Showing posts with label .நகைச்சுவை. Show all posts
Showing posts with label .நகைச்சுவை. Show all posts

Tuesday, April 12, 2011

இலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgihNcTDDhejqNKcTcdgxylWY2pAJGYG-n5fcijtyxt9vs-3SkxP9EcDFzLUORFkQ3_obI7B_AnL0CmT-D4B42FeE9K4XENUMbpS17znxbWaKgqvw3ZudGCnJYNqxpQzvFzpmOBhNviVk/s400/Jr-NTR-Ileana-In-Om-Sakthi-Tamil-Audio-Release-Stills-2_preview.jpg
உடுக்கை இடை அழகி இலியானாவுடன் ஜெய்ப்பூர்,ஹரித்வார்,காஷ்மீர் போன்ற உல்லாச நகரங்களுக்கு ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?நம்ம இளய தளபதி விஜய்க்கு போட்டியா டான்ஸ் காட்சிகளில் எக்சசைஸ் பண்ணும் ஹீரோ ஜூனியர் என் டி ஆர் அவர்களை நக்கல் அடித்துக்கொண்டே கமெண்ட்ட,கலாய்க்க ஆசையா?

கள்ளக்காதலி அல்லது நல்ல காதலியுடன் ஆள் இல்லாத தியேட்டரில் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆசையா?அப்போ நீங்க கண்டிப்பா ஓம் சக்தி  தெலுங்கு டப்பிங்க் படத்தை பார்க்கலாம்.


ஆந்திரா காரங்க எல்லாம் எம்புட்டு புத்திசாலிங்க என்பதை இந்தப்படத்தின் சூப்பர் ஹிட் ரிசல்ட்ல இருந்து தெரிஞ்சிக்கலாம்.
இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).

ஒரு ராஜ குடும்பத்து கைல( கலைஞர் குடும்பம் அல்ல) சக்தி மிக்க வைரம் இருக்கு.. அதை கைப்பற்ற சில தீய சக்திகள் (ஜெயா & சசி அல்ல) முயற்சி செய்யுது. அது கைல இருந்தா உலகத்தையே ஆளலாமாம்..( நல்லா சுத்துறாங்கடா பூவை...)அதை தடுக்கறாரு ஹீரோ.. அவர் பெரிய சீக்ரெட் ஏஜண்ட் வேற.. ( இடைவேளை அப்பத்தான் அந்த அரிய உண்மை தெரிய வருது.. ( அடிங்கொய்யால... )

டைட்டில் போடறப்ப ஓலைச்சுவடில எழுத்துக்கள் ஓடுது.. நல்ல முயற்சி.. ஏம்ப்பா கோடம்பாக்கம் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணிக்குங்கப்பா.. உல்டா பண்ணிடலாம் இந்த ஐடியாவை.. 
ஒரு அம்மா கணவன் கொல்லப்பட்டதும் தன்னோட கணவனோட கண்களை எடுத்து உயிரோட இருக்கற தன் 10 வயசு மகன் கண்களை தோண்டி எடுத்து ரீ பிளேஸ்மெண்ட் பண்றாரு.. படு கேவலமான சீன் இது.. கண் தானம்  பற்றி தெரில போல டைரக்டருக்கு.. ஒருவருக்கு ஒரே ஆளின் 2 கண்ணையும் வைக்க மாட்டாங்க.. 

மகனோட முகத்துல கணவனோட கண் இருந்தா அந்த பையன் அம்மாவை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான்..? என்னய்யா யோசிக்கறீங்க?
ஒரு செண்ட்ரல் மினிஸ்டர் பொண்ணு இப்படியா லூஸ் மாதிரி இருப்பா..?( பொதுவாவே பொண்ணுங்கன்னா , தமிழ் சினிமா ஹீரோயின்கள்னாலே லூஸ் மாதிரி தான் சித்தரிக்கறாங்க..)மிட் நைட்ல பீரோல இருந்து பல பணக்கட்டுக்களை அள்ளி சாக்குப்பைல போட்டுக்கிட்டு அவ ஃபிரண்ட்ஸோட பிக்னிக் போறாளாம்.. ( திரைக்கதை எழுதுனவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவன் செத்தான்..)




அது கூட தேவலை.. டூர் வந்த இடத்துல அந்த லூஸ் ஹிந்திப்படத்தை பிளாக்ல பார்க்குது.. ( அதை அவ சொந்த ஊர்லயே செய்யலாமே..?)அப்போ தான் ஹீரோ எண்ட்ரி ஆகறாரு. பிளாக்ல டிக்கெட் வித்து ஹீரோயினை தியேட்டருக்குள்ளே அனுப்பறாரு... அந்த பிளாக் டிக்கெட் வருமானத்துல வந்த பணத்தை ஏழைகளுக்கு ஆன் த ஸ்பாட் பிரிச்சுத்தர்றாரு.. ( அடடா.. எம் ஜி ஆருக்குக்கூட இந்த யோசனை வர்லையே,...?)

ஹீரோயின் லூஸ் என காண்பிப்பதில்  இயக்குநர் இன்னொரு ஷாட் வெச்சிருக்கார்.. ஒரு பாலைவனத்துல பயணம் பண்றப்ப.. எல்லாரும் நா வறண்டு தாகத்தால தவிக்கறப்ப சூடா டீ வேணும்னு கேக்கறாரு... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8ymmNxEwDfOhc3fPvaxzTnqh91kYylDRHCYvzTPIz79Id_xEx01MfVHoIr79Gfc2Y2UewkzW0R3MywF-gWfuNeyS6joob_NOL3pMJ37T52xFTthGsiPYig3-whGiE6JSnCJ0oEPpqzvPX/s1600/ileana%252B8.jpg

கேவலமான படத்தில் வந்த படு கேவலமான காமெடி வசனங்கள்

1. பார்க்கத்தான் அவரு தங்கத்தமிழன்.. சீறுனா சிங்கத்தமிழன்.. ( அப்போ ஏறுனா சொங்கித்தமிழனா?)

2.   இது வேலை செய்யுமா?


போடா புண்ணாக்கு.. முதல்ல உன்னுது வேலை செய்யுமா?

எது?
 மூளை..


( டபுள் மீனிங்காம்...சிங்கிள் மீனிங்க்கே எழுத வர்ல...)

3.  பாப்பா கைல ஒரு பாப்பாவையே தர ஏற்பாடு நடக்குது.. ஜாக்கிறதை.. 

4. ஹீரோயின் - மிஸ்டர் சக்தி.. நான் படுத்துக்கப்போறேன்..

நானும் துணைக்கு வரவா?

5. உனக்கு ஐ லவ் யூ என 1000 பேரு எழுதித்தரலாம்.. ஆனா ஐ டோண்ட் லவ் யூ என யாருமே எழுதிக்கொடுத்திருக்க மாட்டாங்க.. எப்பூடி..

(ஹூம்.. கேவலமான ஐடியா)

6. வில்லன் - நானே ஒரு விஷப்பாம்பு.. எனக்குப்பால் புகட்டுனவங்களுக்கே விஷம் குடுத்துப்போட்டுத்தள்ளிட்டுத்தான் நான் இந்த ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன்.. ( சொந்த அம்மாவைக்கொலை பண்ணிட்டு நாயி பஞ்ச் டயலாக் பேசுது.. )
http://s1.hubimg.com/u/333908_f520.jpg

பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமாரா இருந்தாலும் இலியானா கிளாமருக்காக அதை எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..

நைட் ஆகிப்போச்சுன்னா இது காதல் தேசம் அல்லவா? போன்ற இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவர் நா முத்துக்குமார்... 

ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு கேள்விதான்.. இலியானாவை ஒரு சீனில் கூட க்ளோசப்பில் அவர் முகத்தை காட்டலையே ஏன்? ( முகத்தை யார் பார்க்கறா?ன்னு நினைச்சுட்டாரோ..?)
http://www.dailomo.com/tamil/content_images/1/ileayana.jpg
இடைவேளைக்குப்பிறகு மாயாஜால மந்திரக்காட்சிகள் அதாவது காதுல பூ சீன்கள் அதிகம்.. அதனால அந்த ஃபிளாஸ்பேக் சீன் ஆரம்பிக்கறப்பவே நைஸா எஸ்கேப் ஆகிக்கலாம்.. அதுக்குப்பிறகு இலியானா நோ எண்ட்ரி.. 

பாடல் காட்சிகளில் ஜூனியர் என் டி ஆர் கிராஃபிக்ஸ் உதவியுடன் என்னென்னவோ பண்றார்.. விஜய் வகையறாக்கள் எச்சரிக்கை... 

ஆந்திராவில் இந்தப்படம் அமோக வெற்றி அடைந்திருக்கலாம்.. ஆனா இங்கே 10 நாட்கள் தான் ஓடும்//

http://1.bp.blogspot.com/_maPlgJCAIqk/S-lftfpE2FI/AAAAAAAAASk/4zmHqAyVQ4Y/s1600/Ileana-actress-wallpapers.jpg

டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்

Saturday, April 09, 2011

விகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf5H-TejWwHRqU4TxHF4NPLdZDzwWmH9yO7eKQFOPBHZOzNltg796Tadn-xQbl4WbH9m6Y_cC-p7iAMGTl1uYfRtbTZUWUFsSn_IH2eeHf5Ww8iGmm_zDtzEdbzKeJrsbgwgjw8cBQdA/s400/Banu-actress-photos-004.jpg_600
''முக்கியமான ஒரு போர்க் காட்சியை எடுக்கணும்.ராஜஸ்தான், சிக்கிம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, கேரளானு எல்லா மாநிலக் கோட்டைகளையும் பார்த் தோம். எதுவுமே செட் ஆகலை. கலைஞர் அய்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
 உடனே செட் ஆகிடுச்சாக்கும்?
'பெரம்பலூர் பக்கம் ரஞ்சன் குடியில் ஒரு கோட்டை இருக்கு. அங்கே போய்ப் பாருங்களேன்’னு சொன்னாரு.
 அந்த கோட்டைக்கு வழி காட்டி இந்த கோட்டையை  கோட்டை விடப்போறார்..
போய்ப் பார்த்தா, பக்காவா இருந்தது. அதுதான் கலைஞர்!''- 
 ஆமா.. எதா இருந்தாலும் பக்காவா ப்ளான் பண்ணி  செய்வார்.. பாவம் ஸ்பெக்ட்ரம்  விஷயத்துலதான் கோட்டை விட்டுட்டார்..
ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். 'பொன்னர்-சங்கர்’ பிரமாண்டமாக வந்திருப்பது பிரசாந்த்தின் முகத்தில் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறது.   

படம் பிரம்மாண்டமா வந்திருக்கு  ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... 

1. ''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?'' 


'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை.

வேண்டாத ஆசை.. ஹி ஹி 

நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''

 கொலையா கொன்னெடுக்கப்போறாரோ....

http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/bhanu/banu120807_05.jpg

2. '' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?'' 

''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது.

அவர் என்ன அழகிரியா? நேரடியா மிரட்ட?


இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்


3. ''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''

''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

 30,000 பேரெல்லாம் இருக்காது.. 300 பேர் ரெடி பண்ணி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி இருப்பீங்க..

ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''

அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
 http://icdn1.indiaglitz.com/hindi/gallery/Events/tour060211_1/tourde_37.jpg
4. ''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?'' 

''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள்.

ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...


அதான் இடைவெளிக்குக் காரணம்.  பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன்.

ஆனா நாங்க பிஸியா இருக்கோமே.. சாரி.. ஹி ஹி 


'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''

அடுத்த லெவெல்னா...? இப்ப ஏதோ ஒரு லெவெல்ல இருக்கறதா நினப்பு? 



டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...

Friday, April 08, 2011

அமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்திரா கிளு கிளு பேட்டி - காமெடி கும்மி

http://www.bollywoodbreak.com/photos/neetu-chandra-lucky/Neetu-Chandra-5.jpg 

ன்னித் தீவு பொண்ணு நீத்து சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். ''ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?''- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீத்து. 

கன்னித்தீவுன்னா கன்னிகள் மட்டுமே உள்ள தீவா? இதுவரை யாருமே எண்ட்டர் ஆகாத ஃபிரஸ் தீவா? # டவுட்டு

1, '' 'ஆதி பகவன்’ படத்தில் உங்க கேரக்டர் என்ன?'' 

''அது ரகசியம். நான் அமீரை முழுசா நம்புறேன். அவர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்.

ஹி ஹி சாரி நோ கமெண்ட்ஸ்.. 

அவர் கதைக்குத் தேவையான மாதிரி என்னைச் செதுக்கிட்டு இருக்கார். 

எங்கே? கேரவுன் வேன்லயா?

இதுக்கு மேல ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன். படம் வந்ததும் பார்த்துட்டுச் சொல்லுங்க!''

ம் ம் பார்த்துட்டு ஜொல்றோம்.. அடச்சே.. சொல்றோம்.. 

2. ''அமீரோட காதல்னு கிசுகிசு கிளம்ப ஆரம்பிச்சிருச்சே... என்ன ஆச்சு?'' 

''நான் இதுக்கு முன்னாடி நடிச்ச மாதவன், விஷால் ரெண்டு பேரும் பக்கா புரொஃபஷனல்ஸ். அவங்ககிட்ட என்னால ஃப்ரெண்ட்லியாப் பழக முடியாது. 

சும்மா நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வந்தா நாங்களா பொறுப்பு..?
ஆனா, அமீர் அப்படி இல்லை. அவர் என் நண்பர். என் நலம் விரும்பி. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே, பச்சக்னு ஒட்டிப்பேன். 

அப்படியா? வாங்க .. 20 நிமிஷம் பேசிட்டிருக்கலாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtYR1VeWH7fTg4Agacfo1XGwWhBoKHVlPYQ6mrDaoHJsapaJqLi2aPQ9ODlywC01OixbhiVFXP_QNWKqKq95JT-iUMqL2AbTlku1ose72P6B71U4I6zsf57FewphtqPW2A1ihHwKf01E0/s1600/neetu_chandra_hot_thighs.jpg
அது மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரிஞ்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?

மத்தவங்க, பெத்தவங்க,ஒன்னுக்கும் வழி அத்தவனுங்க எப்பவும் இப்படித்தாங்க.. அவ்ங்களைப்பத்தி நமக்கென்ன? வாங்க.. நாம பழகலாம்.. 
எனக்குத் தினமும் மதிய சாப்பாடு கொடுத்துவிடுறது அமீர் சாரோட மனைவிதான். அமீர் அளவுக்கு அவங்களும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். விமர்சனத்துக்குப் பயந்தா, சந்தோஷமா வாழ முடியாது!''

படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தான் சக்களத்தி என தெரியாமல்.... 

3. ''லெஸ்பியன் போட்டோ ஷூட்டில் தைரியமா போஸ் கொடுத்திருந்தீங்க?'' 

 (பார்க்கறவங்களுக்குத்தான் தைரியம் வேணூம்.. அவ்ங்களுக்கென்ன?)

''நம்ம மக்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களைப் பார்க்குறாங்க. ஆனா, அதே சமயம் ஒரு நடிகை தன்னுடைய தொழிலை செஞ்சா மட்டும், ஏன் ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை. போட்டோகிராபர் சொன்ன மாதிரி போஸ் கொடுத் தேன். இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலை!''

 அம்புட்டு அப்பாவியா நீங்க..?

4. ''நல்லாத் தமிழ் பேசுறீங்களே?'' 


''நன்றி! (சிரிக்கிறார்). தினமும் சுப்ரமணியன்னு தமிழ் வாத்தியார்கிட்ட டியூஷன் போறேன். எனக்கு இந்தி, இங்கிலீஷ், போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தினு நாலஞ்சு மொழிகள் தெரியும். எங்கே போறேனோ, அந்த மொழியை உடனே கத்துக்க ஆரம்பிச்சிருவேன். தமிழில் நடிக்க வந்த பின்னாடி, தமிழ் கத்துக் கலைன்னா எப்படி? அடுத்த இன்டர்வியூவில் உங்களுக்கு ஆனந்த விகடனை வாசிச்சுக் காண்பிக்கிறேன்!''


எப்படி? ஆ  ன  ந்  த  வி க  ட  ன்.. அப்படின்னா?

5. ''உங்க குடும்பம் பத்திச் சொல்லுங்க?'' 

''நாங்க பீகார் பிசினஸ் குடும்பம். அப்பா, கேன்சரால் பாதிக்கப்பட்டு போன வருஷம்தான் இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அம்மாவை வெளியே கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ, என்கூடவே மும்பையில் தங்கவெச்சிருக்கேன். என் அண்ணா ரொம்பக் கஷ்டப்பட்டு, இப்போதான் ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கான். படம் பேர் 'தேஸ்வா’. வர்ற மே மாதம் ரிலீஸ். படத்தோட புரொடியூஸர் உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர்தான். அவர் ரொம்ப அழகா இருப்பார். அவர் பேர்... நீத்து சந்திரா!''

தேஸ்வா புஸ்வா ஆகாம நல்லா ஓடட்டும்..


6. ''நீத்துன்னா என்ன அர்த்தம்?'' 

'' 'எல்லா நாளும் புதிய நாள்’னு அர்த்தம்!''

எப்போதும் ஃபிரஸ்னு அர்த்தமா?ஹி ஹி 

Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

Wednesday, April 06, 2011

தி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி

ழக்கம்போலவே பரபரப்பான தேர்தல் கணிப்​பை வெளியிட்டு
http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg
இருக்கிறது, சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம்!  ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்குப் பாதகமான முடிவுகள் வந்ததாகவும், 'அதை வெளியிடக் கூடாது’ என ஆளும் தரப்பால் மிரட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது!


இவ்வளவுதானா? ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆளும் கட்சியே ஜெயிக்கும்னு மேட்டர் போட்டுட்டு கீழே சின்னதா இவை யாவும் கற்பனையே... அப்படின்னு போட்டிருக்கலாம்.. 


ஆனால், மக்கள் ஆய்வகத்தின் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதக் கடைசியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார், மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம்.


''எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவிகிதமும் தி.மு.க. அணிக்கு 41.7 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும். பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. அணி கைப்பற்றும் என 51.1 சதவிகிதத்தினரும், தி.மு.க. அணிதான் கைப்பற்றும் என 36.7 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


அய்யய்யோ... அம்மா ஓவரா ஆட ஆரம்பிச்சுடுவாங்களே.. 

மாவட்டம், தொகுதி அளவிலான நிலைமைகளை வைத்துக் கணக்கிட்டால், 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும் இருக்கின்றன. 59 தொகுதிகளில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது'' என்கிறது, இந்த ஆய்வு முடிவு.

டஃப் ஃபைட் 59ல ஆளுக்கு பாதின்னு கணக்கு போட்டாக்கூட அம்மா வந்துடுவாங்க போல இருக்கே.. அய்யய்யோ...


''இப்போதைய கணிப்பு முடிவு, அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது என்றாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் வியூகத்தின் மூலம் தி.மு.க.வு-க்கு சாதகமாக முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது...'' என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

 தேர்தல் வியூகம்னா ஓட்டுக்கு ரூ 5000 தர்றதா பேசிக்கறாங்களே.. அதானே..?


''தேர்தல் அறிக்கை, சுமுகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெரு முனைக் கூட்டம் - பொதுக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் போன்ற வியூகங்களில் தி.மு.க அணி மக்களை ஈர்த்திருக்கிறது.

 எனக்கென்னவோ இலவசம், ஓட்டுக்கு பணம் இந்த 2 மேட்டர் தான் அய்யா முன்னிலை வகிக்க ஒரு (இரு) காரணமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு.




உட்கட்சிப் பூசல்கள் இல்லாதது, போஸ்டர், பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க அணி முன்னிலையில் இருக்கிறது.

இன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..?


வியூகம் வகுத்துச் செயல்படுவதில் தி.மு.க-வின் எழுச்சியும் வீச்சும் இப்போதைய கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்!'' என்கிறார்கள்.

கள்ள ஓட்டு போடறது, பண பட்டுவாடா பண்றது இதுல எல்லாம் கழகத்தோட  வியூகம் பிரமாதமா இருக்குமே..?


ம.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றிக் கேட்டபோது, ''இந்தப் புறக்கணிப்பால் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு'' என 25.4 சதவிகிதத்தினரும் ''ம.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு'' என 7.4 சதவிகிதம் பேரும் ''தி.மு.க. அணிக்கு பாதிப்பு'' என 3.8 சதவிகிதம் பேரும் ''யாருக்கும் பாதிப்பு இல்லை!'' என 53.6 சதவிகிதத்தினரும் கருத்துக் கூறியுள்ளனர். ''கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ம.தி.மு.க எடுக்கப்போகும் நிலைப்பாடும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பதும் இந்தக் கள ஆய்வின் முக்கிய முடிவுகளில் ஒன்று!

 வை கோ வின் தேர்தல் புறக்கணிப்பு நிச்சயம் அம்மாவுக்குத்தான் பாதிப்பு.. தி மு க வுக்கு 1% கூட பாதிப்பு இல்லை.. வை கோவுக்கான 4% ஓட்டுல 2 % ஓட்டு தி மு க வுக்கு விழ  வாய்ப்பு இருக்கு.. ஆனா 0.0001% கூட அம்மாவுக்கு விழ வாய்ப்பில்லை...


ஆய்வு முடிவை வெளியிட்ட பேராசிரியர் ராஜ​நாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


1. ''ஊழல் விவகாரம் பற்றிய கேள்விகளே இந்த ஆய்வில் இல்லையே?''

''மக்கள் எதைப் பிரச்னையாகக் கருதுகிறார்கள் என்பதுதான் எங்கள் ஆய்வின் அணுகுமுறை அடிப்படை. நாங்கள் சந்தித்த மக்கள், ஊழலையும் ஒரு பிரச்னையாகச் சொன்னார்கள். அரசுத் துறைகளின் ஊழல், முதல்வர் குடும்பத்தின் சொத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசுகிறார்கள். ஆனால், இதை வைத்துத் தேர்தலைத் தீர்மானிப்பதாக அவர்கள் சொல்லவில்லை.''

மக்கள் மனம் விசித்திரமானது.. கடைசி நேரத்தில் அது திடுக் முடிவுகளை எடுக்கக்கூடும்... 

2. ''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?''

''எல்லா இடங்களிலும் சுவர், சுவரொட்டி விளம்பரங்​களை மிகவும் குறைவாகவே பார்க்கமுடிந்தது. இதனால், பெரிய கட்சியின் வேட்பாளர் பெயர்கூட மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை. பொதுக் கூட்டம் நடத்தும்போதுதான், பெயர்களையே மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களைப்பற்றி எந்தப் பகுதியிலும் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்​தின் கெடுபிடியால், பெரும்பாலான இடங்கள் இறுக்கமாக இருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை 'ஜனநாயக விரோதம்’ என்று கணிசமானவர்கள் கருத்துக் கூறினார்கள்.


கடந்த  ஒன்பது நாட்களில், 11 இடங்களில் தேர்தல் ஆணையத்தினர் எங்களின் வாகனங்களையும் சோதனை இட்டனர். நாங்கள் அதை கேமராவில் பதிவுசெய்ய... 'நம்பளையே படம் பிடிக்கிறாங்க!’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்?’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்!''


விட்டா கழகத்தினர் அவங்களுக்கு பொட்டியே குடுத்திருப்பாங்க.. 

3. ''எத்தனை தொகுதிகளுக்குப் போய் வந்தீர்கள்... பரவலான நிலவரம் என்ன?''

''39 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 117 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றோம். பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமான நிலைதான்.

இதில், தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடு இல்லை!


அதே சமயம், தி.மு.க-வின் தேர்தல் வியூகங்கள் அ.தி.மு.க. அணியைவிட அதிக அளவிலான மக்களிடம் சென்ற​டைந்து இருக்கிறது. இவர்களின் 'ரீச்’சை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவு அமையலாம்!''

 இப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா? அய்யாவா? வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்..  



ஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூறு வழக்கு வருமா? அதிமுக பர பரப்பு...

டந்த சனிக்கிழமை சென்னையில் மையம்கொண்டது ஸ்டாலின் புயல்!
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/a-fathima-300x225.jpg
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பெருங்குடி, ஒக்கியம், துரைப்​பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் என்று புற நகர்ப் பகுதிகளில் புகுந்து புறப்பட்டார்! 

ஏன்? நகரப்பக்கங்கள் எல்லாம் நரகம் பக்கம் என்பதாலா?
ஐ.டி. பார்க் நிறைந்த ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு கிலோ மீட்​டருக்கு ஒரு ஷாமியானா பந்தல் போட்டு,  ஸ்டாலினின் வருகையை எதிர்​பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். நேரம் ஆக ஆக... மகளிர் சுய உதவிக் குழுவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறமும் நெட்டிக்கொண்டு திரள... கடும் டிராஃபிக் ஜாம்!

ஏன்.. குஷ்பூ வர்றாங்கன்னு நினைச்சுட்டாங்களா?

இதனால் பெருங்குடியை நோக்கி வந்த ஸ்டாலினின் காரும் அதில் சிக்கிக்கொள்ள... ''தளபதி கார் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. ரோட்டுல போற வண்டிகளுக்கு வழிவிட்டு நில்லுங்க. நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!'' என்று ஓர் உடன்பிறப்பு மைக்கில் கெஞ்ச... அதை ஏற்றுக்கொண்டு ஒருவாறாகக் கூட்டம் கட்டுக்குள் வந்தது.

மடமை, வன்னியம், சில்லறைத்தட்டுப்பாடு..... 

இதற்கிடையே, எம்.ஜி.ஆர். வேஷம் போட்ட ஒருவர், பிரசார வாகனத்தில் கம்பீரமாக எழுந்து நின்றபடி மெயின் ரோட்டுக்குள் நுழைந்துவிட்டார். வேறு எங்கோ பிரசாரம் போகக் கிளம்பிய அவர், இங்கே ஸ்டாலின் வருவது தெரியாமல் வந்து மாட்ட... அவரது வாகனம் திரும்பிய இடம் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மொய்க்க... ஒரு கணம் ஆடிப்போனவர், உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!



அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் வந்து சேர, தாரை தப்பட்டைகள்... இடைவிடாத வாண வேடிக்கைகள்... என ஏரியா அமளிதுமளி ஆனது. வரவேற்பைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகம் வறுபட்டது, விஜயகாந்த். அதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்குக் கச்சேரி.

அது ஏன்னா ஒரு முறை வெச்சுக்கறாங்க. கலைஞர் அம்மாவை எதிர்ப்பார்.. ஸ்டாலின் கேப்டனை எதிர்ப்பார்.. 

.
''கேப்டன்னு சொல்லிக்கிட்டு வில்லன் ஒருத்தர் வாக்குக் கேட்டு வருவார். அவரை நம்பாதீங்க. சினிமாவுலகூட வில்லன் என்பவர், அடிக்கிற மாதிரி சும்மாதான் ஆக்ஷன் பண்ணுவார். ஆனா இந்த வில்லன், தன் கூட இருக்குற ஆளுங்களை உண்மையாவே அடிக்கிறார். இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? இனிமே அந்த வில்லன்கூட போற வேட்பாளர்கள் எல்லாரும் மறக்காம ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க. அப்பத்தான் தலையில அடிபடாமத் தப்பிக்க முடியும்!'' என்று ஸ்டாலின் பேச... கூட்டத்தில் விசில் பட்டையைக் கிளப்பியது.

ஆமா கவசம் இல்லாட்டி திவசம் தான்/.... 


தொடர்ந்து, தி.மு.க-வின் சாதனை​களைப் பட்டியலிட்ட ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினார். ''தலைவர் கலைஞர் 58 வயதைக் கடந்த முதியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாகக் கூறியுள்ளார். இனி முதியவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குத் தங்கள் பேரன் - பேத்திகளையோ, கட்டிக்கொடுத்த மகளையோ பார்க்கப் போக வேண்டும் என்றால், பணம் செலவழிக்காமல் இலவசமாகவே போகலாம். நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்!'' என்று ஃபேமிலி டச் கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்!


நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை... 

அடுத்து சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பேச்சு...  ஜெயலலிதாவை வெளுத்து வாங்கினார் ஸ்டாலின்.

''இந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கூடி இருக்கிறீர்கள். 1989-ல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த அருமையான திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம். 

இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..?


அப்போது திருமணமாகும் பெண்களுக்கு 5,000 வழங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? 10,000 கொடுத்திருக்க வேண்டாமா?

 அதெப்பிடிங்க முடியும்? உங்களை விட ரெண்டு மடங்கு ஊழல் பண்ணனுமே அதுக்கு..? ஆனா உங்க அளவு அம்மாவால ஊழல் பண்ண முடியலையாம்..


ஆனால், அந்த புண்ணியவதி ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? 'எனக்கே கல்யாணம் ஆகலை. இதுல உங்களுக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன, ஆகலைன்னா எனக்கென்ன?’ என்று நினைத்து அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். இதுதான் அவரது ஆட்சியின் லட்சணம்'' என்று வெளுத்துக் கட்டினார்!

 ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்.. 

Tuesday, April 05, 2011

ஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியின் சிவராஜும்
http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மோதும் ரிஷிவந்தியம் தொகுதியில் கிராமங்கள் அதிகம். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அப்பா இந்தத் தொகுதியில் உள்ள மூங்கில்துரைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில்  முன்பு பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் நடந்தது. அதனால், 'எங்க ஊர் மாப்பிள்ளை விஜய​காந்த்' என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர்.  
 
மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா? 
 
 
கடந்த எம்.பி. தேர்தலில், விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷ் இந்தப் பகுதியில்தான் நின்றார். ரிஷிவந்தியத்தில் 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் விஜயகாந்த் இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் கேட்டு வாங்கினார்.

கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?


''காங்கிரஸ் கட்சியின் சிவராஜ், நாலு தடவை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தும், பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. அரசுக் கல்லூரியோ, தனியார் கல்லூரியோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.


அப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது?

30 வருடங்களாக இந்தப் பகுதியில் சிவராஜின் குடும்ப ஆதிக்கம்தான் நடக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கேப்டன் இங்கே நேரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறார்...'' என்றார், தே.மு.தி.க. தலை​வரான விஜயகாந்த்தின் சகலையும் பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரன். 

ஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா?

இவர்​தான் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்.
விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் செய்த நலத் திட்டங்களைப் பட்டியல் இட்ட இவர், ''அடிக்கடி விருத்தாசலம் தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார் கேப்டன். 

ஆனால், ஆளும் கட்சி எந்த நலத் திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை. கேப்டன் சொன்ன மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய முயன்ற இரண்டு கலெக்டர்​களையும் உடனே மாற்றிவிட்டனர். அடுத்து வந்த கலெக்டர், எதையுமே செய்யவில்லை.

இவை அனைத்தும் விருத்தாசலம் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க-தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால், இந்தத் தொகுதியில் 30 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளை எல்லாம் கேப்டன் தீர்த்துவைப்பார்!'' என்றார் நம்பிக்கையாக.

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது.. 


பதிலுக்கு சிவராஜ் தரப்பிலோ, ''கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை எல்.எல்.ஏ. ஆக்கிய விருத்தாசலம் தொகுதிப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. சட்டசபையிலும் தொகுதிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இங்கே ஓடி வந்து இருக்கிறார்.

அய்யய்யோ.. அவர் நடந்தாலே மூச்சிரைக்கும்.. இந்த லட்சணத்துல ஓடி வந்தாரா?

விஜயகாந்த் பற்றி விருத்தாசலம் மக்களிடம் பேசி எடுக்கப்பட்ட வீடியோ - ஆடியோ சி.டி-களை க்ளைமாக்ஸ் நேரங்களில் கிராமம்தோறும் போட்டுக் காட்டுவோம். சிவராஜ்... இந்த மண்ணின் மைந்தர். விஜயகாந்த், சென்னைக்குப் போய்விடுவார். அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் மக்கள்!'' என்றனர் தெம்பாக.

இதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்.. 


காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் தி.மு.க. எம்.பி-யான ஆதிசங்கருக்கும் ஏழாம்பொருத்தம். வேட்பாளராக சிவராஜை அறிவித்துப் பல நாட்கள் ஆகியும், ஆதிசங்கர் ஒதுங்கியே இருந்தார். தி.மு.க. மேலிடப் பிரமுகர்கள் பேசிய பிறகுதான் சில நாட்களாக சிவராஜுடன் கைகோத்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளார்.

இது எல்லா தொகுதிலயும் நடக்கறதுதானே.. காங்கிரஸ் போட்டி இடும் 63 தொகுதிகள்லயும் தி மு க ஆளுங்க பெரிசா வேலை செய்ய வேண்டாம்னு கலைஞர் வாய் மொழி உத்தரவு போட்டிருக்காரே.. 


சிவராஜிடம் பேசியபோது, ''எனக்குத்தான் வெற்றி​வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொகுதி மக்களுக்கு அறிமுகமான பாரம்பரியக் குடும்பத்துக்காரன். சோனியாவின் தலைமை, ராகுலின் எதிர்கால அரசியல் கனவு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆலோசனை, தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லும்போது, மக்கள் வரவேற்பு மிகுதியாக உள்ளது. வெற்றி உறுதி!'' என்றார்.

சீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. ?


கடைசிக் கட்டமாக, இரண்டு நாட்கள் ரிஷிவந்தியத்திலேயே தங்கிப் பிரசாரம் செய்வாராம் விஜயகாந்த். இப்போதைக்கு கடுமையான போட்டி இருந்தாலும், விஜயகாந்த்தின் பிரசாரத்தை வைத்துத்தான் வாக்கு யாருக்கு என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்!

அய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு? வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ? #டவுட்டு



சிவராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிவராஜ் மீது குபீர் குற்றச்சாட்டு கிளப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண். ''சில வருடங்கள் முன்பு எங்கள் சொத்துப் பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ. சிவராஜை சந்தித்தேன். அதைத் தீர்க்காமல், என்னைக் கடத்திச் சென்று, பலாத்காரப்படுத்திவிட்டார்.

ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?என்ன பேச்சு இது ? ராஸ்கல்.. 

நானும் எனது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பணம் கேட்டு மிரட்டுவதாக, என் மீதே பொய்ப் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளினார்.

போலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து சிவராஜும், ஆதிசங்கர் எம்.பி-யும் எங்களை அழைத்து, சமாதானம் பேசினார்கள். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை.

ஓஹோ.. என்ன சொன்னாரு? ரூ 2 கோடி செட்டில்மெண்ட் பேசி தராம விட்டுட்டரா?

இப்படிப்பட்ட மோசமானவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் கடந்த 26-ம் தேதி சுயேச்சையாக ரிஷிவந்தியத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றேன். ஆனால், சிவராஜின் அடியாட்கள் சிலர், என்னைக் கத்தியால் குத்த வந்தார்கள். தடுத்த என் கணவருக்கு வயிற்றில் காயம். இதையும் மீறி மனுவைத் தாக்கல் செய்தும், அது தள்ளுபடியான மர்மம் புரியவில்லை!'' என்றார் கண்ணீர் மல்க.

இதுல என்ன மர்மம் வேண்டி கிடக்கு?ஆளுங்கட்சியை எதிர்த்தா இந்த கதிதான்.. நீங்க சினிமாப்படம் எதுவும் பார்ப்பது இல்லையா?


இது குறித்து சிவராஜிடம் கேட்டபோது, ''அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நடக்காத ஒன்றைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியுள்ளார். 

 நடக்கலைன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்படறார் போல.. 


இந்தப் பொய்ப் புகாரை தொகுதிவாசிகள் நம்ப மாட்டார்கள். அவர் கணவரை ஆள்வைத்துக் குத்தியதாகச் சொல்வதும் சுத்தப் பொய். தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்னையைக் கிளப்பிப் பணம் பிடுங்க நினைக்கிறார்கள்!'' என்று குமுறுகிறார்!


தொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ  அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, 


அழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/monika/stills/monika_11.jpg 

அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌கன்‌னு 
என்‌ ரசி‌கர்‌கள்‌ சொ‌ல்‌றா‌ங்‌க!
- மோ‌னி‌கா‌ ஜி‌லீ‌ர்‌ பே‌ட்‌டி‌

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌ககை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ உற்‌சா‌க பே‌ட்‌டி‌.

1. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌...

முத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌னு நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத ,வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

என்னங்க  நீங்க ? அவர் அந்தப்படத்துல  உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி

2. அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க...

இவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌. 

நஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.

உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன் 
http://chennai365.com/wp-content/uploads/actress/Monika/Monika-Stills-007.jpg
3. அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌?

கண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு.  அது என்‌னோ‌ட ஈமெ‌யி‌ல்‌ பா‌த்‌தீ‌ங்‌கன்‌னா‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.


ரைட்டு.. அதை நாங்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்

4. உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌?

அதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு. 

மற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌. 
அதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்..  #உண்மை விளம்பி உலகநாதன்

http://spicy.southdreamz.com/cache/awesome-pictures-of-south-actress/monika-.jpg_650.jpg
5. கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க... ஏன்‌?

கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.

அதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌ என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க.

ஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுளி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.

ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன் 

6. பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌?

அப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

கே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன்  மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும் 
http://tamilnews.anytimechennai.com/wp-content/uploads/2009/01/monica281208.jpg
7. இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌...

அகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல நா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌பபோ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.

இது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ "ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. "நோ‌ என்‌ட்‌ரி‌" இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ இஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌.  அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.

மோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு.

"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..?#டவுட்டு

Monday, April 04, 2011

தப்ஸி உங்கள் சாய்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4O4v5C2UtveG4zh5XYaeojnmVY9Vb270LEPvGUZzHvciymuGLMqXA0trUfyrAay2Iss4XBoKePq4HlkCfm_-EMP4-2Yu_59U8yqjDGMfLg01gOKKH8e6kpCFX7JjQK8u7SzuEBxCVlnk/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?