Showing posts with label LOVING ADULTS (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ். Show all posts
Showing posts with label LOVING ADULTS (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ். Show all posts

Friday, August 26, 2022

LOVING ADULTS (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ்


 பொதுவாவே ஒரு  நாவலைக்கட்டிப்பிடிச்சோ அதாங்க  தழுவியோ  அல்லது  ஒரு  சிறுகதையை  பேஸ்  பண்ணியோ  ஒரு  படம்  எடுத்தா  அது  பெரும்பாலும்  சுவராஸ்யமாவே  இருக்கும்.ராஜேஷ் குமாரின்  எத்தனையோ நாவல்கள்  அவருக்கே  தெரியாம படமாக்கப்பட்டு  ஹிட்  ஆகி  இருக்கு . எண்டமூரி  வீரேந்திரநாத் கதைகள்  கூட  பல  அஃபிஷியலாவோ  அன் அஃபிஷியலாவோ    படம்  ஆகி  ஹிட்  அடிச்சிருக்கு .  சுஜாதாவின்  ப்ரியா , காயத்ரி ,பிரிவோம்  சந்திப்போம் , கரையெல்லாம்  செண்பகப்பூ , என் இனிய  இயந்திரா, ஆ, அப்டினு  லிஸ்ட்  போய்க்கிட்டே  இருக்கு . மாலைமதியில் வெளியான  சுபாவின்  நாவலான  பொன்ஜிதா  வை  இதுவரை  யாரும்  படமாக்கலையா? இல்லை  ஆல்ரெடி  அட்லீ  ஒர்க்  பண்ணீட்டாங்களா?னு  தெரியல . பிகேபியின்  தொட்டால்  தொடரும்  நாவல்  நல்ல  சினிமா  மெட்டீரியல் /இந்தப்படம்  டென்மார்க்  ரைட்டர்  எழுதுன  நாவலின்  திரை  வ்டிவம் 


TILL  DEATH DO AS PART    தான்  நாவலின்  டைட்டில்  . எழுதியவர்  அன்னா  எக்பர்க் 

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  கருத்தொருமித்த  தம்பதிகள் . இவங்களுக்கு  ஒரு  மகன் , இவனுக்கு  ஒரு  மெடிக்கல் பிராப்ளம்  இருக்கு  அதனால  அவனைக்கவனிக்கறதுல  ரொம்ப  அக்கறை  எடுத்துக்க  வேண்டிய  சூழல். 20  வருடங்களா   சேர்ந்து  வாழ்ந்த  இவங்க  வாழ்க்கைல   ஒரு  புயல்  வீசுது


 ஹீரோ  ஒர்க்  பண்ற  இடத்துல  எக்ஸ்ட்ரா  மேரீட்டல்  லைஃப்  பார்ட்னர்  உருவாகறார். உடைச்சுச்சொல்லனும்னா  கள்ளக்காதல் . அந்த  க. கா ( கள்ளக்காதலியின்  செல்ல சுருக்) ஹீரோவை  டார்ச்சர்  பண்ணுது . ஒரு வருசமா  நாம  பழகிட்டு  இருக்கோம், எப்போக்கேட்டாலும்  இதா  அதானு இழுத்துட்டே  இருக்கே? எப்போ  நம்ம  காதலைப்பற்றி  உன்  மனைவி  கிட்டே  சொல்லப்போறே?னு  கேட்குது 


 ஹீரோ  மென்னு  முழுங்கறான். ஒரு  நாள்  நைட்  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  பெட்ல  படுத்துட்டு  இருக்கறப்போ  ஹீரோ  செல்  ஃபோனுக்கு  ஒரு  மெசேஜ்  வருது டக்னு  செல்லை  ஆஃப்  பண்ணறான்   சம்சாரத்துக்கு  டவுட்  வருது. 


பொதுவாவே   சம்சாரங்க  ஜீன் ல  துப்பறியும்  சாம்பு  ,ஜேம்ஸ்பாண்ட்   எல்லாரும்  ஒளிஞ்சிருப்பாங்க . அது  துப்பறிஞ்சு  கண்டு  பிடிச்சிடுது 


இப்போ  ஹீரோவுக்கு  ஒரு  அதிர்ச்சித்தகவல்  தெரிய  வருது . 21  வ்ருடங்களுக்கு  முன்  ஹீரோயினோட  முதல்  காதலனுக்கு  2 வதா  ஒரு  கள்ளக்காதலி  இருந்த  மேட்டர்  தெரிஞ்சு  ஹீரோயின்  தன்  காதலனைப்போட்டுத்தள்ளிட்டாளாம் 


 இதைக்கேட்டு  ஹீரோக்கு  அல்லு  இல்ல . அவ  நம்மைப்போட்டுத்தள்ளும்  முன்  நாம  அவளைப்போட்டுத்தள்ளிடனும்னு  நினைக்கறான்

 இதுக்குப்பின்  நட்ந்த  சுவ்ராஸ்யமான  சம்பவங்கள்  தான்  கதை 


 என்னடா  முழுக்கதையையும்  சொல்லிட்டானேனு  யாரும்  வருத்தப்படவேணாம்.  இடைவேளை  வரை  தான்  சொல்லி  இருக்கேன் 

ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சுமாராதான்  இருக்காங்க . கள்ளக்காதலியா  வர்றவரும்  இன்னும்  சுமாராதான்  இருக்காப்டி 


 இசை  ஒளிப்பதிவு  பக்காவா  இருக்கு 


சபாஷ்  டைரக்டர் 


1  கவுதம் வாசுதேவ்  மேனன்  படங்களில்  வாய்ஸ்  ஓவர் ல  கதை  சொல்ற  , மாதிரி   இதுல  2  பேரு  இந்த  கேஸ்  பற்றி  பேசிட்டு  இருக்கற  மாதிரி  நான் லீனியர்  கட்ல  கதை  சொன்ன  விதம் 


2  விருமாண்டி  ப்டத்துல  அவரவர்  கோணத்துல  அவங்க  பக்க  நியாயம்  சொல்வ்து  போல  ஹீரோயினின்  தோழி  அந்த  கொலை  சம்பவம்  பற்றி  சொல்வதும்  அதே  சம்பவத்தை  ஹீரோயின்  தன்  தரப்பு  க்தையா  சொல்லும்போதும்  மாறுபட்ட  இரு  சம்பவங்கள்  வருவது 


3   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இடைவேளை  ட்விஸ்ட்  ரெண்டும்  குட் 


4  நம்ம  தமிழ்ப்படங்களில்  எல்லாம் நீதி தான்  வெல்லும்    தர்மம் தான்  ஜெயிக்கும் கற  மாதிரி  இன்னும்  ஜல்லி  அடிச்ட்டே  இருப்பாங்க ( விதி  விலக்கு  மங்காத்தா , திருட்டுப்பயலே )  இதுல வில்லன்  வில்லி  தப்பிப்பது  போல  காட்சி  அமைச்சது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  கள்ளக்காதல்  கதைகள்  எப்போ  வந்தாலும்  நான்  சுட்டிக்காட்டும்  ஒரே  விஷயம் தான்  இப்பவும்  சொல்றேன். அவ்ளோ  வசதி  உள்ள  ஹீரோ  வீட்டில்  ஒரு  செல் ஃபோன்  ஆஃபீசில்  ஒர்  செல்  ஃபோன்  என வெச்சுக்கிட்டா  பிரச்சனையே  இல்லையே?  அல்லது  சைலண்ட்  மோட்லயாவது  போடனும்  ரெண்டும்  இல்லாம  க.கா  விடம்  இருந்து  மெசேஜ்  வந்ததும்  செல்  ஃபோனை ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணுனா  சம்சாரத்துக்கு  டவுட்  வராமயா  இருக்கும் ? அட்லீஸ்ட்  வீட்டுக்கு  வரும்போதே  செல் ஃபோனை  ஆஃப்  பண்ணி இருக்கலாம்


2  கள்ளக்காதலி  ஹீரோ  கிட்டே  எப்போ  சொல்லப்போறே?னு  ஒரு  வருசமா  கேட்டுட்டே  இருக்கு . பார்ட்டிக்கு   ஹீரோ  வீடும்  தெரியும்  மனைவியையும்  தெரியும், ஈசியா  தெரியப்படுத்தி  இருக்கலாமே? 


3 மனைவியை  கார்  ஏற்றிக்கொலை  பண்றவன்  செத்தது  மனைவிதானா?னு  செக்  பண்ண  மாட்டானா? 


4  ரெகுலரா  ஜாகிங்  போற  ரூட்டை  விட்டு  புது  ரூட்டில்  ஹீரோயின்  ஜாகிங்  போவது   ஏன்?னு  விள்க்கம்  கொடுக்கவே  இல்லை 


5   ஏரிக்கரை  வரைக்கும்  வரும்   போலீஸ் நாய்  ஏரித்தண்ணீரில்  இறங்காதா? நீச்ச்ல்  தெரியாதா?  டெட்  பாடிக்கும்  நாய்க்கும்  உள்ள  தூரம்  ஒரு  பர்லாங்  தான் 


6   போலீஸ்  ஏதாவது  கேள்வி  கேட்டா  உங்களால பதில்  சொல்ல  முடியாத  கேள்விகளுக்கு  நான்  பதில்  சொல்றேன்னு  ஹீரோயின்  சொல்றா  ஓக்கே  ஆனா  போலீஸ்க்கு  ஏன்  டவுட்  வர்ல? எம்மா  மின்னல் ? உன்  புருசனைக்கேள்வி  கேட்டா  நீ  பதில்  சொல்றியே  அப்போ  உன்னைக்கேள்வி  கேட்டா  புருசன் பதில்  சொல்வானா?னு    ஏன் மடக்கலை ?


7  பொதுவாக  போலீஸ்  சந்தேகப்பட்டா  தனித்தனியா  விசார்ணை  செஞ்சு  முரணான  பதில்கள்  வந்தா  டக்னு  பிடிப்பாங்க். அந்த  டெக்னிக்கை  ஃபாலோ  பண்ணவே  இல்லை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஸ்லோவான  க்ரைம்  ட்ராமாதான்  ஆனாலும்  சுவராஸ்யமாவே  இருந்தது . பார்க்கறவங்க  நெட்  ஃபிளிக்சில்  பார்க்கலாம்  இன்னைக்கு  தான்  ரிலீஸ்  ஆகி  இருக்கு  அடல்ட்  க்ண்ட்டென்ட்  லைட்டா  இருக்கு  (  வழக்கமா  நெட்  ஃபிளிக்ஸ்னா  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  டார்க்கா  இருக்கும் )  ரேட்டிங்  2.75 / 5 


டிஸ்கி  -  கூகுள்ல  சர்ச்  பண்ணிப்பார்த்தேன்  . உலக  தொலைக்காட்சி  வரலாற்றில்  முதல்  முறையாக  இந்தப்படத்துக்கு  இந்த  விமர்சனம்  தான்  முதல்ல   வருது . ஆனா  இதை    பெருமையாச்சொன்னா    நாம  வெட்டியா  இருக்கோம்  மத்தவங்க  எல்லாம்  வேலை  வெட்டி  பார்க்கறாங்க  என்பது  தெரிஞ்சிடும் , அதனால  கமுக்கமா இருப்போம்