Showing posts with label KALAIGNAR T V. Show all posts
Showing posts with label KALAIGNAR T V. Show all posts

Tuesday, March 15, 2011

சி பி ஐ விசாரணை -கலைஞர் டி வி யை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா கலைஞர்..?

http://truetamilans.files.wordpress.com/2007/05/thuglak-6.jpg 

1.காஞ்சிபுரம் காங்., எம்.பி., விஸ்வநாதன்: செங்கல்பட்டு வயலூர் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால், 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவு பாசன வசதி பெறுவதுடன், 10 லட்சம் விவசாயிகளும் பயன் அடைவர். இதற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

ஒதுக்குங்க ஒதுக்குங்க..சீக்கிரம்.. இன்னும் ஒரு மாசம் கூட இல்லை.. போவதற்கு முன் கடைசியா ஒரு ஊழல் பண்ணீட்டு போயிடறோம்...(முறைப்பொண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னா கடைசி கடைசியா ஒரு ஞாபக முத்தம் தர்றதில்லையா? அது மாதிரி)

------------------------------------------------

2. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: விவசாயத் துறைக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் நடந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறைக்கு, 3.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதத்திலேயே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.

விவசாயக்கடன் குடுத்துட்டுத்தான் இருக்காங்க.. ஆனா விவசாயிங்க யாரும் வளர்ந்ததா தெரியல.. இந்த மீடியேட்டர்களும், அரசியல்வாதிகளும் தான் வளர்றாங்க...


----------------------------------------------

ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3185/2635671409_bed718aea5.jpg
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைத் தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களைச் சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது.

உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. பல பக்கம் நடக்குது.. ஒரு ஊர்ல கண்டுபிடிச்சதுக்கே இந்த அலப்பறையா..?வைரஸ் இல்லாத கணிப்பொறியா?மாணவர்கள் கட் அடிக்காத வகுப்பறையா?ஊழல் நடக்காத துறையா?


--------------------------------------
http://www.writermugil.com/wp-content/uploads/2009/05/mk-fasting1.jpg
4. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேட்டி: எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பொருளாதார பின்னடைவில் இருந்து நம் நாடு மீண்டது. அதுபோல், எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பணவீக்கம் நம்மைப் பற்றிக் கொண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை உயர்த்தித் தான் ஆக வேண்டும். பொருளாதார மீட்சியை தக்க வைக்க, வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். வளர்ச்சியுடனும், பணவீக்கத்துடனும் நாடு போராட வேண்டியுள்ளது.

அது கூட எப்படியோ போராடிக்கலாம்.. ஜாதி அரசியல்வாதிகளோடும், வியாதி அரசியல்வாதிகளோடும் போராட வேண்டி இருக்கே...?

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேச்சு: மன்மோகன் சிங்கை நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. ஆனால், பிரதமர் அலுவலகம் நேர்மையின்றி இருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுக்கு, கூட்டணி அரசியலின் நிர்பந்தமே காரணம் என, மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதன்மூலம்,தன் அலுவலகத்தை பழியிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். கொள்ளை நடந்து கொண்டிருந்தபோது, அவரது அலுவலகம் கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

அநியாயம் எங்கே நடந்தாலும் நான் வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.. கண்ணை மூடிக்குவேன்...ஹி ஹி - பிரதமர் மனசுக்குள் நினைச்சது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie_v9-nVyMs2fYySaTWRiA_u9LAkEuJauXLTPOPTvOI7NtMuhiBr5zj-iFp1UEDsU6gLp57fHfIH8eh1rgx5h1FhWwTIiH-8lU0bbQmkBIEH1nFqkH_5_oSyb0BjXz2Ae6uHDiERkWeCuE/s320/leena_manimekalai.jpg
-------------------------------------
6. மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: மூன்று சீட்டுகளுக்காக, அமைச்சர்களை ராஜினாமா நாடகம் நடத்த வைத்த கருணாநிதியின் நோக்கமெல்லாம், சி.பி.ஐ., தன் வீட்டுக் கதவை தட்டி விடக் கூடாது என்பது தான். எங்கள் கட்சி சார்பில், புத்ததேவ் பட்டாச்சார்யா, அச்சுதானந்தன், மாணிக் சர்க்கார் ஆகிய மூன்று முதல்வர்கள் இருக்கின்றனர். அவர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் சொத்துப் பட்டியல் வெளிப்படையானது. நாட்டிலேயே மிக மிக ஏழை முதல்வர்கள் இவர்கள் தான்.

எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...

--------------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/karunanidhi-sonia-gandhi-manmohan-singh-.jpg
7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : "ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம். "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பிரச்னையில், என் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் துரைமுருகனும் கூறியிருந்தனர். இதுவரை வழக்கு தொடராமல் மவுனம் சாதிப்பது ஏன்?

மானம் இருக்கறவங்க தான் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்னு கழக வக்கீல்கள் யாராவது சொல்லி இருப்பாங்களோ..?

-----------------------------------------
8. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் சில கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவை. எனவே, வழக்குக்கு சம்பந்தப்படாத எதைப் பற்றியும் நீதிபதிகள் பேசக் கூடாது. சில நேரங்களில், வழக்கை விசாரிக்கும் போதும், தீர்ப்பு அளிக்கும் போதும் நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்துகளையும், விருப்பு, வெறுப்புகளையும் இந்த சமுதாயத்தின் மீது திணிக்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. நீதிபதிகள் தங்கள் கடமையை ஆற்றும்போது, சமுதாயத்துக்கு அறிவுரை வழங்கக் கூடாது.

அப்படியே அறிவுரை சொல்ற மாதிரி இருந்தா சாதாரண குடிமகனுக்கு சொல்லனும்.. அதை விட்டுட்டு பெரிய பெரிய தலைங்களுக்கு அட்வைஸ் பண்ணுனா எப்படி..? அவங்களுக்கு சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாது...


---------------------------------------

டிஸ்கி 1 - தமிழச்சியோட ஸ்டில் எதுக்கு?ன்னு கேக்கறவங்களுக்கு, ஒரு தமிழன் தமிழச்சியோட ஸ்டில்லை போட்டாக்கூட குத்தமா?  ஹி ஹி 


டிஸ்கி 2- லீனா மணிமேகலைக்கும் அட்ரா சக்க இணைய தளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..எக்சாம்க்கு படிக்காம போற மக்கு ஸ்டூடண்ட் வெறும் பேப்பரை குடுத்தா கேவலம்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம எதையாவது எழுதற மாதிரி.. இந்த ஸ்டில்ஸூம்.. ஹி ஹி