Showing posts with label ANUYA. Show all posts
Showing posts with label ANUYA. Show all posts

Saturday, January 19, 2013

சிவா மனசுல சக்தி ( 2009) - சினிமா விமர்சனம்

http://cineidentity.com/wp-content/uploads/2011/08/Siva-Manasula-Sakthi.jpgகூரியர் ஆஃபீஸ்ல வேலை செய்யற ஹீரோவை ஹீரோயின் மிலிட்ரிமேனா?ன்னு லூஸ் மாதிரி கேக்குது ,  இதுக்கு முன்னால மிலிட்ரி ஆளுங்களையே பார்க்காதவர் போல . கூரியர் பாய் ஆன ஹீரோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஆமாங்கறார். ஹீரோயின் அவர் பங்குக்கு தான் ஒரு ஏர் ஹோஸ்டல்னு ஒரு பொய்யை அள்ளி விடறார். முதல் ரயில் சந்திப்புல இவங்க 2 பேரும் சந்திப்பு பின் அடிக்கடி  மீட்டிங்க், கலாட்டா , ஊடல் , காதல் ஆகுது . இவங்களோட ஜாலி கலாட்டா சந்திப்புகள் தான் கதை 

எம் ராஜேஷ் தான் இந்தப்படத்தோட முதல் ஹீரோ . இவரோட படங்கள்ல எப்பவும் கதை 1 தான் , திரைக்கதை சம்பவங்கள் மட்டும் கொஞ்சம் மாறும் , ஆனா எல்லாப்படங்களும்  ஹிட் .


ஜீவா தான் ஹீரோ . இவருக்கு ரொமாண்டிக் காட்சிகளை விட சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் காட்சிகள் நல்லா கை கொடுக்குது. டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப மோசம் இதுல . நல்லா நீட்டா பண்ணி இருந்திருக்கலாம்,. 


 அனுயா தான் ஹீரோயின். பெரும்பாலான தமிழர்களுக்குப்பிடிக்காத சதுர முகம். அளவில் மாறுபட்டாலும் அழகில்  ஒன்று பட்ட இரு உதடுகள் . இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் அபாரம். எந்த டிரஸ் போட்டாலும் டைட்டா போடனும் என்ற இவரது உயரிய லட்சியம் வாழ்க . பாட்டம் லெக்கின்ஸ் டைட்டா போடுவது போல டாப்ஸும் டைட்டாவே போடறார்.  இவர் லோ கட் பனியனில் வரும் காட்சிகள் 7 . லோ ஹிப்பில் வரும் காட்சிகள் 5 .  ( காட்சியை மட்டும் தான் எண்ணுனேன், வேறு எதையும் பார்க்கலை ) 


 காமெடிக்கு சந்தானம் .  ஷூட்டிங்க் ஸ்பாட்டையே கலகலப்பாக்கி விடும் சுபாவம் உள்ளவர் படத்தை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு போவதில் மன்னன்.  படத்துல 48 காமெடி விட் அடிக்கறார்.. 



ஹீரோவின் அம்மாவாக வரும் ஊர்வசி கலக்கல் காமெடி நடிப்பென்றால் , ஹீரோயின் அப்பாவாக வரும் பேராசிரியர் கு ஞான சம்பந்தன்  செம குணச்சித்திரம்


 http://www.kollyfans.com/wp-content/uploads/2009/06/2151.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1.  எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் காட்சியில் அனுயாவின் டிரஸ்ஸிங்க் அபாரம் .டார்க் ப்ளூ சார்ட்ஸ் , லைட் ஸ்கை ப்ளூ டாப்ஸ்ல அவர் ஸ்டைலாக நடந்து போகும்போது  கேமரா மேன் அவர் பின்னாலயே ஃபாலோ பண்ணி நம்மையும் அழைத்து செல்கிறார். 


2. எல்லா பாடல்களுமே ஹிட் .  எம் ஜி ஆரு இல்லீங்கோ  நம்பியாரு இல்லீங்கோ நாங்க எல்லாம் நடுவிலங்கோ ,  ஒரு அடங்காப்பிடாரி உன் மேல நான் ஆசை வெச்சேன் , எப்படியோ மாட்டிக்கிட்டேன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ( சூப்பர் ஹிட் )  , தித்திக்கும் தீயாய் , ஒரு பார்வையில்  என 6 பாடல்களும் ஓக்கே 



3. ஹீரோ ஹீரோயினிடம் சமாதானம் பண்ணும் சீனில் 10 நிமிஷம் கழிச்சு ஹீரோயின் தன் காதில் மாட்டி இருந்த வாக் மேன்  ஒயரை கழட்டிகாட்டி அவனை நோஸ் கட் பண்ணும் காட்சி , அப்போது காட்டப்படும் ரிவர்ஸ் ஒயிட் & பிளாக் காட்சி  குட் . அந்த சீனுக்கு காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பி ஜி எம் அழகு 



4. சந்தானத்தின்  புது செல் ஃபோனை ஹீரோ உடைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் காமெடி கலாட்டா 




5. ஹீரோயினின்  அண்ணன் சத்யன் காதலுக்கு ஹீரோ உதவுவது , அதுவும் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் கொள்ள ஒரு காரணம் என மென்மையான முக முறுவலில்  சொல்வது கிளாசிக் 



6. க்ளைமாக்சில் ஊர்வசி & கோ ஹீரோயின் வீட்டில் செய்யும் அலப்பரைகள்  செம . ஹீரோவின் தங்கை கேரக்டர் எப்போதும் ஒரே ஒரு பனியனுடன் வருவதும் இளமைக்கண்காட்சி


7. ஹீரோயின் உட்பட பல பெண் கேரக்டர்கள் ஸ்லீவ் லெஸ்ஸில் வருவதும் அவர்கள் கூந்தலை சரி செய்யும் காட்சியும் போனஸ் போஸ் 

http://www.cinemahour.com/gallery/gossip/54549503anuya.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோ ஹிப்பி தலையுடன் , தாடியுடன் இருக்கார் , அவரைப்பார்த்து ஹீரோயின் நீ மிலிட்ரி மேனா? என கேட்பது.. இத்தனைக்கும்  ஹீரோ அப்போதான் கேம்ப்ல இருந்து வர்றதா சொல்றார். 




2. ஹீரோயின் மவுண்ட் ரோட்டில் ஆட்டோ கிடைக்குமா? என பார்க்கறார். மவுண்ட் ரோட்ல ஊர்வலம் என்று ஹீரோ சொல்லி பைக்கில் லிஃப்ட் தர்றார். பின் ஹீரோயின் ஹீரோவை கழட்டி விட்டுட்டு அவர் பாய் ஃபிரண்ட்டிடம்  ஜாயின் ஆகறார். எதுக்கு தலையை சுத்தி மூக்கைத்தொடனும் . அந்த பாய் ஃபிரண்ட் கூடவே பைக்ல வரலாமே? 




3. ஒரு சீனில் ஹீரோயின் “ உன்னைத்தவிர என்னை யாரும் இவ்வளவு உரிமையா நீ வா போ என ஒருமைல கூப்டதே இல்லை , எல்லாரும் வாங்க போங்க என மரியாதையா தான் கூப்பிடுவாங்க என  ஹீரோவிடம் உருகறார். ஆனா அந்த தாடிக்காரன் எப்பவும் ஹீரோயினை “ ஒருமைல நீ வா போ என தான்  அழைக்கிறார். அப்போ ஹீரோ பக்கத்துலயே தான் இருக்கார். டக்னு ஏன் ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏதும் கேட்கலை? 




4. மாடர்ன் கேர்ள் ஆன ஹீரோயின் முதல் முறை விசிட் செய்யும் ஹீரோவின் வீட்டில் ஹீரோவின் அம்மா தண்ணீர் தரும்போது ஏன் கவ்விக்குடிக்கறார்? அண்ணாந்துதானே குடிக்கனும்? 



5. ஹீரோ கலைஞர் மாதிரி ஒரு பொய்யர் எனவும் , டாக்டர் ராம்தாஸ் மாதிரி மாத்தி மாத்தி பேசற ஆள் எனவும் ஹீரோயினுக்கு ஓப்பனிங்க்லயே தெரிஞ்சுடுது. மிலிட்ரி ஆஃபீசர்னு பொய் எக்சட்ரா.  அப்படி இருக்கும்போது அவரோட பிறந்த நாள் எப்போன்னு சொன்னதை  மட்டும் எப்படி நம்பி ஏமாறுகிறார்? அவர் வீட்டுக்கு வந்தவர் ஒரு வார்த்தை கூட  ஹீரோவோட அம்மா கிட்டேயோ தங்கை கிட்டேயோ அதை ஏன் கன்ஃபர்ம் பண்ணலை?



6. ஹீரோயின் கோபத்துல க்ரீட்டிங்க்ஸை அவர் வீட்டு மாடில இருந்து தூக்கி வீசறார் , அப்போ காட்டுவது சாதா பேப்பர்ஸ் , கீழே விழுந்து கிடப்பது கலர் க்ரீட்டிங்க்ஸ் ( காரணம் க்ரீட்டிங்க்ஸ் லேசா இருக்காது எஃபக்ட்டோட பறக்காது என்பதால் பேப்பரை தூக்கி போட்டு ஷூட் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன் )



7. மேரேஜ்க்கு முன்பே மேட்டர் முடிக்கறேன், அப்போதான் மேரேஜ் என்ற ஹீரோவின் கண்டிஷனுக்கு ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கொள்வது அபத்தம் . எதேச்சையா மேட்டர் நடந்தா அது சகஜம், ஆனா பிளேன் பண்ணி கண்டிஷன் போட்டு இந்தக்காலத்துப்பொண்ணுங்க அதுக்கு ஒத்துக்குவாங்கன்னு தோணலை ( நான் யார்ட்டயும் கேட்கலை, எனக்கா தோணுச்சு )


8. ஹீரோயின் மேட்டர் முடிஞ்ச பின் நடக்கும் ஊடலில் பிரிவது ஓக்கே , ஆனா ஹீரோ போய் ஓவரா பம்முவது நம்ப முடியல . மாசமா இருப்பது ஹீரோயின். பம்ம வேண்டியது அவர் தானே?

 http://wetactress.files.wordpress.com/2010/11/anuya-sundarc-nagaram-tamil-movie-wet-saree-photo-pics-stills-gallery-0001.jpg





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மிஸ் , ஓடற ட்ரெயின்ல படிப்பது கண்ணுக்கு நல்லதில்லை , பேசலாமே?



2. மிலிட்ரில இருக்கறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

 ரொம்ப தாங்கஸ்ங்க


 நான் ஜெனரலாத்தான் சொன்னேன்


 அந்த பொது வுல நானும் வந்துடறேனே?




3.  நான் ஏர்ஹோஸ்டலா இருக்கேன்


 ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சாக்லேட் கொடுத்து லட்டு மாதிரி இருப்பாங்களே அவங்க தானே?



4. எப்போ நாம மறுபடி மீட் பண்ணலாம்?


 2 நாள்ல காஷ்மீர் போகனும்னு சொன்னீங்க?


 அது பிராப்ளம் இல்லை , ஆஃபீசர் கிட்டே பேசிக்கலாம்




5. பக்கத்துல ஒரு ஃபிகர் வந்துடக்கூடாது , ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க




6.  டேய்.. ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டியா?


 ஏண்டா இப்படி லோக்க்கலா பேசறே?



7.   ஏர்ஹோஸ்டல்னா ஃபிளைட்ல சரக்கு  கொடுத்து ஸ்மைலி பண்ணுவாங்களே அவங்க தானே?  டேய் டேய் இண்ட்ரோ குடுடா.


 உனக்கு ஒத்து வராது விடுடா..




8.  சத்யன் - டென்ஷனா இருக்கேன் , அதான் தண்ணி அடிச்சுட்டு இருக்கேன்

 நீ அடிக்கறதுக்குப்பேரு தண்ணின்னா . நாங்க அடிக்கறதுக்குப்பேரு.. 




9.  நான் ஒரு முஸ்லீம் ஃபிகரை லவ் பண்றேன்


 பிரியாணிக்கு ஆசைப்பட்டு ...?




10.  வண்டலூர் ஜூவுக்கு


 பிக்னிக்கா போறோம்? சைட் அடிக்கப்போறோம். எதுக்கு ஃபேமிலி?



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmHwb-hvtu1z-jip752Mdn-XDzJ5QbQgobi8tOsb5XtuM0HPeebWVnXppASfzfzXBFzkyzUBtjw4NARp2G9FjpisK1rDqpyerAw8HX7miTcasVa4MCqgd0kr5rjpuwE5WJDRnoC5cUl0E/s1600/Anuya9.jpg



11. எங்கடா இங்கே?

 திருப்பதில மொட்டை அடிக்க இங்கே டோக்கன் தர்றதா சொன்னாங்க




12,.  நம்ம கண்ட்ரிலயே ஏன் இந்த உலகத்துலயே ஃபிகரை கரெக்ட் பண்ண ஃபேமிலியோட வந்த முத ஆள் நீ தான்



13.  இங்க்லீஷ்   புக் ? பொம்மை தானே பார்க்கறே? உண்மையை சொல்லிடு




14.  ஜூராசிக் பார்க் ல வர்றது மாதிரி தண்ணீர் டம்ளர் எல்லாம் அதிருது  ஏதோ பூகம்பம் வருது போல, எல்லாரும் தாழ்வான இடத்தை  நோக்கி போங்க..


 அட ஷகீலா



15.  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபிலிங்க்



`16.  ஷகீலா -   என் பேக் கிரவுண்ட் தெரியாம பேசாதீங்க


டேய், பேக்ல ஏதோ கிரவுண்ட் இருக்காம் , வாங்கி வளைச்சிப்போட்றலாமா?


17.  நீங்க ஏர் ஹோஸ்டல்னு பொய் சொன்னது கூட ஓக்கே , ஆனா ஃபிளட் சவுண்ட் வெச்சே அது எந்த கம்பெனி ஃபிளைட்னு சொன்னீங்க்ளே ஒரு ரீலி முடியல




 18.  ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்ளவ் ஃபாஸ்ட்டா ரைமிங்க் சொன்னதில்லையே? நீ? எப்படிடா?



19.  மச்சி ஃபோன்ல ஸாரி கேட்கறாடா


 கேட்டா ஸாரியோட பிளவுசும் வாங்கிக்குடுடா மச்சான்



20. பச்சைத்தண்ணி குடிக்கறதைக்கூட பாயாசம் குடிப்பது மாதிரி சீன் போடும் வேலை எல்லாம் இங்கே வெச்சுக்காதே



 http://media.mademan.com/chickipedia/uploaded_photos/8/88/Anuya_Bhagvath-skin-eyes-lovely-hot-chickipedia_thumb_585x795.jpg



21. லேட்டஸ்ட் மாடல் ஃபோனா?  அவ கட் பண்ண பிறகும் அவ பேசறது கேட்குதே?



22.  என்ன வேண்டிக்கிட்டே?


 உனக்கு 40 வயசு வரை மேரேஜே ஆகக்கூடாதுன்னு



23.  நீ என்ன வேண்டிக்கிட்டே>?


 என்னை மாதிரி ஒரு நல்ல பையன் உனக்கு புருஷனா வரனும்னு



24. நீங்க என்ன வேண்டிகிட்டீங்க? சொல்லப்பிரியம்னா சொல்லலாம்


 சொல்லலைன்னா விடவா போறீங்க?


25.  அந்தப்பொண்ணால நீ பிளாக்ல டிக்கெட் வைக்கும் நிலைமைக்கு வருவே நு சத்தியமா  நான் நினைச்சுப்பார்க்கலை , ஆனா நீ சத்யம் தியேட்டர் வாசல்ல டிக்கெட் வித்துட்டு இருக்கே


26. சாரி , நான் ஆம்பளைங்களோட சினிமா பார்ப்பதில்லை



27. எனக்கு வர்றதெல்லாம் இங்க்லீஷ் கால் தான், ஐ டோண்ட் நோ ஒய்? ஆட்டோமேடிக்கலி கம்மிங்க் யூ நோ ?



28.  என்னது ? நைட் ஷோ போலாமா?னு கேட்கறா? அவங்கப்பன் வாட்ச்மேனோ?



29.  ஓடாத நல்ல படத்துக்கு கூட்டிட்டு வந்து ஓரமா உக்கார்ந்து படம் பார்க்கனும்


30. அய்யய்யோ இப்போ என்ன பண்றது?

 இந்த ஸ்க்ரீனை கிழிச்சு தூக்குப்போட்டுக்க


 http://s2.hubimg.com/u/3636329_f520.jpg



 31.  அதிகமா ஆஃப் அடிக்கற ஆம்பளையும் , அதிகமா பீர் குடிக்கும் பொம்பளையும்  வாமிட் எடுக்காம வீட்டுக்குப்போனதா சரித்திரமே இல்லை


32,.  என்ன சொன்னா?

 திருந்திடறேன், ஒரு வாரம் டைம் குடுன்னு கேட்டா


33. போற பாதை தப்பா இருந்தாலும் போய்ச்சேரும் இடம் கோயிலா இருக்கனும்


 எவ்ளவ் பெரிய வார்த்தை சொல்லீட்டீங்க ?


34.  ஓ! உனக்குத்தான் கல்யாணமா?

 ஏன் குரு? எனகெல்லாம் மேரேஜே ஆகக்கூடாதா?



35.  உனக்காக அவனுங்களை அடிச்சதா நினைச்சியா? நமீதா, அசின்,, த்ரிஷா இவங்களை எல்லாம் மொக்கை ஃபிகர்னு சொன்னானுங்க.. அதுக்குத்தான் அடிச்சேன்

 அப்போ எனக்காக அடிக்லையா? டொண்ட்ட டொண்ட்ட டொண்ட்டடொயிங்க்  ( நாயகன் தீம் மியூசிக் )




36.  என்னைக்கேக்காமலேயே கேக் வாங்கிட்டு வந்திருக்கே?


 37. இதுவரை எந்தப்பெண் கிட்டேயும் நான் சாரி கேட்டதில்லை, யூ ஆர் வெரி லக்கி யூ நோ?

38. லவ் பண்றவனுங்க கூட மட்டும் தண்ணி அடிக்கக்கூடாது


39.  உங்க லவ் ஸ்டோரியை எடுத்து விடுங்க


ஆடோகிராஃப் மாதிரி 7 மணீ நேரம் இழுக்கும்..


40 பொண்ணுங்களை நம்புனா நடு ரோட்டுக்குத்தான் வரனும்

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/ce/SMS_Poster.JPG/220px-SMS_Poster.JPG





41.  வீட்டுக்குப்போய் சேர்ந்துட்டியா? நடு ரோட்ல கிடக்கிறயா? அதை தெரிஞ்சுக்கத்தான்  கூப்பிட்டேன்

 எப்டி மச்சி கரெக்ட்டா கண்டு பிடிச்சே? நடு ரோட்ல தான் கிடக்கேன்




42.  எனக்கு உனை பிடிக்கலை .. உவ்வே



43.  டேய் அவ போய் 6 மாசம் ஆகுது. யார் கிட்டே பேசிட்டு இருக்கே?


44.  கோயில் கோயிலா ஏன் என்னை அலைய விடறே?  கல்யானம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னா சொல்லிட வேண்டியதுதானே?


 சரி இஷ்டம் இல்லை


45,.  உன்னை நம்ப முடியாது . நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்தா
க்கூட இது நமக்குப்பிரந்ததா?ன்னு கேட்டு நக்கல் அடிப்பே , அப்புறம் எல்லாம் தமாஷ்ம்பே..


46. மாமா , என்னை மன்னிச்சுடுங்க


 நான் என்ன கட்சியா நடத்தறேன்? என் கால்ல போய் விழுந்துட்டு?




 சி பி கமெண்ட் - காமெடி பிரியர்கள் , சந்தானம் ரசிகர்கள் , காதலர்கள் என அனைவரும் பார்க்கலாம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx991AN8j03faWXhM7oSkS_JfSSpxxyVJplb9F08RQdcYocL_vmxxBKo_P6g6TT-gTOKrY1PiPTg5rc8SxGM_S1dPGfcQMtynGThkYLkiqU3I3FfkqAcOAYoi6cqY4xJCdgnrQvnLaipOj/s1600/Anuya_Bhagvath_Hot_Photo_Stills_01.jpg



Thursday, August 16, 2012

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSeERahkW3FrinX3kv96aJlBYM1FIcymjisKUBvAi9Cwa8fCd3A3hSpsB5SS9dt9QINCdZNT2PeYbHhSENnKSaBIb8j-3Ez8me5LN1fMMh5x3LtboFBedITOkgjrkyhqMrudgvdvuN9Hw/s1600/Naan-Songs.jpg

சின்ன வயசுலயே  கலைஞர் மாதிரி கிரிமினல் மைண்ட் உள்ள ஒருத்தர் ஜெ பண்ற மாதிரி ஆர்ப்பாட்டம்,ஆணவம், படோடபம் எல்லாம் இல்லாம மு க ஸ்டாலின் மாதிரி அடக்கி வாசிச்சு கமுக்கமா , அமுக்கமா, டாக்டர் ராம்தாஸ் மாதிரி சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை பச்சோந்தியா மாத்திக்கிட்டுப் பண்ற ஆள் மாறாட்ட தில்லு முல்லுகள் தான் கதை..


சின்ன வயசுலயே ஹீரோ தன் அம்மா தப்பு பண்றதை பார்த்து அப்பா கிட்டே சொல்லிடறான், அப்பா தற்கொலை, ஆனாலும் மாறாத அம்மாவை வீட்டுக்குள்ள வெச்சு கொளுத்திடறான் வித் தட் கள்ளக்காதலன்.. 


ஜெயில்ல  சில வருஷம் இருந்துட்டு வெளீல வந்து பஸ்ல ஊருக்குப்போறப்ப எங்கேயும் எப்போதும் மாதிரி ஒரு விபத்து, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் ஆள் அவுட்.. அந்தாளோட சூட்கேஸை அபேஸ் பண்ணி அவர் கிட்டே இருக்கும் சர்ட்டிஃபிகேட் வெச்சு காலேஜ் சேர்ந்துடறான்.. 


காலேஜ்ல ஒரு பணக்காரப்பையன் நட்பு கிடைக்குது.. அவன் பங்களாவுலயே சர்வண்ட்  கம் பேயிங்க் கெஸ்ட்டா தங்கிடறான்.. அந்த பணக்காரப்பையன் ”மாமே” மாதிரி லேடீஸ் மேட்டர்ல வீக்.. பல பொண்ணுங்களோட சுத்தறவர்..ஆனா அவரை நல்லவர்னு நம்பி ஒரு பொண்ணு லவ் பண்ணுது.. 


 ஒரு கட்டத்துல ஹீரோவால தனக்கு பிரச்சனை வரும்னு  பணக்காரப்பையன் நினைக்கறான்.. ஹீரோ முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்ணிட்டு இருக்கும் இந்துன்னு தெரிஞ்சுடுது.. 2 பேருக்குமான வாக்குவாதத்துல  சண்டைல ஹீரோ  அவனை கொலை பண்ணிடறார்..


http://chennaionline.com/images/gallery/2012/July/20120730015206/vijay-Antony-in_Naan_movie_photos_stills_01.jpg

 பாடியை புதைச்சுடறார்.. ஹீரோவுக்கு கோவை குணா மாதிரி மிமிக்ரி தெரியும்.. அதனால செத்துப்போன ஆள் குரல்ல ஃபோன்ல மட்டும் அப்பப்ப பேசி அவங்க பெற்றோரை,காதலியை  அவன் உயிரோட எங்கேயோ தலை மறைவா இருக்கற மாதிரி நம்ப வைக்கிறான். 


 இந்த மேட்டர் அந்த பணக்காரப்பையனோட நண்பன் ஒருத்தனுக்கும் தெரிஞ்சுடுது.. அவனையும் க்ளோஸ் பண்ணிடறான் ஹீரோ..


 இப்போ அந்த பணக்காரப்பையனோட காதலிக்கு டவுட் வந்துடுது.. அவளை எப்படி நம்ப வைக்கிறான், போலீஸ்க்கு எப்படி அல்வா தர்றான்? என்பதுதான் மிச்ச மீதிக்கதை.. 


 சும்மா சொல்லக்கூடாது திரைக்கதை பக்கா.. ஹாலிவுட் பட சுடல்தான்.. ஆனாலும் திறமையா பண்ணி இருக்காங்க  ( நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்- வடிவேலு)


 சம்சாரம் ஃபாத்திமா தான் தயாரிப்பு. கணவர் விஜய் ஆண்ட்டனி தான் ஹீரோ.. சம்சாரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும் போல அண்ணன் ரொம்பவே அடக்கி வாசிக்கறார்.. அவர்க்கு நடிப்பு வர்லைங்கறது திரைக்கதை அமைப்பால தெரியவே இல்லை.. ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா இருக்கார்..  கூலிங்க் கிளாஸ் போட்டுட்டா அம்சமா இருப்பார், ஆனா ஒரு சீன்ல கூட அப்படி வராதது ஏமாற்றமே.. 


ஹீரோயின் ரூபா மஞ்சரி. ஹேர் ஸ்டைல் சூப்பர் .. இந்த மாதிரி ரவுண்ட் ஃபேஸ் ஃபிகர்ங்களுக்கு கர்லிங்க் ஹேர்ஸ்டைல் பக்காவா செட் ஆகும்.. அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் அழகு.. கண்ணுக்கு ஐ டெக்ஸ் மையை நம்பாம என்னென்னமோ தடவி இருக்கார்.. எதிர் காலத்தில் தவிர்த்தா அவருக்கும், கண்ணுக்கும் நல்லது.. 


 பணக்காரப்பையனா ஆனந்த தாண்டவம் ஹீரோ  சித்தார்த் வர்றார்.. அமெரிக்கன் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் அக்மார்க் பணக்காரப்பையன் லுக்,.. ஆள் சோ க்யூட்.. அசால்ட்டா நடிச்சிருக்கார்.. 


அனுயா 6 காட்சிகளில் வந்தாலும் அள்ளிக்கறார். ஆல்ரெடி சிவப்பா இருக்கும் அவர் கன்னத்தில் அதீத சிவப்பு ஒப்பனை பண்ணி இருப்பது எதுக்கு? ஸ்லீவ்லெஸ் டிரஸ் தான் அணிவேன் என்ற இவரது பிடிவாதத்துக்கு ஒரு சபாஷ்.. இவரை இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் ( படத்துல)


போலீஸ் ஆஃபீசரா வர்றவர் நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் ஒரு வி ஐ பி ஹீரோவை போட்டிருந்தா படத்தோட மார்க்கெட்டிங்க் நல்லா இருந்திருக்கும்..


http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_b1747.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு அப்பாவா காலேஜ்ல வந்து ஒரு சீன்ல நடிச்சுட்டு போறவர் ஹீரோ கிட்டே மிரட்டி பணம் பறிக்க  ஹோட்டல்ல ஹீரோவை சந்திக்கறார்.. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏதோ கலாட்டா பண்ண ஹீரோ அவங்களை  பீர் பாட்டிலை உடைச்சு ரகளை பண்ற சீன் பார்த்து அரண்டு மிரண்டு தலை தெறிக்க ஓடும் சீன்.. அட்டகாசம்.. தியேட்டரே அப்ளாஸ் மழையில் 


2. ஹீரோ ஃபோர்ஜெரி சிக்னேச்சர்ல கேடி என்பதை படத்தின் முதல் சீன்லயே காட்டி விடுவது பின் வரும் பல காட்சிகளுக்கு உதவியா இருக்கு.. 


3. தயாரிப்பாளர் தன் மனைவி என்பதால் ஹீரோ அடக்கியே வாசித்து இருப்பது. வாய்ப்பு இருந்தும் எந்த பெண்ணையும் அவர் படத்துல தொடலை.. டி ஆர்க்குப்பின் தமிழ் சினிமாவில் பெண்ணை தொடாத ஹீரோ என்ற பட்டம் கிடைக்கலாம்.. ( படத்துல வர்ற எல்லாப்பெண்னையும் தொடும் ஹீரோ பட்டம் சாட்சாத் சிம்புவுக்கே என்பது கோலிவுட் டைரிக்குறிப்பு)


4. திரைக்கதை அமைப்பு மிகத்தெளிவாக, அமைதியாக எந்த அவசரமும் இல்லாம அதி புத்திசாலித்தனம் எல்லாம் இல்லாம நார்மலா போவது பிளஸ்..



5.  படத்தின் கதை, திரைக்கதை வாய்ப்பளித்தும் எந்த இடத்திலும் கவர்ச்சியை  புகுத்தாமல் மிக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம் செம

http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_a1733.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  சக மாணவனுக்கு ஹீரோ போலி கையெழுத்து போட்டு உதவறார்.. தப்பு தான்.. ஆனா ஹெச் எம் நாளை ஸ்கூ;லுக்கு வரும்போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? ஏன் அப்பவே அனுப்பனும்? ஏன்னா அந்த ஸ்கூல் எல்லா மாணவர்களையும் ஸ்கூல் பஸ்ல பிக்கப் பண்ணிட்டு டிராப் பண்ற பஸ்.. பாதிலயே அனுப்புனா எப்படி?


2. பாதில வீட்டுக்கு வரும் ஹீரோ வீடு உள் பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டறான்.. உடனே கள்ளக்காதலனை பாத்ரூமிலோ கட்டிலுக்கு அடியிலோ ஒளிச்சு வைக்காம அம்மாக்காரி கதவை திறக்கறா.. மாமா இங்கே வந்துட்டுப்போனதை அப்பா கிட்டே சொல்லிடாதேங்கறா.. அவ்ளவ் ஏன் ரிஸ்க்? கதவைத்திறந்ததும் “ என்னப்பா? என்ன பிரச்சனை? ஏன் நேரத்துலயேவந்துட்டே? வா ஸ்கூலுக்கு போலாம், விசாரிக்கலாம்னு கேட்டிருக்கலாம்..கதவை திறந்து போட்டபடி அவன் கூட கிளம்பினா கள்ளக்காதலன் எஸ் ஆகிடுவான்


3. தன் அம்மாவையும், கள்ளக்காதலனையும் ரூம்ல வெச்சு சாத்தி எரிக்கறார் ஹீரோ.. அப்ப தப்பிக்கற ஐடியாவுல தான் அவர் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கார்.. அது ஒரு விபத்து மாதிரி தான் எல்லாருக்கும் தெரியுது.. அப்புறம் எப்படி அவர் போலீஸ்ல மாட்டி ஜெயில்க்கு போறார்? என்பதற்கு படத்தில் விளக்கம் ஏதும் இல்லை ( எடிட்டிங்க்ல கட் ஆகி இருக்கலாம் ஃபுட்டேஜ் பிராப்ளமா?)


4. ஹீரோ இந்து, அவர் முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்றார்.. கையெழுத்து, தொழுகை எல்லாம் கத்துக்கறார்.. ஆனா முஸ்லீம்களின் முக்கிய அடையாளமான சுன்னத் ஆபரேஷன் ஏன் செஞ்சுக்கலை..? அவர் மாட்றதே அதை வெச்சுத்தானே? ஒரு கிரிமினல் அது கூட யோசிக்க மாட்டானா?


5. ஹீரோ முஸ்லீம் கிடையாது என்பதை இன்னொரு ஆண் கண்டுபிடிப்பது ஹாலிவுட்டுக்கு ஓக்கே. எப்பவும் சுடும்போது நேட்டிவிட்டி கலக்கனும்.. ஹீரோ ஒரு பொண்ணு கூட கில்மா பண்றப்ப அந்த லேடி கண்டு பிடிச்சா கில்மாவுக்கு கில்மா.. லாஜிக்குக்கு லாஜிக் .. உறுத்தல் ஏதும் இருக்காது..

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sms-heroine-anuya/anuya-hot-sexy-photos-1s.jpg


6.  இழவு விழுந்த வீட்டில் ஒரு வாரம் வரை உறவினர் கூட்டம் இருக்கும். ஆனா ஹீரோவின் அப்பா இறந்த அடுத்த நாளே வீடு வெறிச்சோடி இருக்கு.. ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே கில்மா.. ஹால்ல பையன்..  என்னதான் மிட் நைட்னாலும் யாரும் அவ்ளவ் தைரியமா அப்படி செய்ய மாட்டாங்க


7. சித்தார்த்  2 ஃபிகர்களை தள்ளிட்டு அவுட்டோர் போய்ட்டு 2 நாள் கழிச்சு வர்றார்.. அப்போ அவர் கிட்டே உங்க லவ்வர் வந்துட்டுப்போனாங்க என்பதை ஹீரோ ஏன் சொல்லலை? அதானே பிரச்சனை ஏற்பட முதல் காரணம்? அவ சொல்லிடுவான்னு தெரியாதா?


8. அதே மாதிரி 2 நாள் டூர் போகும் சித்தார்த் அந்த 2 நாள்ல தன் காதலி தன்னைத்தேடி வீட்டுக்கு வருவா-ன்னு தெரியாதா?ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கும்போது காதலி என்ன ஆச்சுன்னு பார்க்க வராமலா இருப்பா?


9. ஹோட்டல்ல கலக்கலா ரவுடிகளிடம் பாயும் ஹீரோ சித்தார்த்திடம் மட்டும் பம்முவது ஏன்? அவர் காரணம் இல்லாமல்  ஹீரோவை அறையும்போது குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டலையே? ( அவர் ரூமை காலி பண்ணச்சொல்லிடறார், அப்புறம் என்ன பயம்?ரூம்லயே தங்கனும்னாக்கூட அதுக்காக பொறுத்துப்போலாம்)


10. ஹீரோ டெட் பாடியை டிஸ்போஸ் பண்றப்போ, கார்ல போறப்ப பின்னணி இசையா திகிலா மியூசிக் போட்டு பயத்தை ஆடியன்ஸ்க்கு தோற்றுவிக்காம என்னமோ கல்யாணக்கொண்டாட்டத்துக்கு போடற மாதிரி துள்ளல் இசை ஏன்?


http://gallery.southdreamz.com/cache/pressmeet/naan/free-naan-movie-press-meet-events-gallery-vijay-antony-rupe-mankari-siddarth-stills-11_720_southdreamz.jpg


11. ஹீரோ ஒரு சீன்ல ரூம்ல ஒளிஞ்சிருக்கார் ஹீரோயின் வந்து பார்த்துட்டு கிளம்பறா. அப்போ மாடில இருந்து அவ போய்ட்டாளா? என எட்டிப்பார்க்கும்போது அந்த ரூம் லைட்டை ஏன் ஆஃப் பண்ணலை?  அதானே சேஃப்? அங்கே இருந்து அவ பார்த்தாக்கூட இருட்டுதான் தெரியும்.. கிரிமினல்க்கு அது கூடத்தெரியாதா?


12. ஹீரோ கார் ஓட்ட எப்போ கத்துக்கறார்? ஏன்னா சித்தார்த் வீட்டுக்கு வர்ற வரை அவர்க்கும் கார்க்கும் சம்பந்தமே இல்லை.. ஆனா திடீர்னு கார் அநாசயமா ஓட்ற மாதிரி காட்றாங்க


13. ஹீரோ சித்தார்த்தின் அப்பாவின் ஃபேமிலி ஃபிரண்ட்சை சந்திக்க ஹோட்டல்க்கு வர்றார். அப்போ சித்தார்த்தின் ஃபோன் அவர் வெச்சிருக்கார்.. சித்தார்த்தைத்தான் கொன்னுட்டாரே? அப்போ அந்த ஃபோனை சைலண்ட் மோடுல போட்டு வைப்ரேஷன்ல வெச்சுட்டா மேட்டர் ஓவர்.. கால் வந்தா அவருக்கு மட்டும் தெரியும்.. அவங்க 3 பேருக்கும் தெரியாது.. அதை விட்டுட்டு ஏன் தடுமாறுகிறார்?


14.இன்ஸ்பெக்டர் ஹீரோவை விசாரிச்சுட்டு அவரை வெளியே உக்கார வெச்சு பின் சித்தார்த்தின் காதலியை விசாரிக்கறார். அப்போ ஹீரோவை கூப்பிட்டு காதலி கிட்டே “ இவரை தெரியுமா?”ன்னு ஏன் கேட்கலை?


15. இவ்வளவு கிரிமினல் வேலை பண்ணும் ஹீரோ லேடீஸ் மேட்டர் பக்கம் ஏன் போகவே இல்லை.. வாய்ப்பு இருந்தும் தவிர்க்க என்ன காரணம்? அதை வெச்சு இன்னும் இண்ட்ரஸ்ட்டா கதையை நகர்த்தி இருக்கலாமே?


http://1.bp.blogspot.com/-EOIsPU1zE0o/T6N1QKh_FfI/AAAAAAAAl10/g7qfD-Yl0eY/s1600/Rupa%2Bmanjari%2Bactress%2B%2B%25287%2529.JPG


16. ஹீரோ அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கார்.. கைல தலைல எல்லாம் கட்டு.. போலீஸ் ஹீரோவை பற்றி விசாரிக்க ஃபேக்ஸ் அனுப்புது.. அதாவது ஒரிஜினல் முஸ்லீம் வீட்டுக்கு.. ஹீரோ டக்னு அந்த அட்ரஸ் போய் சமாளிக்கறார்.. அதெப்பிடி ஒரே நாள்ல காயம் சரியாகிடுமா?



17. அட்ரஸ் வெரிவிஃபிகேஷன் பண்ண கான்ஸ்டபிள் இங்கே இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கும்போது ஆள் இருக்கார்னு சொல்லி இருப்பார்.. அப்போ இன்ஸ்பெக்டருக்கு டவுட் வராதா? இங்கே ஹாஸ்பிடல்ல இருந்த ஆள் அங்கே எப்படி போனார்? ஏன் போனார்?னு.. ஏன் அவரே நேரடியா ராமநாத புரம் போய் அதை க்ளியர் பண்ணலை?அதே போல் ஃபேக்ஸ் போற அதே டைம் இவரும் எப்படி அங்கே போறார்? ஃபிளைட்ல போனாக்கூட முடியாது


18. ஹீரோ 2 கொலை பண்றப்ப க்ளவுஸ் போடவே இல்லை.. கைரேகை காட்டி கொடுத்திருக்கும். எப்படி சித்தார்த்தை கொன்னது அவர் நண்பர் தான்னு நம்பவைக்க முடியும்? ரேகையை வெச்சு கண்டு பிடிக்க மாட்டாங்களா?


 19. ஏடி எம் மிஷின்ல ஹீரோ சித்தார்த் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கறார்.. கொலை செய்யப்பட்ட நாள்க்குப்பிறகு சித்தார்த்த் அக்கவுண்ட்ல இருந்து பல்க் அமவுண்ட் எடுக்கப்பட்டிருக்குன்னா போலீஸ்  உடனே ஏ டி எம் வீடியோ காமராவுல ஹீரோவை பார்த்திருக்காதா?


20. அனுயா ஹீரோ மேல கிரேஸ் ஆனது எப்படி? ஹீரோ அவரை கண்டுக்கவே இல்லை. அதிகம் பேசுனதும் இல்லை.. அன் டைம்ல அவர் வீட்டுக்கு எந்த நம்பிக்கைல போறார்?


21. ஹீரோயின்  மது மஞ்சரி ஒரு சீன்ல என் ஆளை நீ இன்னும் பார்த்ததில்லைன்னு அனுயா கிட்டே சொல்றா.. இந்தக்காலத்துல செல்ஃபோன்ல கவர்னர் கில்மாப்படமே ரிலீஸ் ஆகுது..  அப்படி இருக்கும்போது தன் செல் ஃபோன்ல சேவ் பண்ணி வெச்சிருக்கற லவ்வர் ஃபோட்டோவை ஹீரோயின் அனுயா கிட்டே காட்டி இருந்தா ஆள் மாறாடம் அப்பவே தெரிஞ்சிருக்குமே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfn5JT3NT-9_V6hxcYyUtkj4W2p-MV_lyCta5UoZPm5zBvWQIN_u8QHCf0l9g0bMIXhADU081YYe2_OYJ8QSt7ZogVkj20QsF4esiq8tJybIi1K3avCI7EFZ1sMg_d6d0J3dq0-mY8xou_/s1600/Naan-Movie-New-Stills+(6).jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. சார், எனக்கே என் சைன் இவ்ளவ் அழகா போட வராது.. ஆனா இவன் போட்டிருக்கான் பாருங்க



2. உன் பேரென்ன?

 ஏன்?


அழகான பொண்ணு எங்காவது தட்டுப்பட்டா அவங்க பேர் கேட்டு வெச்சிக்குவேன் அது என் பழக்கம் ..புரியலை? இதான் ராகிங்க்




3. சீனியர் பொண்ணை பார்த்து அழகா இருக்கேனு தைரியமா சொல்றியே, அது எப்படி?


எஸ்.. நீ அழகு .. அதான்


4. XQS மீ மிஸ்.. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசனும்.. நீங்க.... ப்ளீஸ்..

 ம்க்கும், அப்போ நீயே அவளை டிராப் பண்ணிடு,,

  வித் பிளஷர் ( ஐடியாவே அதுக்குத்தானே?)



5. பிடிச்சிருக்குன்னு சொல்றே, ஆனா லவ்வலைன்னு சொல்றே.. புரியலையே?


ஹி ஹி எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும், ஆனா இந்த காதல், கல்யாணம் எல்லாம் ஒத்து வராது


6. டேய்./. காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு?


 அது நல்லா தான் இருக்கும், அவன் எப்படி படிக்கறான்னு கேளுங்க


7. அங்கே கார்ல இடம் இல்லைன்னா டோண்ட் ஒர்ரி.. என் மடில இடம் இருக்கு ஹி ஹி



8. லவ்வுக்கு பொசசிவ் நெஸ் தேவை தான்.. ஆனா ஓவரா போய்ட்டா டேஞ்சர்


9. இங்கே யாருமே 100% பர்ஃபெக்ட் இல்லை


10. அசோக் கேரக்டர் எப்படி?


 தானும் படிக்க மாட்டான், யாரையும் படிக்கவும் விட மாட்டான் ( கிராமங்கள்ல இதையே “ தானும் படுக்க மட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான்னு” பழமொழியா சொல்வாங்க )


11. ஏதோ சின்னப்பிரச்சனை.. அதைப்போய் பெருசு பண்ணிட்டு..

 இப்போ எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள் தான் பெரிய தப்பு உருவாக காரணமா இருக்கு

http://onlyfilmy.com/files/2012/08/Rupa-Manjari-776x1024.jpg



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் ரேங்க் -  ஓக்கே


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10



http://images.suite101.com/2689805_com_thetalente.jpg

மேலே உள்ள படம் தான் ஒரிஜினல்... நன்றி - அதிஷா

சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். லேடீஸும் பார்க்கற மாதிரி கண்ணியமான நெறியாள்கை.. படத்துக்கு டி வில சரியா விளம்பரம் தர்லை, அது பெரிய மைன்ஸ், சன் டி வி சன் பிக்சார்ஸ் இதை வாங்கி இருந்தா இதை 100 நாள் படம் ஆக்கி இருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்.. ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

நான் படத்தை நான் இயக்கி இருந்தால் வைக்கும் டைட்டில் த ஹிந்து - 420 ( THE HINDU - 420)

கமர்ஷியல் ரன்னிங்க் ரேஸில் அட்டகத்தியை “ நான்” முந்தினாலும் விகடன் மார்க்கில் பிந்தும். காரணம் லாஜிக் மிஸ்டேக்ஸ் எக்கச்சக்கம்


 டிஸ்கி -

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 

EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்

 

 

 

 

http://haihoi.com/Channels/cine_gallery/naan_movie_stills_siddharth_venugopal_rupa_manjari_1f79bef_S_194.jpg