Sunday, January 13, 2013

சமர் - சினிமா விமர்சனம்

tamil-cinema-samar-movie-first-look04.jpg (575×861)

சிம்பு மாதிரி ரொமாண்டிக்கா இருக்க ஹீரோவுக்கு தெரில .லவ்வுன்னா பொய் சொல்லனும், உருகனும், அட்லீஸ்ட் உருகற மாதிரி நடிக்கனும். நம்ம ஹீரோவுக்குஅதெல்லாம் வர்லை. டக்னு ஹீரோயின் ஹீரோவை  கழட்டி விட்டுட்டு பாங்காங்க் போயிடறா. 3 மாசம் கழிச்சு அவ கிட்டே இருந்து லெட்டர். உன்னை என்னால மறக்க முடியல . வா அப்டினு சொல்லி . கூடவே  பாங்காங்க்க்கு டிக்கெட் இன் கூரியர் கவர் . 


 ஹீரோ பாங்காங்க் கிளம்பறார். அங்கே போனா ஏகப்பட்ட ட்விஸ்ட். ஹீரோயின் அவரை வரவே சொல்லலை . வேற யாரோ கேம் பிளான் பண்ணி இருக்காங்க . இன்னொரு ஹீரோயின் அறிமுகம் . முத லவ்வுதான் புட்டுக்கிச்சு, சரி 2 வது லவ்வையாவது மெயிண்ட்டெயின் பண்ணலாமா?னு ஹீரோ யோசிகும்போது   ஹீரோவோட 2 வது லவ்வரோட  முதல் லவ்வர் எண்ட்டர் ஆகறார். என்ன தலை சுத்துதா? நயன் தாரா கதை மாதிரி இருக்கா? 


 எல்லாத்துக்கும் பின்னால  2 வில்லன்களோட பிளான் இருக்கு. ஆல் டிராமா..  ஏன் அப்டி பண்ணாங்க ? ஹீரோ ஓவர் ஹீரோயிசம் எல்லாம் காட்டாம அண்டர்ப்ளே சாக்சம் செய்வது எப்படி? என்பதை திரையில் காண்க .


 படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான். டபுள் ஹீரோ ஆள் மாறாட்டக்கதையோ?  தாதா கதையோ என்றெல்லாம் யோசிக்க வைத்து  கடைசியில் செல்வராகவன் பாணியில் சைக்கோ வில்லன்கள் கேம் என திரைக்கதை அமைத்தது புத்திசாலித்தனம்.


s1.jpg (800×600)


 ஹீரோ முன்னாள் புரட்சித்தளபதி விஷால் . ஆள் ரொம்ப டல் ஆகிட்டார். அவர் முகத்துல பழைய உற்சாகம் மிஸ்சிங்க் . டோண்ட் ஒர்ரி பாஸ். நல்ல கதையா செலக்ட் பண்ணா வின் பண்ணலாம்.. சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில்  ஜோடி தன் தோழி த்ரிஷா தான் என்றாலும் அவரிடம் உற்சாகம் இல்லாதது ஏனோ? ஷூட்டிங்க்  ஸ்பாட்ல ராணா இருந்திருப்பாரோ? 


 ஹீரோயின்  த்ரிஷா . மாடர்ன் ட்ரஸ்சிலும் சரி , சேலையிலும் சரி அழகான தோற்றம் தருபவர் .10 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கிறார்,. பாராட்டுக்கள் . சிவப்புக்கலர் புடவை அணிந்து ஒரு பாடல் காட்சியில் ரொமாண்டிக் பிரமாதமா பண்ணும்போதும் சரி, சிந்தாமணிக்கலர் பனியன் போட்டிருக்கும்போது ட்ரான்ஸ்பேரண்ட் சீன் காட்டும்போதும் சரி சபாஷ் போட வைக்கிறார்.  ஒரு சீனில் வில்லன்கள் முன் பேய் லுக் விடும்போது செம . வெல்டன் 3 ஷா.. 


 ஓபனிங்க் காதலியாக சில காட்சிகள் மட்டுமே வரும் அவசரக்குடுக்கை  அல்டாப் ராணியாக  சுனைனா.  இவர் தோன்றும்  7 காட்சிகளில் 6 காட்சிகள் செம லோ கட் . கண்டு களியுங்கள் மக்களே என்று சொல்லாமல் சொல்றார். நடிப்பு காட்ட டைம் இல்லை.. நாங்க யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. 



சைக்கோ வில்லன்களாக தெலுங்கு சத்யா ஹீரோ சக்ரவர்த்தி + இன்னொரு ஆள் . கேனத்தனமான நடிப்பு . சைக்கோ கேரக்டர்ல நடிக்கும்போது இப்படி லூஸ் தனமா விளையாட்டு காட்டிட்டு இருக்கக்கூடாது . செல்வராகவன் , கவுதம் மேனன் ரூமில் ஒரு நாளாவது தங்கி வந்தால் ஆட்டோமேட்டிக்காக ரியல் சைக்கோவாக வே மாறி  விடலாம். ஜஸ்ட் மிஸ். 


 காமெடி டிராக் என்ற பெயரில் அடிஷனல் அட்டாச்மெண்ட் எல்லாம் இல்லாதது ரொம்ப நிம்மதி 



Samar-Movie-Stills-42-255x300.jpg (255×300)


 இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 




1. ஹீரோ ஓப்பனிங்க் சீனில் காட்டுக்குள் கிடைச்ச மலர்கள், புல் எல்லாம் வெச்சு ஆன் த ஸ்பாட் ஒரு பூங்கொத்து ரெடி பண்ணும் லாவகம் கவிதை யான காட்சி 




2. ஏர்போர்ட்டில் த்ரிஷா காட்டும் பதவிசு , அவர் டிரஸ்சிங்க் சென்ஸ் பிரமாதம் . வெளிநாட்டுக்காட்சிகள் , ஏர்போர்ட் காட்சிகள் எடுத்த விதம் கனகச்சிதம் 



3.  படத்துக்கு பெரும் பலம் சேர்ப்பது எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள்.  த்ரில்லர் மூவி என்பதால்வசனத்திற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , கிடைச்ச கேப்ல கிடா வெட்டி இருக்கார் , வெல்டன் 



4. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அழகு . 3 பாடல்கள் நல்லாருக்கு .  த்ரிஷாவின் அழகு மிக நளினமாக வெளிப்பட்ட மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று


samar_tamil_movie_stills_1007120942_022.jpg (1024×681)


இயக்குநரிடம் சில கேள்விகள்





1. ஹீரோ எப்பவும் டியூட்டி நினைவா இருக்கார். ஹீரோயினை கண்டுக்கலை. ஜஸ்ட் அப்போதான் எதிரே வந்து நிற்கும் ஹீரொயின் போட்டிருக்கும் டிரஸ் என்னன்னு கூடவா நினைவு இருக்காது?  அவ்ளவ் தத்தியா? அப்படி டியூப்லைட்டா இருப்பவர் கடைசில எப்படி  புத்திசாலித்தனமா ஆகறாரு?




2.  ஓப்பனிங்க் ஃபைட் சீனைப்பார்த்தா ஹீரோ காட்டிலாகா அதிகாரி மாதிரியும் படமே சந்தன மர தேக்கு மர கடத்தல் மாதிரி பில்டப் எதுக்கு?



3.  ஹீரோ விஷால் ஒரு சீன்ல தூங்கி எந்திரிச்சு அப்பதான் பெட்ல இருந்து எந்திரிக்கிறார் , ஆனா பேண்ட் சர்ட்  போட்டு இன் பண்ணி கைல வாட்ச் கூட கட்டி இருக்கார்..  அப்படி யாராவது தூங்குவாங்களா?



4.  லவ்வர் சுனைனா கேரக்டர் சரியா சொல்லப்படலை . ஓப்பனிங்க் ஃபைட் சீனை கட் பண்ணிட்டு இருவருக்குமான காதல் காட்சி வெச்சிருக்கலாம்.  காதலன் தன்னை சரியா வாட்ச் பண்ணலை , ரொமாண்டிக்கா இருக்கத்தெரியலை என்பதற்காக எல்லாம் ஒரு பொண்ணு காதலனை கழட்டி விடுவாளா?



5.   சுனைனா பாங்காங்க்ல இருந்து கூரியர்ல ஒரு கவர் அனுப்பி இருக்கார். அதுல அட்ரஸ், ஃபோன் நெம்பர் எதுவும் இல்லை. விளக்கம் கேட்டு பதில் அனுப்பி அப்புறமா கிளம்புவாங்களா? சிக்னல் கிடைச்ச்சா போதும்னு உடனே முன்னே பின்னே தெரியாத ஊருக்கு போவாங்களா?




6. பாங்காங்க் ஹோட்டல் நிஜமா அங்கே எடுத்ததா? இங்கே  செட்டிங்க் போட்டு எடுத்ததா? ஃபாரீன் அழகி கம் ரிசப்ஷனிஸ்ட் இண்டியன் மேடு ரோட்டமேக் லெட் பேனா யூஸ் பண்ணுது



7. சுனைனா டுபாக்கூர்னு தெரிஞ்ச பின் ஹீரோ அந்த கவர் வெச்சு கூரியர் ஆஃபீஸ்ல போய் விசாரிக்கவே இல்லையே?


8. ஒரு சீன்ல ஹீரோ கார்ல இன்னொருவர் கூட உக்காந்திருக்கார். பின் கண்ணாடி வழியா த்ரிஷா கார்ல கடத்தப்படறார். டக்னு காரை திருப்பி சேஸ் பண்ணாம காரை  விட்டு இறங்கி  காரைத்துரத்திட்டு ஓடறாரே?  அவர் என்ன ஸ்பைடர்மேனா?


9.  தரண் பில்லா தீம் மியூசிக்கை எதுக்கு பல இடங்கள்ல யூஸ் பண்ணி இருக்கார்?


10. க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவை . ஷார்ட் & ஸ்வீட்டா முடிச்சிருக்கலாம்.

Trisha-hot-sey-photo.jpg (880×1248)

11. சைக்கோக்களா வரும் 2 வில்லன்களும் கேனம் மாதிரி சிரிச்சுட்டு வர்றாங்க , கதையோட சீரியஸ்னெஸ் தெரியாம.. அவங்களுக்கு சம்பளம் சரியாத்தர்லையா?



12. படத்தோட மார்க்கெட்டிங்க் மகா மோசம் .  புரமோ சரி இல்லை



13. படத்துக்கு சமர் என டைட்டில் வெச்சது ராங்க்.  இந்தப்படத்துக்கு என்  செலக்சன் - சுழல்  , இறுதி வரை உன்னோடு  இப்படி டைட்டில் ஓக்கே


14. ஒரு மசாலாப்படத்துல ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் எப்படி காதல் மலருதுன்னு காமிக்கத்தேவை இல்லை. ஆனா லவ் சப்ஜெக்ட்ல அது முக்கியத்தேவை, ஏன்னா காதல் மலரும்  தருணம் அற்புதமானது . அதை காட்சிப்படுத்துவது அவசியமானது , இந்தப்படத்துல சுனைனா , த்ரிஷா 2 பேருமே ஹீரோவிடம் ஏன் காதல் வசப்பட்டார்னு காட்சிப்படுத்தவே இல்லை


15. சில சீன்களில் பில்லா பாதிப்பு , கிடத்தட்ட திரையில் ஹீரோவைத்தவிர எல்லாரும் கூலிங்க் கிளாஸ்ல .. முடியல


16 . ஹீரோ 3ஷா காதலை ஏத்துக்கவே இல்லை . மனசுல காதல் இருப்பதாவும் நமக்கு காட்டலை, ஆனா  அவரோட முதல் லவ்வர் வந்ததும் கத்தியை எடுத்து குத்தப்போவது ஓவர். அந்தளவு தீவிரம் ஒரு காதலனுக்குத்தான் வரும். அதனால சிம்ப்பிளா ஹீரோவுக்கு த்ரிஷா மேல லவ் வந்தாச்சுன்னு ஒரு சீன் காட்டி இருக்கனும் .


17. த்ரிஷா லவ் டிராமா திருட்டுபயலே சோனியா அகர்வால் போர்ஷன் உல்டா



18. பொதுவா யார் செத்தாலும் டெட் பாடியை நேர்ல பார்க்கனும். சும்மா வீடியோ காட்சியை மட்டும்  பார்த்து செத்ததா வில்லன்க எப்படி நம்பறாங்க?



19. இந்தக்கதைக்கு ஃபாரீன் லொக்கேஷன் எதுக்கு ? ஜஸ்ட் வில்லன்க  மும்பை மாதிரி ஒரு ஏரியான்னு காடி இருக்கலாம்.. புரொடியூசர் செலவுல பாங்காங்க் போயிட்டு வந்துட்டீங்க..



Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg (940×625)





மனம் கவர்ந்த வசனங்கள் 




1. நீ எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிருக்கே.நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்



2. பொண்ணுங்க அளவுக்கு பசங்களால எல்லாத்தையும் நினைவு வெச்சுக்க முடியாது.அதுக்காக அவங்க மனசுல உண்மையான காதல் இல்லைனு சொல்லிட முடியாது 

3.  எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம்


 எது? பொண்ணுங்களை ஃபாலோ பண்றதா? 


 நோ, ஃபிளைட்ல போறது 



4.  காபில  உப்பு போடுங்க 


 வாட்?


 காபி ஷாப்க்கு டெயிலி  300 பேர் 400 பேர் வருவாங்க.. பேரர் எல்லாரையும் நினைவில் வெச்சிருக்க முடியுமா?  இப்போ பருங்க, என் பேரை , நினைவு வெச்சிருப்பார்.. 




5. நீ ட்ரிங்க் பண்ண மாட்டியா? 


 ம், பட் லேடீஸ் இத்தனை பேர் இருக்காங்க.. அதான் தயக்கமா இருக்கு 




6. காட்டையே சுத்திட்டு இரு , காத்லியை கண்டுக்காத 



7.  லவ் ஈஸ் பிலைண் ட்னு சொல்வாங்க.. எனக்கு கலர் பிலைண்ட் போல. நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்கேனு  தெரியாம போச்சு 




trisha-new-hot-wallpaper03.jpg (1024×685)



8. கிதார் ப்ளே பண்ற  பசங்களை பொண்ணுங்களுக்கு ரொம்ப  பிடிக்கும் , ஒரு ஃபீல் வரும் 



9. சண்டையே போடாத பொண்ணு , சரக்கே அடிக்காத பையன் கிடைப்பது ரொம்ப சிரமம்



10. பொண்ணுங்களுக்குன்னு தனி டாஸ்மாக் , தனி பார் ( BAR)  வரும் நாள் வெகு தொலைவில் இல்லை 




11. காதலி கிட்டே ஆல்ரெடி இருக்கறதை கொடுக்கறமா? இல்லாததைக்கொடுக்கறமா? இது முக்கியம் இல்லை, ஏதாவது பரிசு கொடுக்கனும், அதான் காதல் 



12.  ஒரு பெக் அடிச்சா காதலி மேல லவ் வரும் ,  2 பெக் அடிச்சா காதலி  மேல சந்தேகம்  வரும் ,3 பெக் அடிச்சா வேற ஒரு பொண்ணு  மேல லவ் வரும் ,   4 பெக் அடிச்சா தூக்கம் வரும்


 எத்தனை பெக் அடிச்சாலும் எனக்கு காதலி மேல நம்பிக்கை வரும் , காதல் மேலயும் 




13.  அவ வரவே மாட்டா-னு முடிவு பண்ணீட்டீங்களா? 


 இல்லை, ஊருக்கு போகலாம்னு  முடிவு பண்ணிட்டேன் 




14. தமிழ் சினிமாவுல எனக்கு பிடிச்ச டயலாக் - குத்துங்க எஜமான் குத்துங்க , இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்  ( சிவப்பு ரோஜாக்கள் - கே பாக்யராஜ் வசனம், டயலாக் டெலிவரி பை கவுண்டமணி ) 



15.  இன்னும் ஒரு நாள் இங்கே நான் இருந்தா என்னையே  நான் சந்தேகப்பட வேண்டி வரும் 



16.  ஒரே மாதிரி 2 பேர் ஓக்கே , ஒரே மாதிரி சிக்னேச்சர் சாத்தியமே இல்லையே? எங்கேயோ தப்பு நடக்குது 




Sunaina%2520hot%2520in%2520green%2520bra%252C%2520Sunaina%2520without%2520saree%252C%2520Sunaina%2520in%2520bra.jpg (405×512)




17.  லவ்ல தோத்துப்பாரு , நீயும் குடிப்பே 




18.  கேம்ல பூ விழுமா? தலை விழுமா? னு கேட்டுட்டு இருக்கக்கூடாது , விழ வைக்கனும் 




19. நான் அவன் கிட்டே “ உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்”ன்னு சொல்லி இருக்கேன்


 விடு, எல்லாப்பொண்ணுங்களும்  அவங்கவங்க லவ்வர் கிட்டே அப்படித்தான் சொல்றாங்க 




20. நீ இன்னும் மத்தவங்களை அட்ராக்ட் பண்றதுக்காக காபில உப்பு போட்டு குடிச்சுட்டு இருக்கியா? 





21.  இப்படிப்பேசிபேசியேதான்  எல்லாப்பொண்ணுங்களும் பசங்களை சாகடிக்கறீங்க? 



22.  முதல் காதலை விட 2 வது காதல் ஈசியா வரும் 




23. இந்த உலகத்துல எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு 




24. ஹீரோ பேசும் ஒரே பஞ்ச் டயலாக் - பயமுறுத்துனிங்க, பயந்தேன் ,  துரத்துனீங்க.. ஓடுனேன் , சுத்த விட்டீங்க.. சுத்தலை நின்னேன். நின்னு ஜெயிச்சேன்  ( அண்ணன் யாருக்கோ என்னமோ சொல்ல வர்றாரு ) 


actress-sunaina-hot-beach-photos-5.jpg (1024×683)




எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 43


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  7 / 10



 சி.பி கமெண்ட் -த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு .  கொஞ்சம் பொறுமையா பார்க்கனும் . இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இல்லைன்னு மைண்ட்ல செட் பண்ணிட்டு படம் பார்க்கனும் . ஈரோடு சண்டிகாவுல படம் பார்த்தேன்



டிஸ்கி - பலரும் ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. இதுலயே பதில் சொல்லிடறேன். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா , பின்னணி இசை  தருண்




சமர் - த்ரில்லர் மூவி ரிவ்யூ - வீடியோ -பை - சி பி எஸ் 






Trisha-Hot-Cleavage-Show-Pictures-Stills-Spicy-Pics-Navel-Show-4.jpg (741×563)

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Friday, January 11, 2013

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/alex-pandiyan/images/stills/alex-pandiyan-movie-012.jpga

மாற்றான் படத்துல பால் பொடி வியாபாரம் பண்ணாங்க்ளே அந்த மாதிரி வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ஆண்ட்டி பயோட்டிக் மருந்தை வில்லன் தமிழ் நாட்டுக்கு கடத்திட்டு வர்றான். சி எம் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞரா இருந்தா டக்னு சைன் பண்ணி அக்கவுண்ட்ல பணத்தை ஏத்தி இருப்பாரு, ஆனா சி எம் காமராஜர் மாதிரி மக்கள் நலனை தன் நலனா பார்ப்பவர் . சைன் பண்ண முடியாதுங்கறார். 


 உடனே ஆள் வெச்சு சி எம் மகளை வில்லன் கடத்தறார். அந்த அடியாள் தான் ஹீரோ. அந்த மகள் தான் ஹீரோயின். ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி  தன்னை காப்பாத்த சொல்றாரு . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த மசாலா குப்பையின் கதை . 


 குறும்படமா எடுக்க வேண்டிய இந்த 9 நிமிஷக்கதையை எப்படி 3 மணி நேரம் எடுத்திருப்பாங்கன்னு யாரும் கவலையே பட வேணாம், யோசிக்க வேணாம். படத்துக்கு சம்பந்தமே இல்லாம கிரி படத்துல வடிவேல் காமெடி வருமே அந்த மாதிரி சந்தானம் காமெடி இடைவேளை வரை . அவருக்கு 3 தங்கச்சிங்க .அந்த 3 பேரும் ஹீரோவும் அடிக்கும் லூட்டி  7 ரீல் . அப்புறம் காட்டுக்குள்ளே ஹீரோ ஹீரோயினை க்டத்தி வெச்சிருக்கும்போது மனோபாலா கூட மொக்கை காமெடி 4 ரீல் , மீதி 4 பாட்டு   3 ஃபைட்டு அவ்வளவு தான் படம் க்ளோஸ் .. ஐ மீன் “ முடிஞ்சுது “  



http://superwoods.com/photo-galleries/alexpandian-01/images/alexpandian-0101.jpg


ஹீரோ கார்த்தி . சூர்யாவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்னா  எத்தனை ஹிட் கொடுத்தாலும் சூர்யா பாடி லேங்குவேஜ்ல ஒரு தாழ்வு மனப்பான்மை , அடக்கி வாசித்தல் , பம்முதல் இருக்கும் , அது அவர் அப்பா சிவகுமார்ட்ட இருந்து வந்திருக்கும். ஆனா இவர்  சிறுத்தை கொடுத்த அதிரி புதிரி வெற்றியால  சீன் பை சீன் தன்னை அடுத்த ரஜினியா மனப்பால் குடிச்சுக்கிட்டு பஞ்ச் டய்லாக் பேசிட்டு படுத்தி எடுக்கறார். ஆனா லக்கி மேன். படத்துல இவருக்கு  5 பேர் கூட லூட்டி அடிக்கும் சான்ஸ். அதுக்கு சம்பளம் வேற . 


ஹீரோயின் அனுஷ்கா . அண்ணனுக்கு எட்டலை , தம்பிக்கு எட்டும் அது என்ன? பழமொழிதான் நினைவு வருது .  இடுப்புல கொஞ்சம் சதை போட்டுடுச்சு . நடுவுல கொஞ்சம் இளமையை காணோம். ( படத்துல கதையை மொத்தமா காணோம் )  ஒரு சீன்ல ஸ்லோமோஷன்ல ஓடி வர்றார். 2 டூயட் பாடறார். இதை விட ஒரு  மசாலாப்படத்துல தமிழ் ஹீரோயின் என்ன பண்ண முடியும்? 


சந்தானம்  - இவர் தான் படத்துல காமெடி போர்ஷனுக்கு இன்சார்ஜ் . பார்க்கும்போது செம சிரிப்பு வருது . அப்புறம் யோசிச்சா எதுக்குடா இப்படி சிரிச்சோம்னு இருக்கு . இவர் வடிவேல்  காமெடியை உல்டா பண்ணும் தேவை ஏனோ? 


 மனோபாலா - படத்தின் பின்பாதி இவர் காமெடி . முடியல . ஆனா குழந்தைங்க எல்லாம் தியேட்டர்ல சிரிக்கறாங்க ( படமே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போல ) 


 படத்துல இந்த 2 காமெடியன்களும் பண்ண காமெடியை விட   வில்லன்க சுமன், பிரதாப் போத்தன்  பண்ற காமெடி செம சூப்பர் . அவங்க வாங்கும் பல்புகளை  கடைசில பார்ப்போம்


 பாடல்கள் , இசை எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை . 3 பாட்டு சுமாரா இருக்கு 


http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Karthis-Alex-Pandiyan-Movie-Latest-Stills/alex_pandiyan_movie_stills_karthi_anushka_444f56c.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. கார்த்தி அறிமுகம் ஆன பருத்தி வீரன்ல இருந்து அவருக்கு அட்டர்ஃபிளாப் படமே இதுவரை அமையலை , சகுனி கூட சுமார் வெற்றி தான் . இப்படி தொடர்ந்து வெற்றியே வந்துட்டு இருந்தா ஒரு ஹீரோவுக்கு ஹெட் வெயிட் ஏறுதோ இல்லையோ சம்பளம் கிடு கிடுன்னு ஏறிடும்  . ஹீரோ டாமினேஷன் அதிகமாகும் இது ஆரோக்யமான தமிழ் சினிமா வளர்ச்சிக்கு நல்லதல்ல . அதை உணர்ந்து திட்டம் போட்டு கார்த்தி கிட்டே கால்ஷீட் வாங்கி கவுத்தது  .


2. படம் போட்டு  முதல் ஒரு மணி நேரம் கதையே சொல்ல ஆரம்பிக்காம சந்தானம் காமெடியையே காமிச்சு ஒப்பேத்துனது 



3. பொங்கலுக்கு 3 நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணி எப்படியும்  மினிமம் 3 நாள் வசூலையாவது பார்த்துடலாம்னு ஐடியா பண்ணது , விஸ்வரூபம் ரிலீஸ் ஆகாதது இவருக்கு சாதகம் 


4. ராவணன் படத்தில் ஐஸ்வர்யா காட்டில் குளிக்கும் காட்சி ,  க்ளிஃப் ஹேங்கர்  படத்தில் ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் காட்சி ,காதலன் படத்தில் கவர்னர் பெண்ணை ஹீரோ கரெக்ட் பண்ணும் காட்சி ,  குணா படத்தில் தன்னை கடத்தியவனிடமே ஹீரோயின் மனதைப்பறி கொடுக்கும் காட்சி ,  செந்தூரப்பூவே படத்தில் க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் சீன் , படிக்காதவன் படத்தில் விவேக் காமெடி காட்சி , கிரி படத்தில் வடிவேல் காமெடி காட்சி என  ஒரே படத்தில் பல படக்காட்சிகளை சாமார்த்தியமாக நுழைத்த  விதம்  அருமை (!!!!!!) 


 http://www.idlebrain.com/movie/photogallery/anushka19/images/anushka0022.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஓப்பனிங்க் ஷாட்ல 120 கிமீ வேகத்துல ரயில் போய்ட்டு இருக்கு , ஹீரோ 23 பேரை  12 நிமிஷத்துல அடிச்சுட்டு 130 கி மீ வேகத்துல ஓடி ரயிலை பிடிப்பது எபப்டி? அது கூட தேவலை . பாலத்துல 10 மீட்டர் உயரத்துல இருந்து ஹீரோ மின்னல் வேகத்தில் ஓடி வரும் ரயிலில் குதித்து அசால்ட்டா எந்திரிக்கறாரே, செம சீன் . முடியல 
2. அண்ணனுக்கு பெயில் கிடைக்கனும், அதுக்காக அப்பாவிகள் 3 பேருக்கு வில்லன்க மொட்டை போடுவதும் அந்த 3 பேருல ஒருவரா ஹீரோ இருப்பதும் படத்துக்கு சமப்ந்தம் இல்லாம ஃபைட்  காட்சி , கதைக்கும் அந்த ஃபைட்டுக்கும் என்ன சம்பந்தம்?



3. இடைவேளை விடும்போது வில்லன் 18 பேர் கூட ஹீரோவை முற்றுகை இடுகிறார். வில்லனை ஹீரோ அடிச்ச பின் அந்த 18 பேரும் அப்பதான் என்னாச்சுன்னு  கேட்பது செம காமெடி 



4. வில்லன் கோஷ்டி 8 மஹேந்திரா & மஹெந்திரா ஜீப்ல தலா 6 பேர் 48 பேரும் ரவுண்ட் கட்டி  துப்பாக்கியால சுடறாங்க  ஹீரோவுக்கு 1 மே ஆகலை 





5.  பிரதாப் போத்தன் கேரக்டர் வில்லத்தனம் செய்யப்போகுதுன்னு முதல் சீன்லயே தெரியுது  அதுல என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு? 


http://img.bollywoodsargam.com/albumsbolly/Anushka/Anushka_BollywoodSargam_hot_824960.jpg



6. பணயக்கைதியா சி எம் மகள் வில்லன் கிட்டே ,  ஃபைல்ல கையெழுத்துப்போட சி எம் ஒத்துக்கறார்/ ஃபைல் வந்ததும் நான் ஃபைலை படிச்சுப்பார்க்கனும், ஒரு மணி நேரம் டைம் வேணும்னு கேட்கறார் , அது என்ன சாண்டில்யன் எழுதுன கடல் புறாவா? படிச்சுப்பார்க்க டைம் கேட்க . உனக்கே வழி இல்லை , வேற கதி இல்லை , சைன் பண்ணித்தானே ஆகனும்?னு வில்லன்க யாரும் கேட்கலை . கேனம் மாதிரி சரிங்கறாங்க 



7. ஒரு சி எம் மக பல பார்ட்டிக்கு போறா , ஜாலியா இருக்கா./ ஆனா அவ ஆம்பளைங்களையே பார்க்காதவ மாதிரி  ஹீரோ கிட்டே காட்டுக்குள்ளே கெக்கே பிக்கேன்னு இளிச்சுட்டு இருக்கு .கிட்நாப் பண்ணவனையே லவ்வுது , கண்றாவி 



8. க்ளைமாக்ஸ் சீன் செம காமெடி , ஹீரோவை வில்லன்க கட்டி வெச்சு உதைக்கறாங்க. சாகும் நிலைக்கு போகும்வரை வேடிக்கை பார்த்துட்டு ஹீரோயின் சொல்லுது “ நீங்க ஆம்பளையா இருந்தா கடை அவுத்து விடுங்க பார்க்கலாம்.உடனே அந்த கேன வில்லன்க அவுத்து விடறாங்க , மீதி இருக்கும் 45 பேரையும் ஹீரோ காலி பண்றார் . 



9. சி எம் மகளை கடத்த ஜஸ்ட் 10 லட்சம் தான் செலவு ஆகுமா? சுத்தம்  சி எம் மகளை என்னமோ பொட்டிக்கடை சரசு பொண்ணை கடத்துவது போல் காட்டி இருப்பது படு சொதப்பல் 


10 . ஃபாரீன் வில்லன் விஜயகாந்த் பட பாகிஸ் தான் தீவிரவாதியை விட பிரமாதமா தமிழ் பேசுவது எபப்டி? 


http://moviegalleri.net/wp-content/gallery/alex-pandian-new-stills/alex_pandian_new_stills_karthi_anushka_2069b7d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்  


1. நாளைக்கு எங்கண்ணன் ஜெயில்ல இருந்து 10 மணிக்கு வந்ததும் முத வேலை உன்னை வெட்றதுதான். சந்தானம் - 10,30 மணிக்கு மறுபடி ஜெயிலுக்கு போய்டுவாரே 



2. சந்தானம் - பொண்ணு ,பொரி உருண்டை 2 ம் 1 தான்.காத்து பட்டாலே கெட்டுடும் .கலிகாலம்



 3. சந்தானம் - எல்லா மாடும் ம்மா னு கத்தும்போது என் மாடு மட்டும் மாமா னு கத்துது.என் தொழில் அதுக்கும் தெரிஞ்சிடுச்சா? 




4. ரவுடி சார்.நீங்க ஜெயில்ல இருந்து வர்றீங்ளா? சரவணபவன் சமையல்கட்ல இருந்து வர்றீங்ளா? மூஞ்சி எல்லாம் கரிச்சட்டி மாதிரி இருக்கு?




5. நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போகுது 

 அப்போ இப்பவே உன்னை எரிச்சுடறேன் 



6.  நீ எப்போ வந்தே?


 இப்போத்தான் 


 எப்போ போவே 

 தெரில 

 அடேய் , வந்தமா போனமான்னு இருங்கடா, இப்படி மஞ்சக்காமாலை மாதிரி தங்கிட்டா? 




7.  கூட்டுப்பொரியலை எடுத்து வை 

 ஆல்ரெடி வெச்சாச்சே?

 நான் உள்ளே எடுத்து வைக்கச்சொன்னேன் 



8.  எப்படி இருந்துச்சு? 

 3ம் சூப்பர் 


 நீ எதைச்சொல்றே?


 கூட்டை 

 நல்ல வேளை என் தங்கச்சிகளைச்சொன்னியோன்னு நினைச்சேன் 




9.  என்னது? இன்னைக்கு 2 மணிக்கே சங்கு ஊதிட்டாங்க? 


 நான் தான் ஏப்பம் விட்டேன் 


10. அவனுக்கு ஏன் துடைச்சு விடறீங்க? இல்லைன்னா துரு பிடிச்சுடுமா? 


http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilshots/images/restricted/23-10-2008/9.jpg

11. எங்கப்பன் என்ன மூடுல இதுங்களைப்பெத்தானோ  மூணும் இப்படி முறை கெட்டு அலையுதுங்க 



12. தங்கச்சின்னு 1 பிறந்துட்டா அண்ணன் காரன் ஆந்தை மாதிரி காவ காக்கனும் 



 13.  இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் 


 வாட்? 

 உங்க வீட்ல நான் தங்கற ஃபர்ஸ்ட் ந்நைட் னு சொல்ல வந்தேன் 



14. சிம்ப்பிளா செய்ய வேண்டிய விஷயத்தை ஏன் சில்மிஷத்தோட செய்யறீங்க?


15. அண்ணே, நீங்க 4 மணி நேரம் என்னை கட்டிப்பிடிச்சு தூங்கி இருக்கீங்க. 400 ரூபா குடுங்க 


 எதுக்கு?

 மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கனும் 

 அப்படித்தெளிவாச்சொல்டா 




16. அண்ணே , உன் தங்கச்சி 3 பேரையும் ரவுண்ட் கட்டி அடிச்சுட்டு இருக்கான் 

 வாட்?

 கேரம் விளையடறான்



17. டீயா? காபியா? என்ன வேணும்?

 பால்


 ஆவின் பாலா? ஆரோக்யா பாலா?

 அமலா பால் (   எல் சேவுக பாண்டியன் ஜோக் @ குமுதம் 2012 ) 



18. இந்த கேம்ல நான் ஜெயிச்சா?

 முத பஸ்சை பிடிச்சு ஊருக்குப்போயிடு 


 நீ ஜெயிச்சா?

   முத ட்ரெயினை  பிடிச்சு ஊருக்குப்போயிடு



19. கேரம் காயின்க்கு தமிழ்ல காய் தானே? 


 அதுக்காக காய் அடிச்சேன்னு சொல்றதா? 



20 , டேய் , குத்து விளக்கு மாதிரி இருக்கும் தங்கச்சியை குனிய வெச்சு என்னடா பண்ணிட்டு இருக்கே? 


 பாண்டி விளையாடறேன் 

 தூண்டி விளையாடுவே , சீண்டி விளையாடுவே . நான் வேடிக்கை பார்க்கனுமா?


http://haisay.com/file/pic/photo/2011/10/images-anushka-new-hot-look-images-jpg_1024.jpg



21. குத்துப்பட்ட இடத்துல பத்துப்போடனும், இப்படி பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கப்படாது 



22. கட்சியை வெச்சிருக்கறவன் கூட தப்பிச்சுடுவான் தங்கச்சியை வெச்சிருக்கறவன்..... ம்ஹூம் 



23.  வில்லன் - நான் யாருன்னு தெரியாம என் கிட்டே  விளையாடறே


 விளையாட  அது எல்லாம் தேவை இல்லை ( ஹீரோ பஞ்ச் ) 





24. நைட் நரி கத்துச்சு? 

 இனி கத்தாது , நீ சாப்பிட்டுட்டு இருக்கியே அது கறி இல்லை , நரி 

 உவ்வே 



 25. ஹீரோவின் பஞ்ச் - தீப்பெட்டிக்கு 2 பக்கம் உரசுனாத்தான் பத்திக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டிக்கு எந்தப்பக்கம் உரசுனாலும் பத்தும் 



26. உன் கிட்டே சிக்ஸ் பேக் இல்லைன்னாலும் நல்ல ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கே.. 



27.  தேனி கொட்டிடுத்து


 டேய். தேனி கொட்டிட்டு தேனி ( ஊர் ) தாண்டிப்போயிடுச்சு , அவ்ளை விட்டு எந்திரிடா


28.  நாங்க எல்லாம் ஆணி குத்துனாலே அசால்ட்டா புடுங்கிப்போடுவோம் , தேனி கொட்டினா..


 அடடா,, ஆணி , தேனி பின்றானே எதுகை மோனைல




29.  உண்டி வில் தெரியாதா? அது தான் ஏழைகளின்  ஏ கே 47



30. என்னை போலீஸ் தேடுது , ரவுடிங்க தேடறாங்க



 ஏண்டா, எப்போ பாரு என் தங்கச்சி பின்னாலயே சுத்திட்டு இருக்கியே , உன்னை உன் வீட்ல தேட மாட்டாங்களா?


http://www.breezemasti.com/gallery/data/media/22/anushka_shetty_latest_hot_stills_08.jpg




31.  எனக்கு எல்லா லேங்குவேஜ்லயும் பிடிச்ச ஒரே வார்த்தை பனம் , மால் டப்பு



32.  எனக்கு சுகர் இருக்கு , பி பி இருக்கு , எல்லா வியாதியும் இருக்கு , சீக்காளியா இருக்கும் என்னை கொன்னு கொலையாளியா மாறிடாதே



33.  எனக்கு சரக்கு வாங்கிக்குடுத்து பெத்த தாய் மாதிரி பாத்துக்கிட்டீங்க  நாய் மாதிரி உங்களை அடிச்சுட்டேனே



34.  ஹேப்பி பர்த்டே


 எனக்கு  பர்த்டே வே இல்லையே?

 எனக்கு  பர்த்டே

 ஓ , எனக்குத்தெரியாது

 எனக்கு அமிதாப் பச்சனையே தெரியும்

 எனக்கு தங்கர் பச்சானைக்கூட தெரியாது





35.  யோவ், 6 மாசமா ரீ சார்ஜே பண்ணலை , எப்படிய்யா அவுட் கோயிங்க் போகும்?



36. இப்போ பாரு , நோக்கு வர்மம் மூலம் அவனை நான் ஒரு வழி பண்றேன்



 பார்த்தா பேக்கு மாதிரி இருக்கே



 37.  என் மூஞ்சியைப்பார்த்தா டம்மிப்பீஸ் மாதிரியா இருக்கு?


 ட்டோட்டல் பாடியே டம்மிதான்



38.  நான் இதுவரை 40 புலி , 39 சிங்கம்

 அடடே, சுட்டிருக்கியா?




நோ , பார்த்திருக்கேன்


எங்கே? காட்டிலா?

 வண்டலூர் ஜூ ல

 தூ

 தாங்க்ஸ்



39,  புலி தப்பிச்சுடுச்சா?

 புலி கிட்டே இருந்து நீ தான் தப்பி இருக்கே/




40.  ஆம்பளை ,மாதிரி  பேண்ட் போடுவீங்க , கட்டிங்க் பண்ணிக்குவீங்க, தம் அடிப்பீங்க, சரக்கு கூட அடிப்பீங்க , ஆனா ஆம்பளை சட்டையை மட்டும் போட மாட்டீங்களா? என்னம்மா நியாயம் இது? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9_3K_M2WI_kCpQTW4f7pnOpOPrUf4kmi8XqPbwtE4ERXf3qr162dEGrDyN-V49Ah8gCQSJVLIX1H7Lfye3fPeD0IKEyzTR-1ZWFvOxuClXwN2o9jO1RzbaGTkiFnTL0TAyVXNm6C3DC3V/s1600/Actress_Anushka_Shetty_Cute_Glamour_Hot_Photos_07.jpg



41.  பொண்ணு வீரமா இருக்கலாம், ஈரமா தான் இருக்கக்கூடாது



42. ஜெயிலுக்குப்போறதெல்லாம்  நான் ஸ்கூலுக்குப்போற மாதிரி



43.  நாயா? நரியா?

 நரி

ஏன் கத்துது?

 வெறி




44.  இந்த காட்டை விட்டு தப்பிச்சுப்போகலாம்னு மட்டும் நினைக்காதே  வெளில  சிங்கம் , புலி , சிறுத்தை எல்லாம் இருக்கு


 என்ன ? சினிமா டைட்டிலா சொல்லி பயமுறுத்துறே ? இதை எல்லாம் நான் டிஸ்கவரி சேனல்ல பார்த்தாச்சு


45. எத்தனை பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் , டப் டப்பு டப்புன்னு


  சுட்டுடுவியா?


 கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவேன்



46. டேய் , ரவுடிங்களை எல்லாம்  ஏன் ரேக்கிங்க் பண்ணிட்டு இருக்கே?



47. உன் கிட்டே இருந்து என் தங்கச்சிகளை காப்பாத்த உனக்கு ஷாக் வெச்சேன் , அதை சாக்கா வெச்சு அவங்களையே கரெக்ட் பண்ணிடுவே போல இருக்கே?



48.  என்ன பண்ணிட்டு இருக்கே?


 ஷாக் அடிச்சு விழுந்துட்டாரு, அவர் வாய்ல உதட்டை வெச்சு ஊதறேன்


 அவன்  வாய் என்ன பலூனா?




 49.  இந்த சுவிட்ச்ல மட்டும் கையை வெச்சுடாதே

 வெச்சா என்ன ஆகும்? இதோ வெச்சுட்டேன்// ஆஆஆஆஆ




50 .  வலியைக்கூட தாங்கிக்கலாம் , ஆனா இவனோட ஓவர் ரிஆக்‌ஷனை தாங்க முடியலை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1XOyowQ3bgbaOBzD2OF5Rq7c4m3AK3fDDj-jM5_kHfTs_GTZsDDyA5ErMqVaOuisxVpXUo7ZuWQNmDUdqNn3fpYEQ7WXS_tTROnmfbxx0yzL22R-Gu6dBeDAa-x2oH9awMLn8jnK81jSU/s1600/Anushka-Hot-Photos-CF-01.jpg



 51  என்னை ஆயான்னு கூப்பிட பேரக்குழந்தைகள் வேணும்


 உன்னை ஆயான்னு கூப்பிடனும் அவ்வளவுதானே? அந்த ஸ்கூல்ல போய் மத்தியானம் சோறாக்கிப்போடு , எல்லாக்குழந்தைகளும் ஆயான்னு கூப்பிடும்



52.  வயசுப்பொண்ணு வாந்தி எடுப்படும் , மஞ்சக்காமாலைக்காரன் வாந்தி எடுப்பதும் ஒண்ணுதான் 2ம் டேஞ்சர்



53. டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே?

 ஜஸ்ட் கேம்ணே

 ஒர்ஸ்ட் கேம்


 54. அதென்னடா, பொம்பளைன்னா பொறுப்பா இருக்கே, ஆம்பளைன்னா வெறுப்பா ஆகிடறே ?



55.  என்னாங்கடி இது கும்கி யானையை குளிப்பாட்டுற மாதிரி குளிப்பாட்டிட்டு இருக்கீங்க ?



56. என்ன பண்றே?

 கூல் பண்றேன்

 என்னை ஃபூல் பண்ணாம விட மாட்டே போல



57.  என் 3 தங்கச்சிகளை கரையேத்தனும்


 நானும் ஏத்தவா?


 நீ எதை ஏத்துவேன்னு தெரியும், தள்ளி நில்டா




58 . உன் பெரிய தங்கச்சி தூங்கி இருக்குமா?


 எதுக்கு கேட்கறே?


  நாடி ஜோசியம் பார்க்கனும்னு சொல்லுச்சு


 விட்டா  சேடி ஜோசியம் கூடப்பார்ப்பியே?




59. அண்ணே , இவர் புது விளையாட்டு சொல்லிக்குடுத்தாரு


 என்ன விளையாட்டு ?

 மாமா மாமிக்கு மாம்பழம் கொடுக்கற விளையாட்டு

 கிழிஞ்சுது போ



60 . குட்டிக்கதை சொல்றேன்  குட்டிக்கதை சொல்றேன்னு சொல்லிட்டு ஜட்டிக்கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கியேடா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHiZMyWg54nmVJqpveeWzXc24eOMTXrhrnCjidGezAqFMyQbQsrZZ51cHqRqf1dQg2g30-amPXnVzLueLWvgDR94X2GKb4N0zWq6oIm3RXqbkF8OJHHtmo7uN_RMJ8NzZNXh9Z2i1r656/s0/Anushka%2520Spicy%2520hot%2520sexy%2520photos%2520Anushka%2520new%2520telugu%2520actress%2520unseen%2520spicy%2520photos%2520%25286%2529.JPG




61.  வெளில பனி இருக்கு


நீ  உள்ளே  படுத்தா எனக்கு  சனி



62.  ஏண்ணே ,மாடுக்ளைக்கூட்டிக்குடுக்கறியே , வெட்கமா இல்லை?

 டேய் நாயே, நீ என் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்துட்டு என்னையே நக்கல் பண்றியா?


63. எப்போ பாரு பிச்சைக்காரன் மாதிரி  அம்மான்னு ஏன் கூப்பிடறே?  மம்மின்னு கூப்பிடு

 மம்மி , ஜிம்மின்னு கூப்பிட்டு மத்தவங்க முன்னால கும்மி அடிக்க முடியாது



64. டேய் , டீக்கடைல என்னடா பண்ணிட்டு இருக்கிங்க?

 டீ குடிச்சுட்டு இருக்கோம்

 வீட்லயே போட்டு எடுத்துட்டு வந்த டீ மாதிரி இருக்கு , என் தங்கச்சியை சைட் அடிக்கத்தானே வந்தீங்க ?



65. ஒரு வயசுப்பொண்ணு ஆசைப்பட்டு கேட்குது , ஜல்லிக்கட்டு காட்டுனா என்ன?

 புல்லுகட்டு வேணா காட்டலாம்


66. சந்தானம் - வில்லன்களின் அடியாள்களிடம் -  ஏன்டா!! டீசல் விக்கிற விலைக்கு இவ்ளோ வண்டி எடுத்துட்டு துரத்திட்டு இருக்கானுங்க? இவனுகளுக்கு உள்ள உட்கார இடம் இல்லையா? எப்ப பார்த்தாலும் வெளியவே தொங்கிட்டு வரானுங்க?




67. கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது




http://moviegalleri.net/wp-content/gallery/damarukam-new-stills/damarukam_new_stills_nagarjuna_anushka_hot_stills_6885055.jpg




எதிர்பார்க்கும் விகடன் மார்க் -39


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  5 / 10




BY CPS THROUGH VIDEO - ALEXPANDIAN FILM REVIEW -





 சி.பி கமெண்ட் - மாறுபட்ட நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அலெக்ஸ் பாண்டியன் - அட்டர்பிளாப் -ஆனா டி வி ல போட்டா பார்க்கலாம் , காமெடி கிளிப்பிங்க் பார்க்கலாம்.  200 ரூபா பிளாக்ல ஈரோடு அபிராமி தியேட்டர் வாசல்ல  யாராவது வித்தா அவன் கிட்டே தம்பி இந்தபப்டம் 50 ரூபாய்க்கே ஒர்த் இல்லைன்னு நக்கலா சொல்லிட்டு போய்ட்டே இருங்க


http://onfunn.com/wp-content/uploads/2012/10/anushka-hot-14.jpg