Monday, December 24, 2012

Dabang 2 - சினிமா விமர்சனம்




தபாங் 2  படம் முமபை ஏரியாவில் செம ஹிட்னு நியூஸ் வந்ததுமே இங்கே நிறையபேரு அரண்டுட்டாங்க, காரணம் யங்க் சூப்பர்ஸ்டார் சிம்பு மறுபடியும் ஒஸ்தி 2 எடுத்துட்டா என்ன பண்ணித்தொலையறதுன்னு?மெகா ஹிட்னு சொல்லப்பட்டாலும் தமிழ்ல பல வருடங்கள் பார்த்து சலித்த மாமூல் மசாலா தான்.


ஓப்பனிங்க்லயே போலீஸ் ஆஃபீசர் ஆன ஹீரோ ரவுடிங்களைப்புரட்டி எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் , சும்மா ஒரு பஞ்ச் குடுத்தா அடியாளுங்க ஆறு கிமீ அந்தாண்ட போய் விழறாங்க . 10 நிமிஷம் ஃபைட் , அடுத்து ஒரு கொண்டாட்டப்பாட்டு , பாட்டு முடிஞ்சதும்  ஹீரோ தன் சொந்த சம்சாரத்துக்கிட்டே வந்து கொஞ்சம் கொஞ்சல் .

அடுத்து வில்லன் டெரர் இண்ட்ரோ .வில்லனுக்கு ஒரு தம்பி . அவன் லவ் பண்ற பொண்ணுக்கு வேற ஒரு பையன் கூட மேரேஜ் ஆகுது, கல்யாண மண்டபத்துல  போய் கலாட்டா பண்ணி பொண்ணை இழுத்துட்டு கிளம்பறப்போ ஹீரோ டகார்னு என்ண்டர் ஆகி அவனை போட்டெறியறாரு. இடைவேளை 






 வில்லன் பழிக்குப்பழி வாங்க ஹீரோவோட தம்பியை , சம்சாரத்தை தாக்கறார். ஹீரோ வில்லனை ஒழிச்சுக்கட்டறார். படு கேவலமான அரதப்பழசான கதை . முடியல


ஹீரோவா  முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின் முன்னாள் கலாட்டா காதலர் சல்மான் கான் . இவர் டெயிலி ஜிம்முக்குப்போறார் என்பதை எல்லாருக்கும் காட்டனும்கறதுக்காக டக் டக்னு சட்டையை பாம்பு மாதிரி கழட்டிடறாரு .பார்க்க செம காமெடியா இருக்கு.பொண்டாட்டி கிட்டே வழியும் போது நல்லா அனுபவத்தை காட்டறாரு. பஞ்ச் டயலாக் எல்லாம் விஷால் மாதிரியே பேசறாரு 


ஹீரோயின் அதாவது ஹீரோவோட சம்சாரமா சோனாக்‌ஷி சின்ஹா . பாவம் பாப்பாவுக்கு நல்லதா ஒரு ஜாக்கெட் கூட போட்டுக்க முடியாத அளவு வறுமை போல .  முதுகு ஃபுட் பால் கிரவுண்ட் மாதிரி எப்பவும் ஓபனாவே இருக்கு . முகம் பூரா 4 இஞ்ச்க்குப்பவுடர். 





 வில்லனா நம்ம பிரகாஷ் ராஜ், ஓப்பனிங்க்ல ரொம்ப டெரர் பீஸ் மாதிரி காட்டறாங்க , அப்புறம் போகப்போக காமெடி பீஸ் , பாவம்



இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஸ்டைலிஷான குழந்தைத்தனமான காட்சி , ஹீரோ கூலிங்க் கிளாசை வானத்தை நோக்கி வீசறாரு , அது 18 கிமீ மேலே போய் அரை மiநேரம் கழிச்சு வந்து கரெக்ட்டா அவரோட பின்னங்கழுத்து சட்டைக்காலர்ல கொரங்கு குரங்காட்டியிடம் தோளில் தொத்துவது போல் டக்னு உக்காந்துக்குது. கேன ரசிகர்கள் எல்லாம் விசில் அடிச்சு கைதட்டறாங்க , ஹய்யோ அய்யோ


2. ஒரு டைம் ஹீரோ ஆஃபீஸ் கிள்ம்பும்போது கூலிங்க் கிளாஸ் எடுத்துட்டுப்போக மறந்துடறாரு, அவர் சம்சாரம் அதை நினைவுபடுத்தி எடுத்துக்கொடுக்கும் காட்சி செம கிளு கிளு . அவர் போட்டிருக்கும் ஜாக்கெட் ஜெயா டி வி ல  குஷ்பூ போட்டிருந்த ஜாக்கெட்டை விட படு கேவலமா இருக்கு . 2 இஞ்ச் தான் துணியே . அதுவும் உருவாஞ்சுருக்கு முடிச்சுதான் , ஜாக்கெட் துணியே இல்லை, ரொம்ப ஏழை போல . எந்த போலீஸ் ஆஃபீசர் சம்சாரம் இப்படி ஜெயமாலினி மாதிரி முதுகை தொறந்து வெச்சுக்கிட்டு சுத்துது


 அது நமக்குத்தேவை இல்லாத சமாச்சாரம், சீனை மட்டும் சொல்றேன்.ஹீரோயின் அவரோட ஜாக்கெட்ல அந்த கூலிங்க் கிளாசை சொருகி ஹீரோவுக்கு தன் ஓப்பன் முதுகை காட்டறார். ஹீரோ கெக்கே பிக்கே ந்னு சிரிச்சுக்கிட்டே டிக்கி லோனா கேம் மாதிரி பேக் டூ பேக் முதுகை வெச்சு தேய்க்கறாரு, அந்த கூலிங்க் கிலாஸ் அப்படியே ட்ரான்ஸ்ஃபர் ஆகி இவர் முதுகுக்கு வந்துடுது  , மணி ட்ரான்ஸ்ஃபர் மாதிரி ..



3. போலீஸ் ஆஃபீசர் கொஞ்சம் கூட  வெட்கமே இல்லாம நடு ரோட்டில் ஒரு டிக்கெட் கூட ஐயிட்டம் சாங்க் ஆடறாரு , அதை நேரில் பார்க்கும் அவரோட தாலி கட்டுன சம்சாரம் கேனம் மாதிரி பல்லைகாட்டிக்கிட்டு அதுவும் கம்ப்பெனி தந்து ஆடுது. ஊர்ல இருக்கற ஆம்ப்ளைங்க எல்லாம் போலீஸ் ஆஃபீசர்  சம்சாரத்தை லோ ஹிப் ம் லோ கட்  , ஃபுல் முதுகு எல்லாம்  ஓ சில சீன் பார்த்துக்கிட்டு ஜொள் விடறாங்க, ஹய்யோ அய்யோ



4. பிரகாஷ் ராஜ் தான் வில்லன் ,அவரை அதிகமா கேவலப்படுத்தாம முடிஞ்ச வரை கவுரமா கேவலப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது 









இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹையர் போலீஸ் ஆஃபீசரான ஹீரோ எப்போ பாரு போலீஸ் யூனிஃபார்ம்ல மேல் சட்டை பட்டன் ஒண்ணை கழட்டி விட்டிருக்காரே? அதான் ஸ்டைலா? கண்றாவி



2. ஹீரோ ஒரே ஒரு ரிவால்வரை வெச்சுக்கிட்டு வில்லன் கேங்க்ல ஊடால பூந்து 69  பேரை கொல்றாரு. வில்லன்க எல்லாரும் மெஷின்கன் வெச்சிருக்காங்க, ஆனா ஒரு சிங்கிள் குண்டு கூட ஹீரோ மேல படலை, ஏன்?


3 க்ளைமாக்ஸ்ல வில்லன் பிரகாஷ் ராஜ் கைல ரிவால்வர் வெச்சுக்குட்டு தேவாங்கு மாதிரி பார்த்துட்டு தேமேன்னு நிக்கறாரு, ஹீரோ ஸ்லொ மோஷன்ல 2 கிமீ ஓடி வர்றதை லாங்க் ஷாட்ல காட்டும்போது அவர் ஏன் டக்னு சுடலை ? வேடிக்கை பார்த்துட்டே நிக்கறாரு. அவர் 2 கிமீ ஓடி வந்து பிரக்ச்ஷ் ராஜை உதைக்கற வரை பார்த்துட்டே நிக்கறாரு


4. வில்லன் பிரகாஷ் ராஜ் செம காண்ட்ல இருக்கார் , அப்போ ஒரு மலைக்கோயிலுக்கு ஹீரோவின் சம்சாரம் வருது . அப்பவே அவரை சூட் பண்ணா வேலை முடியுது . அவரை பிடிச்சு கீழே தள்ளி விடறார். ஹீரோயின் 78 படிகள் உருண்டு வந்து கீழே விழறாங்க , முறைப்படி சட்னி ஆகி இருக்கனும். ஆனா நெத்தில ஒரே ஒரு  கீறல் மட்டும்



5. வில்லன் ஹீரோயினைப்பிடிச்சு வசனம் பேசி தள்ளும் வரை 10 நிமிஷம் வேடிக்கை பார்க்கும் ஹீரோவின் தம்பி  ஹீரோயின் அதாவது அண்ணி கீழே உருண்டு விழுந்த பின் டேய்ய்ய்ய்ய்ய்ய் அப்டினு கத்திக்கிட்டு ஓடி வர்றாரு, அதை முன்னமே செஞ்சிருந்தா காப்பாத்தி இருக்கலாம்


6. வில்லன் ஒரு தாதா , ஹீரோ அந்த ஊருக்கு புதுசா வர்றாரு , அட்டூழிங்களை அழிக்கறாரு, இதே மசாலா தோசையை எத்தனை பேரு எத்தனை டைம் திருப்பி திருப்பிப்போடுவீங்க? 






 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35 

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார் 

 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங்க் -  2 / 5


சி.பி கமெண்ட் - சல்மான்கான் ரசிகர்கள் , தியேட்டர் ஆபரேட்டர்ஸ் மட்டும் பார்க்க வேண்டிய மகா மட்டமான மசாலா குப்பை  
































சச்சின் - வாழும் வரலாறு

http://www.telugupeople.com/uploads/sportsGallery/200909/sachin_tendulkar_Family.jpgபுதுடில்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பாக விளங்கிய சச்சின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 23 ஆண்டுகளாக அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த இவர், யாரும் நெருங்க முடியாக சாதனைகளை படைத்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது விடைபெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார்.


இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த 1989ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள், அதிக சதம், சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகள் படைத்தார். இவர், நேற்று திடீரென ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், தனது ஓய்வு முடிவை இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதத்தின் மூலம் தெரிவித்தார். இதனால் இவர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.


இதுகுறித்து சச்சின் கூறியது: கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் மூலம், உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இதனால் முழுமனதுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன்.


வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு சிறந்த இந்திய அணியை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும். வரும் காலங்களிலும் இந்திய அணியின் வெற்றி நடை தொடர வாழ்த்துகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனது முன்னேற்றத்துக்கு பக்கபலமாக இருந்த சகவீரர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு சச்சின் கூறினார்.


 http://www.topsportsfaq.com/wp-content/uploads/2012/09/Sachin-and-Anjali.jpg


சச்சின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்களின் கருத்து:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,""பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சச்சின் பங்கேற்பார் என எதிர்பார்த்தேன். தற்போதைய முடிவும் சரியானது தான். இனி தேர்வாளர்களுக்கு எந்த நெருக்கடியும் இருக்காது. இது அவரது சொந்த முடிவு. அவரை யாரும் வெளியில் அனுப்பமுடியாது,என்றார்.

ஸ்ரீகாந்த்: ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் உச்சத்தில் இருக்கும் போது தான் ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த 2011ல் அவர் ஓய்வு பெறுவார் என எண்ணினேன். சதத்தில் சதம் கண்ட சாதனையை யாராலும் மிஞ்சமுடியாது.

ஹர்பஜன்: சச்சின் ஒரு சிறந்த வீரர், மனிதர், இந்தியன். அவரால் நாட்டுக்கு பெருமை.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில்,""சச்சின் ஓய்வு பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். ஆனால் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்து தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார்,என்றார்.

பாபு நட்கர்னி: சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பலரும் வலியுறுத்தினர். ஆனால் தற்போது ஓய்வு அறிவித்தபின் ஏன் ஓய்வு பெற்றார் என கேள்வி எழுப்புகின்றனர். இந்திய மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. அவருடைய உடலை பற்றி அவருக்கு தான் தெரியும். ஓய்வு பெற இது தான் சிறந்த தருணம் என நினைத்திருப்பார்.

சரத் பவார்: சிறந்த "பேட்ஸ்மேன் மற்றும் எனது சிறந்த நண்பர் சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தது வருத்தமான விஷயம். இருப்பினும் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த அவருக்கு நன்றி.

"கிரிக்கெட் கடவுள்
பாகிஸ்தானின் இளம் வீரர் உமர் அமின் கூறுகையில்,"" என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஒரு மதமாக இருந்தால், அதற்கு சச்சின் தான் கடவுள். இவரது ஓய்வு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது,என்றார்.



http://l.yimg.com/ea/img/-/121223/photo_1356246468606_1_0-18ddbtj.jpg?x=400&sig=._RCK.8ba1GtAKC5QFhK.g--


72 மணி நேர பின்னணி...

ஓய்வு முடிவை 72 மணி நேரத்திற்கு முன் சச்சின் எடுத்துள்ளார்.

இது குறித்து அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,""நாக்பூர் டெஸ்ட் முடிந்த பின் மும்பைக்கு திரும்பிய சச்சின், மூன்று நாட்களுக்கு மொபைல் போனை "சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அவரை யாரும் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. முதலில் சச்சின் தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்தார். அதற்கு பின் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பது பற்றி யோசிப்பார்,என்றார்.


பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறுகையில், ""சச்சின் ஓய்வு திடீரென எடுக்கப்பட்டது கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வீரர்கள் தேர்வுக்கு முன்பே எங்களிடம் பேசினார். அடுத்த உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராக வேண்டுமென விரும்பினார். அப்படி பார்க்கும் போது மிகச்சரியான நேரத்தில் முடிவை எடுத்துள்ளார், என்றார்.

"நம்பர் 10க்கு ஓய்வு
ஒருநாள் போட்டிகளில் சச்சின் பயன்படுத்திய "நம்பர்-10 பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என, அவர் விளையாடி வரும் ஐ.பி.எல்., மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இவருக்கு பின் "நம்பர்-10 ஜெர்சியை வேறு எந்த வீரருக்கும் தரக்கூடாது என தெரிவித்துள்ளனர். கால்பந்து ஜாம்பவான்களான பிரேசிலின் பீலே, ரிவால்டோ, காகா, அர்ஜென்டினாவின் மாரடேனா, மெஸ்சி போன்ற வீரர்கள் "நம்பர்-10 ஜெர்சியை பயன்படுத்தினர்.

"ரன் மெஷின்
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 463 போட்டியில் 49 சதம், 96 அரைசதம் உட்பட 18, 426 ரன்கள் எடுத்துள்ளார்.

* ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை சச்சின் பெற்றுள்ளார். இவர், தனது 266வது போட்டியில் இச்சாதனை படைத்தார்.

பத்தாயிரம் ரன்களை கடந்தவர்கள்:

வீரர் போட்டி ரன்
சச்சின் (இந்தியா) 463 18, 426
பாண்டிங் (ஆஸி.,) 365 13, 704
ஜெயசூர்யா (இலங்கை) 445 13, 430
இன்சமாம் (பாக்.,) 378 11, 739
காலிஸ் (தெ.ஆ.,) 321 11, 498
கங்குலி (இந்தியா) 311 11, 363
சங்ககரா (இலங்கை) 337 10, 915
டிராவிட் (இந்தியா) 344 10, 889
ஜெயவர்தனா (இலங்கை) 386 10, 844
லாரா (வெ. இ.,) 299 10, 405

சதங்களின் நாயகன்



http://farm8.staticflickr.com/7014/6598786501_d5900cfb9c_z.jpg

அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 463 போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (30 சதம்), இலங்கையின் ஜெயசூர்யா (28), இந்தியாவின் கங்குலி (22), தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (21), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (20), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (20) ஆகியோர் உள்ளனர்.

* அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இவர், 96 அரைசதம் அடித்துள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (85), பாகிஸ்தானின் இன்சமாம் (83), இந்தியாவின் டிராவிட் (83), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (82) ஆகியோர் உள்ளனர்.


முதல் வீரர்

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் சச்சின். இவர், 2010ல் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 147 பந்தில் 200 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகித்தார்.

* இச்சாதøøயை இந்திய துவக்க வீரர் சேவக், கடந்த ஆண்டு முறியடித்தார். இவர், இந்தூரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 149 பந்தில் 219 ரன்கள் எடுத்து ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். தவிர, இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

இலங்கையுடன் அதிகம்

ஒருநாள் போட்டியில் 18, 426 ரன்கள் எடுத்துள்ள சச்சின், இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 3113 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3077 ரன்கள் எடுத்துள்ளார்.

* இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 9 சதம் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 8 சதம் அடித்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் அடித்த ரன் மற்றும் சதம்:

எதிரணி போட்டி ரன் 100/50

இலங்கை 84 3113 8/17
ஆஸி., 71 3077 9/15
பாக்., 69 2526 5/16
தெ.ஆ., 57 2001 5/8
நியூசி., 42 1750 5/8
வெ.இ., 39 1573 4/11
இங்கி., 37 1455 2/10
ஜிம்பாப்வே 34 1377 5/5
கென்யா 10 647 4/1
வங்கதேசம் 12 496 1/2
நமிபியா 1 152 1/0
யு.ஏ.இ., 2 81 0/1
நெதர்லாந்து 2 79 0/1
பெர்முடா 1 57 0/1
அயர்லாந்து 2 42 0/0

* இவர், பெர்முடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை.

 https://twimg0-a.akamaihd.net/profile_images/2504398687/344204969.jpg

463 போட்டி

அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவர், 463 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரை அடுத்து, இலங்கையின் ஜெயசூர்யா (445 போட்டி), மகிளா ஜெயவர்தனா (386), பாகிஸ்தானின் இன்சமாம் (378), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (375), இலங்கையின் முரளிதரன் (350) ஆகியோர் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.


ஆட்ட நாயகன்

ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையிலும் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 62 போட்டியில் இவ்விருதை வென்றுள்ளார். இவரை அடுத்து இலங்கையின் ஜெயசூர்யா (48 விருது), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (32), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (32), வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் (31), இந்தியாவின் கங்குலி (31), வெஸ்ட் இண்டீசின் லாரா (30), இலங்கையின் அரவிந்த டிசில்வா (30) ஆகியோர் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.


* அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சாதனையும் சச்சினிடம் உள்ளது. இவர், அதிகபட்சமாக 15 முறை தொடர்நாயகன் விருதை கைப்பற்றி உள்ளார்.


http://nimg.sulekha.com/sports/original700/sachin-tendulkar-anjali-tendulkar-2011-4-3-11-10-9.jpg

சாதனை துளிகள்...

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதம் எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 1998ல் 34 போட்டியில் 9 சதம் உட்பட 1894 ரன்கள் எடுத்துள்ளார். இவர், ஏழு முறை, ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

* அதிக முறை 90 முதல் 99 ரன்கள் வரை எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இவர், 18 போட்டியில் 90 முதல் 99 ரன்களுக்குள் அவுட்டானார்.

* ஒருநாள் போட்டியில் 15 ஆயிரம் ரன்கள் (18, 426 ரன்கள்), 100 விக்கெட் (154 விக்.,) மற்றும் 100 கேட்ச் (140) என "ஆல்-ரவுண்டராக அசத்திய ஒரே வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார்.

* அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 2016 பவுண்டரி அடித்துள்ளார். அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் (195) 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் அப்ரிதி (298), இலங்கையின் ஜெயசூர்யா (270) உள்ளனர்.


23 ஆண்டு கால சகாப்தம்

ஒருநாள் போட்டிகளின் சச்சின் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. இவர் களமிறங்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு சாதனை அரங்கேறுவது வாடிக்கை. கடந்த 23 ஆண்டு காலமாக விளையாடி வரும் இவருக்கு "மாஸ்டர் பேட்ஸ்மேன், "லிட்டில் மாஸ்டர், "மாஸ்டர் பிளாஸ்டர் என பல்வேறு பட்டங்கள் உண்டு. இவருக்கு நிகரான வீரரை இனி கண்டறிவது மிகவும் கடினமே. இவரது ஒய்வு இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.


கடந்த 1973ம் ஆண்டு ஏப். 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் (பாம்பே) பிறந்தார் சச்சின். இவரது இயற்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவருக்கு "டென்டல்யா என்ற செல்லப் பெயரும் உண்டு. இவர், இந்தியா, ஆசிய லெவன், மும்பை ரஞ்சி, மும்பை இந்தியன்ஸ், யார்க்ஷயர் (இங்கிலாந்து கவுன்டி) அணிகளுக்காக விளையாடி உள்ளார்.


கடந்த 18-12-1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக குஜ்ரன்வாலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான சச்சின், கடைசியாக 18-03-2012ல் தாகாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் நீண்ட நாட்கள் (22 ஆண்டு, 91 நாட்கள்) ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவரை அடுத்து, இலங்கையின் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்) உள்ளார்.

உலக கோப்பையில்...



http://kaw.stb.s-msn.com/i/E2/B9EA5971FE1D3AB31947D75E4FC4B.jpg

கடந்த 1992ல் முதன்முதலில் உலக கோப்பை தொடரில் விளையாடிய சச்சின், கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 10வது உலக கோப்பை தொடரிலும் விளையாடினார். இதன்மூலம் அதிக முறை(6) உலக கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள் வரிசையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் மியான்தத் (1975-96) சாதனையை சமன் செய்தார். கடந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், 20 ஆண்டுகளுக்கு பின் இவரது உலக கோப்பை கனவு நிறைவேறியது.


* அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் (45 போட்டி) 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (46 போட்டி) உள்ளார்.

* அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் (2278 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

* அதிக சதம் (6) மற்றும் அதிக அரைசதம் (15) அடித்த வீரர்கள் வரிசையிலும் சச்சின் முன்னிலை வகிக்கிறார்.

* கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் 11 போட்டியில் 673 ரன்கள் எடுத்த சச்சின், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.


"மாஸ்டர் பவுலர்

இந்திய வீரர் சச்சின், பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பவுலராகவும் அசத்தினார். இவர் 463 ஒருநாள் போட்டியில் 154 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
* இதுவரை 24 "மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
* இரண்டு முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
* பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 29 விக்கெட் சாய்த்துள்ளார். இலங்கை (21 விக்.,), ஆஸ்திரேலியா (20), வெஸ்ட் இண்டீஸ் (20) அணிகளுக்கு எதிராகவும் அதிக விக்கெட் வீழ்த்தினார்.

கேப்டனாக...

சச்சின், 73 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 23 வெற்றி, 43 தோல்வியை பெற்றுள்ளார். ஒரு போட்டி "டை ஆனது. ஆறு போட்டிகளுக்கு முடிவு இல்லை.



http://photogallery.indiatimes.com/sports/f1/sebastian-vettel-wins-indian-grand-prix/Sachin-Tendulkar-with-family/photo/10544080/Sachin-Tendulkar-with-family.jpg

சில சுவாரஸ்யங்கள்...

முதலில் சச்சின், வேகப்பந்துவீச்சாளராக உருவாக விரும்பினார். ஆனால் 1987ல் சென்னையில் நடந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அகாடமியில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லி, இவரை நிராகரித்தார். பின், பேட்டிங்கில் கவனம் செலுத்திய இவர், தற்போது "மாஸ்டர் பேட்ஸ்மேன்.
* கடந்த 1987ல் இந்திய துணைக் கண்டத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், பந்து எடுத்துக் கொடுக்கும் சிறுவனாக ஊழியம் செய்தார்.


* பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 326 ரன்கள் எடுத்த சச்சின், சகவீரர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் சேர்த்து, தனது சாதனை பயணத்தை பள்ளி பருவத்திலேயே துவக்கினார்.

* தனது 19வது வயதில் (1992) யார்க்ஷயர் அணிக்காக விளையாடியதன் மூலம், இளம் வயதில் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

* ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி, இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில், தனது அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார் சச்சின்.
* இவருக்கு விருப்பமான விளையாட்டு வீரர், கிரிக்கெட் வீரர் அல்ல. பிரபல அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்என்ரோய்.

* இவர், போட்டிகளில் அதிக எடை (1.5 கிலோகிராம் அல்லது 3.2/3.3 பவுண்ட்ஸ்) கொண்ட பேட்டை பயன்படுத்துவார்.

* சமீபத்தில் இவர், ராஜ்ய சபா எம்.பி., யாக நியமிக்கப்பட்டார்.

0
சச்சின், 18-12-1989ல் குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் 2 பந்துகளை சந்தித்த இவர், "டக்-அவுட் ஆனார். இவர், தனது 2வது போட்டியிலும் (எதிர்-நியூசிலாந்து, 1990) ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

விமர்சனம் காரணம்


பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை பத்திரிகையாளர் சந்திப்பதில் அறிவிப்பது தான் வழக்கம். சச்சின் மட்டும் கடிதம் மூலம் ஓய்வை அறிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீப காலமாக தொடர்ந்து "போல்டான இவர், கடும் விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என கூறப்பட்டது. தேர்வாளர்கள் கொடுத்த நெருக்கடியால் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதே கருத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் பிரதிபலித்தார். இவர் கூறுகையில்,""தொடர்ந்து எழுந்த விமர்சனம் காரணமாகவே சச்சின் ஓய்வை அறிவிருத்திருக்கலாம். ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை எட்டிய பின் விடைபெற்றிருக்கலாம்,என்றார்.


நன்றி - தினமலர்



 http://glittytrends.in/wp-content/uploads/2012/03/Sachin-Tendulkar-Anjali-Marriage-Photos.jpg


Below are detailed Sachin stats
• Matches played: 463 (most by any player)
• Most Runs: 18,426 runs at an average of 44.83
• Most centuries: 49
• Most Fifties: 96
• Highest number of 50+ scores in ODI’s – 145 (49 Centuries and 96 Fifties).
• First player to have scored over 100 innings of 50+ runs.
• Most Man of the Match awards: 62
• Most Man of the Series awards: 15
• Most ODI runs in a calendar year: 1,894 ODI runs in 1998.
• Most Centuries in a calendar year: 9 ODI centuries in 1998.
• Longest career span : 22 years 91 days.
• Between April 1990 and April 1998 Tendulkar played 185 consecutive matches – a World record.
• Tendulkar has played on 96 different grounds – most by any player.
• Only player ever to cross the 14,000-15,000-16,000-17,000 and 18,000 run marks.
• First player to reach 10,000-11,000-12,000-13,000-14,000-15,000-16,000-17,000 and 18,000 ODI runs.
• 15,310 of his runs came while opening the innings with the aid of 45 centuries and 75 fifties in 340 innings- most by an opener.
• Was the first batsman to score a double century in ODIs (200* against South Africa at Gwalior on Feb 24,2010).
• Tendulkar top-scored for India on 129 occasions – most such occasions for any player in ODIs.
• Was the first players to complete the all-round treble of 10000 runs, 100 wickets and 100 catches.
• Is the only player to have made three scores of 175 or more.
• Is the only player with five scores of 150 or more.
• Holds the record for scoring 1,000 ODI runs in a calendar year on most occasions. He did so seven times – 1994, 1996, 1997, 1998, 2000, 2003 and 2007
• Tendulkar has scored over 1,000 ODI runs against all major Cricketing nations.
• Has played ODIs with 866 players (teammates and opponents) – most for any player in ODI history.
• Most scores in 90s: 18 (including one not out innings).
• Was involved in 99 century partnerships – most by any player.
• Tendulkar was the first batsman to score over 3,000 runs against an opponent (3,077 runs against Australia).Since then he has also done this against Sri Lanka (3,113 runs).
• Tendulkar was the fastest to reach 10,000 runs taking 259 innings and has the highest batting average among batsmen with over 10,000 ODI runs.
• His nine centuries against Australia are the most by any player against a particular country. He occupies the second place too, with eight centuries against Sri Lanka.
• Sachin Tendulkar with Sourav Ganguly holds the world record for the maximum number of runs scored by the opening partnership. They put together 6,609 runs in 136 matches that include 21 century partnerships and 23 fifty run partnerships. The 21 century partnerships for the opening pair is also a world record.
• Sachin Tendulkar and Rahul Dravid hold the world record for the highest partnership in ODIs when they scored 331 runs for the second wicket against New Zealand in 1999-00 at the Hyderabad.
• Only the second player (after Javed Miandad) to appear in SIX World Cups – from 1992 to 2011.
• Most runs (2,278) in World Cup history including 6 centuries & 15 fifties with a best score of 152 against Namibia in 2003 world cup.
• 673 runs in 2003 Cricket World Cup, highest by any player in a single World Cup.
• Tendulkar is the only Indian to score a century on ODI captaincy debut (110 v Sri Lanka at Colombo RPS on 28-08-1996).
• Tendulkar was the first Indian player to score a century and capture four wickets in the same ODI (v Australia at Dhaka on 28-10-1998).
• 11.27% of all the runs and 24.50% of all the hundreds scored by all Indian batsmen have come from Tendulkar’s bat.
Performance vs countries


Performance in countries


Tendulkar at different positions


Tendulkar’s mode of dismissals: Out of 411 completed innings, Sachin was caught 258 times, bowled 68 times, LBW 39 times, run-out 34 times, stumped 11 times and hit-wicket once.
A break-up of Tendulkar’s scores

Tendulkar’s most productive years



Tendulkar’s nemesis: Tendulkar has been dismissed by Shaun Pollock, Brett Lee and Chaminda Vaas nine times, by Glenn McGrath and Heath Streak seven times and six times by Courtney Walsh, Azhar Mahmood and Abdul Razzaq.

நன்றி - ஃபர்ஸ்ட் போஸ்ட் ஸ்போர்ட்ஸ்



http://www.aumtrails.com/wp-content/uploads/2011/03/image_thumb23.png


தெரியுமா?

* சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே சச்சினின் விருப்பம். 1987ல் சென்னை, எம்ஆர்எப் பேஸ் அகடமியில் நடந்த தேர்வில் ஆஸ்திரேலிய நட்சத்திர பவுலர் டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பேட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கினார்.



* 1987 உலக கோப்பை போட்டியின்போது, மும்பை ஸ்டேடியத்தில் பந்து சேகரிக்கும் சிறுவனாக பணியாற்றினார்.


* 1988ல் பள்ளி அணிகளிடையே நடந்த போட்டியில் 326 ரன் விளாசியதுடன் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தார்.


* ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை ஆகிய 3 உள்ளூர் போட்டிகளிலும், அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசி அசத்திய ஒரே வீரர்.
* சச்சினின் அபிமான விளையாட்டு வீரர் ஜான் மெக்கன்ரோ (டென்னிஸ்).


* கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக டெஸ்டில் களமிறங்கியபோது, சுனில் கவாஸ்கர் பரிசளித்த கால்காப்புகளை (பேட்ஸ்) அணிந்து விளையாடினார்.


* கனமான மட்டையை உபயோகித்து விளையாடுவது வழக்கம்.


* 1998ல் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 9 சதம் உட்பட 1,894 ரன் விளாசி சாதனை.


நன்றி - தினகரன் ,Venkatakrishnan Sudarshan,

 

 http://www.thehindu.com/multimedia/dynamic/00571/_HY25CTY4-1_GR12KGV_571000g.jpg

திருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு - 30.12.2012

பதிவர் சந்திப்பு இதுவரை நடந்தவற்றில் பிரமாண்டமான வெற்றி பெற்றவை 


1. நம்ம உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை சந்திப்பு , அனைவரையும் அழைத்து பிரமாதபப்டுத்தினார் , 


2. அடுத்து மதுமதி யின் சென்னை பதிவர் சந்திப்பு . கலக்கு கலக்குன்னு கலக்கிட்டார் ,


 3. 3 வதா  கோவைல  சின்ன வீடு சுரேஷ் , சித்தார் சங்கவி ( அந்த தொட்டபெட்டா முட்டை புரோட்டா சங்கவி அல்ல)  ரக்சியமா நடத்தினது. அது எந்த அள்வு ஹிட் ஆச்சுன்னு சரியா தெரியல .( அதை ஏன் ரகசியமா நடத்தினாங்கன்னு ஒரு பதிவு போடலாம்னா 2 பேரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு “ விடுய்யா விடுய்யா நமக்குள்ளே என்ன?  அப்டினு பூசி மெழுகிட்டாங்க ;-)


4.  நாலாவதா  இப்போ நடக்கப்போகும் திருப்பூர் பதிவர் சந்திப்பு


வழக்கம் போல் அவங்க போட்ட பதிவோட காபி பேஸ்ட் பதிவு . நாம டைப் பண்ணி போடும் பதிவு காதலித்து கைப்பிடிக்கும் பெண் போல , ரொம்ப உழைக்கனும், காபி பேஸ்ட்  பதிவு மாமா பொண்ணு , அத்தை பொண்ணு மாதிரி, நமக்கு சொந்தமில்லை , ஆனாலும் ஜாலி ஹி ஹி

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.
 
 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.
மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.
நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 
பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.



நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
 



தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  


அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :


நாளைய வலையுலகம்..?

நன்றி - தொழிற்களம் 




எம் ஜிஆர் - ஒரு சகாப்தம்

http://www.envazhi.com/wp-content/uploads/2011/02/rajini-petham1.jpg

மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார்.



 அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/p72a.jpg

தேசிய விருது :
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார்.


 தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

தமிழக முதல்வர் :
1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
பாரத ரத்னா:


முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPdV-N-Cs-jqa6Wz6Bx9wgpe1BqnmL31G6BZnn05mel-Jcpmhr3cuUZ5vemTiq_FqKnLO7ZBW5MRFYbg8Q2XXj5y8kI24tXJwoFu79l6VN7M_B6XTMOeo_qeFYao0k7W_cHCTaOdpQQgjw/s1600/indira_mgr.jpg



மக்கள் கருத்து 


1. MGR அவர்கள் ஒரு நடிகராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்,ஆனால் நடிகராக மக்களால் மட்டும் நினைத்துக்கொள்ளப்பட்டு இருப்பவர் அல்ல,MGR அவர்களை விட மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களை எல்லாம் மக்கள் இன்னும் நினைத்துகொண்டு இருக்கவில்லை, அந்த நடிகர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களை மறந்து விட்டார்கள். 


ஆனால் MGR அவர்கள் அப்படி மறக்கப்படவில்லை.ஆக,MGR அவர்களை மக்கள் மட்டும் பார்க்கவில்லை.MGR அவர்கள் அரசியல்வாதி என சொல்லப்பட்டார்.அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை மக்கள் முதல்வராக ஆக்கவில்லை,ஏனன்றால்,அவர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட அரசியல் சாணக்கியம் அறிந்த அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள்.ஆனால்,மக்கள் MGR அவர்களைத்தான் முதல்வராக்க விரும்பினார்கள்.ஆக,மக்கள் MGR அவர்களை நாட்டை காக்க வந்த அரசியல்வாதியாகவும் பார்த்து முதல்வராக்கவில்லை என்பதும் தெளிவு. 



இரண்டாவது முறையாக முதல்வர் ஆக மக்களால் ஆக்கப்பட்டதும்,அவர் முதல்முறை மாநிலத்தை மிக மிக சிறப்பாக ஆண்டார் என்பதற்காவும் அல்ல..ஆக, MGR அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகரல்ல,மிகச்சிறந்த அரசியல்வாதியும்அல்ல,ஆனால்,இன்றளவும்,மக்களால்,அரசியல்வாதிகளால்,அவரின் விரோதிகளால்,நண்பர்களால், ஏன் அவர் காலத்தில் வாழாத சந்ததியினர் கூட நினைவு கூறும் ஓர் " சக்தி" ஆக MGR அவர்கள் இருகின்றார் என்றால் அதுதான் MGR , அவர்தான் "மக்கள் திலகம்" 


http://tamil.oneindia.in/img/2010/10/30-murugan-mgr-200.jpg



2. எம்.ஜி.யாரின் இரண்டு செயல்கள் - மதிய உணவு , விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தை முன்னேற செய்துள்ளது. அரசியளில் இரண்டு விதமான அரசியல்வாதிகள் உள்ளார்கள். பொருளாதரத்தை வளர்ப்பவர்கள். இன்னுமொருவர் இருக்கிர சொத்தை பகி்ர்ரவர். எம்.ஜி.யார் இந்த இரண்டாவது வகையை சேர்ந்தவர். எம்.ஜி.யார் காலத்தில் தமிழகம் தொழில் துறையில் அதிகம் வளர்ச்சி இல்லை. ஆனால் ஏழை எளியவர்களை பார்த்துக்கொண்டார். அந்த கால கட்டத்திர்க்கு எம்.ஜி.யார் போன்ற தலைவர் தேவை. ஆனால் இப்போ தமிழகம் சிறந்த , தமிழகத்தை பொருளாதரத்தில் வளர்க்கும் தலைவர் தேவை. 



3. MGR என்ற பெயரை சொன்னாலே, பிறருக்கு கொடுக்கும் உணர்வு தூண்டப்படுகிரது ஏன்? அவரைப்பற்றி விமர்சிக்க தகுதி வேண்டும்?? இன்று பல நடிகர்கள் விளம்பரமில்லாமல் ஏழைகளுக்கு உதவலாம்???? யார்? முன்னோடி?


 தங்கத் தலைவர்....தானைத்தலைவர்....புரட்சித்தலைவர்....பொன்மனச்செம்மல்.... இதய தெய்வம்....இதில் ஏதாவது ..உனக்கு..?????. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்..எம் ஜி ஆர் நாமம் வாழ்க. என் இதய தெய்வத்தை வீண் விமர்சனம் செய்யாதீர்...முடிந்தால் ஏழை ஒருவருக்கு ஒரு வேளை உணவு கொடுத்துப்பார்..மூன்றெழுத்தின் உண்மை விளங்கும்(மனம்+நிறைவு) 



4. MGR இறக்கும் போதும், ஆட்சியில் இருந்த போதும் சரி தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்து கொள்ளாதவர். இறந்த பின் அனைத்தையும் அனாதை குழந்தைகளுக்கும், காது கேளாத குழந்தைகளுக்கும் விட்டு சென்றவர். சத்துணவு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தியவர். முரசொலி மாறன் கல்லூரியில் படிக்க பணம் இல்லாத போது கல்லூரியில் படிக்க உதவியவர். தமிழ் நாட்டில் நக்சல்களின் கொட்டத்தை அடக்கியவர். திரைப்படங்களில் (ரஜினி போல் இல்லாமல்) சிகரெட்டே குடிக்காமல், மது குடிக்காமல் நல்ல கருத்துகளை சொல்லி அன்றைய இளைஞர்களை நல்ல பாதைக்கு திருப்பியவர். 



அவர் காலத்தில் மது கடையின் முன் நிற்பவனை கேடு கேட்டவன் என்று சொன்ன காலம் அவர் காலம். பெரும்பாலும் அவர் காலத்திய இளைஞர்களை உடற்பயிற்சி போன்ற நல்வழிகளில் கொண்டு சென்றவர். முக்கியமாக தேசிய ஒருமைபாட்டை வளர்த்தவர். இங்கு ஒருவர் கேட்கிறார். அவர் என்ன செய்தார் என்று. இவ்ளோ பேசும் நீ, வாங்கும் மாத சம்பளத்தில் ஒரு ஐந்து சதவீதம் ஏழை மக்களுக்கு செலவிடுவாயா ... மாட்டாய்.. MGR வாழ்க்கையில் செய் மிக பெரிய தவறு அண்ணா இறந்தவுடன் கருணாநிதியை முதல்வராக முன் மொழிந்ததுதான் 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/04/solai1.jpg


 5. எனக்க தெரிந்து நான் பல வருடங்களாக பல பேரிடம் கேட்டுள்ளேன் அப்படி என்னதான் செய்தார்? இந்த எம்.ஜி.ஆர் என்று ஒருவரும் சரியான பதில் சொல்லவில்லை,பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தார், ஆனால் தனது அரசியல் செல்வாக்கு,திரைபடத்தில் நடித்து வந்த வருமானத்தில் சில ஆயிரங்களை விளம்பரமாக மக்களுக்கு கொடுத்து உதவினார் அவ்வளவே-இன்றைக்கி சில நடிகர்கள் அதிக விளம்பரம் இல்லாமல் இதற்கு நூறு மடங்குக்கு மேல் செய்கிறார்கள். அதே போல் இந்த கண்ணதாசனை தனக்கு சாதகமாக எழுத வைத்தே போலியாக புகழ் பெற்றார்.


சரி சத்துணவு திட்டம் என்றாலே இவர் பெயர் அடிபடுகிறது, ஆனால் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை பெயர் மாற்றி ஊரை ஏமாற்றினார். இதெல்லாம் விட உச்சகட்ட சிரிப்பு இவரது நடிப்புக்கு சிறந்த நடிகர் விருது வேறு. அப்புறம் அதைவிட உச்சகட்ட காமெடி இவருக்கு என்ன காரணத்திற்கு பாரத ரதனா விருது கொடுக்கப்பட்டது என்று இன்று வரை எனக்கு விளங்கலை.இது ஒன்றும் இறந்து போன அவரை பற்றி தப்பான விமர்சனம் அல்ல, அதே சமயம் இறந்து போன ஒருவரை விமர்சிக்க கூடது என்பதை ஏற்று கொள்ளவும் முடியாது-உண்மை அவ்வளவே 


6. முன்னாள் முதல்வர் எம்ஜியார் பெரியதாக என்ன செய்துவிட்டார்? என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார். ஒர் பெரும் கொள்ளைக்கூட்டத்தினை தமிழகத்தின் அரியணையிலிருந்து இறக்கி அது மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் வைத்திருந்த்தது அவரது மிகப்பெரும் சாதனை. அவர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் வளங்களை எல்லாம் குடும்ப ஆட்சிக் கொள்ளை கொண்டிருக்கும். மாண்புமிகு எம்ஜியாரின் ஆட்சியில் தான் தமிழகம் முழுவதும் எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதியை பெற்றன. பசுமைப்புரட்சியின் விளைவால் கடன் சுமையில் மூழ்கியிருந்த விவசாயிகளின் துயர் துடைக்க வட்டியை தள்ளுபடி செய்தவர் முதல்வர் எம்ஜியார். தமிழகத்தின் முடிசூடா மன்னனாக விளங்கி தமிழகத்தை தொடர்ந்து ஆண்டவர். தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கியவர். 


தனது வீட்டையும் குழந்தைகளுக்கு எழுதிவைத்தவர் பொன்மனச்செம்மல். ஈர்ங்கைவிதிரார் கயவர் எனத்தக்க அரசியல் தலைவர்கள் மத்தியில் வள்ளலாக விளங்கியவர் எம்ஜியார். சத்துணவுத்திட்டத்தின் வித்து பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத்திட்டம் என்றாலும் அதன் விரிவில் சத்துணவுத்திட்டத்தின் பரப்பு மிகப்பெரியது. 


பள்ளி செல்லும் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டதும் சாப்பாட்டில் காய்கறிகள், பருப்புகள், கீரை என்று உணவின் தரமும் அளவும் கூட்டப்பட்டது வள்ளலின் சத்துணவுத்திட்டத்தில் தான். அந்த சத்துணவுத்திட்டத்தினால் தான் தமிழ்கத்தின் கல்வி சதம் அதிகரித்தது. ஏழைகுழந்தைகள் இடைனிற்றல் குறைந்தது. பொன்மனச்செம்மல் அண்ணல் எம்ஜியார் ஆட்சி ஏழை வர்கம், நடுத்தரவர்கம், விவசாயிகள், கிராமப்புற மக்களின் சேம நல அரசாக விளங்கியது. திராவிட பாரம்பரியத்தவர் என்றாலும் பொன்மனச்செம்மல் ஒரு உண்மையான தேசபக்தர், தேசியவாதி பரந்த மனத்தவர். அவர் ஒரு அரசியல் வாதி அல்லர் ஸ்டேட்ஸ்மேன்.அந்த தன்னிகரற்ற தமிழர் தலைவருக்கு அஞ்சலி. சிவஸ்ரீ... 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZstPp6ILB3aLiLUSyFMbFjzBUxA3rv4pFoSIOK-VTJ5GRkJhFi4uQwAEUKfAP3kkh1_tv0lPkAiQ2WblckRUjSv84Iq32MKBcT3knCb2Z4fHygEfYuzyrChMR9HZJE49DN6_1B3UPDQ/s1600/MGR%2526NAMBIYAR.jpg


7. இந்த உலகில் எத்தணையோ நாடுகளில் இருந்து எத்தணையோ மொழிகளில் திரைப்படம் வெளிவருகின்றது. மக்களில் தங்களுக்கு பிடித்த திரைப்பட கலைஞர்களை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றனர். ஆனால் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்கின்ற எம்.ஜி.ஆர். என்ற மாமனிதருக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் போல உலகில் வேறு எந்த மக்களும் எந்த ஒரு கலைஞருக்கும் அளித்ததில்லை அளிக்க போவதில்லை என்பது தான் வரலாற்று உண்மை. 


 பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு உரமாக வேராக இருந்து உழைத்து 1967ல் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக பெரியது. திரை உலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சேர பயணித்து அந்த இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றி கொடியினை நாட்டிய ஒரு மனிதர் இந்தியாவிலேயே ஏன் இந்த உலகிலேயே எம்.ஜி.ஆர். ஒருவராக தான் இருப்பார். மேலும் அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் என்றைக்கும் கருதியதில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகு அவர் நினைத்திருந்தால் அவரே கூட தலைமை பதவிக்கு போட்டியிட்டு இருக்க முடியும் வென்று இருக்க முடியும். 



ஆனால் அப்பொழுது, தான் ஒரு கிங் மேக்கராக இருந்து தன் நண்பருக்கு அந்த பதவியினை பெற்று தந்தார். 1972ல் அவர் ஒன்றும் அதிமுகவை தானாக தொடங்கவில்லை. அவர் தூக்கி பிடித்த ஏணி படியில் ஏறி உயர சென்ற அதிபுத்திசாலிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிலையினை எடுத்தார். அந்த சம்பவத்தை நினைத்து இன்றளவிலும் அந்த அதிபுத்திசாலி நிச்சயமாக வருந்தி கொண்டிருப்பார். 


அவருடைய அரசியல் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தையினை உச்சரிக்க கூட அவரை தமிழக மக்கள் விட வில்லை. 1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவு கூட இந்திராவை பிரதமராக்க தானே ஒழிய எம்.ஜி.ஆரை தோற்கடிப்பதற்கு இல்லை என்பதனை அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் உணர்த்தினர். காலத்தை வென்ற நம் பொன்மன செம்மலின் பெருமைகளை நினைத்து அவர் இந்த மண்ணுக்கு செய்த நன்மைகளை அவருடைய இந்த நினைவு நாளில் நினைவு கூறுவோம். 


நன்றி - தினமல்ர் 


http://i46.tinypic.com/2hwdv9z.png

உலகம் அழிவது கொஞ்சம் தள்ளி வைக்கப்படிருக்கா? என்ன கொடுமை சார்மிளா இது?

நீ எந்த ஜில்லாவுல இருந்தாலும் உன்ன விடமாட்டன்டியே...!
நீ எந்த ஜில்லாவுல இருந்தாலும் உன்ன விடமாட்டன்டியே...!
1.ஜட்ஜ் = ஷூட்டிங்க் ஸ்பாட்ல நடிகையோட மேலாடையை கிழிச்சியா? 


கைதி - ஆல்ரெடி கிழிஞ்ச டிரஸ்சைத்தான் அவங்க போட்டிருந்தாங்க , ஃபேஷனாம் 


-------------------


2. காதலிச்சி கல்யாணம் பண்ணினவங்களுக்கு ஃலைப் சீக்கிரமே போரடிக்குமா? 


ஆமா , லவ் பண்ணுன பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிட்டா ;-) # சும்மா 



---------------


3. ஹீரோக்கள் வில்லனைப்பார்த்தா டக்னு சட்டையை கழட்டி ஜிம் பாடியை காட்றாங்க.நல்ல வேளை.ஹீரோயிண் கள் போட்டிக்கு அப்டி ஏதும் பண்றதில்லை 



----------------------


4. மிஸ்.நீங்க இப்போ எங்கே இருக்கீங்க ?

 என் வீட்ல. 


அது தெரியுது.வீடு எங்கே இருக்கு?


# டைம்லைன் காமெடிகள் 



---------------------


5. மார்கழி மாசம் கோயிலுக்கு போறப்ப 2 டிபன் பாக்ஸ் கொண்டுபோகனும்.


1 சுண்டல் ,வெண்பொங்கல் பார்சல் 

2 சர்க்கரைப்பொங்கல் ,பஞ்சாமிர்தம் பார்சல் 


--------------------

மேலும் மனமே வசப்படு தொகுப்புக்கள் : http://buff.ly/SrpqT2



6. இன்று கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள்.அதனால இதுதான் சாக்குன்னு பிகர் கணக்கு பண்ண கிளம்பிடாதீங்க ;-)) 




---------------------


7. குஜராத்தில் கூட காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது-சிதம்பரம்# அரசியல்வாதிகள் இந்த மாதிரி உளறுவதில் ஆச்சரியமே இல்லை 




--------------------


8. எனக்கு எதுவுமே தெரியாது என்பது மறந்து விடுகிறது எக்சாம் ஹாலில் ் கொஸ்டின் பேப்பரைப்பார்க்கையில் # எகீ் 




-----------------



9. உலகம் இன்னும் அழியலை, என்ன நினைக்கறீங்க? 


 கலைஞர் - என் வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பு ;-)) 




-------------------



10. நடிகை சார்மிக்கு பிரபல தெலுங்கு டைரக்டர் செக்ஸ் டார்ச்சர். # 


டைரக்டர் - சார்மி பளார் மீ.அவ்வ்வ்வ்் 



---------------------

19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் ,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான அழகப்பன்


19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் 
,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான  அழகப்பன்





11. இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு பெண்கள் மயங்குகிறார்கள் - ராமதாஸ்# இது யூத்ங்க மேட்டர் ஆச்சே? ஹவ் யூ நோ? 



-------------------


12. குஜராத்திலும் காங்கிரஸ்தான் வென்றது -ப.சிதம்பரம்-# அப்போ இமாச்சல்ல பிஜேபி வின்னா? இந்த கேம் நல்லாருக்கே? 




-------------------------


13. கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா சாலை மறியல் # பேக்டிராப் பாட்டு - சாலையோரம் சோலை ஒன்று பாடும் சங்கீதம் 



---------------------


14. கீபோர்டில டைப் பண்ணும்போதாவது விரல்கள் நகம் வெட்டாம இருக்கேனு நினைச்சுப்பார்க்கும் பெண்கள் யாரும் உண்டா?:-) 



------------------------------


15. மது,புகையிலை மீது 'பாவ வரி' விதிக்க மத்திய அரசு முடிவு # அப்போ நீங்க பாவப்பட்ட அரசா? 



-----------------------




16. இந்திய அரசியலில் விலை போகாத கட்சி அதிமுக-நாஞ்சில் சம்பத்# நான் கட்சியை விற்கறேன்னு உன் கிட்டே சொன்னேனா முருகேசா? - ஜெ ஆத்திரம்



-----------------------



ஈரோடு பில்டர்ஸ் கண்காட்சியில் அழகப்பன் தன் ஹோம் மினிஸ்டருடன்

1.நம் விழி புணர்ச்சி நடக்கும்போது நமக்கான காதல் விழிப்புணர்ச்சி பெருகுகிறது




---------------------


2. கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது -ஜெ # எப்படி? சிவகாசி மாதிரியா மேடம்? 




---------------------------



3. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ # தமிழ்நாடு உங்க கண்ட்ரோல்ல இல்லையா? நீங்களே உங்க கண்ட்ரோல்ல இல்லையா? 




--------------------------------


4. புதிய தலைமுறை = போயஸ்சில் விலை போன கறை # ஜிங்க் ஜக்கில் ஜெயா டிவியை மிஞ்சிட்டாங்க 



--------------------------


5. எந்த சம்சாரம் நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ அதே சம்சாரம் நமக்கு பெரும் சல்லையையும் ஏற்படுத்துகிறது.. 



-----------------------------



எலேய் இவருக்கு என்னலேய் ஆச்சு ஹா ஹா ஹா ஹா....!

நரேந்திர மோடி வால்'ல சுட்ட படம் இது - மனோ
எலேய் இவனுக்கு என்னலேய் ஆச்சு ஹா ஹா ஹா ஹா....!



நரேந்திர மோடி வால்'ல சுட்ட படம் இது.



6. மிக மென்மையான தடியடி - மிக மென்மையான கண்ணீர் புகைக்குண்டு.. # உங்க நடுநிலைமை மென்மையா கற்பழிக்கப்பட்டதா? 



---------------------------


7. கொடநாட்டில் ஜெயலலிதா என்ன செய்வார்?- கனிமொழி!# சசிகலாவிடம் கேட்டா தெரியும்,எங்ககிட்டே கேட்டா? 



------------------------


8. தமிழக பட்ஜெட்டில் உயிர் இழந்தோர் நிவாரணநிதிக்கு பெரிய தொகையே ஒதுக்க வேண்டி இருக்குமோ?:(( 



------------------


9. அணு உலை நம் உயிர்க்கு உலை வைக்கும்.எதிர்கால சந்ததிக்கும் ஆபத்து 



------------------------


10. தமிழ் இனத்தலைவர் சத்தமே இல்லாம இருக்காரே?ரிகர்சல் இன்னுமா நடக்குது? 



---------------------------


11. போராட்டக்காரர்களின் மாயவலையில் விழவேண்டாம்-ஜெயலலிதா# கொடநாட்டில் ஓய்வெடுக்காமல் கூடன் குளத்தில் குடி இருக்கத்தயாரா? 



--------------------------


12. ஆணின் மீதான பெண்ணின் அதிகபட்ச அடக்குமுறை என் கிட்டெ மட்டும்தான் நீ அடிமையா இருக்கணும் #எகீ 



-----------------------


13. கணவனின் முதல் காதலை கண்டுபிடிக்கறவள் ்கேடி.அடுத்தடுத்து எந்தக்கள்ளக் காதலையும் வளர விடாம பார்த்துக்கறவ கில்லாடி!# எ கீ 




-------------------------------


14. ஒரே ஒரு சம்பவம் போதும் கட்டிக்காத்த நற்பெயரை கெடூக்க.சமீபத்திய உதாரணங்கள் - ஜெ ,புதிய தலைமுறை தொலைக்காட்சி 



-------------------------


15. ஜெவுக்கு நேரம் சரி இல்லை.இலங்கைப்பத்திரிக்கையால் அவமானம்.கூடன் குளம் துப்பாக்கி சூட்டால் மக்கள் எதிர்ப்பு 




-----------------------------


16. எனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதால் அண்ணா வளைவு இடிப்பு, கூடங்குளம் கலவரம் எதுவும் தெரியாது, நான் ஒரு அப்பாவி சி எம் - ஜெ @ கற்பனை




------------------------------


17.   கம்பெனி செக்யூரிட்டிக்கு  கம்பெனில நடந்த திருட்டோ,கொள்ளையோ தெரியலைன்னா அப்புறம் அவனை என்ன இதுக்கோசரம் வேலைல வெச்சிருக்கனும்? 



-------------------------------


18. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ #  புரியாத புதிர் ரகுவரன் குரலில் - I DON'T KNOW, I DON'T KNOW, I DON'T KNOW




-------------------------


20. கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு-ஷிண்டே # கோயிலுக்கு பக்கத்துல குடி இருக்கறவன் கோயிலுக்கு போக மாட்டான்




--------------------------------