Showing posts with label தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Saturday, June 25, 2022

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)- சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


ஹீரோ சட்டம்  படிச்ச  வக்கீல் . ஒரு  கம்பெனில லீகல்  அட்வைசரா  ஒர்க்  பண்றாரு. அவருக்கு  ஒரு  சம்சாரம், ஒரு  குழந்தை . ஹீரோ  வேலை  விஷயமா  ஆஃபீஸ்ல  ஒர்க்  பண்ணிட்டு  வீட்டுக்கு  லேட்டா  வ்ந்தா மனைவிக்கு  சந்தேகம். கணவருக்கு  வேறு  பெண்கள்  கூட  தொடர்பு  இருக்கோ?னு  , அடிக்கடி  இதனால  குடும்பத்துல  சண்டை  வருது . இதனால்  ஹீரோ  ஒரு  மனநல  மருத்துவரிடம்  மனைவியை  சிகிச்சைக்கு  அனுப்ப  முடிவு  பண்றாரு 


வில்லன்  ஒரு  எலக்ட்ரானிக்ஸ் கடை  வெச்சிருக்கான் ,. அவன்  கடைக்கு  அடிக்கடி  ஹீரோயின்  போனதுண்டு  டேப்  ரிக்கார்டர்  மாதிரி  பொருட்கள்  வாங்கி  இருக்கா . வில்லனுக்கும்  மேரேஜ்  ஆகி  ஒரு  குழந்தை  இருக்கு . வில்லன்  லேடிஸ்  விஷயத்துல  அப்டி  இப்டி இருக்கற  ஆள்  தான் , இது  அவன்  மனைவிக்கும்  தெரியும் 


ஒரு  நாள்  ஹீரோ  நைட்  லேட்டா  வீட்டுக்கு வரும்போது  பெட்ரூமில்  ஆடை  விலகிய  நிலையில்  நெற்றிப்பொட்டு அழிந்த  நிலையில்  தூக்கக்கலக்க்கத்தில்  மனைவி  இருக்க   வில்லன்  அங்கே  கழுத்தில் ரத்தக்காய்த்துடன்  இறந்து  கிடக்கிறான். ஹீரோ  டெட் பாடியை  அப்புறப்படுத்தி  விடுகிறான்


இப்போ  போலீஸ்க்கு  ரெண்டு  சந்தேகம் ., கொலையான  வில்லன்  அவனால்  பாதிக்கப்பட்ட  பெண்கள்  அல்லது  பெண்ணின்  கணவரால்  கொலை  செய்யப்பட்டு  இருக்கலாம்  அல்லது  வில்லனின்  மனைவியே  கொன்று  இருக்கலாம்


இதுக்குப்பின்  இந்தக்கேஸ்  என்ன  ஆச்சு ? என்பதே  கதை 


 ஹீரோவா  சிவக்குமார் .  மனைவி  மீது  பாச்மும்  இருக்கு  சந்தேகமும்  இருக்கு  சராசரிக்கணவனாக  நல்ல  நடிப்பு  போலீசைப்பார்த்து  பம்மும்போது  நல்ல  நடிப்பு 


 ஹீரோயினாக  அம்பிகா . இவரது   ஹேர்  ஸ்டைல்  அந்தக்காலத்தில்  மிகவும்  சிலாகிக்கப்பட்டது. மனநோய்  மிக்க  மனைவியாக  சரியான  நடிப்பு 


வில்லனாக  சத்யராஜ் அதிக  வாய்ப்பில்லை . வில்லியாக  ஐ  மீன்  வில்லனின்  மனைவியாக  சத்யகலா  தேர்ந்த  நடிப்பு    ஹீரோவை  பணம்  கேட்டு  பிளாக்மெயில்  பண்ணுவதெல்லாம்  சரியான  வில்லித்தனம் . கணவர்  இழந்த  சோகநடிப்பை  விட  ஹீரோவை  மிரட்டும்  வில்லி  நடிப்பில்  ஸ்கோர்  பண்றார்


பேபி  மீனா  நல்ல  நடிப்பு . 


வெண்ணிற  ஆடை  மூர்த்தி , ஒய்  ஜி  மகேந்திரன் ,  வனிதா  காமெடி  டிராக்  படத்தின்  கதையோடு  ஒட்டாமல்  தனியா  தெரியுது . அந்த  டிராக்  30  நிமிடம் .  மீதி  மெயின்  கதை  ஒன்றரை  மணி  நேரம்   ஆக  மொத்தம்  2  மணி  நேரப்படம் 


இசை  சங்கர்  கணேஷ் . பாடல்கள்  பெரிய  அளவில்  ஹிட்  இல்லை . இது  மாதிரி  திரில்ல்ர்  படங்களில்  பாட்டை  விட  பிஜிஎம்  முக்கியம். அது  ஓக்கே  ரகம் 



சபாஷ்  டைரக்டர்


1  எடுத்துக்கொண்ட  கதையை  குழப்பாமல்  நேர்த்தியாக  சொன்ன  விதம்  குட் . ஹீரோ  ஹீரோயின்  வில்லன்,  வில்லி  இவர்கள்  கேரக்ட்ர்  ஸ்கெட்ச்  பக்காவா  இருக்கு .கதை  இவ்ர்களைச்சுற்றியே  நடக்குது. அதனால  திரைக்கத்கைல  குழப்பம்  இல்லை 


2   இருக்க்ற  4  கேரக்டரில்  ஒரு  ஆள்  கொலை  செய்யப்படுவதால்  மீதி  இருக்கும்  மூவரில்  ஒருவர்  தான்  கொலையாளி  என்பதில்  டவுட்  இல்லை  என்றாலும்  கொலைக்கான  காரணம்  கொலை  நடந்த  விதம்  அங்கெ  டெட்  பாடி  எப்படி  வந்தது ? என்ற  சஸ்பென்ஸ்  மிகச்சரியாக  காப்பாற்றப்பட்டிருக்கு 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஹீரோயின்  பகலில்  2 மணிக்கு  தூக்க  மாத்திரை  சாப்ட்டுட்டு  நைட்  7  வரை  தூங்கிட்டதா  சொல்றாங்க .ஆனா  ஸ்கூலுக்குப்போன  குழந்தை 4  அல்லது  5  மணிக்கு  வந்துடும்  அதை  யார்  பார்த்துக்குவாங்க ? வேலையாள்  வீட்டில்  பெரியவங்க  யாரும்  இல்லை . குழந்தை  இருக்குனு  தெரிஞ்சும்  ஹீரோயின்  ஏன்  ஸ்லீப்பிங்  டேப்லெட்  எடுக்கனும்? 


2    அன்னைக்கு நைட்  ஹீரோ  வந்து  ஹீரோயின்  கிட்டெ  நீ  ரொம்ப  களைப்பா  இருப்பே, போய்  தூங்கு  அப்டிங்கறார். மதியம்  2  டூ 7  வரை  ஆல்ரெடி  5  மணி  நேரம்  தான்  தூங்கிடுச்சே? மறுபடி  என்ன  களைப்பு ? 


3  அறிமுகம்  இல்லாத  ஆள்  வீட்டில்  ஹாலில்  உட்கார  வைத்து  விட்டு  யாராவது  ஒரு  லேடி  பெட்ரூம்  கதவைத்தாழ்போடாம  பெப்பெரப்பேனு  தூங்குவாங்களா? 


4  டெட் பாடியை  ஹீரோ  அப்புறப்படுத்தும்போது  காரின் டிக்கியிலோ  பின்  சீட்டிலோ  டெட்பாடியை  வைக்காமல்   முன்  சீட்டிலேயே  வெச்சுக்கிட்டு  தெனாவெட்டா  போறார் . வ்ழில போலிஸ்  பார்க்காதா?


5 ஹீரோ  ப்ங்களாவில்  வசிக்கிறார். கார்  வெச்சிருக்கார் , ஆனா  மனைவியின்  சிகிச்சைக்கு  மாமனாரிடம்  ப்ணம்  கேட்கிறார்.  வில்லி  பிளாக் மெயில்  பண்ணும்போது  மாமனாரிடம்  ஒரு  டைம்  10.000  ரூபா  அடுத்த  டைம்  15,000  ரூபா  கேட்கிறார்  அவர்  கிட்டே  சேவிங்க்சே  இருக்காதா? 


6   வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ன  முடிவெடுத்தால்  வீட்டுக்கதவை  பெட்ரூம்  கதவை  தாழ்  போட்டுக்க  மாட்டாரா? 


7  ஹீரோ , வில்லி  இருவர்  மீதும்  போலீஸ்க்கு  டவுட்  வந்துடுச்சு  என்பது  இருவருக்கும்  தெரியுது , அவங்க  ஃபோன்  ஒட்டுக்கேட்கப்படும்னு  அவங்களுக்குத்தெரியாதா?


 ரசித்த வசனங்கள்


1  செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனைப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.


2  நாய்  எப்போக்கடிக்கும் ? நோய் எப்போப்பிடிக்கும்?னு யாராலும்  சொல்ல  முடியாது


3  என்  கணவர்  கடனைத்தவிர  வேற  எதையும் எனக்காக  வெச்சுட்டுப்போகலை 

மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.


5   சந்தேகம்கறது  புற்று  நோய்  மாதிரி..அது  தொற்றிக்கிட்டா  உயிரை  எடுக்கற  வரைக்கும்  கூடவே  இருக்கும் 


6  இந்த  கத்தி   ரொம்பக்கூர்மையா  இருக்கே? இதை  ஏன்  வீட்ல  வெச்சிருக்கீங்க? 


கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”

7    உங்க  பொண்ணு  ரொம்ப  வெட்கப்படுதே?

அவளுக்கு  இதுதான்  முதல்  கல்யாண,ம், போகப்போக  சரி  ஆகிடும் 

8 ஒரு  பொண்ணு  தன்  புருசனோட  எச்சில்  பட்ட பானத்தை  குடிக்கும்போதும்  என்றாவது  எக்குத்தப்பா  அவன்  கிட்டே  மாட்டிக்கிட்டு  இன்ப  வேதனைல மூழ்கும்போதும்  அவ  அடையற  சந்தோச்த்துக்கு  அளவே  இல்லை 


9   வீட்டுச்சாப்பாடு  .. உங்களுக்குப்பிடிக்குதோ  இல்லையோ?

10  என் குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”


11 குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”


சி பிஎஸ்   ஃபைன்ல்  கமெண்ட் - ஆஸ்கார்  மூவிஸ்  தயாரிப்பில்  எம்  பாஸ்கர்  இயக்கத்தில்   உருவான  நல்ல சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படம்   யூ  ட்யூப்பில்  அமேசான்  பிரைமில்  கிடைக்குது . பார்க்கலாம், இது  ரிலீஸ்  டைமில்  வெள்ளி விழா  கொண்டாடிய  படம்  ரேட்டிங்  2.75  /5   . இது  ஏதோ  ஃபாரீன்  படத்தை  பட்டி  டிங்கரிங்  செய்தது  போல  இருக்கு






















7