Showing posts with label இந்து டாக்கீஸ். Show all posts
Showing posts with label இந்து டாக்கீஸ். Show all posts

Wednesday, January 06, 2016

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அட்டர்ஃபிளாப்பா?த ஹிந்து அலசல்

பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத திருமண உறவினுள் போலி யான இல்லறத்தை சிருஷ்டிக்க முற் படுவதில் உருவாகும் முரண்பாடு களும், மெல்ல முகிழ்க்கும் காதல் அத் தியாயமும் தமிழ் சினிமா பலமுறை கண்ட கதை. ஏற்கெனவே கையாண்ட கதையை மீண்டும் கையாளும்போது அதில் இருக்கவேண்டிய புதுமையோ, புதிய பார்வையோகூட சொல் லிக்கொள்ளும் அளவில் இல்லை.



பாத்திர வார்ப்புகள், வசனங்களில் கதாசிரியர் செல்வராகவன் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் பெரிய வித் தியாசம் இல்லை. நாயகனை நிராகரிக் கும் நாயகி ஆதிக்க உணர்வுடன் நடந்துகொள்வதை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம்.


நாயகியின் மனம் இளகும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவத்துக் கான பின்புலம் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்ட விதம் அபத்தம். கதையின் போக்கை திசைமாற்றக்கூடிய இக்காட்சியை ஏற்றுக்கொள்ளும் வித மாகச் சித்தரித்திருந்தால் கதையின் போக்குக்கு அது வலு சேர்த்திருக்கும். கிளைமாக்ஸ் திருப்பமும் வழக்க மான சினிமாத்தனம். போதாக் குறைக்கு, நாயகன், நாயகி இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்த தலா ஆளுக்கொரு காட்சியில் நீளமாக வச னம் பேசி கொடுமைப்படுத்துகிறார்கள்.


தன் ஆண் நண்பர்களுடன் மனோஜா வுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நவநாகரிகப் போக்கு கொண்டவராக இருந்தும் சுயமரியாதையும் சுய கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கும் மனோஜாவின் ஆளுமை ஆகியவை நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவர் அவதிப்படுவது, தன் மனைவிக்கு ஏற்ப நடந்துகொள்ளத் தெரியாத பிரபுவின் அவஸ்தைகள் இருவரையும் இணைத்துவைக்க நண்பர்கள் செய்யும் முயற்சி ஆகியவற்றை சித்தரித்த விதம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.



புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுக்காகத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், திருமண உறவுக் குள் தான் மோசமாக நடந்துகொண்டால் அதுவும் அம்மாவை பாதிக்கும் என்பதை யோசிக்க மாட்டாளா? பிடிக்கவே பிடிக்காத திருமணத்தில் எதற்காக 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்? ஒரு தவறும் செய்யாத கணவனை தான் வதைப்பது பற்றிய உணர்வே அந்த பெண்ணுக்கு ஏற்படாதா?



டேட்டிங் என்ற சாக்கில் பெண் களைக் காம நுகர்வுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் நண்பனை அதற் காகவே பிரிகிறார் நாயகி. பின்னாளில் அதே நண்பனோடு டேட்டிங் செல்ல ஒப்புக்கொள்ளும்போது நாயகியின் கதாபாத்திரம் சரிகிறது. யாருமே ஊடுருவ முடியாத இரும்புக் கோட்டை போலத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ள ஒரு பெண் மனம் மாறும் காட்சியில் எந்த அளவுக்கு வலு இருக்க வேண்டும்? படத்தில் அந்த இடம் சப்பென்று இருக்கிறது.



நகர்ப்புற இளைஞர்களிடம் ஊறி யிருக்கும் டேட்டிங் கலாச்சாரத்தை இயல்பாகச் சித்தரிக்கிறார் இயக்குநர். ஆனால் மாநகர இளைஞர்களும் யுவதிகளும் டிஸ்கொத்தே, மது, டேட்டிங் தவிர வேறு சிந்தனைகளே இல்லாதவர்கள் போன்ற சித்தரிப்பு உறுத்துகிறது.


பொருந்தாத திருமணத்தின் தொடக்க நாட்களைச் சித்தரிக்கும் சில காட்சிகள் இயல்பாக உள்ளன. காட்சிகளைக் கையாளும் விதத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் நேர்த்தியாக வெளிப் படுகிறார். செல்வராகவனின் வசனங்கள் இயல்பாக உள்ளன. மனோஜாவின் நண்பன், பிரபுவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இதற்கு உதாரணம்.



படமாக்கப்பட்ட விதம், உரையாடல் கள் ஆகியவற்றில் இருக்கும் நேர்த்தி, சம்பவங்களைக் கோத்த விதத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஊகிக்கக்கூடியவையாக, பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஒவ் வொரு காட்சியையும் மிக நிதான மாக நகரவிடும் படத்தொகுப்பு திரைக்கதையை மந்தமாக்குகிறது.


வாமிகா, ராமகிருஷ்ணா இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறும் அளவுக்கு ராமகிருஷ்ணா தன் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். உறுதியான ஆளுமையை வெளிப் படுத்துவதில் வாமிகாவின் கண்கள், முக பாவனைகள் நன்கு ஒத்துழைக்கின்றன. மனோஜாவின் அம்மாவாக வரும் கல்யாணி, பிரபுவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் பொருத்தமான தேர்வுகள்.


அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தின் இசையும், தரின் ஒளிப்பதிவும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன. பாடல்கள் நினைவில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் வசீகரிக்கிறது.


ஏற்கெனவே எடுத்தாளப்பட்ட கதையை புது தலைமுறை கதா பாத்திரங்களுடன் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஆனால் காட்சியின் அதிர்ச் சிக்காக, கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களில் செயற்கையான சிதைவுகளை திணித்திருப்பது கதையின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. காட்சிகளின் இயல்புத் தன்மையும் சீராக இல்லை.


கலாபூர்வமான சில படங்கள் மெதுவாக நகரலாம். அதற்காக, மெதுவாக நகரும் படமெல்லாம் கலாபூர்வமான படமாகிவிடாது.

நன்றி - த இந்து

Wednesday, December 30, 2015

பூலோகம்-திரை விமர்சனம்:

குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே ‘பூலோகம்’.


வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு ‘பரம்பரை’களுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.



எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.


பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.


ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘பூலோகம்’ கதை.


குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.



சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.



எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.



அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.


பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள்


. நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.


தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.


the hindu

Tuesday, April 28, 2015

யூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )

இது பேய்ப் படங்களின் காலம். இந்த வகைப் படங்களின் மிரட்டும் காட்சியமைப்புக்குப் பெரிதும் கைகொடுப்பது கிராபிக்ஸ். ஆனால் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் கேமரா மற்றும் படத்தொகுப்புத் தந்திரங்கள், ஒப்பனை, ஒளியமைப்பு, பின் னணி இசை ஆகிய அம்சங்களை அதிகம் நம்பி ரசிகர்களைப் பயமுறுத்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கமல்.
வினய், டேவிட், ராகுல், அமீர், அருண் (யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ்) ஆகிய 5 நண்பர்களும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய் கின்றனர். 5 பேருமே வாழ்க்கை யைக் கொண்டாட நினைப்பவர் கள். இவர்களில் இருவர் மர்ம மான முறையில் கொலையா கின்றனர். மற்ற 3 பேரையும் தனது சந்தேக வளையத்துக்குள் கொண்டுவருகிறார் போலீஸ் உதவி கமிஷனர் சக்தி (தருண் சக்கரவர்த்தி).
இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட பூஜாவின் (சாக்‌ஷி அகர்வால்) செல்போன் எண்ணில் இருந்து அடுத்து கொல்லப்பட இருப்பது யார் என்று இந்த 3 நண்பர்களுக்கும் எம்எம்எஸ் வருகிறது. அதில் குறிப்பிட்டபடியே கொலையும் நடக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பூஜாவுக்கும் 5 நண்பர் களுக்கும் என்ன தொடர்பு? போலீஸைக் குழப்பும் இந்தக் கொலைகளைச் செய்வது பேயா, மனிதனா? இந்தக் கேள்வி களுக்குப் பதிலாக விரிகிறது ‘யூகன்’.
ஆண்களால் பழிவாங்கப் பட்டு இறக்கும் பெண் கண்டிப் பாக பேயாக வந்து பழிவாங்கு வார் என்பது விட்டலாச்சார்யா காலத்துக் கதை. ஆனால் பேயாக வரும் பெண் எந்தச் சூழ்நிலையில் பழிவாங்கப்பட் டாள் என்பது புதுமை. ஆள் அரவம் இல்லாத பகுதியில் இருக்கும் வீடு, பாழடைந்த பங்களா ஆகியவற்றை வைத் துப் பின்னப்படுவதுதான் பேய்ப் படம் என்ற க்ளிஷேவை உடைத்து ஐ.டி. நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் நண்பர்கள் வசிக் கும் அதிநவீன வீடுகளிலும் காட்சிகளை நகர்த்தியிருக்கும் இயக்குநர் கமல் பாராட்டுக்குரியவர். பேய் தோன்றி மறையும் பல காட்சிகளைப் படத்தொகுப்பு மூலம் அமைத்திருக்கும் விதம் பார்வையாளர்களை அலற வைக்கிறது யூகன்.


சம்பவங்களைக் கலைத்துப் போட்டாலும் குழப்பம் இல்லாமல் நம்மைக் காட்சிகளுக்குள் இழுத்துக்கொள்கிறது திரைக்கதை. ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் இறப்பது மட்டும் காட்டப்படுகிறது. எப்படி இறந்தார்கள் என்பது புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியின் ஊகத்திலேயே காட்சிப் படுத்தப்பட்டிருப்பது புதுமை.
பூஜாவின் தற்கொலைக்கான பின்னணிக் காரணத்தை அழுத்தமாக அமைத்த இயக்குநர், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து எப்படி எம்எம்எஸ் வரமுடியும் என்பது போன்ற கேள்விகளுக்கும் கச்சிதமான பதில்களைத் தந்திருக்கிறார்.
ஆனாலும் ஆங்காங்கே சில ஓட்டைகள். சாக்‌ஷி இறந்து 2 ஆண்டுகள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் மகள் போன வருஷம் எங்கு வேலை பார்த்தாள் என்ற கேள்வி அடுத்த காட்சியிலேயே வருகிறது. டிராயிங் நோட் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. லேப்டாப் 2 ஆண்டுகளாக சார்ஜில் இருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கம் இல்லை. பார்த்துப் பழகிய பேய் தோற்றம், ஆவி வரும் காட்சிகள் ஒரே மாதிரி அமைவது ஆகியவை படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
முக்கிய வேடம் ஏற்றிருக்கும் அனைவரும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியும் யதார்த்தமாக இருப்பதால் நம்பகத்தன்மை கூடுகிறது. திகிலுக்கு நடுவே இளைப்பாறலாக வினய்-சாக்‌ஷி காதல்.
திகில் படங்களுக்கு முதுகெலும்பாக அமைவது ஒளிப்பதி வும் இசையும். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், அலெக்ஸ் பிரேம்நாத்தின் பின்னணி இசையும் படத்துக்கு நல்ல பலம்.
ஆக மொத்தத்தில், பழைய பேயை புதிய புட்டியில் அடைத்துக் காட்டியிருக்கின்றனர்.

நன்றி - த  இந்து



1  எல்லோருக்கும் லைப் ல ஒரு என்ட்டர்டெய்ன்மென்ட் இருக்கும்.எங்களுக்கு லைபே என்ட்டர்டெய்ன்மென்ட்தான்


============


உன் ஐடியாஸ் எல்லாம் சைடு டிஷ் மாதிரி சப்னு இருக்கு.பீர் மாதிரி பொங்கி வரவேணாமா?# யூகன்



==================




3 மாடர்ன் யுகம் இல்லையா? அதனால பேய் வில்லனுக்கு போன் ல Sms அனுப்புது.நல்லவேளை வாட்சப்ல ஆவிஉலக அந்தரங்கம் எதுவும் அனுப்பல



==================

ரெக்கமன்டேசன் லெட்டர் ங்கறது வேலை யை பிச்சை எடுத்து வாங்கற மாதிரி # யூகன்


==============



5 அதெப்பிடிடா விடிய.விடிய FB ல கடலை போட்டுட்டு விடிஞ்ச பின் பொண்ணோட போன் நெம்பர் கூட தெரியாதுனு அடிச்சு விடறீங்க?# யூகன்




===============




6 யாரை வேணா நம்பலாம்.ஒரு காபி சாப்பிடலாம் வானு கூப்பிடற பசங்களை நம்பக்கூடாது # யூகன்



ஹார்லிக்ஸ் ஓக்கே?்


===============

7 என்FB id எப்டி கண்டுபிடிச்சீங்க?
பொதுவா பொண்ணுங்க தன் அப்பா பேரை தன் பேருக்கு முன்னாலயோ/பின்னாலயோ போட்டுக்குவாங்க


=================

8  பொதுவா ஆபீஸ்ல நல்லா வேலை செய்யறவனை விட வேலைத்தனம் செய்பவனுக்குத்தான் ப்ரமோசன் ,இன் க்ரீமென்ட் கிடைக்குது # யூகன்

=============

சிபி கமெண்ட்= யூகன்= முன் பாதி ஜில்லிட வைக்கும் கோஸ்ட் த்ரில்லர் ,பின் பாதி சைபர் க்ரைம் த்ரில்லர்.ஒர்த் டூ வாட்ச்.

விகடன்=40 ,

ரேட்டிங் =2.75/ 5 .BGM SUP

==============