Showing posts with label உயிர் உள்ளவரை உஷா (1983) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts
Showing posts with label உயிர் உள்ளவரை உஷா (1983) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts

Saturday, March 14, 2026

உயிருள்ளவரை உஷா (1983) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

                     


        ஒரு தலை ராகம் (1980), வசந்த அழைப்புகள் (1980),இரயில் பயணங்களில் (1981) , நெஞ்சில்  ஒரு  ராகம் (1982), ராகம்  தேடும் பல்லவி (1982) ,  என  ஐந்து படங்களை இயக்கி அவற்றில்  நான்கு படங்களை  மெகா  ஹிட் ஆக்கிய  டி ராஜேந்தர்  ஆறாவதாக  இயக்கித்தயாரித்த படம்  இது , இவர்  சொந்தமாகத் தயாரித்த பட்டியலில் இது முதல் படம் . உஷாவைத்திருமணம்  செய்த  பின்  வெளியாகிய முதல்  படமும்  கூட .அதனால்  தான்  43  வருடங்கள் கழித்து   ரீ ரிலீஸ்  ஆகும் டி ஆர்  படங்களில்  முதல் இடத்தை இது பிடிக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் , நாயகி  இருவரும்  , அம்மா , அப்பா  இல்லாதவர்கள் . இருவரும்  ஒரே  காலேஜில் ஒரே  வகுப்பில் படிக்கிறார்கள் . இருவரது வீடுகளும்   அருகருகே  இருக்கிறது . நாயகன் அத்தை  வீட்டில்  வளர்கிறான் . நாயகி  அக்காவின் பராமரிப்பில் வளர்கிறாள்  , நாயகிக்கு  ஒரு அண்ணனும்  உண்டு 



காலேஜில்  நாயகன்  நாயகியை  அடிக்கடி  கிண்டல்  பண்ணுவதும் ,  கேலி  பேசுவதுமாக இருக்கிறான் . இது   நாயகிக்குப்பிடிக்கவில்லை . நாயகனைக்கண்டாலே   நாயகிக்கு   வெறுப்பு .ஒரு சமயம்   நாயகன்  நாயகியை எல்லை மீறிப்பேச கோபம் ஆன  நாயகி  நாயகன்  எழுதிக்கொடுத்ததாக  ஒரு பொய்யான லவ் லெட்டரை  ரெடி  பண்ணி  காலேஜ்  பிரின்சிபாலிடம் தருகிறாள் . இதனால்   நாயகனுக்கு காலேஜில் கெட்ட   பெயர் .


 காலேஜில்  நடக்கும்  ஒரு நாடகத்தில்  நாயகனுக்கு துச்சாதனன்  வேடம் , நாயகிக்குப்பாஞ்சாலி  வேடம் . பொய்யான குற்றச்சாட்டு  வைத்த   நாயகியைப்பழி   வாங்க  நாயகன் நாயகியை முத்தம்  இட்டு விடுகிறான் .


நாயகியின்   அண்ணன்  நாயகனை அடி  வெளுத்து  விடுகிறான் . காயம்  பட்ட  நாயகனைப்பார்த்து   நாயகிக்குக்காதல் வருகிறது  .



நாயகனின் அண்ணன்  தான்  இவர்களது  காதலுக்கும் , திரைக்கதைக்கும்   வில்லன் . காதலை  எதிர்க்கிறான்  இவர்களது  காதல்  நிறைவேறியதா:  இல்லையா?  என்பதுதான்   க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக   கங்கா   என்ற  புதுமுக நடிகர்  நடித்து  இருக்கிறார் . சில   காட் சிகளில்   கமல்  சாயலில் , பல காட் சிகளில்  மோகன் சாயலில்  நடிக்க   முயற்சிக்கிறார் 


நாயகி ஆக   புதுமுகம்  நளினி , இந்தப் படத்தில்  நடிக்கும்போது   அவருக்கு வயது 19 .அடர்த்தியான கூந்தலும் , காந்த விழிகளு ம் இவரது பிளஸ் . நடனக்காட் சிகளில்  நன்கு   அபிநயம் பிடிக்கிறார் . இவரது  சிரிப்பு வசீகரிக்கிறது 


செயின்  ஜெயபால்  என்னும்  கேரக்டரில்   டி ராஜேந்தர்    வருகிறார் . காதலர்களை சேர்த்து வைக்கும்  கேரக்ட்டர் . படம்  முழுக்க  இவருக்கு  இரண்டே  காஸ்ட்யும்கள் தான் .. இவர்  அடுக்கு மொழி  வசனம்  பேசி  சண்டை போடும்போது  சி  செண்ட்டர்  ரசிகர்கள் கை   தட்டுகிறார்கள் 


வில்லன் ஆக   ராதாரவி . காமெடி   செய்யும்போது   எம் ஆர்  ராதா குரலிலும் , வில்லத்தனம்   செய்யும் பொது  எம் ஆர்  வாசு குரலிலும் பேசுகிறார் 


எஸ்  எஸ்   சந்திரன் , கவுண்டமணி   இருவரும்   வில்லனுக்கு   அல்லக்கைகளாக வருகிறார்கள் , அதிக வாய்ப்பில்லை 


காலேஜில் புரொபஸராக   வெண்ணிற   ஆடை மூர்த்தி   காமெடி  செய்கிறார் . இவர்   எழுப்பும்   விசித்திர   ஒலிகளுக்கு என ஒரு ரசிகர்  கூட் டம்  உண்டு 


நாயகியின்   அக்காவாக   சரிதா  குணச்சித்திர   ரோல் . வாழாவெட்டியாக  இருக்கும்   தன்னைப்பற்றி   அடிக்கடி  சுய  இரங்கல்   கவிதை   வாசிப்பது  கச்சிதம் 


 நாயகனின்   அத்தையாக  காந்திமதி   இயல்பான  கிராமத்து  நடிப்பு 



ராணிகாந்த் , நாகை  சோமன்  இருவரும் இணைந்து    ஒளிப்பதிவு   செய்து  இருக்கிறார்கள் .நாயகியின்  க்ளோசப்  ஷாட்களில்  இவர்களது கை  வண்ணம் தெரிகிறது . படத்தொ குப்பு   தேவன் , இரண்டே  கால் மணி நேரம் படம் ஓடுகிறது 


பாடல்கள்  எழுதி , இசை  அமைத்து  ,  கதை , திரைக்கதை , வசனம்  எழுதி இயக்கி இருப்பவர்  டி ராஜே ந்தர் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல் பாதி முழுக்க   காலேஜ்  கலாட்டா , ஆட் டம் , பாட்டம் , கொண்டாட்டம்   என   ஜாலியாக்கப்படத்தைக்கொண்டு போன விதம் 


2  புதுமுக  நாயகியின்   முக அழகு , சிரிப்பு  வசீகரம் 


3   செயின்   ஜெயபால்   தனது   முன்   கதை   சொல்லும்போது   பறவைகளின்  ஓவியங்களை  வைத்தே  காட்சிகளைத்தொகுத்தது 


4  படம்   ரிலீஸ் ஆகும் முன்பே மெகா ஹிட்   ஆன 7  பாடல்களில  கொண்டாட் டமான பாடல்கள்  நான்கை  முதல் பாதியில் , மெலோடி சாங்க்ஸ் , சோகப்பாடல்களை   பின்   பாதியில்   வைத்த  சாமர்த்தியம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   கட்  அடிப்போம்   கட்  அடிப்போம்   காலேஜூக்கு , காதலிப்போம் காதலிப்போம்  மேரேஜூக்கு  (ஓப்பனிங்க் சாங்க் )

2  இந்திரலோகத்து சுந்தரி  ராத்திரி  கனவினில்  வந்தாளோ ? ( ட்ரீம் டூயட் சாங்க் )

3  மோகம்  வந்து தாகம் வந்து என்னை அழைக்க ( ட்ரீம் டூயட் சாங்க் 2  )

4  அடி  என்னடி  பந்தாடும்  பாப்பாக்களே !(  காலேஜ் கலாட்டா  சாங்க் )

5  இதயம்  அதைக்கோவில்   என்பேன்  ( லவ் ப்ரப்போஸ்  சாங்க் )

6   உன்னைத்தானே  அழைத்தேன் உறங்காமல்  தவித்தேன்  (நாயகி  கொண்டாட்ட சாங்க் )

7  வைகைக்கரைக் காற்றே  நில்லு , வஞ்சி தனைப்பார்த்தா  சொல்லு (  சோக சாங்க் )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகி  பொய்யாக்கத்தயாரிக்கும்  காதல்  கடிதத்தில்  வேறு ஒருவர்  எழுதி  இருக்க  அதன்  கீழே நாயகன்   கையெழு த்து   இருக்கிறது .  ஆனால்  வலுவில்லாத  அந்தக்காரணத்தை வைத்து  காலேஜை  விட்டு   டிஸ்மிஸ்  செய்வது எப்படி ?


2   நாயகன்   ஆதி வாங்கியதும்   நாயகிக்கு உடனேயே   காதல்  வருவது  நம்ப முடியவில்லை 


3  முதன் முதலாக   நாயகி  காதலை வெளிப்படுத்திய  அடுத்த   கணமே  நாயகனை  இறுக  அணைப்பதும்   நம்ப முடியவில்லை  


4  க்ளைமாக்சில்  செயின் ஜெயபால்  கேரக்டர்   காதலர்களை   சேர்த்து   வைக்க தன உயிரைத் தருவது  நம்ப முடியவில்லை . அதற்கான   தேவையும் இல்லை  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மெகா   ஹிட் ஆன பாடல்களுக்காகப்பார்க்கலாம் . டிஜிட்டல்   இசை   சேர்த்து  ஒரிஜினல்   இசையில்      இனிமை   குறைந்து விட்டது . ரேட்டிங்க்  2. 5 / 5 


Uyirullavarai Usha
Theatrical release poster
Directed byT. Rajendar
Written byT. Rajendar
Produced byUsha Rajendar
StarringSaritha
T. Rajendar
Ganga
Nalini
CinematographySoman
Edited byR. Devarajan
Music byT. Rajendar
Production
company
Thanjai Cini Arts
Release date
  • 4 March 1983
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil