Saturday, May 09, 2020

கேரளா - கொரோனா - அப்டேட்ஸ்

இந்தியாவின் நெ 1  இயற்கைப்பிரதேசமான கேரளா வில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் = 506 பேர், குணமானவர்கள் = 485 பேர் , இறப்பு 4 பேர் , இன்னும் குணம் ஆகாதவர்கள்=17 பேர்

மொத்தமாவே 17 பேஷண்ட்ஸ் மட்டுமே இருந்தும் இதுவரை கள்ளுக்கடைகள் திறக்கப்படலை 

ஹெல்த் மினிஸ்டர் திருமதி சைலஜா ,மிகச்சிறப்பாக இங்கே பணி ஆற்றினார்.  கொரோனா பேஷண்ட்  பயண விபரங்கள் ட்ரேக் செய்யப்பட்டு தொடர்பில் இருந்தோர் எல்லாம்  தனிமைப்படுத்தப்பட்டனர்

 தப்பி ஓடிய  இரு கொரோனா நோயாளிகள் பிடிக்கப்பட்டனர்.

மிக பாதுகாப்பான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள்  பச்சை மண்டலம் ஆக ஒரு மாதம் இருந்தது. திடீர் என  அங்கேயும் பேஷண்ட்கள் உருவாகினர்.

 அவர்கள் மிகச்சிறப்பாக கண்டறியபட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்

 மே 17 க்குள்  ஜீரோ கேஸ் நிலைக்கு வந்துடும்.


 இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டதும் கேரளா தான  முதன் முதலாக அதில் இருந்து மீளப்போவதும் கேரளாதான்

 நான் கோட்டயம் மாவட்டத்தில் இப்போ இருக்கேன்


 2018 ல் ஏற்பட்டது போல் இருமடங்கு அதிக அளவு வெள்ளப்போக்கு ஆகஸ்ட் மாசம் 2020 வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 கேரளாவில் இருக்கும் தமிழர்கள் நீச்சல் தெரியவில்லை எனில் இப்போது கற்றுக்கொள்வது எப்போதும் நல்லது

0 comments: