Saturday, June 25, 2011

பழ வகையில் பல வகை சமையல் செய்வது எப்படி?(வீட்டில் சமைக்கும் சில பெண்களுக்கு மட்டும் )

 ஃப்ரூட்ஸ் சமையல்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டும்தான். அதனால்தான்... காட்டு வாழ்க்கை நடத்திய வேடர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்... இன்றைக்கும்கூட காட்டில் பழங்களைத் தின்றே உயிர் வாழும் விலங்கு மற்றும் பறவைகளை எடுத்துக் கொள்ளுங்  களேன்... அவையெல்லாம் எத்தனை அழகாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

 
உடலின் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி என பல வழிகளிலும் உதவும் பழங்கள்... என்றென்றும் இளமையையும் தரக்கூடிய அற்புத வைத்தியரும்கூட!

அத்தகைய பழங்களில் 30 வகை ரெசிபிகளை அசத்தலாக செய்து காட்டியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. அவை அனைத்தும் செஃப் ரஜினியின் கை வண்ணத்தில் அழகழகாக இங்கே இடம் பிடிக்கின்றன.

பழ ரெசிபிகளை செய்து கொடுத்து ஃபேமிலியை பரவசப்படுத்துங்கள்!

1. பலே பருப்பு வடை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் சிறிது உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், 2 பல் பூண்டு, உப்பு, நான்கு தக்காளி சேர்த்து அரைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். பருப்பு வடையினால் ஏற்படும் வாயுத் தொல்லை, இந்த வடையைச் சாப்பிடும்போது ஏற்படாது.

2. சுலபமான சிப்ஸ் 

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டங்களாக சீவி, உப்பு சேர்த்து வேக வைத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி டப்பாவில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது மிளகாய் தூள் சேர்த்து சிப்ஸாக பொரித்துக் கொள்ளலாம்.

3. கொட்டு ரசம் 

மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, அரைத்தப் பொடியை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால்... சட்டென சுவையான 'கொட்டு ரசம்' ரெடி!

4. இஞ்சி பச்சடி 

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, தயிருடன் சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டினால் இஞ்சி பச்சடி ரெடி! ஜீரணத்துக்கும் மிகவும் நல்லது.


5. பலா கறி 

பலாக் கொட்டையை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பலாக் கொட்டை துண்டுகளை போடவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, தேங்காய், மாங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

6.  பலாப்பழ சக்கவரட்டி 

தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:  இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.


7. பைனாப்பிள் போளி 

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம், நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவில் கேசரிப்பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,  சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவியும் போளி சுடலாம். ஆப்பிள், வாழை போன்ற விருப்பப்பட்ட பழங்களிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

8. மாம்பழ மில்க் ஷேக் 

தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: மாம்பழத்தை தோல்சீவி மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அரைத்த மாம்பழம் விழுது, சர்க்கரை ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.

9.தர்பூசணி தோசை 

தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும். மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

10. பழ வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!

11.  சப்போட்டா கொழுக்கட்டை 

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, வெல்லம் - 100 கிராம், சப்போட்டா - 4, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பில்லாமல் பழத்தை வைத்து செய்யும் இந்தக் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும். எல்லாப்பழங்களிலும் இதேபோல் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

 12. ஆப்பிள் பர்பி 

தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.

13.  வெரைட்டி ஃப்ரூட் இட்லி 

தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பழங்களை பொடியாக நறுக்கவும். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து மாம்பழத்துண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை கலந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.

14.  பப்பாளி அப்பம் 

தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். தேங்காயைத் துருவி, வெல்லம், பப்பாளித் துண்டுகள் சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், மாவுக் கலவை சேர்த்து நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் நெய் தடவி அப்பமாக ஊற்றவும். ஒரு குச்சியின் உதவியால் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.

15. வெரைட்டி ஃப்ரூட் சுகியன் 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.

16.  ஸ்ட்ராபெர்ரி ஜாம் 

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.

 17. வாழைப்பழ அல்வா 

தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரிப்பவுடர் சேர்த்து, நெய் விட்டு முந்திரிப்பருப்பு போட்டு நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

18. பழ ஊறுகாய் 

தேவையானவை: கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள், பேரிக்காய், ப்ளம்ஸ், கிவிப் பழம் - தலா 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், கிவிப் பழத்தை பொடியாக நறுக்கவும். ஆப்பிள், பேரிக்காயின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப்ளம்ஸ் விதையை நீக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்து£ள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எண்ணெயே சேர்க்காமல் பழங்களை வைத்தே ஈசியாக இந்த ஊறுகாய் செய்யலாம். பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

19.  பழ பச்சடி 

தேவையானவை: வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, கருப்பு திராட்சை - 200 கிராம், தக்காளி - 2, சர்க்கரை - 100 கிராம், செர்ரிப் பழம் - 6.
செய்முறை: வாழைப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். சிறிது வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, செர்ரிப் பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: திருமணங்களில் இந்தப் பழப்பச்சடிக்குதான் முதலிடம். விருப்பமான பழங்களிலும் இந்தப் பச்சடியை செய்து கொள்ளலாம்.


20.  மில்க் ஃப்ரூட் தூத்பேடா 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதாமை ஊற வைத்து முந்திரி சேர்த்து அரைத்து, சர்க்கரை ஏலக்காய்தூள் சேர்த்து கொதிக்கும் பால் விழுதுடன் கலந்து, கெட்டியாக கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். நன்றாக பிசைந்து சிறிய வட்டமாக தட்டி வைக்கவும்.

குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.

21. சப்போட்டா சத்துமாவு உருண்டை 

தேவையானவை:  சப்போட்டா - 4, கோதுமை, தினை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சர்க்கரை, சோள மாவு - தலா 100 கிராம், முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சப்போட்டாக்களை தோல் உரித்து விதை நீக்கவும். கோதுமை, தினை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து சர்க்கரை சேர்த்து மெஷினில் நைசாக அரைக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து, சப்போட்டா பழம், சோள மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். வறுத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: சத்தான, பழச்சுவையுடன் கூடிய உருண்டை இது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

22. பழ பாசந்தி 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, செர்ரிப் பழம் - 4, உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். பாலை பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கி ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

குறிப்பு: பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.

 23.வாழைப்பழ கேசரி 

தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சிறிது நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நெய் விட்டு வதக்கவும். பாலைக்காய்ச்சி வறுத்த ரவையை போட்டு கிளறி, வதக்கிய வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி, இறக்கவும்.

குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

24. மாம்பழ மோர்க்குழம்பு 

தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும். இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.

25. மிக்ஸ்டு ஃப்ரூட் இடியாப்பம் 

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய  கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், உரித்து கொட்டை நீக்கிய கமலா ஆரஞ்சு சுளை - தலா 100 கிராம்.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு போல் நன்றாக வழுவழுவென அரைக்கவும். அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் மாவைப் போட்டு கெட்டியாக கிளறி, உருண்டைகளாக உருட்டவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போடவும். வெந்ததும் உருண்டைகள் மேல் எழும்பி வரும். அவற்றை தனியே எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும். இதனுடன் மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், கமலா ஆரஞ்சு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: வழக்கமான இடியாப்பம் போல் செய்து பழங்களுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

26. ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
செய்முறை: ஊறிய அரிசியுடன் தேங்காயை துருவி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி வேக வைத்த உருண்டைகளைப் போட்டு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், சப்போட்டா சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

27. ஃப்ரூட்ஸ் கோஸ்மல்லி 

தேவையானவை: லிச்சிப் பழம் - 10, பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பேரிக்காய், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பேரிக்காய், லிச்சி, ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உப்பு சேர்த்து மேலாக எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலக்கவும்.

 
குறிப்பு: பாசிப்பருப்புக்கு பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கடலைப்பருப்பு ஊற வைத்து சிறிது வேக வைத்தும் செய்யலாம். திருமண சாப்பாட்டு பந்தியில் கோஸ்மல்லிக்கு தனி இடம் உண்டு.

28.பலாப்பழ பாயசம் 

தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.
செய்முறை: பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி,  ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

 29.ஃப்ரூட் பொங்கல் 

தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்கு பால், நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்றாகக் குழைத்து, கல்கண்டு, மீதமுள்ள பால், வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா சேர்த்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்

30.மல்டி ஃப்ரூட் லஸ்ஸி 

தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.
செய்முறை: திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

31. ஆப்பிள் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஆப்பிள், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக் கவும்.

குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.

32.  ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, பைனாப்பிள் இவற்றை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் போட்டு மிருதுவாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.

 33. ஃப்ரூட் சூப்

தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியின் தோல், விதைகளை நீக்கி சுளையை தனியாக எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி அப்படியே பருகலாம்.

குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.

34. கிவி சட்னி

தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சித் தோல் சீவி, கிவிப் பழத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த பழ விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.

35. சாபுதானா ஃப்ரூட் உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: ஆப்பிள், மாதுளை முத்து, பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, ஜவ்வரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்து மேலாக உப்பு மாவில் தூவி நன்றாகக்  கிளறவும்.

குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.


நன்றி - அவள் விகடன்

Friday, June 24, 2011

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)

 

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..
( நீர் மனுஷன்)ஏன்னா எல்லாரும் படிக்கனும்கறதுகுத்தான் நாம் எழுதறோம்.. அதை யார் பேஸ்ட் பண்ணி போட்டா என்ன? மொத்தத்துல நம்ம படைப்பு யாருக்காவது யூஸ் ஆனா சரி.. (அப்போ என் படைப்பு யாருக்கும் யூஸ் இல்லைங்கறீங்களா? அவ்வ்வ்வ்)என் பிளாக்ல கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணி வெச்சுட்டேன்.. (ஏன்,அது என்ன குணச்சித்திர நடிகையா?மூடி மூடி வைக்க?)அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..




2. வலைச்சரம் சீனா -அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? அவரை தலைமை ஏற்று நடத்திக்கொடுக்கனும்னு உணவு உலகம் அண்ணன் பக்கத்துல உட்கார வெச்சுட்டோமில்ல.. “ நான் 2 வருடங்களாகத்தான் இந்த பொறுப்பேற்று இருக்கேன்.. வாரா வாரம் ஒரு பதிவரை எழுத வெச்சு மெயிண்டெயின் பண்றது சிரமமா இருக்கு.. ஆனா ஆத்ம திருப்திக்காக இதை பண்றேன்..புதிதாக எழுத வருபவர்களை,ஊக்குவிப்பதே என் நோக்கம்.. “





3.  பலா பட்டறை சங்கர்  - வந்த பதிவர்கள்லயே செம பர்சனாலிட்டி அண்ணன் தான்.. செம ஹேண்ட்ஸம்.. கந்த சாமி பட விக்ரம் மாதிரி இருந்தார்.. ஆர்ப்பாட்டமா ஆள் இருந்தாலும் அவரது பேச்சு ,குரல், த்வனி எல்லாம் அமைதியாவும், அவரது பக்குவத்தை ,அனுபவத்தை எடுத்து உரைப்பதாவும் இருந்தது.. 

”உண்மைத்தமிழன் உட்பட பலர் பத்திரிக்கைகளில் வந்த மேட்டர்களை பதிவா போடறாங்க.. சிலர் அதை காப்பி பேஸ்ட் என சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை அது தேவை தான். ஏன்னா புக் ஒரு வாரம் போனா அழிஞ்சுடும்,ஆனா பதிவு ரெக்கார்டா இருக்கும், நாளைக்கே அந்த டைட்டில் குடுத்து கூகுள்ல தேடுனா கிடைக்கும், நம்ம அவசரத்துக்கு உதவும்..

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது.. அதனால எழுதுவதை ஒரு பொழுது போக்கா வெச்சுக்கிட்டு  பொழப்பைப்பாருங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).. இப்போ எல்லாரும் கூகுள்  பஸ்ல கமெண்ட் போட ஆர்வமா இருக்காங்க ,பதிவு எழுதறதுல ஆர்வம் குறைஞ்சிண்டிருக்கு. இது மாறனும்.. . இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.




4. பெயர் சொல்ல விருப்பமில்லை - ஹா ஹா இவரோட காமெடி.. இவருக்கு சப்போஸ் ஒரு லவ்வர் இருந்தா .....

” டியர் .. நான் இப்போ 3 மாசம்.. முழுகாம இருக்கேன்.. இப்போவாவது உங்க பெயர் சொல்லுங்க..  

சாரி.. எனக்கு  என் பெயர் சொல்ல விருப்பமில்லை, உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வும் இஷ்டம் இல்லை.. அப்டின்னு அல்வா கொடுத்திருப்பாரோ..?

“ நான்  தளத்துல கணிதம் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டேன்.. எடுபடலை.. 

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..



5. இம்சை அரசன் பாபு.. - இவர் ஆள் பார்க்க தாதா மாதிரி இருந்தாலும் பச்ச மண்ணுய்யா.. இவரோட கிராமியம் கலந்த தமிழை கேட்பவர்கள் இவரை மறக்கவே முடியாது.. லோகோவை வைத்து இவர் முரடானவர்னு யாராவது நினைச்சா ஏமாந்தே போனீங்க.. செம சாஃப்ட் டைப்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. ஹி ஹி ) 

” நான் சீரியஸ் பதிவு எப்பவாவதுதான் எழுதறேன்... (பொதுவா நீங்க பதிவே எப்பாவாவதுதானே எழுதறீங்க? அவ்வ்வ்வ்வ்)என் பொண்ணுகிட்டே நான் வாங்குன பல்புகளை மையமா வெச்சுத்தான் நான் கதை எழுதறேன்.. (மய்யமா வெச்சு .. மய்யம்..... கமல் ரசிகரோ..?)

 பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க  பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......




6. தமிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்.. (அப்போ குஷ்பூக்கும் இவருக்கும் என்ன முறை?ன்னு கேட்கக்கூடாது)இவர் வர்ற வழில பஸ்ல மாட்டிக்கிட்டாராம். பஸ் பஞ்சராம்.. அதான் வர லேட்னார்.. ( பஸ்ல மாட்னாரா? பஸ்ல  வந்த மிஸ் பிக்கப் ஆகி அவரை விரட்னாரா ந்னு சரியா தெரில,, )




7. வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்னன் - விக்ரம் படத்துல சத்யராஜ்  தகடு எங்கேடா.. தகடு தகடு அப்டினு கேட்பாரே.. அந்த ஆள் மாதிரியே இவரு இருந்தாரு.. அவர் கன்னத்துல பெரிய தழும்பு.. இவர் உடம்பெல்லாம் கொழுப்பு..  (செம ஜாலி பார்ட்டி.. ) யோவ்.. ஏய்யா கூலிங்க் க்ளாஸ்ல வர்லை?  என கேட்டு கலாய்த்தோம்..  இவரு சரியா பேசலை.. கேட்டதுக்கு சாரி.. என் லவ்வர் கூடவே சரியா பேசமாட்டேன்னாரு.. (கூச்ச சுபாவமாம்)




8. வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது.இங்கே கலந்துக்கிட்ட பதிவர்களிலேயே  சீனியர் பதிவர்  இவர் தான்.. ( அப்போ ஜூனியர் பதிவர் ? வேற யாரு நான் தான் ஹி ஹி ) ராமலட்சுமி மேடம் யார்னா பஸ்ல இப்போ சமீப காலமா கலக்கறவங்க.. ஃபோட்டோ போட்டி நடத்தும் ஒரே பதிவர்.. செம கலக்கல் ஃபோட்டோஸ் இவர் தளத்துல இருக்கும்.. சுடறவங்க போய் சுட்டுக்குங்க.. ஹி ஹி .. 



9. ரசிகன் ஷர்புதின்.. _ இவர் சரியான லொள்ளூ பார்ட்டி.. எல்லார் தளத்துக்கும் போய் அவங்க பிளாக்கிற்கு மார்க் போடுவார்.. ஆனானப்பட்ட கேபிள் சங்கர்க்கே 50 மார்க் தானாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த பழக்கம் அவருக்கு எப்படி வந்ததுன்னா.. 

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா 






10. ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் - இவர் சம்சாரத்தோட வந்திருந்தார்

( அவரோட சம்சாரம் தான் ) ஆன்மீகப்பதிவர்... ரொம்ப அமைதியா இருந்தாரு.. அவர் மிசஸ் அவரை விட அமைதி.. ரொம்ப குடுத்து வெச்சவர் சார் நீங்கன்னேன்.. நைஸா , “தம்பி.. அண்ணி வீட்ல புலி வெளில எலி “ன்னார்.. சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 




11. லேப்டாப் மனோ..  - இவரை தெரியதவங்க யார் இருக்க முடியும்?லேட்டா தான் வந்தார்.. கூடவே ஒரு பாடிகார்டை கூட்டிட்டு வந்தார்.. பி ஏ அப்டின்னு பில்டப் குடுத்தார்.. விசாரிச்சா.. அவரோட மச்சினராம்... மச்சினியோட சுத்தற ஆள் எதுக்கு மச்சினரோட சுத்தனும்னு பார்த்தா மனோவோட சம்சாரம் சந்தேகப்பேர்வழியாம் (அவருமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மனோ என்ன பண்றார்னு கண்காணிக்க அனுப்பி இருக்காங்க.. ( என்ன பண்ணுவாரு.. தில்லு முல்லு தான் ) டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா  அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. 




12. வெறும்பய ஜெயந்த் -   சிங்கப்பூர் பதிவர்,ஆள் தளபதி தினேஷ் மாதிரி இருந்தாரு..இவருக்கு கை குடுத்து என் கையே போச்சு.. முறம் மாதிரி முரட்டு கை,.. ஆள் செம ஜாலி டைப்.. ஜோதி மேட்டர் என்னய்யா ஆச்சுன்னு கேட்டா யோவ்,, அவ என் காதலி,, மேட்டர்னா பல்லை தட்டிடுவேன்னு மிரட்னார்

13.மணிஜி , சென்னை - இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம்,நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். தண்டோரா எனும் பிளாக்கின் ஓனர். ஜாக்கிசேகரின் நெருங்கிய நண்பர்..இவர் சங்கருடன் வந்தார்.. விழாவுக்கு தாமதமாக வந்தததால் இவர் அதிகமாக  எதுவும் பேசவில்லை என நினைக்கிறேன்...ஆனால் அனைவரின் பேச்சையும் உற்று கவனித்தார்..  விழா முடிந்ததும் சங்கர் சாருடன் குற்றாலம் கிளம்பி விட்டார்.


14. ஜாக்கி சேகர் அவர்கள் வருவதாக இருந்தது,கடைசி நிமிடஅவசரப் பணியின் காரணமாக வர முடியாமல் போய் விட்டது

மீதி புது பதிவர்கள்  எனக்கு சரியா அடையாளம் தெரில,. மன்னிக்கவும்.. அடுத்து ஓ சி சாப்பாடு போஸ்ட்.. கடைசி பகுதி......நிறைவுப்பகுதி.. ( 2ம் ஒண்ணு தானே?)

தொடரும்..

எகனை மொகனை செய்திகள் வாசித்து கமெண்ட்டுவது எடக்கு மடக்கு ஏகாம்பரம்


1. பக்தர்களிடம் தொடர்ந்து திருட்டு சுவாமிமலையில் வாலிபர் கைது#அட லூஸாப்பா நீ? உண்டியல்ல கை வைக்க வேண்டியது தானே?

-----------------------------

2. ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: லோக்பால் மசோதாவில் அதிகாரம் #அதிகாரின்னா எளக்காரம்,அரசியல்வாதின்னா அதிகாரம்

----------------------

3. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி#முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அடைபட்டபோது இப்படிகுரல் கொடுத்திருக்கலாமே?தலைவா

---------------------------

4. மதுரையில் பயன்படுத்தும் ஆணுறை 2.50 லட்சமாக உயர்வு#இதற்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் அழகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

--------------------

5. கையெழுத்து போட லஞ்சம்; கல்வி அலுவலர் கைது #ஒரு கவர்மெண்ட் ஆஃபீசர் ஆட்டோகிராஃப் போட உரிமை இல்லையா? என வாதாடி தப்பிச்சிடப்போறாரு,கபர்தார்

-----------------------

6. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி#நான் வெளில இருக்கும்போது சக்கரவர்த்தி ஆனா உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி

-------------------

7.  ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது? #ஈரோடு என் கே கே பி ராஜா வெளிநாடு பயணம்னு நாளை நியூஸ்??

---------------------------





8. கூடுதல்சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி #ஆல்ரெடி இங்கே சுகர் பேஷண்ட் ஜாஸ்தி எதுக்கு எக்ஸ்ட்ரா சுகர்?அனுப்பி விடுங்க

------------------

9.  நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் ஜூலை 3ம்தேதி நடக்கிறது!!#நடிகை தமனா ஜூலை 1ந்தேதி வெளிநாடு பயணம்#இமேஜினேஷன்

--------------------

10  அவன் இவனுக்கு தடை கோரி வழக்கு#சும்மா விட்டாலே அந்தப்படம் 7 நாள்ல ஆல் செண்ட்டர்லயும் எடுத்துடுவாங்க.. இப்படி பரபரப்பைகிளப்புனாஹிட்ஆகிடும்

------------------------

11. மீண்டும் ரவீனா டாண்டன் நடிக்க வருகிறார்#சாரி,ரிப்பீட் ஆடியன்ஸ்னா ஓக்கே,ரிப்பீட் ஆக்ட்ரஸ்னா நாட் ஓக்கே.. செகண்ட்ஸ் இன்னிங்க்ஸ்வேணாம்

------------------

12. கவர்ச்சி மட்டும் நடிப்பல்ல; திறமையும் வேண்டும்: ஸ்ரேயா! #சான்ஸ் வாங்கும் திறமை தானே? அதான் உங்க கிட்டே நிறையா இருக்கே மேடம்?

-------------------------

13.  உதவி இயக்குநரை, இயக்குநராக்குகிறார் சசிகுமார்! #அப்போ இயக்குநரை உதவி இயக்குநர் ஆக்கிடுவாரோ?டவுட்டு

-------------------

14. ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா #ஓக்கே மேடம் ஆனா ஒரு கண்டிஷன்,வீடியோ மட்டும் எடுத்துக்குவோம்,டீலா? நோ டீலா?

------------------------


----14.

Thursday, June 23, 2011

கண் கலங்க வைத்த பெண் பதிவர்கள் - நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 4



பதிவுலகில் பெண் எழுத்து என்றாலே பெரும்பாலும் பலர் என்னத்தை இவங்க எழுதிடப்போறாங்க?சமையல் குறிப்பு, கோலம் போடறது எப்படி? மீறிப்போனா காதல் கவிதைகள் எழுதுவாங்க.. என்றெல்லாம் தவறான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளனர்.. அவர்கள் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது  பெண் பதிவர்களின் பங்களிப்பும் ,அவர்கள் காட்டிய எழுச்சியும்.... 


இவர் ஆரம்பத்திலேயே போல்டாக சொல்லி விட்டார்.. சார் என் எழுத்துக்கள் மக்களுக்குப்பயன் அளித்தால் போதும்..  அதனால் என் ஃபோட்டோக்கள் எதுவும் பப்ளிஷ் ஆகக்கூடாது என கிட்டத்தட்ட மிரட்டினார்.. இவரது பாடி லேங்குவேஜ் அசாதாரணமான ஒரு அரசியல் தலைவரை  நினைவு படுத்தினாலும். ( டேய் சி பி அருவா அருவா ) அவரது பேச்சுக்கள் உண்மையை பட்டவர்த்தனமாக, எந்த வித மேல் பூச்சும் இன்று வெளிப்படுத்தியது.. (அக்கா ,மன்னிச்சுக்கங்கக்கா)

நான் (அதாவது அக்கா.. )  என் பிளாக்கில் பெரும்பாலும் தம்பதிகளுக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகிறேன்.. ஆரம்பத்தில் சுமாராகப்போன தளம் இப்போ  பரவாயில்லை.. போகிறது.. பலர் தங்கள் அனுபவங்களை எனக்கு மெயில் பண்ணி ஆலோசனை கேட்கிறார்கள்.. நான் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன்.. அதையே பதிவா போடறேன்..

( அக்காவுக்கு எம்புட்டு சவுகர்யம்.. பதிவு போட சரக்கில்லாம எங்கேயும் தேட வேண்டியதில்லை.. 100க்கு 98 பேர்  சம்சாரம் கூட சண்டை போட்டுட்டுத்தான் இருப்பான்.. சண்டையே போடாம இருந்தா அது சம்சாரமா? ஆஹா டைட்டில் பிரமாதமா இருக்கே.. நோட் பண்றா.. நோட் பண்றா.. _)

என்னால பலர் பயன் பெறுகிறார்கள்.. தம்பதிகளுக்குள் வரும் மனத்தாங்கல்களை நான் தீர்த்து வைக்கிறேன்..

பதிவை படித்தவர்கள் தங்களின் சில தவறுகளை திருத்திகொண்டதாக / குறைத்துகொண்டதாக சொல்லும்போது மனதிற்கு நிறைவை கொடுப்பதால் தொடர்ந்து அத்தொடரை தொடருகிறேன்..

( இதுக்காகவே அக்கா தளத்துல போய் மைனஸ் ஓட்டு போடனும்  ம்  ம்.. நாம ஏதாவது சாக்கு சொல்லி சம்சாரத்தை கழட்டி விடலாம்னு பார்த்தா இவங்க விட மாட்டாங்க போல இருக்கே.. ?  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  )


கழுகு என்ற தளத்தை பற்றி நிறைய பேசினாங்க...விழிப்புணர்வு பதிவு ஏதோ ஒன்று , இரண்டு நம்ம தளத்தில் எழுதுவோம், ஆனா அதற்கென்றே இருக்கும் தளம் கழுகு. அப்டின்னார்..


அப்புறம் அக்கா நைஸா பலா பட்டறை சங்கர் சார்ட்ட மெயில் ஐ டி வாங்கி சார் உங்க கட்டுரை ஒண்ணு கழுகுக்கு தேவைப்படுதுன்னார்.. அவரும் ஓக்கே ரெடி பண்றேன்னார்.... இப்படியே பல முக்கிய பதிவர்களிடம் மெயில் ஐ டி , ஃபோன் நெம்பர்  வாங்குனாங்க,..... என் பக்கம் வரவே இல்ல.. நானும் வெட்கத்தை விட்டு அவங்க கிட்டே கேட்டேன்.. (நமக்குத்தான் வெட்கமே இல்லையெ அதை ஏன் விடனும்னு யாரும் கேட்றாதீங்க.. ) 

 ”அக்கா அப்போ நானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ” அதுக்கு அவ்ங்க சொன்னாங்க..” தம்பி.. கழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம்.. ஏதோ அதுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. வாசகர் வட்டம் இருக்கு.. நீ எழுதி இருக்கற பேரையும் கெடுத்துடாதே” ன்னார்..

( இதுக்கு எதுவும் நான் கேட்காமயே இருந்திருக்கலாம்.. இது வீடியோவுல வேற ரெக்கார்டு ஆகிடுச்சு.. அவைக்குறிப்புல இருந்து நீக்கச்சொன்னா அண்ணன் உணவு உலகம் முடியாதுன்னுட்டார்.. ஹூம்.. போற பக்கம் எல்லாம் சொம்பு வாங்கனும்கறது நம்ம தலை எழுத்து போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)



 இம்சை அரசன் பாபுவின் அன்புத்தங்கையும்,லேப் டாப் மனோவின் பாச மலர்த்தங்கையும்,வெறும்பய ஜெயந்தின் முதல் தங்கையும் ஆன ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம் கல்பனா அடுத்து பேச எழுந்தாங்க.. 

முதல்ல பெயர்க்காரணம்.. இவர் ஒரு கவிதை தன்னோட அப்பாவைப்பற்றி எழுதி இருக்காங்க.. அந்த கவிதை பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் கிண்டல் செய்யப்பட்டு அழுகாச்சிக்காவியம் ஆனார்.. அந்த கவிதையை எப்போ படிச்சாலும் அழுதுடுவாராம்.. ஹய்யோ ஹய்யோ ..

இவர் நன்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஓகே என 2 வார்த்தை டைப் பண்ணிட்டு 8 ஸ்மைலி போட்டு அனுப்புவாராம்....இவர் ஒரு அப்பள பிரியை.. இது  எப்படித்தெரிஞ்சுதுன்னா லஞ்ச்ல ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப நான் பார்த்தவரையே அவர் மட்டும் ஆறு அப்பளம் சாப்பிட்டார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆறு மனமே ஆறு.. அவங்க  அபேஸ் பண்ணுன அப்பளம் ஆறு ( சிச்சுவேஷன் சாங்க்)

கல்பனா- 

என் பிளாக் பேரு அறிவியல் . எனக்கு இன்னொரு பிளாக்கும் இருக்கு.. பேரு..நான் ரசித்தவை ரசிக்க வாருங்கள் என்னோடு
எனக்கே உரித்தான " என் தேடல்கள் " உங்களுக்காக ..... அப்டின்னாங்க.. ஹலோ மேடம்.. என்ன சொன்னீங்க .. புரியல.. இன்னொரு முறை சொல்லுங்க.. என கூட்டத்தில் ஒருவர் கிண்டல் அடித்தார்.. அவர் ரிப்பீட்டினதும்  உங்க பிளாக் பேர்  இவ்வளவு நீளமா வெச்சதுக்காகவே உங்களுக்கு அவார்டு தரனும்னாங்க.. ஹா ஹா 

அப்புறம் அவர் படித்த கவிதை.. பாதி படிச்சதுமே டி வி சீரியல் ஹீரோயின் ஆகிட்டாங்க..
இனிப்புபால் புகட்டி
 இதழ் படபடத்த
எனை முதற்  கையில் ஏந்தி
சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அன்பால்
எனை அரவணைத்தாயே..!!

கைபிடித்து தோழனாய்
நீ நடக்கையில்
தெருக்கள் சுற்றியும்
உலகம் இனித்தே !!

அன்று
சத்தமிடும் சந்தையிலே
சனமிடையே - என்
மனம் வேண்டுவனக்கு
மௌன பட்டியல்
போட்டாயே !!!

வருடலின் தாலாட்டில்
அணைப்புதனை
கர்வங்கொண்டு
பெருமிதத்தில்
உன்னருகே
உறங்கிய நாட்கள் நெருடுதே..!!

பதினாலுவயசுல
ஆளாகி நின்னவள
பதறாம கண்ணெழுதி
 (கல்பானாவின் அப்பா)
உச்சி மோர்ந்து
ஊரே மெச்ச
விழா தொடுத்த
கனம் மறக்குமோ..??!!

பார்பவையனைத்தும்
உன் சாயல் கொண்டுள்ளதே...
என் முக'வரி உள்ளுட்டு!!

தும்மலுக்கு இசைமீட்டி ரசித்தாயே
விம்மலோடு - இன்று
என் விழிகள் உன் இல்லாமையால்..

"உன்ன விட்டு போறேன் பாரு"- என்ற
என் வெகுளி சொல்லுக்கு உடைந்தையே !!
ஆனால் இன்றோ நீ ???
ஏன்ப்பா.........!!!???

இறந்தார் மீள்வரா
ஐயத்திற்கு
சுற்றம் உரைத்தது..!
'நாடு பொறுக்குமா?'
இருப்பினும்
வாழ்கிறாயே
என் சிந்தையில்..!!

உனக்கு
என்றும் ஐயம் - வேண்டாம் அப்பா
நீ உருக
காதலித்த இதயம்
பொக்கிஷமாய்
தாயுருவில்!!!
இவங்க சொந்த ஊரு விருது நகராம்.. கவிதைக்கு விருது உண்டோ இல்லையோ இவங்க அழுகைக்கு விருது உண்டு..


3.

ஜோஸபின் பாபா  

இவர் பேரே இவர் ஒரு சீரியஸ் பதிவர்னு சொல்லிடுச்சு.பொதுவா பதிவர்கள் யார் எழுதுனாலும் அவங்களோட வாழ்க்கைத்துணை அவ்வளவா அதை விரும்ப மாட்டாங்க.. ஏன்னா தன்னை, தன் குடும்பத்தை கவனிக்காம பிளாக்கை கவனிக்கறாங்கலேன்னு ஒரு எண்ணம் உணடு.. ஆனா இவரோட கணவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் மனைவிக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. மனைவியை பார்க்கும் பார்வையிலேயே அவரது கண்களீல் பெருமிதம் மிளிர்ந்ததை கண்டேன்.. காட் பிளஸ் தெம் .. (LET GOD BLESS THEM)
 இவர் பேசுனது........

 


வலைப்பதிவு என்பது அறிவாளிகளால் உருவாக்கபடுவது எழுதப்படுவது என்பதிலும் தாண்டி உண்மை உரைக்கும் இதயத்தால் பேசும் நபர்கள் கொண்டு வழி நடத்தி செல்வதே. ஒரு வலைப்பதிவில் பலவும் வீட்சியும் அதன் தணிக்கையற்ற செய்தி வெளியிடலும் கட்டுபாடற்ற சுதந்திரமான படைப்பு ஆகும்.

வலைப்பதிவுகள் என்பது ஒரு பொழுது போக்கு என்பதையும் தாண்டி சமூக வளர்ச்சிக்கு எடுத்து செல்லவேண்டும். உதாரணமாக திருநெல்வேலி மக்களின் உயிருக்கு எந்த நேரவும் ஆபத்து விளவிக்கும் கூடன்குளம்  அணு-உலை போன்ற வற்றின் செய்தியே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

வலைப்பதிவுகள், பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து கருத்துரையாடலுக்கு , மாற்று ஊடகமாகவும், தகவல்களை சிறப்பாக பறிமாறி கொள்ள, சமூக சீர்திருத்தம் என பல நிலைகளில் பங்கு ஆற்றுகின்றது. வலைப்பதிவுகள் என்றாலே நாட்குறிப்பீடு என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் வலைப்பதிவுகள் என்பது 3 வகையாக பிரிக்கலாம், நாட்குறிப்புப் பேடு(diary) வகை சார்ந்தது, நோட்டு புத்தகம்(note book)வகை மற்றும் ‘தேடி தேர்ந்து எடுக்க தகுந்தது’ (filter blog) என 3 ஆக வேர்படுத்தலாம்.

வலைத் தளத்தின் ஒரு பாகமான வலைப்பதிவுகளை பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை பேணவும், வெகுசன ஊடங்களால் உண்மையான செய்திகள் அரசியல் காரணங்களால் மறுக்கப் பட்ட போதும் மழுங்கடிக்கப் பட்ட போதும் தங்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாற வலைப்பதிவுகள் உலகில் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ தமிழர்களை உதவியது என்று ஆய்வு முடிவில் எட்டியுள்ளேன். மேலும் நிலைத்தை தன் உடமை உறவுகளை இழந்த ம்க்கள் தங்கள் வலைப்பதிவு வழியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள  ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை வாழ்வை பதிவு செய்ய வலைப்பதிவுகள் பெரிதும் பயண்படுத்துகின்றனர்.

ஊடகத்தின் பணியான அடி நிலை மக்களின்  செய்தியை பெருவதிலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் பெரிதும் பங்கு ஆற்றுகின்றது என்றால் மிகையாகாது. என் நிலத்தின் நடக்கும் நிகழ்வுகளை உதாரணமாக எடுத்து கொண்டால் என் பிறந்த ஊரில் நடந்த சபரிமலை ஆபத்து என்பது எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கும் பத்திர்க்கையாளர்களை விட அந்த மண்ணின் மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்கலாம்.  இது வலைப்பதிவாக வரும் சூழலில் உண்மைக்கு வலு  சிறப்பு சேர்க்கின்றது.

அடுத்தாக நம் செய்திகளை மிகவும் துரிதமாக  மிகை குறைந்த செலவில் ஒரு கூட்டம் ஜெனங்களிடம் ஒரே நேரம் கொண்டு சேர்க்க இயல்கின்றது.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து அவன் சிந்தனை நிலையை தட்டி எழுப்பும் சூழல் உருவாக்குகின்றது.

13 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற வீடல்ல இன்று என்னுடையது. இன்று நான் வாழ்ந்த அறை என் மேசை கட்டில் ஏன் நான் இந்த உலகை நோக்கிய என் அறைகள் அதன் சன்னல்கள் எல்லாம் என்னில் இருந்து பிரித்தெடுக்கபட்டதாக உண்ர்ந்தேன். என் வீடு என் குழந்தைகள் கணவர் என்று இருக்கும் போது என்னில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நிலம் இடம் உறவு சார்ந்த வேதனைகளை என் உணர்வுகளை பங்கிட இயல்கின்றது என்பதும் இதன் சிறப்பே.

இவர் இதை பேசறப்ப அழுதுட்டார்.. இலங்கை அகதிகளின் மனக்குமுறல்கள் இவரது பேச்சில் வெளிப்பட்டது..
 4. chella நாய்க்குட்டி -ரூஃபினா.

இவர் தன்னோட சோக நினைவுகளை பகிர்ந்துக்கிட்டார்.. என்னோட அப்பா இறந்துட்டார்.. அதை என் பிளாக்ல தகவலாவும்,அஞ்சலியாவும் போட்டிருந்தேன்.. அதை பார்த்துட்டு அவரோட ஸ்டூடண்ட்ஸ்  காண்டாக்ட் பண்ணி தகவலுக்கு நன்றி சொன்னார்.. எங்கெங்கோ இருக்கற சொந்தங்கலை நண்பர்களை இணைக்கற பாலமா பிளாக் இருக்கு..

அப்டீன்னார்..

4. கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா

இவரைப்பற்றி நான் சொல்லவேண்டியது எதுவுமே இல்லை.. ஒரு பெண் பதிவர் எப்படி இருக்கனும்கறதுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.. இவரை தாக்கி எழுதுனாக்கூட சிரிச்சிக்கிட்டே திட்டுவாரு.. சிரிக்காத சித்ராவை யாராலும் பார்க்கவே முடியாது.. எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்.. ஆனா பேசறப்ப கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. ” நான் ஒரு முறை நடு நிசி நாய்கள் பட விமர்சனத்துக்கு கமெண்ட் போட்டேன்.. அந்த விமர்சனம் எழுதுனவர் என்னோட ஃபேமிலி ஃபிரண்ட்.. ஆனா ஒருத்த தனி மெயில்ல 18+ பதிவுக்கு வழக்கமா நீங்க கமெண்ட் போட மாட்டேங்களே.. இதுக்கு மட்டும் ஏன்? அப்டின்னு கேட்கறாங்க..  ஒரு பெண் பதிவர் தன்னோட கருத்தை சுதந்திரமா தெரிவிக்க முடியறதில்லை.. எத்தனை எதிர்ப்புகள்.. எல்லாவற்றையும் தாண்டித்தான் நாங்க செயல்பட வேண்டி இருக்கு..  அப்டின்னு சலிச்சுக்கிட்டார்.. ( ஒரு உபரித்தகவல்.. அப்டி மெயில் அனுப்பிக்கேட்ட பதிவர்.. 6 எழுத்தில் பிளாக் நேம், 9 எழுத்தில் அவர்  பெயரும் கொண்டவர் )

 தொடரும்

சாருநிவேதிதாவுக்கும் அமலாபாலுக்கும் என்ன சம்பந்தம்?

Copying in Exam.

1. 9 லட்சம் இலவச லேப்டாப்:டெண்டர் விடும் பணி துவக்கம்#ஜாக்கிரதையா ஊழல் பண்ணுங்கம்மா.. 5 வருஷம் கழிச்சு அடுத்த ஆட்சில தோண்டிடப்போறாங்க

---------------------------

2. நடிகர் விஜய்  தனது 37வது பிறந்த நாளை நேற்று பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார்.#வேலாயுதம் ரிலீஸ் இல்லைன்னு சொல்லிட்டாரா?

--------------------------------

3. துணைவேந்தர் தேர்வு வெளிப்படையாக அமையுமா?#அதுக்காக இண்ட்டர்வியூவை போர்ட்டிகோவுல வைக்க முடியுமா?தனி ரூம்ல வெச்சாத்தானே கை நீட்டலாம்?

----------------------------

4. கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்#வெல்செட் என்ற ஜெ இந்த சம்பவம் தொடரும் என கணித்தார்#இமேஜினேஷன்

--------------------------

5. கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்:  மாணவர் தற்கொலை#அந்த நாள் முதல் இந்த நாள் வரை கணக்கு கேட்டாலே பிரச்சனை தான்

-------------------------------

Sweet Home Alabama Gif
Reese Witherspoon laying on a bed...she is so cute in this movie!






6. 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்#ஆச்சரியமா இருக்கே மேடம்.. கலைஞர்-ன் கடிதம் எழுதும் யுக்தியை நீங்களும்?

----------------------------

7. பிரதமர் பதவியை ராகுல் ஏற்பது குறித்து, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்- ஜெயந்தி நடராஜன் #இப்படி நீங்க பேட்டி குடுக்கறதைக்கூட அவர் தான் முடிவு செய்யனுமா?

---------------------

8. எல்லா அரசுகளும், தனியார் பள்ளிகளுக்குத் துணையாக இருக்கின்றன-டாக்டர் ராம்தாஸ்#உங்களை CM ஆக்குனா அன்புமணிக்கு துணையா இருப்பீங்களாக்கும்?

-----------------------------

9. சுப்பிரமணியசாமி  சோனியாவின் வீட்டு ஊது குழலாக திக் விஜய் சிங் #இந்தக்காலத்துல எல்லார் வீட்லயும் கேஸ் சிலிண்டர் தான்,புதுசா யோசிங்க ப்ளீஸ்

---------------------

10. சமச்சீர்க்கல்விக்காக சுப்ரீம்கோர்ட் உத்தரவின்பேரில், 9 பேர்கொண்ட குழு .#அம்மாவுக்கு ராசியான நெம்பர் 9 ன்னு கோர்ட்க்கும் தெரிஞ்சிடுச்சா?

--------------------

Cat Pillow Sleep



11. திமுக., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் உடனே விலக வேண்டும் -இளங்கோவன் #காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டே விலக வேண்டும் - பொதுமக்கள்

----------------------

12.  ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்! அமிதாப் பச்சன் தகவல்!!#இது எதிர்க்கட்சிகள் சதின்னு யாரும் சொல்லிடாதீங்கப்பா,வில்லங்கமாப்போயிடும்

---------------------------

13.  ஜாகீர் கானுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை-இஷா சர்வானி#மனுஷங்களோட வாய்ல இருந்துதான்.

------------------------

14. ரிலீஸ் ஆக இருக்கும் ஜித்தன் ரமேஷ் படத்தில் என்னை வெச்சி காமெடி பண்றாங்களே...? டி.ஆர். வருத்தம்!!#பின்னே உங்களை வெச்சு படமா பண்ண முடியும்?

-------------------------

15.  மீரா ஜாஸ்மின் மேரேஜ்க்குப்பிறகு நடிக்க மாட்டார்-செய்தி# அவரோட ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்,டைவர்சுக்குப்பிறகு நடிப்பாராம்

------------------------------

Optical Illusion Face






16.  ஜூலை15ல் பிரசாந்தின் மம்பட்டியான் ரிலீஸ் #அதே நாளில் ஷகீலா நடித்த  வெரைட்டி தம்புராட்டி இன் மராட்டி ரிலீஸ்,SO தியேட்டர் கிடைப்பது டவுட்

-------------------------

17. சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு நடிகர்!#சாரி,வந்தாரை,இடை மெலிந்தாரை வாழவைக்கும் தமிழகம்,நொந்தாரை அல்ல,வீ வாண்ட்ஸ் நடிகைஸ் ஒன்லி

--------------------

18.  அமலா பால் இளம்பெண்களை கெடுக்கிறார் -இந்து மக்கள் கட்சி #அவர் என்ன சாரு நிவேதிதாவா?சேட்டிங்க் பண்ணி கெடுக்க?

------------------

19. விரைவில் வருகிறது கேப்டன் செய்திகள் சேனல்! #வந்துட்டுப்போகட்டும்,ஆனா ஒரு கண்டிஷன்,செய்தியை கேப்டனேதான் சொல்வார்னு யாரும் மிரட்டக்கூடாது

---------------------------

20. அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! சினிமாவுக்கு வரிச்சலுகை தேவையா?#சினிமாவே தேவை இல்லை தான்,என்ன பண்ணறது?

------------------------

கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

http://lh4.ggpht.com/-oXTk_1S2qSU/TR9wwsV6VfI/AAAAAAAAE4k/iKbvi5-EOfk/DSC06684.JPG 
 
விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


1. ''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''



2. ''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''   

''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.  
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''


3. ''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?'' 


''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...

'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''


\
 4.''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?'' 

''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.

ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''


5.  '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?'' 

'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''


6.  ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?'' 


''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.

கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''

 http://maduraivaasagan.files.wordpress.com/2010/12/dhesandhiri.jpg?w=447&h=288
7. ''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?'' 


''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''


8.  ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?'' 

அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. 

லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. 

அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''


- அடுத்த வாரம்... 


''உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?'' 

''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?'' 

''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?'' 


- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன... 

நன்றி - விகடன்

Wednesday, June 22, 2011

நெல்லையில் நான் ஆற்றிய உரை (இவர் பெரிய டீ மாஸ்டரு..!!) நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 3

 


இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர்,பெயர் சொல்ல விரும்பவில்லை (PVS),சி.பி ,கோமாளி செல்வா,கூலிங்க் க்ளாஸ் மணி வண்ணன் (வம்பை விலைக்கு வாங்குவோம்ல), வலைச்சரம் சீனா,தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்

ஜாலியாகபோய்க்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு நான் பேச எழுந்த போது ஒரு மவுன அலை அரங்கில் நிலவியது.. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. இனி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. 

பதிவுலகில் நான் வந்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்,அப்போது நான் அவற்றால் பாதிக்கப்படாதது போல் வெளியே காட்டுக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்ட சம்பவங்களை நினைவு கூற முடிவு செய்தேன்..

மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..


1. என் மேல் வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு - நான் ஹிட்சுக்காக எழுதுகிறேன் என்பது..

ஒரு பையன் ஸ்கூ;ல்லயோ,காலேஜ்லயோ படிக்கறான்னா அவனும்,அவனோட பெற்றோர்களும் அவன் முதல் ரேங்க் வாங்கனும்னு நினைப்பாங்களா? ஏதோ படிச்சா போதும்னு நினைப்பாங்களா?

எல்லாருக்கும் தான் முன்னணில இருக்கனும், தான் பாராட்டுப்பெற வேண்டும் என எண்ணம் இருக்கும்.அது தான் எனக்கும் இருக்கு.. நீ எந்த வேலை செஞ்சாலும் அதுல பெஸ்ட்டா இரு.. என்பதே எனது கொள்கை.. இதுல என்ன தப்பு இருக்கு..?

நான் பொழுது போக்குக்குத்தான் எழுதறேன்.. எனக்கு எந்த வெறியும் இல்லைன்னு  சொல்றவங்க தாராளமா அப்படி இருந்துக்கலாம்.. நான் கேட்கலையே.. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் செய்யறேன்.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க.. 

பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..
2. நான் ஆனந்த விகடன் குரூப்  பத்திரிக்கைகளிடம் இருந்து  பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்றேன் என்பது.. 

அமரர் சுஜாதா கற்றதும் ,பெற்றதும்ல அவருக்குப்பிடிச்ச ,அவர் படிச்ச நல்ல படைப்புகளை பகிர்ந்துக்கிட்டாரு.. எழுத்தாளர் சாவி என்னைக்கவர்ந்த படைப்புகள்னு ஒரு தொடர் எழுதுனாரு..
அவங்களோட கம்ப்பேர் பண்ண எனக்கு தகுதி இல்லை.. ஆனா அதே மாதிரி நான் எனக்குப்பிடிச்ச ,மக்களுக்குப்பயன் அளிக்கும் என நான் நினைக்கும் படைப்புகளை காப்பி பேஸ்ட் பண்றேன்.. இதுல என்ன தப்பு?

ஆனந்த விகடனின் சேல்ஸ் 8 லட்சம், நம் வலை உலகை ஆக்ரமித்திருக்கும் படைப்பாளிகள் 1789 பேர்.. படிப்பாளிகள் சுமார்  10,000 பேர்.. அதில் என் தளத்திற்கு வந்து படிப்பவர்கள் சுமார் 1000 டூ 2000 பேர் மட்டுமே.. அப்படி இருக்கும்போது நான் காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டால் அதனால் பத்திரிக்கை  சேல்ஸே குறைஞ்சிடும் என்பதும்,அதனால் விகடனில் படிக்க சுவராஸ்யம் இல்லாமல் போய் விடும் என்பதும் கேலிக்கூத்து.. எத்தனை பேர் அவள் விகடன், சக்தி விகடன்,நாணயம் விகடன் வாங்கறாங்க? அப்படி வாங்காதவங்க வந்து படிக்கறாங்க.. பயன் உள்ளதா சொல்றாங்க.. உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு..?

3. கில்மா படங்களின் விமர்சனம் போடறார் என்ற குற்றச்சாட்டு..

சீன் படம் என்று அழைக்கப்படும் கில்மா பட விமர்சனங்கள் போடறாதல சமூகமே சீரழிஞ்சிடுச்சு.. சி.பி சமுதாயத்தையே கெடுத்துட்டாரு என்பவர்களே.. 
a
 
 பேசுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,உணவு உலகம்,வலைச்சரம் சீனா,பலா பட்டறை சங்கர்
 
என் கில்மா பட விமர்சங்களில் ஆபாசமான வர்ணனையோ,உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்களோ இருந்ததுண்டா..?சீன் படம் பார்க்கப்போகும் ஆண் எப்படி சங்கடப்பட்டுக்கிட்டே தியேட்டருக்குப்போறான் என்பதை காமெடியாகத்தான் சொல்வேன்.. 

சரி , நான் கலாச்சாரக்காவலர்களை ஒன்று கேட்கிறேன்.. நான் அந்த மாதிரி பட விமர்சனங்கள் இதுவரை 19 போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அந்த பட விமர்சனங்கள் 1500 பேர் படித்தார்கள்.. பல பதிவர்கள் என் பிளாக் லிங்க் குடுத்து இங்கே போய்ப்பார்.. எவ்வளவு மொக்கையா பதிவு போடறான் என சொல்லி மேலும் 2000 பேர் படிக்க காரணம் ஆகிறீர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி.. 

நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்.. புது வருட பிறப்பன்று புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என்னும் விழிப்புணர்வு பதிவு போட்டேன்.. அது 180 பேர் மட்டும் தான் படிச்சாங்க.. அதுக்கு லிங்க் கொடுக்க வேண்டியது தானே..? சி .பி நல்ல பதிவு போட்டிருக்கான் இதை போய் படிச்சுப்பாருங்கன்னு ஏன் சொல்லலை..? 


இந்த சமுதாயம் நல்லாருக்கனும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சா நான் போட்ட 500 நல்ல பதிவுகளை பாராட்டி லிங்க் குடுங்க.. அப்போ நான் தப்பான பதிவு போட்டா தட்டி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.. உண்மையான நண்பன்னா என்ன செய்யனும்?நல்ல பதிவு போடறப்ப பாராட்டனும், மோசமான பதிவு போடறப்ப தட்டிக்கேட்கனும்.. நீங்க என்ன பண்றீங்க.. அண்ணன் எப்போ சறுக்குவான், எப்போ திண்ணையை விட்டு துரத்தலாம்னு பார்க்கறீங்க..?

இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்த மாதிரி படங்கள் பார்ப்பீங்களா?ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் , ஆனா பப்ளிக்கா வெளில சொல்ல மாட்டேன்.. அப்டீங்கறார்.
 


4. நடிகைகளின்  கிளாமர் ஸ்டில்களை போட்டு ஹிட்ஸ் ஏற்றிக்கிறார்.. குடும்பப்பொண்ணுங்களை,காலேஜ் பொண்ணுங்களை ஸ்டில்ஸ் ஸா போடறார்..

 ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் போட்டேன்.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் காலேஜ்,ஸ்கூல் விழாக்களில் பெண்கள் படம் இடம் பெற்றதை கூகுள்-ல் இருந்து எடுத்துப்போட்டேன் . இப்போ அதற்கும் எதிர்ப்பு வருகிறது.. இவற்றில் நியாயம் இருப்பதாக நான் நினைப்பதால் இனி என் தளத்தில் ஓவர் கிளாமரான நடிகைகள் ஸ்டில்ஸோ, குடும்பப்பெண்களின்  ஸ்டில்ஸோ இடம் பெறாது என்று சொல்லிக்கொள்கிறேன்.. அதற்குப்பதிலாக இயற்கை காட்சிகள், வித்தியாசமான ரசனை  தூண்டும் படங்கள் போடலாம்னு இருக்கேன்..

5. பதிவுக்கும் ,உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் டைட்டில் வைக்கிறாரே..?

 ஒரு சினிமாவுக்கு போஸ்டர் எப்படி முக்கியமோ, ஒரு நாவல் அல்லது கவிதைத்தொகுப்புக்கு அட்டைப்படம் எப்படியோ அப்படித்தான் ஒரு பதிவுக்கு டைட்டில் முக்கியம்.. ஒரு வாசகனை நம் தளத்திற்கு அழைத்து வர அது ஒரு கீ வோர்டு.. அது கிளாமராக வைப்பதில் தப்பு இல்லை.. ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளிக்கும்போது கவர்ச்சிகரமாக,பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்ற வில்லையா?அதை நாம் சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை அரியணையில் மாற்றி மாற்றி உட்கார வைப்பதில்லையா?

6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..

நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு  பதிவு போடுவேன்.. சரக்கு  இல்லாமல் அல்ல.. தொடர்ந்து ஜோக்காக  போட்டால் போர் அடித்து விடும் என்பதால் தான் வெவ்வேறு சப்ஜெக்ட்ஸ் போடறேன்..


7. சினிமா விமர்சனம் எழுதினால் கேவலமா?

 சினிமா விமர்சனம் எழுதினால் கேவலம் என சிலர் சொல்றாங்க..  ரொம்ப சீப்பா பார்க்கறாங்க.. சினிமா விமர்சனம் எழுதுவது தான் பதிவு போடறதுலயே  ரொம்ப சிரமம்.ஒரு மொக்கைப்படத்தை ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்கனும்,அதை நினைவு வெச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் டைப் பண்ணனும்..
அந்தப்படம் கம்ர்ஷியல் ஹிட்டா? இல்லையா? என்பதை கணிக்கனும்,விகடன் மார்க் எவ்வளவு போடுவாங்க என போடனும்.. 


சினிமா விமர்சனத்தில் எதற்கு வசனங்களை ப்போடறீங்கன்னு கேட்டாங்க.. 

பதிவுலகில் ஏற்கனவே சினிமா விமர்சனம் எழுதுவதில் வல்லவர்களான கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர்,உண்மைத்தமிழன், அதிஷா மற்றும் பலரது விமர்சன நடையில் இருந்து மாறவும், தனித்திருக்கவும், எனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தவும் அந்த வசனங்கள் எழுதும் உத்தியை கொண்டு வந்தேன்..

இதற்கு மேல் ஏதாவது கேள்விகள் என்னை கேட்க வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.. 


- தொடரும்.. 

டிஸ்கி - பாகம் 4 -ல் பெண் பதிவர்கள்  6 பேர் என்ன பேசினார்கள் என்பதும், பாகம் 5 இல் மீதி உள்ள பதிவர்களின் பேச்சும் இடம் பெறும்

சாருநிவேதிதா சேட்டிங்க்கில் நடந்த சீட்டிங்க் - கில்மா ,ஜொள்மா நடந்தது என்ன? காமெடி கும்மி

 

1. சாரு நிவேதிதா கதையை மலையாளத்துல எடுக்கப்போறாங்களாமே? ஏன்?

ஆமா.. தமிழ்ல எடுத்தா சென்சார்ல விட மாட்டாங்களே?

------------------------

2. என் லட்சியமே ஒரு எழுத்தாளரா ஆகனும்கறதுதான்...

இலக்கியத்துல அவ்ளவ் ஆர்வமா?


ச்சே.. ச்சே.. சேட்டிங்க்ல எனக்கு ரொம்ப ஆர்வம்..

------------------------

3. நீ பாதி நான் பாதி படம் எடுத்த இயக்குநர் வஸந்தை ஏன் எல்லாரும் இப்போ கண்டிக்கறாங்க?

நிவேதா-ன்னு ஒரு பாட்டு ஃபுல்லா ஒரே வார்த்தையை போட்டு எழுதுனாரு இல்லையா? அது சாரு நிவேதிதாவைக்குறிக்குதுன்னு இப்போ ஸ்ட்ரைக் பண்றாங்களாம்.. அந்த பாட்டை எடுக்க சொல்லி..

-----------------------------

4.அந்த எழுத்தாளர் பெயர் கின்னஸ்ல வந்திருக்காமே?

ஆமா, ஒரே நாள்ல 240 ஃபிகர்களோட  சேட்டிங்க் பண்ணாராம்.. அதுவும் ஒரே டைம்ல.. 
-------------------------------

5. ஊர்த்திருவிழா, நெட் திருவிழா - என்ன வித்தியாசம்?

ஊர்த்திருவிழான்னா தேரு இழுத்து சந்தில நிறுத்துவாங்க..தேரு நிலை சேர்ந்துடும். நெட் திருவிழான்னா சாருவை வம்புக்கு இழுத்து தராசுல நிறுத்துவாங்க.. சாரு நிலை குலைஞ்சுடுவாரு.


------------------------------------------------


6. நக்கீரன் கோபால் ஏன் குஷியா இருக்காரு?

வீரப்பன் மேட்டருக்குப்பிறகு அவருக்கு கிடைச்ச செம தீனி.. சர்க்குலேஷன் எங்கேயோ போகப்போகுதாம்.. 

------------------------

7. அவர் ஃபேமஸ் எழுத்தாளர்னு எப்படி சொல்றே?ஏகப்பட்ட நாவல்ஸ் எழுதி இருக்காரா?



ம்ஹூம்,ஏகப்பட்ட ஃபிகர்களோட சேட்டிங்க் பண்ணி  சீட்டிங்க் பண்ணி  இருக்காராம்..

-----------------------------------------

8.வணக்கம் சார்.. நான் உங்களோட ரசிகை.. 

போதும்மா... இனிமே நாம 2 பேரும் சும்மா சைகைலயே பேசிக்குவோம்.. எவனாவது ரெக்கார்டு பண்ணிடப்போறான்..

---------------------------------

9. சார்.. உங்க எழுத்தை எங்களால மறக்கவே முடியாதுங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்ங்க.. எந்த புக்ல பார்த்தீங்க?

ம், ஃபேஸ்புக்ல பார்த்தோம்..

------------------------------------

10. ஒரு பொண்ணுக்கு  ஆறுதலா 4 வார்த்தை பேசுனது தப்பாய்யா?

ஆனா பேசுனதெல்லாம் கெட்ட வார்த்தையா இருக்கே?

------------------------------

Not enough arm strength to keep her face off the ground!




11. ரைட்டர் சார்.. உங்க டி சர்ட்ல 18 + அப்டின்னு பிரிண்ட் பண்ணி இருக்கே ஏன்?

வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவேண்டிய எழுத்துக்கு சொந்தக்காரன்னு அர்த்தம்.. 

---------------------------------

12. பெண் எழுத்துங்கற தலைப்புல கட்டுரை எழுதச்சொன்னது தப்பா போச்சு.. 

ஏன்? 

பெண் கழுத்து அப்டிங்கற தலைப்புல வேணா எழுதறேன்கறாரே?

-----------------------------
13. அவர் ஒரு ரசனை கெட்ட எழுத்தாளர்னு எப்படி சொல்றே..?

தொடர் கதை அத்தியாயத்துக்கு கீழே தொடரும்னு போடறதுக்குப்பதிலா தொட்டு விட தொட்டு விட தொடரும்னு போட்டிருக்காரே..?

---------------------------------

14. ஃபைனான்சியர்,ரைட்டர் என்ன வித்தியாசம்..?


அவரு ஆண்,பெண் பாகுபாடில்லாம எல்லாரையும் சீட்டு போட வெச்சு சீட்டிங்க் பண்ணுவாரு,,. இவரு பொண்ணுங்களை மட்டும் சேட்டிங்க் பண்ணி சீட்டிங்க் பண்ணிடுவாரு..

---------------------------


15. ராஜேஷ் குமார்- சாரு நிவேதிதா என்ன வித்தியாசம்?

 அவரு அதிகமான க்ரைம்  நாவல் எழுதி சாதனை புரிஞ்சாரு.. இவரு அதிகமான க்ரைம் வேலை செஞ்சு சர்ச்சைல சிக்குனாரு,.. 


-------------------------

























டிஸ்கி -  முதல் படம் சாரு பலரிடம் கண்டனம் பெற்றதையும், இரண்டாம் படம் இனி பெண்கள் சாருவை கேவலமாகப்பார்ப்பார்கள் எனவும்,மூன்றாம் படம் சாருவிடம் பெண்கள் சேட் பண்ணினால் ஓப்பனிங்க்ல ஜாலியா இருந்தாலும் ஃபினிஷிங்க்ல ஸ்லிப் ஆகிடுவாங்க என்பதையும் குறிக்கிறது..  இப்படிக்கு கவிதை,ஜோக் என எது எழுதினாலும் அதுக்கு விளக்கவுரை எழுதி நேரத்தை வீணடிக்கும்  வீணாப்போன பதிவர் ஹி ஹி