Monday, August 06, 2012

சந்தானத்தின் கவுண்ட்டர் பஞ்ச் காமெடி வசனங்கள் @ மிரட்டல்

http://newindianexpress.com/incoming/article582880.ece/ALTERNATES/w460/Mirattal-P-E.jpg


1. டேய், நாயே,  நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


---------------


2.  ஹீரோ - ஐ ஆம் பப்லு


 நீ என்ன பராக் ஒபாமாவா?



----------------


3. சட்டையை கழட்டு.. ..

 --------

ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை.. 




--------------------


4.  என்னடா சிரிப்பு.. ? 


 அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.



---------------


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?




------------------


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

 இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?



---------------------


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்.. 


அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?



----------------------


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

 நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?



------------------


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?



-------------------


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ.. 


 செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?



------------------------



http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/07/Mirattal-Tamil-Movie-Latest-Stills-9.jpg&q=90&w=629&zc=1


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்.. 


 கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

 அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?



-------------------------------


12.  இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது. 

 ஏன்?

 அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


----------------------


13.  சார், உங்களுக்கு என்ன வேணும்?


 3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \




------------------------


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?


 பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?



-----------------


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?



-----------------------


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்.. 


 என்னது? கேத்ரீனா கைஃப்பா? 

 பின்னே? பி வி சி பைப்பா?



--------------------------


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி



-------------------------


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்


 நிஜமாவா? 

 பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது



-------------------------


19.  ஆஹா, வாட் எ பாடி?

 ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?



-------------------


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா. 

 அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க.. 



------------


http://img.bharatmovies.com/4204/mirattal-1.jpg


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? 

 பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்



---------------


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

 ஹி ஹி பிராஸ்டிடியூட்னு.. 


-----------------


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு.. 

 நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு  பணம் கொண்டாரவா?

 தொலைச்சுடுவேன்\


 இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?



-----------------------



24.  ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?



--------------------


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?



-------------------


26.  என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது


 எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %




-----------------------


27. .........................


 கரெக்ட் சார்


 நான் எதுவும் சொல்லவே இல்லையே?


 நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்.. 


-----------------------


28.  எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம் 

 ஹலோ./. 




-------------------------


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.


------------------------------


30. வாப்பா, உக்காரு

 பரவாயில்ல



அப்போ நான் நின்னுக்கிடவா?


அவ்வ்வ்வ்வ்




------------------
http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/07/Deeksha-Seth.jpg


31. உங்கப்பா குடிப்பாரா? 

 ஆஃப்  சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு  ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு. 




-------------------------


32.  தீபி.. 

 என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ



-----------------------


33.  சும்மா சீன் போடாம ஏதாவது  ஐடியா குடு



 ஐடியா வராததால தான் சீன் போடறேன்



-----------------


34. வில்லன் -  என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு



---------------------


35.  உங்களுக்கு பி பி இருக்கு.. 


உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு



------------------


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


-----------------------


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?


 எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?




-----------------------


38.  ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

 ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு



------------------------


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?


 ஹூம் , பாடைக்கும் அதே தான்



--------------------


40.  உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?


 என் மம்மி  ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.


 அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ  பொறந்திருப்பேனு நினைக்கிறேன்



------------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_9826.jpg


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..


நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


-----------------


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு


ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

 நீ வந்து மொய் வைக்கப்போறியா?




---------------------------------


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?



----------------


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?



-------------------


45. இதென்ன? பிளாக் மார்க்கா?


 இல்லை, லக் மார்க்


------------------------------


46.  மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

 ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?



----------------------

47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல  சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


-------------------

 48.  எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

 மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?



-----------------------


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

 ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?



-------------------


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

 உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?



---------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_1321.jpg


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.


நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்




------------------------


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?


 என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


--------------------------


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க... 


டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்?  -


---------------------

54.  யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?



--------------


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?


 ம்ஹூம்

 டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

 ம்ஹூம், சகிக்காது



----------------------------


56.  அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?



-----------------


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி  கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.



----------------------------------



டிஸ்கி - மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

ரூ 16,000 கோடி ஊழல் - கிரானைட் மோசடி -சகாயம் ஐ ஏ எஸ் அறிக்கை

சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அர”க்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய நிறுவனங்களின் மீது, ஆமை வேகத்தில், வேண்டா வெறுப்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை துவங்கி உள்ளது. 


இந்த நடவடிக்கைக்கு ஆதாரமானது, முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம், கடந்த மே மாதம் கொடுத்த ஆய்வு அறிக்கை. கனிமக் கொள்ளையர்களின் பணப் பலம் கருதி, இது கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள சில தகவல்கள், ஊடகங்களில் வெளிவந்த பின் தான் நடவடிக்கை துவங்கப் பட்டது. இது போன்ற விஷயங்களில், தடபுடலாக துவங்கும் விசாரணை, வீரியம் இழப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால், அறிக்கையில் உள்ள முழு தகவல்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.



புகாரும், தேடுதலும்: அறிக்கையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: தினபூமி நாளிதழின் ஆசிரியர், தன் புகார் மனுவில், ஆறு மாதங்களில் சுமார், 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப் பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால், இப்புகார் வருவதற்கு முன்பாக, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய, என் தலைமையில், துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன.



கடந்த ஆண்டு, டிச., 14 மற்றும் 24; இந்த ஆண்டு ஜன., 28 மற்றும் பிப்., 3 ஆகிய தேதிகளில், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. அப்போது, முறைகேடாக கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பிடிபடவில்லை. தினபூமி ஆசிரியர் குறிப்பிட்டப்படி, ஆறு மாதங்களில், 1,650 கோடி ரூபாய் மதிப்பு கிரானைட் கடத்தப் பட்டு உள்ளதாகக் கூறப்பட்ட தகவல் சரியானதாக இல்லை.



 ஏனெனில், இந்த கடத்தல் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருவது விசாரணையில் தெரிய வருகிறது. இருப்பினும், கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க செய்ததில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி, மேலூர் தாசில்தாரால் கிரானைட் கல் கடத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது.



நாளிதழ் ஆசிரியரின் புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களில் ஒருவரான துரைதயாநிதி மற்றும் சு.நாகராஜிற்கு சொந்தமான, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், கீழவளவு கிராமத்தில் வழங்கப் பட்ட குத்தகை உரிமத்தை தவறாக பயன்படுத்தி, அதே கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு குத்தகை உரிமம் வழங்கப் பட்ட இடத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும், நீர்நிலை, புறம்போக்குகளான ஊரணி, கண்மாய், பொதுப்பாதை, பாறை வாய்க்கால், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




ஆக்கிரமிப்பும், கொள்ளையும்: புகாரில் கொடுக்கப் பட்ட தொகை சரியாக வராததால், ஆக்கிரமிப்பு என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அப்போது, அது மட்டுமின்றி மேலும் பல கொள்ளைகள் அம்பலப் பட்டன. இது குறித்து, சகாயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது: 


இந்த இடங்களில் (புகாரில் குறிப்பிடப் பட்டவை), ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, உடனே அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது. தகவல்களின் அடிப்படையில், கீழவளவு மற்றும் கீழையூரில் அமைந்து உள்ள ஒலிம்பஸ், சிந்து மற்றும் பி.ஆர்.பி., கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில், அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டது கண்டறியப் பட்டு உள்ளது. ஆய்வில், இந்த மூன்று குவாரிகளில் மட்டும், உரிம இழப்பாக, 58.38 லட்சம் ரூபாய், கனிம மதிப்பு இழப்பாக, 13.52 கோடி ரூபாயும், உரிமத்திற்கான அபராதத் தொகை பத்து மடங்காக, 9.97 கோடி ரூபாயும் என, 23.42 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறியப் படுகிறது.




இந்த மூன்று குவாரிகளில் ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பு போல, மீதமுள்ள, 91 குவாரிகளிலும் வெட்டி எடுக்கப் பட்டு உள்ள கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால், இது போல், பல நூறு கோடி (ரூபாய்) இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் கற்கள் இருப்பு வைக்கும் இடத்தில், டாமின் குவாரிகளில் இருந்து, சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள, 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப் பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. 



மேலும், ஆய்வு செய்த குவாரிகள் தவிர, புகார் மனுவுடன் வந்த மேலூர், கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல், விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு, 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




கண்மாய்கள் நாசம்: கிரானைட் தொழிலால், இயற்கை வளங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் அழிக்கப் படுவதாக, பல ஆண்டுகளாக புகார்கள் வந்தும், முடிவு எடுக்க வேண்டிய அனைவரும் நன்கு "கவனிக்கப்பட்டதால்', அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 



இதுகுறித்து, அறிக்கையில், சகாயம் குறிப்பிட்டு உள்ளதாவது: புகார்கள் வருவதற்கு முன், அதிகாரிகள் ஆய்வு செய்து பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு முகாந்திரம் உள்ளது கண்டறியப் பட்டது. தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி, வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை கலெக்டர், கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன், கீழவளவில் உள்ள ஒலிம்பஸ் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் நானே தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்திருந்தது உறுதி செய்யப் பட்டது. 



அதே போல், கீழையூர் கண்மாயில், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தால் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் எடுக்கப்பட்டு, கண்மாய் நிர்மூலமாக்கப் பட்டதை நேரில் பார்த்தறிந்தேன். இதை தடுத்து நிறுத்தாத வருவாய், கனிம வள அலுவலர்களை கடிந்து கொண்டேன். தீவிரமாக கண்காணிக்குமாறும், தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிட்டேன். 


மேலும், மே மாதம் 17ம் தேதியும் ஆய்வு நடத்தப் பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் வெட்டப் பட்டு, அப்புறப்படுத்தப் படுவதை உறுதி செய்தனர். ஆய்வு நடத்தியவர்கள் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் இல்லை என்பதால், துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இருந்தாலும், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பது அறிய முடிந்தது.


 மதுரை மாவட்டத்தில், பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற குறிப்பிடத்தக்க கிராமங்களில், கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப் பட்டு உள்ளன.



 இதன் விளைவாக, இந்த கிராமங்களில் வேளாண்மை நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப் பட்டு உள்ளது. மக்களும், கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நடவடிக்கைகளை குறைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர்.



 சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர். இன்னொரு புறம், பி.ஆர்.பி.,- பி.ஆர்.எஸ்., போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக அசுரத்தனமாக பணப் பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளன. இது குறித்த புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர் பயத்தினாலோ அல்லது நிதி லாபம் பெறும் நோக்கத்திலோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை. 


கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பி.ஆர்.பி.,போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும், ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் அவர்களிடம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.




ஆழமான கூட்டு: இந்த கொள்ளையை கண்டும், காணாமல் மட்டும் இல்லாமல், கனிமவளத் துறை அதிகாரிகள், சகாயத்தின் விசாரணைக்கு தடங்கலாகவும் இருந்து உள்ளனர்.


இதுகுறித்து, அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளதாவது: இந்த முறைகேடுகள் குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்க எச்சரித்தபோது கனிமவளத் துறை அலுவலரிடம் இருந்து முழுமையான தகவல்கள் பெறமுடியவில்லை. தணிக்கைக்குச் செல்ல முயற்சிக்கும்போது, முன்கூட்டியே கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் தகவல் தெரிவிக்கும் நிலையும் இருந்தது.


 இருப்பினும், பல்லாயிரக்கணக்கான கிராமத்து மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பிரமிப்பூட்டும் பெரும் பலனை அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.



அடுத்தடுத்து நடந்தவை: இந்த அறிக்கை, கடந்த மே மாதம், 19ம் தேதி, தொழில்துறை செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சகாயம் திடீரென கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக மாற்றப் பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா எட்டு புதிய குழுக்களை அமைத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து ஆய்வை துவக்கி உள்ளார்.



 கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, மதுரையை சுற்றி உள்ள, 90க்கும்மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பி., கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. நேற்று, ரங்கசாமி புரத்தில் சட்ட விரோதமாக இயங்கிய கிரானைட் குவாரியின் நடவடிக்கைகள் முடக்கப் பட்டு உள்ளன. ஒலிம்பஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளும் முடக்கப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதே வேகத்தில் நீதி வழங்கப்படுமா? மதுரையில் கிரானைட் எடுப்பது நிறுத்தப்படுமா? என்பதை, தமிழக மக்கள் கவனிக்க வேண்டும்.



தூங்கி வழியும் "டாமின்': தனது அறிக்கையில், சகாயம், டாமின் பற்றி மேலும் குறிப்பிட்டதாவது: அரசு கனிம வள நிறுவனமான டாமின், சில லட்சங்களே சம்பாதிக்கிறது. இதை சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, பல்லாயிரம் கோடிகளாகும். டாமின் நிறுவன கிரானைட் சுரங்கங்களை, அந்த நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்புள்ளது என்பது உண்மை. 


மேலும், டாமின் குவாரியில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக இயந்திரங்கள் உதவியுடன் கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி, தனியார் நிலங்களில் எடுத்து வைக்கப்படுகிறது. பின், வாகனங்களில் அவற்றை கொண்டு சென்று தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார். 



இது குறித்து, வழக்கமான பதிலையே தொழில் துறை அதிகாரிகள் வழங்கினர்: "டாமின்' நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் இருந்தும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கிரானைட்டை வெட்டி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான அளவு குறித்து, தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின் போதே, கிரானைட் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 



மற்ற பகுதிகளிலும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். "டாமின்' தொழில் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயந்திரங்கள் மூலம், தங்கள் குவாரிகளில் இருந்து கிரானைட் அகற்றப்படும் போது, அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என்பது, தற்போது கேள்வியாக உள்ளது.


 நன்றி - தினமலர்



மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

வளத்தைக் காப்பாற்றுவாரா ஜெ.?
யற்கை வளத்தைக் கொள்ளை அடிப்பது இன்று... நேற்றா நடக்கிறது? கொடுமையிலும் கொடு​மை, அந்தக் கொள்ளை பல்லாயிரம் கோடியைத் தொட்டுவிட்டது. இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  சொல்லும்போது, 'இவனுக்கு வேற வேலை இல்லை’ என்று அதிகாரிகள் உதாசீனம் செய்வார்கள். ஆனால், ஓர் அதிகாரியே சொன்னால்..? 



கிரானைட் மாஃபியாக்களின் அஸ்திவாரத்துக்கே அணுகுண்டு வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்​பவர், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது கடிதம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



மதுரையில் இருந்து சகாயத்தை வேறு இடத்துக்கு நகர்த்தவே அவரது இந்த நடவடிக்கைதான் காரணம் என்பதை அப்போதே கழுகார் சொல்லி இருந்தார். 30.5.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ''சகாயத்தின் திடீர் மாறுதலுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்​டாலும் கிரானைட் குவாரிகளை இறுக்கிப் பிடித்தது​தான் முக்கியமான காரணம் என்கிறார்கள். மேலூர் பகுதியில் உள்ள சட்டவிரோதக் குவாரிகள் குறித்து சகாயத்துக்குப் புகார் அனுப்பியவர்கள், கண்மாய் குளங்களையும் கிரானைட் முதலாளிகள் ஆக்கிரமித்துப் போட்டிருப்பதாக ஆதாரங்களைக் காட்டினார்கள். 


அதில், பிரபல மூன்று எழுத்துக் கம்பெனி மீதான புகார்கள்தான் அதிகம். 'சசி அண்ட் கோ-விடம் நல்ல டீலிங் வைத்திருக்கும் அவர்களைத் தொட்டால் சிக்கல் வரும்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பே அட்வைஸ் செய்தார்கள். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், 'என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா...’ என்று சொல்லிவிட்டுத்தான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார். அதே வேகத்துடன் அந்த மூன்றெழுத்துக் குவாரி நிர்வாகம் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிக்கை தயாரித்தார். இதுதான் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்கிறார்கள்'' - என்று நாம் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்.


தான் தயாரித்த அறிக்கையை தமிழகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த மே மாதம் 19-ம் தேதி அனுப்பி வைத்தார் சகாயம். அடுத்த ஒரே வாரத்தில் சகாயம் மதுரையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். ஆனாலும், சகாயம் அனுப்பிய கடிதம்... இன்னமும் உயிரோடு உலா வருகிறது.



அனல் கொதிக்கும் மே மாதம்தான் இந்த விவகாரம் ஆரம்பமானது. மேலூரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி போன்ற கிரானைட் தொழில் கொழிக்கும் பகுதிகளில் மே 1-ம் தேதி புகுந்து அதிரடி சோதனை நடத்தினார் சகாயம். உடனடியாக, சென்னையில் இருந்து அவருக்கு ஒரு போன். 'என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் இந்த ரெய்டுக்குச் சென்றீர்கள்? அந்த அதிபருக்கு யாரிடம் செல்வாக்கு இருக்கிறது தெரியுமா?’ என்று கேட்டது அந்தக் குரல். 


'இனிமே உங்க அனுமதி வாங்கிட்டுப் போறேன் சார்’ என்று அமைதியானார் சகாயம். மே 17 அன்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ. தலைமையில் ஒரு குழுவை அந்தக் குவாரிகளுக்கு அனுப்பி மீண்டும் சோதனை நடத்தினார். அதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு கடிதம் தயாரித்து தொழில் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். 


சகாயம் கணித்ததுபோலவே மே 23-ல் அவருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது.
''மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் சட்ட​விரோதக் குவாரிகள் மூலம் அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இயங்கி வரும் 91 குவாரிகளில் முறைகேடாகக் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.


 இந்தக் குவாரிகளைத் தனியாருக்குக் கொடுக்காமல் அரசே எடுத்து நடத்தினால், 1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்ட முடியும். எனவே, சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடிவிட்டு அவர்கள் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களைப் பொதுஏலத்தில் விட வேண்டும். சட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதையும் கடத்தலையும் கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் பெருமளவில் நிதி ஆதாரம் அடைந்துள்ளனர்.


சமூகச் சொத்தை தனி நபரும் தனியார் நிறுவனமும் சுரண்டிச் சூறையாடுவதை அனுமதிக்க இயலாது. அதுவும் பல ஆயிரம் ஏழை விவசாயிகளின் வாழ்​வாதாரங்களை அழித்து தனியார் நிறுவனங்கள் பெரும்பலன் அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இவற்றைத் தடுத்து நிறுத்த வெளி மாவட்டக் கனிமவளத் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு குவாரிகளை ஆய்வுசெய்து, முறைகேடாக கிரானைட்டை வெட்டிக் கடத்திய தனியார் நிறுவனங்களிடம் அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். 


அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிதி இழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படைகளை அமைத்து கிரானைட் குவாரிகளைத் தணிக்கை செய்ய வேண்டும்''  - இதுதான் சகாயம் அனுப்பிய அறிக்கையின் சுருக்கம்.


இந்த அறிக்கையை வைத்து சிந்து கிரானைட், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனங்களுக்கு 'உங்களது உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கனிமவளத் துறை, இன்னொரு நிறுவனம் குறித்து மூச்சே விடவில்லை. அது, பி.ஆர்.பி. நிறுவனம். நோட்டீஸுக்கு இதுவரை ஒலிம்பஸ் நிறுவனம் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும் சிந்து கிரானைட்ஸ் மட்டும் கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் உரிமையாளர்தான், தி.மு.க. ஆட்சி செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சி செய்தாலும் மேலூரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய பி.ஆர். பழனிச்சாமி. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக துரை தயாநிதி, க.நாகராஜ் ஆகிய இருவர் பெயர் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிதான் அவர்.



கிரானைட் ஊழல்களைக் கண்டுபிடிக்க சகாயத்துக்கு தோள் கொடுத்து நின்ற அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''புறம்போக்கில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை 'டாமின்’ நிறுவனத்துக்குத்தான் அரசு வழங்குகிறது. ஆனால், 'டாமின்’ நிறுவனத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. அதனால், 'டாமின்’ நிறுவனம் தனது குவாரிகளை 'ரைசிங் செல்லிங்’ சிஸ்டத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு  விடுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் கன மீட்டருக்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகையை 'டாமின்’ நிறுவனத்துக்கு தனியார் செலுத்த வேண்​டும். 


இதில்தான் புகுந்து விளை​யாடுகிறார்கள். தனியார் பட்டா நிலங்களை கிரானைட் குவாரிக்​காக வாங்கிப் போட்டு இருப்பவர்கள், 'டாமின்’ குவாரிகளில் பெரிய அளவில் கற்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பட்டா நிலங்களில் வெட்டி எடுத்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை.


கீழவளவு ஏரியாவில் 2010-ல் ஒரு குவாரிக்கு அனுமதி வாங்கியது ஒரு நிறுவனம். ஆனால், அங்கே கிரானைட் எடுக்காமல் டாமின் குவாரியில் கள்ளத்தனமாகக் கற்களை வெட்டி எடுத்துக் கடத்துகிறது. ஆனால், தாங்கள் குவாரிக்கு அனுமதி வாங்கிய இடத்தில் 4,000 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்ததாக அந்த நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. அங்கே அவ்வளவு கற்கள் வெட்டி எடுத்ததற்கான தடயமே இல்லை. இப்படி எடுக்கப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான கற்களை மேலூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். 2011-ல் இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு ஒன்று வந்தபோது, 'அது வேஸ்ட் கற்கள்’ என்று கலெக்டரையே அறிக்கை கொடுக்க வைத்தார்கள்'' என்றார்.



மேலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ''பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்போடு கிரானைட் கழிவுகளைக் கொட்டி மேலூர் பகுதிகளில் உள்ள 12 கண்மாய்களையும் எட்டு மீன் வளர்ப்புக் குளங்களையும் தூர்த்து விட்டார்கள். பெரியாறு வரத்துக் கால்வாய்களிலும் கழிவுகளைக் கொட்டி தண்ணீர் வரத்தை அடைத்து விட்டதால், சுமார் 2,000 ஏக்கர் நிலம் நீர் இன்றிப் பாழாகிவிட்டது. 


இதில் பெரும் பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு வளைத்துப்போட்டது. கோயில்கள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புப் பகுதிகளைவிட்டு 300 மீட்டர் தள்ளித்தான் கிரானைட் குவாரிகள் இருக்க வேண்டும் என்ற விதி எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. 2011-ல் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 10 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்பட்டதாக மதுரை கனிம வளத் துறையில் கணக்கு இருக்கிறது. 


ஆனால், அதே காலத்தில் ஒரு லட்சம் கன மீட்டர் கற்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததாக துறைமுகத்தில் கணக்கு இருக்கிறது. இதை வைத்து ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். 'முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதம் ஆவதால் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதியரசர் சந்துரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்​படவில்லை.  இங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் எல்லாவற்றுக்குமே கிரானைட் கம்பெனிகளில் இருந்து தனி சம்பளமே போகிறது. அதனால், முதல்வர் மனது வைத்தால் மட்டுமே இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியும்'' என்றார்.


''சகாயம் கண்டுபிடித்தது சமீபத்​திய ஊழல்களை மட்டும்தான். ஆனால், 16 வருடங்களாக குவாரிகள் நடப்பதால், எம்புட்டு சம்பாதிச்​சிருப்பாங்கன்னு பாத்துக்குங்க. சி.பி.ஐ. விசாரிச்சா ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரிய அளவுக்கு பூதம் கிளம்பும். சகாயம் அதைக் கண்டுபிடித்ததும் இப்போது, டாமின் குவாரியில் இருக்கும் கழிவுகளைக் கொண்டு​வந்து கொட்டி, அந்தக் குழியை மூடுறாங்க. இதை மூடக்கூடாதுன்னு சொன்னதுக்கே எனக்கே கொலை மிரட்டல் வருது'' என்கிறார் கீழவளவு பஞ்சாயத்துத் தலைவர் தர்மலிங்கம்.


இதற்கான பதிலை அறிவதற்கான பி.ஆர்.பி. நிறுவனத்தைத் தொடர்புகொண்​டோம். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன மேனேஜர் சண்முகநாதனிடம் கேட்டதற்கு, ''சகாயத்தின் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, நாங்களே உங்களிடம் பேசுகிறோம்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இந்த இதழ் அச்சேறும் வரை அவர்களது பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் முழுமையாக வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.


சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ் நம்மிடம், ''கனிமவளத் துறை அதிகாரிகளை நம்பாமல் வேறு அதிகாரிகளை வைத்து எங்களுக்கும் தெரியாமல் சகாயம் தன்னிச்சையாக எங்கள் கம்பெனிக்குள் வந்து சோதனை செய்துள்ளார். எங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நாங்கள் நேர்மையாக தொழில் செய்து வருகிறோம். ஒன்றரை வருஷம் இங்கே கலெக்டராக இருந்த சகாயம் அப்போதே எங்களைக் கூப்பிட்டு விசாரணை நடத்தி இருக்கலாம். அதைவிட்டுட்டு டிரான்ஸ்ஃபர் ஆகிப்போன பிறகு நோட்டீஸ் விடுகிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிற கல்லுக்கு 35 ஆயிரம்னு ரேட் போட்டு எங்களுக்கு 4 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். அதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறோம். தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும். ஆனால் நாங்கள் நிரபராதிகள்'' என்றவர் மேலும், ''உண்மையை சொல்லணும்னா, கிரானைட் பிசினஸ் இப்போது 10 சதவிகிதம்தான் சக்சஸாப் போயிக்கிட்டு இருக்கு. மேலூர் பகுதியில இருக்கிற மொத்த கிரானைட் கம்பெனிகளோட ஒரு வருஷ டர்ன்ஓவரே 700 கோடிதான். இதுல லாபம்னு பார்த்தா அதிகபட்சம் 25 சதவிகிதம் நிற்கும். இதுல எப்படி 16,000 கோடிக்கு ஊழல் பண்ண முடியும்?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார்!



சகாயத்திடம் இதுபற்றிக் கேட்டோம். ''மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து என்னிடம் வந்த புகார்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினேன். இப்போது நான் மாறுதலாகி வந்துவிட்ட நிலையில், அதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ''மதுரை மாவட்டத்தில் மொத்தம் 175 கிரானைட் குவாரிகள் இருக்கின்றன. 




இதில் 149 தனியார் குவாரிகள். 26 குவாரிகள் புறம்போக்கில் உள்ளவை. இவற்றில் எட்டு மட்டுமே டாமினுக்கு சொந்தமானது. மீதி 18-ல் டெண்டர் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் 13 குவாரிகளில் பெரும் பகுதியை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எடுத்து நடத்துறாங்க. இந்த 13 குவாரிகளையும் க்ளோஸ் பண்றதுக்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவங்க, கோர்ட்டுக்குப் போயி எக்ஸ்டென்ஷன் வாங்கி இருக்காங்க.


 எல்லாவற்றையும் சேர்த்தால் இப்போதைக்கு மொத்தமே 50 குவாரிகள்தான் இருக்கு. இங்கு நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 17 குழுக்களை அமைச்சிருக்கோம். கண்மாய்களில் கொட்டி இருக்கும் கிரானைட் கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவு போட்டுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதி அளித்தார்.சொன்ன மாதிரியே கடந்த வியாழக்கிழமை அன்று கிரானைட் குவாரிகளில் தங்களது அலுவலர் படையை இறக்கி விட்டுள்ளார் மதுரை கலெக்டர். இந்த அதிரடி இறுதிவரை தொடர வேண்டும் என்பதே மதுரை மக்களின் ஆதங்கம்.


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசிய பேச்சுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
'... இந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு! தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய். இதைப்பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளில் இருந்து, கிரானைட் கொள்ளையில் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்’ என்றார் ஜெயலலிதா.


அப்போது அவர் கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தார். இப்போது நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்.


எடுப்பாரா?


நன்றி - ஜூ வி

ஜாக்கி - ராக்கி - கட்டுப்பெட்டி கனகா @ கள்ளக்குறிச்சி

கோவையில் சூரியனை சுத்தி ஒரு ஒளிவட்டம்
1.ஹாய், உங்களுக்கு ராக்கி கட்டவா? 


என்னை வேணா கட்டு, நோ அப்ஜெக்‌ஷன் # கட்டுப்பெட்டி கனகா @ கள்ளக்குறிச்சி



------------------------


2. தாண்டவத்தில் கிளாமருக்கு டாட்டா:- லட்சுமிராய்! # ஓஹோ, அப்பவும் டாட்டா “காட்டி”த்தான் இருக்கீங்க 



---------------------------


3. இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி #  நீங்க வெடி மருந்து தானே வைப்பீங்க? தலைவரே?



----------------------


4. வங்கி கணக்கு மூலம் "மாமூல்' பண பரிமாற்றம்: கிருஷ்ணகிரி எஸ்.பி., குறித்த விசாரணையில் அதிர்ச்சி  # எஸ் பி அக்கவுண்ட்னா இதான் அர்த்தமா?



-----------------------------


5. "உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்': ராகுல் # அப்போ ஆசிரமம் நடத்துங்க, அதான் ரொம்ப ஈசியாமில்ல?



-------------------------------



How ministry is formed by Govt :P


6. காசோலையாக வந்த லஞ்சம்: திருப்பூர் அதிகாரிகள் அதிர்ச்சி # நல்லா செக் பண்ணி பாருங்க அந்த செக்கை, நல்லவரை மாட்டி விடவே இப்டி பண்ணுவாங்க 



----------------------




7. உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை என்கிறார் முலாயம் # எல்லாரும் சுகப்படனும்னா நித்தி தான் சி எம் ஆகனும்




----------------------



8. புன்னகை இளவரசி = சினேகா.அவரை கல்யாணம் பண்ணிய பிரசன்னா புன்னகை இளவரசர் ( இளிச்சவாயர்) # நாக் ரவியின் டைரியிலிருந்து








---------------------------




9. ஆடி பெருக்கு = ஜாலியா டான்ஸ் ஆடிட்டே வீட்டை பெருக்கு








----------------------




10. ஆடி அடங்கும் வாழ்க்கையடா # ஆடி மாத பாட்டு






---------------------------



நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை.அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்!
-சத்குரு ஜ.வாசுதேவ்






11. வெள்ளிக்கிழமை ஆபீஸ் வரும் அழகுப்பெண்களே.ஜாதி மல்லி ஜாதி முல்லை சம்பங்கிபூ தவிர்க்கவும்.ஆபீஸ்ல நாங்க வேலை செய்யனும்








-------------------




12. குற்றாலத்துல குடி இருந்தா ஷாம்பு சோப் செலவே இல்லை .மூலிகை தண்ணீர்க்குளியல்.ஆஹா!








-----------------------




13. அதிகாலை வெறும் வயிற்றில் கடலை போடுவது நல்லதல்ல# ஆரோக்யா டிப்ஸ்






-------------------------------


14. அம்மாவின் உண்மையான நாய்கள் நாங்கள - பழனிசாமி # dogடர் பட்டம் வேணுமா?்








-----------------------------




15. மிஸ்டர்.ராக்கி கட்டிக்க ஏன் தயக்கம்?






 நான் என்ன தொழில் அதிபரா? நடிகை ராக்கி சாவந்தை கட்டிக்க?






--------------------------------




சாய்னாவும் தோத்துடுச்சி ....
பதக்க பட்டியலில் இந்தியா 41 ஆவது இடமாம் ...
சரி விடுங்கப்பா நாச்சியப்பன் பாத்திரகடைல இன்னும் நிறைய கப்பு மீதி இருக்காம் ....


16. உனக்கு பிடிச்ச ராசியான நெம்பர் என்ன?




 3,62,838.




 ரொம்ப பெருசா இருக்கே?




நோ நோ நார்மல்தான் (36 -28 -38)






-----------------------------


17. கோபப்படுவது என் 'ஸ்டைல்': விஜயகாந்த் பேச்சு  # வெட்டிக்கோபத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுடறது என் ஸ்டைல் - ஜெ






-------------------------




18. ஞானியா இருந்தா ”ஓ” போடலாம், மவுனியா இருந்தா ம் கூட போட முடியாது






----------------------------




19.  தமிழகத்தில் மீண்டும் 5 மணி நேரம் மின் தடை # பேக் டூ ஃபார்ம்?






------------------------




20. சம்சாரத்திடம் சண்டை போட்டு திண்ணையிள் படுத்திருக்கும ஒரு வெண்ணெயின் பாட்டு - சம்சாரம் என்பது வீணே் 




------------------------------- 




Sunday, August 05, 2012

என் முதல் ஆங்கிலக் கடிதம் -சாரு நிவேதிதா.- சிறுகதை ,(காதல்)

பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு பெற நேர்ந்தது. அந்த நாடக விழாவில்தான் நான் பார்பராவைச் சந்தித்தேன்.




பார்பரா தமிழ் பேசத் தெரிந்த ஒரு அமெரிக்கப் பெண். வயது இருபதிலிருந்து இருபத்தைந்து இருக்கலாம். தமிழ் நாட்டுக்கு, அதுவும் இதுபோன்ற கலை விழாக்களுக்கு வரும் அமெரிக்கர்கள் என்றாலே எனக்கு ஒரு எரிச்சல் உண்டு. காரணம் – இவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவுடனேயே தங்களை இணைத்துக் கொண்டு விடுவதுதான். இலக்கியம் என்றால் கூட அது சங்க இலக்கியம் – அல்லது அதிகம் போனால் பக்தி இலக்கியம் வரை வருவார்கள். அதற்கும் மேல் நவீன இலக்கியம் என்றால் – மூச்! பேசக்கூடாது.




ஆக, பார்பராவும் இப்படிப்பட்ட ஒரு அமெரிக்கப் பெண் தான் என்று நினைத்து அதிகம் பேசாமல் இருந்து விட்டேன். அதனாலேயே நாடக விழாவின் கடைசி நாளன்று நடக்க இருந்த எங்கள் நாடகத்தை பற்றிக்கூட அவளிடம் பிரத்யேகமாக எதுவும் சொல்லாமல் இருந்து விட்டேன்.




விழாவின் பங்குபெற்ற நாடகங்கள் எல்லாமே ஒரே ‘ கடி ’ யாக இருந்ததால் ( எல்லாம் நவீன நாடகங்கள் ) பார்பரா கடைசி நாளன்று வராமல் இருந்து விட்டாள். நாங்கள் பாலியல் விவகாரங்களையும் எங்கள் நாடகத்தில் சேர்த்திருந்ததால் ஆபாச நாடகம் என்று சொல்லி ஒரே கலாட்டாகவும், அடிதடியாகவும் போய் விட்டது. அது போதாதென்று நாடகத்தின் ஒரு பாத்திரத்தின் பெயர் மதுரையின் ஒரு முக்கியமான அரசியல் புள்ளியின் பெயராகவும் போய் விடவே அந்த புள்ளியின் ரசிக மணிகளும் அடிதடியில் இறங்கினர். அடிதடி முடிந்த பிறகு ‘ இதையெல்லாம் முன் கூட்டியே யோசித்திருக்க வேண்டாமா மடையா? ’ என்று மாணிக்கமும் நானும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டது வேறு விஷயம்.




இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மேலும் ஒரு நாடகம் எழுதியிருக்கிறானோ என்று பயந்து கொண்டே கடிதத்தைப் பிரித்தால் அதில் அவன் பார்பராவைப் பற்றி எழுதியிருந்தான். அவள் தன்னை வந்து சந்தித்ததாகவும், நடந்த அடிதடிகளைப் பற்றி மிகுந்த அக்கறையோடு விசாரித்ததாகவும் எழுதியிருந்தான். அப்போதும் பார்பராவிடம் எனக்கு அதிக ஈடுபாடு ஒன்றும் ஏற்படவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து வந்த கடிதத்தில் பார்பராவை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தான்.




இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்த மாணிக்கம் ‘பார்பராவைப் பார்க்கப் போகலாம் வா ’ என்று அழைத்தான். அவனுடன் வந்திருந்த நண்பர்களையும் சேர்த்து – என் மகள் ரேஷ்மா உட்பட மொத்தம் ஒன்பது பேர் பார்பராவின் வீட்டுக்கு சென்றோம்.



பார்பரா சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் நாட்டின் ‘செக்ஸ் தொழிலாளிகளைப் ’ பற்றி ஆய்வு செய்ய இங்கு வந்ததாகவும் இரண்டு வருடம் மதுரையிலும் இப்போது ஒரு வருடம் சென்னையிலும் ஆய்வு முடித்துவிட்டதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் யு. எஸ் திரும்ப இருப்பதாகவும் ( ‘ யு.எஸ் ’ என்பதை ‘ யுவெஸ் ’ என்று சொன்னாள் பார்பரா) தெரிந்தது.



தமிழ் நன்றாகவே பேசினாள் பார்பரா. ஆனாலும், அந்தச் சந்திப்பில் அவளுடன் அதிகம் பேச முடியவில்லை. எனென்றால் மொத்தம் பத்து பேருக்கான சமையலில் ஈடுபட்டிருந்தாள் பார்பரா. சாம்பாரும், தொட்டுக் கொள்ள கோவைக்காய் கறியும். நாங்கள் வரும் போதே கோவைக்காய் வாங்கி வந்திருந்தோம்.



இரவு பார்பராவின் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் காலை கிளம்ப ஆயத்தமானோம்.



” இருங்கள். சாப்பிட்டு விட்டு போங்கள். நேற்று இரவுகூட நீங்கள் யாரும் சரியாக சாப்பிடவில்லை ” என்று சொன்னாள் பார்பரா. சொல்லிவிட்டு மூன்று பெரிய தூக்குகளை எடுத்துக் கொண்டு மாணிக்கத்துடன் ஸ்கூட்டரில் கிளம்பினாள்.



திரும்பி வந்தபோது கிட்டத்தட்ட நாற்பது பேர் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி என்று வந்திறங்கியது.



எக்கச்சக்கமாக மீதியாகிப் போகவே எல்லாவற்றையும் மறுபடியும் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள் பார்பரா. ” எங்கே ? ” என்று கேட்டேன். ” ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய் கொடுக்கப் போகிறேன் ” என்றாள். கிளம்பும் போது ” மீண்டும் வாருங்கள் , சாவகாசமாகப் பேசலாம் ” என்றாள்.




ஒரு வாரம் கழித்து போன் செய்தேன். வெகு நாள் பழகிய தொனியில் பேசினாள். அன்றைக்கு மறுபடியும் சந்தித்தேன். கூடவே ரேஷ்மாவையும் அழைத்துப் போயிருந்தேன். அன்று இரவு முழுக்கவும் பேசிக் கொண்டிருந்தோம். “எப்போதோ நாம் சந்தித்திருக்கலாம் ” என்றாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்னையில் தான் இருப்பதாகவும் மாதம் இரண்டு முறை மதுரை போய் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.




பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்தித்தோம். நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டாள் பார்பரா. இங்கு உங்கள் நாட்டில் ஓரல் செக்ஸ் என்பதெல்லாம் ரொம்பவும் அசாதரணமான விஷயமா என்ன ? நான் சந்தித்த ‘செக்ஸ் தொழிலாளி ’ களெல்லாம் அவர்களிடம் வரும் பெரும்பாலானவர்கள் ஓரல் வச்சுக்கத்தான் வருவதாகச் சொல்கிறார்களே ?





இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள். விவாதங்கள். ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க சிநேகிதமும் தீவிரமானது.



நான் என்னுடைய நாவலையும், என் நண்பன் ரமேஷின் நாவலையும் அவளிடம் காண்பித்தேன். அதன் அட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே குதிக்க ஆரம்பித்து விட்டாள் பார்பரா.



“உங்கள் நாவலைப் படிக்கச் சொல்லி ஒரு நண்பர் அடிக்கடி என்னிடம் குறிப்பிடுவார் ” என்றார்.



“யார் மாணிக்கமா ?“ என்று கேட்டேன்.



“இல்லை. குமார் என்று வேறு ஒரு நண்பர் ”



“குமாரும் எனக்குச் தெரிந்தவன் தான். ஆக என் நாவலைப் பற்றிக்கூட, உனக்கு (இதற்குள் நாங்கள் ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கியிருந்தோம்) மாணிக்கம் சொல்லவில்லையா? நான் மட்டும் உன்னை ஒரு வருடத்திற்கு முன்னால் சந்தித்திருந்தால் உன் கால், கைகளைக் கட்டி பாண்டிச்சேரிக்குத் தூக்கி கொண்டு போயிருப்பேன் ”




“இரண்டு விஷயங்கள் புரியவில்லை. ஒன்று – எதற்கு கால், கைகளைக் கட்ட வேண்டும் ? இரண்டாவது – பாண்டிச்சேரியில் என்ன விஷேசம்? ”




“பாண்டிச்சேரியில்தான் என் நெருங்கிய நண்பன் ரமேஷ் இருக்கிறான். அங்கே கூப்பிட்டால் நீ அப்புறம் பார்க்கலாம் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்வாய். அதனால் தான்…. ”




” நீ என்னைப் புரிந்து கொண்ட்து அவ்வளவுதானா ? நான் அமெரிக்காவில் இருந்தாலும் நானும் உன்னைப் போல் ஒரு அனாதைதான். அங்கே ஜனாதிபதியிலிருந்து அடிமட்டக் குடிமகன் வரை எதிர் கலாச்சாரம் பேசுவதால் என்னைப் போன்ற ஆட்கள் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறோம் ”



“இங்கே எங்கள் நாட்டிலும் கூட எதிர் கலாச்சாரம் என்பது அந்த நிலையில் தான் இருக்கிறது. சமீபத்தில் என் நண்பர்கள் நடத்திய ஒரு ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கில் மாட்டுக்கறி சாப்பிட்டு அதை தங்களின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக அறிவிப்பு செய்தார்கள் ”



இதைச் சொன்னதும் பார்பரா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். பிறகு சற்று நேரம் கழித்து, சற்று சீரியசான குரலில் “மாட்டுக்கறிக்கும் எதிர் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஏன், நாய்கறியோ பூனைக் கறியோ சாப்பிட வேண்டியது தானே? உங்கள் நாட்டில் ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்தவர்கள் பூனையையும், காகத்தையும் சாப்பிடுவதாக படித்திருக்கிறேன். யார் அவர்கள் ? பெயர் மறந்து விட்டது ” என்று கேட்டு நிறுத்தினாள்.




“குறவர்கள் ”



“யெஸ் குறவா. நாய்க்கறி என்றதும் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. நீங்கள் அரிசி சாப்பிடுவதைப் போல் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறோம். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதைப் போல் வியட்நாமியர்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள். ஒரு முறை நான் வியட்நாம் சென்றிருந்தபோது அங்கே என் வியட்நாம் தோழி ஒருத்தி என்னை அவள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தாள். போனதும் ‘ உனக்கு இன்று ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று தயார் பண்ணப் போகிறேன் ’ என்றாள். ‘


என்ன அது? ’ என்று ஆர்வத்துடன் கேட்ட என்னை கிச்சனுக்குள் அழைத்துச் சென்று ப்ரிஜ்ஜை திறந்து காட்டினாள். அவ்வளவுதான். பேயைக் கண்டதுபோல் அலறிவிட்டேன். ஆமாம். பேயேதான். ப்ரிஜ்ஜுக்குள் பேயின் தலை. தோலெல்லாம் உரிக்கப்பட்டு பயங்கரமாக கண்களை விழித்துக் கொண்டு ஒரு நாயின் தலை ! அவர்கள் நாட்டில் நாய்த்தலைதான் ஸ்பெஷலாம் ! நீ என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர் கலாச்சாரம் என்கிறாய் ! “




எனக்கும் அவள் சொன்னது நியாமாகவே தோன்றியது. ஏனென்றால் எந்த கருத்தரங்கில் நானும், ரமேஷும் சாப்பாட்டில் கடைசிப் பந்தியாகிவிட்டோம். சாப்பிடுவதற்கு முன்னால் கொஞ்சம் பீர் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று நினைத்ததால் வந்த வினை. கடைசிப் பந்தி என்பதாக் குழம்பில் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை. ஆனால், சாப்பிட்டு முடித்து இலையை எடுத்துக் கொண்டு குப்பைத் தொட்டிப் பக்கம் போனபோது தான் நண்பர்கள் எவ்வளவு தீவிரமான எதிர் கலாச்சாரவாதிகள் என்பது தெரிந்தது.



ஏனென்றால் குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் ஒரே கறி. ஆறு கிலோ கறி எடுத்து அதில் நான்கு கிலோவை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறார்கள். ‘ என்ன அநியாயம் இது? ’ என்றேன் ரமேஷிடம். “இதெல்லாம் பழக்கமில்லாமல் ஒரே நாளில் வந்துவிடும ? போகப் போகத்தானே பழகும் ” என்றான் ரமேஷ். “அடபோடா, இவர்கள் பழகுவதற்குள் நம் நாட்டிலுள்ள அத்தனை மாடுகளும் காலியாகிவிடும் போலிருக்கிறதே! ” என்றேன்.




இதைப் பார்பராவிடமும் சொன்னேன். சிறிது நேரம் யோசித்து விட்டு “உங்கள் நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட, வெஜிடேரியனாக இருப்பது தான் எதிர் கலாச்சாரமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் ரியோவில் நடந்த மாநாட்டில் இந்தியாவில் மாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மாட்டுச் சாணம் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்றும் பணக்கார நாடுகள் சொல்லியிருக்கின்றன.


முக்கியமாக யு.எஸ். அவர்கள் இப்படிச் சொல்வதற்கு காரணம் அவர்களுக்கு தோல் வேண்டும் என்பதுதான். ஒரு மாட்டின் மொத்த கறிக்குமான விலையை விட பல நூறு மடங்கு அதிகமான விலையில் அவர்கள் அந்த தோலை ஏற்றுமதி செய்கிறார்கள். தோலை எடுத்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத கறியை உங்களிடம் தருகிறார்கள் அவர்கள். நீங்கள் என்னவென்றால் அவர்கள் தூக்கிப் போடும் கறியைத் தின்று விட்டு இது எதிர் கலாச்சாரம் என்கிறீர்களே. வேடிக்கைதான் ” என்றாள்.




பார்பரா சொல்வது சரிதான். மாட்டுக்கறி நடுத்தர வர்க்கத்து உணவில் சேர்ந்துவிட்டது. மைலாப்பூர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என்று எல்லா இடங்களிலும் தெருவுக்கு தெரு தள்ளுவண்டிகளில் இரவு எட்டு மணியிலிருந்து நைட்ஷோ விடுகிற வரை சூடான இட்லியுடன் மாட்டுக்கறி வறுவலும் சேந்து, ஐந்து வருடம் ஆகிறது.






நான் வேலூரில் வேலை பார்த்தபோது அங்கே தள்ளுவண்டியில் ’ பீப் பிரியாணி ’ என்ற போர்டை பார்த்து பல நாட்கள் அர்த்தமே புரியாமல் மிரண்டிருக்கிறேன். யாரிடமும் கேட்கவும் துணிவில்லாமல் தலைமுடியை பிய்த்துக் கொண்டு குழம்பியிருக்கிறேன். பிறகு சென்னைக்கு வந்து இங்குள்ள தள்ளுவண்டிகளில் ‘பீஃப் பிரியாணி ’ என்று போட்டிருப்பதை பார்த்த பிறகுதான் விஷயம் விளங்கியது.


 ஆயுத கலாச்சாரத்தை பார்த்து பயந்தோ என்னமோ வேலூரில் ஆயுதத்தை எடுத்துவிட்டார்கள் போலும்! இப்படி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆயுதத்தோடும், ஆயுதமில்லாமலும் மாட்டுக்கறி உணவு கொடி கட்டிப் பறக்கிறது. பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி சிலையை ஒட்டியுள்ள மூன்று தள்ளுவண்டிகளில் ஒவ்வொரு வண்டியிலும் தினந்தோறும் ரூ 3000/-க்கு குறையாமல் வியாபாரம் நடக்கிறது. ஒரு பிளேட் மாட்டுக்கறி வறுவல் ரூ.7. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஒரு ஆள் நிச்சயமாக நான்கு பிளேட்டுகள் சாப்பிடலாம்.




எல்லாவற்றையும் பார்பராவிடம் விளக்கமாகச் சொன்னேன். “மாடு என்பது உங்களுக்கு ஒரு அசூயை தரக்கூடிய பிராணியாக இல்லாமல் இருப்பதால் தான் அதை சுலபத்தில் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் உங்களால் எந்தக் காலத்திலும் பன்றிக் கறியை ஏற்றுக் கொள்ள முடியாது ” என்று சொன்னாள்.




“ஆமாம். நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு அராபியருக்கு பெட்ரோல் கிணறு எப்படியோ அப்படித்தான் எங்களுக்கும் ஒரு காலத்தில் பசுவும், முருங்கையும் இருந்தது. முருங்கை அழிந்துபோன நிலையில் ஒரு சினிமா நடிகர் வந்துதான் அதை காப்பாற்றினார். இப்போது மாட்டை எப்படி யார் காப்பாற்ற போகிறார்கள் “ என்று தெரியவில்லை.



” ஓ.கே. நாம் டீ சாப்பிடலாம் “ என்று சொல்லிவிட்டு இரண்டு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள்.




ஒரு கனத்த அமைதிக்குப் பிறகு ” நாம் எப்போதோ சந்தித்திருக்க வேண்டும். இந்த ஒரு வருடமும் நான் பேசுவதற்குக் கூட ஆள் இல்லாமல் தவித்துக் கிடந்தேன் “ என்றாள்.




“ஏன் உனக்கு இங்கே நண்பர்கள் யாரும் கிடையாதா ? ”



“நான் யாரிடம் பேசுவது ? இது ஒரு செக்ஸ் வறட்சி பிடித்த சமூகமாக இருக்கிறது. என் கைகளைக் கூட வெளியே காட்ட முடியவில்லை. நீ கோபித்துக் கொள்ளாதே சாரு. இங்கே இருக்கும் ஒரு ஆணுக்குக் கூட, என் கண்களைப் பார்த்து பேசத் தெரியவில்லை. எல்லாருமே என் மார்பை பார்த்துத்தான் பேசுகிறார்கள். சீக்கிரமாக இங்கிருந்து போய் விட வேண்டும் ’ என்ற வேகத்தில் இருந்தபோதுதான், உன்னைச் சந்திக்க நேர்ந்தது. இப்போது ஏன் போகிறோம் என்று இருக்கிறது. ஆனால், எல்லாமே முடிந்து விட்டது. இனிமேல் தள்ளிப் போட முடியாது.




இறுக்கமாக என் கைகளைப் பற்றியிருந்த அவளுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒரு வருடமாக அவளைப் பற்றி ‘பிலிம் ’ காண்பித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை மனதாரத் திட்டினேன்.




“இருந்துவிடு பார்பெல்…. எல்லாவற்றையும் கேன்சல் செய்து விட்டு இருந்துவிடு “ என்றேன்.



“என்னை இதுவரை யாருமே பார்பெல் என்று கூப்பிட்டதில்லை ” என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள். “முடியாது சாரு… இந்த ‘ பி.எச்.டி ’ யை முடித்தால் தான் ஓரளவுக்கு பிழைக்க முடியும். காலம் கடந்து விட்டது. உன்னை ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்திருந்தால் சரியாக திட்டமிட்டிருக்க முடியும். சரி, ஒன்று சொல்கிறேன் கேட்பாயா … ? ஏதோ பெரிதாக சிநேகிதி, சிநேகிதி என்று காதில் பூ சுற்றுகிறாயே ” என்று சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்து ” காதில் பூ சுற்றுவதெல்லாம் கூட உனக்குத் தெரியுமா ? “ என்று கேட்டேன்.




அதற்கெல்லாம் நான் என் புரொபசருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.



(புரொபசர் என்று அவள் சொன்னது சமீபத்தில் காலமான ஏ.கே.ராமானுஜத்தை தான். பார்பரா, ஏ.கே.ராமானுஜத்திடம் தமிழ் படித்தவள் )



“சரி, நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். ரேஷ்மாவை நான் என்னுடன் அழைத்துப் போய்விடுகிறேன். என்ன சொல்கிறாய் ? ”



ரேஷ்மா, பார்பராவுடன் போனால் பிரமாதமாக இருப்பாள்தான். ஆனால், ரேஷ்மாவை இந்த நான்கு வயதில் முழுக்க முழுக்க பிரிவது என்பதை என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.



“ நோ பார்பெல்… சாத்தியமேயில்லை ” என்றேன். பிறகு நீண்ட நேரம் மெளனம். புல் தரையில் கைகளை தலைக்கு வைத்தபடி மெளனமாக படுத்திருக்க பார்பரா திடீரென்று என்னைப் பார்த்து சிரித்தாள்.



“ஏன் சிரிக்கிறாய் ? ”



“எனக்குத் தெரியும். நீ இப்படித்தான் சொல்வாய் என்று ”



“என்ன பார்பெல் இது ? உன்னைப் பிரிவதே எனக்கு தாங்க முடியாத வலியாகவும், சித்ரவதையாகவும் இருக்கிறது. ரேஷ்மாவும் போய் விட்டால்… நான் அனாதையாகிவிடுவேன் பார்பெல் ”



“ஓக்ஹாய்… பர்கெட் இட்”



அவளுடைய ஓக்ஹாயை ரசித்தேன். அமெரிக்க ஓகே. பிறகு மீண்டும் அவள் ஆரம்பித்த இடத்திற்கே வந்தேன். இங்கு நம்முடைய காதல் தேவதையாக இருக்கும் ஒரு சினிமா நடிகையை பற்றிச் சொல்லி “அவளைப் போலவே நீயும் இருப்பதால்தான் உன்னை அப்படிப் பார்க்கிறார்கள் இங்கே. மற்றபடி இது செக்ஸ் வறட்சி கொண்ட ஒரு நாடு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.


ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் செக்ஸைப் பொருத்தவரை ஓரளவுக்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான சமூகத்திலும் கூட ‘போர்னோ ’ என்பது மிகப்பெரிய வியாபாரமாகத்தானே இருந்து வருகிறது? ” என்றேன்.




” இதற்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்து எழுதுகிறேன் “ என்றாள்.



எனக்கு அப்போது ஒரு பயம் பிடித்துக் கொண்டது. நான் பார்பராவுக்கு கடிதம் எழுத வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். அவளுக்குப் பேச்சுத் தமிழ் நன்றாகவே தெரிந்திருந்தாலும், எழுதவும், படிக்கவும் சரளமாக வராது. எனக்கோ அலுவலகத்தில் ‘ காஷூவல் லீவ் ’ விண்ணப்பத்தைத் தவிர வேறு எதுவுமே ஆங்கிலத்தில் எழுதிப் பழக்கமில்லை. அவளிடம் இதையும் சொன்னேன்.




“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ எழுதுகிறாய்“ என்றாள்



தொடர்ந்து “ஒவ்வொரு நாளும் ஊருக்கு கிளம்புவேனா என்றே சந்தேகமாகிக் கொண்டு வருகிறது “ என்று சொல்லி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் “ நோ… போய்த்தான் ஆகவேண்டும் ” என்றாள்.




சொல்லிவிட்டு அப்படியே திரும்பி தலையை கவிழ்த்துகொண்டு படுத்தாள். எதுவும் பேச முடியவில்லை. குலுங்கி அழுவது தெரிந்தது. “ நோ பார்பெல்… நோ… ” என்று சொல்லியபடி அவளுடைய முதுகில் சாய்ந்தேன்.




நீண்ட நேரம் கழித்து சன்னமான குரலில் “ஒரு கால் நூற்றாண்டு காலம் மிகத் தீவிரமாக பழகி பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு பத்தாண்டுகளுக்கு பிறகு அந்த நபரை ஒரு ரயில்வே பிளாட்பார்மில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலிருந்து பார்த்து கைகளை அசைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சாரு. இது ஒரு சித்ரவதை சாரு. இதை என்னால் தாங்க முடியவில்லை… ” என்றாள்.



பார்பரா ஊருக்குக் கிளம்ப இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அன்று ஒரு விடுமுறை தினம். காலை பத்து மணி அளவில் போன் செய்தேன். “ வருகிறாயா ? உடனே வா. உடனே உன்னைப் பார்க்க வேண்டும். எப்போது வருகிறாய் ? நான் இரண்டு மணிக்கு கிளம்பவேண்டும் “ என்றாள்.



“வருகிறேன். பனிரண்டு மணி அளவில் சந்திக்கிறேன் “ என்றேன்.



“பிரேக்ஃபாஸ்ட் முடித்தாயிற்றா? “ என்று கேட்டாள். நான் காலையில் அருகம்புல் சாறு மட்டுமே குடித்திருந்தேன். ‘கபகப ’ வென்ற பசி. இருந்தாலும் ‘ஆயிற்று ’ என்றேன்.



“சாப்பிட்டாயா? ’ என்று என்னை, என் ரமேஷைத் தவிர வேறு யாரும் கேட்டு எவ்வளவு ஆண்டுகளாயிற்று என்று நினைத்துக் கொண்டேன். நினைக்க நினைக்க நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது என்ன நாற்பது வயதில் – அதிலும் ஒரு வாரத்தில் ஒரு யு.எஸ். போய் விடப்போகிற ஒரு பெண்ணிடம் இத்தனை ஈடுபாடு என்று தோன்றியது.



அண்ணா நகரிலிருந்து பார்பரா இருக்கும் பெசண்ட் நகருக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அடையாறு டெப்போவில் இறங்கி எதிரே இருந்த ஐயங்கார் பேக்கரியில் பை நிறைய நொறுக்குத்தீனி வாங்கிக் கொண்டு, ஆட்டோ பிடித்து, பார்பராவின் வீட்டை அடைந்த போது மணி 12.45.



நான் அண்ணா நகரிலிருந்து, பெசண்ட் நகர் வரும் பயணத்தை பற்றி விளக்கினேன். அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.



“மை காட்! என் சாருவை ஒவ்வொரு முறையும் இவ்வளவு தூரம் சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறேனா? ” என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.



“இரண்டு மணிக்கு நான் அந்த ‘செக்ஸ் தொழிலாளர்களை ’ சந்திக்க வேண்டும். நாம் இப்போது இரண்டு மணி நேரம்தான் பேச முடியும். இரண்டு மணி நேரம் பேச நான்கு மணி நேரப் பயணமா! ” என்று வருத்தத்துடன் சொன்னாள்.




“சரி, அப்படியானால் நாளை மாலை வருகிறேன். இரவு முழுவதும் பேசலாம். ரேஷ்மாவையும் அழைத்து வருகிறேன் ” என்றேன்.



அப்படியே சந்திப்பது என்று முடிவாயிற்று.



மறு நாள் மாலை வந்த போது வீட்டுக்கு வெளியிலிருந்த புல் தரையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி அமர்ந்திருந்தாள் பார்பரா. நானும் பக்கத்தில் அமர்ந்தேன். ரேஷ்மாவிடம் கொஞ்சிவிட்டு என்னைப் பார்த்து ” இன்னும் ஐந்து நாட்கள் ” என்றாள்.




“வேறு ஏதாவது பேசேன் பார்பெல் ”




திடீரென்று அவளும், ரேஷ்மாவைப் போல் ஒரு குழந்தையாகத் தோன்றினாள்.




நானே போய் மூன்று பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தேன். டீயை குடித்துவிட்டு ரேஷ்மா ‘டிவி ’ பார்க்க உள்ளே போய் விட்டாள்.




திடீரென்று மணியைப் பார்த்தேன். எட்டு ஆகியிருந்தது. “ஓ.கே பார்பெல்… ரேஷ்மாவுக்குப் பசிக்கும். மூன்று பேரும் எங்காவது ரெஸ்டாரண்டுக்குப் போய் வருவோம் ” என்றேன். பார்பரா பேசவில்லை. நானும் அவள் பேசட்டும் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். திடீரென்று வெறிபிடித்தாற்போல் என் தோள்களை உலுக்கி “ஓய் டிட்யூ மீட் மீ? ப்ளீஸ் கோ அவே. ப்ளீஸ்… இன்று இரவு இங்கே தங்காதே ” என்று சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் கண்களில் முத்தமிட்டு விட்டு முழந்தாளிட்டு தலைகவிழப் படுத்துக் கொண்டாள்.




நான் அவள் பக்கத்தில் போய் “இதோ பார் பார்பெல். இன்றிரவு நான் தங்குவதுதான் பிரச்னை என்றால் நீயும் ரேஷ்மாவும் மாடிக்குப் போய் தூங்குங்கள். நாம் பேச வேண்டாம். கீழே நான் படுத்துக் கொள்கிறேன். மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம் ” என்றேன்.





ஆனால், அவள் மறுபடியும் “புரிந்து கொள்ள முயற்சி செய் சாரு . தயவு செய்து இன்று இரவு இங்கே தங்காதே…ப்ளீஸ் ” என்றாள். அவள் உடம்பு முழுவதும் குலுங்கிக் கொண்டிருந்தது.




நான் ஒன்றுமே சொல்லாமல் அவள் தோளைத் தொட முயன்ற போது பின் பக்கம் திரும்பாமலேயே “ டோன்ட் சாரு. ப்ளீஸ் டோன்ட் . ஐ பெக் யூ…. ” என்றாள்




சட்டென்று எழுந்து உள்ளே போய் ரேஷ்மாவை கூப்பிட்டேன். கிளம்புகிறோம் என்று அறிந்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ரேஷ்மா. ஷூவையும் போடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஷூவை எடுத்து பையில் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.



அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் பார்பராவை பார்க்கவில்லை. போனிலும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், மூன்றாம் நாளும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. மண்டையே வெடித்து விடுகிறாற்போல் ஒரு உணர்வு. உள் ஜூரம். அவள் ஊருக்கு கிளம்ப இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன.




போனில் தொடர்பு கொண்டேன். நான் தான் என்று தெரிந்ததுமே “இன்று மட்டும் நீ போன் செய்யாமல் இருந்திருந்தால் நானே நேராக கிளம்பி வந்து உன்னைக் குத்தி கொலை செய்திருப்பேன். உடனே கிளம்பி வா “ என்றாள்.




போனேன். மிகவும் சோர்வாக படுக்கையில் சாய்ந்திருந்தாள். பதற்றத்துடன் “என்ன ஆயிற்று? ” என்று கேட்டு கையை அவள் நெற்றியருகே கொண்டு போனவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கையை இழுத்துக் கொண்டேன்.



“டோன்ட் பி சில்லி மேன்… ” என்று சொல்லி என் கையை பிடித்து தன் நெற்றியிலும், கழுத்திலும் வைத்தாள். “இரண்டு நாளாய் கடுமையான ஜூரம். அது இருக்கட்டும். நீ ஆபிசில் தான் வேலை செய்கிறாயா? அல்லது ஏதாவது அன்டர்கிரவுன்ட் வேலையில் ஈடுபட்டிருக்கிறாயா? ஜூரத்தில் படுக்கையை விட்டுக்கூட எழுந்து கொள்ள முடியாமல் உனக்கு போன் செய்து செய்து கையே முறிந்து விட்டது. மீனாட்சி மட்டும் இருந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை ” என்றாள்.

“அமெரிக்கப் பெண்ணான உனக்கு இங்குள்ள அரசாங்க அலுவலகம் பற்றிச் சொன்னால் புரியாது. அதைப் புரிய வைக்கவும் இப்போது நேரமில்லை. உன் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது? முதலில் அதைச் சொல் ”



” இப்போது சரியாகிவிட்டது. அது சரி.. அன்றைக்கு எப்படி போனாய்? நீ போன பிறகுதான் உனக்கு அந்த நேரத்தில் பஸ் கிடைத்ததோ, இல்லையோ என்ற ஞாபகமே வந்தது. ஐயாம் ரியலி சாரி சாரு. நீ என்னை மன்னிக்கத்தான் வேண்டும். அன்றைக்கு நான் என் வசத்திலேயே இல்லை. உன்மத்தம் பிடித்த நிலையில்தான் இருந்தேன். நீ மட்டும் அதற்குமேல் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் நான் யு.வெஸ் போவது நடக்காமல் போயிருக்கும். அதற்காக நான் உனக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும், நீ ஒரு கல்நெஞ்சுக்காரந்தான். ஊருக்குப் போக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிற இந்த நிலையில் இரண்டு நாட்களாக போன் செய்யாமல் இருந்து விட்டாயே? “ என்றாள்.




பின் குறிப்பு : இப்போது பார்பரா ஒரு கனவு. அவளுடன் பழகிய அந்த ஒரு மாத காலம் ஒரு கனவு. அந்த பெசன்ட் நகர் வீட்டின் புல்தரை ஒரு கனவு. ‘சாப்பிட்டாயா? ’ என்று என்னை அவள் ஆதுரத்துடன் கேட்டது ஒரு கனவு. என் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தபோது அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது ஒரு கனவு. ‘ என்னைத் தொடாதே, போய் விடு ’ என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதது ஒரு கனவு. கனவையெல்லாம் நினைவாக்கி இப்போது பார்பராவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிக்கிறேன்.



என் முதல் ஆங்கிலக் கடிதம்.

நிதர்சனம் - சுஜாதா - சிறுகதை ( க்ரைம் த்ரில்லர்)

திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.



ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன்.



”மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.”



தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான குரூர ஆர்வத்துடன் மேலே சென்றேன். காரிடாரில் மௌனமாகச் சிலர் நின்றிருந்தார்கள். ஓரிரண்டு பரிச்சய முகங்கள். எதையோ யாரோ செய்வதற்கு எல்லாரும் காத்திருந்தார்கள் போலத் தோன்றினார்கள்.




கடைசி அறை வாசலில் அவனை இறக்கிப் படுக்க வைத்திருந்தார்கள். முகம் கறுப்பாக இருந்தது. கழுத்தில் படுக்கைக் கயிறு இறுக்கியிருந்த இடத்தில் நீலம் பாரித்திருந்தது. கன்னங்கள் சற்று உப்பியிருந்தன. கண்கள் சொருகிப்போய் வெண்ணிற விழிகள் மட்டும் தெரிந்தன. கட்டம் போட்ட சட்டையும் டெரிகாட் பேன்ட்டும் அணிந்திருந்தான். கரிய தலைமயிர். கையில் கட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் இன்னும் உயிரோடு இருந்தது.



”எப்பப்பா?” என்றேன் அதிர்ந்து.



”ரெண்டு நாளாயிருக்கும்போலத் தோணுது. இன்னிக்குத்தான் கதவை உடைச்சுத் திறந்து பார்த்திருக்காங்க!”



நான் தயக்கத்துடன் கால்மாட்டுக்குச் சென்று அவன் முகத்தை நேராகப் பார்த்தேன். ”மை காட்! நான் இவனைச் சந்தித்திருக்கிறேன். இவனிடம் பேசியிருக்கிறேன்.”




மத்தியானம் இரண்டு மணிக்கு (சென்ற வாரம் என்று ஞாபகம்) அவன் என் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்தான். அன்றைக்குக் கொடுத்தாக வேண்டிய அவசர ரிப்போர்ட் டில் இருந்தேன்.




”வாட் டு யூ வான்ட்?” என்றேன் கோபத்துடன்.



”உங்ககிட்ட பேசணும் சார்” என்றான் சன்னமான குரலில்.



”வெய்ட் அவுட்ஸைட், ஐ’ல் கால் யூ.”



”அஞ்சு நிமிஷம் சார்.”



”ஐ ஸெட் வெய்ட்!”



அவனை நான் உடனே கவனித்திருக்க வேண்டுமோ? காத்திரு என்று சொன்னது தப்போ?



அரை மணிக்கு அப்புறம் அவனை மறந்தே போய்விட்டேன். மறுபடி எட்டிப்பார்த்து ”


கேன் ஐ ஸி யூ நௌ?”



”ஆல்ரைட், அஞ்சு நிமிஷம்தான்” என்றேன்.


 உள்ளே வந்து என்னைச் சற்று நேரம் பார்த்தான்.


”சார், என் பெயர் தர்மராஜன். எனக்கு உங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றல் வேண்டும்.”




”இப்ப எந்த டிபார்ட்மென்ட்டில் இருக்கிறாய்?”



”டி.பியில்.”



”அங்கே என்ன செய்கிறாய்?”



”ப்ரொகிராமிங்.”



”எதற்காக மாற்றல் வேண்டும் என்று கேட்கிறாய்?”



”அங்கே எனக்குப் பிடிக்கவில்லை.”



”என்ன பிடிக்கவில்லை?”



”வேலை.”



”ஏன்?”



”அந்த வேலை என் திறமைக்குச் சவாலாக இல்லை.”




அந்த நிமிஷமே அவன் வேறு பட்டவன் என்று உணர்ந்திருக்க வேண்டுமோ?



”நீ என்ன படித்திருக்கிறாய்?”



”படிப்பு முக்கியமானால், நான் பி டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ்.”



”கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறாய். ப்ரொகிராமிங் செய்கிறாய். சரியான வேலையில்தானே இருக்கிறாய்?”



”அது எனக்குச் சரியான வேலையில்லை. மாடசாமிக்கும் முனுசாமிக்கும் சம்பளம், பிடிப்பு எல்லாவற்றையும் கணக்கிட கோபால் ப்ரொகிராம் எழுதுவது என் திறமைக்குத் தாழ்மையான செயலாக, என் திறமையை அவமானப்படுத்துவதாகப்படுகிறது. எனக்கு உரிய வேலை உங்கள் டிபார்ட்மென்ட்டில்இருக் கும் என்று தோன்றுகிறது.”




அவன் என் மேஜை மேல் பொருள்களை ஆராய்ந்தான். நகத்தைக் கடித்தான். ”கேன் ஐ ஸ்மோக்?” என்றான்.



 நான் உயர் அதிகாரி. என் ஆபீஸ் வம்சாவளியில் எனக்கு அதி ஜூனியர், ஜூனியர்கள் சாதாரணமாக என் முன் சிகரெட் பிடிப்பதில்லை.



அவன், என் அனுமதிக்குக் காத்திராமல் பற்றவைக்கத் துவங்கியது, எனக்கு அவன் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. நான்கு தீக்குச்சிகள் செலவு செய்து, பற்ற வைப்பதை மிகச் சிக்கலான காரியமாக்கி, மிக ஆழமாகப் புகையை இழுத்து வெளிவிட்டான். பிடிவாதக்காரனை நிமிர்ந்து பார்த்தேன். சிறிய உடலமைப்பு. பிரதானமான மூக்கு. சற்றுத் தூக்கலான பற்கள். உயர்ந்த ரகத் துணியில் சட்டை அணிந்திருந்தான். கண்கள் என்னைச் சந்திக்க மறுத்து குத்துமதிப்பாக என் சட்டையின் இரண்டாவது பட்டனில் பதிந்திருந்தன.




”சார், ஒரு கம்ப்யூட்டரை டிஸைன் பண்ற அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது” என்றான்.



”என் டிபார்ட்மென்ட்டுக்கு அந்தத் திறமை தேவையில்லை. கம்ப்யூட்டரை உபயோகப்படுத் தும் திறமை போதும்.”



”ட்டிரிங் மெஷின் பற்றிய என் கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டும்.”



”அதெல்லாம் கம்ப்யூட்டர் வேதாந்தம். எனக்குத் தேவை நடைமுறை அனுபவம்.”



”உங்கள் டிபார்ட்மென்ட் டுக்கே பெருமை தரக்கூடியதாகச் சில விஷயங்களைச் செய்துகாட்டு வேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.”



”என் டிபார்ட்மென்ட்டில் இப்போது வேகன்ஸி இல்லை.”



”சமீபத்தில் சந்திரகுமார்னு ஒருத்தனை எடுத்துக்கொண்டீர்களே?”



எனக்கு உறுத்தியது. ”சந்திரகுமார் கேஸ் வேற.”



”எப்படி?”



”எப்படி என்று விஸ்தாரமாகச் சொல்ல எனக்குச் சமயமில்லை.”



அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.



”நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.”



”வேகன்ஸி இல்லை.”




”வேகன்ஸி எப்போது வரும்?”



”ஆறு மாசம் ஆகும்.”



”நான் என் வேகன்ஸியுடன் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்தால் எடுத்துக்கொள்வீர்களா?”



”லுக் ஹியர், யங் மேன்! எல்லோருக்கும் அவர்கள் மன உசிதப்படி வேலை அமைவது இல்லை. இந்தத் தொழிற்சாலை ஒரு மிகப் பெரிய மெஷின். இதில் நானும் நீயும் சின்னப் பல் சக்கரங்கள். விதித்த நியதிப்படி நாமிருவரும் சுழன்றாக வேண்டும். நீ இப்போது இருக்கும் வேலையிலேயே தொழிற்சாலைக்கு உபயோகமாக எவ்வளவோ செய்யலாம். அதை யோசித்துப்பார்த் தாயா?”




அவன் யோசிக்கவில்லை.”ஒரே தொழிற்சாலை; ஒரு டிபார்ட் மென்ட்டிலிருந்து இன்னொரு டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றிக் கேட்கிறேன். எனக்குக் கிடைப்பது உபதேசம்!” என்றான்.




”ஆல்ரைட்! யூ மே கோ நௌ!”



”உங்கள் மூக்கின் மேல் கறுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டுஇருக் கிறது” என்றான்.



நான் தன்னுணர்வுடன் மூக்கைத் தடவிக்கொண்டேன்.



”பத்து ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா?” என்றான்.



”வாட் டு யூ மீன்?”




”நாம் எல்லோரும் இந்த உலகத்தை ஆள வேண்டிய நேரம் வரப்போகிறது” என்றான்.




அதே சமயம், டெலிபோன் மணி அடித்து எம்.டி. என்னைக் கூப்பிட்டதால் அவனுடைய அந்த கடைசி மூன்று வாக்கியங்களின் சமகால அபத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அப்போதே அவனை மறந்து போனேன்.





மறுதினம் டி.பி. டிபார்ட்மென்ட் கோவர்த்தனை கான்டீனில் சந்தித்தேன். ஏதோ பேச்சை ஆரம்பிப்பதற்காக ”தர்மராஜன்னு ஒரு பையன்…”



”எ க்ராக். அவன் உங்ககிட்டயும் வந்துட்டானா?”



”ம். நேற்று வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டான்.”




”சரிதான். என் டிபார்ட்மென்ட்டுக்கு வந்து ஒரு மாசம்கூட ஆகலை. இதுவரைக்கும் மூணு டிபார்ட்மென்ட் மாறி இருக்கிறான். முதல்ல ஆர் அண்ட் டியில் இருந்தான். அப்புறம் ஹெட் ஆபீஸ் போனான், மேனேஜ்மென்ட் சர்வீசுக்கு. அப்புறம் டெக்னாலஜி டெவலப்மென்ட். பூனைக் குட்டியை மாத்தற மாதிரி…”




”பையன் ஒரு மாதிரி நெர்வஸா இருந்தான்.”



”இல்லை, திமிர். கொட




ுத்த வேலையை நல்லாவே செய்துடறான். அப்புறம் மேஜை மேல் காலை நீட்டிண்டு ஃபிரெஞ்சு புஸ்தகம் படிப்பான். எதிர்த்தாப்பல ஒரு பெண் உட்கார்ந்திருந்தா. அவளையே வெச்ச கண் வாங்காம ஒரு மணி நேரம் பார்த்துண்டு இருந்தானாம். அப்புறம் ”போய் காலை அலம்பிண்டு வா” என்றானாம். அந்தப் பெண் உடனே வேற இடம் கேட்டு மாத்திண்டு போயிடுத்து. வேலையில் கெட்டிக்காரன்தான். ஆனா, ரெஸ்ட்லஸ். நீ வேணா எடுத்துக்கறியா, தாராளமா போஸ்ட்டோட டிரான்ஸ்ஃபர் பண்ணி அனுப்பறேன்.”




”சேச்சே, எனக்கு வேண்டாம்பா.




அடுத்த முறை அவனை ஆபீஸர்ஸ் கிளப் மெஸ்ஸில் பார்த்தேன். ஒரு ஓரத்தில் காபிக் கோப்பை, சிகரெட் சகிதமாக ‘டைம்’ படித்துக்கொண்டு இருந்தான்.




என்னைக் கண்டவுடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.



அவ்வளவுதான் அவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தங்கள். இப்போது அவனைத் தரையில் கிடத்திப் பார்க்கிறேன்.



செக்யூரிட்டி ஆபீஸர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்தார். ”ரூம் உள்ளே பூட்டியிருந்தது, சார். கதவைத் திறந்தோம். நீங்க அவன் ரூமைப் பார்க்க வேண்டும்.”




”ஏதாவது கடிதம் எழுதி வெச்சிருந்தானா?”




”இல்லை.”



”காதல் கீதல் என்று…”



”ம்ஹ¨ம்! அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.”



”ஆஸ்பிடலில் அவன் ரிக்கார்டைப் பார்த்தீர்களா? தீராத வயிற்றுவலி என்று ஏதாவது?”



”இல்லை.”



தயக்கத்துடன் அவனைத் தாண்டி அறைக்குள் நுழைந்தேன்.



அறையில் மேல்நாட்டுச் சாதனங்கள் அத்தனையும் இருந்தன. ரேடியோ, கேசட் ரிக்கார்ட் பிளேயர், ஸ்டீரியோ, சுவர்களில் வண்ண வண்ணப் படங்களில் காட்டுக் குதிரைகள் ஓடின. ஏராளமாகப் புத்தகங்கள். திறந்திருந்த மேஜையின் இழுப்பறையில் நூறு ரூபாய் நோட்டுக்கள். பிரகாசமான விளக்குகள். புதிய மின் விசிறி.




”போனவாரம்தான் வாங்கியிருக்கான் சார். பில் கிடக்குது.”



அவன் தொங்கின விட்டத்து வளையத்தைப் பார்த்தேன்.




”கட்டில்ல இருந்து இரண்டு இன்ச் தள்ளி அவன் கால் மட்டம் இருந்தது. எந்த நேரமும் அவன் தற்கொலையை ரத்து பண்ணி கட்டில்ல ஏறி நின்றிருக்க முடியும்.”

அறை முழுவதும் பார்த்தேன். ஏதாவது ஒரு பெண், ஏதாவது ஒரு காதல் கடிதம், ஏதாவது ஒரு வியாதி… ஏதாவது ஒரு சம்பிரதாயமான காரணம்?




ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பக்கத்து கிராமங்களில் செய்தி பரவி, அவசரஅவசரமாகப் பார்த்துவிட்டுப் போக வந்துகொண்டு இருந்தார்கள். பெண்கள் தலையில் செவ்வந்திப் பூ வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டுஇருந்தார்கள்.




”அவன் தற்கொலைக்கு நானா காரணம்! சே அபத்தம்.”



வீட்டுக்குச் செல்லும்போது என்னை அறியாமல் என் விரல் மூக்கை அழுந்த அழுந்தத் தேய்த்தது.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்