Showing posts with label karthi. Show all posts
Showing posts with label karthi. Show all posts

Friday, January 11, 2013

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/alex-pandiyan/images/stills/alex-pandiyan-movie-012.jpga

மாற்றான் படத்துல பால் பொடி வியாபாரம் பண்ணாங்க்ளே அந்த மாதிரி வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ஆண்ட்டி பயோட்டிக் மருந்தை வில்லன் தமிழ் நாட்டுக்கு கடத்திட்டு வர்றான். சி எம் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞரா இருந்தா டக்னு சைன் பண்ணி அக்கவுண்ட்ல பணத்தை ஏத்தி இருப்பாரு, ஆனா சி எம் காமராஜர் மாதிரி மக்கள் நலனை தன் நலனா பார்ப்பவர் . சைன் பண்ண முடியாதுங்கறார். 


 உடனே ஆள் வெச்சு சி எம் மகளை வில்லன் கடத்தறார். அந்த அடியாள் தான் ஹீரோ. அந்த மகள் தான் ஹீரோயின். ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி  தன்னை காப்பாத்த சொல்றாரு . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த மசாலா குப்பையின் கதை . 


 குறும்படமா எடுக்க வேண்டிய இந்த 9 நிமிஷக்கதையை எப்படி 3 மணி நேரம் எடுத்திருப்பாங்கன்னு யாரும் கவலையே பட வேணாம், யோசிக்க வேணாம். படத்துக்கு சம்பந்தமே இல்லாம கிரி படத்துல வடிவேல் காமெடி வருமே அந்த மாதிரி சந்தானம் காமெடி இடைவேளை வரை . அவருக்கு 3 தங்கச்சிங்க .அந்த 3 பேரும் ஹீரோவும் அடிக்கும் லூட்டி  7 ரீல் . அப்புறம் காட்டுக்குள்ளே ஹீரோ ஹீரோயினை க்டத்தி வெச்சிருக்கும்போது மனோபாலா கூட மொக்கை காமெடி 4 ரீல் , மீதி 4 பாட்டு   3 ஃபைட்டு அவ்வளவு தான் படம் க்ளோஸ் .. ஐ மீன் “ முடிஞ்சுது “  



http://superwoods.com/photo-galleries/alexpandian-01/images/alexpandian-0101.jpg


ஹீரோ கார்த்தி . சூர்யாவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்னா  எத்தனை ஹிட் கொடுத்தாலும் சூர்யா பாடி லேங்குவேஜ்ல ஒரு தாழ்வு மனப்பான்மை , அடக்கி வாசித்தல் , பம்முதல் இருக்கும் , அது அவர் அப்பா சிவகுமார்ட்ட இருந்து வந்திருக்கும். ஆனா இவர்  சிறுத்தை கொடுத்த அதிரி புதிரி வெற்றியால  சீன் பை சீன் தன்னை அடுத்த ரஜினியா மனப்பால் குடிச்சுக்கிட்டு பஞ்ச் டய்லாக் பேசிட்டு படுத்தி எடுக்கறார். ஆனா லக்கி மேன். படத்துல இவருக்கு  5 பேர் கூட லூட்டி அடிக்கும் சான்ஸ். அதுக்கு சம்பளம் வேற . 


ஹீரோயின் அனுஷ்கா . அண்ணனுக்கு எட்டலை , தம்பிக்கு எட்டும் அது என்ன? பழமொழிதான் நினைவு வருது .  இடுப்புல கொஞ்சம் சதை போட்டுடுச்சு . நடுவுல கொஞ்சம் இளமையை காணோம். ( படத்துல கதையை மொத்தமா காணோம் )  ஒரு சீன்ல ஸ்லோமோஷன்ல ஓடி வர்றார். 2 டூயட் பாடறார். இதை விட ஒரு  மசாலாப்படத்துல தமிழ் ஹீரோயின் என்ன பண்ண முடியும்? 


சந்தானம்  - இவர் தான் படத்துல காமெடி போர்ஷனுக்கு இன்சார்ஜ் . பார்க்கும்போது செம சிரிப்பு வருது . அப்புறம் யோசிச்சா எதுக்குடா இப்படி சிரிச்சோம்னு இருக்கு . இவர் வடிவேல்  காமெடியை உல்டா பண்ணும் தேவை ஏனோ? 


 மனோபாலா - படத்தின் பின்பாதி இவர் காமெடி . முடியல . ஆனா குழந்தைங்க எல்லாம் தியேட்டர்ல சிரிக்கறாங்க ( படமே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போல ) 


 படத்துல இந்த 2 காமெடியன்களும் பண்ண காமெடியை விட   வில்லன்க சுமன், பிரதாப் போத்தன்  பண்ற காமெடி செம சூப்பர் . அவங்க வாங்கும் பல்புகளை  கடைசில பார்ப்போம்


 பாடல்கள் , இசை எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை . 3 பாட்டு சுமாரா இருக்கு 


http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Karthis-Alex-Pandiyan-Movie-Latest-Stills/alex_pandiyan_movie_stills_karthi_anushka_444f56c.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. கார்த்தி அறிமுகம் ஆன பருத்தி வீரன்ல இருந்து அவருக்கு அட்டர்ஃபிளாப் படமே இதுவரை அமையலை , சகுனி கூட சுமார் வெற்றி தான் . இப்படி தொடர்ந்து வெற்றியே வந்துட்டு இருந்தா ஒரு ஹீரோவுக்கு ஹெட் வெயிட் ஏறுதோ இல்லையோ சம்பளம் கிடு கிடுன்னு ஏறிடும்  . ஹீரோ டாமினேஷன் அதிகமாகும் இது ஆரோக்யமான தமிழ் சினிமா வளர்ச்சிக்கு நல்லதல்ல . அதை உணர்ந்து திட்டம் போட்டு கார்த்தி கிட்டே கால்ஷீட் வாங்கி கவுத்தது  .


2. படம் போட்டு  முதல் ஒரு மணி நேரம் கதையே சொல்ல ஆரம்பிக்காம சந்தானம் காமெடியையே காமிச்சு ஒப்பேத்துனது 



3. பொங்கலுக்கு 3 நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணி எப்படியும்  மினிமம் 3 நாள் வசூலையாவது பார்த்துடலாம்னு ஐடியா பண்ணது , விஸ்வரூபம் ரிலீஸ் ஆகாதது இவருக்கு சாதகம் 


4. ராவணன் படத்தில் ஐஸ்வர்யா காட்டில் குளிக்கும் காட்சி ,  க்ளிஃப் ஹேங்கர்  படத்தில் ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் காட்சி ,காதலன் படத்தில் கவர்னர் பெண்ணை ஹீரோ கரெக்ட் பண்ணும் காட்சி ,  குணா படத்தில் தன்னை கடத்தியவனிடமே ஹீரோயின் மனதைப்பறி கொடுக்கும் காட்சி ,  செந்தூரப்பூவே படத்தில் க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் சீன் , படிக்காதவன் படத்தில் விவேக் காமெடி காட்சி , கிரி படத்தில் வடிவேல் காமெடி காட்சி என  ஒரே படத்தில் பல படக்காட்சிகளை சாமார்த்தியமாக நுழைத்த  விதம்  அருமை (!!!!!!) 


 http://www.idlebrain.com/movie/photogallery/anushka19/images/anushka0022.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஓப்பனிங்க் ஷாட்ல 120 கிமீ வேகத்துல ரயில் போய்ட்டு இருக்கு , ஹீரோ 23 பேரை  12 நிமிஷத்துல அடிச்சுட்டு 130 கி மீ வேகத்துல ஓடி ரயிலை பிடிப்பது எபப்டி? அது கூட தேவலை . பாலத்துல 10 மீட்டர் உயரத்துல இருந்து ஹீரோ மின்னல் வேகத்தில் ஓடி வரும் ரயிலில் குதித்து அசால்ட்டா எந்திரிக்கறாரே, செம சீன் . முடியல 
2. அண்ணனுக்கு பெயில் கிடைக்கனும், அதுக்காக அப்பாவிகள் 3 பேருக்கு வில்லன்க மொட்டை போடுவதும் அந்த 3 பேருல ஒருவரா ஹீரோ இருப்பதும் படத்துக்கு சமப்ந்தம் இல்லாம ஃபைட்  காட்சி , கதைக்கும் அந்த ஃபைட்டுக்கும் என்ன சம்பந்தம்?



3. இடைவேளை விடும்போது வில்லன் 18 பேர் கூட ஹீரோவை முற்றுகை இடுகிறார். வில்லனை ஹீரோ அடிச்ச பின் அந்த 18 பேரும் அப்பதான் என்னாச்சுன்னு  கேட்பது செம காமெடி 



4. வில்லன் கோஷ்டி 8 மஹேந்திரா & மஹெந்திரா ஜீப்ல தலா 6 பேர் 48 பேரும் ரவுண்ட் கட்டி  துப்பாக்கியால சுடறாங்க  ஹீரோவுக்கு 1 மே ஆகலை 





5.  பிரதாப் போத்தன் கேரக்டர் வில்லத்தனம் செய்யப்போகுதுன்னு முதல் சீன்லயே தெரியுது  அதுல என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு? 


http://img.bollywoodsargam.com/albumsbolly/Anushka/Anushka_BollywoodSargam_hot_824960.jpg



6. பணயக்கைதியா சி எம் மகள் வில்லன் கிட்டே ,  ஃபைல்ல கையெழுத்துப்போட சி எம் ஒத்துக்கறார்/ ஃபைல் வந்ததும் நான் ஃபைலை படிச்சுப்பார்க்கனும், ஒரு மணி நேரம் டைம் வேணும்னு கேட்கறார் , அது என்ன சாண்டில்யன் எழுதுன கடல் புறாவா? படிச்சுப்பார்க்க டைம் கேட்க . உனக்கே வழி இல்லை , வேற கதி இல்லை , சைன் பண்ணித்தானே ஆகனும்?னு வில்லன்க யாரும் கேட்கலை . கேனம் மாதிரி சரிங்கறாங்க 



7. ஒரு சி எம் மக பல பார்ட்டிக்கு போறா , ஜாலியா இருக்கா./ ஆனா அவ ஆம்பளைங்களையே பார்க்காதவ மாதிரி  ஹீரோ கிட்டே காட்டுக்குள்ளே கெக்கே பிக்கேன்னு இளிச்சுட்டு இருக்கு .கிட்நாப் பண்ணவனையே லவ்வுது , கண்றாவி 



8. க்ளைமாக்ஸ் சீன் செம காமெடி , ஹீரோவை வில்லன்க கட்டி வெச்சு உதைக்கறாங்க. சாகும் நிலைக்கு போகும்வரை வேடிக்கை பார்த்துட்டு ஹீரோயின் சொல்லுது “ நீங்க ஆம்பளையா இருந்தா கடை அவுத்து விடுங்க பார்க்கலாம்.உடனே அந்த கேன வில்லன்க அவுத்து விடறாங்க , மீதி இருக்கும் 45 பேரையும் ஹீரோ காலி பண்றார் . 



9. சி எம் மகளை கடத்த ஜஸ்ட் 10 லட்சம் தான் செலவு ஆகுமா? சுத்தம்  சி எம் மகளை என்னமோ பொட்டிக்கடை சரசு பொண்ணை கடத்துவது போல் காட்டி இருப்பது படு சொதப்பல் 


10 . ஃபாரீன் வில்லன் விஜயகாந்த் பட பாகிஸ் தான் தீவிரவாதியை விட பிரமாதமா தமிழ் பேசுவது எபப்டி? 


http://moviegalleri.net/wp-content/gallery/alex-pandian-new-stills/alex_pandian_new_stills_karthi_anushka_2069b7d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்  


1. நாளைக்கு எங்கண்ணன் ஜெயில்ல இருந்து 10 மணிக்கு வந்ததும் முத வேலை உன்னை வெட்றதுதான். சந்தானம் - 10,30 மணிக்கு மறுபடி ஜெயிலுக்கு போய்டுவாரே 



2. சந்தானம் - பொண்ணு ,பொரி உருண்டை 2 ம் 1 தான்.காத்து பட்டாலே கெட்டுடும் .கலிகாலம்



 3. சந்தானம் - எல்லா மாடும் ம்மா னு கத்தும்போது என் மாடு மட்டும் மாமா னு கத்துது.என் தொழில் அதுக்கும் தெரிஞ்சிடுச்சா? 




4. ரவுடி சார்.நீங்க ஜெயில்ல இருந்து வர்றீங்ளா? சரவணபவன் சமையல்கட்ல இருந்து வர்றீங்ளா? மூஞ்சி எல்லாம் கரிச்சட்டி மாதிரி இருக்கு?




5. நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போகுது 

 அப்போ இப்பவே உன்னை எரிச்சுடறேன் 



6.  நீ எப்போ வந்தே?


 இப்போத்தான் 


 எப்போ போவே 

 தெரில 

 அடேய் , வந்தமா போனமான்னு இருங்கடா, இப்படி மஞ்சக்காமாலை மாதிரி தங்கிட்டா? 




7.  கூட்டுப்பொரியலை எடுத்து வை 

 ஆல்ரெடி வெச்சாச்சே?

 நான் உள்ளே எடுத்து வைக்கச்சொன்னேன் 



8.  எப்படி இருந்துச்சு? 

 3ம் சூப்பர் 


 நீ எதைச்சொல்றே?


 கூட்டை 

 நல்ல வேளை என் தங்கச்சிகளைச்சொன்னியோன்னு நினைச்சேன் 




9.  என்னது? இன்னைக்கு 2 மணிக்கே சங்கு ஊதிட்டாங்க? 


 நான் தான் ஏப்பம் விட்டேன் 


10. அவனுக்கு ஏன் துடைச்சு விடறீங்க? இல்லைன்னா துரு பிடிச்சுடுமா? 


http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilshots/images/restricted/23-10-2008/9.jpg

11. எங்கப்பன் என்ன மூடுல இதுங்களைப்பெத்தானோ  மூணும் இப்படி முறை கெட்டு அலையுதுங்க 



12. தங்கச்சின்னு 1 பிறந்துட்டா அண்ணன் காரன் ஆந்தை மாதிரி காவ காக்கனும் 



 13.  இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் 


 வாட்? 

 உங்க வீட்ல நான் தங்கற ஃபர்ஸ்ட் ந்நைட் னு சொல்ல வந்தேன் 



14. சிம்ப்பிளா செய்ய வேண்டிய விஷயத்தை ஏன் சில்மிஷத்தோட செய்யறீங்க?


15. அண்ணே, நீங்க 4 மணி நேரம் என்னை கட்டிப்பிடிச்சு தூங்கி இருக்கீங்க. 400 ரூபா குடுங்க 


 எதுக்கு?

 மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கனும் 

 அப்படித்தெளிவாச்சொல்டா 




16. அண்ணே , உன் தங்கச்சி 3 பேரையும் ரவுண்ட் கட்டி அடிச்சுட்டு இருக்கான் 

 வாட்?

 கேரம் விளையடறான்



17. டீயா? காபியா? என்ன வேணும்?

 பால்


 ஆவின் பாலா? ஆரோக்யா பாலா?

 அமலா பால் (   எல் சேவுக பாண்டியன் ஜோக் @ குமுதம் 2012 ) 



18. இந்த கேம்ல நான் ஜெயிச்சா?

 முத பஸ்சை பிடிச்சு ஊருக்குப்போயிடு 


 நீ ஜெயிச்சா?

   முத ட்ரெயினை  பிடிச்சு ஊருக்குப்போயிடு



19. கேரம் காயின்க்கு தமிழ்ல காய் தானே? 


 அதுக்காக காய் அடிச்சேன்னு சொல்றதா? 



20 , டேய் , குத்து விளக்கு மாதிரி இருக்கும் தங்கச்சியை குனிய வெச்சு என்னடா பண்ணிட்டு இருக்கே? 


 பாண்டி விளையாடறேன் 

 தூண்டி விளையாடுவே , சீண்டி விளையாடுவே . நான் வேடிக்கை பார்க்கனுமா?


http://haisay.com/file/pic/photo/2011/10/images-anushka-new-hot-look-images-jpg_1024.jpg



21. குத்துப்பட்ட இடத்துல பத்துப்போடனும், இப்படி பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கப்படாது 



22. கட்சியை வெச்சிருக்கறவன் கூட தப்பிச்சுடுவான் தங்கச்சியை வெச்சிருக்கறவன்..... ம்ஹூம் 



23.  வில்லன் - நான் யாருன்னு தெரியாம என் கிட்டே  விளையாடறே


 விளையாட  அது எல்லாம் தேவை இல்லை ( ஹீரோ பஞ்ச் ) 





24. நைட் நரி கத்துச்சு? 

 இனி கத்தாது , நீ சாப்பிட்டுட்டு இருக்கியே அது கறி இல்லை , நரி 

 உவ்வே 



 25. ஹீரோவின் பஞ்ச் - தீப்பெட்டிக்கு 2 பக்கம் உரசுனாத்தான் பத்திக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டிக்கு எந்தப்பக்கம் உரசுனாலும் பத்தும் 



26. உன் கிட்டே சிக்ஸ் பேக் இல்லைன்னாலும் நல்ல ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கே.. 



27.  தேனி கொட்டிடுத்து


 டேய். தேனி கொட்டிட்டு தேனி ( ஊர் ) தாண்டிப்போயிடுச்சு , அவ்ளை விட்டு எந்திரிடா


28.  நாங்க எல்லாம் ஆணி குத்துனாலே அசால்ட்டா புடுங்கிப்போடுவோம் , தேனி கொட்டினா..


 அடடா,, ஆணி , தேனி பின்றானே எதுகை மோனைல




29.  உண்டி வில் தெரியாதா? அது தான் ஏழைகளின்  ஏ கே 47



30. என்னை போலீஸ் தேடுது , ரவுடிங்க தேடறாங்க



 ஏண்டா, எப்போ பாரு என் தங்கச்சி பின்னாலயே சுத்திட்டு இருக்கியே , உன்னை உன் வீட்ல தேட மாட்டாங்களா?


http://www.breezemasti.com/gallery/data/media/22/anushka_shetty_latest_hot_stills_08.jpg




31.  எனக்கு எல்லா லேங்குவேஜ்லயும் பிடிச்ச ஒரே வார்த்தை பனம் , மால் டப்பு



32.  எனக்கு சுகர் இருக்கு , பி பி இருக்கு , எல்லா வியாதியும் இருக்கு , சீக்காளியா இருக்கும் என்னை கொன்னு கொலையாளியா மாறிடாதே



33.  எனக்கு சரக்கு வாங்கிக்குடுத்து பெத்த தாய் மாதிரி பாத்துக்கிட்டீங்க  நாய் மாதிரி உங்களை அடிச்சுட்டேனே



34.  ஹேப்பி பர்த்டே


 எனக்கு  பர்த்டே வே இல்லையே?

 எனக்கு  பர்த்டே

 ஓ , எனக்குத்தெரியாது

 எனக்கு அமிதாப் பச்சனையே தெரியும்

 எனக்கு தங்கர் பச்சானைக்கூட தெரியாது





35.  யோவ், 6 மாசமா ரீ சார்ஜே பண்ணலை , எப்படிய்யா அவுட் கோயிங்க் போகும்?



36. இப்போ பாரு , நோக்கு வர்மம் மூலம் அவனை நான் ஒரு வழி பண்றேன்



 பார்த்தா பேக்கு மாதிரி இருக்கே



 37.  என் மூஞ்சியைப்பார்த்தா டம்மிப்பீஸ் மாதிரியா இருக்கு?


 ட்டோட்டல் பாடியே டம்மிதான்



38.  நான் இதுவரை 40 புலி , 39 சிங்கம்

 அடடே, சுட்டிருக்கியா?




நோ , பார்த்திருக்கேன்


எங்கே? காட்டிலா?

 வண்டலூர் ஜூ ல

 தூ

 தாங்க்ஸ்



39,  புலி தப்பிச்சுடுச்சா?

 புலி கிட்டே இருந்து நீ தான் தப்பி இருக்கே/




40.  ஆம்பளை ,மாதிரி  பேண்ட் போடுவீங்க , கட்டிங்க் பண்ணிக்குவீங்க, தம் அடிப்பீங்க, சரக்கு கூட அடிப்பீங்க , ஆனா ஆம்பளை சட்டையை மட்டும் போட மாட்டீங்களா? என்னம்மா நியாயம் இது? 


http://2.bp.blogspot.com/_ZBjWGkMwvZI/TUTzbmjy5MI/AAAAAAAAALM/iEZnL8wEvuw/s1600/Actress_Anushka_Shetty_Cute_Glamour_Hot_Photos_07.jpg



41.  பொண்ணு வீரமா இருக்கலாம், ஈரமா தான் இருக்கக்கூடாது



42. ஜெயிலுக்குப்போறதெல்லாம்  நான் ஸ்கூலுக்குப்போற மாதிரி



43.  நாயா? நரியா?

 நரி

ஏன் கத்துது?

 வெறி




44.  இந்த காட்டை விட்டு தப்பிச்சுப்போகலாம்னு மட்டும் நினைக்காதே  வெளில  சிங்கம் , புலி , சிறுத்தை எல்லாம் இருக்கு


 என்ன ? சினிமா டைட்டிலா சொல்லி பயமுறுத்துறே ? இதை எல்லாம் நான் டிஸ்கவரி சேனல்ல பார்த்தாச்சு


45. எத்தனை பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் , டப் டப்பு டப்புன்னு


  சுட்டுடுவியா?


 கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவேன்



46. டேய் , ரவுடிங்களை எல்லாம்  ஏன் ரேக்கிங்க் பண்ணிட்டு இருக்கே?



47. உன் கிட்டே இருந்து என் தங்கச்சிகளை காப்பாத்த உனக்கு ஷாக் வெச்சேன் , அதை சாக்கா வெச்சு அவங்களையே கரெக்ட் பண்ணிடுவே போல இருக்கே?



48.  என்ன பண்ணிட்டு இருக்கே?


 ஷாக் அடிச்சு விழுந்துட்டாரு, அவர் வாய்ல உதட்டை வெச்சு ஊதறேன்


 அவன்  வாய் என்ன பலூனா?




 49.  இந்த சுவிட்ச்ல மட்டும் கையை வெச்சுடாதே

 வெச்சா என்ன ஆகும்? இதோ வெச்சுட்டேன்// ஆஆஆஆஆ




50 .  வலியைக்கூட தாங்கிக்கலாம் , ஆனா இவனோட ஓவர் ரிஆக்‌ஷனை தாங்க முடியலை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1XOyowQ3bgbaOBzD2OF5Rq7c4m3AK3fDDj-jM5_kHfTs_GTZsDDyA5ErMqVaOuisxVpXUo7ZuWQNmDUdqNn3fpYEQ7WXS_tTROnmfbxx0yzL22R-Gu6dBeDAa-x2oH9awMLn8jnK81jSU/s1600/Anushka-Hot-Photos-CF-01.jpg



 51  என்னை ஆயான்னு கூப்பிட பேரக்குழந்தைகள் வேணும்


 உன்னை ஆயான்னு கூப்பிடனும் அவ்வளவுதானே? அந்த ஸ்கூல்ல போய் மத்தியானம் சோறாக்கிப்போடு , எல்லாக்குழந்தைகளும் ஆயான்னு கூப்பிடும்



52.  வயசுப்பொண்ணு வாந்தி எடுப்படும் , மஞ்சக்காமாலைக்காரன் வாந்தி எடுப்பதும் ஒண்ணுதான் 2ம் டேஞ்சர்



53. டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே?

 ஜஸ்ட் கேம்ணே

 ஒர்ஸ்ட் கேம்


 54. அதென்னடா, பொம்பளைன்னா பொறுப்பா இருக்கே, ஆம்பளைன்னா வெறுப்பா ஆகிடறே ?



55.  என்னாங்கடி இது கும்கி யானையை குளிப்பாட்டுற மாதிரி குளிப்பாட்டிட்டு இருக்கீங்க ?



56. என்ன பண்றே?

 கூல் பண்றேன்

 என்னை ஃபூல் பண்ணாம விட மாட்டே போல



57.  என் 3 தங்கச்சிகளை கரையேத்தனும்


 நானும் ஏத்தவா?


 நீ எதை ஏத்துவேன்னு தெரியும், தள்ளி நில்டா




58 . உன் பெரிய தங்கச்சி தூங்கி இருக்குமா?


 எதுக்கு கேட்கறே?


  நாடி ஜோசியம் பார்க்கனும்னு சொல்லுச்சு


 விட்டா  சேடி ஜோசியம் கூடப்பார்ப்பியே?




59. அண்ணே , இவர் புது விளையாட்டு சொல்லிக்குடுத்தாரு


 என்ன விளையாட்டு ?

 மாமா மாமிக்கு மாம்பழம் கொடுக்கற விளையாட்டு

 கிழிஞ்சுது போ



60 . குட்டிக்கதை சொல்றேன்  குட்டிக்கதை சொல்றேன்னு சொல்லிட்டு ஜட்டிக்கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கியேடா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHiZMyWg54nmVJqpveeWzXc24eOMTXrhrnCjidGezAqFMyQbQsrZZ51cHqRqf1dQg2g30-amPXnVzLueLWvgDR94X2GKb4N0zWq6oIm3RXqbkF8OJHHtmo7uN_RMJ8NzZNXh9Z2i1r656/s0/Anushka%2520Spicy%2520hot%2520sexy%2520photos%2520Anushka%2520new%2520telugu%2520actress%2520unseen%2520spicy%2520photos%2520%25286%2529.JPG




61.  வெளில பனி இருக்கு


நீ  உள்ளே  படுத்தா எனக்கு  சனி



62.  ஏண்ணே ,மாடுக்ளைக்கூட்டிக்குடுக்கறியே , வெட்கமா இல்லை?

 டேய் நாயே, நீ என் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்துட்டு என்னையே நக்கல் பண்றியா?


63. எப்போ பாரு பிச்சைக்காரன் மாதிரி  அம்மான்னு ஏன் கூப்பிடறே?  மம்மின்னு கூப்பிடு

 மம்மி , ஜிம்மின்னு கூப்பிட்டு மத்தவங்க முன்னால கும்மி அடிக்க முடியாது



64. டேய் , டீக்கடைல என்னடா பண்ணிட்டு இருக்கிங்க?

 டீ குடிச்சுட்டு இருக்கோம்

 வீட்லயே போட்டு எடுத்துட்டு வந்த டீ மாதிரி இருக்கு , என் தங்கச்சியை சைட் அடிக்கத்தானே வந்தீங்க ?



65. ஒரு வயசுப்பொண்ணு ஆசைப்பட்டு கேட்குது , ஜல்லிக்கட்டு காட்டுனா என்ன?

 புல்லுகட்டு வேணா காட்டலாம்


66. சந்தானம் - வில்லன்களின் அடியாள்களிடம் -  ஏன்டா!! டீசல் விக்கிற விலைக்கு இவ்ளோ வண்டி எடுத்துட்டு துரத்திட்டு இருக்கானுங்க? இவனுகளுக்கு உள்ள உட்கார இடம் இல்லையா? எப்ப பார்த்தாலும் வெளியவே தொங்கிட்டு வரானுங்க?




67. கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது




http://moviegalleri.net/wp-content/gallery/damarukam-new-stills/damarukam_new_stills_nagarjuna_anushka_hot_stills_6885055.jpg




எதிர்பார்க்கும் விகடன் மார்க் -39


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  5 / 10




BY CPS THROUGH VIDEO - ALEXPANDIAN FILM REVIEW -





 சி.பி கமெண்ட் - மாறுபட்ட நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அலெக்ஸ் பாண்டியன் - அட்டர்பிளாப் -ஆனா டி வி ல போட்டா பார்க்கலாம் , காமெடி கிளிப்பிங்க் பார்க்கலாம்.  200 ரூபா பிளாக்ல ஈரோடு அபிராமி தியேட்டர் வாசல்ல  யாராவது வித்தா அவன் கிட்டே தம்பி இந்தபப்டம் 50 ரூபாய்க்கே ஒர்த் இல்லைன்னு நக்கலா சொல்லிட்டு போய்ட்டே இருங்க


http://onfunn.com/wp-content/uploads/2012/10/anushka-hot-14.jpg

Sunday, May 08, 2011

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

Saturday, January 15, 2011

சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAT9rtlW-A73SoPcBXfcFMt4yrG7gEFmlAKeFApv39nJCT9X48EICMI-uMIRleiyMHY2hWyCQd91jcxR_Iv8F99CPI-8z1iso0OWsMTN9lEQHDG8xbvb7-l-jm2R0L6WSleWfUOBwEXdHI/s1600/SIRUTHAI+%25285%2529.jpg 
20 வருஷங்களுக்கு முன் வந்த சிரஞ்சீவி படங்கள் ,பழைய எம் ஜி ஆர் படங்களில் வந்த டபுள் ஆக்ட் ஹீரோ சப்ஜெக்ட்தான் படத்தோட KNOT என்றாலும் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில படம் காமெடி பாதி,ஆக்‌ஷன் மீதி என கலக்கலான கமர்சியல் மசாலாவாய் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


ஜாலிபாயாக இதுவரை கலாய்த்து வந்த கார்த்திக்கு இதில் போலீஸ் ஆஃபீசர் ரத்தின வேல் பாண்டியாக வெரைட்டி நடிப்பு காண்பிக்க வாய்ப்பு.மனிதர் பின்னி எடுத்து விட்டார்.அவரைப்போலவே இருக்கும் இன்னொரு கார்த்தி அவரது தம்பி என்று ஒரு ஃபிளாஸ்பேக் வைக்காமல் விட்டது ஒரு ஆறுதல்.                       ( ஃபிளாஸ்பேக் வைக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு.. படம் பர பர என பறக்குது..)

படம் போட்ட முதல் 40 நிமிடங்கள் சந்தானம் கார்த்தி கூட்டணி செய்யும் காமெடிக்காட்சிகள் கலக்கல் ரகம்.நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்ல, ஏய் ராஜா ராஜா ..ராக்கெட் ராஜா பாட்டு செம டப்பாங்க்குத்து.. தியேட்டரில் ஆடியன்ஸ் ஒரே ஆட்டம் பாட்டம்தான் அந்தப்பாட்டுக்கு..

காமனா (COMMON) எல்லாருக்கும் பிடிச்ச தங்க நிற லெமனா அழகு காட்டும் இடை அழகி தமனா ஓப்பனிங்க் சீன்ல ரோஜாப்பூக்கள் மேலே கொட்ட என்ன ஒரு கை தட்டல்.. ( ஓப்பனிங்க் சீன்ல இருந்தே அவங்க எல்லாமே ஓப்பனா இருக்கறது மனசுக்கு ரொம்ப ஆறுதல்)
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/01/Siruthai-New-Stills-42.jpg
திருடனாக வரும் கார்த்தி  யாரைப்பார்த்தாலும் ,எந்தப்பொருளைப்பார்த்தாலும்  என்ன ரேட்டுக்கு போகும் என பிரைஸ்டேக்குடன் கற்பனை பண்ணிப்பாக்கும் சீன் செம கலகல.

யாரோட முதலிரவு அறைக்குள்ளோ எதேச்சையாக நுழையும் கார்த்தி அங்கே இருக்கும் நகைகளை ஆட்டையைப்போடும் சீனும் தூள்தான். கண்ணா லட்டு திங்க ஆசையா? இன்னொரு லட்டு திங்க ஆசையா? விளம்பரத்தை சாமார்த்தியமாய் யூஸ் பண்ணியதற்கு இயக்குநருக்கு பாராட்டு.

கூட்டுக்களவாணிகளாக களம் இறங்கும கார்த்தி சந்தானம் கூட்டணி தமனாவைப்பார்த்ததும் பல்டி அடித்து திருடனைத்துரத்தறேன் பேர்வழி என சந்தானத்தையே பிடித்து மாட்டி விடும் காட்சி காமெடி களேபரம்.

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ளே ராக்கெட்டு பாட்டும்,ஆட்டமும் தூள்மா.கார்த்தி என்னா உற்சாகமாய் படம் முழுக்க கலக்கறார்?தமனாவுக்கும் இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆவதும், படத்தின் தேவைக்கு மீறி இருவரும் அந்நியோன்யமாய் இழையோடுவதும் சிவகுமார் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். ( பத்த வெச்சுட்டியே பரட்டை..?)

இடைவேளை வரை காமெடி ,ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என செம ஸ்பீடாய் பாயும் சிறுத்தை இடைவேளைக்குப்பிறகு ஆக்‌ஷனுக்கு மாறுது,. அதுக்குப்பிறகு தமனா அம்போ என விடப்படறார்.வன்முறைக்காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். 

போலீஸ் ஆஃபீசர் கார்த்தியின் மகளாக வரும் பேபி கொள்ளை அழகு, அஞ்சலிப்பாப்பா பேபி ஷாம்லி மாதிர் சாயல்.நடிப்பும் அருமை.எதிர்காலம் இந்தபேபிக்கு நல்லாருக்கும்.
http://gallery.nkl4u.in/wp-content/gallery/shuruthi-1/siruthai_new_stills-1.jpg
வசனகர்த்தாவாக இயக்குநர் சீறிப்பாய்ந்து கோல் அடித்த இடங்கள்.

1. உன் வீட்ல ஸ்ரீதேவி குடி இருக்கா..

போன வாரமே அவ காலி பண்ணீட்டு போயிட்டாளே...

மூதேவி.. அந்த ஸ்ரீதேவி இல்லை... அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீதேவி...

 2.  செலவே இல்லாம மொட்டை போடறது எப்படி?

சந்தானம் - பிளேடே இல்லாம கூட மொட்டை போடலாம்.

எப்படி?

சந்தானம் - உன் மண்டைல இருக்கற ஒவ்வொரு முடியா  பிடுங்கி..


3.  மொட்டைய போடாம ஆட்டைய போட்டால் நிறைய கில்மாக்கள் சிக்கிடும் போல இருக்கே.. அய்யய்யோ 300 பருத்தி வீரர்கள் மாதிரி இத்த்னை பேர் துரத்திட்டு வாராளுகளே..

4. ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன்.. கணக்கு விஷயத்துல ஃபிரண்டு பார்க்க மாட்டேன்..

5. நல்ல குடும்பத்துல பொறந்த யாரும் பொம்பளைங்க மேல  கை வைக்க மாட்டாங்க..( அடிக்க)

ரொம்ப் தாங்க்ஸ் தம்பி...

ஆனா நான் நல்ல குடும்பத்துல பிறக்கல.. இப்போ பாரு.. ஒரே மிதிதான்.

6. ஒரு அட்டு ஃபிகரு - எதுக்கு என்னை கட்டிப்பிடிச்சே..?

சந்தானம் - இந்தக்கூட்டத்துலயே நீதான் சுமாரா இருந்தே.. இந்தா பூ..

த்தூ..

சந்தானம் - எதுக்கு இப்போ பூவுக்கு தண்ணி ஊத்தறே..?

7. சந்தானம் - டேய்.. வாழ்க்கைல நான் எத்தனையோ ஷாப்ல திருடி இருக்கேன்... ஆனா முத முறையா என்னை மெடிக்கல் ஷாப்ல திருட வெச்சுட்டியே..? என்னா ஒரு அடி.. பின்னீட்டாங்களே..

8. கார்த்தி - மேடம் .. நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பிரைட்டா இருந்தீங்களா?இல்ல இடைல இப்படி ஆனீங்களா?

9. சந்தானம் - அவன் என்ன சொன்னாலும் இவ நம்பீடறாளே.. சச்சின் டெண்டுல்கர் நான் தான்ன்னு சொன்னாக்கூட நம்பிடுவா போல இருக்கே..
சக்க ஃபிகருன்னு பார்த்தா இப்படி மக்கு ஃபிகரா இருக்கே..

10. கார்த்தி -ஹி ஹி நான் லவ் பண்றேன்..

சந்தானம் - நீ என்ன கிரகத்தை வேணாலும்  பண்ணீக்கோ..ஆனா இப்படி வெக்கப்படாதே..


11.. சந்தானம் - டேய் .. போதும் கையை எடுடா.. ஜாக்கெட்டை அவுத்துடப்போறே..

12.  பொடியன் - அண்ணே .. என் கூட விளையாட வர்றீங்களா?

சந்தானம் - டேய்.. பவுடர் அடிச்ச பன்னிக்குட்டி மாதிரி இருந்துட்டு.. என்னை விளையாடக்கூப்பிடறியா..?

13. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலங்க.. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லவனா வளர்ந்துட்டேன்..

14. கார்த்தி -  டேய்.. அந்தப்பாப்பா என்னை அப்பான்னு கூப்பிடுதே..

சந்தானம் - எனக்கு என்ன தெரியும்.? நான் என்ன விளக்குப்பிடிச்சா பார்த்தேன்..?எங்கெங்கே போனியோ?

15.      தமனா - ஏன் இந்த ரூட்ல போறீங்க? மெயின் ரூட்ல போலாமே.. 

கார்த்தி - ஹி ஹி இந்த ரூட்லதான் நிறைய ஸ்பீடு பிரேக்கர்ஸ் இருக்கு.. 
( நோட் பண்ணுங்கப்பா) 

16. ஆம்பளைங்க நாங்க எதுவுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவோம்..ஆனா பொம்பளைங்க நீங்க எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணுமே தெந்ரியாத மாதிரி நடந்துக்குவீங்க..  ( செம கிளாப்ஸ்)


17. சந்தானம் - ஆளாளுக்கு ஏன் டேய்-ங்கறீங்க.. டேய்ங்கறது ரவுடிங்களோட ரிங்க் டோனா? ( கலக்கலான கவுண்ட்டர் டயலாக்)

18. மக்கள் மனசுல 100 வருஷம் நிலைச்சு வழனும்னா 100 வருஷம் உயிர் வாழனும்னு அவசியம் இல்ல..ஒரு நாள் ஒரே ஒரு நாள் நல்ல படியா வாழ்ந்தா போதும்.

19. வில்லன் - சார்.. அவன் அப்படி பண்ணீட்டு போறான்.. கண்டுக்காம நிக்கறீங்களே..

பானுச்சந்தர் - ஊர்ல எந்த அநியாயம் நடந்தாலும் கண்டுக்காத மாதிரி இருந்துக்கோன்னு நீங்கதானே சொன்னீ ங்க ..

20.  பயம் இல்லாதவன் மனுஷனே கிடையாது.. பயத்துக்குன்னு ஒரு மரியதை இருக்கு.
 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/10/apoorva.jpg
பொதுவா டபுள் ஆக்ட் படத்துல ஆள்மாறாட்டம் பண்றப்போ 2வதா வர்றவர் முதல் ஆள் ,மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுவார்,ஆனா இதுல போலீஸ் ஆஃபீசர்  கார்த்தி மாதிரி நடிக்க வேண்டிய சூழல்ல திருடன் கார்த்தி காமெடியா திருடன் ஸ்டைல்லயே நடந்துக்கறது புதுசு..

    இயக்குநர் சறுக்கிய இடம் 

தமனாவின் இடையில் ஒரு மச்சம் இருப்பது மாதிரி அடிக்கடி காண்பித்து விட்டு ஒரு பாடல் காட்சியில் அந்த மச்சம் இல்லாதது மாதிரி காண்பித்தது  கண்ட்டின்யூட்டி மிஸ்சிங்க்.. ( ஹி ஹி நாங்க எல்லாம் படத்தை ரொம்ப உன்னிப்பா பாக்கறவங்க.)

                                                                                                                                                                இந்த மசாலா ஃபார்முலா ஒர்க் அவுட் ஆனதால் கார்த்தி இதே திசையில் பயணிக்காமல் வெரைட்டி ரோல் நடிப்பது நல்லது..இயக்குநர் சிவா கோலிவுட்டின் முக்கியமான கமர்சியல் மசாலா டைரக்டர் ஆகி விட்டார்.

ஏ செண்ட்டர்களில் 92 நாட்கள் ( ஏப்ரல் 14 வருதே)

பி செண்ட்டர்களில்  50 நாட்கள், சி  செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

டிஸ்கி -1. நேற்று தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை, ஓட்டுப்பட்டை வேலை செய்யலை.. அதனால அதுல யாரும் ஓட்டுப்போடலை..டைம் இருந்தா போய் போடுங்க

ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 - காவலன்  இன்னைக்கு ரிலீஸ் ஆகிடுச்சு. 4 மணிக்கு விமர்சனம் போடறேன்

டிஸ்கி 3 - கடைசியா போட்டிருக்கற ஸ்டில் படத்துல கெஸ்ட் ரோல்ல வர்ற அபூர்வா.