Sunday, November 11, 2012

மிஸ் என் கிட்டே இல்லாதது அவன் கிட்டே அப்படி என்ன இருக்கு?


Photo: ♥♥♥ CUTE ♥♥♥
1.ஹெட் செட்ல எப்போதும் பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கற காதும்,சம்சாரத்தை 4 பேர் முன்னால திட்டுனவன் வாயும் விளங்குனதா சரித்திரம் இல்ல



---------------------------------



2. மிஸ் என் கிட்டே இல்லாதது அவன் கிட்டே அப்படி என்ன இருக்கு?
 சொன்னா பியூச்சர்ல சரி பண்ணிக்குவேன்.

ஓ! அவன் கிட்டே  ஆப்பிள் i5 நியூ மாடல் ஃபோன்  இருக்கு 



--------------------------------


3. "நியாயவிலை கடை = நியாயங்கள் விலை போகும் கடை 




-----------------


4. டி எம்மில் கடலை போட ஆண்ட்ராய்டு என்ன? ஆப்பிள் ஐ 5 என்ன? ஆல் ஆர் த சேம் ;-0" 



---------------


5. காதலிக்கு  வாசக பனியன் பரிசாக கொடுக்கும் காதலன் உலகமகா முட்டாளாக இருப்பான்  # போறவன் வர்றவன் எல்லாம் ஹி ஹி 



-----------------------------


ROFL :P # Home Work Troll
Photo: ROFL :P # Home Work Troll



6. இறுக்கமான ஆண்களை சுருக்கமான ( அயர்ன் பண்ணியும் சுருக்கமா சின்னதா ) ஆடை அணியும் பெண்கள் கிறுக்கு பிடிக்க வைக்கிறார்கள் # எ கீ




---------------------


7. அனுமின் நிலையம் எப்போ வெடிக்கும்?


 தீபாவளி வெடியீடு



-------------------


8. டியர்.லிமிட் தாண்ட வேண்டாம் :-)



 நான் சின்ன வயசுல இருந்து அன் லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டே பழக்கம் ஆகிிடுச்சு




---------------------------


9. ட்விட்டரில் இனி யாராவது வணக்கம் போட்டா அவங்களுகு வரி விதிக்கப்படும் - வணங்காமுடி ஜெ அறிவிப்பு



-------------------------


10. நனைக்கத்தெரிந்த புருஷா உனக்கு துவைக்கத்தெரியாதா? காய வைக்கத்தெரிந்த கணவா உனக்கு மடிக்கத்தெரியாதா? # டுடே டியூட்டி @ பாத்ரூம் துவைத்தல்




----------------------------



ஓ ! தொட்டிக்குள்ள எவ்ளோ குழந்தைகள் !! :P LOL
Photo: ஓ ! தொட்டிக்குள்ள எவ்ளோ குழந்தைகள் !! :P LOL


11. பயமில்லா பகல் பொழுதுகள் அவளுடைய தங்கையுடன் பஸ்சில்் இருக்கை அருகே ் தனிமையாய் # இருக்கையில் -எ.கீ ஆப் எகீ



----------------------


12. சசிகலா வேதனையை ஜெயலலிதா உணர்வாரா? -நடராஜன் # உங்க்ளோட இதே ரோதனை.டைவர்ஸ் பண்ணிடுய்யா ஸெம சான்ஸ்




---------------------


13. தன்னை தானே அறிபவன் கடவுள் !!சம்சாரம் சொன்னபடி காய்கறிகளை அரிபவன் அப்பாவி குடும்பஸ்தன்.# மீ அ கு



------------------------


14. எகிப்து முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுச் சிறை# நம்ம நாட்டு பிரதமருக்கு அடி வயித்தை கலக்கி இருக்குமே?



--------------------------------



15. சார் உங்க படத்துல ஸ்லோமோஷன் சீன்ஸ் நிறைய இருக்கே ஏன் ?



 ஸ்லோ அன்ட் ஸ்டடி வின் த ரேஸ் ஹி ஹி



--------------------------



இதாண்டா ரிஸ்க் எடுக்கறதுங்கறது!!!!
Photo: இதாண்டா ரிஸ்க் எடுக்கறதுங்கறது!!!!



16. நம் நாட்டுக்கு சுதந்தரம் .பெட்ரோல் டீசல் விலை உயர்வு.கில்மா எல்லாம் இரவில்தான்




-------------------------


17.  உலகில் அபாயமானவை எல்லாம் நான்கு எழுத்துக்களே - கலைஞர்,அணு உலை,அழகிரி,சசிகலா,இலங்கை,பெண்கள்




-------------------------------


18. காலைல நிறைய அழகான விஷயங்கள் பார்த்தேன் - சாதா ட்வீட், காலைல நிறைய அழகான மேட்டர்ஸ் பார்த்தேன் - ந நி கீ # தமிழ் நல்லது,ஆங்கிலம் பொல்லாதது




------------------------------


19. மேடம், தாங்க முடியாத அளவு விலை வாசி உயர்ந்துட்டு இருக்கே?



ஜெ - அன்றே சொன்னார் அண்ணா!எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என ,அண்ணாநாமம் வாழ்க


----------------------------------------


20. சுந்தரபாண்டியன் பட ஹீரோயின் லட்சுமிமேனன் ஃபோன் செய்து பட விமர்சனத்தில் தன்னை ஃபிகர், என வர்ணிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். # அவ்வ்வ்

லட்சுமிமேனனுக்கு 15 வயசுதானாம், எட்டாம் கிளாஸ் தான் படிக்கிறாராம் ;-0 




---


Good Night folks :))
Photo: Good Night folks :))
 படங்கள் - சட்டை மேல எவ்ளோ பட்டன் ஃபேஸ் புக் குழுமம்

Saturday, November 10, 2012

கண்ணதாசன் மகள் விசாலி கண்ணதாசன் பேட்டி

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதியதை மெய்ப்பிக்கிறார் கண்ணதாசன். ஆமாங்க, அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள் என்கிறார் அவரின் மகள் விசாலி.

விசாலியின் ஐந்து வயதுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே கண்ணதாசனுக்கு காலனின் அழைப்பு வந்துவிட்டது.  அந்த சோகம் வாட்டியிருக்கிறது விசாலியை.  அதனால்தான் அப்பாவின் பாடல்கள்தான் எனக்கு அம்மாவானது என்கிறார் விசாலி.

அம்மாதான் எனக்கு தந்தையுமானார். இப்போ கணவர்தான் தாயும், தந்தையுமானார் என்று உணர்வுப்பூர்வமாக தன்னை விவரித்தார் விசாலி.
                                                   

‘’அவரு மாதிரியே உயரம்.. அவரு மாதிரியே நெறம்.. அவரு மாதிரியே கண்ணு..அவருமாதிரித்தான் பார்க்குற..அவரு மாதிரித்தான் நடக்குற.. அவரு மாதிரித்தான் சிரிக்குற..ஒன்ன பார்க்குறது அவரப்பார்க்குற மாதிரியே இருக்கு சாலான்னு சொல்லுவாங்க அம்மா. நான் மட்டுமில்ல அப்பாவும் உன்ன சாலான்னுதான் கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க அம்மா.

அம்மா என் கூட விழாக்களுக்கு வரும்போது, ‘அவரோடயும் விழாக்களுக்கு வருவேன். இப்ப ஒன்கூடயும் வர்றேன். ஒரு வித்யாசமும் தெரியல. அவருக்குஇருந்த கம்பீரம் ஒனக்கும் இருக்கு. உன்ன விசாலின்னு சொல்லக்கூடாது. புடவகட்டின கண்ணதாசன்னுதான் சொல்லனும்’னு என்னை அப்பாகவே பார்ப்பாங்க, எனக்கு அப்பாவாக இருந்த என் அம்மா.’’ என்று சொல்லும் விசாலி, அப்பாவுக்கு பதினைந்தாவது குழந்தை. அம்மாவுக்கோ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.
                                                                  
                               

‘அப்பாவோட சொத்துன்னு எனக்கு எதுவும் கொடுக்கல. ஆனா நிலம், பணம்தான் சொத்துன்னும் நான் நினைக்கல. ‘ஒருவன் பூமியில் எவ்வளவு இடம் வைத்திருக்கிறான் என்பது பொருட்டே அல்ல. உலக இன்பங்களை அனுபவித்து லயிக்க உள்ளத்தில் எவ்வளவு பெரிய இடம் வைத்துள்ளான் என்பதே முக்கியம்.( தான்எழுதி வரும் ‘சிந்தித்தேன்.. சிந்தியதேன்’ என்ற தொகுப்பிலிருந்துசொன்னார்.)

ஆனா, யாருக்கும் இல்லாத பெரிய சொத்து ஒன்னு எனக்காக விட்டுட்டுபோயிருக்கிறார் அப்பா. அப்பா கடைசியா எழுதுன பாட்டு ‘கண்ணே கலைமானே’தான்அது. மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய அந்த பாட்டுதான் எனக்கான பெருஞ்சொத்து.

அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்புன போது(1981) டைரக்டர் பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்பா காரில் உட்கார்ந்துகிட்டே அந்தபாட்டை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்த பாட்டுக்கான சூழலை அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர். நாயகி ஸ்ரீதேவி குழந்தைத்தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சிலகாட்சிகளை சொல்லியிருக்கிறார். அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர். சாலா இப்படித்தான் என் காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும் என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப்பாட்டைஎழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்தப்பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப்பற்றி அம்மாகிட்ட நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்கன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச்சொல்லிவிட்டு கிளம்பி போகும் போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகிசூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.

அந்த பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானால் அர்த்தம் எடுத்துக்கொள்ளட்டும்.. ஆனால் அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு. நானே அந்த பாட்டை சுழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக்கொள்வேன்.

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக்கொள் என்று எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்..

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு துக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தாலாட்டு. சின்ன வயசில் நான் தூக்கம் வராமல் அழுதுகொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச்சொல்லுறேன்..’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.

அம்மா பாடும் தாலாட்டை விட அந்த பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும்’’ என்று சொல்லிவிட்டு இந்தப்பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்றுசொன்னபோது விசாலியின் வார்த்தைகளில் கணத்த சுமை இருந்தது.

‘’அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் - ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல.

அவனும் நானும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணே கலை மானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை.

இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு.

கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்’’என்றசுமைமிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடிவந்து காதில் கிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

‘’அப்பா எனக்காக இன்னொரு பெருஞ்சொத்து கொடுத்திருக்கிறார். வெளியூரில் இருந்த அப்பாவுக்கு நான் பிறந்த செய்தி கிடைத்ததும் எனக்காக எழுதினபாட்டுதான் அது.

சித்திரை மாதம்

திருவம்மாவாசை

சத்தியமகவாய்

தாய்விசாலாட்சி

அவதரித்ததை என்

அகக்கண் அறியும்


ஆண்மை அதிலே

பிறக்குமானால்

அவலம் சோகம்

அடிக்கடி நிகழும்


பெண்மை அதிலே

பூத்துக் குழுங்கினால்

ஞானம் பெருமன

நவில்வது வேதம்! - என்று அப்பா எழுதியிருக்கிறார்.


அப்பா இன்னொரு கவிதையும் எழுதியிருக்காங்க. ( ஒரு சின்ன சிரிப்புக்குப்பின் ) நான் பிறந்த சமயம் ( 1977 ) சென்னையில் ஒரு கவியரங்கத்தில் அப்பாகலந்து கொண்டிருந்திருக்காங்க. அப்போ அப்பாவுக்கு ‘அழுகை’ தலைப்பு கொடுத்திருக்காங்க.

எனக்கு இப்போ பொருத்தமான தலைப்புதான் கொடுத்திருக்காங்க என்று சொல்லிவிட்டு கவிதை வாசித்திருக்கிறாங்க. அந்தக்கவிதையின் முடிவில் ‘என்னை ஆசையாய் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள்’ என்று முடிச்சிருக்காங்க. (மீண்டும் ஒரு சின்ன சிரிப்புக்குப் பின் )

அப்பா கடைசியா படைச்சது ஏசு காவியம். நான் முதன்முதலா எழுதின கவிதை ஏசு பற்றித்தான். கிருஸ்துமஸ் எனும் தலைப்பில்தான் ஏழு வயதில் அந்தக்கவிதையை எழுதினேன்.

அப்பா கூட பதினேழு வயதில்தான்(1944) முதல்கவிதை எழுதினார். அவரு மகள் ஏழு வயதிலேயே கவிதை எழுதிவிட்டாய் என்று என்னை கொண்டாடினாங்க.

மாட்டுத்தொழுவத்திலே தேவன் மனிதரிலே தேவன் மனிதனாக வந்த புனிதன் என்று அந்தக்கவிதையில் எழுதியிருப்பேன். இத்தனை சின்ன வயதில் எப்படி இப்படி எழுத முடியும். மனிதரிலே புனிதன் என்று ஏழு வயதில் எப்படி எழுத முடிந்ததுன்னு என்னை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க.

ஆனால் அம்மா மட்டும், ‘ நீ எழுதல சாலா.. நீ எழுதுகோல்தான். உன்னை பிடிச்சு அப்பாதான் எழுதுறாரு’ன்னு சொன்னாங்க. அப்பாவின் அசரீரிதான் என் எழுத்துக்கள் என்பது அப்போது எனக்கும் தெரியல.

அந்த ஒரு கவிதைக்கு பிறகு நான் எதுவும் எழுதல. ஒரு கவியரசரின் பொண்ணு இப்படி இருக்கலாமான்னு அம்மா என்னை சும்மா இருக்க விடல.

அப்பா எழுதுன கவிதைகள், பாடல்கள், இன்னபிற இலகியப்படைப்புகள் எல்லாவற்றையும் படிக்கச் சொல்லுவாங்க. அவற்றை படிக்காமல் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் காதை திருகி படிக்கச்சொல்லுவாங்க. அம்மா காதைத்திருகி திருகி நான் அப்பாவின் படைப்புகளை படிச்சேன்.

அப்போ எல்லாம் தொணதொணன்னு யார் கிட்டேயாவது பேசிக்கிடே இருப்பேன். சும்மா பேசிக்கிட்டே இருக்கியே எதாவது ஒரு கலையை வளர்த்துக்கொள்ளுன்னு சொல்லுவாங்க. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு அப்போதெரியல’’ என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தவர்,

சில காலங்களாகத்தான் நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். நட்பு வட்டத்தைசுறுக்கிக்கிட்டேன். என்னை வாயாடின்னு சொல்லுவாங்க. இப்போ அனாவசிய பேச்சுக்கு இடங்கொடுக்கக் கூடாதுன்னு மொபைல் போன் கூட தவிர்த்துவிட்டேன் என்று தான் இப்போது வெளியுலகை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.

இலக்கியம், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் என்று பரபரப்பாய் இருந்தவர் திடீரென்று இருக்குற இடமே தெரியாமல் இருப்பதற்கான காரணத்தைச்சொன்னார்.
‘கம்மங்காடு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பொண்ணா இப்படி என்று ஆச்சர்யப்பட வைத்தது.விசாலியின் வீட்டு முகப்பில் சிவாலயம் என்று எழுதப்பட்டிருந்ததற்கானஅர்த்தம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாக சிலருடைய வீட்டு முகப்பில்எழுதப்பட்டிருப்பது போல் இங்கேயும் எழுதப்பட்டிருக்கு என்று நினைத்ததுதவறு என்பதை உணர முடிந்தது.
                                                       

‘’மரியாதைக்குரிய டைரக்டர் பாலசந்தர்சார் கேட்டுக்கிட்டதால வானமேஎல்லை படத்தில் நடிச்சேன்.

கம்மங்காடு..கம்மங்காடு...காடை இருக்கு பசியோடுன்னு ஆடுனேன்.

விருப்பப்பட்டுத்தான் நடிச்சேன். ஆனா அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இதுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க.

அப்பா இருந்திருந்தா நான் செய்த பலவற்றை மன்னித்திருக்க மாட்டார். ஒவ்வொரு மனிதரிடமும் நிறை குறைகள் உண்டு. அப்படித்தான் கலைஞருக்கும்.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்வதென்றால் அவருடைய நிறைகுறைகள் இரண்டையும் பற்றி சொல்லணும். அவர் என் திருமணத்துக்கு எல்லாம் வந்திருக்கிறார். ஆனால் நான் மனசில் வச்சிப்பார்க்காம அவரின் குறைகளை மட்டுமே நிறைய பேசிட்டேன். இப்போது அதெல்லாம் தவறு என்று உணந்திட்டேன்.

அதுக்காக இதைப்போய் அவருகிட்ட சொல்லனும்னு நினைக்கல. என் மனசுக்கு தவறுன்னு படுது. திருத்திக்கிட்டேன்; அவ்வளவுதான். இது என்னோட குணம்.

எழுதுறது ஒன்னு பேசுறது ஒன்னு ஆனா நடக்குறது ஒன்னுன்னு வைரமுத்து சாரை நான் கடுமையா விமர்சனம் பண்ணுனேன். அது தப்புன்னும் உணர்ந்திட்டேன்.‘கலங்கம் வந்தாலென்ன பாரு..அதுக்கும் நெலான்னுதான் பேரு..அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..’ன்னு அவரு எழுதுன வரிகள கேட்கும் போதெல்லாம் அவர தவறா விமர்சனம் பண்ணியிருக்க கூடாதுன்னு நினைக்குறேன்.

இது எல்லாத்தையும் இப்போ எழுதிக்கிட்டு இருக்குற ‘சத்தியவாக்கு’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்குறேன்.

டிவி நிகழ்ச்சி தொகுப்புகளில் பெரும்பாலும் பெண்ணியம் பேசவேண்டியிருக்கு. அது எனக்கு ஒத்து வரல. நான் எல்லாத்தையும் பொதுவான பார்வையில் பார்க்குறேன். அப்படியே பேசினாலும் என்ன.. அங்கே இருக்குறவங்க கைதட்டுவாங்க. அவ்வளவுதான்.

வெளி நிகழ்ச்சிகளுக்கு போவதையும் தவிர்த்திட்டேன். பணம் இருக்கும்ரசிகர்கள் தங்களின் அபிமானத்துக்குரியவர்களை தங்கள் இடத்துக்கே அழைத்து வருகிறேன் என்று அவர்கள் வட்டத்தில் சவால் விட்டு சிரிக்கிறார்கள்.

நான் அந்தப் பாடகியின் பெயரை சொல்ல விரும்பல. ஆனா அவர் பட்ட அவமானத்தை சொல்லுறேன். நான் நெடுநாள் ரசிகர். எனக்காக நீங்கள் வந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாடவேண்டும். உங்கள் பாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அந்தப் பாடகியும் சென்றிருக்கிறார். அங்கே போனால் அவருக்கு அதிர்ச்சி. பார் டான்ஸ் நிகழ்ச்சியில் பாடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று மனம் புழுங்கியிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது வாங்கிய பணத்துக்காக இரண்டு பாடலை பாடிவிட்டு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டேன். அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் நான் அப்படிச்சொல்லல. எந்த ரசிகர் எப்படிப்பட்டவர் என்று இனங்காண வேண்டிய அவசியம் இல்லாமல் தான் என் பாதை இப்போது மாறிவிட்டது.

‘சிவசக்தி’ என்று நான் இசையமைத்து பாட்டு எழுதி, பாடியிருக்கும் பக்திஆல்பம் விசயமாக இளையராஜா சாரை பார்க்கப்போனேன். அப்போ 'அப்பா கண்ணன் மேல்ஈடுபாடு உள்ளவர். நீங்க சிவன் மேல ஈடுபாடா இருக்குறீங்க. பரவாயில்ல என்று சிரித்துவிட்டு கண்ணனைப்பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க என்றார்.

என் சோம்பேறித்தனத்தை அறியாத அவர் ஒரு வாரம் கழிச்சு பாட்டுஎழுதியாச்சான்னு கேட்டார். ரெண்டு நாள்ல எழுதிக்கொடுத்திடுறேன்னு சொன்னேன். இதே அப்பான்னா டக்கு டக்குன்னு எழுதிக்கொடுத்திடுவாங்க’ன்னு சொன்னார். நான் இப்டித்தான்னு சிரித்தேன். பரவாயில்ல டைம் எடுத்தே எழுதிக்கொடும்மான்னு சொன்னார்.

‘கண்ணனுக்கு என்ன வேணும்’னு எழுதிக்கொடுத்த அந்த பாட்டு தனம் படத்தில் இடம்பெற்றிருந்தது.
அது என்னவோ தெரியல எனக்கு நவீன இலங்கியங்கள் மீது நாட்டமில்லாம போயிட்டு. மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதிவந்திருக்குறேன். அதுவும் இப்போது ஏன் எழுதுனோம்னுதான் தோனுது. எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டேன். ஆனா இப்போ எழுதிக்கிட்டு இருக்குற சத்தியவாக்கு புத்தகத்தை தான் முதல் படைப்பாக நினைக்கிறேன்.

அப்பா இறந்த சில நாட்களிலேயே என்னை சென்னை ஸ்ரீகாளிகாம்பாளிடம் தத்து கொடுத்திருக்காங்க அம்மா. அந்த அம்மாதான் எனக்கு இன்னொரு அம்மா. அப்போதிலிருந்தே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.

வளர்ந்து விட்ட பிறகு சிவன் மீதுதான் அதீத ஈடுபாடு உண்டு. அதுவும் திருவண்ணாமலை சென்று வந்த பிறகு நான் தீவிர சிவபக்தையாகி விட்டேன்.

அப்பா தீவிர கண்ணன் பக்தனாக இருந்தார். ஆரம்பத்தில் அவர் நாத்திகவாதியாக இருந்ததை அவரே மனம் வருந்தி ‘நாத்திகம் -என் இருண்ட காலம்’ என்று சொல்லியிருக்காங்க.

‘இருபதில் ஏதோ..ஏதோ...என்று தூண்டப்படுகின்ற கற்பனைகள், அறுபதில் இதுதானா.. இதுதானா...என்று அடங்கிவிடுகிறது. ஆக, அந்த அறுபதிற்குரிய பக்குவத்தை இருபதிலேயே அடைந்துவிட ஆன்மீகம் மேற்கொள்வோமானால் இடைப்பட்ட நாற்பது வருட காலம் உண்மையாக வாழ்ந்தவன் என்ற கவுரவப்பட்டத்தை எப்படியேனும் நம் வாசலுக்கு கொண்டு வந்துவிடும்.’ (சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

திருவாடுதுறை ஆதீனம் மூலமாக சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு போய் கற்றுவருகிறேன். ஒரு மனிதனை நல்வழிப்படுத்துதல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை எல்லோருக்கும் ஏற்ற வகையில் எளிமைப்படுத்தித் தரும்முயற்சியில் இருக்கிறேன்.

ஆன்மீக ஈடுபாடு பற்றி சிலர் ஆச்சர்யமாக பார்க்குறாங்க. ‘நான் ஒரு லூஷூமதிரியே பேசத் தீர்மானித்து பிதற்றத் தொடங்கியதும்தான் கண்ணாரக் கண்டுகளித்தேன் எனக்கு அறிவுரை வழங்க வந்த அத்தனை லூஷூகளையும்.’ (சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

சதா சர்வ காலமும் ஆன்மீக தேடலிலேயே இருந்து வருவதால் வேறு எதையும் நினைக்கவோ செய்யாவோ முடியல. என் பிள்ளைக்கு பாடமெடுப்பதோ, பள்ளிவிழாக்களுக்கு தயார் செய்வதோ, நண்பர்களோடு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதோ, என்று எதுவுமே செய்யாத இந்த பொறுப்பற்ற தாய் தெரியாமல்ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தந்துவிட்டேன்...அது சிவாயநம.

இப்போ இருக்குற காலத்துல குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம்.’தொலைக்காட்சியில் ஆணுறைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க என் எட்டு வயதுமகன் என்னிடம் திரும்பி என்னம்மா அர்த்தம் என்ன அர்த்தம் என்று விடாமல் கேட்க நான் அமைதியாவே உட்கார்ந்திருப்பேன்..அடி வயிற்றில் நெருப்போடு.

எத்தனையோ முறை கேட்டும் பதில் வராததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வரும்போது அதை மவுனமாக கவனிக்கிறான். இப்போதுதான் நான் உணர்கிறேன்..என் அடிவயிற்று நெருப்பு நெஞ்சுவரை பரவுவதை!’(சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

அம்மா (வள்ளியம்மை ) வைணவ கல்லூரியில படிச்ச தமிழ்ப்புலவர்.  என்னை சென்னைக்கல்லூரியில பி.ஏ. ஆங்கிலம் படிக்க வச்சாங்க. அவுங்களும் 45 வயதுல இறந்துட்டாங்க.

அப்பாவும் இல்ல..அம்மாவும் இல்ல..இந்த சமயத்துலதான் அம்மா இறந்த ஆறு மாசத்துல அவர( மனோகரன்) கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

உன் உயரதுக்கு ஏற்றமாதிரி, வாயாடித்தனத்துக்கு ஏற்றமாதிரி யாரு வரப்போறாரோன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கு ஏற்ற மாதிரியே ஆர்டர் பண்ணி வந்தது மாதிரி அவர் எனக்கு கிடைச்சிருக்கிறார்.

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றைப்போல என்னை நினைக்கிறார். பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்.’’

-என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பூனைக்குட்டி தாவி வந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டது.

தூக்கி எடுத்து முத்தமிட்டார். பின்னர் மடியில் போட்டுக்கொண்டு தடவிக்கொடுத்தார்.‘’அப்பாவுக்கு நாய் மேல் ரொம்ப பிரியம். அவர் வளர்த்த நாய்க்கு‘சீசர்’ன்னு பேர் வச்சிருந்தார். சீசர் இறந்த பிறகு அதன் சோகம் தாங்காமல்‘என் இனிய சீசர்..’ என்று கவிதை எழுதி அந்த கவிதையில் சீசரின் பிரிவுத்துயரத்தை சொல்லியிருந்தார்.

எனக்கு பூனைகள் மேல் பிரியம். நான் விஷ்வாவை (குழந்தையை) கொஞ்சுவதைவிடவும் இந்த மியாவ்’வைத்தான்.அதிகம் கொஞ்சுவேன். அதனால் விஷ்வா அடிக்கடி சண்டை பிடிப்பான்.

அப்பாவை எல்லோரும் குழந்தை மனசுன்னு சொல்லுவாங்க. நிறைய நேரங்களில் அவர் குழந்தை மாதிரித்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஒரு நாள்(1962) மதியம் தூங்கி எழுந்தவருக்கு தீடீர் எண்ணம் வந்திருக்கு.நாம இறந்திட்டா என்ன நடக்கும். எல்லோரும் என்ன பண்ணுவாங்க’ன்னு பார்க்கஆசைப்பட்டிருக்காங்க.

உதவியாளரை அழைத்து திடீரென்று இறந்துவிட்டதாக எல்லோருக்கும் தகவல் அனுப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. அவரும் அப்படியே செய்ய, அலறி அடிச்சுக்கிட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.

எம்.எஸ்.வி. சார், இயக்குநர் ஸ்ரீதர் சார் என்று சினிமா, அரசியல்பிரபலங்கள் அத்துனை பேரும் வந்துட்டாங்களாம். அவரோட உடம்பு இன்னும் வரல..ஆஸ்பத்திரியில இருக்குன்னு சொல்லவும் எம்.எஸ்.வி.சார் அழுதிருக்கிறார்.ஸ்ரீதர் சார் புகம் பொத்தி அழுதிருக்கிறார்.

இதையெல்லாம் மாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த அப்பா இதுக்கு மேலயும் தாமதிக்கக்கூடாதுன்னு இறங்கிவந்திருக்காங்க.

என்னய்யா இப்படி பண்ணிட்டேன்னு அழுதவர்கள் எல்லோரும் பொய்க்கோவம் காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவும் சரி, அவரும்(கணவர்) சரி, என்னைப்பற்றி தெரிந்தவங்களும் சரி,என்னை குழந்தைன்னுதான் சொல்லுவாங்க. என்னை புதுசா பார்க்குறவங்க.. நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்துட்டு ஆள் வளர்ந்த அளவுக்கு மெச்சூர் இல்லேன்னு சொலிட்டுப் போவாங்க.

அந்த அளவுக்கு இருக்கும் என் குழந்தைத்தனம். நானும் என் விஷ்வாவும் சேர்ந்துட்டா போதும் வீடே ரெண்டாகும். இந்த குழந்தைகளையும் வச்சிக்கிட்டு சமாளிக்க முடியலியேன்னு அவரு தலையில கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திடுவாரு.

‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..பார்வையிலே குமரியம்மா..பழக்கத்திலே குழந்தையம்மா! என்று அப்பா எழுதியபாடல் எனக்காவே எழுதப்பட்டிருக்கு என்று சொல்வாங்க அம்மா. இப்போ அவரும்அப்படித்தான் சொல்றாரு.

மேடைகளில் நான் பேசுவதை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கிறீங்க என்று அவரிம் எல்லோரும் கேட்கிறார்களாம். அவருக்குத்தானே தெரியும் நான் வீட்டில் குழந்தைன்னு’’பெரிதாக சிரித்தார். தந்தையைப் போலவே தன்னையும் அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றார். அழைப்புகள் இருந்தும் தான் இன்னும் வராமல் இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

‘’அப்பா 1949ல் திமுகவில் ஆரம்பகால உறுப்பினர். 1957ல் திமுக சார்பில் திருக்கோஷ்டியூர் இரண்டாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்துவிட்டார். காங்கிரஸிலும் இருந்தார்............

அப்பாவிடம் சகிப்பு தன்மையும் கொஞ்சம் பணிந்து போகும் குணமும் இருந்தது. அதனால் அவர் அரசியலில் இருந்தார். என்னிடம் பணிந்து போகும் குணம் இல்லை.நான் எப்படி அரசியலுக்கு வரமுடியும்.

மேலும், அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோரையும் ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளனும், கூழைக்கும்பிடு போடனும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.

‘நான் ஒரு ஞானக்குழந்தை/நான் ஒரு தெய்வப்பறவி/நான் ஒரு வள்ளலின்வழித்தோன்றல்/நான் மனிதருள் ஒரு மாணிக்கம்/என்ன கைகொட்டிசிரிப்பீரோ?/பிறன் ஒருவனை நான் இப்படியெல்லாம் புகழ்ந்து அதன் மூலம் ஏதோஒன்றை அடைந்து அதன் வழியே நான் மகிழ்ச்சி பெருவேன் என்று இருந்தால் அந்த மகிழ்ச்சியை என்னை நானே புகழ்ந்து பெற்றுவிடப்போகிறேன்.

இதற்கு பேர்தான் தன்னையே நேசிக்கும் கலை. இது கைவரப்பெற்றால் உலகையே ஆளும் மகாராஜாவைக்கூட உனக்கு மேற்பட்டவனாகப் பார்க்கத் தோன்றாது. இதுவே மனிதகுலம் பெறவேண்டிய தனித்துவம்.

எந்த நாய் இன்னொரு நாய்க்கு பாராட்டு விழா எடுக்கிறது. பன்றிக்கு பன்றி சால்வையா போர்த்திவிடுகிறது. மாறுங்கள் மனிதர்களே. இல்லையேல் மாறிவிடும் மிருகங்கள்.(சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

இதனால் தான் நான் அரசியலுக்கு வரத்தயங்குகிறேன். மற்றபடி அரசியல் குறித்த அறியாமை எல்லாம் என்னிடம் இல்லை’’ என்றார்.

தனது அறியாத வயதில் தந்தை இற்ந்துவிட்டார் என்றும் அவர் இன்றுஇருந்திருந்தால் இரண்டு கேள்விகள் கேட்டிருப்பேன் என்றும் பேச்சின் திசையைமாற்றினார். ‘’ஆண் வேசி வீட்டுக்கு போய்விட்டு வந்தாலும் நல்ல மனைவி இன்முகம் காட்டுவாள் என்று அப்பா எழுதியிருக்காங்க. இது ஆணாதிக்கம்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படித்தான் இருக்கனும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  சமமான பார்வை வேண்டும்.

அப்புறம் ஒன்னு, ‘என்னதான் நெஞ்சக்காயங்களுக்கு மருந்து போட்டு விடுகிறது என்றாலும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும் ஒரு வகை வக்கிரம்தானே..(அப்பா மன்னிப்பீராக..) என்று தான் எழுதிவரும் சிந்தித்தேன் சிந்தியதேனிலிருந்து சொன்னார்.

தந்தை செய்ய வேண்டும் என்று நினைத்து காலனின் அழைப்புக்கு இணங்கி ஓடிவிட்டதால் முடியாமல் போன காரியங்களை தான் செய்திருப்பதாகவும்குறிப்பிட்டார்.

‘’பதினான்கு வயதில் நான் எழுதிய ‘கிருஷ்ண கானம்’ நூல் வெளியீட்டு விழாசென்னை சோழா ஓட்டலில் நடந்தது.  இந்த விழாவுக்கு ம.பொ.சி. ஐயா வந்தார்.அப்போது அவர் என்னிடம், ‘அப்பா எனது வாழ்க்கையை எழுதப்போவதாக சொன்னார்.அதில் அவர் அதிகம் ஆர்வம் வைத்திருந்தார். எனக்கு கொடிப்பினை இல்லை. அதான் அதற்குள் அவர் போய்விட்டார் என்றார்.

அதனாலென்ன நான் இருக்கிறேனே என்றேன். அவரும் உன்னால் இது முடியுமா என்றெல்லாம் கேட்கவில்லை. எழுது என்றுவிட்டார்.

அவர் கூடவே ஒரு வருடம் இருந்து அவர் சொல்லச்சொல்ல எல்லாவற்றையும் கேட்டு தொகுத்து ‘ம.பொ.சி. ஒரு சகாப்தம்’ என்று எழுதினேன். அதுவும் மரபுக்கவிதை வடிவில் எழுதினேன்.

நீ எழுதல..உன்னை கண்ணதாசன் எழுத வச்சிருக்கிறாரு என்று அவர் என்னைபாராட்டினார். அது உண்மைதான். அந்த பதினான்கு வயதில் இவ்வளவு பெரியவிசயங்களையும் பொறுமையாக கேட்டறிந்து எழுதும் பக்குவம் எனக்கு எப்படிவந்தது. அது எனக்குள் இருந்து அப்பா எழுதியது.

அர்த்தமுள்ள இந்து மதம், இயேசுகாவியம் எழுதிய அப்பா அடுத்து குரான் பற்றி எழுதும் தீவிரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

அந்த குறையை நான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திருக்குறளில் காமத்துப்பாலுக்கு எளிய வடிவில் புதுக்கவிதை நடையில் விளக்கஉரை எழுதியிருக்கும் (1977) அப்பா, அடுத்து அறம்,பொருள் இரண்டையும் எழுதிமுடிக்க பகவான் ஆரோக்கியத்தை எனக்கு அருள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அப்பாவுக்கு பகவான் ஆரோக்கியத்தை அருளவில்லை. அறம்.பொருள் இரண்டுக்கும் நான் விளக்க உரை எழுதப்போகிறேன்’’ என்றவர், தந்தைதயாரிப்பாளராக இருந்து மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கருப்புப்பணம் என்று நிறையப்படங்களை தயாரித்தார்.

அதை நினைவுபடுத்தியதோடு இல்லாமல் நாமும் அப்படிச்செய்வோம். அதுக்கான ஆரம்பம்தான் இது என்று தன் கணவர் ரஷ்ஹவர், ஜாஸ்த்ரி, கேட் உமன் என்று வெளிநாட்டு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருதாக குறிப்பிட்டார்.

5000 திரைப்பாடல்கள், காவியங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள், புதினம்,சுயதரிதை என நூற்றுக்கும் வேற்பட்ட நூல்களை படைத்திருக்கிருக்கும் கண்ணதாசனுக்கு ‘கண்ணதாசன் பல்கலைக்கழகம், கண்ணதாசன் அறக்கட்டளை என்றெல்லாம் கொண்டுவர வேண்டும்’ என்று சொன்னதோடு இல்லாமல் அதற்கான முயற்சியில் தன் கணவர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை பல பரினாமங்களில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் ஒரே கோணத்திலேயே பார்க்கிறார்கள் என்று குறைபட்டுக்கொண்டார்.


‘’அப்பா ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர் ஒளித்து வைக்கவில்லை. மது,மாது என்கிற கோணத்திலேயே அவரை பெரும்பாலும் பார்க்கிறார்கள். கண்ணதாசன்காரைக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி’ன்னு பாடுறாங்க.

அவர் பிறந்த சிறுகூடல்பட்டியில் சின்னவங்க, பெரியவங்க எத்தனையோ பேர் வந்துமண்ணை தொட்டு கும்பிடுவதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.’’என்றார்.

தன் தந்தை இறந்தபோது நாலறை வயதில் தான் செய்த அறியாமையை எண்ணி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

‘’அமெரிக்காவில் சிகாகோ ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க அப்பாவை.(24.71981) இரண்டு மாசத்துக்கு பிறகு(17.10.1981, சனிக்கிழமை, இந்தியநேரப்படி 10.45க்கு) இறந்திட்டார்.

விமானத்தில் அப்பாவின் சடலத்துடன் அம்மாவோடு நானும் வந்திருக்கிறேன்.அப்பாவின் சவப்பெட்டி மேல் ஏறி விளையாடியதும் அம்மா அழுதபடியேஅதட்டியிருக்கிறாங்க.

 சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் (20.10.1981)பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்திருக்கிறார்கள்.   போட்டோ ப்ளாஸ்களுக்கு சிரித்திருக்கிறேன்.

அந்த நாலரை வயதில் நான் ரொம்ப புஸ்டியாக இருந்திருக்கிறேன். அதனால்தான்,கண்ணதாசன் சடலத்துடன் அவரது பத்து வயது மகள் வந்தார் என்று பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்’’ என்றவர், தான் அர்த்தமற்ற 15வதுகுழந்தையாக அப்பாவுக்கு பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
                                                   

நீ எழுதல சாலா.. அப்பாதான் உனக்குள் இருந்து எழுதுறாருன்னு அம்மா சொன்னதை இப்போதுதான் உணர்கிறேன். எழுத ஆரம்பிக்கும் வரை என் மனநிலை வேறு. எழுதனும் என்று உட்கார்ந்துவிட்டால் என் மனநிலை எனக்கே ஆச்சர்யாமக இருக்கு.எனக்குள் அசரீரியாய் இருந்து என்னை எழுதவைப்பதும் அப்பாதான்.

அப்பா ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன நிறைய விசயங்கள் நடந்திருக்கு. 18வயசில சாலா நல்ல நிலையில இருப்பான்னு சொல்லியிருக்காங்க அப்பா. அது நடந்துச்சு.

எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான நெல்லைக்கண்ணன் ஐயாவும், தமிழருவி மணியன் ஐயாவும் என் மேடைப்பேச்சைக் கேட்டு ‘அப்பா பேசுனது மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேர் என்னை ‘நீ கண்ணதாசனின் மிச்சம்’னு சொல்லியிருக்காங்க. அதை காப்பாற்றனும்னு உணர்கிறேன்.

அப்பா அமெரிக்கா செல்லும்போது அம்மாவிடம் நான் திரும்பி வருவேன் என்பது நிச்சயம் இல்லைன்னு சொன்னவங்க சாலாவ பத்திரமா பார்த்துக்கோன்னு சொன்னதோடு மட்டுமில்லாம, ‘சாலாவுக்கு நான் வானவீதியில் இருந்து வாழ்த்துப்பாபாடிகிட்டே இருப்பேன்’ன்னு சொல்லியிருக்காங்க.

எழுதிமுடித்துவிட்ட போதெல்லாம், நல்ல விசயங்கள் பேசிமுடித்துவிட்டபோதெல்லாம், நல்ல விசயங்கள் செய்து முடித்துவிட்ட போதெல்லாம், மனசுக்கு சந்தோசமான நேரத்துல எல்லாம் நான் வான வீதியை பார்க்கத் தவறுவதில்லை’’என்று நெகிழ்ந்தவர் நெஞ்சோடு பூனைக்குட்டியை அணைத்துகொண்டு அண்ணாந்து பார்த்து கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டார்.

எழுத்தாக்கம் : கதிரவன்
 நன்றி - நக்கீரன் 

கேப்டனுக்கு தமிழருவி மணியனின் பகிரங்க எச்சரிக்கைக்கடிதம்

விவேகம் இழக்கலாமா விஜயகாந்த்..?

ன்பிற்கினிய விஜயகாந்த் அவர்களுக்கு...



வணக்கம் வளர்க நலம்.


நீங்கள் அமைதியாக ஓர் இடத்தில் தனித்திருந்து ஆத்ம​சோதனை நடத்த வேண்டிய நேரம் இது. சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும் எதுவும் எளிதில் கிடைப்பது இல்லை. சிலருக்கு எளிதாகக் கிடைத்து விட் டாலும், கிடைத்ததை நிரந்தரமாகத் தக்க​வைத்துக் கொள்வதற்குத் தெரிவது இல்லை.



 சிகரத்தை அடைவது சாதனை இல்லை. அங்கேயே நீடித்து நிற்பதுதான் உண்மையில் உயர்ந்த சாதனை. ஒவ்வொரு சிகரத்தின் பக்கத்திலும் பயங்கரமான ஒரு செங்குத்துச் சரிவு இருக்கும். சிறிது நிலை தடுமாறினாலும் பள்ளமே படுக்கையாகிவிடும். நீங்கள் நிலை தடுமாறுவதைக் கண்டு ஏற்பட்ட கவலையில் பிறந்ததுதான் இந்தக் கடிதம்.



உங்கள் கட்சியில் இருக்கும் அனை​வரும் அடக்கத்துடன் கைகட்டி நிற்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படை​யாகவே ஆசைப்​படுகிறீர்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்பவே நடந்துகொள்ள வேண்​டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்புத்தான் உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்​தளம்.



இராமானுஜருக்கு வடுகநம்பி என்று ஒரு சீடர் இருந்தார். ஒருநாள் இருவரும் காவிரியைக் கடக்கும்போது, இராமானுஜர் வழிபட்ட சிலையையும், இராமானுஜரின் பாத அணிகளையும் ஒரே மூட்டையாகக் கட்டினார் வடுகநம்பி. பதறிப்போன இராமானு​ஜரிடம் சீடர் சொன்னார்: 'உங்கள் பெருமாள் உங்களுக்கு உயர்ந்தவர். என்னுடைய பெருமான் எனக்கு உயர்ந்தவர்’ என்று. இன்றைய அரசியலில் தலைவர்களாக வலம் வரும் நீங்கள் அனைவரும் வடுக நம்பியின் வாரிசுகளைத்தான் வர வேற்கிறீர்கள்!



மதுரையில் செப்டம்பர் 14, 2005 அன்று தே.மு.தி.க-வைத் தொடங்கிய​போது, உங்களை யாரும் பெரிதாகப் பொருட்​படுத்த​வில்லை. கூடிய கூட்டம்கூட உங்களைத் திரையில் பார்த்துக் கைதட்டிய ரசிகர் பட்டாளம் என்றுதான் பலர் கணக்குப் போட்டனர். ஆனால், 2006-சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தி, ஓர் இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்கள் கட்சிக்குக் கிடைத்த 10 சதவிகிதம் வாக்குகள் பல அரசியல்வாதிகளின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அடுத்து வந்த நாடா ளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற 10.1 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை அனைவருக்கும் உணர்த்​தியது.




'மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி’ என்று சலிப்​பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் 2011-சட்ட​மன்றத் தேர்தலில் ஜெயலலிதா​வுடன் சேர்ந்து நின்றபோது, அதை ஒரு சந்தர்ப்ப​வாதம் என்று வாக்காளர்கள் சந்தேகிக்காமல் வரவேற்கவே செய்தனர். அதற்கு ஒரே காரணம், கருணாநிதி பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வாக்கா​ளர்களின் தவிப்பும் தாகமும்தான்.



கருணாநிதியின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு விளைந்த வெறுப்பும் விரக்தியும்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் உங்களை  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கிய முக்கியக் காரணி என்பதை நீங்கள் இருவருமே உணராமற்போனதுதான் அரசியல் சோகம். 'என்னால்தான் நீங்கள் முதல்வரானீர்கள்’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் முழங்குவதும், 'என்னால்தான் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஏற்றம்’ கிடைத்தது என்று ஜெயலலிதா ஏளனம் செய்வதும் முற்றிலும் அர்த்தமற்ற ஆணவத்தின் வெளிப்பாடு.



கூட்டணி அமைப்பதே ஒரு கட்சி இன்னொரு கட்சியால் பயன்பெற வேண்டும் என்பதற்​காகத்தானே? ஜெயலலிதாவுடன் நீங்கள் சேர்ந்திருக்கா விட்டால், நிச்சயம் 29 தொகுதிகளில் உங்கள் கட்சி வென்றிருக்காது. உங்கள் கூட்டணி அமையாமற் போயிருந்தால், வாக்குகள் சிதறியிருக்கும். அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களை அடைந்திருக்காது. ஆனால், தட்டுத் தடுமாறியாவது அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். அந்த நிலையில் நீங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்க முடியாது. இந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை?



ஜெயலலிதாவை முதல்வர் என்ற முறையில் நீங்கள் மதிக்கப் பழகவில்லை. உங்களை எதிர்க் கட்சித் தலைவர் என்ற மரியாதையுடன் நடத்த ஜெய லலிதாவுக்கு மனம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் முதல்வருக்கு இல்லை. பக்குவமாய் விமர்சிக்கும் பாங்கு உங்களுக்கு வாய்க்கவில்லை. இந்தக் கொடுமைக்கு, உங்கள் இருவருக்கும் வாக் களித்தவர்கள் எங்கேபோய் முட்டிக்கொள்வது? 'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ, அதே போன்றுதான் யாருக்கும் எஜ மானராகவும் இருக்கவியலாது’ என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நீங்கள் இருவருமே எல்லாருக்கும் எஜமானர்களாகவே இருக்க ஆசைப்படுகிறீர்கள்.



திரைப்பட உலகில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடக்க நிலையில் படத்தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு பணிவாக நடந்திருப்பீர்கள். 'தூரத்து இடிமுழக்கம்’ நடிக்கும்​போது காட்டிய பணிவு 'கேப்டன் பிரபாகரன்’ வெற்றிக்குப் பிறகும் இருந்திருந்தால் அதுதான் சிறப்பு. அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தபோது பத்திரிகையாளரிடம் காட்டிய பாசம், எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றம் பெற்ற பிறகும் நீடித்து இருந்தால் அதற்குப் பெயர்தான் தலைமைப்பண்பு.



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை​யாளர்கள் அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட் டனர்? ஏன் அந்தப் பதற்றம்? எதற்கு அந்த அனாவசிய ஆவேசம்? அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் அறிவைத் துறந்து, உணர்ச்சிக்கு ஆட்படுவது அரசியல் தலைமைக்கு அழகல்லவே! ஏகவசனத்தில் உரத்த குரலில் ஓங்கிப் பேசுவது பொதுஇடத்தில் கடைப்பிடிக்கக்கூடிய நயத்தகு நாகரிகமா கேப்டன்?




 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழி போட்டுக்கொள்ள ஆசைப்படும் நீங்கள், எம்.ஜி.ஆரிடம் எதையும் கற்கவில்லையே. கூடப்பழகியவர்களுக்கு எம்.ஜி.ஆரின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். இராமா​வரம் தோட்டத்தில் காட்டிய கோபத்தை எம்.ஜி.ஆர். பொதுவிடங்களில் உங்களைப்போல் ஒரு நாளாவது மக்களிடையே காட்டியது உண்டா? உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளுக்கு ஆடை கட்டாமல் அப்படியே நிர்வாணமாக வெளிப்படுத்துவதை இனியாவது நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் கவிஞர் இல்லை; மக்களின் விதி எழுத விரும்பும் ஒரு கட்சியின் தலைவர்.




உங்களுடன் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரவணைப்பில் ஆதாயம் அடைவதற்கு ஆசைப்பட்டு இடம் மாற முடிவெடுத்து விட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்​படுவதற்கோ என்ன இருக்கிறது? மதுரை சுந்தரராஜனும், மைக்கேல் ராயப்பனும், நடிகர் அருண்பாண்டியனும் காந்தியம் வளர்க்கவா உங்கள் கட்சிக்கு வந்தனர்?



ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் வாழ்வில் ஏற்றம் தருவதற்காகவா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார்கள்? உங்களோடு இன்று எஞ்சி இருப்பவர்களில் எத்தனை பேர் நாளை பழுத்த மரம் நோக்கிப் பறக்கப் போகின்றவர்களோ? சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் ஆனவர்களே கட்சி மாறும் காலமல்லவா இது! பதவி, அதன்மூலம் வந்து சேரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைக்கொண்டு கொள்ளை​யடிக்கும் கள்ளப்பணம் - இதுதானே இன்று நம் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்! சுயநலம்தானே இவர்களின் மூல மந்திரம்!



அது சரி... நீங்கள் ஏன் கட்சி அரசியலில் கால் பதித்தீர்கள்? கருணா​நிதியிடம் இருந்தும் ஜெயலலிதாவிடம் இருந்தும் தமிழக மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவா? ஊழலற்ற அரசியல் சமூகத்தை உருவாக்கவா? நேர்மை சார்ந்த நல்லாட்சியை நடைமுறைப்படுத்தவா? இவை​தான் உங்கள் உண்மையான நோக்கமெனில், வேட்பாளர் தேர்வில் எந்த வகையில் நீங்கள் மாறுபட்டீர்கள்?




சுந்தரராஜன், உங்கள் நெடுநாள் நண்பர். அருண்பாண்டியன், உங்களிடம் நட்புப் பாராட்டிய நடிகர். மைக்கேல் ராயப்பன், பணபலம் படைத்த படத் தயாரிப்பாளர். மற்றவர்கள் உங்கள் ரசிகர் மன்றத் தளபதிகள். காமராஜரைப் போல் தன்னலமற்றவர், கக்கனைப் போல் ஊழலற்றவர், ஜீவாவைப் போல் ஏழைகளின் தொண்டர், பெரியாரைப் போல் சமூகப் போராளி என்ற ஒவ்வொருவரையும் தேர்ந்து தெளித்தா தேர்தல் களத்தில் நிறுத்தினீர்கள்? இல்லையே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதைச் செய்கிறார்களோ, அதையேதான் நீங்களும் செய்வீர்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இன்னொரு தே.மு.தி.க.? யோசியுங்கள் கேப்டன்!




குறைந்தபட்சம் கோபப்படாத மனிதராகவாவது உங்களால் இருக்க முடிகிறதா? சட்டப் பேரவையில் அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் உங்களிடம் நடந்துகொண்ட விதம் மெச்சத் தகுந்ததாய் அமையவில்லை என்பது உண்மை. அதற்காக நீங்கள் நாக்கைத் துருத்தியது நியாயமா? பத்திரிகையாளரிடம் பகைமையைக் காட்டியது பண்பாடா? தேர்தல் பிரசாரத்தில் சொந்த வேட்​பாளர் தலையில் அடிப்பது அரசியல் நாகரிகமா? 'ஜெயலலிதாவை உங்கள் எம்.எல்.ஏ-க்கள் பார்த்தது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதற்றமின்றி அரசியல் ரீதியாக நீங்கள் பதில் சொல்லியிருக்கலாமே.



 கருணாநிதி ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன்  கட்சி மாறியதால், அ.இ.அ.தி.மு.க. அழிந்து விட்டதா? அதற்குப் பிறகுதானே அது ஆட்சிக்கு வந்தது. ஈரோடு முத்துசாமியும், சேலம் செல்வகணபதியும் இடம் மாறியதால், அ.தி.மு.க-வின் தடம் நகர்ந்து விட்டதா? சந்தர்ப்பவாதிகள் செல்வதால், எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று சொல்லிவிட்டு விமானம் ஏறியிருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லையே!



'சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் 2006- தேர்தலில் மீண்டும் நிற்பதற்குக் கூட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. இன்று அவர்களுடைய முகவரியை யார் அறிவார்?



 இன்று இங்கிருந்து செல்ல நினைப்பவர்கள் நாளை என்ன ஆவார்கள் என்பதற்கு அந்த மூவரை​ விடவும் சரியான சான்று தேவையா?’ என்று உங்கள் கட்சியில் சபலத்துக்கு உட்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு 'டெங்கு’ காய்ச்சல் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?



தலைமைக்கு வேண்டிய முதல் பண்பு புலனடக்கம். ஆண்டவனை 'ஐந்தவித்தான்’ என்கிறார் வள்ளுவர். இன்று ஆள்பவர்களும், நாளை ஆள்வதற்கு ஆசைப்படுபவர்களும் ஐந்து புலன்களையும் அடக்கியாள முதலில் முயல வேண்டும். மண்ணை வென்ற மாவீரன் அலெக்சாண்டரைவிட, தன்னை வென்ற ஞானி டயோஜனீசிடம் தான் மக்கள் மரியாதை செலுத்தினர். 'உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக் கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்று கர்த்தர் சொன்னதை நீங்கள் உட்பட எந்த அரசியல் தலைவரும் உணர்ந்த​தாகத் தெரியவில்லையே.



இராமானுஜர் திருப்பதி மலையை அடைந்தபோது, அவரை வரவேற்க அவருடைய ஞானகுரு திருமலை பெரியநம்பி நேரில் வந்து வரவேற்றார். 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று இராமானுஜர் சொன்னபோது, 'என்னைவிட சிறியவன் இந்த மலையில் வேறு யாரும் இல்லையே’ என்றார் பெரியநம்பி. நீங்கள் எப்போது பெரிய நம்பியாக மாறப்போகிறீர்கள்?



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்​களிடம் 'ருத்ரதாண்டவம்’ நடத்தி விட்டு மதுரைக்குச் சென்ற நீங்கள், இஸ்லாமியரின் தியாகத் திருநாள் விழாவில் தலையில் குல்லாய் தரித்தபடி உரையாற்றிய கோலம் கண்டு  சிரிப்புத்தான் வந்தது. வாக்குகளைப் பெறுவதற்கு எந்த வேடமிட்டும் நடிப்பதில் நம் தலைவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நபிகளார் அரேபிய மக்களின் அதிபராக இருந்த போதும், அறுந்துபோன தம் காலணியைத் தாமே சீர்செய்து கொண்டவர்; கந்தலாகி விட்ட கம்பளி ஆடையைத் தாமே தைத்துக் கொண்டவர்;



தமது மண் குடிசையைத் தம் கைகளால் சுத்தம் செய்தவர்; அவரது குடும்பம் பல இரவுகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குப் போகும்படி அவரு​டைய வாழ்க்கையில் வறுமை குடி​கொண்டிருந்தது. அவர் கடைசி மூச்சை விட்டபோது, அவர் அணிந்​திருந்த ஆடையில் பல ஒட்டுகள் போடப்பட்டிருந்தன. தலைமை ஏற்பவர் எளிமையாகவும், ஏழைகளின் பிரதி நிதியாக​வும், அகத்திலும் புறத்திலும் உண்மையாகவும் நேர்மை​யாகவும் நபிக​ளாரைப் போன்று நடக்க​வேண்டும் என்று உணராமல், தலையில் தொப்பி வைப்பதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் போலி நாடகம் இல்லையா?



போகட்டும். தூய அன்போடும், நல்ல நட்போடும் உங்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன். நீங்கள் மார்க்ஸைப் போன்று மாபெரும் சிந்தனையாளர் என்றோ, காந்தியைப் போன்று சத்திய சோதனையில் ஈடுபட்டிருப்பவர் என்றோ, பெரியாரைப் போன்று புரட்சியாளர் என்றோ, அம்பேத்கரைப் போன்று அறிவாயுதம் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்​பவர் என்றோ, தமிழக வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.



 இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. உங்கள் தலைமையில் மலரும் என்பதுதான் அவர்​களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நீங்களோ, உங்கள் தளபதிகளோ, எந்தவகையிலும் மாற்றாக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் உங்கள் நடைமுறைகள் நிரூபித்து வருகின்றன. தனித்திருந்து யோசியுங்கள். தவறுகள் புலப்படும். இனியாவது புதிய பாதையில் பயணம் புறப்படுங்கள். அதற்கு முன்பு கர்த்தர் சொன்னதைக் கவனத்தில் நிறுத்துங்கள். ''வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.’



- என்றும் அன்புடன்


தமிழருவி மணியன் 


 நன்றி 0 ஜூ வி 

Barfi! (2012) - சினிமா விமர்சனம்

http://img.hindilinks4u.net/2012/09/Barfi-20121.jpg

என் மன வானில் ஹீரோ போல், மொழி ஹீரோயின் போல் இந்தப்பட ஹீரோவும் வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி . காதல் மன்னன் அஜித் போல் இவர் ஆல்ரெடி மேரேஜ் நிச்சயம் ஆன  இலியானாவுக்கு ரூட் விடறார்.அவர் நாட் ஓக்கேன்னு சொன்னாலும் மனசளவுல லவ் இருக்கு. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்பதால் தயக்கம், இருந்தாலும் சைக்கிள் கேப்ல  சத்யா கமல் அமலா முத்தம் மாதிரி ஒரு லிப் கிஸ் வரை போயிடுது.


இலியானாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையுடன் மேரேஜ் ஆகிடுது. ஹீரோ தேவதாஸ் எல்லாம் ஆகலை. அவரோட அப்பாவுக்கு திடீர்னு உடல் நலக்குறைவு. ஆபரேஷனுக்கு பணம் வேணும். அப்பா கார் டிரைவரா வேலை செய்யும் முதலாளியிடம் செலவுக்கு பணம் கேட்டா கர்நாடகா நமக்கு தண்ணீர் விஷயத்துல என்ன பண்ணுச்சோ அதை பண்றாரு.கடுப்பான ஹீரோ தன் அப்பாவின் முதலாளியின் மகளை  குணா கமல் மாதிரி கிட்நாப் பண்ணிடறாரு .


 இவ்ளவ் பணம் குடுத்தாத்தான் மகளை ஒப்படைப்பேன்னு மிரட்டி  அந்தப்பணத்தை வாங்கி ஆபரேஷன் பண்ண வைக்கிறாரு. முதலாளியின் மகள் பிரியங்கா சோப்ரா  மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி மனநலக்குறைவு  உள்ளவர். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். இருவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிடுது.


பிரியங்காவின் அப்பா ஒரு டிராமா போட்டு  ஹீரோவை போலீஸ்ல சிக்க வைக்கிறார். பழைய காதலி இலியானா தாலி கட்டுன புருஷனை அம்போன்னு விட்டுட்டு ஹீரோ கூட இருந்து அவர் காதலை சேர்த்து வைக்க ட்ரை பண்றாரு. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. 

 படத்தோட இயக்குநர் பல உலகப்படங்கள் பார்த்தவர் போல். செய் நேர்த்தி, தொழில் நுட்பக்கலைஞர்களிடம் வேலை வாங்கிய முறை எல்லாம் பிரமாதம். சீன் பை சீன் ஆல்ரெடி வந்த பல படங்களின் கலவையா இருந்தாலும் சாதா ரசிகனுக்கு சிந்திக்க வாய்ப்பே கொடுக்காத திரைக்கதை அமைப்பு , காட்சிகளின் விவரிப்பு அழகு.


ஹீரோ  ரன்பீர் கபூர் சிம்மா சொல்லக்கூடாது, செம நடிப்பு. பிறவிக்கலைஞனும், தன் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான  ரசனைக்கு தீனி போடும்  கேரக்டர்  தேர்வு செய்யும் ஜீவ கலைஞனுமாகிய   கமல் செய்யமுடிந்த கேரக்டரை சர்வசாதாரணமாக அநாயசமாக ரன்பீர் செஞ்சுடறார். படம் முழுக்க அவருக்கு வசனங்கள் இல்லை, ஆனாலும் அந்த குறையே  தெரியாத வண்ணம் தன்  பக்குவமான நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். 


ஹீரோயின் இலியானா ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். அநேகமாக இவர் இடுப்பை காட்டாமல் நடிப்பைக்காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ( ஒரே ஒரு சீன்ல பேக்ல இருந்து லைட்டா இடுப்பை காட்டறார் ) குடும்பப்பாங்கான தோற்றம் அபாரம். நிச்சயிக்கப்பட்ட பெண் காட்டும் தடுமாற்றம், காதல்  , வெட்கம் எல்லாம் வெளிப்படுத்தும் அழகிய கேரக்டர். வெல்டன் 


  பிரியங்கா சோப்ராக்கு லைஃப் டைம் கேரக்டர். மூன்றாம் பிறையில் ஸ்ரீ தேவிக்கு குழந்தை மாதிரி நடிச்சா போதும், ஆனா இதுல அதை விட சவால் நிறைந்த கேரக்டர்.  சாதா ஜனங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத உயர் குடி மக்கள் மட்டுமே அறிந்த நோய் தாக்கிய கேரக்டரை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 


அது போக ஆசிஸ் வித்யார்த்தி மிடுக்கான நடிப்பு, போலீஸ் ஆஃபீசராக வரும் தொந்தி கேரக்டர், அப்பா கேரக்டர் எல்லாரும் அளவான நடிப்பு


http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/07-2012/first-look-ranbir/barfi23.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இது 1972 மற்றும் 1978 ஆகிய கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் ஒளிபப்திவு , ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஒர்க். அதி அற்புதமான பங்களிப்பு.கொல்கத்தா , டார்ஜிலிங்கில் கேமரா புகுந்து விளையாடுகிறது


2. ஹீரோ இலியானாவுக்கு பிரபோஸ் பண்ணியதும் தான் ஆல்ரெடி எங்கேஜ்டு என்று இலியானா சொன்னதும் டக் என இலியானா தோழிக்கு ரூட் விடும் குறும்புத்தனம் , மிக இய்ல்பாக நடக்கும் அந்த லிப் டூ லிப் கிஸ் சீன் அந்த சீனில் லைட்டிங்க்


3. ஹீரோ தன் ஷூவை கழட்டி அதில் டாட்டா காட்டுவது. பிரியங்காவுக்கு தன் இருப்பிடம் , வருகை அறிவிக்க தன் ஷூவை மேலே எறிந்து எறிந்து சோர்வது 


4. இலியானாவின் விரலில் மாட்டப்பட நிச்சய மோதிரத்தை  கழட்டி வீசி , அருகம்புல்லால் மோதிர முடிச்சு இடுவது கவிதையான சீன் 


5. பிரியங்கா சோப்ரா கோசாப்பழம் ( தர்பூசணி) சாப்பிடும்போது மேட்சுக்கு மேட்சாக ரத்த சிவப்பில் கோட் அணிந்து இருப்பது கொள்ளை அழகு 


6. இடைவேளை கார்டு போடும்போது பிரியங்கா தூக்கக்கலக்கத்தில் தன் விரலை ஹீரோ கையோடு இணைப்பது , பின் ஹீரோ எழுந்து அவர் தூக்கம் கலக்காமல் தன் விரலை விடுத்து அவர் விரலுடன் கோர்ப்பது 


7. ஹீரோவுக்கு காது கேட்காது என்பதால் காலிங்க் பெல்லுக்கு பதிலாக  செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு செம 


8. பிரியங்கா கயிற்றுப்பாலத்தை கடக்கையில் ஹீரோ குறும்பாக அதை ஆட்டுவது, பின் ஒரு காட்சியில் இருவரும் நாசியில் நாசி வைத்து கொஞ்சுவது ரொமாண்டிக் சீன்ஸ் 


9. ஹீரோ  ஆளில்லா வயல்காட்டில் நெம்பர் ஒன் போவதும் திடீர் என ஒரு கூட்டம் அவர் முன் தோன்றுவதும் பின் சேம் டிட்டோ போலீசுக்கும்  நடப்பதும் ரகளையான காமெடி 


10. ஹீரோயின் இலியானாவின் அம்மா கேரக்டர் நடிப்பும் , அவர் தரும் ஆதரவும் பேச்சும் அழகு


http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BARFI!/barfi-2.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தின் முதல் காட்சியான போலீஸ் , ஹீரோ சேசிங்க் சீன் ஆல்ரெடி ஜாக்கிசானின் பிராஜக்ட் ஏ படத்தில், ஆர் பாண்டிய ராஜனின் நெத்தி அடி, ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்  படத்தில் வந்ததுதான், புதுசா யோசிச்சு இருக்கலாம்.அதேபோல் பல கட்சிகள் சார்லி சாப்ளின் படங்கள் சாயல்


2. இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க் மகா மோசம். போஸ்டர் டிசைன் எல்லாம் ஹீரோ சைக்கிளில் நிற்கும் காமெடிப்படம் போல் தோற்றம். இது அழகிய கவிதை மாதிரி லவ் ஸ்டோரி, போஸ்டர் டிசைன் மணிரத்னத்தின் கீதாஞ்சலி, மவுன ராகம் போல் அமைந்திருந்தால் செமயா இருந்திருக்கும். படத்துக்கான ஓப்பனிங்க் கிடைக்காததுக்கு காரணம் போஸ்டர் தான் ( பி & சி செண்ட்டரில் படம் சரியா போகலை ) 


3. ஹீரோ அடிக்கடி ரயிலில் ஜன்னலில் பிடி போட்டு ரயிலுடன் பயணித்து விளக்குக்க்ம்பத்தில் மோதி கீழே விழறார், கம்பமும் விழுது. அது எப்படி? சைக்கிள் தான் டேமேஜ் ஆகும். இரும்பு கம்பம் சாதா லைட் வெயிட் லேடீஸ் சைக்கிள் மோதி கீழே விழுமா?


4. அடிக்கடி ஹீரோ கதவில் மோதி இடிச்சுக்குவது ஆல்ரெடி சாகர் ஹிந்திப்படம் முதல் பல படங்களில் கமல் செஞ்சதுதான், சிப்பிக்குள் முத்து , மூன்றாம் பிறை , பாச வலை போன்ற கமல் படங்கள் தாக்கம் ஆங்காங்கே 


5. இலியானா பாரம்பரியம் மிக்க குடும்பப்பெண்ணாக நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வர்றார், ஆனால் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. அது எப்படி? அவர் அம்மா கேரக்டர் நெற்றி வகிடு , நெற்றியில் குங்குமம் வெச்சு வர்றாரே? அதே போல் இலியானாவையும் நடிக்க வைக்கலையே? 


6. திரைக்கதை அமைப்பு சாதா ஜனங்களுக்கு புரியாது. நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே. தேவையே இல்லை. நேரடியா ஒரே நேர் கோட்டில் கதை சொல்லி இருக்கலாம் 


7. ஒரு பென்ச் ரசிகனின் கேள்வி. படத்தில் ஹீரோவுக்கும் ப், பிரியங்காவுக்கும் மேரேஜ் ஆகுது. பல வருடங்கள் ஒண்ணா வாழறாங்க, ஆனா குழந்தை இல்லை, சோ அவங்களூக்கு இடையே மேட்டர் நடந்ததா? இல்லையா? என்பதை நாசூக்காகவாவது சொல்லி இருக்க வேண்டாமா? 


8. இலியானா தன் புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்துடறார், புருஷன் மிக்சர் பார்ட்டியா? எந்த ஸ்டெப்பும் எடுக்கலையா? அவர் காலம் முழுக்க ஹீரோவுக்கும், பிரியங்காவுக்கும் சேவை செஞ்சாரா? ஹீரோ கூட மேட்டர் பண்ணாரா? என்ற  கேள்வுக்கும் தெளிவான விடை இல்லை . (  நெம்பர் 7 , 8 கேள்வி சந்தேகங்கள் எழுப்பிய பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி )


9.ஒரு  சீன்ல சன்பாத் எடுக்கும் ஆண் நிர்வாணமா படுத்திருக்கார், அவர் இடுப்பருகே பேப்பர், அந்த நியூஸ்பேப்பரில் ஹீரோவை போலீஸ் தேடும் விளம்பரம், ஹீரோ அந்த பேப்பரை பார்க்க ,, அந்த ஆள் ஹீரோவை ஹோமோ என நினைக்க மேற்படி காமெடி ஹாலிவுட்டுக்கு ஓக்கே, ஆனா இங்கெ? அதே சீனை ஒரு பெண்ணை வைத்து எடுத்திருந்தா கிளாமருக்கு கிளாமர், கிளு கிளுப்புக்கு  கிளு கிளுப்பு


10. மன நலம் குன்றிய பிரியங்கா ஒரு சினில்  நெம்பர் டூ போக  சல்வாரை உயர்த்தி நிக்கரை கழட்டுன்னு ஹீரோ கிட்டே சொல்றார். அந்த சீனில் கேமரா ஹீரோயினுக்கு பேக்கில் வைக்கப்படிருக்கனும், கண்ணியத்துக்கு கண்ணியம். எதிர்பார்ப்பான கிளு கிளுப்புக்கு கிளுகிளுப்பு . கேமரா ஹீரோயினுக்கு முன்னால பட்டவர்த்தனமா வெச்சிருக்க வேணாம்.


http://zns.india.com/upload/2012/9/23/priyanka-barfi.jpg


சி.பி கமெண்ட் - இது வித்தியாசமான அனுபவம் தரும் நல்ல காதல் கதைதான். ஆனால் ஆஸ்காருக்கு அனுப்பி பிரமாதப்படுத்தும் அளவு ஒரிஜினல் சரக்கு இல்லை. அதாவது வழக்கு எண்  18 /9 படம்  20 கிமீ வேகத்தில் ஓடும் இளைஞன் எனில் பர்ஃபி 30 கிமீ வேகத்தில் ஊக்க மருந்து சாப்பிட்டு ஓடும் இளைஞன். குவாலிட்டியில் ஒரு படி கீழே இருந்தாலும் வழக்கு எண்  18 /9  தான் நல்ல படம். மசாலா ரசிகர்கள், மாமூல் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு படம் பிடிக்காது. ஏ செண்ட்டரில் மட்டுமே ஓடும். ஈரோட்டில் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகி 2 நாள் தான் ஓடுச்சு. நான் பார்க்கும்போது தியேட்டரில் 12 பேர்தான்.

http://content.internetvideoarchive.com/content/photos/7918/702611_131.jpg

கலைஞரும் , கலைமாமணி பட்டமும் - திண்டுக்கல் ஐ லியோனி பேட்டி




      தனது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும்கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  "இனிய உதய'த்துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர்ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதேசமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச்சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொடைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக் கழிக்காதே வீணாகிவிடுவாய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்கள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக் கிடைத்த இயற்கை யின் கொடைதான். பொதுவாக பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும். ஆனால் நான் மேடையில் பேசும் பேச்சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்கள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப் பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண்டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனையாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. அறிஞர் அண்ணாவைப் போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்பமுடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக்கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக்கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றதுண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென்றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டிமன்றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப்பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற ஜாம்பவான் அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக்கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. "ஆஹா! வேலைக்கா காது போலிருக்கே' என்று மனம் நொந்துபோனேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், ""கவலைப்படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது'' என்று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுகளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். எனது பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட்கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியிலே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதைவிட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களிலேயே மறக்க முடியாத முத்தப் பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டுமல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித்தி ருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

 பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய "கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை' என்ற பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொன்னேன்.
 அப்போது தள்ளுவண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என்னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, "நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே' என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டிருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத்தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடைய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், "ஒரு தாய் தனது குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்தத் தாயைப் போலத்தான்  நானும்' என்றார். இப்படிப் பட்ட  கலைஞரின் சமயோஜிதப் பேச்சாற்றல் பலரை யும் வியக்க வைத்திருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர்கள், "வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே' என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டைகளால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்களை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.


உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்களைக் கவரமுடியும் என்று நினைப்பது எனது பலம். அளவுக்கு அதிகமாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பாமீது அளவு கடந்த பிரியம். அவரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மேலும் பேசிக்கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார்.

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலைகுலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக்கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்டது.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

 நான் தற்போது திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் ஏறிப் பேசிவருகிறேன். ஜாதி, மதம்... இந்த இரண்டும்  இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் ஜாதிக் கட்டமைப்பு களைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரிமைகளுக் காகக் குரல்கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந்தேன். அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடைகளில் ஏறுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டிமன்ற பேச்சுகளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது?

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய "திராவிடத்தால் எழுந்தோம்' என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக்கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண்களுக்கும் சுயமரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல் களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல்லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக்கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப்பது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவுடமைச் சிந்தனைகளை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பிரகடனப்படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் "துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாடலில் "துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்' என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல்களை அதிகம்  கேட்க முடிவதில்லை. இப்போது வரும் பாடல்களில் பெரும்பாலானவை வெறும் டண்டனக்காதான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரே படம் "கங்கா கௌரி'. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்துகொண்டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்க என்னால் மறக்க முடியாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரது புன்னகை உதிர்வதே இல்லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர் நிலை வகுப்பைக்கூடத் தாண்டாத முத்தையா என்ற கிராமத்து வாசி, காலத்தால் அழியாத திரைக் காவியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தையே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கருத்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்காகக் கூறியவர் அவர். அவரது இசையாற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக்குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்களது பட்டிமன்றம் நடந்தது.

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகரத் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைகளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கை யோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்கள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது?

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் குணம்.

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன்







நன்றி - நக்கீரன்





புல்லுருவின்னா யார் தெரியுமாய்யா?




1. ஜெ - கேப்டன் சந்திப்பின்போது படையப்பா - நீலாம்பரி போல் சீட் கொடுக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என சேர் உடன் கேப்டன் கோட்டை பயணம்



---------------------------


2. OPS- மேடம், தேமுதிக MLAக்களுக்கு கிடாவெட்டு, சரக்கு செலவை கட்சி முன்னேற்ற செலவு கணக்கு ல எழுதவா? நைசா அரசுப்பணத்துலயா?



---------------------


3. ஜெ வை சந்திக்க விஜயகாந்த் மனு # வெயிட் பண்ணுங்க, மீதி எம் எல் ஏக்கள் ஆல்ரெடி குடுத்த மனுக்கள் இருக்கு, உங்க டோக்கன் நெம்பர் 27 - ஜெ



----------------------


4.  அன்பே! இப்போது நீ குனிவது கொலுசை சரி செய்யவா? காலணியை கழட்டவா?




--------------------


5. ஐபத்மினி னு ஏன் பேர் வெச்சாங்க? ரொம்ப சின்னதா இருக்குமோ? # ஐபத்"மினி"




----------------------


6. டாக்டர்.இன்னும் என் கண்ணை செக் பண்ணவே இல்லை.ஆனாலும் என் பார்வை சரி இல்லைனு எப்டி சொல்றீங்க?



அதை நான் சொல்லலை.நர்ஸ் சொன்னாங்க



-------------------------


7.  டாக்டர்.வாக்கிங் போனா அதிகமா பசி எடுக்குது,4 இட்லி அதிகமா சாப்பிட்டுடறேன்.இதனால என்ன ஆகும்?




வாக்கிங் போனதே வேஸ்ட் ஆகும்




--------------------------



8. பொண்ணுங்க எந்த திசைல கிரவுன்ட்ல வாக்கிங் போறாங்களோ அதுக்கு எதிர் திசைல நாம நடந்தா ஒரு ரவுன்டுக்கு 2 டைம் எதிர்ல பார்க்கலாம்




--------------------


9.  குடும்பத்தோட வாக்கிங் போவதற்கு குப்புறப்படுத்து தூங்கலாம் # குப்புசாமியின் டைரியிலிருந்து



--------------------


10. ஒரு பையன் ஸெல்போன் ல மல்லிகைப்பூ பூத்திருக்கு பாட்டு போட்டுட்டான்.ஏதோ தகவல் சொல்றானா?அடேய்




---------------------


11. வாக்கிங்க் க்கு ஒரு பொண்ணு தலைக்கு குளிச்சு 4 முழம் ஜாதி மல்லி பூ வெச்சுட்டு வந்திருக்கு.கிரவுன்ட்ல ஒரு பய ஒழுங்கா நடக்க மாட்டான் ;-))





---------------------------


12. நான் பயப்படும் 4 விஷயங்கள் 1,சம்சாரம் 2 டேமேஜர் 3 சைபர் க்ரைம் 4 கலா மாஸ்டர்



---------------------


13,.  தாயா தாரமா ன்னு கேள்விக்கு உடனடி பதில் தாய் தான்.சம்சாரம் கோவிச்சுக்கிட்டா தனிமையில் "என் குழந்தைக்கு நீ தானே தாய்" என சமாளி





------------------------



14. படம் ஹிட் ஆனா புரளிகள் அரளி விதை சாப்பிட்டு உயிர் இழக்கும்




--------------------------


15. ஏன் எழ லேட்?னு சம்சாரத்தை திட்டினா உங்களால தான் லேட்னு பழியை நம்ம மேல போடுவாங்க இந்த பொண்ணுங்க.# நாங்க எந்திரிக்கல?




--------------------------


16. டாஸ்மாக்ல சரக்கு வாங்கும்போது சேல்ஸ்மேனுக்கு தெரியாம நைசா ஒரு full உருவிட்டு வந்தா அவன்தான் புல்லுருவியா?




--------------------------


17. அத்தான்.விடிவெள்ளின்னா என்ன?



 இன்னைக்கு வியாழன்.விடிஞ்சா வெள்ளி.அதான் சுருக்கமா விடி வெள்ளி




-------------------------------


18. அத்தான்.எதிர் வீட்டு ஆண்ட்டி புது நெக்லஸ் போட்டிருக்காங்க பாத்தீங்களா?




சாரி டியர்.அந்நிய ஸ்த்ரீயை கழுத்துக்கு கீழே பாக்க மாட்டேன்



-------------------------


19. டிக்கெட் ரிசர்வேசனும் பண்ணலை.தட்கால் புக்கிங்கும் வேணாம்னுட்டீங்க.எப்படி ரயில்ல போவீங்க?



 பூனம்பாண்டே - வித் அவுட்ல போய்த்தான் பழக்கம்



-------------------------


20. பேங்க் மேனேஜர் - ரீ பேயிங் கெபாசிட்டி இல்லாத நீ எந்த ந்ம்பிக்கைல இவ்ளவ் பெரிய லோன் வாங்குனே?



 மாயன் காலண்டர் மேல உள்ள நம்பிக்கைல



-------------------------


21. ஹீரோ ஹோண்டா ஆணாதிக்கமாக இருப்பதால் ஹீரோயின் ஹோண்டா வெளியிட ஆவன செய்யப்படும் - சும்மா




-------------------------


22. சம்சாரத்தை சமாதானம் பண்ண ஆயிரக்கணக்கில் புடவைச்செலவு தண்டமாக அழ வேண்டி இருப்பதால் பொதுவாக ஆண் அவங்க எது சொன்னாலும் ஓக்கே சொல்றான்



------------------------


23. 500 மதிப்புள்ள சுடிதாரை 2000 ரூபா குடுத்து ஏன் வாங்கினீங்க?



 ஹா ஹா சேல்ஸ் கேர்ள் செம ஃபிகர், 5000 சொல்லி இருந்தாலும் கி கி கி




-----------------------


24. என்னை அரை லூஸுன்னு யார் சொன்னாலும் எனக்கு கோபம் வந்துடும்.


ஏன்? தலைவரே?

ஏன்னா என்னை குறைச்சு மதிப்பிட்டா அது எனக்குப்பிடிக்காது :-))))



--------------------


25. அத்தான்.நீங்க அரை லூசா?



 நீ பாதி நான் பாதி கண்ணே!



------------------------------


26. தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப்போவதில் 2 பயன்


1,நாம சமையல்ல சம்சாரத்துக்கு உதவி செய்யத்தேவை இல்லை.


 2 மச்சினிங்க பரிமாறுவாங்க ;-))



------------------------------


27. நாகரீக பெண்கள் புத்திசாலிகள்.வீட்டுக்கு வந்ததும் பத்திரமாக தாலியை கழட்டி பீரோவில் வைத்து விடுகிறார்கள்



---------------------------


28. காதலியுடனான சந்திப்பின்போது விகடன்டைம்பாஸ் புக்கை கையில் வைத்திரு.நாளையே (காதலியை ) கழட்டி விட நேர்ந்தால் ஆல்ரெடி சிம்பாலிக்கா சொன்னேனே என சொல்லி சமாளிக்கலாம்


-----------------------


29. அன்பே! உன் பேருக்கு அர்ச்சனை செய்வதில்லை


1,உன் பேரை பூசாரி ஏன் சொல்லனும்


2 நீயே ஒரு தண்டம்.உனக்காக ஏன் தண்டச்செலவு? # சும்மா




---------------------------

 30. டாடி.பகல் பூரா மம்மி கிட்டே பம்முறீங்களே ,ஏன்?


ஹூம்.இந்தப்புலி கடைசி வரைக்கும் பதுங்கிட்டுதான் இருக்கும் ;-)))

-----------------------------


31. நான் மாநிறம். நீ உன் அம்"மா நிறம் " # மகள் இடம் சொன்னது



------------------------


32.  அத்தான்.குழந்தைக்கு மட்டும் புது டிரஸ் பட்டாஸ் வாங்கியாச்.எனக்கு?



ம் ,நீ உங்கப்பாட்ட போய் கேள்



------------------------


33. மிஸ் இந்த தீபாவளியை சாதாரணமா கொண்டாடறதும் தலை தீபாவளியா கொண்டாடறதும் உங்க வாய் ல தான் இருக்கு. ஓக்கே சொல்லுங்க ;-))




--------------------


34. பக்கத்து வீட்டுக்கு நேர்ந்து விடுவதற்காகவே சில ஸ்வீட்டிகள் உருவாக்கப்படுகின்றன!# எ கீ சும்மா




-------------------------


35. யோவ், வெளில என்ன வேடிக்கை?



ம் ம் அது வந்து ஆங்.. கரண்ட் வருதா?ன்னு வழி மேல் விழி வெச்சு பார்த்துட்டு இருக்கேன் 




-----------------------

Friday, November 09, 2012

ரஜினியையே மிரள வைத்த சிங்கம் புலியின் காமெடி கலக்கல் ஃபிளாஸ்பேக்

http://3.bp.blogspot.com/-qcJOahhcl_k/T9QjkCvLNII/AAAAAAAABkU/FivvUWhQTfY/s1600/9.jpg 
 
நீ நல்ல திருடன்டா ?

எஸ்.கலீல்ராஜா
சின்ன வயசுல டூரிங் டாக்கீஸ்ல 'மனோகரா’ படம் பார்த்துட்டு இருந்தேன். அதுல வில்லன் ஆக்ரோஷமா 'கேசரி வர்மா’, 'கேசரி வர்மா’னு கத்துனான். 'யோவ், ரவையைப் போட்டுக் கிண்டுனா கேசரி தன்னால வரும்யா’னு சத்தமா கமென்ட் அடிச்சேன். தியேட்டரே கை தட்டிச் சிரிச்சது. பின்னாடி இருந்து பொடனியில படீர்னு அடிவிட்டார் சிவாஜி ரசிகர் ஒருத்தர். அப்படி ஆரம்பிச்சதுதான் நம்ம காமெடி வாழ்க்கை'' - ரசித்துச் சிரித்தபடி தன்னுடைய காமெடி அனுபவங்களைப் பேச ஆரம்பிக்கிறார் சிங்கம்புலி.



''ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்தான். நாம கொஞ்சம் சேட்டை பார்ட்டி. அதனால, ரகளைக்குப் பஞ்சமே கிடையாது. 'அருணாச்சலம்’ ஷூட்டிங் நடந்தப்போ நான் சுந்தர்.சி-யோட அசிஸ்டென்ட். எல்லாப் படங்கள்லேயும் ரஜினி பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவார். ஆனா, அந்தப் படத்துல செலவழிக்கக் கஷ்டப்படுவார். அப்படி ஒரு கதை. ரகுவரன் அண்ட் கோவைப் பழி வாங்க ரஜினி பார்ல உட்கார்ந்து 'இனிதான் ஆரம்பம்’னு ஒரு லெட்டர் எழுதுவார்.



 அந்த லெட்டரை ஆர்ட் டிபார்ட்மென்ட்ல எழுதிக் கொடுத்தாங்க. ரஜினிக்கு அந்தக் கையெழுத்து பிடிக்கலை. உடனே எல்லாருக்கும் ஒரு பேப்பர் கொடுத்து எழுதச் சொன்னாங்க. நான் எழுதினது ரஜினிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'யார் கையெழுத்து இது?’னு சுந்தர்.சி விசாரிக்க, 'சிங்கம்புலி’னு சொல்லியிருக்காங்க. அவருக்கு பயங்கர ஷாக். 'அப்படி ஒரு பேர்ல எனக்கு ஒரு அசிஸ்டென்ட் இருக்கானா?’னு மிரண்டுட்டார். ஏன்னா, அவருக்கே தெரியாம அவர் அசோசியேட் மூலமா அவருக்கு அசிஸ்டென்ட்டா நான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.

 http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-32_720_southdreamz.jpg


 உடனே ரஜினி 'பேரு சிங்கம்புலியா... நல்லா இருக்கே. படத்துக்கு டைட்டில்கூட வைக்கலாம்’னு உற்சாகமாகிட்டார். ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி கிளம்பும்போது என்னைப் பார்த்து 'இன்னைக்குத்தான் ஆரம்பமா?’னு சிரிச்சார். அன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூக்கமே வரலை.



ஜூரிச் போய் இருந்தோம் 'ரிஷி’ படத்துக்காக. சரத்குமார், மீனா, பஞ்சு அருணாச்சலம்னு ஒரு பெரிய கேங். ராத்திரி 11 மணி. அறையைவிட்டு வெளியே வந்தேன். தூரத்துல ஒரு பார் தெரிஞ்சது. அங்கே போய் சாப்பிடக் கீழே இறங்கினா, ரிசப்ஷன்ல பயங்கரக் கூட்டம். அங்கே வாழ்ற தமிழர்கள் சரத்தையும் மீனாவையும் பார்க்கக் கிளம்பி வந்துட்டாங்க.



''அவங்க ரெண்டு பேர்கூட எப்படி யாவது போட்டோ எடுக்கணும்னு வந்திருக்கோம். அவங்க ரூம் நம்பர் தெரியலை''னு சொன் னாங்க. 'இப்போ அவங்களைப் பார்க்க முடியாது’னு கலைஞ்சு போகச் சொன்னேன். 'நீங்க எங்கே இந்நேரம் வெளியில போறீங்க?’னு கேட்டாங்க. விஷயத்தைச் சொன்னதும், 'எங்க ஊருக்கு வந்துட்டு நீங்க செலவு பண்ணக் கூடாது’னு சொல்லி, எக்கச்சக்கமா சரக்கு வாங்கிக் கொடுத்துட்டாங்க. போதையில அன்பாகி, 'நோட் பண்ணிக்கோங்க,  மீனா ரூம் நம்பர் 107, சரத்குமார் ரூம் நம்பர் 112,  செகண்ட் ஃப்ளோர் ரைட் சைடு’னு சொல்லிட்டு, என் ரூம்ல போய் செட்டில் ஆகிட்டேன்.



மறு நாள் காலையில நாலு மணிக்கு எந்திருச்சு கீழே வந்தா... சரத், மீனா சிவந்த கண்ணோட, ரொம்ப டயர்டு ஆகி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. போட்டோ ஷூட்லாம் முடிஞ்சதும் 'எவன் எங்க ரூம் நம்பர்லாம் சொன்னான்னு தெரியலை. திபுதிபுனு வந்துட்டாங்க. நைட்டு ஃபுல்லாத் தூக்கம் இல்லாம போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தோம்’னு ரெண்டு பேரும் புலம்பினாங்க. 'ஆஹா! போதையில போட்டுக்கொடுத்துட்டோமே’னு நான் நைஸா எஸ்கேப் ஆகிட்டேன். இன்னைக்கு வரைக்கும் ரூம் நம்பர் சொன்னது நான்தான்னு சரத்துக்கோ மீனாவுக்கோ தெரியாது!




சுவிட்சர்லாந்து போய்ட்டு வந்தப்ப ஃப்ளைட்ல ஒரு போர்வை கொடுத்தாங்க. அழகா எம்ப்ராய்டரி பண்ணி, பளிச்சுனு இருந்துச்சு. எனக்கு அதை வீட்டுக்குக் கொண்டுவந்துடணும்னு ஆசை. ஏர்போர்ட்ல பிடிச்சுக்கிருவாங்களோனு பயம் வேற. சென்னை வந்து இறங்கினப்ப, பஞ்சு அருணாசலம் சார்கிட்ட... 'சார், குளிர்அடிக்குதா?’னு அவருக்கு அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டேன்.




 அவர் போர்த்திட்டுப் போனதால யாரும் எதுவும் கேட்கலை. 'புலி உன்னை மாதிரி ஒரு புள்ளை பொறக்கணும்டா’னு பயங்கரமா நெகிழ்ந்துட்டார். கார் பார்க்கிங் வந்ததும் நான் பெட்ஷீட்டை எடுத்து மடிச்சு என் பைக்குள்ள வெச்சேன். திரும்பிப் பார்த்தவர், 'நீ ஒரு நல்ல திருடன்டா’னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போய்ட்டார்!

'நான் கடவுள்’ படத்துல ஒரு செவுட்டு சாமியார் நடிச்சார். ஷூட்டிங் அப்போ யாரோ ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அவரை மரியாதைக் குறைவாப் பேசிட்டான்போல... கோவிச்சுக்கிட்டு கிளம்பிட்டார். 'அவரைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா’னு பாலா சொன்னதும் அவரைத் தேடி வந்தேன்.




அப்போ கொசகொசனு தாடி வளர்த்து பிச்சைக்காரன் கெட்டப்ல இருந்தேன். ஒரு பாத்திரக் கடையில போய், 'அந்தச் செவுட்டு சாமி எங்கே இருக்காரு?’னு கேட்டதும் கடைக்காரர் டென்ஷன் ஆகிட்டார். 'ஏன்டா உன் குரூப்பைச் சேர்ந்தவன் எங்க இருக்கான்னு உனக்குத்தான்டா தெரியும். என்கிட்ட வந்து கேக்குற?’னு எகிறினார். இப்படி ஒவ்வொரு இடத்திலேயும் செமையா திட்டு வாங்கி, கடைசியா ஒரு தியேட்டர்ல அவரைக் கண்டுபிடிச்சேன். அவருக்கு டெய்லி செகண்ட் ஷோ பாக்குற பழக்கம்.




தியேட்டர்ல புடிச்சு, 'இந்தப் படத்துல நடிச்சா உங்க ரேஞ்சே வேற. நிறையப் பணம் கிடைக்கும். எல்லாருக்கும் உங்களை அடையாளம் தெரியும்’னு சொன்னதும், 'தம்பி... புகழ், பணம் வேணாம்னுதான் நான் துறவி ஆனேன். இதை நீ புரிஞ்சுக்க... பாலாகிட்டயும் சொல்லு’ன்னார். பதிலைக் கேட்டு ஆடிப்போய்ட்டேன். அப்புறம், 'கூட ரெண்டு பொட்டலம் தர்றேன் சாமி!’னு சொன்னதும் 'சிவன் பாதை... சிவன் போதை!’னு கிளம்பி வந்துட்டார். அப்புறம் அவருக்கு ராஜ மரியாதைதான். 'சாமி தூங்கினாரா?’, 'சாமியார்கிட்ட யாரும் வம்பு இழுத்தாங்களா?’, 'அவர் ரூம்ல ஃபேன் ஓடுதா?’னு யூனிட்டே தவம் கிடந்துச்சு.



பாலா 'பி ஸ்டுடியோஸ்’னு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருந்த சமயம். அப்போ நல்ல செவப்பா, பிரெஞ்ச் தாடி வெச்சுக் கிட்டு ஒருத்தர் வந்தார். எங்களை மீட் பண்ணினவர், 'சார்... உங்க கம்பெனியை இன்டர்நேஷனல் லெவல்ல கொண்டுபோயிரலாம். அதுக்கு நிறைய கார்ப்பரேட் பிளான் வெச்சிருக்கேன்.

http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-58_720_southdreamz.jpg



இது தமிழ் சினிமாவுக்கே புதுசு’னு ஏதேதோ சொன்னார். பாலா சீரியஸாகி, 'சிங்கம்புலி வழக்கம்போல இந்த ஆளை எதுவும் காமெடி பண்ணிராதே... நாமளும் வாழ்க்கையில உருப்பட ஒரு சான்ஸ் வருது. விட்றக் கூடாது’னு அவர்கிட்ட இருந்து நம்பர் வாங்கினார். ஒரு நாள் அந்த பிரெஞ்ச் தாடிகூடப் பேசிட்டு இருக்கும்போது பெட்ரோல் பத்தி டாபிக் ஓடுச்சு. 'அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லயே பதினாலு மணி நேரம் ஆகுதுங்கிறாங்க. அதுக்கு எவ்வளவு ஒயிட் பெட்ரோல் செலவுஆகும்?’னு நான் யதார்த்தமா கேட்டேன். அதுக்கு அந்தத் தாடி, 'நாமதாங்க லூஸு மாதிரி பெட்ரோல் செலவு பண்ணிட்டு இருக்கோம். ஃபாரின்காரன்லாம் பயங்கர விவரம்’னு ஒரு பிட்டு போட்டார்.





ஆஹா! புது மேட்டர் ஒண்ணு சொல்லப்போறார்னு ரெண்டு பேரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ''ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகுதுல்ல... ஒரு லெவலுக்குப் போனதும் ஃபளைட்டை அப்டியே நிறுத்திருவாங்க. பூமி சுத்தி அமெரிக்கா வந்ததும் அப்டியே கீழே இறக்கிருவாங்க. ஏற இறங்க மட்டும்தான் பெட்ரோல் செலவாகும்’னு சொன்னாரு பாருங்க. பாலாவுக்கு முகம் பேயறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. என்னைத் திரும்பிப் பார்த்தவர், 'ஏன் புலி... நாம லூஸா... இல்லை அந்த ஆளு லூஸா?’னு கேட்டார். 'அண்ணே, என்னைக் காமெடி பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. ஆனா, அவன் நம்மளைவெச்சுக் காமெடி பண்ணிட்டு இருக்கான்!’னு சொன்னேன். பாலா சிரிச் சுட்டார்!




தேனிப் பக்கம் 'பேரழகன்’ படம் ஷூட்டிங். என்னை ட்ராப் பண்றதுக்காக சூர்யா என் வீட்டுக்கு வந்தார். என் அம்மா பயங்கரமா வாய் பேசும். அவர் வீட்டுக்கு வந்ததும், 'நீ எதுவும் வாயை விட்றாதே. எது பேசினாலும் பக்குவமாப் பேசு’னு சொன்னேன். ரொம்ப நேரம் பேசமாலேயே இருந்துச்சு. சூர்யா கிளம்பும்போது, 'பார்த்துப்பா, உங்கப்பா முருகன் வேஷமாப் போட்டு சம்பாதிச்ச காசு. பாத்து செலவு பண்ணு’னு வாயை விட்ருச்சு. அமைதியா என்னைத் திரும்பிப் பார்த்து 'நல்ல அம்மா... நல்ல புள்ளை’னு சொன்னார். அதுக்கப்புறம் எப்போ வீட்டுக்குக் கூப்பிட்டாலும், 'இல்லைஜி... உங்க வீட்டுல அம்மா இருப்பாங்கள்ல... நான் அப்புறம் வர்றேன்!’னு எஸ்கேப் ஆகிருவார்.




அஜித்தோட 'உன்னைத் தேடி’ ஷூட்டிங்குக்காக ஜெர்மன் போயி ருந்தப்ப அவர்கூட ஒரு நாள் ஷாப்பிங் போயிருந்தேன். அவர் கடைக்குள்ள ஷாப்பிங் பண்ணிட்டு இருக்க, நான் ஷாப்பிங் மாலை சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். அங்கே ஐஸ்வர்யா ராயைவிட அழகான பொண்ணு ஒண்ணு, அதே ஜாடையில யார் மடியிலோ படுத்துட்டு இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. நேரா அஜித்கிட்ட போய்,  'ஜி ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ணு இருக்கு. பேசிப் பார்க்கலாம்.



 ஓ.கே-னு சொன்னா சினிமாவுல நடிக்கவைக்கலாம்’னு சொன்னேன். அவர் 'எதுக்குத் தேவை இல்லாத வேலை புலி; கௌம்பலாம்’னு சொன்னார். நான் விடலை. நானும் அவரை நச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனேன். என்கூட வந்தவர், அந்தப் பொண்ணைப் பார்த்ததும் செம டென்ஷன் ஆகிட்டார். 'யோவ், இது ஐஸ்வர்யா ராய்தான்யா.. அங்கே ராஜீவ் மேனன் நிக்குறார் பாரு. சாங் எடுக்க வந்திருக்காங்க. உனக்குப் பொண்ணைப் பார்த்தா கண்ணு போயிருமே. விட்டா என்கிட்டயே, நான் அஜித் மாதிரி இருக்கேன்னு சொல்லுவபோல’னு செம பரேடு. அப்புறம் அஜித் புண்ணியத்துல ஐஸ்வர்யா ராய்கிட்ட நாலு வார்த்தை ஜொள்ளிட்டுக் கிளம்பினேன்!


http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-94_720_southdreamz.jpg

 நன்றி - விகடன்