Tuesday, January 01, 2013

S I P = சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா? - சோம. வள்ளியப்பன்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா?

சோம. வள்ளியப்பன்

அப்படி இப்படி என்று பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முந்தைய உச்சத்துக்கு அருகில் வந்துவிட்டன. சென்செக்ஸ் 19,500 புள்ளிகள், நிப்டி 5,950 புள்ளிகள். முந்தைய உச்சம், இனி கைக்கெட்டும் தூரம்தான்.
2008 ஜனவரி மாதம்தான் பங்குச்சந்தை உச்சாணிக் கொம்பில் நின்றது. பின், தவறி குப்புற விழுந்தது. அதன்பிறகு வரும் ஜனவரி 2013 மாதத்துடன் முழுசா ஐந்து ஆண்டுகள் முடிகின்றன.
ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதே அளவு வந்திருந்தாலும், குறியீட்டு எண்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதுவோர் உண்டு. காரணம், நிறுவனங்களின் சம்பாத்தியங்கள் அப்படி.
சென்செக்ஸ் PE என்பார்கள். அப்படி என்றால் என்ன?
ஒரு குடும்பம் 2003ம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் வாங்கியது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கின்றது என்று, குடும்பத்தினர் செலவையும் கூட்டிக் கொண்டே போனார்கள். மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று உயர்த்திக் கொண்டே போய், 2008ம் ஆண்டு மாதம் 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்கள். அந்த அளவு செலவு தாங்காது என்று, கடன்காரர்கள் விரட்ட பிரச்னைகள் அதிகமாகி, மாதம் 8000 என்கிற அளவுக்கு ஒரேயடியாகக் குறைத்துக் கொண்டார்கள்.
பின்பு கடன்கள் குறைந்து, மேலும் சில குடும்ப உறுப்பினர்களும் சம்பாதிக்கத் தொடங்க, ஏற்கெனவே சம்பாதிப்பவர்களின் வருமானங்களும் உயர, அந்தக் குடும்பம் மீண்டும் செலவைக் கூட்டியது. தற்சமயம் (டிசம்பர் 2012ல்) அது 19500 ஆக இருக்கிறது. அதிகபட்சம் 21,000 தான் வரமுடியும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு மேலேயும் அந்தக் குடும்பத்தால் செலவு செய்யமுடியும் என்கிறார்கள் வேறு சிலர்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இப்போது 2012ல் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியம் அதிகம் என்பது தான்.
21,000 என்பது ஒரு எண். அவ்வளவுதான். செலவு அதைத் தாண்ட முடியாது என்பதோ, அதைத் தாண்டினால்தான் சரி என்றோ சொல்ல முடியுமா?
சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண், குடும்பம் செலவு செய்கிற தொகைக்கு ஒப்பு. அந்தக் குடும்பம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், ஈட்டுகிற வருமானத்துக்கு ஏற்ப என்பது போல, சென்செக்ஸும் எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம். வருமானம் குறைந்தால் மீண்டும் செலவும் குறையலாம். எந்த எண்ணும் இறுதியானது அல்ல.

ஒரு பங்கு ஆண்டுக்கு எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதை E P S என்பார்கள். (எர்னிங்ஸ் பெர் ஷேர்). அந்த ஒரு பங்குக்கான லாபத்தைப் போல, அந்தப் பங்கு சந்தையில் எத்தனை மடங்கு விலை விற்கிறது என்று வகுத்துப் பார்த்துச் சொல்லுவதுதான் P E(பிரைஸ் எர்னிங் ரேஷியோ) கணக்கு.
தனிப்பட்ட நிறுவனப் பங்குகளுக்கு அந்த விதமாக, என்ன E P S மற்றும் என்ன P E இருக்கிறது என்று பார்த்து ஒருவர் பங்குகள் வாங்குவதைப் போல, மொத்த பங்குச் சந்தைக் குறியீட்டு எண் என்ன அளவு போகலாம் என்று கணிப்பதற்கும், இந்த P E முறையைப் பயன்படுத்துவார்கள்.
சென்ற அத்தியாயத்தில் பார்த்தது, டெக்னிக்கல் அனாலிசிஸ்சின் ஒரு சிறு பகுதி என்றால், இவை (E P S , P E எல்லாம்) ஃபண்டமெண்டல் அனாலிசிஸ்சின் சிறிய பகுதிகள்.
தற்சமயம் சென்செக்ஸ் 19,500 இருக்கிற போது அதன் P E, 17 ஆக இருக்கிறது. அப்படியென்றால், சென்செக்ஸ்சில் இருக்கும் 30 நிறுவனங்களின் மொத்த E P Sசைப் போல, 17 மடங்கு சென்செக்ஸ் இருக்கிறது என்று பொருள்.
முன்பு 2008 ஜனவரியில் சென்செக்ஸ் 21,000 போன போது, அது 26 அளவு P E ஆக இருந்தது. கூடுதல் P E என்பது ஒரு குடும்பம், அது சம்பாதிப்பதைப் போல பலமடங்கு செலவு செய்வதற்கு ஒப்பு. நிலைமை தற்சமயம் அப்படியில்லை. காரணம், தற்சமயம் சென்செக்ஸில் இருக்கும் பங்குகள் சம்பாதிப்பது 2008ல் சம்பாதித்ததைவிட அதிகம். அதனால்தான் P E குறைவாக இருக்கிறது.
செய்தி என்ன?
நிறுவனங்கள் சம்பாதிப்பதை மட்டும் வைத்துப் பார்த்தால், குறியீட்டு எண்கள் உயர்வதற்கு இன்னும் இடம் இருக்கிறது. இதை உச்சம் என்று சொல்லமுடியாது.
நானும் பார்க்கிறேன், நான் வாங்கிய பங்கு விலை இறங்குகிறது, நான் விற்ற பின்பு அதே பங்குகள் விலை ஏறுகின்றனஎன்று பலரும் சொல்வார்கள். ‘எதிர்பார்த்து நின்றால் அந்தப் பேருந்து வரவே வராது. ஆனால் வேறு வேலையாக வெளியில் போகும் போது பார்த்தால், அதே வழித்தடப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாகப் போகும்என்று சொல்வது போன்றதுதான் இதுவும்.
பங்குச்சந்தை என்ற பெரும் கடலில், நாமெல்லாம் சின்னஞ்சிறு சோழிகள். ஆக தற்செயலாக நிகழ்வனவற்றை நாமாக நமக்கு எதிரான செயல்களாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.

எவராலும் மிகச் சரியாக விலை ஏறுவதற்கு முன்பு வாங்க முடியாது. விலை இறங்கும் முன் சரியாக விற்றுவிடவும் முடியாது. இது சந்தையைடைம்பண்ணுவதற்கான முயற்சி. தண்ணீரைக் கையில் பிடிக்கும் முயற்சி போன்றதேதான். நடக்காது.
வேறு என்ன வழி?
ஒரே ஒரு நிச்சய வழி இருக்கிறது. அதன் பெயர், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.
இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை. ஒன்று, இன்வெஸ்ட்மென்ட். மற்றது சிஸ்டமேட்டிக்.
வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரே நாளில் வாங்காமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து வாங்குவது. அவ்வளவு தான். 100 பங்குகளை லட்ச ரூபாய்க்கு ஒரே தவணையில் வாங்கிவிட்டால், அதன் பிறகு இறங்கினால் வருத்தம் வரும். அதே போல், ஒரே தவணையில் 100 பங்குகளை, லட்ச ரூபாய்க்கு வாங்கிய உடனேயே, அந்தப் பங்கு விலை 20% உயர்ந்தால், அடடா இன்னும் கூடுதலாக வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருக்கும் (பேராசைக்காரமனது!).
வாங்கிய பிறகு ஏறுமா இறங்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இடைப்பட்ட குறுகிய காலங்களில் எதுவும் நடக்கலாம். அதற்கு மாறுகிற அரசியல் நிலைமை, வெளிவரும் புள்ளிவிவரங்கள், சர்வதேச நிலைமைகள் என்று எவ்வளவோ இருக்கும். ஆனால், நல்ல நிறுவனங்கள், இடையில் விலைகள் இறங்கினாலும் நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால், அப்படிப்பட்ட பங்குகளை, சிறிய அளவுகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டேயிருப்பது ஒரு வழி.
மாதம் ஒரு பங்கு அல்லது மாதம் 5000 ரூபாய்க்கு என்பது போல், முன்கூட்டியே முடிவு செய்து கொண்ட தேதிகளில், என்ன விலை இருந்தாலும் தேர்ந்தெடுத்த பங்குகளை வாங்குவது. இதுதான் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். நாமேதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பல பங்குத் தரகு நிறுவனங்களும், வங்கிகளும் கூட இப்படிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதில் சேர்ந்து விட்டால் போதும். மாதம் 5000 என்பது ஓர் உதாரணம் தான். மாதம் 100 ரூபாய் என்கிற அளவில் கூட இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தைச் சுருக்கமாக SIP என்பார்கள்.
(தொடரும்)


நன்றி - கல்கி 

செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல

1.புத்தகம் எழுதப்போகிறார் காஜல் அகர்வால்! # ஃபேஸ்புக்கா இருக்கும் 



--------------------


2. நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்" -# ரசிகர்களைக்குழப்பி ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல 




-------------------


3. கைதி - யுவர் ஆனர்.நான் மைனர்.


ஜட்ஜ் - உன்னைத்தான் முதல்ல தண்டிக்கனும் 



-------------------


4. புதுமுக நடிகைகளுடன் போட்டி போட விரும்பவில்லை: தமன்னா. # அதானே.பாட்டிக்கு எதுக்கு லூட்டி? 




-------------------------



5. நடிப்பில நான் திமிங்கலம்னா என் மகள் ஒரு சுறா: ராதா புகழாரம். # ஓ அதான் கடல்ல துளசி ! குடும்பமே கடல் குடும்பம் போல 




--------------------


6. டாக்டர்.தொண்டை கட்டிக்கிச்சு.என்ன பண்ணனும்? 



லேடி டாக்டர் லேகா - வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா டோய் ( சும்மா) 




--------------------


7. நயன்தாராவை மறந்து ஒரு வருடமாகிவிட்டது: பிரபுதேவா. # மறந்தாச்சா?துறந்தாச்சா? 





-----------------------


8. எல்லாத்தரப்பு ரசிகர்களும் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு படம் எடுத்திருக்கேன்.டைட்டில் - இடை 



----------------------


9. திரும்பிய பக்கம் எல்லாம் திரிபுர சுந்தரிகள்் இருந்தாலும் கோயிலுக்கு சென்று தரிசித்தால்தான் ஒரு திருப்தி. 




-----------------------



10. சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகவேண்டும்-கலைஞர்! # தலைவரே.வயசானா வழி விடனும் .குழி தோண்டக்கூடாது 




----------------------------


11. செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல.மீல்சோ டிபனோ பேதம் ஏதும் சொல்லத்தோணலே # சும்மா 




------------------------



12. நான் ஒரு மைனர் பொண்ணு - லட்சுமி மேனன் # சொல்லிட்டாளே அவ வயசையே 





-------------------------


13. PUSH' STEP =் தள்ளுபடி # சபாஷ் துபாஷ் 




----------------------


14.  குழலினிது யாழினிது என்பர்.... கலா மாஸ்டரின் கிழி கிழி ' என்ற வார்த்தையை கேட்காதவர்! :-) 





--------------------


15. ஜெ - திமுக ஆட்சியிலே அடிக்கப்பட்ட மணல் கொள்ளைகளால் பிட்ச் சரியா அமைக்க முடியலை.தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. 




----------------------


16. மு க - கழக ஆட்சியாக இருந்தால் என்ன விலை குடுத்தாவது வெற்றிக்கனியை பறித்திருப்போம் 




-------------------------


17. நமக்கு மிகப் பிடித்தவருக்கு நம்மை சுத்தமா பிடிக்கல ் என அறிய நேரும் தருணத்திற்குப் பெயர் தான் ஜென்மசாபம்.




-------------------


18. இந்தியா வித் பாகிஸ்தான் மேட்ச்ல யார் ஜெயிச்சாலும் அலட்டிக்காத ஒரே விளையாட்டு வீரர் சானியா மிர்சா 




--------------------


19. கன்னிப்பொண்ணு கும்னு இருப்பா.மேரேஜ் ஆன பொண்ணு கும்கி மாதிரி இருப்பா # சும்மா 



------------------


20. புத்திசாலி புருஷன் சன்டே க்கு சம்சாரத்தை அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவான்.;-)) 




------------------


21. ஒரு கொள்கைக்காக துன்பத்தை,சம்சாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி ரீ மிக்ஸ் 




------------------


22. மேரேஜ் ஆகும்போது 50 kg தாஜ்மகால்.இப்போ 98 kg திருமலை நாயக்க்கர் மகால்







-----------------



23. இரண்டாம் உலகம் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் தேர்வுகமிட்டி மீதே போர் தொடுப்பேன்-அனுஷ்கா #அக்கப்போர்மா உன்னோட 



-------------------


24. ஒரு குடும்பத்தை பொறுத்த மட்டில் கூடுதலான சுமையை சுமப்பது குடும்பத் தலைவன் தான்.சம்சாரம் 98 கிலோ ;-)) 



----------------------


25. ஒரு வானவில் போலே அவள் என் வாழ்விலே வந்தாள் # 7 பாய் பிரண்ட்சாம் 




---------------


20. 

Monday, December 31, 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. - சகாயம் ஐ ஏ எஸ் பேட்டி

http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/01/sagayam.jpg 

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.



 மக்கள் கருத்து =


 1. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



2. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 



3.  CGS 
Kumar எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது. நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில் கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்? ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது



4. சகாயம் சொல்வது மிகவும் சரியானது ,.,. ஆனால் ரவுடி தனம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும் என ஆகிவிட்டது,. நல்லவர்களுக்கு vote போட ஆள் இல்லை,. மொழி, இனம் என மகளை பிரிக்கும் அரசியல் வாதிகள் , புதிய ரத்தம் வந்தால்தான் இது சாத்தியம்,. சில IAS காரர்கள் மதம் மாற்றுவதில் கவனம் செலுதுகின்றேனர்,. அரசாங்க வேலையை சொந்த உபயோகம் சைகின்றேனர்,. 



5. ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடம் இதுகூட உலக சாதனைதானே.இந்த ஊழல் பட்டியல் நிச்சியம் அதிகாரிகள் மக்களை தாண்டி அரசியல் வியாதிகள்தான் முன்னணியில் இருப்பர் அவர்களில் முதல் ஐந்து இடங்களில் 1 தாத்தாவின் திமுக.. 2 தியாக தீபத்தின் காங்கிரஸ். 3 மாயவதி கட்சி. 4லல்லு கட்சி. 5 அம்மா கட்சி. என்று வகுத்தாலும் தமிழனுக்குத்தான் முதலிடமும் கடைசி இடமும்.



6. சகாயம் சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது ஊழல் ஒழிப்பை பற்றிபேசும் அதிகாரிகள் சில நாட்களில் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசிடம் சிக்குகிறார்கள் என்றார். உண்மையில் நடப்பது என்ன?( நேர்மையான) அதிகாரிகள் மிக குறைந்த அளவில் இருப்பவர்களை, மாட்டி விட்டு அசிங்கபடுத்த ஒரு கூட்டம் அரசு அலுவலகங்களில் முழு நேரமாக வேலை செய்வது திரு சகாயத்திற்கு தெரிந்து இருக்க வேண்டுமே என் அனுபவத்தில், தற்போது வேலைக்கு சேரும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் நேர்மையாகவே இருக்கிறார்கள். 



என் 30 வருஷ அரசு பணி அலுவலகத்தில், தற்போது வேலைக்கு சேரும் இளைஞர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக பேசுகிறார்களே தவிர, லஞ்சத்தை கேட்பதில்லை அவர்கள் கொஞ்சம் கூட மரியாதையுடன் இனிமையாக பழகினால், இன்னும் 20 ஆண்டுகளில் அரசு பணி நன்றாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கடந்த 20=30 ஆண்டுகளில், ஊழல் செயல்பாடுகளில் ஈடுபட்டவரை தண்டிக்க உபயோகபடுத்தவேண்டிய சட்டங்கள், பலவும் ஊழலில் ஈடுபடாத உண்மை ஊழியர்களுக்கு எதிராக மிரட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 



7. பெருசுகள் ரிட்டயர் ஆனபின் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசும் பேச்சு போல இருக்கு. இன்றைய நுகர்வோர் கலாசாரம் பெருகிய காலக் கட்டத்தில் அவனவன் யாரைக் கொள்ளையடித்து ,அதை வைத்து தான் மட்டும் நன்றாக வாழலாம் என நினைக்கும்போது .இதெல்லாம் எடுபடுமா?



 அட தேவாலயங்களில் கூட பாவ மன்னிப்பு கேட்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பத்திரிக்கையில் வெளிவந்தது., தான் செய்வதை பாவம் என நினைப்பதே பாவம் என நினைக்கும் காலம் இது .அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு முழு நேர மதபோதகராக ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபீசர் பணிபுரிகிறார்.அதனை எதிர்ப்பீர்களா? நீங்க நல்ல உள்ளம் உள்ளதால் சூது வது தெரியாம பேசறீங்க. உங்க போதகர் வேலை பலன் தருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவே .செவிடர்கள் காதில் சங்கு ஊதுறீங்க.அவங்க திரும்ப உங்களுக்கு அதையே செய்யாமலிருந்தா சரி 



8. சகாயம் அவர்கள் தவறான இடத்தில் இருக்கிற சரியான மனிதர். இவர் இருக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அங்கு இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் மனதில் இது போன்ற விஷயங்களை விதைத்தால் எதிர்காலத்தில் சமுதாயம் பயனடையும். ஊழல்வாதிகள் அரசுயந்திரத்தில் உள்ளவர்கள் தான் திருவாளர் பொது ஜனங்கள் அல்ல இது சாதாரண பொது அறிவு, அதுகூட தெரியாமல் அறிவுரை கூறவரக்கூடாது. கிரனைட் வெட்ட அனுமதி கொடுக்கிறாயா? சரியான விதிப்படி அனுமதி கொடு. அரசு இடத்தை ஆக்கிரமித்து, வீடுகட்டி, மின்சார இணைப்பு பெற்று, குடி நீர் இணைப்பு பெற்று, வரியும் கட்டியபின் சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் அது ஆக்கிரமிப்பு என்று வந்து அதை இடிப்பதை என்னென்பது. 


இதுவரை இருந்த அதிகாரிகளுக்கு அது தெரியாதா, இல்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாம் செய்து கொடுத்தார்களா, எப்படி எடுப்பது.எத்துனை கட்டடங்களை இடித்து இருப்பீர்கள் இதுவரை அதை அனுமதித்த எத்துனை அதிகாரிமேல் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மதுரை ஆட்சியர் அலுவலக எரிந்ததற்கு காரணம் அதில் அதிகாரிகள் இடமாற்றம் , புரோமோஷன் சார்ந்த கோப்புகளே அதிகம் இருந்ததாக நாளேடுகளில் செய்தி வந்ததை பார்க்கும் பொழுது கிரனைட் ஊழலில் சம்பந்தபட்ட அதிகாரிகளை கண்டுவிடுவார்கள் என்று சதி செய்து எரிய விட்டு இருக்கலாம் அல்லவா? அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு பத்திர பதிவு செய்ய முடியுமா ஒரு சாதாரண குடிமகனால். 



நன்றி - தினமலர் 

வினோதினியின் அதிர்ச்சிப்பக்கங்கள்

Back to Album · கிரி Blog's photos · கிரி Blog's Page

    
Type any name to tag:

Drag the corners of the transparent box above to crop this photo into your profile picture. Finished cropping | Cancel
Saving your new profile picture

இது ஒரு வழக்கு எண் 18/9-ன் கதை..
-----------------------------------------------------------

``அப்பா நான் செத்துப்போறேன்ப்பா..” கீழ்பாக்கம் ஆதித்யா மருத்துவமனை அறை எண் 114-லிலிருந்து இப்படிதான் ஒலிக்கிறது அந்தக் குரல். அது வினோதினியின் குரல். வினோதினிக்கு தான் எவ்வளவு அழகான முகம். வண்ணத்துப் பூச்சியாகச் சிறகடித்துப் பறந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரே நாள் இரவில் கொடூரன் ஒருவனால் தலைகீழாகிப்போனது....

உடல் முழுக்கக் காட்டுப்போட்ட நிலையில் இருந்த வினோதினியால் பேச முடியவில்லை. மகளின் நிலையைப் பார்த்து அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் நின்றிருந்த வினோதினியின் தந்தை ஜெயபாலனிடம் பேசினோம்.

``எனக்குப் பூர்வீகம் திருக்கடையூர். வினோதினி என்னோட ஒரே செல்லப் பொண்ணு. என் பொண்ணு படிப்புக்காகத்தான் காரைக்காலுக்கே வந்தோம். தனியார் ஸ்கூல்ல செக்யூரிட்டியா வேலை. அந்த வருமானத்துலதான் என் சக்திக்கு மீறி கடன் வாங்கி என் பொண்ண படிக்க வச்சேன். அவளும் என் நிலமை புரிஞ்சு நல்லா படிச்சு பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சா. எல்லாம் நல்லபடியாத்தான் போச்சு சார்.. திருவட்டக்குடி ஊர்கார சுரேஷ்ங்கிற அந்தப் பையன் எனக்கு அறிமுகமாகுறவரை. வேறொரு ஃப்ரெண்ட் மூலமா தான் எனக்கு அறிமுகமானான். ஆரம்பத்துல நல்லாத்தான் பழகுனான்.

ஆனா போகப்போகத்தான் அவன் தப்பான நோக்கத்துல தான் எனக்கு அறிமுகமாகியிருக்கான்னு தெரிஞ்சது. என் பொண்ண விரும்புறதா தெரிஞ்சவங்கக்கிட்ட பொய்யா தகவல் பரப்பிருக்கான். இது என் பொண்ணுக்கு தெரிஞ்சதும் என்னைச் சத்தம் போட்டா. நானும் அவனைக் கூப்பிட்டு, என் வீட்டுப்பக்கம் வராதேனு கண்டிச்சேன். ஆனாலும் அவன் தொடர்ந்து தொந்தரவு பண்ணதால போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்களும் அவனைக் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் பிரச்னை இல்லாம இருந்தது. என் பொண்ணுக்கும் தனியார் கம்பெனில வேலைக்கிடைச்சு சென்னைக்குப் போய்ட்டதால நிம்மதியா இருந்தோம். ஆனா அவன் வன்மத்தோட இருந்துருக்கான்னு அப்போ தெரியல.

தீபாவளி லீவுக்கு ஊருக்கு வந்துட்டு மறுநாள் சென்னைக்குக் கிளம்பினாள். பஸ் ஏத்திவிட நானும் கூடப் போனேன். திடீர்னு வழிமறிச்சு `எனக்கு கிடைக்காத இந்த முகம்.. யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு’ சொல்லிட்டே என் பொண்ணு முகத்துல ஆசிட் வீசிட்டான்யா அந்தக் கொடூரன்..” என்று சொல்லும்போதே அந்தத் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்து பேசமுடியாமல் திணறுகிறார்.

சிறிது இடைவெளிவிட்டு ``கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததுனே தெரியலங்கையா. என் பொண்ணு வலி தாங்க முடியாம கீழ விழுந்து புரளவும் அவளை மடில தூக்கி வச்சேன். அப்போ அவ உடம்புல பட்டு வடிஞ்ச ஆசிட் எம்மேலயும் பட்டு எனக்குக் கைலயும் நெஞ்சுலயும் வெந்துப்போச்சு. என்னாலயே அதைத் தாங்க முடியல.. ஐயோ என் புள்ள எப்படியெல்லாம் துடிச்சா தெரியுமாங்கைய்யா.. ஆசிட் பட்டதால ரெண்டு கண்லயும் பார்வைப் போயிருச்சுனு சொல்றாங்க.. இப்போ வலி தாங்க முடியாம.. `அப்பா இந்த முகம் வேணாம்.. நான் செத்துப்போறேன்.. கொன்னுடுங்கப்பா’னு கதறி அழுறா.

`அப்பா.. இனி நீங்க செக்யூரிட்டி வேலைக்குப் போக வேணாம்ப்பா.. நான் சம்பாதிக்குறேன்.. சென்னைக்கு வந்துருங்க.. நான் உங்களைப் பார்த்துக்குவேன்ப்பா’னு என் பொண்ணு கடைசியா என்கிட்ட சந்தோசமா பேசுன வார்த்தை இதுதாங்க.. ஆனா என் புள்ள கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டான்யா அந்தப்பாவி. சிகிச்சையளிக்கக்கூடப் பணம் இல்லாம இருக்குற நான் இனி என் புள்ளைய எப்படிக் காப்பாத்துவேனு தெரியலையே” என்று கையறு நிலையில் நிற்கும் தந்தையாகக் கதறி அழுகிறார் ஜெயபாலன்.

இறுதியாக அங்கிருந்து கிளம்பிய நம்மிடம், ``எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேற எந்தப் பொண்ணுக்கும் ஏற்படக்கூடாது சார்.. அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.. ஆதுக்காகவாவது நான் உயிர் வாழணும்னு இப்போ ஆசைப்படுறேன் சார்” என்று உறுதியாக ஒலிக்கிறது வினோதினியின் குரல். ஒருதலைக்காதலின் பெயரால் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசும் சுரேஷ்கள் திருந்தினால் மட்டுமே இந்த `இந்த வழக்கு எண்’ முடிவுக்கு வரும்.

---------------------------------------------------------------------------------------------------

ஆசிட் வீசப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வினோதினிக்கு சிகிச்சையளிக்கும் கேம்.எம்.சி.யின் ஓய்வுப்பெற்ற தலைமை மருத்துவர் ஜெயராமனிடம் பேசினோம். ஆசிட் சாதாரணமாக எல்லா ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கிறது. அதைத் தான் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். ஆசிட் மேலேப்பட்டதும் மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது அந்த இடத்தில் பாலை ஊற்ற வேண்டும் என்பது தான். அதன் பிறகு தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளுக்கு அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆசிட் பட்ட இடங்களை முற்றிலும் நீக்கியே ஆக வேண்டும். அதன்பிறகே உடலின் மற்றப் பாகங்களில் இருந்து தோலை எடுத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பொருத்தி சரி செய்ய முடியும். அதுவும் முழுமையாகப் பழைய நிலை வராது. ஓரளவுக்குத் தான் சரி பண்ண முடியும் என்றார்.

ஆண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

-----------------------------------------------------------
டாக்டர்.ருத்ரன்
மனநல மருத்துவர்

தனக்குக் கிடைக்காத அந்தப் பெண்ணின் அழகு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வக்கிரமன நிலையிலிருந்து செயல்பட்டிருக்கலாம். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மனநோயாளிகள் என்று குறிப்பிட முடியாது. இது ஒருவகையான பொறுக்கித்தனமான செயல்பாடு. பெண்கள் மீது ஆசிட் வீசும் விசயம் என்றில்லை, இவர்கள் எல்லா விசயங்களிலும் சமூகத்திற்கு எதிராகத்தாகத்தான் இருப்பார்கள். அதுப்பற்றி அவர்களுக்குக் குறைந்தபட்ச வருத்தம் கூட இருக்காது. பிறப்பிலிருந்து வரும் வக்கிரமான இந்தக் குணத்தைத் திருத்தவும் முடியாது. சிறுவயதிலேயே இதைக் கண்டுபிடித்துத் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய் என்று எச்சரிக்கலாம்.

-ஞானபாலா
படங்கள்: ம.செந்தில்நாதன்

நன்றி: குமுதம்

--------------------------------------------------------------

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் வினோதினியின் சிகிச்சைக்கான பண உதவி பெற உதவும் வகையில் இந்த இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.. அவருக்கு நன்றி
http://www.helpvinodhini.com/

JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
Contact : ramesh 9944161416

60-வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற ஒரு அரிய வாய்ப்பு!


National Award for NON CINEMA Personalities - Content suitable for ALL - Infotainment category - SHARE SHARE SHARE Category



60வதாவது தேசிய திரைப்பட விழாவில் நீங்கள் அவார்ட் பெற பெரிய வாய்ப்பு. இதில் பங்கு பெற நீங்க சினிமா துறையை சார்ந்திருக்க தேவையில்லை. உங்களின் கட்டுரை, ஆர்டிக்கள் மற்றும் சினிமா விமர்சனம் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் அல்லது ஏதாவது புத்தகத்தில் அல்ல...து எதாவது மீடியாவில் இந்த வருடம் ( 2012 - ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை) இடம் பெற்றிருந்தால் நீங்களும் தேசிய விருதை பெற முடியும். இதை தவிர வழக்கம் போல் திரப்படங்களும் இந்த விருதுக்கு அனுப்பலாம். நான் அனுப்ப போறதில்லை, ஆனால் நிறைய பேர் இப்ப விமர்சனம் எழுதி என்ன கிழிக்க போறீங்கன்னு கேட்ட அத்தனை பேருக்கும் இப்படி ஒரு வாய்ய்பு வரும்னு தெரியுமா - எந்த ஆக்க பூர்வமான எழுத்தும் வீணாவதில்லை.....ஆல் தி பெஸ்ட் - விருது வாங்கினா ட்ரீட் கொடுங்க மறந்திராதீங்க....அப்ளிகேஷன் லின்கு....http://dff.nic.in/60th_NATIONAL_FILM_AWARDS_2012._regulations_doc(1).pdf

60th National Awards invites applications from NON CINEMA personalities with any Cinema articles, stories or film reviews in between 1st Jan - 31st Dec 2012 in any media can apply for the Best Cinema Writer award category. I am NOT applying so please do not forget to give treat if you are a winner and ALL THE BEST. Application Link - http://dff.nic.in/60th_NATIONAL_FILM_AWARDS_2
 
 
நன்றி - ஃபேஸ்புக் , தகவல் சொன்ன