Monday, May 16, 2011

HAUNTED 3D - பேய்ப்படமா? கில்மாப்படமா?- ஹிந்திப்பட விமர்சனம்

http://mimg.sulekha.com/hindi/haunted-3d/stills/haunted-3d-stills-011.jpg


நான் எழுதும் கன்னிப்பேய் பட விமர்சனம். அதுக்காக அந்தப்பேய் கன்னி என உனக்கு எப்படித்தெரியும்னு கேட்டுடாதீங்க.. முதன் முதலா ஒரு பேய்ப்படத்துக்கு விமர்சனம் எழுதறேன்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. படிக்கறவங்கள்ல பயப்படும் மனோ பாவம் உள்ளவர்கள் ,ஜேசுதாஸ் பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. சம்சாரமே பேய் மாதிரி தான் என் கண்ணுக்குத்தெரியறா என சொல்பவர்கள் தனியாவே படிங்க.. ஹி ஹி

ஃபாரீன்ல இருந்து ஒரு பங்களாவை சேல்ஸ் பண்ணறது சம்மந்தமா ஒரு லேண்ட் புரோக்கர் இந்தியா வர்றார். அந்த பங்களாவுல பேய் இருக்குன்னு கண்டு பிடிக்கிறார். ( அது ஏன் பேய்ங்க எல்லாம் பங்களாவுலயே குடி இருக்கு?குடிசைப்பேய் ஒண்ணு கூட நான் பார்த்ததே இல்லை)வழக்கமா எல்லா பேய்ப்படங்கள்லயும் வர்ற ,மாதிரி அலறல் சத்தம், டபார்னு ஒரு உருவம் ஓடறது, தனி தலை மட்டும் குப்பைக்கூடைல கிடக்கறதுன்னு ஓப்பனிங்க் பில்டப் முடிஞ்சதும் இயக்குநர் கதைக்கு வர்றார்.


அந்த பெண் பேய் தன்னோட ஃபிளாஸ்பேக்கை டைரி மூலமா சொல்லுது.. ( வழக்கமா ஆண் பேய்க்கதைன்னா எவனும் சீண்ட மாட்டான்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை)

http://imedia.cinebasti.com/cb/galery_movies/medium/Haunted_3d_movie_still1.jpg





18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).. அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு  யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)பியானோ கத்துக்குடுக்கற புரொஃபசர் இப்போ எண்ட்ரி ஆகறார். ( தியேட்டர்ல ஒரு பையனாவது கண்ணை இமைக்கனுமே?)ஆண்டாண்டு காலமா வில்லன் ஹீரோயினை என்ன பண்ணுவானோ  அதே மேட்டரை இவனும் பண்ண ட்ரை பண்றான். ( எதுக்கு நடந்ததை  டைரக்ட் ஸ்பீச்ல சொல்லாம இண்டைரக்ட் ஸ்பீச்?ல சொல்றென்?ஏன்னா இது ஒரு கண்ணியமான பிளாக்.. ஹி ஹி )

பொதுவாவே ஹீரோ கூட பிரமாதமா ஃபைட் போடற வில்லன்க எல்லாம் ஹீரோயின் கிட்டே தோத்துடுவாங்க.. ( நற நற..)ஹீரோயின் வில்லன் தலைல மடார்னு ஒரு லேம்ப் போஸ்ட்டால ஒரு போடு போடறா.வில்லன் அவுட்.. ( அட போங்கப்பா.. சுவராஸ்யமும் அவுட்..)


வில்லன் ஆவி ஆகிறான்.( ஒரு பாவி ஆவி ஆகிட்டான் அடடே,... ஆச்ச்சரியக்குறி )இப்போ வில்லன் பேயா மாறியும் திருந்தலை... ( அதானே நமக்கு வேணும்..?)


வில்லன் ஹீரோயினை ரேப்பிடறான்.. ( என்ன கண்றாவி தமிங்கிலீஷ் வார்த்தை இது..?)தினத்தந்தி ரசிகர்கள் மட்டும் ரேப்புக்கு முன்னால கதறக்கதற என்ற வார்த்தையை சேர்த்துக்கவும்.இப்போ தான் டைரக்டர் ஒரு காமெடி பண்றார்.. இந்த புனித வேலையை வில்லன் 80 வருஷமா கண்ட்டினியூ பண்றாராம்.நான் தெரியாம தான் கேட்கறேன்.. போர் அடிக்காது? ஒரே பங்களாவுல ஒரே ஃபிகரை மடக்கி வெச்சு எந்த மடையனாவது 80 வருஷம் ரேப் பண்ணிட்டே இருப்பானா?http://g.ahan.in/hindi/Haunted%203D%20Movie%20Special%20Show/Haunted%203D%20Movie%20Special%20Show%20(4).jpg





இதுல தான் இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தை காட்றார்.பேய்க்கு வயசே ஆகறது இல்லையாம். சேம் ஏஜ்.. ( லாஜிக்கு..?)

ஃபிளாஸ்பேக் முடிஞ்சதும் ஹீரோ கடந்த காலத்துக்குப்போய் அந்த கொலையை தடுக்க ட்ரை பண்றார்.. ( காதுல பூ)ஆனா முடியலை.. அவர் கண் முன்னால அதே சம்பவங்கள் மீண்டும் நடக்குது..

அப்போ தான் ஒரு மத போதகர் ஹீரோயினிடம் நீ இரண்டற கலந்து விட்டால் பேய் கிட்டே வராது.. ( இரண்டற கலக்கனும்னா 2 டைம் கலக்கனுமா? #டவுட்டு )


சரி.. இப்பவாவது சீன் உண்டுன்னு ஆர்வமா பார்க்கறவங்க எல்லாம் டூயட் சீன் பார்த்து கடுப்பாகிடறாங்க..

அப்புறம் பாலமித்ரா, அம்புலிமாமா கதைல வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயினை எப்படி காப்பாத்தறார்ங்கறது தான் மிச்ச சொச்ச திரைக்கதை..

http://www.celluloidtamil.com/wp-content/gallery/haunted-3d/haunted-3d.jpg



இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்



1. ஹீரோ முதன் முதலா பங்களாவுல எண்ட்ரி ஆனதும் திடீர்னு ஒரு உள்ளங்கை மட்டும் கண்ணாடிக்கதவுல ரேகை பதிச்சு ஆ என அலறும் சத்தம் எடுக்கப்பட்ட விதம் கிளாசிக்.. தியேட்டர்ல அலறாதவங்க கம்மி..

2. தட்டு முட்டு சாமான்கள் வைக்கப்பட்ட அறைக்குள் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட தலையை மட்டும் காட்டும் இடத்தில் எழும் பகீர் உணர்வு.. ஹார்ட் பேஷண்ட்ஸ் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்.


3. திடீர் என தூக்கில் தொங்கியபடி ஊசலாடும் பெண்ணின் பிணம் ( ஒளிப்பதிவு செம)





http://img.india-forums.com/wallpapers/1280x1024/124046-twinkle-bajpai-and-mimoh-chakraborty-in-the-movie-haunted-3d.jpg

--


வசனங்களில் பளிச் வசனங்கள்



1. துஷ்ட தேவதையோட அல்லது ஆவியோட பெயரை சொன்னா அதனோட சக்தி அதிகம் ஆகிடும்.. ( இனிமே சம்சாரம் கூட சண்டைன்னா அவ பேரை சொல்லக்கூடாது #நீதி)


2. கண்ணா.. லட்டை மிஸ் பண்ணீட்டே.

3, வம்பு பண்ணனும்னு நினைச்சிருந்தா அப்பவே வம்பு பண்ணி இருப்பனே? என்னை நம்பு.. ( நம்ப முடியாது.. நீ லேட் பிக்கப்போ என்னவோ?)


4. நான் உனக்கும், உன் தலை எழுத்துக்கும் நடுவுல இருக்கேன்.. (நீ என்ன பிரம்மாவோட செகரட்ரியா?#டவுட்டு)

5. பேய்க்கு எழுதப்படிக்கத்தெரியாது... ( ஏன் எல்லா பேய்களும் அன் எஜூக்கேட்டட்டா இருக்க்கு? #டவுட்டு)

6. பொதுவா பேய்ங்களுக்கு விடிகாலைல 3 மணிக்கு பலம் அதிகம் ஆகும், மதியம் 3 மணிக்கு பலவீனம் ஆகிடும்.. ( அப்போ மிட் நைட்ல 12 மணிக்கு பயப்பட வேண்டியது இல்லையா?)


 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


 1. மிக சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் க்ளைமாக்ஸ் ஆவி ஒழிப்பு சீனில் சொதப்பியது... படமே முடிஞ்சாச்சு என நிம்மதிப்பெரு மூச்சு விடும்போது 2வது க்ளைமாக்ஸ் வைத்து போர் அடித்தது..

2. தனிமைல இருக்கற பொண்ணு மாஸ்டர் பியானோ கத்துக்க வர்றார்னு தெரிஞ்சும் அவ்வளவு லோ கட் ஜாக்கெட் போடுவாளா?
( துப்பட்டா கூட போடலை)

3.வில்லன் ஹீரோயின் பின்னால நின்னு 10 நிமிஷம் உரசிட்டு கூந்தலை மோப்பம் பிடிச்சுட்டு நிக்கற வரை ஹீரோயினுக்கு எதுவுமே தோணலையா?( இதை ஏன் கேட்கறேன்னா பெண்களுக்கு முன் ஜாக்கிரதை உணர்வும், விழிப்புணர்வும் ஜாஸ்தி.. டக்குன்னு கண்டு பிடிச்சுடுவாங்களே..?)

4. மத போதகர் புனித நீர் ஜக்கு எடுத்துக்குடுத்து பேய் வந்தா யூஸ் பண்ணிக்குங்க.. ஆனா இது டெம்ப்ரவரி தான்.. பர்மணண்ட் கிடையாது அப்படிங்கறார்.. கடவுளின் பவர்ல கூட அப்படி டெம்ப்ரவரி, பர்மணண்ட் என 2 வித பவர் இருக்குமா?


5. ஹீரோயின் கழுத்துல இருக்கற செயினை கிணத்துல போட்டுட்டா பேய் செத்துடும். செயினை தூக்கி கிணத்துல போட்டாச்சு.. ஆனா அது தண்ணீல விழாம ஒரு கல்லுல இருக்கு. இது ஹீரோ , வில்லன் 2 பேருக்கும் தெரியும்.. அப்போ வில்லன் பேய் முத வேலையா அந்த செயினை பறிக்கத்தானே முயற்சி செய்யும்? ஆனா படத்துல 80 வருஷமா பல தடவை ரேப் பண்ணூன ஹீரோயினை மறுபடி 2756 வது தடவையா ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கே? அது ஏன்?

6. ஹீரோ கடந்த காலத்துல  போய் வில்லனை அழிச்சிடறார் ஓக்கே.. ஆனா ஹீரோயின் வேற ஒருவரை கல்யாணம் பண்ணிடறதா காட்றாங்களே அது எப்படி? டைம் மெஷினோட லாஜிக் படி இறந்த காலத்துல போனா எந்த சேஞ்சும் பண்ணிடக்கூடாது என்பது தானே?



மொத்தத்துல படத்துல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இது ரசிக்க வேண்டிய பேய்ப்படம் தான். ஆனால் பெண்கள், கர்ப்பிணிகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், சிறுவர் , சிறுமியர்கள்,மாணவர்கள் இந்தப்படத்தினை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்ப்படுகிறார்கள்.

 சில ஊர்களில் இது ஆத்மா 3டி என தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது .


ஈரோட்டில் ஸ்ரீலட்சுமி தியேட்டரில் போட்டிருக்காங்க..  


டிஸ்கி 1 - கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்  

டிஸ்கி 2 -சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை? 

 டிஸ்கி 3 - அழகர் சாமியின் குதிரை - அழகிய கிராமம்+பழகிய காதல் - சினிமா விமர்சனம்

Sunday, May 15, 2011

சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை?

http://farm3.static.flickr.com/2771/4330801825_827fa6f366.jpg
 சிட்டுக்குருவி... நம்மில் பெரும்பாலானவர்களின் உயிரோடும்... உணர்வோடும் உறவாடிய ஒரு ஜீவன் என்றால்... அதில் அதிசயம் ஏதுமில்லை! ஆம்... சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர்கள் மிகக் குறைவே! அதன் முட்டைகளைத் தேடிப்பிடித்து கையில் வைத்து விளையாடுவது, அதன் குஞ்சுகளை ஆசையோடு வருடிக் கொடுப்பது, சிறகடித்து விர்ரென்று பறக்கும் அந்த அழகை ரசிப்பது... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய அனுபவம்தான், இலக்கியம், சினிமா என்று எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை ஆசை ஆசையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால், இதெல்லாம் எதிர்கால தலைமுறைக்கு கொஞ்சம் கூட கிடைக்காமல் போய்விடக்கூடிய ஆபத்து துரத்திக்கொண்டே இருப்பதுதான் கொடுமை!


மைனா, பருந்து, ஆந்தை... என அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவியும் சமீபகாலமாக சேர்ந்திருக்கிறது. யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!'' என்று நடுங்கும் குரலில் எச்சரிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!


!

இத்தகைய நிலையில், சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதியை 'சிட்டுக்குருவிகள் தினம்’ என்று கொண்டாடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

 பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இயற்கை ஆர்வலரான சதீஸ்முத்துகோபால், பழனிமலை பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்து, பழனியில் உள்ள அக்ஷயா பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடினர்.


அதில், 'சிட்டுக்குருவி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டு, குருவிகள் பற்றிய பல விஷயங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. குருவிக் கூடுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். 

 
அது பற்றிப் பேசிய, சதீஸ்முத்துகோபால், ''ஒரு காலத்தில் வீட்டு முற்றங்களிலெல்லாம் அமர்ந்து உறவு பாராட்டி வந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. அந்த ஜீவன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நாம் உணராமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

 பாரம்பர்ய விவசாய முறைகளை விட்டொழித்து ரசாயனத்தைப் பயன்படுத்துவதுதான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். ரசாயனத்தின் எச்சம் மிஞ்சிய தானியங்களை உண்ணும்போது அதன் வீரியத்தை அந்த சின்னஞ்சிறு ஜீவனால் தாங்க முடியாமல் மடிந்து போகின்றன.
http://2.bp.blogspot.com/_WDqhbHM_0Zo/S_p_W9KSgyI/AAAAAAAAAYk/A7qo6oDNHgw/s1600/2.jpg
 அலைபேசிக் கோபுரங்களின் கதிர் வீச்சு, வாகனங்களின் ஒலி, பட்டாசுச் சத்தம் என்று அந்தக் குருவிகளின் அழிவுக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்'' என்றவர்,

''வீடுகளில் உயரமான இடங்களில் சின்னச்சின்ன சட்டிகளை வைத்து, அதில் கம்பையும், சிறிது நீரையும் ஊற்றி வைத்தால்... சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணத் தொடங்கும். அதேபோல செம்பருத்தி, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால், அவற்றில் குருவிகள் கூடுகட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க முன்வர வேண்டும்'' என்று அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.

நிறைவாக, ''பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினத்தன்று, குருவிகளைப் பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும் என்பதற்காக, விலங்குகள் ஆணையம் மூலமாக, குருவிக் கூடுகளை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் கூடுகளை வழங்கி, குருவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைத்தார் சதீஸ்முத்துகோபால்.

 நன்றி - விகடன்

நன்றி - சன் டி வி
http://10000birds.com/wp-content/uploads/2009/10/savannah-sparrow-3.jpg

கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxTV5iI1sJEviqpmyA2rkmMM0T2Qv-6THaGqQLLPWQOTo6l4EFGrN8lSz2WEZ62f1D4L1RDOifubY9p_NmKyr4rJ9vB_A9DAB5jZoorKp-fJ66_5WVt38i_cuV2HDXt-a2DUUSDQkjvNQ/s400/MUDAKKATTHAAN
புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.
கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து
லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.
வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.
மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
  இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.
சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும். 

1. முளைக்கீரை  பருப்பு வடை
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.  உருளை  முருங்கைக்கீரை மசாலா 

தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 4, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி - பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

3.மல்ட்டி கீரை சூப் 

தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா - தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

4. பாலக் ரைஸ் 

தேவையானவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு - கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து... பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

5. வெந்தயக்கீரை கொழுக்கட்டை 

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

6.  வல்லாரை துவையல் 

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.

7. கீரை வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: பாலக் கீரை - அரை கட்டு, கடலை மாவு - 50 கிராம், தக்காளி - 3, வெங்காயம் - 1, சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்
.
8. கீரை  நட்ஸ் சாலட்
தேவையானவை: காய்ந்த திராட்சை - 50 கிராம், வல்லாரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.

9. கிரீன் ஸ்மூத்தி
 
தேவையானவை: பழுத்த வாழைப்பழம் - 2, மணத்தக்காளி கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 50 மில், பச்சை திராட்சை - 50 கிராம்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.

10. முருங்கைக்கீரை  காராமணி பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி - 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.

11. ரங்கீலா ரொட்டி 

தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் - தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு - 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 செய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் விழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 12.பைங்கன் பாலக்
தேவையானவை: கத்திரிக்காய் - 4, பாலக் கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி... கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

13. மணத்தக்காளிகீரை மிளகூட்டல்
தேவையானவை: மணத்தக்காளிகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

14.முளைக்கீரை  அவல் சாலட்
தேவையானவை: முளைக்கீரை - அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) - 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்

15.முளைக்கீரை  தக்காளி மசாலா கிரேவி
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 3, வெங்காயம் - 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

 16.மேத்தி காக்ரா
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, கோதுமை மாவு - தலா 100 கிராம், பொடித்த ஓமம் - ஒரு டீஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு, மிளகாய்த்தூள் - எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் கடலை மாவு, மைதா மாவு, பொடித்த ஓமம், வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து... சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, சப்பாத்தி மாதிரி தேய்த்துக் கொள்ளவும். காயும் தோசைக்கல்ல் ஒவ்வொரு சப்பாத்தியாகப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.

17. சிறுகீரை கட்லெட்
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 3, பொடித்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த அவல் - தலா 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், பிரெட் துண்டுகள் - தலா 3, சோள மாவு - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இதில் சிறுகீரையைச் சேர்த்து... பொடித்த வேர்க்கடலை, இஞ்சி - பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும், பிரெட்டை தண்ணீரில் முக்கி உடனே பிழிந்து சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி, சோள மாவு கரைசல் முக்கி எடுத்து, அவல் பொடியில் புரட்டி, தோசைக்கல்ல் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

18. புதினா பக்கோடா
தேவையானவை: புதினா - ஒரு கட்டு, சேமியா - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெங்காயம் - 2, உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, வெந்ததும் வடித்து எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசவும். இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கி, முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

19. பாலக் பச்சடி
தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தயிர் - 100 கிராம், பச்சை மிளகாய் - 1, கடுகு, சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெறும் கடாயில் சீரகத்தை வறுத்து, அரைத்த கீரையுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கீரைக் கலவை, உப்பு சேர்த்துக் கிளறி, தயிருடன் கலந்து பரிமாறவும்.

 20.பொன்னங்கண்ணி மோர் கூட்டு
தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கெட்டித் தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து... வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

21. மேத்தி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 150 கிராம், வெந்தயக்கீரை - 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 150 மில், ஏலக்காய் - 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 3, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து... பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.

22. அரைக்கீரை பருப்பு மசியல்
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு - 50 கிராம். (வேக வைக்கவும்), புளி - நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து... பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

 23.அகத்திக்கீரை  சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல்  சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி... வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

24. பசலைக்கீரை ஸ்வீட் கார்ன் குருமா
தேவையானவை: பசலைக் கீரை - அரை கட்டு, சீஸ் - 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் - 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (சிறியது) - 1, பயத்தம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி... பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

25. புளிச்சகீரை சட்னி
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

26. வெந்தயக்கீரை மலாய் கட்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2.கிரேவி செய்ய: வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி... மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

27. பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு - 150 கிராம், தயிர் - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.

28. பருப்புக்கீரை டிக்கா
தேவையானவை: பருப்புக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்) வேக வைத்த பச்சைப் பட்டாணி - 50 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கெட்டித் தயிர் - 50 கிராம், டிரை மாங்காய்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள், மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல் - சிறிதளவு, சோள மாவு - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய், நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் அழுத்தி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

29. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

30. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

நன்றி - விகடன்

Saturday, May 14, 2011

சொக்க வைத்த சோனியாவை தாக்க வந்த கடிதம்-சுப்ரமணியம் சாமியின் புது குண்டு - காமெடி கும்மி

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341 
 
சோனியாவை மிரட்டும் கடிதப் புயல்!

சுவாமியின் அடுத்த அதிரடி 

சி .பி - அதிரடியா? காமெடியா?
 
டந்த மாதம் டெல்லியில், சி.பி.ஐ-யின் புதிய அலுவலகத்தை பிரதமர் மன்மோகன்சிங்க்
திறந்துவைத்தார். 11 தளங்களைக்கொண்ட அந்தப் புதிய கட்டடத்தின், 6-வது தளத்தில் சி.பி.ஐ-யின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சி.பி.ஐ. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அது கையாண்ட முக்கியமான 14 வழக்குகளின் விசாரணை விவரங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்று உள்ளன.  1968-ல் நடந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கொலை வழக்கில் தொடங்கி, 2009-ல் நடந்த
சத்யம் நிறுவன வழக்கு வரை அடக்கம்.

சி .பி - அப்போ எல்லா வழக்கு விசாரணைகளும் அடக்கம் செய்யப்பட்டு விடுமா?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYzhE1NP9PVSg9Rpmhyxkm8CyyR8CoW1l6cnPr1Qk40_jFz4pvCSDHSEt0tu_mVsfKzDOC_1bbPNg44EFb52DAmSd3CQ7jf8qxjTjt0bCb6s4j8YWKZ3ocKYyKzkfVZU5ZxiAyoxEp2Mqg/s314/304.jpg
ஆனால், நாட்டையே உலுக்கிய - ஏறத்தாழ 20 ஆண்டுகள் சி.பி.ஐ. விசாரித்த போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் இதில் இடம்பெறவில்லை. ஊடகங்கள் இதைச் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்டபோது, தங்களுக்கும் போஃபர்ஸுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததுபோல காட்டிக்கொண்டனர் காங்கிரஸார்.

சி. பி  - ஒரு தமிழ் இனத்தையே காட்டிக்கொடுத்தவர்கள் ஆச்சே?
 
காங்கிரஸ் இப்போதைக்கு, ஊழலுக்கு எதிரான முகத்தையே வெளிக்காட்ட விரும்புகிறது. காமன் வெல்த் ஊழல், அலைக்கற்றை ஊழல்​கள் தொடர்பான விசாரணைகள், லோக்பால் மசோதாவுக்கான முஸ்தீபு​கள் மூலம், தன்னை அப்பழுக்கற்ற கட்சியாகக் காட்டிக்கொள்ள, காங்கிரஸ் விரும்புகிறது.

சி. பி - என்ன தான் திருடன்  ஒண்ணும் தெரியாதது போல் நடிச்சாலும் அவன் முகமே அவனை காட்டிக்குடுத்துடுமே? 

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_200.jpg?w=480&h=679
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் மேஜைக்குப் போயிருக்கும் ஒரு கடிதம், காங்கிரஸின் அடி மடியிலேயே கை வைக்கிறது. 206 பக்கங்களில், 43 ஆதாரக் குறிப்பு​களுடன் எழுதப்பட்டு இருக்கும் அந்தக் கடிதத்தின் சாராம்சம், 'சோனியா ஓர் ஊழல்வாதி - அவர் மீது வழக்குத் தொடர அனுமதி வேண்டும்!’ என்பதுதான்.

சி .பி - அழகிரி மீது நடவடிக்கை எடுக்கனும்னு கலைஞர் கிட்டே கடிதம் குடுக்கறதும் இதுவும் ஒண்ணு தான். 


கடிதத்தை எழுதி இருப்பவர் சுப்பிர​மணியன் சுவாமி!
குழி தோண்டிப் புதைக்கப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கில் இருந்து தற்போதைய ஹவாலா ஹசன் அலி மோசடி வழக்கு வரை பல்வேறு ஊழல், மோசடிகளில் சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று அடித்துச் சொல்கிறது, இந்தக் கடிதம்!
 http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg
இந்தக் கடிதத்தில் உள்ள பல கேள்விகள் ஸ்வீடனின் தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை விசா​ரணை அதிகாரியாகவும் ஃபோபர்ஸ் விவகாரத்தில் ஸ்வீடன் நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றிய ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணையின் அடிப்படை​யில் அமைந்துள்ளது.

அந்த விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் இவை...

போஃபர்ஸ் பீரங்கி பேரத்​துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்​ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது?

  சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள உறவு என்ன?

குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தியது யார்?

கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சி​தான் என்பது தெரிந்த பின்னரும், அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்​காமல் எப்படித் தப்பிக்க முடிந்தது?

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கி​வைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கு, எப்படி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, அவரால் பணத்தை எடுத்துக்கொள்ள முடிந்தது?

அதன் பின்னணியில் இருந்தது யார்?

அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் சோனியா காந்தியின் குடும்பத்தார் பணத்தைக் குவித்துவைத்து இருக்கிறார்கள் என்பது! 

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணம், ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி-யிடம் இருந்து பனிப் போர் காலத்தில் பெறப்பட்ட பணமாக இருக்கலாம் அல்லது பல்வேறு ஊழல்கள் மூலமாகச் சேர்த்த பணமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தக் கடிதத்தின் மீது முடிவு எடுக்க பிரதமருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தந்து இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

சி.பி. -அந்த 3 மாச அவகாசத்துக்குள்ள ஆதாரங்களை எல்லாம் அழிச்சிடுவாங்க.. 

பிரதமர் முடிவெடுக்காத பட்சத்தில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பத் திட்டமாம்.

''வலுவான ஆதாரங்களுடன் சொல்லப்பட்டு இருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரித்தால், சோனியா மீது வழக்குத் தொடர, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கப் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. வழக்கமான உத்தியைப் பயன்படுத்தி, கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிடவும் முடியாது. ஏற்கெனவே, அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகளை அப்படிப் போட்டுத்தான், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார் பிரதமர்!'' என்கிறார் சுவாமி.

சி.பி - விமர்சனங்களை சந்திக்கறது நமக்கு புதுசா? எனக்கு எதுவும் தெரியாது.. என் கவனத்துக்கு வராமலே எல்லாம் நடந்து விட்டது என சொல்ல எவ்வள்வு நேரம் ஆகிடும்?

இந்தக் கடித ஏவுகணையை எப்படிச் சமாளிப்பது என்று குழப்பத்தில்  இருக்கிறார் பிரதமர். இது தொடர்பாக, கபில் சிபலிடம் பிரதமரும் சோனியாவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. பிரதமர் நிராகரித்து, உச்ச நீதிமன்றம் வழக்கை அனுமதித்தாலும், சி.பி.ஐ. தங்கள் வசம் இருப்பதால், சமாளித்துக்கொள்ளலாம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
 http://img.dinamalar.com/data/uploads/WR_825509.jpeg
மன்மோகன் சிங், ஒரு கட்சிக்காரராக இந்தக் கடிதத்தை நிராகரிப்பாரா... அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக்கொள்வாரா?

சி.பி - இமேஜ் இருந்தா காப்பாத்தலாம் .ஏற்கனவே அது செம டேமேஜ்