Wednesday, June 29, 2022

உன்னைக் கண் தேடுதே ( 2000) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 



ஒரு  கல்யாண  மண்டபம்  அங்கே  ஹீரோ    சமையல்காரரா  வேலைக்கு  அப்போதான்  சேர்கிறார், அவரது  வாட்டசாட்டமான  உருவம்  கேலி  கிண்டல்  பேச்சு  கண்டு  மண்டபத்தில்  இருக்கற  கல்யாணப்பெண்  தவிர  அனைத்துக்கன்னிப்பெண்களும்  ஆண்ட்டிகளும்  அவரை  அடைய  முயற்சி  செய்கின்றனர் 

ஒரே  ஜாலி  கேலி  கலாட்டாவா  இடைவேளை  வரை  படம்  கதையே  இல்லாம  நகருது , இடைவேளை  அப்போதான்  ஒரு  ட்விஸ்ட்   ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  அன்னைக்கு  விடியற்காலை  நடந்த  ஒரு  கொலை  வழக்கு  சம்பந்தமா  கொலையாளி  அந்த  மண்டபத்தில்  இருக்கார்னு  துப்பு  கிடைச்சு  வந்திருக்கார் 


கொலையான  டெட்  பாடி  கைல  ஒரு  தாலி  அந்த  தாலி  யார்துனு  கேட்டுட்டே  வர்றார்  ஹீரோ . எல்லாரும்  எங்களுது  இல்லைனு  சொல்றப்போ  கல்யானப்பொண்ணோட  அண்ணன்    மனைவி  அதாவது  அண்ணி  மட்டும்  அது  தன்னோடதுதான்  அப்டிங்கறார். சும்மா  ஓசில  கிடைக்குதேனு  தங்கத்துக்கு  ஆசைப்பட்டு  அப்படிப்பொய்  சொன்னாரா?  அல்லது  நிஜமாவே  அவர்  தான்  கொலையாளீயா ?  என்பது   க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  சத்யராஜ்.  அசால்ட்  ஆன  நடிப்பு  . லொள்ளு  நடிப்புக்கு  அவருக்கு  சொல்லித்தர  வேண்டுமா?   கச்சிதம்   ஆனா  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 

 ஹீரோயினா  ரவளி  ஆண்களையே  பார்த்திராதவர்  போல  அலையும்  கேரக்டர் . அப்பா  அப்பா  இவரையே  எனக்குக்கட்டி  வைங்க  என   நச்சரிக்கும்போது  நமக்கு  அழுவதா ? சிரிப்பதா?  என  தெரியவில்லை 


 ஹீரோயினின்  அப்பாவாக  மணிவண்ணன்   இவரும்  நக்கல்  நையாண்டில  ஸ்பெஷலிஸ்ட்  கேப்  கிடைச்ச  இடத்தில்  எல்லாம்  கிடா  வெட்றார் 


  கல்யாணப்பொண்ணோட  அண்ணியா  குஷ்பூ  அண்ணனா  லிவிங்க்ஸடன்  சராசரியான  நடிப்பு 


இசை  தேவா  -  வாடா  வாடா  சீக்கிரம்  வாடா  பாட்டு மட்டும்  செம  ஹிட்டு


திரைகக்தை  இயக்கம்  சுந்தர்  சி  ,  கதை  பி  கலைமணி  இயக்குநருக்கு  இந்த  மாதிரி  கல்யாணக்கூட்டத்தை  வெச்சு  கதை  சொல்வது  அல்வா  சாப்பிடுவது   போல   கச்சிதமா  பண்ணி  இருக்கார்  


  சபாஷ்  டைரக்டர் 


1   இடைவேளை  வரை  கதை  இல்லை  அதனால  சும்மா  காமெடி  பண்ணிட்டு  இருந்தா  போதும்கற  நிலை. ,அதனால  ரொம்ப  சிரமப்படாம  திரைக்கதை  அமைச்சிருக்கார்  சுந்தர்  சி \


2  குஷ்பூ  சத்யராஜைப்பார்த்து  பம்முவது   பயந்து  போய்  ஒளிவது  என  சுவராஸ்யமான  காட்சிகள்  ஓக்கே  ரகம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  பெண்ணை  வன் கொடுமை  செய்ய  முயலும்  ஒரு  ஆளை  தற்காப்புக்காக  ஆந்தப்பெண்  தாக்குவது  அல்லது  கொலை  செய்வது  தண்டனைக்குரிய  குற்றம்  இல்லை . இந்த  உண்மை  கூட  தெரியாம  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  இருப்பாரா ?  குற்றவாளியை  இவர்  என்னவோ  காப்பாத்தற  மாதிரி  காட்றது   அதுக்காக  வேலையை  ரிசைன்  பண்றது  எல்லாம்  செம  காமெடி 


2 விடிகாலை  அஞ்சரை  மணிக்கு  கல்யாண  முகூர்த்தம்  ஆனா  விடிகாலை  4  மணிக்கு  அதே  கல்யாண  மாப்ள மேரேஜ்  நடக்கும்  அதே  ஊரில்  கல்யாணப்பெண்ணின்  அண்ணி  என  தெரிந்தும்  ரேப்  பண்ண  முயற்சிப்பாரா? 


3  வில்லன்  ஹெல்மெட்  போட்டபடியே  தான்   ஒரு  பெண்ணை  ரேப்  பண்ண  முயற்சிக்கிறார்  அவர்  முகம்  தெரியக்கூடாதாம்  ஆனா  கண்  பார்வை  வாசனை  உதடு  முத்தம்  எதுவும்  இல்லாமல்  ஹெல்மெட்  போட்டு  அபப்டி  எல்லாம்  சிரமப்பட்டு  ரேப்  பண்ணுவாங்களா?


4 கல்யாணப்பெண்ணின்  அண்ணி  கல்யாண  மண்டபத்துக்கு  திருமண  முகூர்த்தத்துக்கு  முந்தின  தினமே  வந்துடுவாரா?  வராம  அன்னைக்கு   ஒரு  மூட்டை  துணியை  துவைச்சு   வீட்டு  மொட்டை   மாடில  காயப்போட்டுட்டு  இருப்பாரா?


5    பெண்ணின்  வீட்டில்  சொந்தக்காரங்க  முன்  தினமே  டேரா  போட்டுடுவாங்க  ஆனா  வீட்டில்  அண்ணி  தவிர  யாருமே  இல்லையே?  கல்யாண  வீட்டில்  இப்படி  ஆள்  நடமாட்டமே  இல்லாமயா  இருக்கும் ? 

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுந்தர்  சி  ரசிகர்கள்  சத்யராஜ்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம் ,  மத்த  பொது  ஆடியன்சுக்கு  படம்  பிடிக்காது  , சுமார்  ரகம்  தான்    யூ  ட்யூப்ல  கிடைக்குது   ரேட்டிங்  2 / 5 

0 comments: