Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - ஜூனியர் விகடன் விமர்சனம்

 
 
விஸ்வரூபம் - முழுக்கதை!

'விஸ்வரூபம்’ என, கமல் என்ன நினைத்துத் தலைப்பு வைத்தாரோ...  பிரச்னைகளும் விஸ்வரூபம் எடுக்​கிறது. 'சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும்’ எனச் சொல்லி தமிழக அரசு இந்தப் படத்துக்கு 15 நாள் தடை விதிக்கும் அளவுக்கு விவகாரம் செம சீரியஸ். திரைக்குப் பின்னால் நடந்த கதை, படத்தின் திரைக்​கதையைவிட பரபரப்பானது. கோலிவுட் முதல் கோட்டை வரை விசாரித்தபோது வந்து விழுந்த தகவல்களை அப்படியே தருகிறோம்.  

கமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை! 

துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்​கள் போர்க் கொடி தூக்கினர். அப்போது, 'விஸ்வ​ரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '



' 'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும் இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்'' என அறிக்கை விட்டார் கமல். 



ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்ட​மைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்​தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். 



அப்போது சுமுகமாகப் பேச்சு​வார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவி​னரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.


அதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முஸ்லிம் கூட்ட​மைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15 நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார்



. ''படத்தில் இஸ்லாமியர்களைக் கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால், ''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.



 



படம் பார்த்த முஸ்லிம்கள்!


படத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்​னார் கமல். ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதி​யில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்​கொண்டார் கமல். அப்போதும்கூட, ''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின் ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல்.  


படம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும் என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல். மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வ​ரூபம்’ திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார்.



படத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று, இடை​வேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள்.




 இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லி​வைத்ததுபோல கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில் நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது.




 கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம் பிடித்திருக்கிறதா? எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கமல் கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’ பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல்.



கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளிப்பு!


இரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில் நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால், அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை ​செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தனர்.



 அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர். 'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில் அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என் றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?’ என்று கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். 





சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வ​ரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்​தாவது முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர்.


 



படத்துக்கு 15 நாட்கள் தடை!


இந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர் ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள் பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’ என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி முறையிடு​கிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார்.



'கமல் சினி மாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான் புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள் தீவிர​வாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும் ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம் அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால்.



காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில் இருந்து  ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்​துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.



''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம் சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப் போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.



'விஸ்வரூபம்’ - முழுக் கதை என்ன?


'விஸ்வரூபம்’ படத்தின் முழுக் கதை என்ன தெரியுமா? படத்தைப் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகள் சொல்லும் விவரங்கள் இவ்வாறு செல்கிறது...



'இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்’ படத்தின் டைட்டில் போடுவ​தற்கு முன் திரையில் திகிலாக வந்து விழுகிறது இந்த வாசகம். அந்த வாசகத்தை நிஜம் ஆக்குவதுபோல படம் முழுவதும் கோரமான குண்டு வெடிப்புகளும் கொடூரமான கொலைகளும் நிரம்பி வழிகின்றன.



படத்தின் கதைக் களம் ஆப்கானிஸ்தான். அங்கே இருக்கும் தாலிபான்களின் செயல்பாடுகள்தான் படத்தை மொத்தமாக நகர்த்துகின்றன. இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா’வின் உளவாளி கமல், முஸ்லிம் கேரக்டரில் நடித்து இருக்கிறார். காஷ்மீரி ஒருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் கமல்.




 காஷ்மீருக்குச் செல்லும் கமலை, அங்கே தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கமல், தாலிபான்கள் கையில் சிக்குகிறார். அவரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை வாங்கலாமா எனக் கணக்கு போடுகிறது தாலிபான். 



அப்போது தமிழ் பேசும் கமலைப் பார்த்துவிட்டு, தாலிபான் தலைவர் உமர் அவரிடம் தமிழில் பேசுகிறார். ''ஐந்து லட்சத்தைவிட விலை மதிக்க முடியாத தமிழ் ஜிஹாதி. இவரைப் பிடித்துத் தர வேண்டாம். நமது குழுவிலேயே இருக்கட்டும்'' என்கிறார் உமர். நிஜத்தில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் கேரக்டர்போலவே இந்த உமர் கேரக்டர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உமர் தமிழ் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் கமல். ''நான் தமிழ்நாட்டில் கோவை மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.



மாயவரத்தில் பிறந்த நிருபமா என்ற பெண்தான் கமலின் மனைவி. அவர் வேலை பார்க்கும் சீசியம் மற்றும் அணுக்கதிர் கையாளும் நிறுவனத்துக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந் தேகப்படுகிறார் கமல். அதனால், மனைவிக்குத் தெரியாமலேயே அவர் உடையில் கேமராக்கள் வைத்து அந்த நிறுவனத்தை உளவு பார்க்கிறார் கமல். ஸ்கூலில் குண்டு வைக்கும் காட்சி முறியடிப்பு, காட்டிக்கொடுத்த போராளியை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவது என இப்படி அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.



தீவிரவாதச் செயல்கள் செய்யப்படும்போது எல்லாம் தொழுகைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. குர்-ஆன் வசனங்கள் அரபியில் ஓதப்படுகின்றன. ஒரு காட்சியில் 'ஜிஹாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்​கள். சொர்க்கம் உங்களுக்குச் சொந்தமாகும்’ என்ற வசனமும் அரபியில் ஒலிக்கிறது. தாலிபான்களின் செயல்பாடுகள் அப்படியே திரையில் திகிலாகக் காட்டப்​படுகின்றன. இடையில் ஒரு வசனம். 'இது ஆயிலுக்காக நடக்கும் யுத்தம்’ என எண்ணெய் வளங்களை சுரண்டும் அரசியல் பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் பின்லேடனும் வருகிறார். அவரை அமெரிக்கா கொன்றபோது அமெரிக்​காவில் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது, தமிழ் கேரக்டர்கள் இருவர், 'அசுரனைக் கொன்றது​போல மக்கள் கொண்டாடு​கிறார்கள்’ என வசனம் பேசு​கிறார்கள்.



தாலிபான் படையில் சேரும் கமல், அங்கே நடக்கும் செயல்களை உள்வாங்கி, தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா மீது தாக்குல் நடத்தத் திட்டமிடுகிறது தாலிபான். இதற்காக உமர் அமெரிக்கா செல்கிறார். இதை முறியடிக்க கமலும் நடனக்காரர் வேடத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார். அங்கே அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் சேர்ந்து திட்டத்தை முறியடிக்கிறார். அமெரிக்காவுக்குத் தாலிபானால் வரும் ஆபத்தை இந்தியா முறியடிப்பதாகக் கதை முடிகிறது. இறுதியில் உமர் விமானத்தில் தப்பிச் செல்ல, ''உமர் சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும்'' என கமல் வசனம் பேச... இந்தியாவில் தொடரும் என முடிகிறதாம் படம்.

 



முஸ்லிம்களின் மனநிலை என்ன?


''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளி​யாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.



'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!


-  ஜூ.வி. டீம்


 ரஜினியின் மௌனம்!


''இஸ்லாமியர்களுக்கு அனுதாபியாகவே நான் இருந்து வருகிறேன். மனிதாபிமானம் என்ற முறையில் ஒரு படி மேலே போய் அவர் களுக்காகக் குரல் கொடுத்து இருக்கிறேன். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் 'ஹார்மோனி இந்தியா’ அமைப்பில் உறுப்பி​னராக இருக்கிறேன். சில சிறிய குழுக்கள் அரசியல் லாபத்துக்காக இரக்கமே இல் லாமல், என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். தேசபக்தி உள்ள முஸ்லிம் இந்தப் படத்தைப் பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார்''  என உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் கமல்.




''கமலின் பிறந்த நாளை ஒட்டி சில வருடங்களுக்கு முன்பு அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரில், 'நடிப்புலகின் நபிகள் நாயகம் கமல்’ என்ற வாசகத்தைப் பார்த்து அதிர்ந்த கமல், இரவோடு இரவாக அதை அப்புறப்படுத்தி விட்டு, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். முஸ்லிமை உயர்வாகச் சித்திரிக்கும் 'மருதநாயகம்’ படத்தை எடுக்க கடும் முயற்சி மேற்கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில்கூட கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். இப்படி முஸ்லிம் மக்கள் மீது அன்பு செலுத்திய கமலா, அவர்களுக்கு எதிராகப் படம் எடுத்து இருப்பார்'' என்று வருத்தப்படுகிறார்கள் கமலின் அபிமானிகள்.  




கமலின் நெருங்கிய நண்பரான ரஜினியும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது அவரது ரசிகர்களை வருத்தப்படுத்தி இருக்கிறது. ''ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த படமான 'முள்ளும் மலரும்’ படத்தின் கிளை​மாக்ஸ் முடிவடையாமல் நின்றது. அப்போது விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல், தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து படப்பிடிப்பை நடத்தி பிரச்னையை சுமுகமாகத் தீர்த்தார். 



ஆனால், 'விஸ்வருபம்’ விஷயத்தில் ரஜினி ஏனோ கண்டுகொள்ளவில்லை. ரஜினி நினைத்து இருந்தால், 'விஸ்வரூபம்’ படப் பிரச்னை முதலில் தலைதூக்கியபோதே தலையிட்டுத் தீர்த்திருக்க முடியும். ரஜினி ஏனோ இன்றுவரை மௌனச் சாமியாராக இருக்கிறார். 36 ஆண்டுகளாக சினிமா உலகில் நெருங்கிய நண்பராக இருக்கும் ரஜினி இதுவரை 'விஸ்வரூபம்’ குறித்து விசாரிக்​காமல் இருப்பது கமலுக்கு மிகுந்த வருத்தம்தான்'' என்று ஆதங்கக் குரல்கள் கேட்கின்றன.




 ''டி.டி.ஹெச்-சிலாவது ரிலீஸ் ஆகுமா?''


'விஸ்வரூபம்’ பிரச்னை முதலில் டி.டி.ஹெச். அறிவிப்பு மூலமாகத்தான் தொடங்கியது. 'தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன், டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பாகும்’ என்று கமல் அறிவித்ததும், 'அப்படி என்றால் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம்’ என்று தியேட்டர் அதிபர்கள் முரண்டு பிடித்தனர். ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்த கமல், 'டி.டி.ஹெச்-சில் ஒரு வாரம் கழித்து ஒளிபரப்பாகும்’ என அறிவித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  



பாலிவுட்டில் கிட்டத்தட்ட எல்லா டி.டி.ஹெச்-சுமே இந்த வகை வசதியை வழங்குகின்றன. தமிழகத்தைப் போல தாங்கள் வாங்கும் புதுப் படங்களை பண்டிகை நாட்களில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என சேட்டிலைட் சேனல்காரர்கள் காத்திருக்க மாட்டார்கள். எவ்வளவு விரைவில் ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் காசு பார்க்கலாம் என்ற போட்டிதான் நடக்கும். இதைப் பார்த்த டி.டி.ஹெச்-காரர்கள் படத்தை முதலில் ஒளிபரப்பும் உரிமையை வாங்கி, அதற்கென 'ஸ்பெஷல் வீடியோ ஆன் டிமாண்ட்’ என்ற முறையை ஆரம்பித்தனர்.


 இந்த முறையில் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குள்ளாக ஒளிபரப்பும் படங்களுக்கு அதிகபட்சமாக 75 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. டி.டி.ஹெச்-சில் ஒளிபரப்பாகும் தினத்தில் 24 மணி நேரத்துக்கு அந்தப் படம் தொடர்ந்து ஒளிபரப்பாகும். எந்த இடத்திலும் படத்தை நிறுத்திவிட்டு, அடுத்தடுத்த முறை ஒளிபரப்பாகும்போது பார்த்துக்கொள்ளலாம்.  



உண்மையில் கமல் அறிமுகப்படுத்த முயன்ற, 'தியேட்டருக்கு முன்பே டி.டி.ஹெச்’ திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையானது. தியேட்டருக்கு முன்பே டி.டி.ஹெச். என்பதால் படத்தைப் பார்க்க டிமாண்ட் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல கோடிகளைக் கொடுத்துவிட்டு ரசிகர்கள் தலையில் கைவைத்தது டி.டி.ஹெச். நிறுவனங்கள். தமிழில் 'விஸ்வரூப’த்தைப் பார்க்க 1,000 ரூபாயும், பிற மொழிகளில் காண 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயித்தன.


 தியேட்டர் அதிபர்கள் பிரச்னை செய்ததை அடுத்து, தியேட்டரில்தான் முதலில் ரிலீஸ், பின்னர் டி.டி.ஹெச். என்று கமல் பின்வாங்கினார். இதனால், ரசிகர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு தகுந்தாற்போல கமலுக்கு டி.டி.ஹெச். கம்பெனிகள் அளிக்கும் தொகையையும் குறைத்துக் கொண்டு, 300 ரூபாயாகக் கட்டணத்தை குறைத்தன.


 


'விஸ்வரூபம்’ டி.டி.ஹெச்-சிலாவது ரிலீஸ் ஆகுமா? அதிலும் சட்டச்சிக்கல் ஏற்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்!


 ''சென்சார் போர்டை சீர்த்திருத்த வேண்டும்!''



 'விஸ்வரூபம்’ விவகாரம் பற்றி கவிஞர் மனுஷ்ய புத் திரனின் கருத்து என்ன?


''இஸ்லாத்துக்கு எதிரான கருத்தியலை உருவாக்குவது போல, தொடர்ந்து திரைப்படங்கள் வருகின்றன. ஏற்கெனவே கடுமையான நெருக்கடிகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற படங்கள் அவர்களை அன்னியப்படுத்தும் நிலையை உண்டாக்கும் இந்த விவகாரங்களை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக்​கொண்டால், ஒவ்வொரு திரைப்படத்தையும் முன்கூட்டியே திரையிட்டு காட்டவேண்டிய புதுக் கலாசாரம் உருவாகும்.



தீவிரவாதமும் இஸ்லாமும் ஒன்று எனத் தொடர்ந்து சித்திரிப்பதில் சந்தேகமும் எழுகிறது. இதுமாதிரியான படங்களுக்கு அமெரிக்கா பணஉதவி செய்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக முன்பு இதே மாதிரியான திரைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில், அமெரிக்காவின் நிதியுதவி பின்னணியில் இருந்தது. அதே போக்கு இப்போது இங்கு நடந்து வருவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நிலையை ஏற்படுத்தி விடலாம்.


சென்சார் கமிட்டி அளவிலேயே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். சென்சார் போர்டில் அரசியல் பின்புலத்தோடு இருப்பவர்களை அப்புறப்படுத்திவிட்டு சிந்தனையாளர்களையும் பத்திரி கையாளர்களையும் எழுத்தாளர்களையும் கொண்ட விசாலமான அமைப்பு உருவாக்க வேண்டும். இதில் அரசும் அவர்களோடு இணைந்து செயல்பட்டால் பிரச்னையைத் தீர்க்கலாம்.''



ஜூ வி க்கு நன்றி 



Friday, January 25, 2013

விஸ்வரூபம் - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வைத்தே படத்தின் கதையை யூகித்துவிடலாம். கமல், படத்தின் ஆரம்பத்தில் பெண் தன்மையுடன், நாட்டியம் கற்றுத்தருபவராக வருகிறார். கமலின் மனைவி பூஜா, அவரை கண்காணிக்க ஒருவரை அனுப்புகிறார். அந்த துப்பறிபவர், கமலைப் பற்றிய ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார். அதிலிருந்து விஸ்வரூபம் எடுக்கிறது கதை.

இந்த மாதிரி கதைக்கு படம் முழுவதும் விறுவிறுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் விஸ்வரூபத்தின் பின்பாதியில் விறுவிறுப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் அருமையாக இருக்கிறது. தமிழ் படங்களுக்கு இது புதுசு என்பதால் நிச்சயம் மக்களை கவரும்.

இசை நவீனமாக இருக்கிறது. படத்தில் கதக் நடன பாட்டு மட்டும் தான் இருக்கிறது. இன்னொரு பாடல், காட்சிகளின் பின்னணியில் வரும். பாட்டுகளை குறைத்ததற்கு கமலை பாராட்ட வேண்டும்.

பல இடங்களில் வசனம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. வசவச என்று இல்லாமல், வாய்க்குள்ளயே பேசாமல் கூர்மையான வசனங்கள்.

ஆன்ட்ரியா எதற்கு வருகிறார் என்று ஒருவர் விமர்ச்சித்து இருந்தார். ஆனால் படத்தில் கமல் ஆளுமை செலுத்தும் காட்சிகளே சுமார் ஒரு மணி நேரோமோ ஒன்னேகால் மணி நேரோமோ தான் இருக்கும். மற்ற இடங்களில் கதையோடு வருகிறார்.

பல காட்சிகளில் ரத்தமும், தூக்கு போடுவது, கழுத்தை அறுப்பதையும் காண்பிக்கிறார்கள். ஆதலால் சிறு குழந்தைகளை இந்தப் படத்திற்கு கூட்டிட்டுப் போகாமல் இருப்பது நல்லது.

தடை செய்யும் அளவிற்கு இந்தப் படம் ஒர்த்தா? ஒரு காட்சியில் தீவிரவாதி ஒருவர் தான் மதுரை, கோவை மற்றும் இன்னும் இரண்டு ஊர்களில் ஒழிந்து இருந்ததாக கூறுகிறார். பின் ஒரு காட்சியில் தீவிரவாதிகள் தொழுகை செய்வது போல் இரண்டு நொடிகள் காண்பிக்கிறார்கள். படத்தில் குரானை காண்பித்ததாக எனக்கு நினைவில்லை. இதை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

படத்தின் ஆரம்பத்தில் பிராமணர்களை சீண்டும் வகையிலும் ஒரு வசனம் வருகிறது.

படத்தில் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால், இந்த தடை விசயம் நகைச்சுவையாக இருக்கும்.

இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். நியுயார்க் மற்றும் ஆஃப்கானிஸ்தான் காட்சிகளின் பிரமாண்டம் அப்படி. கிராஃபிக் ஹெலிகாப்டர்களை குறைத்திருந்திருக்கலாம் :) ஏ மற்றும் பி சென்டர்களில் நன்றாக ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விஸ்வரூபம் - பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு படம். 



 





அவர் போட்ட ட்வீட்ஸ் ரிலேட்டட் த ஃபிலிம்


1.விஸ்வரூபம் ஓகே. கதைக்கு ஏற்ற விருவிருப்பு கொஞ்சம் கம்பி.



2. தியேட்டரில் செம கூட்டம் முன்னாடி உட்காரத்தான் இடம் கிடைத்தது.


3. ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் தமிழ் படங்களுக்கு புதுசு. ஒளிப்பதிவு அருமை. இசை ஓக்கே



4. அந்த கதக் பாட்டு மட்டும் தான். இன்னொரு பாட்டு பின்னணியில் மட்டும் வருது!


5. தடை பண்ணும் அளவிற்கோ 150 கோடி அள்ளும் அளவிற்கோ ஒர்த் இல்லை!



6. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் வசனங்கள்.


7. ஒரு தீவிரவாதி தான் மதுரை, கோவை மற்றும் 2 ஊர்களில் மறைந்து இருந்ததாகக் கூறுவார். அவ்வளவு தான்


8,. வழக்கு தொடுத்தவர்கள் நீதிபதியிடம் திட்டு வாங்கலாம் 


9. இந்தியா மாதிரியே ஒருத்தன் தியேட்டரில் போனில் பேசினான். கமல் வரும்போது கத்தி, கை தட்டினார்கள் :)


10. விஸ்வரூபம் படத்தின் முழுக்கதையை யாரிடமும் கேட்காமல் போய் பார்த்தால் படம் சுவாரசியமாக இருக்கும்.


11. ஆரம்பத்தில் பூஜா கவர்ச்சியாக சில நொடிகள் வருவார். அவ்வளவு தான். ஆண்ட்ரியாவிற்கு கவர்ச்சி காட்சிகள் இல்லை :)



12. படம் 150 கோடி கலெக்சன்னுக்கு வொர்தா?இல்லையா?


அந்த அளவிற்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் நல்ல வசூல் வரும். எந்திரன் மாதிரி இருந்தால் தான் 150 கோடி அள்ள முடியும் 1

எந்தவித எதிர்ப்புமே இல்லாமல் படம் வெளிவந்திருந்தால் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பே இல்லைல..

Carmike Galleria 6, Pittsburgh இல் படம் பார்த்தாராம்







விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
Posted Date : 13:35 (25/01/2013)Last updated : 13:50 (25/01/2013)
சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இரு தரப்பினரும் அமர்ந்து பேசி இவ்விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படப் பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல்ஹாசன் எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்துகோள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத்திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின்மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், கமல்ஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில்கொண்டு இந்தப் படத்தை முழுதாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் மாறி, கமல் வந்த பிறகு கலந்துபேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துகளுடன் இஸ்லாமிய சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


 




விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு ஆன்லைனில் குவி்கிறது ஆதரவு!
Posted Date : 12:31 (25/01/2013)Last updated : 12:31 (25/01/2013)
- சரா

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில்,  நடிகர் கமல்ஹாசனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
சினிமா ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பாலிவுட் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கமல்ஹாசனுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிடும் இளைஞர்களும், ஆர்வலர்களும் கமல்ஹாசனின் முயற்சியைப் பாராட்டியும், விஸ்வரூபம் விவகாரத்தில் அவருக்கு எதிரானச் சூழல்களை விமர்சித்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் கமல்ஹாசனுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் சூழலில், தமிழகத்தில் இருந்து திரையுலகினரின் ஆதரவுக் குரல்கள் குறிப்பிடத்தக்க அளவில் எழுப்பப்படாததையும் அவர்கள் கண்டித்துப் பதிவிட்டுள்ளனர்.
ட்ரெண்டிங்கில் கமல்ஹாசன்...

டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசனின் பெயர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் இடப்படுகிறது.

'இந்தியா ஒரு சுதந்திர நாடு. கமல்ஹாசன் தனித்துவம் வாய்ந்த திறமையாளர். அவர் தனது கருத்துகளைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு' என்று ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் டிவிட்டியுள்ளார். அந்த ட்வீட் 1000-க்கும் மேலானவர்களால் பகிரப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறும்பதிவுகள் #Kamal Haasan #Vishwaroopam முதலான ஹேஷ்டேக்-குகளுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்துகொண்டு இருப்பதால் இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிரெண்டிங்களில் பேசுபொருள் ஆகி இருக்கிறார் கமல்ஹாசன்.

டிவிட்டரில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பதிந்த குறும்பதிவுகள் அப்படியே...

Shekhar Kapur: “I stand up for #kamalhassan right 2 show d world #vishwaroopam n let d people decide, especially after Censor Board has passed the film.You?”

Ronnie Screwvala: “I think we are all going to another extreme – being moral police for “everythin” – not good at all.”

Anubhav Sinha: “Is the Tamil Nadu government saying that they do not recognise CBFC? Or they can’t handle law and order? Or they subscribe to the objection? When a government needs to ride on a movie star, you should know how intellectually and politically bankrupt they are.”

Siddharth: “Ban on ‘Vishwaroopam’ is a regressive, back to the dark ages blow to Tamil cinema by the Tamil Nadu government… how do we make a change?”

R Madhavan: “My Anbu Tamil Makkale.We have been one of the most secular states ever.Let not that ever be snatched from us.Vishwaroopam deserves a release.”

Madhur Bhandarkar: “I am appalled by the Tamil Nadu government’s decision to ban Kamal Haasan’s ‘Vishwaroopam’. After the film has been passed by the censor board. Not done.”

Manoj Bajpayee: “It is disappointing to hear that state government of Tamil Nadu banned ‘Vishwaroopam’ after the film is censored. That brings the importace of censor in question.”

Amit Khanna: “The ban on Kamalhaasan’s Vishwaroopam is totally uncalled for!Condemnable.”

Lakshmi Manchu: “It is appalling what’s happening with #vishwaroopam.. Pls don’t mix films w cheap politics. This insane cultural mafia shd end!!!”
 நன்றி - விகடன் 


 



மக்கள் கருத்து


1. கமல் அவர்களுக்கு வணக்கம் ,

படம் எடுக்க எவ்வளவோ கதை இருக்கிறது . அதே போல் நல்ல கதைகளை மக்களுக்கு தந்து இருகிறேர்கள் . இப்படி கூட எடுக்கலாம் .
1. இலங்கை அரசு என் தமிழன் அனைவரும் விடுதலை புலி என்று கொள்கீரதே அதை பற்றி எடுக்கலாம்.
2. தண்ணீர் தராமல் தமிழனை பாகிஸ்தான்காரன் போல் பாக்கும் கர்நாடக பற்றி எடுக்கலாம் .
3. நம் அணையை வைத்து கொண்டு நமக்கு தண்ணீர் தராமல் இருக்கும் கேரளா பற்றி எடுக்கலாம் .
4. உங்களின் அருமையான கல்யாணங்களை பற்றி எடுக்கலாம்.
5. குஜராத் கலவரம் பற்றிய உண்மையான சம்பவங்களை பற்றி எடுக்கலாம்.
6. தெனாலி, அவ்வை சண்முகி , பஞ்ச தந்திரம் போல நெறைய நகை சுவை படம் எடுக்கலாம்.
7. தமிழ் நாட்டில் நடக்கும் சாதி கலவரம் பற்றி படம் எடுக்கலாம்.
8.ஆப்கான் மற்றும் ஈராக் நாட்டில் நடக்கும் அமெரிக்காவின் வீரத்தை பற்றி எடுக்கலாம் .
9. நம் நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி படம் எடுக்கலாம்
10.நம் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறை வண்ணம் தடுக்கும் முறையில் படம் எடுக்கலாம்.
11.அப்துல் கலாம் , ஏ ஆர் ரஹ்மான் , சானியா மிர்சா , திப்புசுல்தான் , முஸ்லிம்களின் சுதந்திர பங்கு , தமிழ் முஸ்லிம்களின் வரலாறு ஆகிய வற்றை பற்றி எடுக்கலாம்.
12. இந்தியாவின் இந்து , இஸ்லாமியர்களின் ஒற்றுமை பற்றி எடுக்கலாம்

இதை எல்லாம் விட்டு விட்டு திவீரவதிகளாக எங்களை காட்டி எங்களிடமும் பணம் சம்பதிகாதே , தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்காதே -


2.தமிழக சினிமாத்துறையினரும் சந்தர்ப்பவாதிகளே, தமிழக அரசியல்வாதிகளைப்போல....இன்னைக்கு கமலுக்கு ஆதரவு தெரிவித்தால் ஒரு வேளை நாளைக்கு நம் படத்தை பார்க்க வர மாட்டார்களோ, காசு பனம் பாக்க முடியாதோ என்ற கோழைத்தனம்...அதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு தான் நினத்ததை சொல்லும் துணிச்சல் கமல் போன்ற வெகு சிலருக்குத்தான் உண்டு...அதனால் தான் இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து நிற்கிறார் அவர்...அழுத்தம் கொடுக்க கொடுக்கத்தான் வைரம் மென் மேலும் ஜொலிக்கும்... நீ வென்று வா தலைவா... வெற்றி விழா நாயகன் நீ.


3. bvimalnath 3 Hours ago
முச்லிம்கலை தவராக சித்தரித்து இருக்கிரார்கல் என்பது ஒருதரப்பாரினது வாதம் ஆனால்மும்பையில் 26\11ல் நடைபெட்ட்ர தீவிரவாத தாக்குதலில் கையில் க்லர் கயிரை கட்டிக்கொன்டு 56 பேர்கலை சுட்டுக்கொன்ரவன் யார் அவன் யென்ன இனம்? கார்கில்லில் தீவிரவாதியைப்போல நுழைந்து மரைமுக தாக்குதலில் ஈடுபட்டானே அவ்ன் எந்த நாடு நாட்டுனடப்பினைச் சொல்லக்கூட கருத்துச்சுதந்திரம்யில்லையென்ரால் ஜனனாயகனாடென்ரு சொல்லிக்கொல்லுவதில் அர்த்தம் என்ன இருக்கிரது
 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 25.1.2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.facenfacts.com/daily_img/32424_L_race-2-L.jpg 

1. RACE 2 -ரேஸ் 2 இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரேஸ் என்ற பாலிவுட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அப்பாஸ் ஹுசேன்
இயக்கத்தில் வரவிருக்கும் படம்.2013 ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ். 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்தில் வரும் ரண்வீர் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா ஆகிய கதாபாத்திரங்களாக ரேஸ் 2-வில் சயீப் அலி கான் மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.



இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 http://photogallery.indiatimes.com/movies/bollywood/race-2/photo/17251275/Deepika-Padukone-in-a-still-from-the-movie-Race-2.jpg


இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை. ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வேஸ்டானது. எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்


இப்படி பிரச்சனை ஆனாலும் பின் அவர் அவர் போர்ஷனை நடிச்சுக்குடுத்துட்டாராம், ஏன்னா படத்துக்கு மெயின் கிளாமரே பாப்பா தான் 


Ranvir treads through the world of the Indian mafia in Turkey as he looks to avenge the death of his lover and partner in crime. 

Release date: January 25, 2013 (initial release)
Genres: Thriller, Action film, Crime Fiction
 http://haihoi.com/Channels/cine_gallery/Pathayeram-Kodi-Movie-Shooting-Spot-05_S_129.jpg
2. த்ாயிரம் கோடி - Kollywood new upcoming movie Pathayeram Kodi Movie directed by Mounam Ravi movie main star cast is Dhruv, Madalsha are playing lead role in this movieஈரோடு ஆனூரில் ரிலிஸ்

 http://www.filmofilia.com/wp-content/uploads/2013/01/Hansel-Gretel-Witch-Hunters-Poster.jpg

 3.Hansel & Gretel: Witch Hunters -
In this spin on the fairy tale, Hansel & Gretel are now bounty hunters who track and kill witches all over the world. As the fabled Blood Moon approaches, the siblings encounter a new form of evil that might hold a secret to their past. 


What you may or may not remember about the Brothers Grimm' story is over and done with in the first ten minutes of writer-director Tommy Wirkola's revisionist treatment of the classic tale, which basically imagines what happens after the happily ever after. And so Wirkola fast- forwards the story many years later, where he would like us to believe that Hansel (Jeremy Renner) and Gretel (Gemma Arterton) have found their calling as witch hunters, travelling around from village to village killing the evil ones who kidnap children and rescuing their abductees in the process.

One particular such mission brings them to the town of Augsburg, where a beautiful blonde-haired woman named Mina (Pihla Viitala) is due to be drowned in front of an angry crowd by the shifty Sheriff Berringer (Peter Stormare). The Mayor (Rainer Bock) is not so fast to pronounce judgment on her for the spate of disappearances, and has hired Hansel and Gretel to get to the bottom of it. Seeing no visible signs of sorcery on her, Hansel and Gretel free her, inadvertently setting themselves on a collision course with the Sheriff.

But the bitter Sheriff and his band of hunters are the least of their problems – indeed, their most pressing concern is the Grandmother Witch Muriel (Famke Janssen) and her hench-women, who have been keeping the children they have kidnapped locked up in wait for a much more sinister plot to make them even more powerful. Of course, as narrative dictates, Muriel's plan would have something to do with Hansel and Gretel's own past, as well as their extraordinary ability to be immune from the spells of witches.



http://www.seanpaune.com/wp-content/uploads/2013/01/hansel-and-gretel-witch-hunters-stills-6.jpg
Savvy viewers will be able to spot the connection once the clues are laid, so don't expect a revelatory surprise at the end. That doesn't mean however that this reimagination is predictable; instead, Wirkola keeps you riveted with a surprisingly effective blend of horror and hilarity often within the very same scene. Case in point? Just before she forces someone to turn a shotgun on himself and splatter his brains onto the wall, Muriel comments how the room they are in looks somehow drab and could do with some colour.






That same irreverence pervades the entire movie, which shouldn't come as a surprise if you paid attention to the opening credits and spotted Will Ferrell and Adam McKay as producers of the movie. Their brand of rude cheeky humour is very much alive in Wirkola's first English-language feature, who had demonstrated through his debut movie lampooning Quentin Tarantino – Kill Buljo – that he is perfectly in tune with their sensibilities. But Wirkola also brings his eye for gore – seen in his sophomore film 'Dead Snow' – to this movie, so be prepared for exploding flesh, crushed skulls and some particularly nasty decapitations that is good reason why this grown-up version of Hansel and Gretel does not carry a kid-friendly rating.





Amidst the gore and adult humour, Renner and Arterton unfortunately are left with paper-thin characters. While Renner pretty much looks dour throughout the movie, Arterton seems determined to have fun with her ass-kicking female heroine of a role, and her portrayal of Gretel resembles a Lara Croft for the medieval ages. The scene-stealer however is Janssen, the former Bond villain once again relishing the opportunity to play against type as the villain and putting in a deliciously over- the-top performance as Muriel. Other supporting actors don't make much of an impression – including Thomas Mann, a firm Hansel and Gretel devotee who gets some laughs from his fanboy behaviour and eventually sees his wish come true to be a witch hunter like his heroes.

And we suspect, how much you will end up enjoying this new twist to the classic fairy tale will also depend on your expectations. Compared to the recent spate of fairytale-inspired Hollywood movies like 'Red Riding Hood' or 'Snow White and the Huntsman', it veers most far off from its source material to tell an entirely different story. The result of that novelty is something bloody all right, that can also prove to be bloody good fun if you're looking for an adult-oriented blend of action, adventure, fantasy, horror and comedy. It might not sound intuitive, but this fairy tale is best enjoyed without the kids.

- www.moviexclusive.com



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGc8i7LcwES-qlFFkmYwfQ96oQOEMayN-UUQANgSXpZ5jnvknPePMnLMQfDNFUtJxQRk74jnyxtUBrQQ1BfGKkYI-_NdUdWVrUOIyY83syZdE2-DYuTQroYm-F5zh7VrmaJq5o4KzBWN8/s1600/Visvaroopam.jpg

4 . விஸ்வரூபம் -
கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார்



. கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .


அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .


கதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .
இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .


கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .


அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .


நன்றி - லைவ் தமிழ் நியூஸ்,தினமலர், மாலை மலர் , சினிமா 123  மற்றும் அனைத்து சினிமா தளங்கள்


ிஸ்கி - ப்ரீவ்யோ பார்த் ஒரு உி இயக்குநர் சொன்னு + சில ங்கில இணைய ங்கில் பித்ு எல்லத்ையும் காக்டெயில் ஆக்கி இந்தப்பிவு  .ிழ்நாடு , பண்டிச்சேரி, இலங்கிர உலங்கும் ரிலீஸ்



இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...(lao cai - vietnam)
1.15 வயசு ஹீரோயினுக்கு இப்டி எப்போ பாரு லிப் லாக் கிஸ் குடுத்துட்டே இருந்தா பாப்பா எப்போ எப்படி சாப்பிடும்.வாயை ப்ரீயா விடு மாமு 





------------------------


2. படத்துல நேட்டிவிட்டியே இல்லையே? 



என் பேரு மணிரத்னம்.பாரதிராஜா இல்ல 



-------------------


3. கடைசில கடல் படம் படகோட்டியின் ரீமேக்கா இருந்துடப்போகுது ;-)) 



-----------------------


4.  டியர், என் உள்ளங்கை ரேகைகளில் நம் காதல் பாதைகள் தெரிகிறதா? 



ம்க்கும், 10 வருஷமா லவ் பண்ரோம், இன்னும் கையையே பார்த்துட்டு இருந்தா எப்டி?                  



---------------------



5. சார், நீங்க தமிழர் தானே? அமிதாப் தமிழ்ல கீச்சறார்.



 ஓஹோ, இப்போ நான் ஹிந்தில கீச்சனுமா? எனக்கு அது தெரியாதே?



---------------------------
தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்..
இடம்: ஈரோடு, பவானி

தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்..
இடம்: ஈரோடு, பவானி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...


6. இன்ஸ்பெக்டர், என் செல் ஃபோனைக்காணோம் .



 இப்போதான் உங்க ட்வீட்டை படிச்சேனே? 



ஹய்யோ, அவன் தான் திருடன், ட்ரேஸ் அவுட் ஹிம்



--------------------------



7. மிஸ், பஸ்ல உன்னை லிப் கிஸ் பண்ணியது யாரு?



 அதை எப்பிடி என் வாயால சொல்லுவேன் .



இப்போ உன் வாய் ஃப்ரீயாத்தானே இருக்கு?



----------------------------------


8.  பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது   #   அந்த லைனை அட்டெண்ட் பண்றவர் க்கு தினம் தீபாவளி               



---------------------------


9. ரெக்கார்டு நோட் சப்மிட் பண்ணிட்டியா? 



மிஸ், HM கிட்டே சொல்லிடாதீங்க, ஆஃப் த ரெக்கார்டா இந்த மேட்டரை மனசுல வெச்சுக்குங்க, தொலைச்சுட்டேன்



-------------------------


10. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு ஒரு “ டிக்கெட்” புக் பண்ணிட்டேன் .



 அடப்பாவி, உன்னை நல்லவன்னு நினைச்சேன்


--------------------------------



இனிய காலை வணக்கம்...

11. டியர், உனக்கு வேலை மிச்சமாகட்டும்னுதான் தோசை சாப்பிடாம ஊத்தப்பம் கேட்டேன் . 



எனக்கு மாவு மிச்சம் ஆகட்டும்னுதான் சாம்பார்ல காரம் அதிகம் சேர்த்தேன்



------------------------------------


12. சார்,  உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம்?



 நிதி திரட்டிட்டு இருக்கேன், சேர்ந்ததும் பண்ணிடவேண்டியதுதான், நீங்க தர்றீங்க்ளா?




------------------------



13. உத்தரவின்றி உள்ளே வா!  = இன்றுபோய் நாளை வா = கண்ணா லட்டு தின்ன ஆசையா?  # உலகம் உருண்டை






-----------------------



14. மிஸ்!இன்னைக்கு பச்சைக்கலர் ஜாக்கெட் போட்டிருக்கீங்க.என் காதலுக்கு பச்சைக்கொடி காட்ற சிக்னலா ?



டேய் லூஸு.இது தான் எங்க யூனிபார்ம்.




-------------------------


15  வாங்குன ஹமாம் சோப் தீர்ந்த நிலைல கடைசி கடைசியா ஒட்டிட்டு இருந்தாலும் அதை தேய்ச்சுக்குளிப்பமே அதுதான் குறைந்தபட்ச நேர்மை”








------------------------


மதி கார்டூன்.

தினமணி.

23.01.2013.
மதி கார்டூன்.

தினமணி.

23.01.2013.



16. ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை.# முன்னாள் முதல்வர்களுக்கு அஷ்டமத்துல சனி.உஷார்்



--------------------------


17. கருணாநிதியுடன் மு.க. அழகிரி சந்திப்பு!#


மகனே! உனக்கு என் இதயத்துல இடம் உண்டு .



போங்கப்பா.போங்கு ஆட்டம்




--------------------------

18. டியர், கோபமா இருக்கீங்க்ளா? என் முழுப்பேரும் சொல்லிக்கூப்பிடறீங்க?




கடுப்பைக்கிளப்பாதே, உன் முழுப்பேரே உஷா தானே? சுருக்கி  உ-னா கூப்பிட?




----------------------------



19. சூடா இருக்கும் சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடுவதும் , ஜில்லுன்னு இருக்கும் கோப உதட்டில் சமாதான முத்தம் தர்றதும் 1 தான் , திரிஞ்சுடும்





--------------------------


20. சார், நீங்க எழுதற நாவல் எதுவுமே எனக்குப்புரியலை



.  எல்லாருக்கும் புரியட்டும்னு நான் எப்பவும் எழுதவே மாட்டேன், சமயங்கள்ல எனக்கே புரியாது




-----------------------------

thanx - from the fb of rathnavel natarajan
சி.ஏ., இறுதி தேர்வு: தமிழ் மாணவி முதலிடம்

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.
சி.ஏ., இறுதி தேர்வு: தமிழ் மாணவி முதலிடம்

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.
--------------------------------


21. கவிதைப்போட்டி வெச்சாங்க , அவளையே கூட்டிட்டுப்போய்  ( கண்களை ) காட்டி பரிசு வாங்கிட்டு வந்துட்டேன்  ;-) # சும்மா



----------------------



22. விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் சகோதரர்கள் முந்திக்கொண்டு பார்த்து விடுவார்கள் போல



----------------------



23. தமிழ் சினிமாவின் தாஜ்மகால் பாரதிராஜா! - பார்த்திபன் பேச்சு# சமாதி ஆகிடுச்சு அவர் மார்க்கெட்டு?!



---------------------------


24.  ஒயின் சாப்பிடறவங்களை பழங் குடி மக்கள்னு சொல்லலாமா?




--------------------------------


25. நம்பிக்கையோடு உன்னை ஓட்டி கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் நீ கோவிச்சுட்டு போய்ட்டா நைசா எஸ் ஆகலாம் என்று




-------------------------


Credits: <3 @[271487672963446:274:Beauty Of The Earth] <3

Love The Nature <3


26. நீ வீணா ப்போனாக்கூட கவலைப்பட மாட்டேன்.ஆனா வீணா வீட்டுக்கு மட்டும் போயிடாதே.அவ என் ஆளு




------------------------


27. பெங்களூர் பொண்ணுங்களை விட மும்பை பொண்ணுங்க அழகா நல்லா " தெரிவாங்க" ,காரணம் உங்களுக்கே தெரியும்





-----------------------


28. அனுமதிக்காதவரை அன்பை சொல்லாதே.

அனு மதிக்காதவரை நீயும் மதிக்காதே



------------------------------


29. டாக்டர்.துளசி  சாப்பிட்டா என் இருமல் சரி ஆகிடுமா?


டேய் லூசு.துளசியோ கார்த்திகாவோ சாப்டா உனக்கு எப்டி சரி ஆகும்?



----------------------------



30. அன்பே! நீ தயிர்சாதம் போல் வெள்ளை வெளேர் என்றிருக்கிறாய்! ் உன் தங்கை ஊறுகாய் போல் செக்கச்செவேல் என.





-------------------------------


95k celebrate so take it dear friend...!



31. தமிழ்நாட்ல வெட்டியா சுத்தீட்டுருந்த முக்காவாசிப் பயலுங்களை தொழிலதிபர் ஆக்குன பெருமை நடிகைகளையே சேரும்



-----------------------------


32. திவ்யா அந்த புதர்ட்ட போனாலும் பரவாயில்லை.சில பதருங்க கிட்டே மட்டும் போயிடாதே




----------------------------



33. அன்பே! நீயே ஒரு மர மண்டை.எதுக்கு கடைல தனியா பூ வாங்கனும்?




------------------------


34. பிரியமான பிரியாமணி! பிரியாணி ரிலீஸ் அன்னைக்கே போலாமா? FREEயா நீ? நம்ம கார்த்தி படம்தான்.காத்து வாங்கிட்டு இருக்கும்





------------------------


35. ஸார்.படம் பூரா கடல் ல ஷூட்டிங்.உங்க பேவரைட் ரயில் எப்படி காட்டுவீங்க?


பாம்பன் பாலம் ராமேஸ்வரம் இருக்கே?


 ----------------------------



அன்பான காலை வணக்கம் நண்பர்களே
Lovely Good Morning Dear Friends

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:
தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

நன்றி - தமிழ்க்குடில்




36. மனைவிங்க சுஹாசினி மாதிரி.பேசிட்டே இருப்பாங்க.விமர்சனம் பண்ணுவாங்க.கணவர்கள் மணிரத்ணம் மாதிரி .வாயைத்திறக்க மாட்டாங்க.ஆனா டேலண்ட்





--------------------------



37. இயக்குநர் கமல் படம்,இயக்குநர் மணிரத்னம் படம் ஒரு வார இடைவெளியில் மோதுவது இதுவே முதல் முறை# கமலா? கடலா?




-----------------------



38. மச்சினி என்ன டிரஸ் போட்டிருக்கோ அதே கலரில் டிரஸ் போட்டுட்டு வந்து ஐ ஸேம் பிஞ்ச் என நைஸாக ( கன்னத்தை) கிள்ளினால் நீயும் ஒரு தமிழனே!




-----------------------------


39. முருகதாஸ் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் அஜித்...?!! # டைட்டில் ஐடியா நடநடராஜன்




------------------------


40. திரிஷாவுக்கு மது பாட்டில்கள் பார்சல்!; – இந்து மக்கள் கட்சி ஏற்பாடு! # இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா?




----------------------------------