Showing posts with label ஒன்பதுல குரு. Show all posts
Showing posts with label ஒன்பதுல குரு. Show all posts

Friday, March 08, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

 

எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா  & கண்ணா லட்டு தின்ன ஆசையா?  அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல


நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட  ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும்  ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த  கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .


ஹீரோ வினய்  என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே?  அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா?  ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )


ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் . 




படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா 


பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல 


 ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. (  ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல  10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் . 


 வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் . 


 கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது 



2.  படத்தின் ஹீரோயின் லட்சுமிராய்  படம் போட்டு 97 வது நிமிடம் தான்  அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது 



3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது 



4.  பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம்  ( அடி ஆத்தாடி ) 


5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி


6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம்  ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான  வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை ) 


7 . மனோபாலாவின் சம்சாரத்தை  வேறொரு நபர்  கிஸ்  அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா! 


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .



2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே  “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே?  தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா? 


3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில்  “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர் 


4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு  என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ் 


5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..


6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் ..  ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை 



7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை 



8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி? 


9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை 

10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை  



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க



2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ? 


- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ 




3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான்  லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ? 



4.  ஏய், டூ வட் ஐ ஸே.. 

 என்னது? வாட்டர்  சப்ளை வேணுமா?



5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன் 


6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?

 அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்

 ஆடு மேய்க்கறாங்களா? 


 அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம் 


 குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ் 



7.  இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா 


 ரஜினியை கேட்டதா சொல்லுங்க 



8.  நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம் 


 அங்கே வேணாம் , குஜராத் போலாம்// 


 இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு  , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை 



9.  தண்ணி குடு 

 இல்லை 


 இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)



10.  டேய், இது எத்தனை நாளா நடக்குது? 


 இப்போத்தான் அரை மணி நேரமா 





11.  நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன் 


 ஓ, எப்போ சாவீங்க ?


12.  எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க


 அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா?  ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )


13.  இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?

 மிருக சீசரம் , கவுரவ கோத்திரம் 

 கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே



14.  என்ன பேசறீங்க? 

 தமிழ் தான் 


15.  ஏய்.. புரிஞ்சுக்க 


 முதல்ல புரியற மாதிரி பேசு


16.  புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது 


17.  முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு 


18.  நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன் 




19.  அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல 


20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?





21.  மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்? 

 சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர் 



22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க  ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)




23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?


24.  அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா? 


 குட்டியே போடும்  ( அதாவது வாரிசு ) 



25. உன் மாமியார்  கராத்தாவுல பிளாக் பெல்ட்னு சொல்லவே இல்லை?


இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?


26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்





எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு  ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

 ரேட்டிங்க் -   2.25  / 5


Thursday, March 07, 2013

ஒன்பதுல குரு - செம காமெடி படம் - லட்சுமிராய் பேட்டி

 

சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒன்பதுல குரு’. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.


செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய நடிகர்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.


“ஒன்பதுல குரு” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள “வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு” பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர் நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனி வாசனும் இதில் “அலையாத சும்மா சும்மா” பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார்.


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் திரையுலக முக்கியஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதை பார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது என்று இயக்குனர் பி.டி.செல்வ குமாரை பாராட்டினார்.


அவர் கூறியதாவது:-


நடிகர் விஜய் வீட்டில் இருபது வருடமாக பி.டி. செல்வகுமார் பணியாற்றுகிறார். அவர் இயக்கியுள்ள “ஒன்பதுல குரு” படம் ஜாலியான காமெடி படமாக வந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த படமாக உருவாக்கி உள்ளார். விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


நடிகர் ஜீவா பேசும் போது, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி “ஒன்பதுல குரு” படத்தை எடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். சில காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றார்.


இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது:-


“ஒன்பதுல குரு” படத்தின் கதை எனக்கு தெரியும். பிரேம்ஜி அடிக்கடி இந்த படத்தை பற்றி என்னிடம் கூறுவது உண்டு. இன்றைய இளைஞர்கள் காமெடி படங்களை அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த படம் வந்துள்ளது. இளைஞர்களின் ஜாலி கலாட்டாக்கள், திருமணமாகி சந்திக்கும் பிரச்சினைகள் இதில் அலசப்பட்டு உள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.


இசையமைப்பாளர் ‘கே’ கூறும்போது, “வா மச்சி வா” பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. நிறைய பாராட்டுகள் குவிகிறது. பெண்களுக்கும் இப்பாட்டு பிடித்துள்ளது என்றார். “ஒன்பதுலகுரு” படத்தை காஸ்மா அன்ட்பாஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


 


தென்னிந்திய சினி பியூட்டிகளில் சென்ஷேசனல் நியூஸ் மேக்கர் லட்சுமிராய். சினிமா, பெர்சனல், காதல், கிசுகிசு என எல்லாமும் பேசலாம் அவரிடம்...

 

 1.  இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', "காஞ்சனா' என லாரன்ஸூடன் நல்ல சினேகமாகத்தானே இருந்தீர்கள். ஆனால், திடீரென முனி பார்ட் 3-க்கு டாப்ஸி வந்து விட்டாரே....

.ஸோ வாட்...! அதைப் பற்றித்தான் முதலில் கேட்க வேண்டுமா? எனக்கு பேய் கதைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' நடிக்கிற போதே "காஞ்சனா' பற்றி என்னிடம் பேசியிருந்தார் லாரன்ஸ்.""இது மாதிரி கதை வந்தால் எனக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும்'' என்று அப்போது சொல்லியிருந்தேன். அதை நினைவில் வைத்து திடீரென்று அழைத்து "காஞ்சனா'வில் வாய்ப்பு தந்தார். அப்போதே நான் அதை எதிர்பார்க்கவில்லை. இப்போது என் இடத்தை டாப்ஸி பிடித்துக் கொண்டார் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சினிமாவில் எனக்கென ஒரு மைலேஜ் இருக்கிறது. அதற்குள்தான் என்னால் சர்வே செய்ய முடியும். இது எனக்கான கேரக்டர் என யாரும் எழுதி வைக்க முடியாது.

"மங்காத்தா' படத்தில் ""நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் நம்ம பேர் எழுதியிருக்கும்''ன்னு அஜித் சார் சொல்லுவார். அதுதான் உண்மை. எனக்கு அது இல்லை. இது இல்லை என புலம்பும் கேரக்டராக நான் வளரவில்லை. லாரன்ஸூக்கும் எனக்கும் இப்போதும் நட்புதான். அதற்காக அவரிடம் நான் சண்டை போட முடியாது. "முனி பார்ட் 3' கதை பற்றி எனக்குத் தெரியும். அது வேறு மாதிரியானது. அதற்கு டாப்ஸி மாதிரியான ஒரு நடிகைதான் தேவைப்படுவார். ப்ளீஸ் அதை விட்டுடுங்க.

2. நல்ல உயரம், வசீகரிக்கும் அழகு, முன்னணி நடிகர்கள் முதல் நேற்று வந்த ஜூனியர் வரைக்கும் நட்பு இருந்தும் உங்களால் ஏன் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை?

நல்ல இடம் எப்படி இருக்கும்? அதற்கான தகுதிகளை முதலில் சொல்லுங்கள். நான் இருக்கும் இடம் பற்றி சொல்லுகிறேன். இதுவரை எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. தினம் தினம் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அப்படி நடக்கிறதா என்ன? பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு நல்லது பெரிதாக நடக்கும் என்று சொல்லுவார்கள்.



நான் பொறுமையாக இருக்கிறேன். நல்லது நாளைக்கே நடக்கலாம். மூன்று மொழிகளில் 40 படங்கள் வரை நடித்தாகி விட்டது. என் முகம், நடிப்பு பற்றி இனி சொல்லித்தான் ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. நடித்த எல்லா படங்களிலுமே என் கேரக்டரை நான் நன்றாக செய்து முடித்திருக்கிறேன். அந்த நம்பிக்கை மட்டுமே என்னை நன்றாக வைத்துக் கொள்ளும். எல்லா படங்களிலும் பிடித்துதான் நடித்தேன். அதில் எனக்குரிய இடங்கள் கிடைக்காமல் போனால் நான் என்ன செய்வேன்?



யாரிடமும் சென்று எந்த வாய்ப்பையும் நான் இதுவரை கேட்டதில்லை. "தாண்டவம்', "மங்காத்தா' படங்களில் சின்ன கேரக்டரில் வந்தது பற்றி கேட்கிறார்கள். அந்த டைரக்டர்ஸ் என்னை நம்பி வந்தாங்க. நடித்துக் கொடுத்தேன். கதைக்காக நான் எந்த கேரக்டரையும் ஏற்க தயாரா இருக்கிறேன். நல்ல நடிகைக்கான குணம் இதுதானே. அப்ப நான் எந்த இடத்தில் இருக்கிறேன் சொல்லுங்கள்....


3. ....வினய், பிரேம்ஜி, சத்யன்னு "ஒன்பதுல குரு' கலகலப்பாக வந்திருக்கிறதாமே? உங்களுக்கு அதில் என்ன ரோல்?


"ஒன்பதுல குரு' ஒரு க்யூட் ஸ்டோரி. காதல், கலாட்டா, ரொமான்ஸ், கிளாமர் எல்லாமே அதிகமாக இருக்கும். எனக்கு ஒரே படத்தில் காதல், அதே சமயம் கலாட்டான்னு நடிக்க இப்போதுதான் இந்தப் படம் அமைந்திருக்கிறது. உண்மையிலேயே நடிக்க ஸ்கோப் உள்ள படம். ரொமான்ஸ், கிளாமர்ன்னு இடைவேளை வரைக்கும் படம் இளமைத் துள்ளலாக இருக்கும். அந்த படத்தில் நடிக்கவில்லையென்றால் உண்மையிலேயே ஒரு நல்ல சினிமாவை மிஸ் செய்திருப்பேன். சினிமாவுக்கு வந்த சமயத்தில் இருந்தே பி.டி.செல்வகுமாரை தெரியும்.


""மேடம் நான் ஒரு படம் பண்றேன். நீங்கதான் ஹீரோயின்''னு அடிக்கடி சொல்லுவார். விளையாட்டு வார்த்தைகள் என்று நினைத்தேன். ஒரு நாள் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து படிக்க சொல்லிவிட்டார். ஒவ்வொருத்தரையும் மற்றவர்கள் ஒவ்வொரு விதமாக எடை போட்டு வைத்திருப்பார்கள். என்னை அவர் ஒரு கதைக்காக அப்படி நினைத்து வைத்திருப்பார் என்று நினைக்கவில்லை. அவ்வளவு சூப்பரா படம் வந்திருக்கிறது.

 பார்க்க எனக்கே ஆசையா இருக்கிறது.

4. கன்னட சினிமாவில் அதிகமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல?

என் தாய் மொழி சினிமா அதுதானே. இருந்தாலும் நான் தமிழில்தான் அறிமுகமானேன். தமிழ் சினிமாக்களை பார்த்து விட்டுதான் கன்னடத்தில் இருந்தே வாய்ப்புகள் வந்தன. மற்றபடி தமிழ் சினிமாதான் எனக்கு அதிகம் பிடிக்கும். இங்கே வாய்ப்புகள் இல்லாத போது, எனக்கு தெரிந்த என் மொழி சினிமாக்களில் நடிக்கிறேன். தமிழ், கன்னடம், மலையாளம் இந்த மூன்று மொழிகளில் மட்டுமே இப்போது நடித்து வருகிறேன். மற்ற மொழி சினிமாக்களில் நடிப்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

த்ரிஷா பத்து வருஷத்துக்கும் மேலாக சினிமாவில் நடிக்கிறாங்க. 30 வயதை கடந்தாலும் அனுஷ்காவின் கால்ஷீட் வாங்க கூட்டம் வரிசையில் நிற்கிறது. ஒவ்வொருத்தரும் ஒரு வகையில் ரெக்கார்ட் பிரேக் பண்றாங்க. அது மாதிரி எதாவது லட்சியம் உங்களுக்கு இருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில் சொல்லுவது கஷ்டம்தான். நான் சினிமாவுக்கு வந்தபோது சிம்ரனுக்கு அடுத்து நான்தான்னு சிலர் சொன்னாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் சிம்ரன்னா அது சிம்ரன்தான். அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஜோதிகாவின் இடம் கூட இன்னும் காலியாகத்தான் இருக்கிறது. யாருக்கும் யாரும் நிகர் கிடையாது. அவரவர்களுக்கு தெரிந்ததை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி செய்கிறார்கள். கிளாமர்தான் எனக்கு செட்டாகும்ன்னு பலர் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அதை உடைக்கும் விதத்தில் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படம் நடித்து காண்பித்தேன். இருந்தாலும், அதன் பின்னும் கிளாமர் கதைகள்தான் தேடி வந்தன. ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை. அது மாதிரி ஒரு கதைதான் எனக்கு வேண்டும். மற்றபடி சினிமாவில் எந்த லட்சியமும் இல்லை....இருக்கவும் கூடாது.

5. டோனி தொடங்கி எல்லா கிசுகிசுக்களுக்கும் வெளிப்படையாக பதில் சொல்லுவீங்க. ஆனால், இப்போ உங்களை பற்றி கிசுகிசுக்களே இல்லையே.... என்ன மேஜிக்?

நடிகையாக பார்ப்பதை விட என்னை சக மனுஷியாக பார்த்தால் நான் இன்னும் அன்பானவளாக மாறுவேன். கிசுகிசுக்கள் வருகிற நேரங்களிலும், அதை பற்றி என் நண்பர்கள் பேசும் நேரங்களிலும் எனக்கு கோபமே வராது. ஏனென்றால் நான் இருப்பது சினிமாவில். அதில் அப்படிப்பட்ட பேச்சுக்களைத்தான் எதிர்பார்க்க முடியும். இப்போதைக்கு என்னிடம் காதல் இல்லை. ஆனால் அது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில சினேகம் காதலாக மாறி விடுகிற தருணம் வரும் போது, சினிமா உலகம் தவறாக சித்தரித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. எனக்கு நிறைய காதல் வந்திருக்கிறது. ஒன்றுமே நிலைக்கவில்லை. இப்போதெல்லாம் யாரையும் நான் காதலிப்பதே இல்லை. கிசுகிசுக்கள் இல்லாமல் போனதற்கு அதுதான் காரணமாக இருக்குமோ...? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காதல் இல்லாமல் வாழ முடியாது.

 

 thanx - dinamani, 123 cinema