Thursday, November 22, 2012

அபார்ட்மென்ட் எண் : ஈ505 - சுஜாதா தேசிகன் - சிறுகதை

அபார்ட்மென்ட் எண் : 505

சுஜாதா தேசிகன்

FM க்ருஷ் பெங்களூரில் வீடு வாங்கவில்லை என்றால் இந்தக் கதைக்குக் கூட தகுதியற்றவராக இருந்திருப்பார்.
சென்னை அண்ணாசாலை நடுராத்திரி கியூவில் நின்று, விசா கிடைத்தால் திருப்பதிக்கு குடும்பத்தோடு வருகிறேன் என்று வேண்டிக்கொண்டு, திருப்பதி பெருமாள் கருணையால் அமெரிக்கா சென்று முதல் காரியமாக பர்முடாவுக்கு மாறியதோடு அதற்கு ஏற்றாற்போல தம் பெயரையும் சுருக்கி க்ருஷ் என்று மாற்றிக்கொண்ட பல கிருஷ்ணமூர்த்திகளில் ஒருவர். ஃப்ரீமான்ட் பகுதியில் இருக்கிறார். அதனால் FM.
ஃபோனில், யாரு கிச்சாமியா?" என்று கேட்டுப்பாருங்கள்.
க்ருஷ்" என்று பதில் வரும்.
தற்போது இணையத்தில் FM க்ருஷ் என்ற பெயரில் அச்சுப்பிச்சு கவிதைகளை எழுதிக்கொண்டு இருப்பவர் இவர்தான். வருடத்துக்கு ஒருமுறை டிசம்பர் சீசனுக்கு இந்தியா வந்து அம்பிகா அப்பளம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, கரப்பை பார்த்து பயந்து, ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு போகும் க்ருஷை அவருடைய மாமனார் ஸ்கைப்பில் தோன்றி உங்களோடு கொஞ்சம் பேசணும் மாப்ளே" என்றார்.
சொல்லுங்கோ"
அமெரிக்காவில் வேலை எல்லாம் எப்படி இருக்கு?"
இஸ் கோயிங் வெல்."
போன வார எக்னாமிக் டைம்ஸில், அமெரிக்காவில் இந்த வருஷம் .டி.யில நிறைய பேர் இந்தியா திரும்ப வந்துட்டதா போட்டிருக்கான்..."
இருக்கலாம்... பட் டோன்ட் ஹாவ் பிராப்ளம்."
அப்படியே இந்தியா வந்தாலும்... உங்களுக்கு பிராப்ளம் இல்லை. பெங்களூரில் இருக்கும் பார்க் எல்லாம் இப்ப டெக் பார்க்காகிவிட்டது."
கூல்."
இந்தியா வந்தால் உங்களுக்கு பெங்களூர்தான் சௌகரியப்படும், அதனால இங்கே ஒரு பிராபர்ட்டி வாங்கிடுங்கோ."
குட் ஐடியா, பட்டோன்ட் ஹாவ் பிளான்ஸ் டூ இன்வஸ்ட் இன் இந்தியா. ஐயம் வெயிட்டிங் ஃபார் மை கிரீன் கார்ட்."
உடனே இப்படி பதில் சொல்லாதீங்கோ, கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கோ."
அதற்குப் பிறகு, தன் பெண் சுமதியுடன் ஒரு மணி நேரம் சம்பாஷணையின் இடையில், மாப்பிள்ளையை யோசிக்கச் சொல்லு. எழுபது லட்சத்தில அமக்களமா த்ரீ பெட்ரூம் பிளாட். ஸ்விம்மிங் பூல், ஜிம், கிளப் ஹவுஸ்... இன்னும் என்னென்னமோ சொல்றான். டாலர் பேமென்ட்னா இன்னும் கம்மியாம். அவர்ட்ட நீ கொஞ்சம் பேசிப்பார்."
மாமனார் பேசிய ஒரு மாதத்தில் லேயவுட், பிளான் என்று இமெயில் அனுப்பப்பட்டு பெங்களூர் மூலையில் தும்பரஹல்லி பக்கம் இருபது ஏக்கரில் எட்நூறு வீடுகளில் ஒன்றை பிளாக் செய்வதும் க்ருஷின் அந்த வருட பெங்களூர் வெக்கேஷனும் ஒன்றாக அமைந்தது.
ஜெட் லாக் காரணமாக, நடுராத்திரி டி.வி.யில் சுதா சந்திரன் ஆஞ்சநேயர் டாலர் விற்பதை ஆர்வமாகப் பார்க்கும் போது...
என்ன மாப்ளே தூக்கம் வரலையா? நாளைக்கு பத்து மணிக்கு உங்க வீட்டைப் போய் பார்த்துட்டு வந்துடலாம்."
இன்னும் கட்டவே இல்லையே..."
மாடல் ஃபிளாட் இருக்கு, உங்க பிளாக் எங்கே எப்படி இருக்குனு பார்த்தா உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்..."

காலை சிட்டி டாக்ஸி அவர்களை ஏற்றிக்கொண்டு அவுட்டர் ரிங் ரோடு வழியாக வரத்தூர் செல்லும் சாலையில் தும்பரஹல்லி என்று வலது பக்கம் சின்னதாக போர்டு போட்டிருக்க அதில் போன போது வழியில் இரண்டு பழைய சமாதி; ஒன்றின் மீது நாய் படுத்துக்கொண்டு இருந்தது. அரை கிலோ மீட்டர் உள்ளே சென்ற போது முழுக்க தென்னை மரங்கள் அடர்ந்து இருக்க கோகோநட் குரூவ் ஹாபிடெட்" என்று பெரிதாக எழுதியிருந்தது.
கதவைத் திறந்த செக்யூரிட்டி திரும்பிப் போகும் போது, ‘பத்து ரூபாய் கொடுத்துட்டுப் போங்கஎன்பது மாதிரி ஒரு சலாம் போட, கார் உள்ளே நுழைந்தது. மாடல் அபார்ட்மென்ட் முன்னால், தற்காலிக அலுவலகத்தில் டை கட்டிக்கொண்டு இருந்தவர், வெல்கம் சார்" என்றார்.
அம் க்ருஷ், ஃபிரம் யூஸ்... மை வைஃப் சுமதி"
வெல்கம் சார்... வெல்கம் மேடம்" என்றது டை.
இரண்டு நியூஸ் பேப்பர் அளவு வரை படத்தில் எங்கே என்ன வரப்போகிறது என்று இருபது நிமிஷத்தில் கட்டி முடித்தார்.
க்ருஷ் பொறுமை இழந்து... கேன் யூ ஷோ வேர் அவர் அப்பார்ட்மென்ட் 505 இஸ் இன் திஸ்?"
வாங்க சார் லெட்ஸ் கோ" என்று டை அழைத்துக் கொண்டு போனார். சில இடங் களில் தென்னை மரங்கள் மார்க் செய்யப்பட்டு இருந்தன.
வை ஹேவ் யூ மார்க் ஆல் தீஸ்?"
சார் இங்கேதான் கிளப் ஹவுஸ் வரப் போகிறது" என்றார்.
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, இங்கே தான் சார் -பிளாக்" என்றார். ஒரு நாவல் பழ மரமும், நிறைய தென்னை மரங்களும் இருந்தன.
மாமனார், உங்க பிளாட் ஈஸ்ட் ஃபேசிங், பால்கனி வெஸ்ட் ஃபேசிங். நான் புக் செய்யும் போதே பார்த்துட்டேன். எதிரே பாருங்க கோயில் கூட இருக்கு. ஹால் பால்கனியிலிருந்து கார்த்தாலே எழுந்தா பெருமாளை சேவிக்கலாம்" என்றார்.
நாவல் பழ மரத்தின் கிளையில் தேன்கூடு இருப்பதைப் பார்த்து, நாம உள்ளே போய் பேசலாம்" என்றார் க்ருஷ்.
வாட் ஆர் நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ்" என்று க்ருஷ் கேட்க மார்கெட்டிங் ஆசாமி ஒரு பிரிண்ட் செய்த காகிதத்தை எடுத்துக் கொடுக்க அதில் ஸ்டேஜ் படி எப்படி பணம் கட்ட வேண்டும் என்று விளக்க... க்ருஷ் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.
எனி டவுட்ஸ்?" என்று கேட்க,
பிராஜெக்ட் எப்ப முடியும்?"
இன்னும் இரண்டு வருஷம்... 2009 எண்ட். நீங்க போசஷன் எடுத்துக்கலாம்."
க்ருஷ் அமெரிக்கா சென்ற பிறகு பெங்களூர் ரியல் எஸ்டேட் சரிந்து 2009-ல் முடிக்க வேண்டிய பிராஜெக்ட் 2010 முழுக்க ஆவுது ஆவுது" என்று இழுத் தடித்து கடைசியாக 2010 டிசம்பரில் முடித்தார்கள். இன்னும் பால்கனி பூச்சு வேலை பாக்கியிருந்தது. முழுமையாகக் கட்டி முடிக்காத வீட்டில் சிலர் பிடிவாதமாக பால்கனியில் பனியன் அண்டர்வேர் காயப் போட்டிருந்தார்கள்.
வீட்டை வாடகைக்கு விடலாமா என்று யோசிக்கும் போது, க்ருஷ் வேலை செய்த கம்பெனி நஷ்டத்தில் இயங்க, உங்களுக்கு உள்ள எக்ஸ்பீரியன்ஸுக்கு, உங்களைக் கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க. வீடோ இங்கே இருக்கு, பேசாம வந்துடுங்களேன்," என்றார் ஸ்கைப் மாமனார். பேய் ஏரியா தமிழ்ச் சங்கம் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, அந்த மாசம்தென்றல்பத்திரிகையில் ஒரு பக்கத்துக்கு இவருடைய கவிதை இரண்டையும் பிரசுரித்து க்ருஷ்ஷை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு மாசத்தில் மாமனார், வீட்டு மர வேலைகளை முடித்து, கண்திருஷ்டி விநாயகர் படத்தையும் வாங்கி மாட்டி விட்டார்.
க்ருஷ் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்த அந்த வாரமே கிரஹப்பிரவேசம் முடிந்து, பக்கத்து பிளாட் கவுடாவுடன் நண்பராகி, அவர் உதவியுடன் மார்த்தஹல்லியில் இருக்கும் கடையில் வீட்டுக்கு வேண்டிய எல்லாம் வாங்கி அடுக்கிவிட்டார்கள்.

ஒரு திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்குக் கிளம்பும்போது விநோத சத்தம் பால்கனி எதிரில் இருக்கும் கோயிலிலிருந்து வந்தது. பார்த்தபோது, முழுசாக ஒரு சேவலை தலைகீழே பிடித்து அருவாளால் வெட்ட, ரத்தம் பீச்சி வெட்டியவரின் மூஞ்சியில் அடிக்க க்ருஷுக்கு ஒரு நிமிஷம் அடிவயிற்றை ஏதோ செய்தது. கோயிலைச் சுற்றி நிறைய ஆடுகளும் கட்டப்பட்டிருந்தன.
அன்று மாலை அசோஸியேஷனுக்குச் சென்று இதைப் பற்றிப் புகார் கொடுக்க, எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. பேசாம விட்டுடுங்க" என்று அட்வைஸ் கொடுத்தார்கள்.
கவுடா அங்கிள் இது வனகாளி கோயில். முன்னாடி இந்த இடம் காடா இருந்தப்ப அமாவாசை அன்னிக்கு மட்டும் வெட்டுவாங்களாம். விடுங்க.. கொஞ்ச நாள்ல சரியாகிவிடும்... கவுன்சிலர் கிட்ட பேசறேன்" என்றார்.
கார்த்தாலே சுப்ரபாதம் கேட்கும் என்று வாங்கினால் இப்படி ஆகிவிட்டது" என்று மாமனார் வருத்தப்பட்டார்.
ஒரு வாரத்துக்கு அப்பார்ட்மென்ட் கூகிள் குழுமத்தில் இதைப் பற்றி விவாதித்து, அந்த ஞாயிற்றுக்கிழமை அசோஸியேஷன் மீட்டிங்கில் இதைப் பற்றிக் கொஞ்சம் பேசினார்கள். அதிலிருந்த ஒருவர் மிருகவதை அமைப்புக்கு எழுதிப் போட அவர்கள் போலீஸுடன் வந்து கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் குடிசை மக்களுடன் பேசினார்கள். அசோஸியேஷன் சார்பில் லெட்டர் ஒன்று எழுதி அந்தத் தொகுதி எம்.எல்..விடம் கொடுக்க, அங்கே ஏதாவது நியூஸ் கிடைக்குமா என்று நின்றுகொண்டு இருந்த போட்டோகிராபர், போட்டோ எடுத்துவிட்டு என்ன விசேஷம்?" என்று க்ருஷிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள, அடுத்த நாள்பெங்களூர் மிரர்மூன்றாம் பக்கம்காட்டுமிராண்டிகள்என்ற தலைப்பில் பெட்டிச் செய்தியாக க்ருஷின் போட்டோவுடன் பிரசுரித்திருந்தது.
அதற்கு அடுத்த நாள் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர், நாம எப்படி அவங்களைக் காட்டுமிராண்டிகள்னு சொல்லலாம்? நாமும் கொசு மருந்து அடிக்கிறோம், கோத்ரெஜ் கம்பெனியைக் கூப்பிட்டு கரப்பு மருந்து வைக்கிறோம்... தேனீக்கள் எல்லாம் அருகிய இனம்னு அரசே அறிவிச்சிருக்கற நிலைல காலனில இருக்கற மரங்கள்ல தேன்கூடுகளை அழிக்கறோம். ஏன் அந்த அப்பார்ட்மென்டில் கூட அழித்திருப்பார்கள்" என்று வக்கணையா வாதம் செய்தார். அடுத்த நாள் போலீஸ், அப்பார்ட்மென்டுக்கு வந்து விசாரித்தது. உங்க போட்டோதானே சார் பேப்பர்ல வந்திருந்தது?" என்று க்ருஷை அடையாளம் கண்டுகொண்டார் இன்ஸ்பெக்டர். ஃபிளாட் நோட்டீஸ் போர்ட்டில் யாரும் தேனீக்களை அழிக்கக் கூடாது" என்று அறிவிப்புப் போட சிபாரிசு செய்தார்.
நவராத்திரிக்கு மாமனார் வந்தவுடன் சுமதி, அப்பா இவருக்கு இந்த வீடு துளி கூட பிடிக்கலை. கசாப்புக் கடை முன்னாடி வீடு என்று சொல்லிண்டு இருக்கார். பேசாம வாடகைக்கு வேற இடத்துக்கு போகலாம் என்று சொல்லிண்டு இருக்கார்... "
சரி...பார்க்கலாம்."
அடுத்த வாரம் கோயில் களைகட்டியது. ஒரே மேளதாளம் என்று அமர்க்களப்பட்டது.
இன்னிக்கு என்னத்தை வெட்டப் போகிறார்களோ என்று அலுத்துக்கொள்ளும் போதே, விஷயம் தெரியுமா க்ருஷ்?" என்று கவுடா அங்கிள் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்.
என்ன?"
நேத்து ராத்திரி திடீர்னு காளிக்குப் பக்கத்துலசஷ்யஹரி விநாயகர்தோன்றியிருக்கார். அதனால ஊரே கூடியிருக்கு."
திருவிழாவுக்கு அந்த ஃபிளாட்டில் இருப்பவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது.
புதுப் பிள்ளையாரைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று மொத்த அப்பார்ட்மென்டும் அங்கே குழுமி இருக்க, அந்தத் தொகுதி எம்.எல்.. எல்லோருக்கும்கேசரி பாத்விநியோகித்துக் கொண்டு இருந்தார்.
திருவிழா முடிந்து அடுத்த அமாவாசை காலை க்ருஷுக்கு ஒரே ஆச்சர்யம்; கோழி, ஆடுகளுக்குப் பதில் பூசாரி இளநீர் வெட்டிக் கொண்டு இருந்தார். கவுடாவிடம் கேட்டதற்குசஷ்யஹரிஎன்றால் கன்னடத்தில் வெஜிடேரியன் என்றார்.
அப்பா, விஷயம் தெரியுமா? பால்கனி கோயில்ல ஆடு, கோழி வெட்றதை விட்டுட்டாங்க" என்று சுமதி உடனே போன் செய்தாள்.
அப்படியா?"
பிள்ளையார் வந்த வேளை!"
சஷ்யஹரி பிள்ளை யார்னு சொல்லு, கிட்டத்தட்ட எட்டாயிரம் செலவாச்சு."
என்னப்பா சொல்றீங்க? ஏதாவது வேண்டுதலா?"
முள்ளை முள்ளால தான் எடுப்பது போல, நான் சாமியை சாமியால எடுத்தேன். காவேரி எம்போரியத்துல பிள்ளையார் வாங்கி... ‘சஷ்யஹரிவிநாயகர்னு நாந்தானே பேர் பொறிச்சேன்" என்றார்.


 நன்றி - கல்கி 

மணப்பெண் = குத்து விளக்கு , மாப்ளை = விளக்கெண்ணெய் . வாட் ஈஸ் த ரிசல்ட்?

1. காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டிக்கு ஏன் போகலை?

நல்ல ஃபேரா(fair) அழகா இருக்குறவங்க மட்டும் கலந்துக்குற நிகழ்ச்சின்னு
நினைச்சுட்டோம்.

..............................
........................................



2. அறம் செய விரும்புங்கற அவ்வையார் வர்த்தையை தலைவர் தப்பா
புரிஞ்சுக்கிட்டாருன்னு எப்படி சொல்றே?!

அடிக்கடி ஏகப்பட்ட ”இல்லறம்” செய்யறார்.

.....................................................

3. தலைவர் எப்பவும் மப்புலதான் இருப்பார்.

அதுக்காக ”மப்புல இருக்கும் பேதையே”னு பேனர் வைக்கனுமா?

..................................................................

4.டாக்டர் எனக்கு பகல், நைட் எப்பவும் தூக்கமே வர மாட்டேங்குது.

ரொம்ப சவுகர்யமா போச்சு.டபுள் டியூட்டி வேலை பார்த்து சம்பாதிக்கலாம்.

...................................................

5.நடிகை: நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான்.

நிரூபர்: ஆனா, அதனால ஏற்படற காயமும், வலியும் மட்டும்ரசிகனுக்குதான்.


...................................................

6. கட்சி ஆஃபீஸுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கச் சொல்றிங்களே, ஏன் தலைவரே!?

“வெள்ளை மாளிகையில் வசிப்பவர்ன்னு ஒபாமாவுக்கு நிகரா பேர் எடுக்கத்தான்.


.........................................................

7. எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ்கிட்டயே திருடுவே?!

தொழில்ன்னு வந்துட்டா நான் பாரபட்சம் பார்க்குறதில்லை ஏட்டைய்யா.

...................................................................

8.தொகுதிப் பிரச்சனை பற்றி ஒரு கடிதம் எழுதி மகளிர் அணித்தலைவி
தலைவர்கிட்ட குடுத்திருக்காங்க.

“ஓஹ்ஹோ..., கண்மணி கழகத்திற்கு எழுதிய கடிதம்ன்னு பில்டப் குடுத்தாரே? இதானா?

.....................................................................

9. என் மனைவியை  டைவர்ஸ் பண்ணிட்டேன்

அதுக்காக,இல்லறத்துறவின்னு பட்ட பெயர் வெச்சுக்கனுமா?!

.........................................................................

10. யுவர் ஆனர், என் மனைவிக்கு பதவி குடுத்தது என் தப்பா?

ஆமா, அமரர் பதவி குடுத்திட்டு அதிகமா பேசறியே?

.........................................................................

11. என் கணவர் எப்பவும் என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் மாதிரிதான் பழகுவார்.

அடடே! அப்போ கணவர் மாதிரி பழகவே மாட்டாரா?!

...................................

12, மன்னர் வேட்டையாட அந்தப்புரம் போய் இருக்கிறார்.

காட்டுக்குத்தானே போவார்கள்?!

இப்போ இவர் போனது கன்னி வேட்டைக்கு ..

..........................................

13. தலைவரோட பையன் கில்லி விளையாடுறதுலயும் கோலிக்குண்டு
விளையாடுறதுலயும் வல்லவனாம்.

அதுக்காக் கேல் ரத்ணா விருது வேணும்னு கேட்குறது ஓவர்.

....................................................

14. தலைவருக்கு பிடிச்ச ஆசனம் எது?

சிம்மாசனம்தான்.

............................................................

15.தலைவரே! விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு காரணமில்லைன்னு சொல்றீங்களே?!

ஆமா... ஓட்டு போட்ட ஜனங்கதான் காரணாம்.

.....................................................

16. மீனவனோட கல்யணம் இது.

இருக்கட்டுமே. அதுக்காக வாசல்ல வாழைமரத்துக்கு பதில் கட்டுமரத்தை
கட்டுறது சரியில்லை.

.......................................................

17. தலைவர் இன்னும் அந்த காலத்துலயே இருக்காருனு எப்படி சொல்றே?!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கி
தருவோம்ன்னு சொல்ராரே?!

.......................................................

18.அந்த ஜோசியர் ஒரு கோள் மூட்டின்னு சொல்றியே எப்படி?

எந்த கிரகமும் சரியில்லை. எல்லா கொள்களும் உங்களுக்கு எதிராவே இருக்குன்னாரே?!

.................................................................

19. இளைஞரா இருந்தப்ப தலைவருக்கு பொழுது எப்படி போச்சாம்?

பாதிநேரம் குயின்மேரீஸ் காலேஜ் வாசல்ல. மீதி நேரம் ஒயின் ஷாப் பார்ல.

.....................................................................

20.மனைவி இறந்துட்டான்னு சொல்லி அனுதாப ஓட்டு வாங்க முடியுமா?

ம்ஹூம் சான்ஸே இல்லை தலைவரே.

அடப்பாவமே! அப்போ நான் கொலை செஞ்சது வேஸ்டா?!



-------------------------


21. குத்து விளக்கு மாதிரி பொண்ணு இருந்தாலும் மாப்ளை விளக்கெண்ணெய் மாதிரி இருந்தா நோ யூஸ் ;-))



---------------------------


22. தூக்கு க்கு எதிரா குரல் கொடுப்பவர்கள் மீது தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும்னு அரசு அறிவிச்சுட்டா எத்தனை வீரர்கள் இருக்காங்கன்னு தெரியும்



----------------------


23. டேமேஜர் - ஒழுங்கா வேலை செய். கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திகிட்டு பார்ப்போம். #



அதெப்பிடி? கண் கூசுமே?



------------------------


24. ஆபீஸ் ல நைட் டைம் ல டீ குடிச்சு நைட் டீ செலவுன்னு எழுதி வெச்சா ஆபீஸ் காசுல எதுக்கு நைட்டி வாங்குனே?னு கேட்பாரோ டேமேஜர்?



-------------------------



25. மேத்ஸ் மிஸ் - 'துப்பாக்கி' ஒருவார வசூல் 65 கோடி.அப்போ 10 வாரம் கழிச்சு என்ன வரும் ? லொள் மாணவன் - இன் கம் டாக்ஸ் ரெயிடு வரும்




---------------------------

தீபாவளி ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

விமர்சனம் : துப்பாக்கி

விகடன் விமர்சனக் குழு
தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவத் 'துப்பாக்கி’!

 ராணுவ வீரனான விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வந்த வேளையில், ஒரு திருடனைப் பிடிப்பதற்கு பதில் தீவிரவாதியைப் பிடித்துவிடுகிறார். அவனிடம் இருந்து தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, தன் ராணுவ நண்பர்களைத் துணையாகக்கொண்டு 'ஸ்லீப்பர் செல்’நபர்களை ரகசியமாக வேட்டையாடுகிறார். மொத்த நெட்வொர்க்கையும் இயக்கும் 'மாஸ்டர் மைண்ட்’ வில்லன் தன் சகாக்களைக் கொன்ற ரகசியத் துப்பாக்கி யார் என்று தேடும் முயற்சியில், பலர் உயிர்இழக்கிறார்கள். விஜய் தன்னையே பணயமாகவைத்து வில்லனைச் சந்திக்கச் செல்வது டிக்டிக் திக்திக் க்ளைமாக்ஸ்!


தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகு, 'இப்படி ஒரு ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியமா?’ என்று முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கும் வரை அப்படியான சந்தேகமே எழாத வகையில் பரபர திரைக்கதையால் அசரடிக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம். 
'விஜய் மிலிட்டரியா?’ என்று சந்தேகத்தோடே அமர்ந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கேரக் டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்து இருக்கி றார் விஜய். நிதானமாகப் பேசிக்கொண்டேதீவிர வாதியின்கைவிரல்களைவெட்டும்போதும், சின்ன கத்தியை வைத்து மொத்தப் பேரையும் வீழ்த்தும்போதும் அனல் பட்டாசு. பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜயின் மேனரிசங்கள்!
காஜல்... செம ஜில். ஆனால், கவர்ச்சிப் பாடல்களுக்கு மட்டுமே அழகி டெடிகேடட்!


விஜய்க்குச் சவால் கொடுக்கும் செம க்ளெவர் ப்ளஸ் டெரர் வில்லனாக வரும் வித்யுத் ஜம்வால், தீர்க்கமான பார்வையிலேயே மிரட்டுகிறார்.


காமெடிக்கு என வலிந்து திணிக்கப்பட்ட ஜெயராமைவிடவும் அதிரிபுதிரி காமெடிசெய் கிறது சத்யனின் கதாபாத்திரம். தன் மேல் அதிகாரிகளுக்குக்கூடத் தெரிவிக்காமல், விஜய் சொல்வதை அப்படியே கேட்டு அவர் நடப்பது செம சீரியஸ் காமெடி!


என்னதான் 'ஸ்லீப்பிங் செல்’களுக்கு தங்கள் தலைவர் யார் என்று தெரிந்து இருக்காவிட்டாலும், தங்களுக்கு உத்தரவிடுபவர் யார் என்று தெரியும்தானே... ஆனால், அதைக்கூட கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல், அனைவரையும் சுட்டே சாகடிக்கிறார் விஜய்.


'கூகுள்... கூகுள்’ பாடலில் மட்டுமே ஈர்க்கிறது ஹாரிஸின் இசை. மும்பையின் அழுக்கு, அழகு இரண்டையும் ஃப்ரெஷ் லுக்கில் தருகிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.


பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் சிறுபான் மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று சித்திரிக்கும் பொது புத்தி உச்சத்துக்குச் சென்று இருக்கிறது 'துப்பாக்கி’யில். அதிலும் சிறுபான்மையினர் குடும்பங்களும்  பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது வேதனை.


லாஜிக் மேஜிக் பார்க்காவிட்டால், இந்த அளவு இம்ப்ரெஸ் செய்ய முடியும் என்றால், இப்படியான இன்னொரு விஜய் படத்துக்கு...

'வி ஆர் வெயிட்டிங்’!



விமர்சனம் : போடா போடி

விகடன் விமர்சனக் குழு
திருமணம் முடிந்த பின்னும் ஈகோ உரச, 'போடா...’, 'போடி’ என்று பிரியும் காதலர்களின் கதை!


 சில சந்திப்புகளிலேயே காதலிக்கத் தொடங்கும் சிம்பு, வரலட்சுமி (அறிமுகம்)  திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகான ஈகோ மோதல் இருவரையும் பிரிக்க, இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!


பார்த்துப் பழகிய பழைய கதை என்றாலும் நான்கைந்து  கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு, சின்னச் சின்னக் கலகல வசனங்களால் படத்தை ரசிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன். வரலட்சுமி சல்சா ஆடுவதைத் தடுக்க, சிம்பு அவரைக் கர்ப்பம் ஆக்குவது, அது தெரிந்து பிரிந்து செல்லும் வரலட்சுமிக்கே பின்னர் சிம்பு டான்ஸ் பார்ட்னர் ஆவது, குத்து டான்ஸுக்கும் சல்சாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிம்பு தடுமாறுவது ஆகியவை படத்தின் ரசனை அத்தியாயங்கள்.
டம் முழுக்கவே சிம்பு செம க்யூட். 'எப்பவாவது பொய் பேசறவளைப் பார்த்திருக்கேன். ஆனா, எப்பவும் பொய் மட்டுமே பேசுறவளை இப்போதான் பார்க்கறேன்’ என வரூவை வாரும் போதும், 'அவன் எங்கல்லாம் கை வைக்கிறான்... எனக்குப் பத்திட்டு வருது’ என்று எகிறும்போதும் அசத்துகிறார்.


 சிம்புவுக்கே வம்பு கொடுக்கும் கேரக்டரில் வரலட்சுமி அசத்தல் அறிமுகம். 'தொடுறப்பவே எனக்கு வித்தியாசம் தெரியும்!’  எனச் சதாய்ப்பதும் கோபத்தில் டாய்லெட்டில் வீசிய திருமண மோதிரத்தைப் பிறகு தேடி எடுக்கும்போதும் பொண்ணு நடிப்பில் ஓ.கே. (கரகரக் குரல்கூட கேட்கக் கேட்க வசீகரித்துவிடு கிறது). ஆனால், சிம்புவைவிட 'பல்க்’ ஆகத் தெரியுதே பொண்ணு!



படம் முழுக்க சிரிசிரி மேளா நடத்திஇருப்பவர் 'விடிவி’ கணேஷ். 'மங்களகரமா இருந்த என் வீட்டை இப்படி மகாபலி புரம் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி மாத்திட்டானே!’ எனப் புலம்புவதும், 'கல்யாணம் ஆகுற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க. கல்யாணம் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க’ என எக்ஸ்பிரஷன் வைத்துச் சொல்வதும், சிம்புவுக்கு டகால்டி ஐடியாக்கள் சொல்வதுமாகக் கரகரக் குரலால் கலகலக்கவைக்கிறார். 'இவ்ளோ விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகிலா படம் பார்த்துட்டு இருக்கியா?’ என்று கணேஷை சிம்பு போட்டுக்கொடுப்பதுமாக இருவருக்குமான காமெடி கெமிஸ்ட்ரி... பம்பர் லாட்டரி! 


ரசனை வசனங்கள், கலகல காமெடி தவிர படத்தில் வேறு என்ன பாஸ் இருக்கிறது? சிம்புவின் வசதிபற்றி எதுவும் விசாரிக்காமலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரூ, வருடம் முழுக்க டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டு இருக்கிறார். லண்டன் கலாசாரத்தில் 'ஃப்ரீக்கி’ ஆக வளர்ந்த சிம்பு, வரூவைக் கைபிடித்ததும் 'தமிழ் கலாசாரக் காவலன்’ அவதாரம் எடுத்து,  நமக்கு காதில் ரத்தம் வரும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருப்பது என்ன நியாயம்? அதிலும் முதல் பாதி முழுக்க சிம்புவும் வரூவும் பேசிக்கொண்டே இருக்கிறா... ஆவ்வ்வ்வ்! 


'போடா போடி..’ பாடலிலும் சல்சாநடனத்தின் போது ஒலிக்கும் பின்னணி இசையிலும் செம ஸ்கோர் செய்கிறது தரண்குமாரின் பின்னணி இசை.
சில செல்லச் சண்டைகள் ரசிக்கவைக்கும். 'போடா போடி’ அப்படி ஒரு சண்டை!





விமர்சனம் : அம்மாவின் கைப்பேசி

விகடன் விமர்சனக் குழு
பொறுப்பு இல்லாமல் திரிந்த கடைக்குட்டி மகன் சாந்தனுவிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று கைப்பேசி அழைப்பு வாயிலாக வரும் என்று காத்திருக்கும் அம்மா ரேவதி அம்மாளுக்கு இறுதியில் என்ன ஆகிறது என்பதே... அம்மாவின் கைப்பேசி!


 எட்டு சகோதர-சகோதரிகள், ஒரு அம்மா, சாந்தனு, இனியா, அவருடைய குடும்பத்தினர், தோல் தொழிற்சாலை பாய், குவாரி உரிமை யாளர், அவரது மேனேஜர், சிலபல வில்லன்கள், 'செம கவர்ச்சி’ மீனாள் என எக்கச்சக்க 'சிம் கார்டு’களை ஒரே கைப்பேசியில் திணித்துஇருக்கி றார் இயக்குநர் தங்கர்பச்சான்.


மேலே கதைச் சுருக்கத்திலும் சரி, கதைமாந்தர் களிலும் சரி.... 'நடிகர்’ தங்கர் கேரக்டரேவந்திருக் காதே... ஆனால், படம் முழுக்க 'பட்டையைக் கிளப்புவதில்’ சாந்தனுவை ஓரங்கட்டி தகர அடி அடித்து இருக்கிறார் தங்கர். 

இந்தக் கைப்பேசியில் கவர்ச்சிக் கரகாட்டம், வட நாட்டு அழகிகளின் குலுக்கல் குத்து, சாந்தனு - இனியா இதழ் பச்சக், மீனாளுடன் அத்துமீறிய நெருக்கம் எனக் கவர்ச்சிக்கு எனத் தனி மெமரி  கார்டே திணித்து இருக்கும்  தங்கர், அதில் உச்சகட்ட உலுக்கலாக தானே ஜட்டி குளியல் தரிசனம் தருகிறார்! 


கிராமத்து இளைஞனாக அள வாக நடித்து இருக்கும் சாந்தனு வைப் பற்றி, 'அவன் கோபக் காரன்ய்யா’ என்று ஆரம்பத்தில் ஏக பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், இறுதி வரை ஒரு காமா சோமா வில்லனிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிறார் அந்தக் கோபக்காரன்.  தலைப்பு முக்கியத் துவம்கொண்ட கேரக்டரில்பாசக் கார அம்மாவாக ரேவதி அம்மாள் எவ்வளவு நெகிழவைத்து இருக்க வேண் டும்... ம்ஹூம். இதழ் முத்தம் தவிர இனியாவைப் பற்றி நினைவுகூர எதுவுமே இல்லை.


'ரொம்ப நல்லவராக’ வரும் குவாரி உரிமையாளர் அழகம் பெருமாளின் கேரக்டர் செம காமெடி. அவரைப் போலவே அனைத்து குவாரிக்காரர்களும் இருந்துவிட்டால் போலீஸுக்கு வேலையே இல்லை. வேலைக்குச் சென்று புருஷ னைக் காப்பாற்றும் கேரக்டரில் மீனாள்கச்சிதம். ஆனால், படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தங்கருடன் 'இறுக்கி முறுக்கி நெருங்கும்’ காட்சி களில் மீனாளுக்கே 'அதிகப் பங்கு’. இதனால் அவருடைய பாத்திரமே 'வேறு தொனி’யில் மாறுகிறதே!


கருத்து இல்லாமல் தங்கர் படமா? 'சார்னு வெள்ளைக்காரன்தான் கூப்பிடுவான். அய்யான்னு தமிழனுங்க கூப்பிடணும்’ என்று வகுப்பு எடுப் பதில் தொடங்கி ஏராளமான கருத்துக் குத்துக்களும் உண்டு. கதை, திரைக்கதை, காட்சிப்படுத்திய விதம், பாடல்கள் அனைத்தும் படத்தின் பலவீனப் பட்டியலில் இடம் பிடிக்க, கிஷோரின் எடிட்டிங்கும், ரோஹித் குல்கர்னியின் இசையும் அதற்குத் துணை நிற்கின்றன.


அம்மாவின் கைப்பேசி - நாட்  ரீச்சபிள்!

விகடன் விமர்சனம் மார்க் : அம்மாவின் கைப்பேசி - 39 ,போடா போடி -42 ,துப்பாக்கி -44 , அட்ராசக்க - 40,41,42 


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p92.jpg


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p93.jpg


நன்றி -விகடன் 

Wednesday, November 21, 2012

அஜ்மல் கசாப் - தூக்கு தண்டனை - விவாதங்கள்

கசாப் தூக்கு ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்? 
Posted Date : 11:44 (21/11/2012)Last updated : 12:47 (21/11/2012)
புதுடெல்லி: அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலேயே அஜ்மல்  கசாப் தூக்கிலிடப்படுவது ரகசியமாக வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர்  சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30  மணியளவில் புனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.இந்நிலையில் கசாப்  தூக்கிலிடப்படும் வரை அது குறித்த தகவல் வெளியில் கசியவிடாமல் ரகசியம்  காக்கப்பட்டது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்  குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்,"எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல்  இருப்பதற்காகதான், கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பையும் அரசு  வெளியிடாமல் ரகசியம் காத்தது.இதற்கான அடிப்படை காரணம் இதுதான்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி சித்திக் கொல்லப்பட்டதற்கு  பழிவாங்கும் வகையில் ஆகஸ்ட் 1 ல் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த  திட்டமிடப்பட்டது.எனினும்,சரியாக செயல்படாத காரணத்தால் வெடிகுண்டுகள்  வெடிக்கவில்லை.இதனால் பேராபத்து நீங்கியது.எனவே, கசாப் தூக்கிலிடப்படுவதை  தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக தான்  தகவல்கள் வெளியிடப்படவில்லை” என்றார்.
புதுடெல்லி: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட  தகவல் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்  குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், கசாப் தூக்கில் போட்டதை கடிதம் மூலம்  பாகிஸ்தானுக்கு தெரிவித்தது. ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.  இதனையடுத்து அத்தகவல் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டதாக ஷிண்டே தெரிவித்தார்.

கசாப்பை தூக்கிலிடப்பட்டதன் மூலம் , மும்பை தாக்குதல் வழக்கில் நீதித்துறையின்  உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
 கசாப் தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!

புதுடெல்லி: கசாப் தூக்கில் போடப்பட்டதை பா.ஜனதா வரவேற்றுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி  கூறுகையில்,"அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது தாமதமானாலும் வரவேற்க்கத்தக்கது.

தூக்கில் போட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு.நாட்டின் எதிரி  தண்டிக்கப்பட்டுள்ளார்” என கூறினார். 


மும்பை: அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம் என்றும்,  நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றும் மும்பை  தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகாம்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கசாப்பை தூக்கில் போட்டதன்  மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு அஞ்சலி  செலுத்தியுள்ளோம்.

கசாப்பை குற்றவாளி என நிருபித்து தூக்கு தண்டனை கிடைத்ததன் மூலம், நாம்  மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் எவ்வாறு ஈடுபட்டது என்பதை நிருபித்துள்ளோம்.  கசாபை தூக்கில் போட்டதன் மூலம் மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை இந்தியா  சகித்து கொள்ளாது என வெளிப்படுத்தியுள்ளோம்.குற்றவாளிகளை நீதி முன்னர்  நிறுத்துவோம் என்பதை நிரூபித்துள்ளோம்.இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம்” என்றார்.




நன்றி - விகடன்


புதுடில்லி: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கில் இடப்பட்டான். அவனது கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர், 26ம் தேதி, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையில் முடிவில், அவனுக்கு 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்ததுள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இம்மாதம் 8ம் தேதி நவம்பர் முதல் வாரத்தில் நிராகரித்தார். ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்த கசாப், புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டு தூக்கில் இடப்பட்டான். கசாப்பின் தூக்கு தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது சரியானதே என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரவேற்பு:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் தூக்கில் இடப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., கம்யூனிஸ்ட், தி.மு.க., உட்பட பல கட்சிகளும் தூக்கு தண்டனையை வரவேற்றுள்ளன. இதே போல், மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கசாப்பின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கசாப் வழக்கு: முக்கிய திருப்பங்கள்


2010 அக். 18: மரணதண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு செய்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. கசாப் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்.அக். 19: கோர்ட்டில் நேரடியாக ஆஜராக விரும்புவதாகவும், அமெரிக்காவுக்கு அனுப்புங்கள் என்றும் கசாப் கோபமாக தெரிவித்தான். ஒழுக்கமாக நடக்குமாறு கசாப்புக்கு நீதிபதி எச்சரிக்கை.அக். 21: கசாப் தனது வக்கீலிடம் கோர்ட்டுக்கு நேரடியாக வருவதாக மீண்டும் வலியுறுத்தினான்.
அக். 25: சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் 



இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கசாப் மற்றும் அபு இஸ்லாம் ஆகியோரின் பயங்கரவாத நடவடிக்கைகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
அக் 27: கசாபுக்கு சிறப்பு கோர்ட் வழங்கிய மரணதண்டனை சரிதான் என அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் கோர்ட்டில் வாதம்.


அக் 29: சிறப்பு கோர்ட்டில் கசாப் அடிக்கடி "பல்டி' அடித்து கோர்ட்டில் குழப்பம் நிகழ்த்தினான்.
நவ 22: கசாப் ஒரு பொய்யர், சதிதிட்டமிடுபவன் என அரசு வக்கீல் வாதம்.
நவ. 23: நீதிபதி மீண்டும் ஒருமுறை சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.
நவ. 24: கசாப் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டதை சிறப்பு கோர்ட் சிறிதளவு ஏற்றுக்கொண்டது தவறு என அரசு வக்கீல் வாதம்.
நவ. 25: கசாப் வக்கீல் அமின் சோல்கர் வாதத்தை தொடங்கினார். சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாதம்.
நவ. 30: "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல்' குற்றம் கசாப் மீது விதிக்கக்கூடாது என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 2: கசாப் சிறிய படகு மூலம் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை. சிறிய படகில் பத்து பேர் அமர்வதற்கு சாத்தியமில்லை என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 7: போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மற்றும் இரண்டு போலீசாரை தான் சுட்டுக் கொல்லவில்லை என கசாப் மறுப்பு. கசாப்பிடம் இருந்த புல்லட்டுக்கும், கர்கரேயிடம் இருந்து எடுக்கப்பட்ட புல்லட்டுக்கும் பொருத்தம் இல்லை என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 14: கசாப் இளைஞர் இல்லை என அவரது வக்கீல் வாதிட்டதை ஐகோர்ட் ஏற்க மறுப்பு. கசாப்பின் மனநிலையை ஆராய வேண்டும் என்ற கசாப் வக்கீலின் கோரிக்கையையும் ஐகோர்ட் ஏற்க மறுப்பு.
2011 ஜன. 5: சபாபுதின் அகமத் மற்றும் பகீம் அன்சாரி இருவரும் மும்பை தாக்குதலுக்கு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கூட்டு சதித்திட்டம் தீட்டியவர்கள் என அரசு வக்கீல் வாதம்.
ஜன. 6: பகீம் மும்பை தாக்குதல் வழக்கில் ஈடுபட்டதற்கு உரிய சாட்சியங்கள் இல்லை, மேலும் தாக்குதல் குறித்த வரைபடம் அபு இஸ்லாமின் பாக்கெட்டில் இருந்த எடுத்தது இல்லை என பகீம் வக்கில் ஐகோர்ட்டில் வாதம்.
ஜன. 7: பகீம் தவறான விபரங்களை கொடுத்து போலியான பாஸ்போர்ட் பெற்று பாகிஸ்தான் அரசை ஏமாற்றியுள்ளார் என அரசு வக்கீல் வாதம்.
ஜன. 10: பகீமால் வரையப்பட்ட மும்பை வரைபடத்தை சபாபுதீன், பயங்கரவாதி அபு இஸ்லாமுக்கு வழங்கினார் என அரசு வக்கீல் வாதம்.ஜன. 11: பயங்கரவாதி அபுசலீமுக்கு, பகீம் வரைபடம் கொடுத்தது சோடிக்கப்பட்ட குற்றம் என்பதை அரசு வக்கீல் மறுத்தார்.
ஜன. 13: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் சபாபுதீனுக்கு தொடர்பில்லை, அதற்கான ஆதாரமும் இல்லை என அவரது வக்கீல் இசாஸ் நக்வி வாதம்.ஜன. 17: வழக்கு விசாரணை முடிந்தது. பிப். 7க்கு ஒத்திவைப்பு.





பிப். 7: சில பணிகள் இருப்பதால் தீர்ப்பு 21ல் வெளியிடப்படும் என ஐகோர்ட் அறிவிப்பு.
பிப். 21: அஜ்மல் கசாபுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. சபாபுதீன் அகமத் மற்றும் பகீம் அன்சாரி ஆகியோரை கோர்ட் விடுதலை செய்தது.
2012 நவ.5: கசாப் மீதான கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
நவ.19: மும்பை ஆர்தர்ரோடு சிறையிலிருந்த கசாப், புனேயில் உள்ள எர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
நவ.21: காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.


எத்தனை பேருக்கு தூக்கு

1983ம் ஆண்டு முதல், மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதிக்கிறது. பயங்கரவாத செயல்கள், குற்றங்களில் இருந்து தப்பிக்க கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது, தற்கொலைக்கு உடந்தையாக இருப்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, நாட்டிற்கு எதிராக செயல்படுவது, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிற்காகவும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பின், இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சர்ச்சைகுரியதாகவே இருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் நாட்டில் இதுவரை 52 பேர் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975க்கும் 1991க்கும் இடை யே 40 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2007ல் 100 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2001ல் 33 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்:

* 2012 நவ.,21ல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
* 2005 ஏப்.,27ல் கடத்தல், கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்டதற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான்.
* 2004 ஆக.,14ல் பாலியல் குற்றத்திற்காக தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான்.

நன்றி - தினமலர்



புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.


பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும் முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.


முன்னதாக கடந்த 12ம் தேதியே கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.


இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,


தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.


தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,


தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.


காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது. அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.
மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.




 Kasab Died Dengue Hanging An Eyewash

கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா?

 

புனே: தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.


26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.

இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,


1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?


2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?


3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.


4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?


கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப் தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.



கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்...



இஸ்லாமாபாத்: கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றன. அவனது தூக்கு தண்டனை குறித்து பாகிஸ்தான் டிவியின் இணையதளத்தில் ஒரு செய்தி கூட இல்லை.


மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகி்ஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்த இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகள் மேல் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.


ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ இது குறித்து அவ்வளவாக செய்தி வெளியிடவில்லை. பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான ஜியோ டிவியின் இணையதளத்தில் கசாபை தீவிரவாதி என்று குறிப்பிடாமல் மும்பை தாக்குதல் கன்மேனை இந்தியா தூக்கிலிட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.


"அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்: இந்திய ஊடகங்கள்" என்று பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அஜ்மல் அமிர் கசாபின் கருணை மனுவை அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை இந்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான் என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.


தி நியூஸ் இன்டர்நேஷனலில், இந்தியாவில் அஜ்மல் கசாப் சாகும்வரை தூக்கிலிடப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.


தி நேஷன் இணையதளத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மும்பை தாக்குதல் கன்மேன் கசாப் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தி உள்ளது. தி டெய்லி டைம்ஸ் தனது இணையதளத்தில் இது குறித்து எந்த முக்கியத்துவம் வாயந்த செய்தியையும் வெளியிடவில்லை. பாகிஸ்தானின் அதிகாரப்பூரவ ஊடகமான பிடிவியின் இணையதளத்தில் கசாப் தூக்கு குறித்து ஒரு செய்தி கூட இல்லை.


பிபிசியில் மும்பை தாக்குதல் கன்மேன் தூக்கிலிடப்பட்டான் என்பது தான் அதிகம் ஷேர் செய்யப்பட்ட செய்தி ஆகும். இன்று நண்பகல் வரை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் கசாப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை. மேலும் நியூயார்க் டைம்ஸ் காலை 11.30 மணிக்கு தான் கசாப் தூக்கு பற்றி ஒரேயொரு செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - தட்ஸ் தமிழ் , புதிய தலைமுறை

2000 வது பதிவு - திருப்பூர் - ஆஸ்திரேலியா மினி ட்வீட்டப்

நால்வர் அணி

கோவை சதீஷ் , கானா ப்ரபா, சி.பி , ராஜ நாயகம் சார் 

கானா ப்ரபாவை பிளாகரா, ட்விட்டரா கொஞ்ச நாளா தான் பழக்கம். ஆனாலும்  நீண்ட நாள் நண்பர் போல் அவர் மேல் ஈர்ப்பு வர 3 காரணங்கள் . முதல் காரணம் அவர் ஒரு ஈழத்தமிழர். அவரை நேரில் சந்திச்சா அங்கே உண்மை நிலவரம் என்ன போன்ற நாம் அறியாத வரலாற்று உண்மைகள் அறியலாம்.  2 வது காரணம் யாருடனும் அவர் சண்டை போட்டு பார்த்ததே இல்லை, எல்லோருடனும் இணக்கமாக இருக்கும் கலகலப்பு பிரியர் . மூணாவது காரணம் முக்கியம் , இதுல கொஞ்சம் சுய  நலம். அதாவது என் சினிமா விமர்சனத்தில் பலர் கிண்டல் பண்ணுவது - இயக்குநருக்கு சில கேள்விகள்.அது பொதுவா அவங்க படிக்க எழுதுவது அல்ல, மக்கள் ரசிக்க எழுதுவது. ஆனால் பலரும் அது தேவையற்றது என சொல்லி வந்த வேலையில் இவர் தான் முதன் முதலாக அதை ரசித்து முன்னிலைப்படுத்தினார்.


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியா பணி ஆற்றி வருகிறார், நம்ம கோமாளி கோபி செல்வா கூட ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற லட்சியம் உடையவர் தான்.இவரது கடுமையான உழைப்பு பற்றி நான் எப்போ அறிந்தேன் எனில் மவுன ராகம் படத்தின் பி ஜி எம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாய் இவர் அலசியது.அதுவரை இளையராஜாவின் இசை ரசிகனாக இருந்தவன் அப்பதிவு படித்த பின் நுணுக்கமாய் பலவற்றை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.பின்னணி இசை பற்றிய பல அரிய தகவல்கள் , கலெக்‌ஷன்கள் கிடைக்கப்பெற்றேன்.


அப்பேற்பட்டவர் சிட்னியில் இருந்து தனது தாயகமான யாழ்ப்பாணம் வர்றதா சொன்னதும் சந்திக்க உறுதி பூண்டேன்.அவர் தமிழகம் வந்து கோவை , கொச்சின் வர்றதாகவும் வழியில் ஈரோடும் வருவதாக அவரது 12 அத்தை பெண்கள் மேலும் சத்தியம் செய்திருந்தார்.ஆனா பாருங்க இடையில் என்ன ந்டந்ததோ  திடீர் என டாக்டர் ராம்தாஸ் போல் பல்டி அடிச்சுட்டார். ஈரோடு புரோகிராம் கேன்சல். கோவை , அல்லது திருப்பூரில் உனக்கு இஷ்டம்னா வந்து என்னை பார் அப்டின்னுட்டார்.


 ஒரு பிரபல பதிவர்னா ஒரு இது இருக்கனும் இல்லையா? அதனால அதை எல்லாம் நான் சகிச்சுக்கிட்டேன் .ஈரோடு டூ கோவை 100 கிமீ ஈரோடு டூ திருப்பூர்  42 கிமீ என்பதால் திருப்பூரில் சந்திக்க முடிவாச்சு . சென்னிமலையில் இருந்து காலை 6 மணிக்கு பஸ் ஏறி ஈங்கூர் போனேன். கோவை பாசஞ்சர் ஈரோட்டில் 7 மணிக்கு அது ஈங்கூர் வர 7.30 ஆகும். டிக்கெட் எடுத்து வெயிட்டிங்க்.. ஈங்கூர் டூ திருப்பூர்  32 கிமீ அதுக்கு ரயில் டிக்கெட் ஜஸ்ட் அஞ்சு ரூபாதான் , அதே எக்ஸ்பிரஸ்னா 28 ரூபா , ரிசர்வ்ல வந்தா 46 ரூபா .


ஹோம் மினிஸ்டர் கால் .பம்மும் பிரபா

ஹோம் மினிஸ்டரிடம் பம்மும் கானா 


காலை 8.40 க்கு திருப்பூர் போய் சேர்ந்தேன். ஆகாய மனிதன் என பிளாக்கிலும், ஒன்லி 1 என ட்விட்டரிலும் அக்கவுண்ட் வெச்சிருக்கும் அண்ணன் யுவராஜ் ரெடியாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவா நமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தானே?


சரவண பவன் ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டோம் .அண்ணன் 2 இட்லிதான் சாப்பிட்டார் ( ஹன்சிகா இட்லி ) நான் வழக்கமா 3 ரோஸ்ட் ,  ஒரு பொங்கல் சாப்பிடும் ஆளாக இருந்தாலும் கண்ணு பட்டுடக்கூடாது என்பதால் ஒரே ஒரு ரவா ரோஸ்ட்டும் , ஒரு பொங்கலும் மட்டும் சாப்ப்பிட்டுட்டு  டைம் பார்த்தா காலை 9 மணி . அண்ணன் கானாப்ரபா 10 மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார் .



 ஒரு மணி நேரம் வெட்டி அரட்டை அடித்தோம் .என் மொபைல் சார்ஜ் அங்கே ஹோட்டல்லயே போட்டுக்கிட்டோம் . சார்ஜ் போட்டுக்குடுத்த ரிசப்ஷனிஸ்ட் கோமதிக்கு கோடானு கோடி நன்றி ;-))

எம் ஜி ஆர் மாதிரி அட்டகாசமாய் காரில் வந்து இறங்கினார்  அண்ணன் கானாப்ரபா . ஹிந்திப்பட ஹீரோ மாதிரி முகம். ஐ டெக்ஸ் மையின் கலரில் கன்னங்கரேல் என்ற முடி . 38 வயசாகியும்  ஒரு நரை முடி கூட இல்லை என்பது பொறாமை தருவதாகவும், ஏமாற்ற மாகவும் இருந்தது,. ஏன்னா எனக்கு 5 வருஷம் முன்னாடியே அதாவது 25 வயசுலயே நரை முடி வந்துடுச்சு  ( டேய் நாயே அது இள நரை இல்லை, கிழ நரை )



ராஜநாயகம் சார் தன் திரைத்துறை அனுபவங்களை நவரசத்துடன் விளக்குகிறார்

ராஜ நாயகம் சார்   கோவை சதீஷ் , கானா ப்ரபா,  ஆகாய மனிதன் யுவராஜ்

காரை விட்டு இரங்கும்போதே அவருக்கு ரசிகையிடம் இருந்து ஃபோன் . ( ஏன்னா அண்ணன் வெட்கச்சிரிப்போட பம்மிக்கிட்டே பேசினாரு )கூட அவருடன் வந்தது கோவை சதீஷ் ட்விட்டர்ல சே சதீஷ் . ட்விட்டர்ல பல சீரியஸ் கருத்துக்கள் எல்லாம் போடுவாரு . ஆனா ஆள் நேரில் செம ஜாலி டைப்பாக இருந்தார்.


 அருகாமையில் உள்ள பார்க்குக்கு போனோம் .மூவரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் . இலங்கைப்பிரச்சனை  , எம் ஜிஆர் ஆதரவு  , ஜெயின் கமிஷன் என விவாதம் வளர்ந்தது .


 கானாப்ரபாவை பேசவே விடாமல் கோவை சதீஷ் அடிக்கடி இடை மறித்து தன் விவாதத்தை சூடாக முன் வைத்தார் .


 அடுத்து வந்தவர்  சினிமாத்துறையில் உதவி  இயக்குநராகப்பணி ஆற்றிய ராஜநாயகம் சார். வாட் எ மேன்? மிமிக்ரி , மோனோ ஏக்டிங்க்  என ஆள் நவரச நடிப்பையும் , நாகேஷின் பாடி லேங்குவேஜையும் சந்திர பாபுவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார். கொங்கு மண்டலத்தில் இருந்ப்பவர்கள் அவசியம் அவரை சந்திச்சுடுங்க.. அரிதான மனிதர் , சுவராஸ்யமான பொக்கிஷ தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கு.



கே பாக்யராஜ் அவர்களிடம் அவர் ராசுக்குட்டி படத்தில் பணி ஆற்றிய சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார் . திரை உலகின் கறுப்புப்பக்கங்கள் , நீலப்பக்கங்கள் , பச்சைப்பக்கங்கள் அனைத்தும் பகிர்ந்தார் . 


 நீங்க ஏன் சினி ஃபீல்டுல சைன் பண்ணாம இங்கே வந்துட்டீங்க?


 ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். என்னை மாதிரி ஆட்களுக்கு சி நி ஃபீல்டு ஒத்து வர்லை


 பாக்யராஜ் சார்  உங்களுக்கு சம்பள விஷயத்துல நல்லா கவனிச்சுக்கிட்டரா?


 அதுல எல்லாம் குறை வைக்கலை..

 இல்லை, எதுக்கு கேட்கறேன்னா பாக்யா வார இதழ்ல் படைப்பாளிகளூக்கு சன்மானம் தர்றதில்லை, விசாரிச்சதுல வேட்டியை மடிச்சுக்கட்டு பட தோல்வியின் காரணமா ஏராளமாம்ன நட்டத்தை அவர் சந்திச்சார்னும் அதனால தான் சன்மானம் தர முடியலைன்னு சொன்னாங்க. அவர் வெற்றிகொடி நாட்டிய தருணங்களில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாரா?


 அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட இருந்தவங்க பலருக்கும் என்னை பிடிக்கலை,. பல காலம் ஆபீஸ் பாயாக இருந்து படிப்படியாக உதவி இயக்குநர் ரேஞ்சுக்கு வந்தவங்களால டக்னு மேலே  வந்த என்னை பிடிக்காம போயிடுச்சு


கானாப்ரபாவிடம் தனது 365 காதல் கடிதங்கள் நகல் அளிக்கும் ராஜநாயகம் சார்
சத்திய மூர்த்தி சார் ,பரிசல் , ராஜ நாயகம் சார்   , ஆகாய மனிதன் யுவராஜ்,கானாப்ரபா,   கோவை சதீஷ்

அவர் கூட ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.


 அடுத்து பரிசலுக்கு ஃபோனை போட்டு வர்லியா?னு கேட்டோம். 12 மணிக்கு கிளம்பி வர்றதா சொன்னார் . யூ ட்யூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் அவினாசி இட்ஸ் பிரசாந்த்க்கும் தகவல் சொல்லியாச்சு .



தனியா அனுப்பினா எங்கே போவாரோ என்றோ அல்லது தற்செயலாகவோ பரிசல் தன் இரு மகள்களின் கண்காணிப்பில் வந்தார் .  பைக்கில் வந்திருந்தார்.


 அவர் வந்ததும் விவாதம் சூடு பிடித்தது . ராஜன் பிரச்சனை குறித்து விரிவாக விளக்கினார். கானாப்ரபா ராஜனுடன் ஃபோனில் நலம் விசாரித்தார்.


பின்  பரிசல் ( இவர் பல வருடங்களுக்கு முன்  உல்லாச ஊஞ்சல் , உங்கள் ஜுனியர் மாத இதழ்களில் கே பி கிருஷ்ணகுமார் , உத்தம பாளையம் , திருப்பூர் என்ற பெயரில் கவிதை எழுதி வரும்போதே  பழக்கம் ) ஆஃபீஸ் வேலையாக தன் கம்பெனிக்கு தொழிலாளர்களை கமிஷன் பேஸில் அழைத்து வர ஒரிசா சென்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

அது 'கே.பி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணாபுரம் இல்லீன்னா உடுமலைப்பேட்டை இல்லீன்னா திருப்பூர் -ன்னு வரும்.   - பரிசல் பதில் ;-))


  ரத்த தானம் ,  உடல் தானம் , சில கேர்ள் ஃபிரண்ட்ஸ்களுக்கு முத்த தானம் என எல்லா தானமும் செய்த அவர் இணைய உலகில் முதன்  முதலாக லேப்டாப் தானம் செய்த சுவராஸ்யமான சம்பவத்தை திரைக்கதையுடன் விளக்கினார். அவர் கதை சொன்ன முறை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்றே உணர்வைத்தந்தது .



சத்திய மூர்த்தி என்னும் ட்விட்டர் நண்பர் வந்தார். அவர் அறிமுகம் அப்போதுதான் . என்ன ஆச்சரியம் என்றால் அவர் ஆகாய மனிதன் யுவராஹின் அப்பாவின் நண்பர். அங்கே தான் அறிமுகத்தில் தெரிந்தது. முகவரி படத்தில் பால குமாரன் எழுதிய வசனத்தை ரகுவரன் சொன்னது நினைவு வந்தது  - இந்த உலகம் ரொம்ப சின்னது ,இங்கே நல்லவங்க சந்திச்சே ஆகனும் “


 அப்புறம் 1 மணி வரை பேசிக்கிட்டு இருந்தோம் . ஹோம் மினிஸ்டரிடம் இருந்து ஃபோன் வரும்போது மட்டும்  கானாப்ரபா பம்மிக்கொண்டே தனியே போய் பேசி வந்தார் .

 ஆனானப்பட்ட பரிசலே தன் மனைவியிடம் இருந்து ஃபோன் வந்த போது பம்மியது செம காமெடியாக இருந்தது, வீட்டுக்கு வீடு  வாசப்படி .


 பின் பரிசல் விடை பெற்றார்.  ராஜ நாயகம் சார் கிளம்பினார். அனைவருக்கும் கானாப்ரபா 18 வகை இனிப்புகள் கொண்ட கோவையில் வாங்கிய ஸ்வீட் பாக்சை  பரிசாக அளித்தார். எல்லா ஸ்வீட்டும் இருந்துது, ஆனா அல்வா மட்டும் இல்லை , கேட்டதுக்கு “ என்னய்யா விபரம் தெரியாத ஆளா இருக்கே..  அல்வான்னாலே அது பொண்ணுங்களுக்கு தர்றதுக்குத்தானே? என்றார்.


எங்கப்பா சின்ன வயசுல சினிமாப்ரியராக இருந்தார், நாலணாவுக்கு விற்கும் சினிமாப்பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அபூர்வமான கலெக்சன். 100 புக்ஸ் கொண்ட பைண்டிங்க் புக்ஸாக 10 புக்ஸ் மொத்தம் 1000 பாட்டுப்புத்தகங்கள் இருந்தன. அவை 1960 - 1970 இல் வந்த படங்கள்.


 பேசிக்கலாக கானாப்ரபா பாடல் , இசை ரசிகர் என்பதால் அவருக்கு பாட்டுப்புத்தகங்கள் பரிசாக அளிக்க நினைத்தேன். ஆனால் மனசில் ஒரு தயக்கம். பழைய பாட்டுபுக் என அவர் ஏதாவது நினைப்பாரா? என . அப்படி ஏதும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். எனக்கு மிக்க மகிழ்ச்சி , எங்கப்பாவின் அபூர்வ கலெக்‌ஷன்  சிட்னியில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை .


பின் லஞ்ச் சாப்பிட   அவினாசி ரோட்டில் உள்ள  சரவண பவன் போனோம். சாப்பாடு காலி,. வெரைட்டி மீல்ஸ் , டிஃபன் அயிட்டம்தான் . வெஜிடபிள் ஃபிரைடு ரைஸ் , தக்காளி சாதம் , தயிர் சாதம்  ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .

 ட்வீட் லாங்கர் சாப்பாடு என கமெண்ட் போட்டு அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் கானாப்ரபா போட்டார்.


 அப்போ பிரசாந்த் வந்தார். ஆள்  ட்விட்டர் டி பி யில் அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருந்தாலும் நேரில் தாதா போல் ஆஜானுபாவத்துடன் இருந்தார். அவர் உள்ளங்கை முறம் போல் இருந்தது , ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் . அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் .


 பிரியும் நேரம் வந்தது . எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு நானும் யுவராஜும்  திருப்பூர் ரயில் நிலையம் வந்தோம் . அப்போ  மாலை 3. 4 மணிக்கு ரயில் . உள்ளே வந்து ஒரு மணி நேரம் கம்பெனி குடுத்தார். பின் ரயில் வந்ததும் கிளம் பியாச்சு


 அனைவருக்கும் நன்றி !!!