட்டம் லெக்கின்ஸ் டைட்டா போடுவது போல டாப்ஸும் டைட்டாவே போடறார்.  இவர் லோ கட் பனியனில் வரும் காட்சிகள் 7 . லோ ஹிப்பில் வரும் காட்சிகள் 5 .  ( காட்சியை மட்டும் தான் எண்ணுனேன், வேறு எதையும் பார்க்கலை ) 


 காமெடிக்கு சந்தானம் .  ஷூட்டிங்க் ஸ்பாட்டையே கலகலப்பாக்கி விடும் சுபாவம் உள்ளவர் படத்தை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு போவதில் மன்னன்.  படத்துல 48 காமெடி விட் அடிக்கறார்.. 



ஹீரோவின் அம்மாவாக வரும் ஊர்வசி கலக்கல் காமெடி நடிப்பென்றால் , ஹீரோயின் அப்பாவாக வரும் பேராசிரியர் கு ஞான சம்பந்தன்  செம குணச்சித்திரம்


 http://www.kollyfans.com/wp-content/uploads/2009/06/2151.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1.  எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் காட்சியில் அனுயாவின் டிரஸ்ஸிங்க் அபாரம் .டார்க் ப்ளூ சார்ட்ஸ் , லைட் ஸ்கை ப்ளூ டாப்ஸ்ல அவர் ஸ்டைலாக நடந்து போகும்போது  கேமரா மேன் அவர் பின்னாலயே ஃபாலோ பண்ணி நம்மையும் அழைத்து செல்கிறார். 


2. எல்லா பாடல்களுமே ஹிட் .  எம் ஜி ஆரு இல்லீங்கோ  நம்பியாரு இல்லீங்கோ நாங்க எல்லாம் நடுவிலங்கோ ,  ஒரு அடங்காப்பிடாரி உன் மேல நான் ஆசை வெச்சேன் , எப்படியோ மாட்டிக்கிட்டேன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ( சூப்பர் ஹிட் )  , தித்திக்கும் தீயாய் , ஒரு பார்வையில்  என 6 பாடல்களும் ஓக்கே 



3. ஹீரோ ஹீரோயினிடம் சமாதானம் பண்ணும் சீனில் 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயின் தன் காதில் மாட்டி இருந்த வாக் மேன்  ஒயரை கழட்டிகாட்டி அவனை நோஸ் கட் பண்ணும் காட்சி , அப்போது காட்டப்படும் ரிவர்ஸ் ஒயிட் & பிளாக் காட்சி  குட் . அந்த சீனுக்கு காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பி ஜி எம் அழகு 



4. சந்தானத்தின்  புது செல் ஃபோனை ஹீரோ உடைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் காமெடி கலாட்டா 




5. ஹீரோயினின்  அண்ணன் சத்யன் காதலுக்கு ஹீரோ உதவுவது , அதுவும் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் கொள்ள ஒரு காரணம் என மென்மையான முக முறுவலில்  சொல்வது கிளாசிக் 



6. க்ளைமாக்சில் ஊர்வசி & கோ ஹீரோயின் வீட்டில் செய்யும் அலப்பரைகள்  செம . ஹீரோவின் தங்கை கேரக்டர் எப்போதும் ஒரே ஒரு பனியனுடன் வருவதும் இளமைக்கண்காட்சி


7. ஹீரோயின் உட்பட பல பெண் கேரக்டர்கள் ஸ்லீவ் லெஸ்ஸில் வருவதும் அவர்கள் கூந்தலை சரி செய்யும் காட்சியும் போனஸ் போஸ் 

http://www.cinemahour.com/gallery/gossip/54549503anuya.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோ ஹிப்பி தலையுடன் , தாடியுடன் இருக்கார் , அவரைப்பார்த்து ஹீரோயின் நீ மிலிட்ரி மேனா? என கேட்பது.. இத்தனைக்கும்  ஹீரோ அப்போதான் கேம்ப்ல இருந்து வர்றதா சொல்றார். 




2. ஹீரோயின் மவுண்ட் ரோட்டில் ஆட்டோ கிடைக்குமா? என பார்க்கறார். மவுண்ட் ரோட்ல ஊர்வலம் என்று ஹீரோ சொல்லி பைக்கில் லிஃப்ட் தர்றார். பின் ஹீரோயின் ஹீரோவை கழட்டி விட்டுட்டு அவர் பாய் ஃபிரண்ட்டிடம்  ஜாயின் ஆகறார். எதுக்கு தலையை சுத்தி மூக்கைத்தொடனும் . அந்த பாய் ஃபிரண்ட் கூடவே பைக்ல வரலாமே? 




3. ஒரு சீனில் ஹீரோயின் “ உன்னைத்தவிர என்னை யாரும் இவ்வளவு உரிமையா நீ வா போ என ஒருமைல கூப்டதே இல்லை , எல்லாரும் வாங்க போங்க என மரியாதையா தான் கூப்பிடுவாங்க என  ஹீரோவிடம் உருகறார். ஆனா அந்த தாடிக்காரன் எப்பவும் ஹீரோயினை “ ஒருமைல நீ வா போ என தான்  அழைக்கிறார். அப்போ ஹீரோ பக்கத்துலயே தான் இருக்கார். டக்னு ஏன் ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதும் கேட்கலை? 




4. மாடர்ன் கேர்ள் ஆன ஹீரோயின் முதல் முறை விசிட் செய்யும் ஹீரோவின் வீட்டில் ஹீரோவின் அம்மா தண்ணீர் தரும்போது ஏன் கவ்விக்குடிக்கறார்? அண்ணாந்துதானே குடிக்கனும்? 



5. ஹீரோ கலைஞர் மாதிரி ஒரு பொய்யர் எனவும் , டாக்டர் ராம்தாஸ் மாதிரி மாத்தி மாத்தி பேசற ஆள் எனவும் ஹீரோயினுக்கு ஓப்பனிங்க்லயே தெரிஞ்சுடுது. மிலிட்ரி ஆஃபீசர்னு பொய் எக்சட்ரா.  அப்படி இருக்கும்போது அவரோட பிறந்த நாள் எப்போன்னு சொன்னதை  மட்டும் எப்படி நம்பி ஏமாறுகிறார்? அவர் வீட்டுக்கு வந்தவர் ஒரு வார்த்தை கூட  ஹீரோவோட அம்மா கிட்டேயோ தங்கை கிட்டேயோ அதை ஏன் கன்ஃபர்ம் பண்ணலை?



6. ஹீரோயின் கோபத்துல க்ரீட்டிங்க்ஸை அவர் வீட்டு மாடில இருந்து தூக்கி வீசறார் , அப்போ காட்டுவது சாதா பேப்பர்ஸ் , கீழே விழுந்து கிடப்பது கலர் க்ரீட்டிங்க்ஸ் ( காரணம் க்ரீட்டிங்க்ஸ் லேசா இருக்காது எஃபக்ட்டோட பறக்காது என்பதால் பேப்பரை தூக்கி போட்டு ஷூட் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன் )



7. மேரேஜ்க்கு முன்பே மேட்டர் முடிக்கறேன், அப்போதான் மேரேஜ் என்ற ஹீரோவின் கண்டிஷனுக்கு ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கொள்வது அபத்தம் . எதேச்சையா மேட்டர் நடந்தா அது சகஜம், ஆனா பிளேன் பண்ணி கண்டிஷன் போட்டு இந்தக்காலத்துப்பொண்ணுங்க அதுக்கு ஒத்துக்குவாங்கன்னு தோணலை ( நான் யார்ட்டயும் கேட்கலை, எனக்கா தோணுச்சு )


8. ஹீரோயின் மேட்டர் முடிஞ்ச பின் நடக்கும் ஊடலில் பிரிவது ஓக்கே , ஆனா ஹீரோ போய் ஓவரா பம்முவது நம்ப முடியல . மாசமா இருப்பது ஹீரோயின். பம்ம வேண்டியது அவர் தானே?

 http://wetactress.files.wordpress.com/2010/11/anuya-sundarc-nagaram-tamil-movie-wet-saree-photo-pics-stills-gallery-0001.jpg





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மிஸ் , ஓடற ட்ரெயின்ல படிப்பது கண்ணுக்கு நல்லதில்லை , பேசலாமே?



2. மிலிட்ரில இருக்கறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

 ரொம்ப தாங்கஸ்ங்க


 நான் ஜெனரலாத்தான் சொன்னேன்


 அந்த பொது வுல நானும் வந்துடறேனே?




3.  நான் ஏர்ஹோஸ்டலா இருக்கேன்


 ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சாக்லேட் கொடுத்து லட்டு மாதிரி இருப்பாங்களே அவங்க தானே?



4. எப்போ நாம மறுபடி மீட் பண்ணலாம்?


 2 நாள்ல காஷ்மீர் போகனும்னு சொன்னீங்க?


 அது பிராப்ளம் இல்லை , ஆஃபீசர் கிட்டே பேசிக்கலாம்




5. பக்கத்துல ஒரு ஃபிகர் வந்துடக்கூடாது , ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க




6.  டேய்.. ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டியா?


 ஏண்டா இப்படி லோக்க்கலா பேசறே?



7.   ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சரக்கு  கொடுத்து ஸ்மைலி பண்ணுவாங்களே அவங்க தானே?  டேய் டேய் இண்ட்ரோ குடுடா.


 உனக்கு ஒத்து வராது விடுடா..




8.  சத்யன் - டென்ஷனா இருக்கேன் , அதான் தண்ணி அடிச்சுட்டு இருக்கேன்

 நீ அடிக்கறதுக்குப்பேரு தண்ணின்னா . நாங்க அடிக்கறதுக்குப்பேரு.. 




9.  நான் ஒரு முஸ்லீம் ஃபிகரை லவ் பண்றேன்


 பிரியாணிக்கு ஆசைப்பட்டு ...?




10.  வண்டலூர் ஜூவுக்கு


 பிக்னிக்கா போறோம்? சைட் அடிக்கப்போறோம். எதுக்கு ஃபேமிலி?



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHwb-hvtu1z-jip752Mdn-XDzJ5QbQgobi8tOsb5XtuM0HPeebWVnXppASfzfzXBFzkyzUBtjw4NARp2G9FjpisK1rDqpyerAw8HX7miTcasVa4MCqgd0kr5rjpuwE5WJDRnoC5cUl0E/s1600/Anuya9.jpg



11. எங்கடா இங்கே?

 திருப்பதில மொட்டை அடிக்க இங்கே டோக்கன் தர்றதா சொன்னாங்க




12,.  நம்ம கண்ட்ரிலயே ஏன் இந்த உலகத்துலயே ஃபிகரை கரெக்ட் பண்ண ஃபேமிலியோட வந்த முத ஆள் நீ தான்



13.  இங்க்லீஷ்   புக் ? பொம்மை தானே பார்க்கறே? உண்மையை சொல்லிடு




14.  ஜூராசிக் பார்க் ல வர்றது மாதிரி தண்ணீர் டம்ளர் எல்லாம் அதிருது  ஏதோ பூகம்பம் வருது போல, எல்லாரும் தாழ்வான இடத்தை  நோக்கி போங்க..


 அட ஷகீலா



15.  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபிலிங்க்



`16.  ஷகீலா -   என் பேக் கிரவுண்ட் தெரியாம பேசாதீங்க


டேய், பேக்ல ஏதோ கிரவுண்ட் இருக்காம் , வாங்கி வளைச்சிப்போட்றலாமா?


17.  நீங்க ஏர் ஹோஸ்டல்னு பொய் சொன்னது கூட ஓக்கே , ஆனா ஃபிளட் சவுண்ட் வெச்சே அது எந்த கம்பெனி ஃபிளைட்னு சொன்னீங்க்ளே ஒரு ரீலி முடியல




 18.  ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்ளவ் ஃபாஸ்ட்டா ரைமிங்க் சொன்னதில்லையே? நீ? எப்படிடா?



19.  மச்சி ஃபோன்ல ஸாரி கேட்கறாடா


 கேட்டா ஸாரியோட பிளவுசும் வாங்கிக்குடுடா மச்சான்



20. பச்சைத்தண்ணி குடிக்கறதைக்கூட பாயாசம் குடிப்பது மாதிரி சீன் போடும் வேலை எல்லாம் இங்கே வெச்சுக்காதே



 http://media.mademan.com/chickipedia/uploaded_photos/8/88/Anuya_Bhagvath-skin-eyes-lovely-hot-chickipedia_thumb_585x795.jpg



21. லேட்டஸ்ட் மாடல் ஃபோனா?  அவ கட் பண்ண பிறகும் அவ பேசறது கேட்குதே?



22.  என்ன வேண்டிக்கிட்டே?


 உனக்கு 40 வயசு வரை மேரேஜே ஆகக்கூடாதுன்னு



23.  நீ என்ன வேண்டிக்கிட்டே>?


 என்னை மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு புருஷனா வரனும்னு



24. நீங்க என்ன வேண்டிகிட்டீங்க? சொல்லப்பிரியம்னா சொல்லலாம்


 சொல்லலைன்னா விடவா போறீங்க?


25.  அந்தப்பொண்ணால நீ பிளாக்ல டிக்கெட் வைக்கும் நிலைமைக்கு வருவே நு சத்தியமா  நான் நினைச்சுப்பார்க்கலை , ஆனா நீ சத்யம் தியேட்டர் வாசல்ல டிக்கெட் வித்துட்டு இருக்கே


26. சாரி , நான் ஆம்பளைங்களோட சினிமா பார்ப்பதில்லை



27. எனக்கு வர்றதெல்லாம் இங்க்லீஷ் கால் தான், ஐ டோண்ட் நோ ஒய்? ஆட்டோமேடிக்கலி கம்மிங்க் யூ நோ ?



28.  என்னது ? நைட் ஷோ போலாமா?னு கேட்கறா? அவங்கப்பன் வாட்ச்மேனோ?



29.  ஓடாத நல்ல படத்துக்கு கூட்டிட்டு வந்து ஓரமா உக்கார்ந்து படம் பார்க்கனும்


30. அய்யய்யோ இப்போ என்ன பண்றது?

 இந்த ஸ்க்ரீனை கிழிச்சு தூக்குப்போட்டுக்க


 http://s2.hubimg.com/u/3636329_f520.jpg



 31.  அதிகமா ஆஃப் அடிக்கற ஆம்பளையும் , அதிகமா பீர் குடிக்கும் பொம்பளையும்  வாமிட் எடுக்காம வீட்டுக்குப்போனதா சரித்திரமே இல்லை


32,.  என்ன சொன்னா?

 திருந்திடறேன், ஒரு வாரம் டைம் குடுன்னு கேட்டா


33. போற பாதை தப்பா இருந்தாலும் போய்ச்சேரும் இடம் கோயிலா இருக்கனும்


 எவ்ளவ் பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க ?


34.  ஓ! உனக்குத்தான் கல்யாணமா?

 ஏன் குரு? எனகெல்லாம் மேரேஜே ஆகக்கூடாதா?



35.  உனக்காக அவனுங்களை அடிச்சதா நினைச்சியா? நமீதா, அசின்,, த்ரிஷா இவங்களை எல்லாம் மொக்கை ஃபிகர்னு சொன்னானுங்க.. அதுக்குத்தான் அடிச்சேன்

 அப்போ எனக்காக அடிக்லையா? டொண்ட்ட டொண்ட்ட டொண்ட்டடொயிங்க்  ( நாயகன் தீம் மியூசிக் )




36.  என்னைக்கேக்காமலேயே கேக் வாங்கிட்டு வந்திருக்கே?


 37. இதுவரை எந்தப்பெண் கிட்டேயும் நான் சாரி கேட்டதில்லை, யூ ஆர் வெரி லக்கி யூ நோ?

38. லவ் பண்றவனுங்க கூட மட்டும் தண்ணி அடிக்கக்கூடாது


39.  உங்க லவ் ஸ்டோரியை எடுத்து விடுங்க


ஆடோகிராஃப் மாதிரி 7 மணீ நேரம் இழுக்கும்..


40 பொண்ணுங்களை நம்புனா நடு ரோட்டுக்குத்தான் வரனும்

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/ce/SMS_Poster.JPG/220px-SMS_Poster.JPG





41.  வீட்டுக்குப்போய் சேர்ந்துட்டியா? நடு ரோட்ல கிடக்கிறயா? அதை தெரிஞ்சுக்கத்தான்  கூப்பிட்டேன்

 எப்டி மச்சி கரெக்ட்டா கண்டு பிடிச்சே? நடு ரோட்ல தான் கிடக்கேன்




42.  எனக்கு உனை பிடிக்கலை .. உவ்வே



43.  டேய் அவ போய் 6 மாசம் ஆகுது. யார் கிட்டே பேசிட்டு இருக்கே?


44.  கோயில் கோயிலா ஏன் என்னை அலைய விடறே?  கல்யானம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா சொல்லிட வேண்டியதுதானே?


 சரி இஷ்டம் இல்லை


45,.  உன்னை நம்ப முடியாது . நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்தா
க்கூட இது நமக்குப்பிரந்ததா?ன்னு கேட்டு நக்கல் அடிப்பே , அப்புறம் எல்லாம் தமாஷ்ம்பே..


46. மாமா , என்னை மன்னிச்சுடுங்க


 நான் என்ன கட்சியா நடத்தறேன்? என் கால்ல போய் விழுந்துட்டு?




 சி பி கமெண்ட் - காமெடி பிரியர்கள் , சந்தானம் ரசிகர்கள் , காதலர்கள் என அனைவரும் பார்க்கலாம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx991AN8j03faWXhM7oSkS_JfSSpxxyVJplb9F08RQdcYocL_vmxxBKo_P6g6TT-gTOKrY1PiPTg5rc8SxGM_S1dPGfcQMtynGThkYLkiqU3I3FfkqAcOAYoi6cqY4xJCdgnrQvnLaipOj/s1600/Anuya_Bhagvath_Hot_Photo_Stills_01.jpg



ராதாவை ரசித்தவர்கள் முறைப்படி கார்த்திகா , துளசியை ரசிக்கக்கூடாது , ஏன்? பொழப்பத்த ஆராய்ச்சி

Photo
1. : அழகான,எடுப்பான  பெண்கள் கிட்ட பேசும் போது அவங்க கண்கள மட்டும் பாத்து பேசற சக்தி இல்லைன்னா ஸ்டைலா கூலிங்க் கிளாஸ் போட்டுக்கோ




----------------------



2. மேடம், செல்லப்பிராணியா நீங்க ஏன் நாய் வளர்த்தலை? 



அது சிரமமா இருக்கு, நகம் வளர்த்தறேன், அதுதான் ஈசி



-----------------------



3. ஃபேஸ்புக் ல அவசரப்பட்டு லைக் பண்ணா ஆறு நாள் சிறைவாசம் , ஃபிகர்  ஃபேசை  லைக் பண்ணி பிரபோஸ் பண்ணா ஆயுள் முழுதும் இதயச்சிறை நேசம்




---------------------------



4.  ஜவுளிக்கடைக்கு வந்தா மட்டும் என் சம்சாரம் நீயா? நானா கோபிநாத்தா மாறிடுவா..


 எப்படி?


 எத்தனை சேலை சேல்ஸ் மேன் எடுத்துப்போட்டாலும் வேற வேற அப்டிம்பா.. சின்ன லேசில் எடுத்துட மாட்டா.




---------------------------------


5. தலைவா’ அரசியல் படமா..? – இல்லவே இல்லை - விஜய்! #  சினிமா டிக்‌ஷனரில இல்லைன்னா இருக்குன்னு அர்த்தம் - எஸ் ஏ சி




--------------------------



Photo: How Many Likes for this Power Family.?




6. திருட்டு சி.டிக்களை தவிர்க்க வேண்டும்:-தேவயானி  # ஓ! உங்க ஆத்துக்காரர் சொந்தப்படம் எடுக்கறாரா? ஒரு பய சீண்ட மாட்டான்,டோண்ட் ஒர்ரி




-------------------------



7. அன்பே! நீ பந்தி பரிமாறும்போது கல்யாண மண்டபத்தில் எழுதிய அவசரக்கவிதை - ஒரு பூதமே சாதம் பரிமாறுதே ! அடடே!! 





----------------------------



8. ஆந்திரா பிகர் , திருவள்ளுவர் , புரட்சித்தலைவி மூவருக்கும் உள்ள ஒற்றுமை - அதி காரம் னா பிடிக்கும் 





------------------------------



9. புத்திசாலி பெண்கள் புத்திசாலி ஆண்களை மணப்பதில்லை, ஏன்னா ஆம்பளை புத்திசாலியா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டான் # நான் ஒரு முட்டாளுங்க 




-------------------------------------



10. தலைவா!  உங்க பட கேப்சனா “ டைம் டூ லீடு”-னு போட்டிருக்கீங்க, ஆனா அரசியல் படம் இல்லைங்கறீங்க, குழப்பமா இருக்கே? 



குழம்புன குட்டைல தான் மீன் பிடிக்க முடியும்




-----------------------
@ ென்னிமை டேக்கன் பை மஓன் கேம

வாக்கிங் எவிடென்ஸ்தூங்கி எழுந்ததும் காபியோடு வந்து ் மனைவி உபச்சாரம் பண்ணா உஷார்.ஏதோ பெரிய தண்டச்செலவு காத்திருக்கு



11. திருக்குறளை முதன்முதலில் அரசு பேருந்துகளில் எழுதியது நான்தான் - கலைஞர் #  உங்களை முதன்முதலாக  நடுஇரவில் கைது செய்தது நான்தான் - ஜெ #சும்மா



----------------------------


12. ரைட்டர் ஜெயமோகனைக்கண்டாலே சுஹாசினி க்கு ஆகாது , வசன வாய்ப்பு பறிப்பு  @ கடல் # கேயாஸ் தியரி # சும்மா




------------------------


 13. மிஸ்! உங்க மீது ஒரு இனம் புரியாத காதல்.



 நான் கவுண்டர் இனம் , புரிஞ்சுதா? ஓடிப்போயிடு




--------------------------



14. தலைவா ஸ்டில்லுல விஜய் இடது கையை தூக்கி  கை அசைப்பது போல் இருப்பது மரியாதைக்குறைவா இருக்குன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?




-----------------------


15. 'நடப்பு' சாம்பியன் ='அஜித்' ,'வெளி நடப்பு' சாம்பியன் = ஜெ , நீண்ட நாள் நடப்பு சாம்பியன் - வை கோ  # ரீ மிக்ஸ் ரீட்டாவின் டைரியிலிருந்து



---------------------------


இனி நான் பேசமாட்டேன் அறிக்கைதான் பேசும்!
இனி நான் பேசமாட்டேன் அறிக்கைதான் பேசும்!



16. டியர்,புதுசா கல்யாணம் ஆன புருஷனுக்கு  அட்லீஸ்ட் ஒரு மாசமாவது மரியாதை தரனும் புரிஞ்சுதா?


சரிடா



------------------------------



17. டியர்: என்கிட்ட உங்களுக்கு அதிகமா பிடிச்சது என்ன..



    ஹி ஹி உனக்கு மூளை கம்மி  , கொழுப்பு ஜாஸ்தி



------------------------------


18. மிஸ், எதுக்கு 10 நிமிஷத்துக்கு ஒருக்கா துப்பட்டாவை அட்ஜஸ் பண்ணிட்டே இருக்கீங்க?



டேய் , கபோதி நல்லா பாரு , நான் இன்னைக்கு துப்பட்டாவே போடலை



---------------------



19. எங்க ஆஃபீஸ்ல புதுசா 5 பொண்ணுங்க வேலைக்கு சேர்ந்திருக்காங்க .



. ஓஹோ , ராஸ்கல், முத நாள்ல யே அவங்க புதுசுன்னு எபப்டி கண்டு பிடிச்சே?



-----------------------


20. கோத்தகிரியில் ஜெ. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னையில் # எக்சேஞ்ச் ஆபரா?




-----------------------------



Photo: இனிய இரவு வணக்கம் நண்பர்களெ....


21.  தூங்கி எழுந்ததும் காபியோடு வந்து ் மனைவி உபச்சாரம் பண்ணா உஷார்




ஏன்?



.ஏதோ பெரிய தண்டச்செலவு காத்திருக்கு




----------------------------



22. ட்ரெயினில் லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட் கிடையாதுன்னா ,டவுன் பஸ்ல பிகர் இல்லைன்னா யூத் அடுத்த வண்டிக்காக காத்திருப்பான் # பயண விதிகள்




---------------------------



23. சொந்த சம்சாரத்தை அழ வைக்காதீர்கள் ்


ஏன்?



..ஒரு நிமிஷம் அவங்க அழுதா ஒரு மாசம் நாம அழ வேண்டி இருக்கும.திட்டம் போட்டு பழி வாங்குவாங்க




-------------------------


24. மேடம் 4 படி மாவுல செஞ்ச முறுக்கை 15 நாள் ல எப்டி சாப்புட்டீங்க?




 வாய் 1 தான்.பல் 32 இருக்கே




----------------------------



25. பேசுன சம்பளத்தை விட அதிகமாவே குடுத்துட்டாரு.



ஓஹோ.எவ்ளவ் பேசுனாரு?எவ்ளவ் குடுத்தாரு ?




10000 ரூபா பேசுனது.10001 குடுத்தாரு



-------------------------------




Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...



26. ஹீரோயினுக்கு 15 வயசு.ஹீரோவுக்கு 19 வயசு.வில்லனுக்கு மட்டும் ஏன் 45 வயசு ?# கடல்



-----------------------



27. பிரபல ட்வீட்டர் - எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.அதனால நடிக்க மாட்டேன்.




 பிரபல நடிகை - எனக்குக்கூட எல்லாம் ஆகிடுச்சு.நான் நடிக்கல?




--------------------------


28. என் காதலருக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி.பெண்களை தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்




. ம்க்கும்.டியூப் லைட்டுடீ நீ



-------------------------------


29. திருக்குறளை எழுதியவர் யார் ?



 மு க ஸ்டாலின். - சுவடில எழுதுனது வள்ளுவர்.பஸ் ல எழுதுனது எங்கப்பா.



-------------------------



30. இனி நடிப்பதற்கு கை வசம் படமே இல்லை எனும்போது நமீதாவுக்கு வயசு (ம்) 42 # நீதி- சாதிக்க வயசு ஒரு தடை




---------------------------




Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...



31. நீஎபொ வ - ல சாய்ந்து சாய்ந்து பாட்டு ஹிட்.தலைவா படத்துல விஜய் பெஞ்ச்ல சாய்ஞ்சு உக்காந்திருக்கார் # அதே மாதிரி ஹிட் ? ஹி ஹி




-------------------------------



32. நாளை ஒரு எக்சாம் சென்ட்டர் வாசல்ல சைட் அடிக்கப்போறேன்.உங்க எல்லார் வாழ்த்தும் வேணும் # பார்ப்போம்.இதுக்கு எத்தனை விஷ் னு



-------------------------


33. சரவணன் மீனாட்சி தொடர்ல மச்சினனுக்கு ஒருத்தன் 85,000 ரூ க்கு வாட்ச் கிப்ட்.மச்சினின்னாக்கூட ஏத்துக்கலாம் # நம்ப முடியவில்லை




-------------------------


34. அடுத்தவங்க மானிட்டரை ஆம்பளை பார்க்க மாட்டான்.என்னா மானிட்டர் மட்ட சரக்கு.அவன் ரேஞ்ஜுக்கு காஸ்ட்லி சரக்கைதான் பார்ப்பான்




-------------------------------



35. ராதாவை ரசித்தவர்கள் முறைப்படி கார்த்திகா , துளசியை ரசிக்கக்கூடாது # மக முறை ஆகுது




-----------------------------



Photo: ஆல் மக்கள்ஸ் வண்க்கம் வண்க்கம்...எப்டி கிறீங்கோ...



36.  இன்னும் ஆழமா யோசிச்சா கடல் படத்து ஜோடியே தூரத்து உறவு முறைல அண்ணன் தங்கை தான்





---------------------------


37. சார்.கடல் ஏன் ஓடலை ?




மணி ரத்னம் - டேய் லூசு கடல் குதிரை தான் ஓடும்.கடல் எப்டி ஓடும்? அது ஒரே இடத்துலதான் இருக்கும்



------------------------



38. ராதா தன் முத பொண்ணுக்கு கார்த்தி ( k) கா ன்னு பேர் வெச்சது ஏன்னு புரிஞ்சுடுச்சு.துளசி தான் புரில



-------------------------------



39. கண்டுபிடிச்சுட்டேன்.யுரேகா.பாரதியாருக்கு பிடிச்சது துளசி .பாரதி ராஜா குரு.நன்றிக்கடன்




--------------------------


40. அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம் பாடலுக்கு நடனம் ஆடிய சோபியா ஹக் ஜனவரி மாதம் 17 ல் மரணம். இவர் கேன்சர் பேஷண்ட் ;(





-----------------------------





Photo: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்:புகாரி 1419.