Showing posts with label பாலியல் வழக்கு. Show all posts
Showing posts with label பாலியல் வழக்கு. Show all posts

Sunday, April 26, 2015

கில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங்க ஓடுங்க

டாக்டர் பிரகாஷ்
டாக்டர் பிரகாஷ்
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர். 2001-ல் இவரது மருத்துவமனையில் வேலை பார்த்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் (24).
கணேசன், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாசக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாயின. இதையடுத்து, அவர் வடபழனி போலீஸில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் பிரகாஷ் தன்னை மிரட்டி பல பெண்களு டன் நெருக்கமாக இருக்கச் செய்து வீடியோக்கள் எடுத்ததாகவும், பின்னர், அவற்றை இணையதளத் தில் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி டாக்டர் பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சரவணன் (25), விஜயன் (24) நிக்சன் (24) ஆகியோரை கைது செய்தனர். மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்த சித்ரா, வீடியோக்களை எடுத்தது தெரிய வந்தது. ஆனால், அவர் அப்ரூவராக மாறியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், 2008-ல் டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பிரகாஷுடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரில் நிக்சனை விடுதலை செய்தும், மற்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
இதனிடையே, 2009-ல் தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பிரகாஷ் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.
அப்போது, டாக்டர் பிரகாஷ் தரப்பு வழக்கறிஞர், ‘டாக்டர் பிரகாஷ் சிறந்த மருத்துவ நிபுணர். அறிவுத்திறன் மிக்கவர். அவர் தனது தவறை உணர்ந்து திருந்திவிட்டார். சிறையில் இருந்த காலத்தில் ஆன்மிகம் மற்றும் அறிவியல் தொடர்பாக 100-க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சிறைத் தண்டனையை அனு பவித்து வருகிறார். எனவே, நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாக்டர் பிரகாஷ் இதுவரை அனுபவித்த தண்டனையை முழு தண்டனைக் காலமாக கருதி, நன்னடத்தை காரணமாக விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
13 ஆண்டு சிறைவாசத்தில் 120 புத்தகங்கள்
புழல் சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் பிரகாஷ் எல்லாம் முடிந்தது என்று நினைக்காமல், தண்டனை காலத்தை தனது கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் இடமாக மாற்றி விட்டார். மருத்துவம், ஆன்மிகம், கிரைம் என பல தலைப்புகளில் சுமார் 120 புத்தகங்களை எழுதியிருக்கிறார். இதில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையும் ஆகியிருக்கிறது. சிறையில் இருந்து இவர் எழுதிய ஒரு கிரைம் நாவல் திருடப்பட்டு, பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
டாக்டர் பிரகாஷின் எழுத்துகளை அசோகன் என்பவர் புத்தகமாக வெளியிட்டு வருகிறார். 'சிறையின் மறுபக்கம்' என்ற புத்தகம்தான் முதலில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘வாழ்வதற்கான நூறு வழிகள்’, 'கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்' என பல புத்தகங்கள் வெளிவந்தன. இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் குறித்து தலா 4 தொகுதிகளாக புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். சிறையில் இருந்த காலத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்கங்களை டாக்டர் பிரகாஷ் எழுதியிருக்கிறார்.
சிற்பங்கள் வடிப்பதிலும் வல்லவர்
‘மாயன்’ கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு ‘யாமா’ என்ற பிரம்மாண்டமான மனித தலை சிற்பத்தை சிறையில் வைத்தே தயாரித்தார் டாக்டர் பிரகாஷ். இது 9 அடி உயரமும், நான்கரை அடி அகலமும் கொண்டது. சுமார் 250 கிலோ எடையில் பைபர் மூலம் இதை தயாரித்தார். சிறையில் கண்விழித்து இருந்து மூன்றே நாட்களில் அதை தயாரித்தார். டாக்டர் பிரகாஷ் தயாரித்த இந்த யாமா சிற்பம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறை வளாகம், சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம், எழும்பூர் சிறை பஜார் ஆகிய இடங்களில் சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இவை அனைத்திலும் டாக்டர் பிரகாஷின் ஓவியங்களும் தவறாமல் இடம்பெறும். இவரது ஓவியங்கள் அனைத்தும் பல ஆயிரங்களுக்கு விற்பனையாகியுள்ளன.
டாக்டர் பிரகாஷ் முடநீக்கவியல் நிபுணராவார். வெளிநாட்டு மருத்துவர்களுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு அதில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர். சிறையில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்தக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தனது துறையில் தற்போதுவரை ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டார். கைதிகளுக்கு பாடம் நடத்துதல், சிகிச்சை அளித்தல், கவுன்சலிங் கொடுத்தல் என பல நல்ல பணிகளை சிறையில் செய்தார்.


நன்றி  - த இந்து

Sunday, September 14, 2014

நித்யானந்தாவின் நாடகங்கள் @ ஆண்மை பரிசோதனை

நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காவிட்டால், க‌ட்டாயப்படுத்தி ஆண்மை பரிசோதனை செய்வோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 


கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந் தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. பெங்களூர் விக்டோரியா மருத்துவ மனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோத னைக்கு நித்யானந்தா முழுமை யாக ஒத்துழைக்கவில்லை. 


இதனால் ஆண்மை பரிசோத னைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா சிஐடி போலீஸாரிடம் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து நித்யானந்தா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பெங்களூரில் கர்நாடக சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். 



வலுக்கட்டாய பரிசோதனை
இது தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த முறை நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முறையாக ஒத்துழைக்கவில்லை.ப‌ரிசோதனை நடைபெறுவதற்கு முன்பாக அவர் மருந்து உட்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் குரல் பரிசோதனையின் போது மாத்திரையை தொண்டையில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் இந்த சோதனை முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். 



எனவே மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னதாக ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, முறையான அனுமதி பெற முடிவு செய்துள்ளோம்.விசாரணைக் காலகட்டத்தில் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க‌க்கூடாது என்ற தடை ஆணையையும் பெற திட்டமிட்டுள்ளோம். ஆதலால் அவர் தமிழகத்திற்கு தப்பி செல்ல முடியாது. மீறினால் கைது செய்வோம். 



நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்காவிடில், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வோம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 53-ம் பிரிவிலும், கர்நாடக குற்ற நடைமுறை வரைவு விதிமுறை யின் 21-ம் பிரிவின் கீழும் இதற்கு காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 


அப்போது ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நடை பெறும். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யா னந்தாவிடம் சில முக்கிய சோதனை களை வலுக்கட்டாயமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார். 


ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை; இதனால் ஆண்மை பரிசோதனையே நடக்க‌வில்லை என்று கூறி, மீண்டும் நீதிமன்றத்தை நாட கர்நாடக சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 


கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா வின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.இவ்வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த திங்கள்கிழமை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலும், மடிவாளா தடயவியல் ஆய்வகத்திலும் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரி சோதனை நடைபெற்றது. ‘’அனைத்து ப‌ரிசோதனைகளுக்கும் நித்யானந்தா ஒத்துழைத்தார். அடுத்த 48 மணி நேரத் திற்குள் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் ஆண்மை பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்போம்’’ என தலைமை மருத்துவர் துர்கண்ணா தெரிவித்தார். 



ஆனால் வியாழ‌க்கிழமை மாலை வரை நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப் படவில்லை. தாமதத்திற்கான காரணத்தையும் விக்டோரியா மருத்துவமனை தெரிவிக்கவில்லை. 


இந்நிலையில் ஆண்மை பரி சோதனையில் ஒத்துழைக்காமல் நித்யா னந்தா நாடகம் போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


நித்யானந்தாவின் நாடகங்கள் 

 
இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் ‘தி இந்து'விடம் கூறிய தாவது: திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ஆண்மை பரிசோதனைக்கு எதுவும் சாப்பிடாமல் வர வேண்டும் என நித்யானந்தாவிற்கு மருத்துவர்கள் முன்கூட்டியே தெரிவித்தனர்.ஆனால் அவர் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு 7.30 மணிக்கு வந்தார். ரத்த பரி சோதனை, சிறுநீரக பரிசோதனை செய் யப்பட்டது. அவர் ஏற்கெனவே சாப் பிட்டு வந்ததால் அந்த பரிசோதனை முடிவுகளும் சரியாக கிடைக்கவில்லை. 


இந்த இரு பரிசோதனையால் தனக்கு களைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் நித்யானந்தா ஓய்வெடுத்தார். அதன்பிறகு மனநல மருத்துவர் அவரி டம் உளவியல் சோதனை நடத்தினார். 


ஆண்மை பரிசோதனையில் முக்கியமாக கருதப்படும் சில சோதனைகளுக்கு நித்யானந்தா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தனக்கு இருதய நோய் இருக்கிறது. கடந்த மாதம் கூட லேசான மாரடைப்பு ஏற்பட்டது. எனவே எனது அந்தரங்க பகுதிகளில் ஊசிபோட்டால் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் எனது உயிர் போக வாய்ப்பிருக்கிறது.ஆதலால் ஊசி போட அனுமதிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.



'இது தான் முக்கிய பரிசோதனை. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துகொள்ளுங்கள்' என ம‌ருத்துவர் கள் துர்கண்ணா, கேசவமூர்த்தி, சந்திரசேகர் ரத்கல், வெங்கடராகவ், வீரண்ணா கவுடா, சந்திரசேகர் ஆகியோர் நித்யானந்தாவை வற்புறுத்தியுள்ளனர். 



அதற்கு நித்யானந்தா 'என் உடம்பில் எங்கெங்கு ஊசி போடலாம் என உச்ச நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறதா? அதனைக் காட்டுங்கள். இல்லாவிட்டால் பரிசோத னைக்கு ஒத்துழைக்க முடியாது' என அடம்பிடித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் கர்நாடக சிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷிடம் முறையிட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து பல மருத்துவர்கள் வலுகட்டாயமாக நித்யானந்தாவின் உடைகளை கழற்றி, சோதனை நடத்த முயன்றனர். அப்போது, அவர் சத்தமாக கூச்சல் போட்டு,ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்ய முயற்சித்தால், தேவையற்ற விபரீதங்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி தனது வழக்கறிஞரையும், உதவியாளர்களையும் அழைத்தார். 


திடீரென மயங்கி விழுந்த அவருக்கு ஒன்றரை மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என அவரது உதவியாளர்கள் கூறினர். அதன் பிறகு ஓய்வெடுக்க அனுமதித்தோம். 



தகாத வார்த்தைகளால் திட்டினார்
இறுதிவரை நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்த‌தால் மருத்துவர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவில்லை. ஒத்துழைக்க மறுப்பதற்கான காரணங்களை தன் கைப்பட 7 பக்கங்களில் நித்யானந்தா விரிவான கடிதமாக எழுதி கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு அவருக்கு தங்களால் சோதனை நடத்த முடியாது என விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிஐடி போலீஸ் அதிகாரிகள் நித்யானந்தாவிடம் பேச முயன்றபோது, அவர்களிடம் பேச மறுத்துவிட்டார். அவ்வப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர்களும் உதவியாளர்களும் குறுக்கிட்டு தொந்தரவு செய்தனர். நித்யானந்தாவை கண்டிக்கும் தொனியில் அதிகாரிகள் பேசிய போது, அவரும் உரத்த குரலில் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டினார். அவர் தமிழில் பேசியதால் எதுவும் புரியவில்லை. 


வாயில் மாத்திரை போட்டு மிமிக்ரி
ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் நித்யானந்தாவை லெனின் கருப்பன் வழக்கில் குரல் பரிசோதனை செய்ய மடிவாளா தடயவியல் ஆய்வகத்துக்கு கொண்டு சென்றோம். அப்போது வாயில் சில மாத்திரைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு வேறு குரலில் பேசினார். அதனை போலீஸார் கண்டறிந்து துப்ப சொல்லிய போது, 'வாயில் எதுவும் இல்லை' என மறுத்தார். 



ஆடியோவில் பதிவான குரலுக் கும் தற்போதைய குரலுக்கும் வித்தி யாசத்தை காட்ட வேண்டும் என்ப‌தற் காக வாயில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு நித்யானந்தா மிமிக்ரி செய்தார். 10 நிமிடங்கள் பேசியவர், இதற்கு மேல் தன்னால் பேச முடியாது என மறுத்துவிட்டார். ஆண்மை பரி சோதனைக்கு முழுமையாக ஒத் துழைக்காததால், மீண்டும் நீதிமன் றத்தை நாட முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.




thanx - the hindu