Saturday, July 16, 2011

30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் குறிப்பிட்ட சில பெண்கள்க்கு மட்டும்)

30 வகை சேமியா ரெசிபி

'சேமியா' என்றதுமே... பாயசம், உப்புமா, கிச்சடி... அதிகபட்சம் கேசரி இவைதான் நம் நினைவுக்கு வரும். சின்ன வயதிலிருந்தே இப்படி ஒன்றிரண்டு அயிட்டங்களைத்தான் பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு இருப்போம்... சமைக்கத் தெரிந்து வைத்திருப்போம்!

இங்கே... சேமியாவைப் பயன் படுத்தி ஸ்வீட், சாதம், பிரியாணி, கேக் என்று விதம்விதமாக... சப்புக் கொட்ட வைக்கும் சுவையோடு செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் 'வெரைட்டி சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ கிருஷ்ண குமாரி ஜெயக்குமார். அத்தனை அயிட்டங்களையும் தனது கற்பனை வளத்தில், மிக அழகாக அலங்கரித் திருக்கிறார் 'செஃப்' ரஜினி!

இனி, மாதாந்திர மளிகை சாமான் லிஸ்ட்டில், 'ஐந்து பாக்கெட் சேமியா' என்று எழுதப் போகிறீர்கள்தானே!

ஸ்வீட் கோதுமை கோன்

திடீர் விருந்தாளிகளுக்கு, அதிரடியாக ருசியுடன் கூடிய பட்சணம் செய்ய வேண்டுமா? சப்பாத்திக்கு பிசைந்த மாவை, பெரிய வட்ட சப்பாத்தியாக இட்டு, ஒரு சின்ன மூடியால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளை கோன் வடிவத்தில் மடித்து எண்ணெயில் பொரியுங்கள். உடனடியாக, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுங்கள். சர்க்கரை ஜீராவிலும் முக்கி எடுக்கலாம். நடுவில் உள்ள இடைவெளியில் பாதாம், முந்திரி, செர்ரிப் பழம், ஜெம்ஸ் மிட்டாய் போன்றவற்றைச் செருகி விடுங்கள். சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.


மரவள்ளி பொரியல்! 

மரவள்ளிக் கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து, மழைக்கால மாலை வேளைகளில் சாப்பிடுவதுதான் பலருக்கும் வழக்கம். இதையே சைட் டிஷ்ஷாகவும் தயாரிக்கலாம். கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். வெந்த பின்பு தண்ணீரை வடித்து, உப்பு, காரம் சேர்த்து வதக்குங்கள். பிறகு, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்தால்... சுவையான மரவள்ளிக் கிழங்கு பொரியல் ரெடி!


கலர்ஃபுல் லெமன் ரைஸ்! 

எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது, கடலைப் பருப்புக்கு பதிலாக... பொட்டுக்கடலை போட்டு தாளித்து, கொஞ்சம் துருவிய கேரட்டை சேர்த்தால், பார்க்க கலர்ஃபுல்லாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


மல்ட்டி பர்ப்பஸ் மாவு! 

பாசிப்பருப்பை வாசம் வரும் வரை கடாயில் வறுத்துக் கொள்ளுங்கள். இத்துடன், அரை பங்கு சர்க்கரை, உரித்த ஏலக்காய் ஏழெட்டு சேர்த்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்து, பாட்டிலில் சேமியுங்கள். தேவையானபோது தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி யாகக் குடிக்கலாம். அல்லது ஒரு கப் பாலில், ஒரு டேபிள்ஸ்பூன் மாவைக் கரைத்து, அடுப்பில் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, முந்திரிப்பருப்புடன் பாயசமாக பரிமாறலாம். உருக்கிய நெய் விட்டுப் பிசைந்து, பயத்தமாவு உருண்டையும் தயாரிக்கலாம்.


1.  சேமியா பிர்னி 

தேவையானவை: சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்,  பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை சிறியதாக உடைத்து, அதனை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பிறகு, கால் டம்ளர் பாலில் சேமியாவை வேகவிட்டு, வெந்ததும் ஆற வைக்கவும். மீதியுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து... அது நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். ஆறிய சேமியாவுடன் பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு, ஏலக்காய்த்தூள், சுண்ட வைத்த பால் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்; ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பரிமாறலாம்.  

பாயசம் போல் கெட்டியாக இல்லாமல், தளர இருந்தால் ருசியாக இருக்கும். 

2. சேமியா பகளாபாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் (புளிக்காதது) - முக்கால் கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும்.
கூடுதல் சுவைக்காக... திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

3. சேமியா - தர்பூசணி கேசரி

தேவையானவை: சேமியா - ஒரு கப், தர்பூசணி ஜூஸ் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, சேமியா, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த சில நிமிடங் களில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பாத்தி ரத்தில் ஒட்டாமல் வந்ததும்... வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், கலர் பவுடர் சேர்க்காமலே இயற்கையான நிறத்துடன் சேமியா, தர்பூசணி கேசரி ரெடி!

4. சேமியா வடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் - முக்கால் கப், இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி... சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் டெலீஷியஸ் சேமியா வடை ரெடி

சேமியா கிச்சடி
தேவையானவை: சேமியா - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டீஸ்பூன், நெய், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். கழுவி, நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள... சுவையான கிச்சடி பரிமாறுவதற்குத் தயார்.

5. சேமியா வெஜ் பிரியாணி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர் (நறுக்கியது) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது), தக்காளி - ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாதூள் - தலா ஒரு டீஸ்பூன், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப். இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். நறுக்கிய காய்கறிகள், கரம் மசாலாதூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் முக்கால் பதத்தில் வெந்ததும்... சேமியா, உப்பு சேர்த்துக் கிளறி முதல் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, புதினா சேர்த்து மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். வாசனை வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

6.  சேமியா புலவு 

தேவையானவை: சேமியா - ஒரு கப், வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,  பீன்ஸ் - 5, பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: சேமியாவை வறுத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த காய்கறிகளுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளறி, வேக விடவும். வெந்து விட்டதற்கு அறிகுறியாக வாசம் வந்ததும் நெய் விட்டு கிளறி... நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

7.சேமியா துவரம்பருப்பு பாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 2, பூண்டு (நசுக்கியது) - 4 பல், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு , கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். சேமியாவை என்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... அது சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன்... நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, (கேஸ்) அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கூட செய்யலாம்.

8. தக்காளி சேமியா சூப் 

தேவையானவை: தக்காளி - 4, வேக வைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,  சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை வேக வைத்து, தோலுரித்து, மிக்ஸியில் போட்டு சாறு ரெடி செய்யவும். கடாயில் வெண்ணெய் விட்டு சூடானதும்... பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளிச் சாறு, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்க்கவும். அந்தக் கலவையை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் வேக வைத்த சேமியா, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கலந்து  சூடாகப் பரிமாறவும்.
விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்

9. சேமியா புட்டிங்
தேவையானவை: வறுத்த சேமியா - முக்கால் கப், பால் - அரை லிட்டர், மில்க் மெய்ட் - அரை டின், வெனிலா எசன்ஸ், ரோஸ் மில்க் எசன்ஸ் - தலா 3 சொட்டு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
அலங்கரிக்க: முந்திரி, பாதாம், பிஸ்தா (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் வேக வைக்கவும். வெந்ததும் அதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு  கலக்கவும். அந்தக் கலவை கெட்டியானதும், அடுப்பிலிருந்து  இறக்கி, இரண்டு எசன்ஸையும் சேர்த்துக் கலந்து, ஒரு பாத்திரத்தில் விட்டு ஆவியில் 15-20 நிமிடம் வேக விடவும். வாசனை வந்ததும், வெளியே எடுத்து ஆற விடவும். பிறகு, ஒரு தட்டில் கவிழ்த்து வைத்தால் புட்டிங் ரெடி! இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சூடாக்கி அது ப்ரவுன் கலர் ஆனதும், புட்டிங் மேல் பரவலாக விடவும். பிறகு, அதன் மேல் முந்திரி, பாதாம், பிஸ்தா அல்லது ரூட்டி ஃப்ரூட்டி கொண்டு அலங்கரிக்கவும்.
விருப்பப்பட்டால், அலங்கரிக்க, வெனிலா ஐஸ்கிரீம் வைக்கலாம். புட்டிங் மோல்டு இருந்தால் அதைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

 10. சேமியா குல்பி
தேவையானவை: சேமியா - அரை கப், பால் - ஒரு லிட்டர், சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: சேமியாவை வறுத்து, வேக வைத்து ஆற விடவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, கரைத்த சோளமாவைச் சேர்க்கவும். அந்தக் கலவையை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். திரண்டு கெட்டியாக வரும்போது சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எசன்ஸ் சேர்த்து, ஆற விட்டு குல்பி 'மோல்டி’ல் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கவும். குல்பி 'மோல்டு’ இல்லையென்றால், சிறுசிறு கிண்ணங்களில் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அவை நன்கு இறுகி 'செட்’ ஆனதும் வெளியே எடுத்து, தட்டில் வைத்துக் கவிழ்த்து எடுத்தால் குல்பி தயார்.  
விருப்பட்டால் பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.

11. சேமியா பக்கோடா 

தேவையானவை: சேமியா - ஒரு கப், பச்சரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது), இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, தயிர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை எண்ணெய் விட்டு வறுத்து, கைகளால் நொறுக்கி, தயிரில் அரை மணி ஊற விடவும். ஊறியதும், அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி பச்சைமிளகாய், சோம்பு விழுது, வெங்காயம், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிர் உதிராக எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

12.  சேமியா கட்லெட் 

தேவையானவை: வறுத்த சேமியா - அரை கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, கேரட் - ஒன்று, இஞ்சி, பச்சைமிளகாய், புதினா அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து, வேகவைத்த சேமியா, துருவிய கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.  இதற்கு தக்காளி சாஸ் சரியான சைட் டிஷ்!

 13. சேமியா இட்லி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், இட்லி மாவு - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: சேமியாவை வறுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்து ஆறவிடவும். இட்லி மாவில் கேரட், இஞ்சித் துருவல், ஆற வைத்த சேமியா சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவுக் கலவையை தட்டில் விட்டு, ஆவியில் வேகவைத்து எடுக்க புதுச்சுவையில் சேமியா இட்லி தயார்.
இதற்குக் காரச் சட்னி பெஸ்ட் காம்பினேஷன்!

14. சேமியா கொழுக்கட்டை 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிஸ்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பொடிக்க: மிளகு, சீரகம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வறுத்த சேமியாவை கைகளால் நொறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் உப்பு, தேங்காய்த் துருவல், ரவை, வறுத்த சேமியா, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவிட்டு, சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்தால்... சூப்பரான சேமியா கொழுக்கட்டை பரிமாற ரெடி!

15. சேமியா பேர்ட்ஸ் நெஸ்ட் 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - இரண்டு, துருவிய கேரட் - ஒன்று, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேக வைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்ததும், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அதை ஒரு தட்டில் 'பறவைக்கூடு’ போல் பரப்பவும். துருவிய கேரட், வேகவைத்த பச்சைப் பட்டாணி, ஒரு உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்துப் பிசிறி... கூட்டின் மேல் பரவலாகத் தூவி வைக்க கூடு ரெடி!
மீதமுள்ள உருளைக்கிழங்கில் பாதியை எடுத்து சிறு சிறு முட்டைகள் போல் உருட்டி கூட்டின் நடுவில் வைக்கவும். எஞ்சியுள்ள உருளைக்கிழங்கை எடுத்து பறவைபோல் செய்து நடுவில் வைத்து புதினா, கொத்தமல்லி தூவினால்... 'பேர்ட்ஸ் நெஸ்ட்’ தயார்.
பார்க்கவே வித்தியாசமாக இருப்பதால் இதனை குழந்தைகள் ஆசையுடன் சாப்பிடுவார்கள்.


16. சேமியா பொங்கல்
தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய்யில் முந்திரி, சேமியாவை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த சேமியா மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வேக விடவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும்... கறிவேப்பிலை, மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். அதனுடன், வேக வைத்த சேமியா, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சீராகக் கலக்கவும். பிறகு, நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி பரிமாறவும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி கலக்கல் காம்பினேஷன்!

 17. சேமியா - மாம்பழ கீர் 

தேவையானவை: வறுத்த சேமியா - கால் கப், மாம்பழம் - ஒன்று, பால் - அரை லிட்டர், சர்க்கரை - கால் கப்.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் நன்கு வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பால் - சேமியாக் கலவையை ஆற வைத்து, அரைத்த மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்கி, நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே போட்டு, 'ஜில்ஜில்’ என்று பரிமாறவும்.
விருந்தினர்களையும் குழந்தைகளையும் அசத்தும் அட்டகாசமான கீர் இது!

18.  சேமியா தோசை 

தேவையானவை: இட்லி மாவு - 2 கப், வேக வைத்த சேமியா - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி மாவுடன் வேக வைத்த சேமியா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலக் கவும். தோசைக்கல் சூடான தும் எண்ணெய் விட்டு தோசை வார்த்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
புளித்துப் போகும் இட்லி மாவிலும் இதனை செய்யலாம்.  அனைத்து வகை சட்னியு டனும் பரிமாறலாம்.

 19/. சேமியா பனீர் க்ரிஸ்பி பால்ஸ் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், பனீர் - 100 கிராம், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரைத் துருவி, அதனுடன் வேக வைத்த சேமியா, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு சோள மாவு சேர்த்து, கையில் உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும். எளிதில் செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் இது.


20. சேமியா - சோயா க்ரேவி 

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, வேக வைத்த சேமியா - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (அரைத்துக் கொள்ளவும்), வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொதிநீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் வைத்து, பிறகு அவற்றை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த தக்காளி, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி தண்ணீர் விட்டு சூடாக்கவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் சோயா உருண்டை, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வேகவைத்த சேமியா, புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது, பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்!

21.  சேமியா மஞ்சூரியன் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒரு கப், வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒன்று, மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது), குட மிளகாய் - ஒன்று, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த சேமியாவுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பாதியளவு சோள மாவு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, மீதமுள்ள சோள மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு... பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, சோயா சாஸ், நறுக்கிய குட மிளகாய் சேர்த்துக் கலந்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

 22. சேமியா பான் கேக் 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், தண்ணீர் - கால் கப், முட்டை - 2, தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.
அலங்கரிக்க: பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டு, அதனை நுரை வரும் அளவுக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் தேன், 'பேகிங் பவுடர்’, வேக வைத்த சேமியா, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் 'தவா’வினை வைத்து சூடானதும், நெய் விடவும். பிறகு மாவை தோசை போல் வார்த்து, திருப்பிப் போடாமல் சுடவும். அதன் மேல் பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி அல்லது டூட்டி ஃப்ரூட்டி தூவி... ரோல் போல் சுருட்டிப் பரிமாறவும்.

23.  சேமியா - ரவை குழிப்பணியாரம் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துண்டுகள் (பொடியாக நறுக்கி, வறுத்தது) - கால் கப்.
செய்முறை: சேமியாவை அரைமணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரைத்து வடி கட்டவும். ஊற வைத்த சேமியா, வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், ரவை, பிசைந்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள் சேர்த்து பணியார மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும். குழிப்பணி யாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் விட்டு, மாவை ஒரு ஸ்பூனில் அளவாக ஒவ்வொரு குழியிலும் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

24.  சேமியா ஆம்லெட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், முட்டை - 2, வெங்காயம், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு நுரை வருமளவு நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் துருவல், வேகவைத்த சேமியா, நறுக்கிய கொத் தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு இதனை வார்த்து, மிளகுத் தூள் தூவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

 25. சேமியா - ஓட்ஸ் - கீரை அடை 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், ஓட்ஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய், சோம்பு அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், கீரை நறுக்கியது - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியா, ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியே அரைமணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் இரண்டையும் ஒன்றாக்கி, எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். சூடான தோசைக்கல்லில் மாவை கொஞ்சம் தடிமனாக வார்த்து, இருபுறமும் எண் ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதற்கு, காரச் சட்னி கரெக்ட் காம்பினேஷன்!

26.  சேமியா ஃப்ரூட் சாலட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - 4 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை (கலந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பப்பாளி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ஆப்பிள் - ஒன்று (நறுக்கியது), வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பழங்கள் அனைத்தையும் போடவும். வேக வைத்த சேமியாவை அவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும். அதன் மீது தேன் விட்டு, ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும்.


27.  சாக்லெட் சேமியா 

தேவையானவை: பால் - 800 மி.லி, சாக்லெட் - 75 கிராம், சேமியா - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலை காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேக விடவும். மீதி பாலில், 'சாக்லெட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது, சாக்லெட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா - பால் கலவையுடன் சேர்த்து... பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா தயார்!
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 28. சேமியா அடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, கேரட் (துருவியது) - ஒன்று, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை, ஒரு மணி நேரம் தயிரில் ஊற விடவும். ஒன்றரை மணி நேரம் கழித்து அதனுடன் இஞ்சித் துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தவாவில் மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
அனைத்துவிதமான சட்னி யுடனும் சாப்பிடலாம்.

29.  சேமியா வாங்கி பாத் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒன்றரை கப், பிஞ்சுக் கத்திரிக்காய் - 8, வெங்காயம் - 2, புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சிவப்பு மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, அது சூடான தும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கிய பிறகு,  பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசல், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்த சேமியா சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நன்றி - அவள் விகடன்

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் தோறும் நினைப்பது நடக்கும்..(ஆன்மீகம்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpjZKyvlYdSSSIcWlLyx_oBIwpymh0eYSBqMAGzdj3_Zx9hmtrzoBoN_22WE_f_mM3s622uw2QHA-mtmvWI33tuv87PrVhdNa9mJlsW7_i0g9DCbVd_tbWJpZmwHpvFlUDs1KNil82-eyC/s1600/zzzzz.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!


சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், குழந்தைகள் 50, 60 மார்க்குகள் வாங்கினாலே ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள், பெற்றோர்கள். ''அடடா..! எம் புள்ள என்னமா மார்க் வாங்கி, பாஸாகியிருக்கான் பாருங்க!'' என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்து, குழந்தையை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

ஆனால், இன்றைய காலமே வேறு! '60 மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா’ என்று அந்தக் குழந்தையை அவர்களின் வீட்டாரே இளக்காரமாகப் பார்க்கின்றனர். ''இப்படியெல்லாம் மார்க் எடுத்தா, எப்படி டாக்டராகிறது, எப்படி இன்ஜினீயர் ஆகுறது?'' என்று அலுத்துக்கொள்கின்றனர். 
அட... 90 மார்க்கே அந்தக் குழந்தை வாங்கியிருந்தாலும், ''ஏன், என்னாச்சு? பத்து மார்க் எதுல போச்சு? எங்கே கோட்டைவிட்டே? சரியா படிக்கலியா?'' என்கிற கேள்விகள்தான் பெற்றோர்களிடம் இருந்து வருகின்றன. கால மாற்றங்கள், போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்றாகிவிட்ட உலகம்தான் இன்றைய நிலை.
மனனம் செய்கிற திறனும், எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்கிற கூர்மையும் குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியும். அப்படியான திறமையும் புத்திக்கூர்மையும் இருக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துரைக்கவேண்டும்; பகவத்கீதையையும் ராமாயணத்தையும் விவரிக்க வேண்டும். அந்தக் கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால், செய்பவர்தான் மிகமிகக் குறைவு!

சரி... பகவத்கீதை படிப்பதற்கும், பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg
நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறபோது அல்லது டி.வி-யில் கார்ட்டூனைக் காட்டி இட்லியைப் புகட்டுகிறபோது, ''இதுதான் பகவானின் திருநாமம். இதையும் கடந்து கடவுளுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பகவத்கீதையில் இரண்டெழுத்தில் உள்ள திருநாமம், மூன்றெழுத்தில் உள்ள திருநாமம், நான்கெழுத்து திருநாமம் என்று எத்தனை உள்ளன தெரியுமா? பகவத்கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து, ஒரே திருநாமம் இரண்டு முறை வந்திருக்கிறது; 

அந்தத் திருநாமம் இதுதான்...'' என்றெல்லாம் குழந்தைகளுக்கு ஆன்மிகத்தையும் கொஞ்சம் ஊட்டலாமே! அப்படி ஊட்டினால், அந்தக் குழந்தை, பக்தி மார்க்கத்தை அறிந்து, சாஸ்திர- சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிற, எதிலும் ஓர் ஒழுங்கைக் கொண்டிருக்கிற அற்புதமான மனிதனாக வருவது உறுதி.

அதுமட்டுமா? பகவானின் திருநாமங்களையும், அந்தத் திருநாமங்களுக்கான காரணங்களையும், ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து... என இருக்கிற திருநாமங்களையும் அந்தக் குழந்தைகள் மிக அழகாக புத்தியில் ஏற்றிக்கொள்ளும். இப்படியாக... நாம் சொல்கிற விஷயங் களையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிற, கிரகித்துக்கொள்கிற திறனானது சிறு வயதிலேயே வந்துவிட்டால், எல்.கே.ஜி படிப்பதில் துவங்கி, 6-வது, 7-வது படிக்கும்போது அந்தத் திறன் இன்னும் அதிகமாகி, பள்ளியிறுதிப் படிப்பில் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு, கல்லூரிப் படிப்பை மிகச் சுலபமாக எட்டுவார்கள். 

அப்போது, விரும்பிய படிப்பைக் கல்லூரியில் தொடர்வதற்கு அதிக மதிப்பெண்களை எடுக்கிற புத்திக்கூர்மையும், ஞாபக சக்தியும், மனனம் செய்து உள்ளே உருவேற்றிக் கொள்கிற சாதுர்யமும் மூளையின் எல்லா மூலைகளிலும் பரவி, வியாபித்திருக்கும். ஆகவே, வீட்டில் குழந்தைகளிடத்தில், புராண- இதிகாச- காப்பிய- காவியங்களை சொல்லிக் கொடுங்கள்; அறிவும் மேம்படும்; ஆன்மிகமும் தழைக்கும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirODR_g94lSbIP0nmW562abtV0fkXwPyV0O96JGFTCOia3vLi1OKZ-XTEEjMNXL3MnBNKaVr62cEqjdxdukgFOjCl39IFj9o55KtL4cW9GcPN7aUJqFW1sasVhze3hj7hbHn5MOG6GPIs/s1600/1192radhakrishnab&w.jpg

பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரே திருநாமம், இரண்டு முறை வந்திருக்கிறது என்று சொன்னேன். அந்தச் சிறப்புக்கு உரிய திருநாமம் என்ன தெரியுமா? வசுப்ரதஹா!

இந்தத் திருநாமத்தின் அருமை- பெருமையைப் பார்ப்பதற்கு முன்பு, பகவானின் திருமேனியை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இதுவும், இன்றைய குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டிய ஒன்றுதான்!

ஜோதிமயமானவன் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்த்தோம், அல்லவா! பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி... அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், 'நன்பொன்’ என்று பாடுகிறார். 'மாசறு பொன்னே...’ என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!

'உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; 'உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது. 

இறுதியாக, 'சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்...  'இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப... சட்டென்று, 'சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். 'அடடா... பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’ என்று பாடி முடித்து, வணங்குகிறார்.

இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம் கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!

இப்படித்தான் பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். 'என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க... 'முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றாராம் பராசரர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwEBdYyJBnojIM5MS5DwwgNhkHmr3J6cjEkdvLR3X67t8OH6dFeD_r7kY999mxAn8HjLPzXnbd-BwkK79rwAGrUAJxBrKf8KbIj2_hksiijBtqoGnTzYqkgQdfLdNAmb7yHP5baMXy3XA/s1600/Lord_Krishna_1.jpg

'அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். ''மன்னிக்கவும் ரங்கா! உன்னை என்னால் பாட முடியாது!'' என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!

பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் 'பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

''என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!'' என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, ''அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!'' என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.

http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg

என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.

முடிந்தால்... இதையும் உங்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், பகவான் எப்போதுமே நம்மைவிட குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கமானவன்!

நன்றி - சக்தி விகடன்

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - கொஞ்சி மகிழ ,நெஞ்சம் நெகிழ - சினிமா விமர்சனம்

-- http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/wallpaper/800-600/deiva-thirumagan-download-wallpapers-048.jpgஇந்த உலகில் உள்ள மனிதர்களில் நல்லவனோ,கெட்டவனோ,இரண்டும் கலந்த சராசரியோ  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்.ஆனால் அது எல்லா நேரங்களிலும் வெளிப்பட்டுவிடாது.தன் மீது அன்பு கொண்ட உள்ளம் அருகில் இருந்தாலோ,தான் மிக அன்பு வைத்த இதயம் பக்கத்தில் இருந்தாலோதான் வெளிப்படும்.ஆனால் இந்தப்படம் பார்க்கும்போது யாரும் அருகில் இல்லாமலேயே உங்கள் குழந்தைத்தனம் கண்ணீராக உங்கள் விழி வழியே வெளிப்படும்...

மனநலம் குன்றிய தந்தை ஒரு குழந்தையை வளர்த்த முடியுமா?தாய் இல்லா அந்த குழந்தையை அவன் பராமரிக்க சட்டத்தில் இடம் இருக்கா? இது தான் படத்தின் மையக்கரு.. (I AM SAM பட தழுவல்)

சிப்பிக்குள் முத்து கமல் நடிப்பைப்பார்த்து பிரமித்தவர்கள் எல்லாருமே  சொன்ன ஒரு கருத்து இது போல் ஒருவர் நடிக்க இனி பிறக்க வேண்டும் என்பதே.. விக்ரம் ஏற்கனவே பிறந்து விட்டதை அறியாமல்.... 

பாடிலேங்குவேஜ்ஜிலும் சரி, ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸனிலும் சரி விக்ரம் தன் அடுத்த தளத்துக்கு போய் விட்டார் என்று தாராளமாக சொல்லலாம்.. காசி ,,அந்நியன் படத்தை விட இந்தப்படத்தில் அவருக்கு ஹெவி ஒர்க். மனிதர் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார்...

வக்கீலாக வரும் அனுஷ்கா விதி படத்தில் வரும் சுஜாதா அளவு கம்பீரம் காட்ட முடியாததற்குக்காரணம் அவர் முகத்தில் தொட்டுத்தெறிக்கும் இளமை +அழகு.. முடிஞ்ச வரை சமாளிக்கிறார்..

விக்ரமின் குழந்தைக்கு சித்தியாக வரும் அமலாபால் பண்பட்ட நடிப்பு.. ஓப்பனிங்க்கில் அவர் தான் தான் பள்ளியின் கரெஸ்பாண்டண்ட் என்பதை மறைத்து குழந்தையிடம் பழகுவதிலும்,பின் கண்ணீர் விடுவதிலும் ஈசியாக டேக் ஆஃப் ஆகிறது அவர் நடிப்பு.

அந்தக்குழந்தை..... பொதுவாக சினிமாவில் வரும் குழந்தை நட்சத்திரங்கள் ஓவர் புத்திசாலித்தனத்துடன், வரம்பு மீறிப்பேசும் இயல்பு கொண்டதாக படைக்கப்படும். (உதா - பேபி ஷாலினி )ஆனால் இந்த பேபி கனகச்சித நடிப்பு.. பல காட்சிகளீல் விக்ரம்க்கு இணையான துடிப்பு.. வெல்டன் பேபி..

ஒளிப்பதிவும் ,இசையும் இந்த மாதிரி சாஃப்ட் ஸ்டோரிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயக்குநர் மிகச்சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.. 

ரொம்ப சோகமாக தாக்கக்கூடாது என்பதற்க்காக சந்தானம், எம் எஸ் பாஸ்கர்.. லைட்டா காமெடி....


http://mimg.sulekha.com/tamil/deiva-thirumagan/stills/deiva-thirumagan-images-099.jpg
படத்தில் வசனகர்த்தா  நினைவில் நின்ற இடங்கள்


1. வக்கீல் சார். ஒரு கொலைக்கேஸ்... 

சந்தானம் - எத்தனை கொலை செஞ்சே நீ?


ஒரே ஒரு கொலைதான். எனக்காக வாதாடி தோத்துப்போன என் வக்கீலை.. 

சந்தானம் - அய்யோ ,சாரி. ஐ ஆம் நாட் எ லாயர்.. டீக்கடை நாயர்.


2.  சந்தானம் - ஹலோ,அனுவா. ஒரு கேஸ் சிக்கிடுச்சு. கம் குயிக்... 

நான் கோர்ட்ல இருக்கேனே?

வாதாடிட்டா இருக்கே? வாதாடறவன் வாயைத்தானே பார்த்துட்டு இருக்கே?

3. சந்தானம் - சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல..


4. சந்தானம் - இது ரொம்ப அவசரமான கேஸ்.. இன்று மத்தியானத்துக்குள்ள டைவர்ஸ் வேணூம்.

5. சந்தானம் - ஹூம், ஒழுங்கா படிக்காததனால கண்ட பொண்ணுங்களூக்கெல்லாம் ஜூனியரா வேலை பார்க்கவேண்டி இருக்கு. 

6. சந்தானம் -இது கோர்ட்டா? இல்லை,மெண்ட்டல் ஹாஸ்பிடலா?ஒரே லூஸா சுத்திட்டு இருக்குதுங்களே?


7. குழந்தை அழுதுட்டு இருக்கே. நீ என்ன பண்ணீட்டு இருக்கே?

ம் ம் .. என்ன பண்னனும்?

3 மணி நேரத்துக்கு ஒருக்கா பால் தரணும்.. 

8.  அய்.. பாப்பா. இனிமே இதை யார் பாப்பா? ( பார்த்துக்குவா?-MAINTAIN)

9.ஒவ்வொரு சாக்லேட் பேக்லயும் ஒரு கிலோவுக்கு 50 கிராம் குறையுது எப்படி?

ம் . ம் அது வந்து ஊட்டி வெய்யில்லுக்கு உருகி இருக்கும். 

10. அண்ணே.. சம்பவம் நடக்கறப்ப்ப சம்பந்தப்பட்ட 2 பேருல யாரோ ஒருத்தருக்கு விபரம் தெரிஞ்சா போதாது.?

11. என்னது? உன் குழந்தை உன்னை அப்பான்னு சொல்லுதா?இப்போ என்ன அமிதாப்பச்சன்னா சொல்லிச்சு..?எந்தக்குழந்தையும் புதுசில அம்மா,அத்தைன்னு தான் சொல்லும். 

12. அப்பா. அம்மா எங்கே?

சாமிக்கிட்டே..

ஏன்?சாமிக்கு அம்மா இல்லையா?

நல்லவங்களை சாமி தன் கூடவே வெச்சுக்கும்.

அப்போ நாம நல்லவங்க இல்லையாப்பா?

13. அப்பா./ யானை ஏன்பா பெரிசா இருக்கு?

நிறைய தீனி சாப்பிடுதே?

சூரியன் ஏன் ரொம்ப தொலைவில இருக்கு?

அது ரொம்ப ஹைட்டான இடத்துல இருக்கே?

14. நீ படிச்சுப்பெரிய பொண்னா ஆனா டாக்டர் ஆகனும். 

நான் ஏன் டாக்டர் ஆகனும்?

டாக்டர் ஆனாத்தான் அப்பாவை நல்லபடியா பார்த்துக்க முடியும். 

ஏன்? டாக்டர் ஆகலைன்னா அப்பாவை பார்த்துக்க முடியாதா?

15. கரஸ்பாண்டண்ட்னா என்ன?

ம். பெரிய மிஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBk8WNhGKLwsFy3uQO3ncYJzR1azm3N5e4aMMuS9JWaxJlu6_i4FgbHpOaeJlA-zywIV7UNiGrsD9_VLdXiqG_8XIGIez8oPfkI_iiE_0TpNQ4ktftvImYfDeAo0c9l-cQ_OgxeTqaGnfz/s640/Amala+Paul.jpg

16. ரம்யா மிஸ் சின்ன டைனோசர். கரஸ்பாண்டண்ட் பெரிய டைனோசர்


17. அப்பா. நீயும் அம்மா மாதிரியே என்னை விட்டுட்டுப்போயிடுவியாப்பா?


18. அப்பா. இனிமே என்னைக்காணோம்னா அந்த நிலா கிட்டே சொல்லிடு.. அந்த நிலா என் கிட்டே சொல்லிடும். 

19. அப்பா. உனக்கு கதை சொல்லத்தெரியுமா?

நிறைய தெரியும். ஆனா நாளைக்கு சொல்றேன். ஹி ஹி

20.சந்தானம் - இந்தக்காலத்துல பொண்ணூங்க எல்லாம் எங்கேடா அறிவைப்பார்க்கறாங்க? இவனை மாதிரி ஒருத்தன் சிக்குனாப்போதும்னு தானே பார்க்கறாங்க. 

21. நிலா எப்போ வரும்?( விக்ரம் குழந்தையின் பெயர் நிலா)

சந்தானம் - ம் அமாவசைக்கு அடுத்த நாள்

22. எங்கே என் சம்சாரத்தை காணோம்?

யோவ்.. இப்போத்தானே 2 பேரும் போனாங்க? அதுக்குள்ள வர முடியுமா?

23.மன நல வளர்ச்சி குறைஞ்சவங்க கிட்டே குழந்தை வளரலாம்னு எந்த சட்டமும் இல்ல. 

24. மணி என்ன? நிலா எப்போ வருவா?

சந்தானம் - சொன்னா மட்டும் புரிஞ்சிடப்போகுதா?நிலாவுல கால் வெச்ச நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் கூட இத்தனை தடவை நிலா பேரை சொல்லி இருக்க மாட்டான். 

25. சந்தானம் -ஏய். அனு. கோர்ட்ல நீ அடுக்கடுக்கா சொன்ன பொய்யைப்பார்த்து எனக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

26. அனுவை விட்டு என்னால இப்போதைக்கு வர முடியாது. 

ஏன்? அவ கிட்டே அவ்வளவு அட்டாச்மெண்ட்டா?
இல்லை. 5 மாச சம்பள பாக்கி.. 

27. சந்தானம் - இவரு பெரிய மியூசிக் டைரக்டரு. கையை ஆட்டாம பேச மாட்டாரு. 

28. வக்கீல் கிட்டேயும் ,டாக்டர் கிட்டேயும்  பொய் சொல்லக்கூடாது,ஆனா வக்கீலும் டாக்டரும் தாராளமா பொய் சொல்லலாம்.


29. அட.. 2 தடவை கேட்டதுக்கே இவ்வளவு டென்ஷனா?

2000 தடவை அவன் நிலான்னு சொன்னதை கேட்டுட்டோம்.. 


30. மன வளர்ச்சி குன்றியவங்க கூட பழகறவங்க எல்லாரும் மன வளர்ச்சி குன்றியவங்கன்னு சொல்லிட முடியுமா யுவர் ஆனர்?

31. அமலா பால் - என் அக்காதான் எனக்கு அம்மாவா இருந்தாங்க.. சோ அவ குழந்தைக்கு நான் அம்மாவா இருக்க ஆசைப்படறேன்.. நீ என் கூட கடைசி வரை இருப்பியோ இல்லையோ தெரில. ஆனா நான் அவ குழந்தை கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்படறேன்

32. நீ அவரை சீரியஸா எடுத்துக்காதே.. அவர் வராத மழைக்கு வானிலை அறிக்கை சொல்லிட்டு இருப்பாரு..

33. நல்லவங்களூக்கு நிறைய சோதனை வரும்,ஆனா ஜெயிச்சுடுவாங்க.. 

34. அப்பா எங்கே?

அவருக்கு உடம்பு சரி இல்லை.. 

பொய்.. 

இப்போ எதுக்கு அப்பாவை கேட்கறே? ஏன்? நாங்க இல்லை?

ஏன்? நீ உங்கப்பா கூட இருக்கறப்ப நான் என் அப்பா கூட இருக்கக்கூடாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7fXa6aut_X2cyzwzUkcf4CVzsuzloEsi5g0R4WKW2r6opIkWRL08ySHx-NQKgDF2ILjoHLyWpQ0nMGwLiF15EQQa2woT27pVjSRZ5VRM6SLZoYdibeuc0vnB8ofjGgl6hWq3m-mlbna0/s1600/amala_paul+%25284%2529.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கதையின் போக்கு உணர்ந்து அப்பா மகள் பாசத்துக்கு மட்டும் ஏற்றாற்போல திரைக்கதை அமைத்தது. தேவை அற்ற காமெடி,ஃபைட்,  தவிர்த்தது

2. அமலாபால், அனுஷ்கா,பேபி,விக்ரம் 4 பேரிடமும் மேக்சிமம் நடிப்பை வாங்கியது..

3. விக்ரம்-அனுஷ்கா பாடல் காட்சியில் மழையில் இருவரும் சென்றாலும் இருவர் மட்டும் நனையாத மாதிரி (காதலில் நனைபவர்களூக்கு எதுவும் தெரியாது என்ற கற்பனை) காட்டியது..

4. ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஆகி இருக்கக்கூடிய கதையை ஜாக்கிரதையாக கையாண்டு ஜனரஞ்சகப்படம் ஆக்கியது.

5. ஒளீப்பதிவு,இசை,எடிட்டிங்க் அனைத்தும் கன கச்சிதமாய் கவனித்துக்கொண்டது..

http://www.filmics.com/tamil/images/stories/news/July_2011/14.07.11/Deiva-Thirumagal-Review.png

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்டில் விக்ரம் பிக்பாக்கெட்டிடம் பணத்தைப்பறி கொடுப்பதும் தப்பும் திருடன் காலில் அடிப்பட்டதும் விக்ரம் அவனுக்கு கை குடுப்பதும் நந்தலாலாவை நினைவு படுத்துகிறதே?

2. மனநலம் குன்றிய ஒருவன் அப்பப்ப டைமிங்க் ஜோக் அடிக்க முடியுமா?உதாரணமா அடிக்கடி பாஸ்கர் மேலே சொல்லு என்றதும் விக்ரம் அப்போ என்ன பேசுனாரோ அதை ரிப்பீட்டாய் வானம் பார்த்து சொல்லிட்டு மேலே சொல்லிட்டேன் என்பது..

3. கைக்குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாண்டால் கொல்லாத்து விழுந்துடும்னு சொல்வாங்களே? அதை இயக்குநர் கவனத்தில் கொள்ளவில்லையா?அடிக்கடி குழந்தையை அப்படி தூக்கிப்போட்டு விளையாடறாங்களே?

4. கேமிரா கோணமும் சரி.. விக்ரம்-இன் பாடி லேங்குவேஜ்ஜும் சரி பல இடங்களீல் சிப்பிக்குள் முத்து கமல் நினைவுபடுத்துதே? தவிர்த்திருக்கலாமே?

5. க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் ஜட்ஜாக நடித்தவர் செயற்கை நடிப்பு.. வேறு ஆளை போட்டிருக்கலாம்.. 

6. இடைவேளைக்குப்பிறகு வரும் அந்த ஹோட்டல் காமெடி காட்சிகள் நீளம்.. எடிட் செய்து இருக்கலாம்.. கதையின் போக்கை மாற்றி விடும் அபாயம்.. 


 தமிழ்ப்பட உலகில் நல்ல படங்களின் ரசிகர்களூக்கு இது ஒரு முக்கியமான படம்.. குழந்தைப்பாசம் உள்ளவர்கள் அனைவரும் காணவேண்டிய படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம்..

http://www.newsonweb.com/newsimages/July2011/586b86bd-e6c6-498f-b0a9-9423a77d85a11.jpg

ஏ செண்ட்டர்களீல் 50 நாட்கள், பி  செண்ட்டர்களீல் 30 நாட்கள், சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

சி.பி கமெண்ட் - கிளாசிக் மூவி

 ஈரோட்டில் தேவி அபிராமி,சண்டிகா,கிருஷ்ணா,ராயல் -ல் படம் ஓடுது.. நான்

சண்டிகாவில் படம் பார்த்தேன்..

டியர்,உங்களுக்குப்பிடிச்ச நொறுக்குத்தீனி பொரிகடலையா? ஏன்?


1."சன் டிவி' கலாநிதி ஓட்டம் : போலீசில் ஆஜராகவில்லை#இனி கலா நிதி காலாவதி தானா?சன் டி வி ரன்னிடுமா? நின்னுடுமா?டவுட்டு


----------------------------

2. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் அடுத்த ஆண்டு நடத்த முதல்வர் ஜெ ஒப்புதல்#வெறும் செஸ் போட்டி மட்டும் தானா? நித்யானந்தா வருத்தம்

--------------------------

3.  காஜல்அகர்வாலை ஹீரோயினாக போடுவதற்கு பதிலாக புதுமுக நடிகை யாரையாவது போடலாம்- அபிஷேக் பச்சன் #இவ்வளவு ஓப்பனா பேசறீங்களே!ஐஸ்க்கு கோபம் நோ?

------------------

4. உலகில் அனைவரும் நல்லவர்கள்,அன்பானவர்களே!நீங்கள் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்!

--------------------

5. அப்பா,சாரி,எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு,உங்களை கூப்பிடாம விட்டுட்டேன். 

சரி விடம்மா, நெக்ஸ்ட் மேரேஜ்க்காவது மறக்காம கூப்பிடு#ஃபாரீன் லவ்

-------------------




6. பொண்ணுங்க பசங்ககிட்டே 1% வாங்குனா 10% ரிட்டர்ன் தருவாங்க அன்பை.ஆனா பசங்க பொண்ணுங்ககிட்டே 10% வாங்குனா 1% தான் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்# உஷார்

------------------------

7. நீ கொடுத்தால் தான் நானும் கொடுப்பேன் என்பது வியாபாரம்,நீ கொடுத்தாலும் ,கொடுக்காவிட்டாலும் நான் கொடுப்பேன் என்பதே அன்பு

-----------------------

8. முன்னேற்றத்தின் முகவரி நீயாக இருந்தால் இனி வந்து கொண்டே இருக்கும் வெற்றி எனும் கடிதம்

---------------------

9. கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்கத்தவறி விட்டால் ,கண்ணுக்குத்தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை

-------------------

10. பால் இருக்கும் இடம் தேடி உதடுகள் சென்றால் அது முதல் இரவு.உதடு இருக்கும் இடம் தேடி பால் வந்தால் அது கடைசி இரவு

-------------------




11. நாமளா மில்க்கை ட்ரிங்க்குனா அது ஃபர்ஸ்ட் நைட்டு,நமக்கு யாராவது பால் ஊத்துனா அது லாஸ்ட் நைட்டு#ரீ மேக் & ரீ மிக்ஸ் ட்வீட்

------------------


12. 5,14,23,8,17,26 ஆகிய தேதிகளில் திருமணம் செய்தால் சச்சரவு,விபத்து,டைவர்ஸ் தானாம்#இதையே சாக்கா வெச்சு கழட்டி விடறதுக்கு டோண்ட்யூஸ்
--------------------

13.  சன் டிவி எனக்கு மான நஷ்ட தொகை தரனும்னு சாமியார் கேட்கறாரே? மானம் இருக்கறவங்க தானே கேட்க முடியும்? இவரு எப்படி கேப்பாரு?
-------------------

14. நடிகை நயன் தாரா ஒரு படத்துல சீதையா நடிச்சாங்களாம். 
அதுக்காக சிம்புவை ராமர் நெம்பர் 1 , பிரபுதேவாவை ராமர் நெம்பர் 2 அப்டின்னு கூப்பிடறதா?
--------------------

15. அந்தாளு சரியான டுபாக்கூர்னு எப்படி சொல்றே?

ரஜினி நடிச்ச ராணா பட டிவிடி இருக்குன்னாரே?

----------------





16.  மியூசிக் காலேஜ்ல தமனாவுக்குப்பிடிக்காத ராகம் எதுன்னு கஷ்டமான கேள்வி கேட்டாங்களாமே?

இது செம ஈஸி கேள்வி, சிவ (ரஞ்சனி ) ராகம் தான்

------------------


17. டியர்,உங்க லக்கி நெம்பர் எது?ன்னு கேட்டா 9842713441 அப்டினு செல்நெம்பர் சொல்றீங்க?

ஆமா,அந்த நெம்பருக்குத்தானே உன் மெசேஜ் எல்லாம் வருது?

---------------


18. மேடம்,ஏன் ஸ்விம்மிங்க் டிரஸ்ல அடிக்கடி நடிக்கறீங்க?

வாழ்க்கைங்கறது ஒரு எதிர் நீச்சல்னு ரசிகர்களூக்கு சிம்பாலிக்கா உணர்த்தறேன்

-----------------


19.  டியர்,உங்களுக்குப்பிடிச்ச நொறுக்குத்தீனி பொரிகடலையா? ஏன்?

ஹி ஹி ,சின்ன வயசுல இருந்தே கடலை போடறதுல செம இண்ட்ரஸ்ட் #விடலை சுடலை வித் கடலை

-------------


20. அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டரேட் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டர்#ஏன் இப்டிப்பண்றீங்க?ன்னு போலீஸ் பிச்சை எடுத்திருக்குமே?

-----------


பாழாப்போன பவர் ஸ்டார் பேட்டி -காமெடி கும்மி

http://hothotbuzz.com/wp-content/gallery/ileana/lrg-8082-illiana-029.jpg

பாலா பதறணும்... அமீர் அலறணும்!

படபடக்கிறார் பவர் ஸ்டார்


வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்!


சி.பி - பவர் கூட ஓக்கே... ஸ்டாரா ?எங்கே? எங்கே?

'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில்  அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்!

சி.பி -கோடம்பாக்கம் மட்டுமா? மடிப்பாக்கம்,ஆதம்பாக்கம்,மீனம்ப்பாக்கம்,அக்கம் பக்கம் எல்லாப்பக்கமும் தான்....

அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது.

 சி.பி - இவரே பஞ்சர் ஆன பப்பாளி மாதிரி தான் இருக்காரு.. இவரோட அக்காவும் பஞ்சரா? ஓ. சாரி. அக்கு பஞ்சரா?

''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்டாரின் உதவியாளரையே சந்திக்க முடிகிறது. விசிட்டிங் கார்டு உள்ளே போக, அலறி அடித்து வெளியே வருகிறார் பவர்.


''எத்தனையோ பேர் என்னை வாழ்த்த வந்தாங்க சார். ஆனா, நீங்க நேர்ல வந்து வாழ்த்துவீங்கன்னு நினைக்கலை. இது போதும் சார் எனக்கு!'' என ஏதேதோ சொல்லி உருகத் தொடங்கிவிட்டார்.

சி.பி - வாழ்த்த வந்தாங்களா?  உதைக்க வந்தாங்களா? ராஸ்கல்ஸ்.



''சார், நாங்க ஜாலியா ஒரு பேட்டி எடுக்கத்தான் வந்தோம்!'' எனச் சொல்ல, ''அப்படியா?'' என 'மாயி’ பட மாமனார் கணக்காக இழுவைபோட்டு, ''என்னோட 'லத்திகா’ 100 நாட்கள் தாண்டி ஓடியதை வாழ்த்தத்தான் வந்திருக்கீங்களோனு நினைச்சிட்டேன்!'' என்கிறார் அசடுவழிய.

சி.பி - நீங்க அப்படி டைட்டில் வெச்சதுக்காகவே ஒரு லேடி போலீஸ் ஆஃபீசர் சூசயிடு அட்டெம்ப்ட்ட்டாமே?


''டாக்டர் சீனிவாசனும் பவர் ஸ்டார் சீனிவாசனும் சந்தித்தால்?'' என பேட்டியின் ஐடியா சொன்னதும், ''ஹாஸ்பிடலில் இருந்து கோட் எடுத்துட்டு வாங்கப்பா... அப்படியே என்னோட விக்கும்!'' எனக் கட்டளைகள் பறக்கின்றன.
'ரெடி ஸ்டார்ட்’ சொல்ல... சந்திப்பு களைகட்டுகிறது.

சி. பி - டாக்டரா? ஐ ஜாலி . கூட நர்ஸூம் இருப்பாங்க தானே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdRHvrcBOL5NlIEJOQZ0Ey53sL8L_ajuOQaaJk66ZF2HBXj7JsG_qPWFjUmZaqouZ_Jhuk29pXfyJZQifdNqe8T6U7lKHRtH30IssK0qbVFfjq_0XsshSIYwzwAa027qTke37_Hv-AeMs/s1600/ileana+hot+photos+(3).jpg


1. டாக்டர்: ''ஒரு டாக்டரா மக்கள் சேவை பண்ண வந்துட்டு, சினிமா பக்கம் போய் ஜிங்கிலி ஆட்டம் போடுறது நியாயம்தானா?''


பவர்: ''டாக்டரா மக்கள் சேவை பண்ணிக்கிட்டு இருந்தா, இந்நேரம் இத்தனை பத்திரிகைகள்ல மின்னி இருக்க முடியுமா? ஈரோட்டுக்குப் போனாக்கூட, 'ஏய்! நம்ம பவர் ஸ்டார்’னு எட்டி எட்டிப் பார்க்குறானுங்க. இந்த அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்குமா? லத்திகாவோட 100-வது நாளுக்கு எத்தனை பேர் வாழ்த்தினாங்க தெரியுமா? என்னதான் மருத்துவ உலகத்தில் மகத்துவங்களைப் படைச்சாலும், இந்த பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதே!''

சி.பி - இங்கே பாருங்கய்யா. ஒரு பன்னிக்குட்டி பப்ளிசிட்டி பற்றி பேசுது. (ராம்சாமி மன்னிக்க)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.பத்தாததுக்கு ஈரோட்டுப்பேரையும் இழுத்து விடுது. 


2. டாக்டர்: ''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... 'லத்திகா’ 100 நாள் ஓடுச்சா? இல்லே, ஓட வெச்சீங்களா?''


பவர்: ''இதில் மறைக்க என்ன இருக்கு? தானா ஓடுச்சுன்னு சொல்றதைவிட, நானா ஓட்டினேன்னு சொல்றதுலதான் எனக்கும் பெருமை.

 சி.பி - அட எருமை.. இதுல என்ன பெருமை?

இன்னிக்கு படம் எடுக்கிறது சுலபம்.


 சி.பி - அதைப்பார்க்கறதுதான் கஷ்டம்.. 


ஆனா, தியேட்டர் கிடைக்கிறது சாதாரண காரியம் இல்லை. பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் கிடைக்காமத் தவிக்கிறப்ப, கமலா, சாந்தி, மகாலட்சுமின்னு அத்தனை தியேட்டர்காரங்களையும் நான் காக்கா பிடிச்சுவெச்சிருக்கேன்.


http://www.nbtvlive.com/images/photogallery-images/Entertainment-432-nbtvlive-image.jpg


சி.பி - அப்போக்கூட அண்ணன் பொம்பள பேர் உள்ள தியேட்டரா புக் பண்ணி வெச்சிருக்கார் பாரு..

போன ஆட்சியில என்னோட படங்களை முடக்கிப்போட, எப்படி எல்லாம் திட்டம் போட்டாங்க தெரியுமா?

சி.பி - மக்கள் முடக்குவாதம் வந்து படுத்துடக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான். 


ஆனாலும், 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’னு தொடர்ந்து ஹிட் கொடுத்தேன். இன்னிக்கும் 'லத்திகா’ படத்தைப் பார்க்க, ஒரு நாளைக்கு 40 பேருக்கு மேல வர்றாங்க. கடைசி ஒரு ஆள் வர்ற வரைக்கும் படத்தை ஓட்டுங்கனு சொல்லிட்டேன்.

 சி.பி -அய்யய்யோ . ஆப்பரேட்டர் வந்தாக்கூட ஒரு ஆள் கணக்குதான்.. போற போக்கைப்பார்த்தா 1000 நாள் ஓடிடும் போல. அவ்வ்வ்வ்வ்


150-வது நாள் விளமபரத்தைப் பக்கம் பக்கமாக் கொடுக்கப்போறேன். கோடம்பாக்கம் அன்னிக்குத்தான் வயித்தெரிச்சல்ல தீ பிடிக்கப்போகுது பாருங்க!''

சி.பி - ஆமா. ரஜினிக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்குக்காரணமே அண்ணனோட லத்திகா போஸ்டர் பார்த்ததால் தானாம். 



3. டாக்டர்: ''நடிப்புங்கிற பேர்ல நீங்க பண்ற அட்ராசிட்டியைத் தாங்க முடியாம பலரும் தவிக்கிறதா பேச்சு இருக்கே?''


பவர்: ''தவிச்சாலும் சரி... தாக்குதல் நடத்தினாலும் சரி... எனக்கு பப்ளிசிட்டி தேவை. அதுக்காகத்தான் சினிமா உலகுக்கு வந்தேன். 'பணத்தை வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறான்’னு பலரும் என்னைத் திட்டுறாங்களாம். சில பேர் என் போஸ்டரை வெறிச்சுப் பார்த்து, கிழிக்கிறாங் களாம். என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நான் எதுக்கும் வெட்கப்பட மாட்டேன்.

 சி .பி - நீங்க எதுக்கு வெட்கப்படனும்?. நாங்க தான்  வெட்கப்படனும்


4. டாக்டர்: ''சில பத்திரிகைகள்ல உங்களைப்பத்தி கிசுகிசுலாம் வருதே?''

சி.பி - எது? விருந்து,திரைச்சித்ரா. இதுல எல்லாமா?


பவர்: ''அதெல்லாம் நானா பரப்பிவிட்ட கிசுகிசு. அப்படியும் ஒண்ணு ரெண்டுதான் பேப்பர்ல வந்துச்சு. எத்தனை நடிகர்- நடிகை கள் கிசுகிசுவுக்காக ஏங்குறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு? 'அவரோடு கொஞ்சல்... இவரோடு கெஞ்சல்’னு வந்தா, அந்த வாரம் முழுக்க நம்ம போன் பிஸி. ரசிகனும் முக்கியமான விஷயமா நெனச்சு, மூளையைக் கசக்கிக்கிட்டு அலைவான். மார்க்கெட்ல நம்ம பேர் நிலைக்க ணும்னா, தாரை தப்பட்டைகள் கிழியுற அளவுக்குக் கிசுகிசுக்களைக் கிளப்பிக் கிட்டே இருக்கணும். அதே நேரம், அதுபத்தி யாராவது கேட்டா... எரிஞ்சு விழணும். அப்போதான் கிசுகிசுவுக்கு ஒரு கில்மா எஃபெக்ட் இருக்கும்!''

சி.பி -ஒரு உப்புமா கில்மா பற்றி பேசுதே!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyxXxpDd7jJeDg9QzEvNbSJ9qGXT5kEbEkT0bFl6xmyZtCEiqDvF2AWgaV90GEwQ7lw6Ota1ZuEdsF53Q4z2loUxqw6gm4-0i_3d3ESvhq5EDdtr9bQX76csM_Lnu4yGI60xiAdAVn8oA/s1600/Swathi+South+Indian+Beautiful+Actress_2.JPG

5. டாக்டர்: ''சரி, சினிமாவில் உங்களுக்கு என்னதான் இலக்கு?''

சி.பி - இவரு சினிமால நடிக்கற வரை கோடம்பாக்கத்துக்கு நோ லக்கு


பவர்: ''ரஜினி சார் எப்போ ரிட்டர்ன் வருவார்னு ஆசையா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். சூப்பர் ஸ்டாரா... பவர் ஸ்டாராங்கிற ஒரு போட்டியை உருவாக்கி, தமிழ் சினிமா உலகில் டெரரைக் கிளப்பணும். என்னோட அடுத்த படமான 'ஆனந்த தொல்லை’யை 'லத்திகா’வோட 150-வது நாள் அன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறோம்.

சி.பி - நல்ல வேளை ரஜினிக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியாது. பாவம் நல்ல மனுஷன் நொந்து போயிடுவாரு. 

அதுக்கு அடுத்த படம், 'ராணா’ என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ... அன்னிக்கு களத்துக்கு வரும். அதுல சி.பி.ஐ. ஆபீஸரா வர்றேன். ஸீனுக்கு ஸீன் பட்டாசு பறக்கும்.


 சி.பி - ஏன்? படம் பூரா ஒரே தீபாவளி அன்னைக்கு நடக்குதா?

'லத்திகா’ ஓர் இயக்குநராகவும் என்னை ஜெயிக்கவெச்சிருக்கு. நானும் மதுரைக்காரன்தான். இப்போ வர்ற மதுரைக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற கதைகள், என்கிட்ட டஜன் டஜனா இருக்கு. ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிறப்ப... பாலா பதறணும்... அமீர் அலறணும்... சசி இன்டஸ்ட்ரியைவிட்டே ஓடணும்!''



சி.பி - ஏன் இந்தக்கொலைவெறி?கதறக்கதற துரத்துறீங்க?



http://4.bp.blogspot.com/-ftlaFdvHU3I/Thax7UYo2xI/AAAAAAAACgs/O6gbd4rcc0Q/s1600/Amala+Paul+Navel+Show+in+Saree5.jpg
6. டாக்டர்: ''நேற்று வரைக்கும் திருமாவளவனோடு நெருக்கமா இருந்துட்டு, ஆட்சி மாறியதும் எம்.நடராஜன், ஓ.பன்னீர்செல்வம்னு சந்திப்பு நடத்தி இருக்கீங்களே... ஒழுங்கா டாக்டர் வேலையை மட்டும் பார்த்து இருந்தா, இப்படி எல்லாம் அல்லாட வேண்டிய அவசியம் இல்லையே?''


பவர்: ''அரசியல் வேறு, நட்பு வேறு! எம்.என். சார் எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஓ.பி.எஸ். அமைச்சரான உடனே ஓடோடிப் போய் வாழ்த்து தெரிவிச்சேன். அடுத்து, அம்மாவைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு இருக்கேன்.
என் தலைமையில் என் ரசிகர்கள் ஒரு லட்சம் பேரை கார்டனுக்கு அழைச்சுட்டுப் போவேன். நம்பிக்கையானவங்களுக்கு அம்மா நிறைய செய்வாங்க. நாளைக்கே நான் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. வெறும் டாக்டராவே இருந்தா, இப்படி எல்லாம் எதிர்பார்ப்புகளை எகிறவெச்சு சந்தோஷப்பட முடியுமா? புரொடக்ஷன்ல இருக்கும் நம்ம படத்தோட டிரைலர் பார்க்குறீங்களா?'' என்று கேட்டு ரிமோட் பட்டனைத் தட்டுகிறார்.

சி.பி - என்னது? சுகாதாரத் துறை அமைச்சரா?உமக்கெல்லாம் கவுண்டமணி அண்ணன் தான்யா கரெக்ட்டு


பஞ்சு மிட்டாய் மேக்கப், குருவிக் கூடு விக்குடன் 'பவர் ஸ்டார்’ முகபாவங்களைப் பிழிந்துகொண்டு இருக்க, அவரிடம் கெஞ்சிக் கதறிக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண்...


'கட்டின பொண்டாட்டியையே கட்டிவெச்சுக் கற்பழிச்சவன்தானே நீ... உன்கிட்ட எனக்கு என்ன நியாயம் கிடைக்கும்?’


சி.பி - இந்த டயலாக்ல எனக்கு ஒரு டவுட்டு. ஏற்கனவே ஒரு தடவை கட்டுன பொண்டாட்டியை மறுபடி ஒரு தடவை எதுக்கு கட்டனும்? ரிப்பீட் ஆடியன்ஸா?



ஏன், ஏன் இந்தக் கொலை வெறி பவர் ஸ்டார்?!

நன்றி - விகடன் 

டிஸ்கி - 1  - நடிகைகள் ஃபோட்டோக்களுக்கும் பேட்டிக்கும் சம்பந்தம் இல்லை .. அது சும்மா ரிலாக்‌ஷேஷனுக்காக.... மாசமா இருக்கற சம்சாரத்தை மாமியார் வீட்ல போய் பார்க்கறப்ப நைஸா மச்சினியையும் சைட் அடிச்சுட்டு வர்றமே அது மாதிரி ஹி ஹி


டிஸ்கி 2 - டிஸ்கி 1 சும்மா காமெடிக்காக போட்டது.. அதை சீரியஸா எடுத்துக்கிட்டு என்னோட 3 மச்சினிகளும் சண்டைக்கு வந்தா  நிர்வாகம் பொறுப்பல்ல.. ஹி ஹி

டிஸ்கி 3 -  முதல் 2 ஸ்டில்கள் இடை அழகி இலியானா ,அடுத்த 2 ஸ்டில்கள் ஸ்மைலி இளவரசி ஸ்வாதி ,கடைசி ஸ்டில் வெண்ணெய் புகழ் அமலா பால் பண்ணை

Thursday, July 14, 2011

வெளக்கெண்ணெய் முதலியார்ன்னா என்னா அர்த்தம்?

1.சன் டிவி , தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் -ரஞ்சிதா #வீடியோ காட்சிகள் அனைத்தும் ”செட்டப்”படி எடுத்தது என இன்று தான் அறிந்தேன்

-------------------

2. திமுகவின் இரண்டு இடங்கள் காலியாகவே உள்ளது -பிரதமர்#கூடாரமே காலி ஆகிட்டுருக்கு,அடுத்த ஷோவுக்கு ரிசர்வேஷனா?

--------------------
3. ஸ்ரீரங்கம் கோவிலில் பல இடங்களில் பொக்கிஷம்?  மீண்டும்  "புதையல்'  #அம்மா அங்கே போட்டி இட்டதுதான் காரணம்+ ராசி.அதிமுக கொக்கரிப்பு!!!!!!!!

--------------------
4 . "தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற சினிமா பட வினியோகம் தொடர்பாக கலாநிதிக்கு சம்மன்#இந்த மாதிரி குப்பை படம் எடுப்பியா?ன்னு மிரட்னேன்,அவ்ளவ்தான்

--------------------
5.பள்ளிபாளையம் அடிக்கடி மொபைல் ஃபோனில் பேசியதை கண்டித்ததால், மனம் உடைந்த பெண் தற்கொலை#இப்போ நாட் ரீச்சபிள் ஏரியாவுக்கு போய்ட்டாரே!!

---------------------

6. பெருந்துறை ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது#நாளை முரசொலியில் ரேஷன் அரிசி பதுக்கிய அம்மா அரெஸ்ட்!ஹெட்டிங்க்

---------------------------
7. மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன-ரஞ்சிதா #மனசாட்சி இல்லாட்டி என்னம்மா?வீடியோசாட்சி இருக்கே?

--------------------
8. சமீப காலமாக நாடு முழுவதும் வறட்சி-பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை#இவ்வளவு வயசு ஆகியுமா ஃபிகர் பார்க்கறீங்க?

---------------------------
9. என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு என் சுதந்திரத்தை பறித்துவிட்டன மீடியாக்கள்-.ரஞ்சிதா#சரி விடுங்க,சுயசரிதை எழுதுங்க,செம மால் வசூல் ஆகும்

---------------------

10. ”ஜல்லிக்கட்டு”  “காளை” யுடன் ஹேமமாலினிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்#சத்யராஜ்ம்,சிம்புவும் எதுக்கு சம்பந்தம் இல்லாம ஆஜர் ஆகறாங்க?

------------------------



11. இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் நித்யானந்தர் #பெண் நிருபர்கள் ஜாக்கிரதை,10 அடி தள்ளி நிற்கவும்,கற்பை காக்கவும்

-----------------
12. "108 ஆம்புலன்ஸ்' சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் : சுகாதாரத்துறை சங்கங்கள் கோரிக்கை#சாரி,அம்மா தான் 108 க்கு 144 சொல்லிட்டாரே?

------------------------
13. குழந்தைகளைப்பார்க்கும்போதெல்லாம் நம் மனம் குழைந்துபோய் விடுவதால் குழைந்தகள் என்பதும் சரிதான்..

---------------------------
14. டியர்,பின்நவீனத்துவம்னா என்ன? ஸ்ரீதேவி மூக்குல ஆபரேஷன் பண்ணிக்கிட்ட மாதிரி எந்த நடிகையாவது பின்னால ஆபரேஷன் பண்ணி நவீனப்படுத்தியிருப்பாங்க

----------------------

15. பள்ளி மாணவ,மாணவிகளிடம் ஆபாச புத்தகங்கள்,கல்வி அதிகாரி அதிர்ச்சி#புக்குக்குள்ள பாருங்க,சி டி ஏதாவது இருக்கும், பேரதிர்ச்சி ஆகிடுவீங்க

--------------------------

16. நெய் ஊற்றீ சாப்பிட கையாலாகதவன் வாழை இலைல வெளக்கெண்ணெய் தடவி வீதில எரிவானாம்.அதான் வெட்டி ஜம்பம்

---------------------

17. கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக மொய்லி பொறுப்பேற்பு: #அந்த போஸ்ட் அவருக்கு பிடிச்சிருந்தா விவகாரம் பிடிச்சவர்னு கூப்பிடுவாங்களோ?

-------------------
18. இரவு பயணம் பெண்களுக்கு பாதுகாப்பனதல்ல: டில்லி போலீஸ் கமிஷனர்#அப்போ பகல் பயணம் ஆண்களுக்கு  பாதுகாப்பனதல்லன்னு சொல்லப்போறீங்களா?

--------------

19. 2ஜி ஸ்பெக்டரம் படத்தில் அழகிரியாக நடிக்கிறார் சிங்கமுத்து !#அம்மாவே நினைச்சாலும் அழகிரியை இந்த அளவு அவமானப்படுத்த முடியாது

--------

20  ஜெயா டி வியிலும் ரஞ்சிதா கில்மா வீடியோ ஒளிபரப்ப வேண்டும், தானிக்கு தீனி - அதிமுக சவால் பேட்டி,ரஞ்சிதா அதிர்ச்சி,ரசிகர்கள் கிளர்ச்சி
--------------------------------


டிஸ்கி - நானும் முதலியார் தான்.. எனவே டைட்டிலை வைத்து ஜாதிப்பிரச்சனையை யாரும் தூண்ட வேண்டாம்.. ஹி ஹி