Showing posts with label எமி ஜாக்சன். Show all posts
Showing posts with label எமி ஜாக்சன். Show all posts

Thursday, November 19, 2015

கோலிவுட் கிச்சடி: கைவிட்டுப்போன வாய்ப்பு?

எமி - மனிஷா - ‘என்னுள் ஆயிரம்’ படத்தில் மகா - தனுஷ், சமந்தா
எமி - மனிஷா - ‘என்னுள் ஆயிரம்’ படத்தில் மகா - தனுஷ், சமந்தா


‘த்ரிஷா இல்லன்னா நயந்தாரா’ படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்து சர்ச்சையைக் கிளப்பியவர் மானிஷா யாதவ். இந்தப் படம் தவிர அவர் கையில் இருக்கும் ஒரே படம் `ஒரு குப்பைக் கதை’. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய `ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி வாய்ப்பை மானிஷா யாதவுக்கு கொடுக்க முடிவுசெய்திருந்தாராம் இயக்குநர். ஆனால் `த்ரிஷா இல்லன்னா நயந்தாரா’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்ததால் மனிஷாவிடமிருந்து அந்த வாய்ப்பு கைநழுவி விட்டதாகச் சொல்கிறார்கள்.


கேரளத்துப் பெண்!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும் கேரளத்துப் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது எமி ஜாக்சனுக்கு. ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் ஜோடியாக `சிங் இஸ் பிளிங்’ படத்தில் நடித்த எமி தற்போது இந்தி வாய்ப்புகளை தள்ளி வைத்துவிட்டு, முழு வீச்சில் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

`வேலையில்லா பட்டதாரி’ பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக `தங்கமகன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் இன்னொரு ஹீரோயின் சமந்தா. அடுத்து உதயநிதி ஜோடியாக `கெத்து’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தற்போது அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் சமந்தா இருக்கிறார். ஆனால் சமந்தாவைவிட அழகான கேரக்டர் எமி ஜாக்சனுக்குத்தானாம். இந்தப் படத்தில்தான் மலையாளப் பெண்ணாக நடித்து வருகிறார் எமி.


தனுஷைத் தாக்கிய காய்ச்சல்

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் `விசாரணை’ படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார். தனுஷுடன் இணைந்து `பொல்லாதவன்', 'ஆடுகளம்' வெற்றிப்படங்களை தந்த இவர், தற்போது தனுஷுடன் கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஏற்கெனவே சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த 'வட சென்னை' படத்தின் கதையில்தான் தனுஷ் நடித்து தயாரிக்க இருக்கிறாராம்.

இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் ஏற்கெனவே வடசென்னை தாதாவாக தனுஷ் நடித்த `மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தனுஷ். இவரும் இரண்டாம் பாகக் காய்ச்சலில் சிக்கிவிட்டார்.


வாரிசு வருகிறார்

புதுமுகங்கள் மகாதேவன் - மெரீனா மைக்கேல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `என்னுள் ஆயிரம்’. இந்தப் படத்தின் மூலம் தனது மகன் மகா என்கிற மகாதேவனை நாயகனாக அறிமுகம் செய்கிறார் நடிகர் டெல்லி கணேஷ். இந்தப் படத்தின் கதை மீதும் மகனின் நடிப்புத் திறமை மீதும் உள்ள நம்பிக்கையால் இந்தப் படத்தை டெல்லி கணேஷே தயாரித்திருக்கிறாராம். இயக்குநர் விஜயின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் படம் இது .


நடிகர் கவுதம்!

‘பிரேமம்’ மலையாளப் படத்தின் வெற்றியால் `நேரம்’ பட நாயகன் நிவின் பாலிக்கு இது செமத்தியான நல்ல நேரம். தமிழில் அதன்பிறகு நடிக்காமல் இருந்த நிவின் பாலியை அடுத்து கவுதம் மேனன் இயக்குவது முடிவாகிவிட்டதாம். அதுவொரு லவ் த்ரில்லர் கதை என்கிறார்கள். இதற்கிடையில் மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசன் இயக்கவிருக்கும் ‘ஜாக்கோபின்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்’ என்ற மலையாளப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். இந்தப் படத்தில் கவுதமை ஒட்டவைத்ததே நிவின் பாலிதானாம்.


பிரியும் ஜோடி!

‘உறுமீன்’ படத்தில் நடித்தபோது காதல் கொண்டு கல்யாணம் வரை வந்துவிட்டது பாபி -சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஜோடி. இதற்கிடையில் ஒரு சோகமான காதல் செய்தி ஆந்திரக் கரையிலிருந்து கோலிவுட்டைத் தாக்கியிருக்கிறது. பாகுபாலி நாயகன் பிரபாஸ்- அனுஷ்கா இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பதாக உச்ச ஸ்தாயிலில் கத்திவந்தன ஆந்திர ஊடகங்கள். ஆனால் தற்போது பிரபாஸுக்கு வேறு பெண் பார்த்து திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் `இஞ்சி இடுப்பழகி’ படத்தின் உழைப்புக்காக பாரட்டுகளை அள்ளிவரும் அனுஷ்கா, தற்போது ஆழ்ந்த கவலையில் முழ்கியிருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.

thanks the hindu

Wednesday, April 01, 2015

‘உப்புக்கருவாடு’ ஹீரோ ஆன நகைச்சுவை நடிகர் கருணாகரன் எமி ஜாக்சனை கரெக்ட் செஞ்சுட்டாரா?திரை உலகம் அதிர்ச்சி

நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாகரன். தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கிவரும் ‘உப்புக்கருவாடு’ படத்தில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் திரையுலகுக்கு வந்தது எப்படி?
என் சொந்த ஊர் திருச்சி. ஈ.ஆர்.சி பள்ளியில் படித்தேன். அப்பா ‘ரா’வில் பணியாற்றியதால் டெல்லியில் கொஞ்ச காலம் படித்தேன். பிறகு தஞ்சாவூர் சண்முகா கல்லூரியில் பொறியியல் படித்தேன். சென்னையில் மென்பொருள் பொறி யாளராக பணியாற்றினேன். நான் படிக்கும் போதே எனக்கு இயக்குநர் நலன் குமார சாமியை தெரியும். அவர் இயக்கிய சில குறும் படங்களில் நடித்திருக்கிறேன். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்தேன். இரவில் டப்பிங் பேசுவேன்.
ஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.
உங்களை சினிமா நடிகனாக்கியது இயக்குநர் சுந்தர்.சி என்கிறார்களே. உண்மையா?
உண்மைதான். ‘கலகலப்பு’ படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தார். வேலையில் இருப்ப தால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியும் “காசு பணம் துட்டு” பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா?
ரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்?
எமி ஜாக்சனுக்கு பிடித்த நாயகன் நீங்கள்தானாமே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படப்பிடிப்பு கொச்சி அருகில் நடந்தது. மலைப்பகுதி ஒன்றில் எமி ஜாக்சன் லூனா வண்டி ஓட்டும் காட்சி அது. மலையின் இரண்டு பக்கமும் பள்ளம். நானும், உதயநிதியும் காரில் அமர்ந்திருந்தோம். எமி ஜாக்சன் வண்டியை ஓட்டிக்கொண்டு பள்ளத்துக்கு மிக அருகில் சென்றுவிட்டார். நான் காரில் இருந்து ஓடிச்சென்று வண்டியைப் பிடித்து நிறுத்தினேன். தனக்கே உரிய ஸ்டைலில் நன்றி சொன்னார். இந்தக் காட்சியைப் பார்த்து உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தார். மற்றபடி தனக்கு பிடித்த நாயகன் என்றெல்லாம் என்னைப்பற்றி எமி ஜாக்சன் சொல்லவில்லை.
நீங்கள் சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்?
நான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தபோது வீட்டில் ரொம்பவே பயந்தார்கள். இப்போது, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நான் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் என் மனைவி எச்.ஆர். துறையில் வேலை பார்த்துவந்தார். அப்போது காதலைச் சொன்னால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லவில்லை. சினிமாவுக்காக வேலையை விடும் போது தைரிய மாக போய் காதலை சொல்லிவிட்டேன். காதலைச் சொல்லும் தைரியத்தை சினிமாதான் எனக்கு தந்தது.

நன்றி  -த  இந்து

Saturday, January 17, 2015

'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி? - மக்கள் கலவை கருத்து

  •  
      விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால் இப்படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
    தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேதியில் வெளியானது. இன்று (ஜனவரி 16) இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
    இதுவரை தயாரான தமிழ்ப் படங்களைவிட 'ஐ' படத்தின் பட்ஜெட் அதிகம் (சுமார் ரூ.100 கோடி என்கிறார்கள்.) என்பதால் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பல்வேறு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
    இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 திரையங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஐ'.
    ஷங்கர், விக்ரம் உள்ளிட்ட மொத்த படக் குழுவினரும் இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தியதால் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் கிடைத்திருக்கிறது என்கிறது திரையுலக வட்டாரம்.
    தமிழில் முதல் நாளில் மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். அதில் நிகர வசூல் ரூ.8 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து ரூ.7.5 கோடி வசூலாகி இருக்கிறதாம். கேரளாவில் எவ்வளவு வசூல் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
    அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர்.
    திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை.
    விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள்.
    சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
    விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர்.
    ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள்.
    இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.
    தமிழில் U/A சான்றிதழுடன் வெளியாகி இருப்பதால், தமிழக அரசுக்கு 30% வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆந்திரா, கேரளா, இந்தி, வெளிநாடு ஆகிய இடங்களில் விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகி இருப்பதால் வரும் நாட்களில்தான் தயாரிப்பாளரின் வருவாய் நிலவரம் என்று தெரிய வரும்.
     
     
    t, Health and Safety Coordinator at Saudi Iron & Steel Company(HADEED) 
    நல்ல படம்
    Points
    560
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
  • vignesh  
    பரவை முனியம்மா ஒரு படத்தில் சொல்லுவர், " இந்த கருமத்தை தான் ராத்திரி முழுக்க கண் முழிச்சு ஒட்டுநீங்களான்னு?" . அது போல இந்த படத்தை தான் மூணு வருஷமா எடுத்தீன்களான்னு கேக்க தோணுது . பெருச்சாளி வேஷத்துல புதுமை பண்ணுவாங்கன்னு பாத்தா, அது ஒரு பாட்டு சீனுக்கு தானாம். கஷ்டம் டா சாமி. நன்றாக உழைத்திருந்தும் வீழலுக்கு இறைத்த நீர்...
    Points
    125
    about 4 hours ago ·   (16) ·   (2) ·  reply (0) · 
  • South Movemen  
    story good compare recent tamil movie.
    Points
    135
    about 4 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • oorvambu  
    லிங்கா,, கத்தி,, போன்ற குப்பைகளுக்கு ஐ எவ்வளவோ பரவாயில்லை,, கதாநாயகன் அடித்தே பார்த்தவர்களுக்கு,, அவனை சற்று கோரமாக பார்க்க அலுப்பு தட்டுகிறது,, ஷங்கர் மற்றும் விக்ரமின் உழைப்பு பாரட்ட வேண்டிய படம்,, பார்க்க பிடிக்காதவர்கள்,, விஜயின் சுறா என்று ஒரு படம் இருக்கிறது,, நான்கு முறை பார்த்தல் நாக்கு தள்ளி சாகலாம்,,,,
    Points
    6940
    about 5 hours ago ·   (15) ·   (12) ·  reply (0) · 
  • jayavelu.v.  
    awesome movie... congrats to vikram, shankar , pc sir, and whole team.. this is the time to proud to be a tamilian...
    about 5 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • jayavelu.v.  
    a milestone film in tamil "I" in indian cinema history... some may critisise negatively.. but this film is reaching so height in terms of vikram hardworking acting( can any actor do this role in world!!!) director shankar's unimaginable scenes ( in songs).. legend p.c. sir's cinematography... art direction... emy's beauty... in another level... CONGRATS TO SHANKAR, VIKRAM, PC... AND WHOLE TEAM... so many awards waiting to this team... this film is the inspiration who loves to achieve in cinema industry.....
    about 5 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • காமாட்சி  
    விக்ரமனின் நடிப்பு அருமை... மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளது படத்தில் தொிகிறது.. சங்காின் படத்திற்கே உாிய சமுதாயத்திற்குாிய கருத்து எதுவும் இல்லாதது குறை.... எதிா்பாா்த்த அளவுக்கு நிச்சயமாக இல்லை....... விக்ரமின் நடிப்பிற்காக ஒரு தடவை பாா்க்கலாம்...... ஆனால் தியேட்டாில் டிக்கெட்டின் விலை அதிகமாக உள்ளது.... அரசு விதிமுறைகளின் படி குறைந்த விலையில் டிக்கட் விற்றால் நிறைய போ் படம் பாா்க்க தியேட்டருக்கு வருவாா்கள்.........
    about 7 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
  • rubanpaul  
    inga enna nadukuthunne purilla.....hollywooda poi paarunga evlo mokkayaana padangalla vanthutu irikkunnu....bollywood sollave vena summa ethukeduthaalu bodyya kaatrathum comedyndra perla varatu mokkaya podrathuma irukka....."i" mathiri oru unmayaana effort irinta padatha "naa vikrama mattum sollala shankar illana itha mathiriyaana makking namaku kedachurukkathu.so chinna chinna laging ellathayum vitutu "i" ya kondaduvom.........pls
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • prakashpeak  
    Vikram நடிப்பில் நான் மெர்சலாயிட்டேன் ..awesome
    about 10 hours ago ·   (4) ·   (3) ·  reply (0) · 
  • vijayan  
    விக்ரமை ஏமாற்றிவிட்டார் சங்கர் மகா கலைஞனின் உழைப்பு வீன் விக்ரம் சந்தானம் எமி சீன மலைகள் அழகு எங்கே சங்கர்
    about 10 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Karthick Bala  
    Alll these idiots who are speaking wrong about the film must see one thing....I watched this movie in two diffrent theatres and in both the theatres audience gave a standing ovation when the film is over...Also here they says vikram fans are repeatedly watching the film no every one are watching the film go and look at the amazing response that they got for the film....Sharukh khan happy new year no story and the film is collecting money and reviews are good...
    Points
    180
    about 10 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • Kumaravel.M  
    இதெல்லாம் நம் இண்டுஸ்ரில சகஜம் என்று சொல்லிவிட்டு அந்தமெட்டரைஎ பில்டுப் செய்து இருக்கிறாய் ஷங்கர்.... பலர்மத்திஎல் அம்மணமாக வரும் நாயகியை பார்த்து காதலில் vizhugirar விக்ரம் ஒரு ad பிலிம் டைரக்டர் சீனாவிற்கு சென்று அங்குவைத்து, இவனுக்கு ஒண்டுமே நடிக்கவரவில்லை என்று மண்டையை பிப்பது மட்டுமில்லாமல், நாயகிடம் ஒரு ஐடியா கொடுக்கிறார் எல்லார்க்கும் விக்ரம்மேல் பொறமை போரமையாகவருகிறது பழிதீர்துவிட்டு விக்ரம்மை பார்த்து எல்லாராலும் கூடி சிரிக்கும்பொழுது சன் டிவி மேகசிரியால்கள் நிவிற்குவருகிறது அதுக்கு அப்பரம் ரயிலேறி சண்டைபொற்றரு.... தேனியை கொண்டுபொஇவிட்டு கடிக்கவுற்றாரு.... பெட்ட்ரோல உடம்புல ஊதும்போது வில்லன் தலைய சொற்றிகிகிட்டு நிக்குறாரு ( மப்பாம்...!) அப்பே நெருப்புபதவேக்குறாரு ...... கடசிய ஹெரொஇனி விக்க்ரமோட கைய கோத்துக்கிட்டு ஓடுது....
    Points
    330
    about 16 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
  • azim  
    sankar than pdamana endhiranaye kalaikkumpothu sollava vendum i pada vasool total first day 120 crores vikram national award winner avarukku nalla kadhayathan select pannuvaru athuthan i
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • karthick  
    Hard work will never failure that is vikram in ஐ .
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • gv  
    ஷங்கர்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு கதைதான் .. அதாவது ஒரு சாமானியன் அநியாயம் பண்றவங்களை காலி பண்றது .... அதை விட்டா கிராபிக்ஸ் , லொகேஷன் ,ம்யுசிக் வச்சு பஜனை பண்றதுதான் அவர் வழக்கம் ... உள்ளத்தை தொடும் , மனதில் நிற்கும் நல்ல கதை, திறமையான டைரக்ஷன் அவர் படத்துல எப்பவும் கிடையாது . இது மட்டும் விதி விலக்கா என்ன ?
    about 19 hours ago ·   (11) ·   (4) ·  reply (0) · 
  • நரேஷ்  
    செகண்ட் ஆப் சான்சே இல்ல,தியெட்டர்ல pin drop silent,படம் முடிஞ்சதும் யாருமே ஒரு குறைகூட சொல்லாமல் வெளியே போனார்கள்,பேய் படங்கள்ல பயப்படறத விட அதிகமா இந்த படம் மிரட்டிருக்கு,யாரும் கிளைமாக்ஸ்ல சீட் நுனிக்கு வரலதான்,ஆன இருக்கையோட கைப்பிடிய அழுத்தமா பிடிச்சிட்டிருந்துருப்பாங்க.in second half shankar truly mesmerize the people.படம் பாத்துட்டு வந்த எல்லாருமே மெர்சலாய்ட்டாங்க.மனசாட்சியே இல்லாம இந்த படத்த போய் நல்ல இல்லனு எப்படி சொல்றாங்க.
    about 19 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • kovai  
    ஏங்க படத்தை தவறா "முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு" பன்றிங்க!... 'ஐ' படம் "அதுக்கும் மேலே" ...
    Points
    400
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Rayees Ahamed Intern at Gyeongsang National University 
    நான் வடஇந்தியாவில் உள்ளவன். இங்கு மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல எதிபார்ப்பு கிடைத்துள்ளது... நானும் படம் பார்த்தேன்... புதுமையான முறையை தேர்ந்தெடுத்துள்ளார். மேக்கப் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்திய சினிமாவிலும் இது போல் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். அதற்கு மேல் என்ன வேண்டும்? எல்லா நேரமும் ஒரே மாதிரியான பிரமாண்டத்தை கொடுத்தால் உங்களுக்கும் 'போர்' அடித்துவிடும்.... 'தி இந்து' வில் மட்டும் தான், 'ஐ' க்கு எதிரான விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவருக்கு படம் பிடிக்கவில்லையோ என்னமோ? உண்மையான விமர்சனம் அறிய, உங்களின் "'ஐ'க்கு நீங்கள் தரும் மதிப்பெண்?" கேள்வியில் மக்கள் அளித்த சதவிகித்தை பாருங்கள் தெரியும்!!
    Points
    450
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • NAVANITHAM  
    Shankar is not a talented director like the late Balachander.Most of his films based on ultapulta of other languages stories.He gets warn for winter on someone 's big money.😎
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Baskaran  
    'ஐ' படம் சூப்பர் விக்ரம்நடிப்பு மிக அருமை படம் சூப்பர் வெற்றி வெற்றி வெற்றி..'ஐ' பவர் புல்
    Points
    105
    about 20 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • suresh  
    சிங்கார வேலன்கள் சீமான்கள் வேல் முருகன்கள் போன்ற கைகூலிகள் படத்தை வாங்காமல் இருந்தால் இந்த படம் நல்ல வசூல் பெரும்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • RAJESH  
    சுஜாதா சார் some how please come back
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • arv  
    சூப்பர் ..... படம் . விக்ரம் நடிப்புக்கு மறுபடியும் பாக்கலாம். Mr . தமிழ்நாடு. Chiyaan.
    Points
    140
    about 21 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • Indiya Tamilan  
    சிவாஜி,கமலுக்கு பின் தமிழுக்கு கிடைத்துள்ள விக்ரம் போன்ற மகா கலைஞன் தனது உழைப்பை அர்ப்பணித்து இருப்பது படத்தை பார்த்தால்தான் தெரியும். உண்மையை சொல்ல போனால் விக்ரம் மரியாதைக்குரிய சிவாஜி,கமல் இருவரையும் தாண்டி ஒருபடி போயுள்ளார் நடிப்பில்.
    Points
    265
    about 21 hours ago ·   (11) ·   (2) ·  reply (0) · 
  • malai  
    ஆயா வடை சுட்ட கதையை கூட ஷங்கரால் மட்டும் தான் 100 கோடி செலவு வைத்து எடுக்க முடியும் என்பது மீண்டும் நீருபனம்... இந்த படத்திற்கு கொடுத்த buildup ரொம்ப ஓவர்... சரியான கமெண்ட்
    about 21 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
  • Sriramachandran Manickam at State Government 
    சரி.விடுங்கள். விக்ரம் சரியா என பார்த்து விட்டு நிறுத்துங்கள். சங்கர் நன்றாக தான் செய்துள்ளார். பிரம்மாண்டத்தை குறை சொல்ல முடியாது. உங்களது எதிர்பார்ப்பு அதிகம். அவ்வளவு தான்.
    Points
    1195
    about 21 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
  • paulselvadhas  
    ஏன் இந்த படத்திற்கு என்ன குறை இந்து ?nalla தமிழ் சினிமாவிற்கு எதிரி வேறு எங்கும் இல்லை .தமிழ்நாட்டிலேயே இருக்கிண்டனர்
    about 22 hours ago ·   (54) ·   (8) ·  reply (0) · 
  • Anbu  
    ஆந்தரவிலும் கேரளாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆந்தரவில் முதல் நாள் அன்று பவன் கல்யாண் ரசிகர்கள் சிலர் தவறான விமர்சனம் செய்தார்கள், ஆனால் இப்பொழுது படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் ....
    Points
    160
    about 22 hours ago ·   (21) ·   (1) ·  reply (0) · 
  • Raju  
    படம் சூப்பர்.. விக்ரம் உழைப்பு பாராட்ட பட வேண்டிய படம்.. ஷங்கர் படம் பிரமாண்டம் ..பாட்டு கலர்புல்..
    about 22 hours ago ·   (28) ·   (1) ·  reply (0) · 
  • Anbu  
    விக்ரமின் நடிப்பு மிக அருமை. மற்றபடி ஷங்கரின் வித்தை ஒன்றும் இல்லை. என்னக்கு படம் திருப்தியாக இருந்தது.


    நன்றி  - த இந்து