Monday, May 19, 2025

DD NEXT LEVEL (2025)-டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் காமெடி டிராமா )

           

  இயக்குனர்  எஸ்  பிரேம் ஆனந்த்தின்  டிடி  ரிட்டர்ன்ஸ் (2023)  நல்ல  ஹிட் படம் , காமெடி  ஒர்க் அவுட் ஆகி இருந்தது . மிகப்பெரிய  காமெடி  நடிகர்களின் பட் டாளத்துடன்  களம்   இறங்கி  இருக்கும் அவர்  இந்த முறையும்  வெற்றி  பெற்றாரா?  என்பதைப் பார்ப்போம்            


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனுக்கு சினிமா  விமர்சகர்களைக்கண்டால் பிடிக்காது . ஒவ்வொரு சினிமா விமர்சகர் ஆக டார்கெட் வைத்து  ஸ்பெஷல்  ஷோ  இருக்கு , குடும்பத்துடன்  வரவும் என  அழைத்து  அவங்களைக்காலி  பண்ணும் கேரக்ட்டர் 


நாயகன்  ஒரு சினிமா விமர்சகர் . யு  ட்யூபில் சினிமா விமர்சனம்  செய்பவர் . இவருக்கும்  அதே  போல அழைப்பு வருகிறது .. இவரும்  குடும்பத்துடன்  போய்  தியேட்டரில்  மாட்டிக்கொள்கிறார் .அவர்  தன குடும்பத்தை எப்படிக்காப்பாற்றினார் என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக சந்தானம்  , மாறுபட்ட  கெட்டப்  ரசிக்க   வைக்கிறது . ஆனால்  படம் முழுக்க அவர் ;ப்ரோ  ப்ரோ எனப்பேசுவது சகிக்கவில்லை .. சில   ஒன்  லைனர் , சில   காமெடி  ஸீக்வன்ஸ்  அவரைக்காப்பாற்றி 

 இருக்கிறது 


 நாயகி  ஆக கீர்த்திகா திவாரி  டூயல் ரோல் . நாயகனுக்கு  ஜோடியாக ஒரு ரோல் , ஜெசிகா என்னும் பேய் ரோல்  இரண்டிலும் அதிக வாய்ப்பில்லை 


வில்லன் ஆக செல்வ ராகவன் .ஸ்கூல்  பசங்க  மாதிரி  மேக்கப் போட்டு கடுப்பேற்றுகிறார் 


போலீஸ் ஆபீசர்  ஆக கவுதம் வாசுதேவ் மேனன்  ஓகே  ரகம் . அவர் இயக்கிய படங்களில்  வரும் டூயட்டை  அவருக்கே  கொடுத்து  நடிக்க வைத்த ஐடியா குட் 


மொட் டை  ராஜேந்திரன் தான் படத்தின் ஒரே ஆறுதல் . பல இடங்களில்   சிரிக்க வைக்கிறார் 


நாயகனின் அம்மாவாக வரும் கஸ்தூரி  தெலுங்கில்  பேசி  காமெடி  பண்ண   முயற்சிக்கிறார் ., ம்ஹூம் .எடுபடலை 


நாயகனின் அப்பாவாக வரும்  நிழல்கள்  ரவி  காமெடி பண்ணுகிறேன் பேர் வழி என   நம்மை கோபப்படுத்துகிறார் . மை  டியர் மார்த்தாண்டன்  படத்தில்  கேவலமாக  ஒரு சிரிப்பு சிரிப்பாரே  அதே  சிரிப்பை அதை விடக்கேவலமாக  டெலிவரி செய்கிறார் 

ரெடின்  கிங்க்ஸ்லி  சுமார்  ரகம் .லொள்ளு சபா மாறன்  அதிக   வாய்ப்பில்லை 

தீபக் குமார் பதி யின்   ஒளிப்பதிவு   அருமை .நிஜ உலகம் , பேய் உலகம் என கலர் டோனில்  வெரைட்டி காட்டுகிறார்ரோஹித்  ஆப்ரஹாம் தான் இசை . பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை பரத்  விக்ரமனின் எடிட்டிங்கில்  133  நிமிடங்கள்  படம் ஓடுகிறது .பின் பாதியில்  20  நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 

திரைக்கதை , வசனம் எழுதி  இயக்கி இருக்கிறார் எஸ்  பிரேம் ஆனந்த்


சபாஷ்  டைரக்டர்


1  உயிரின் உயிரே  பாட்டுக்கு  கவுதம்  வாசுதேவ்  மேனன்  நாயகனின் தங்கை  காலைப்பிடிக்க  அவரது காலை நாயகன் பிடிக்கும் சீன்  நல்ல ஐடியா 


2  லொள்ளு சபா மாறன்  குளிருது  என பதறுவதும்  அந்த லேடி  அரக்க பறக்க   பொருட்களை சிதறடிப்பதும் காமெடி 


3 மஞ்சு மேல்  பாய்ஸ்   மலையாளப்பபடத்தை  நக்கல்   அடிக்கும்  சீன செம .ஜட்டி  பாய்ஸ்  என விளிப்பது  லொள்  ரகம் 


4  படத்துக்கு  ஜெசிக்காவின் டைரி  என டைட்டில் வைத்திருக்கலாம் .மேட்ச்சிங்காக இருந்திருக்கும் .அந்த டைரியை கைப்பற்ற  செய்யும்  காமெடி  அலப்பறைகள்  அருமை 


5  லொள்ளு சபா மாறன்  டி வி செய்தி வாசிப்பாளராக நடித்து  தப்பிக்க முயற்சிக்கும் சீன்  அருமை 


6   சினிமா விமர்சகர்கள் ஆன இட்  ஈஸ்  பிரசாந்த் , பிலிமி கிராப்ட்  அருண்  ஆகியோரை  நடிக் க வைத்தது புத்திசாலித்தனம் 


7  மொட்டை  ராஜேந்திரனின் எலி காமெடி  குழந்தைகளைக்கவரும் 


8  ஆர்ட்   டைரக்ஸன்  ஒர்க் அபாரம் . வி எப் எக்ஸ்  சில கப்பல்  சீன்கள்  செம 


9 இயக்குனரிடம்   பல  வித்தியாசமான    ஐடியாக்கள் கொட்டிக்கிடப்பது கண்கூடு 


  ரசித்த  வசனங்கள் 


1  இதுதான் உன் முதல் படமா? ரொம்ப ஓவரா நடிக்கறே? 


2  ஒவ்வொரு படத்தையும் கழுவி ஊத்தும்போது அப்படியே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 


3  லில்லி  ...... டோன்ட் பி சில்லி 


4  யோவ்  கிங்க்ஸ்லி, நெல்சன் சொல்லிக்கொடுத்த ஒரே  ஒரு மாடுலேஷன்  வெச்சு எல்லாப்படத்துலயும் நீ நடிச்சுட்டு இருக்கே 


5  எதனால  கீழே  பார்த்து பார்த்து  வசனம்  சொல்றே? 


 கீழே  தானே    சப்டைட்டில் ஓடுது ?


6 இதுல  எதோ ஒரு மேஸ்திரி இருக்கு 


யோவ் அது மிஸ்ட்ரி 


7   அந்தப்பொண்ணு  கிட்டே   அவரு என்ன பன்றாரு ? இங்க்லிஷ் ட்யூஷன் எடுக்கறாரோ ? 


8   இதுவரை இங்க்லிஷ்  ல பேசுனேனே  எதுனா புரிஞ்சுதா? 


புரிஞ்சுதா?  எனக்கேட்டது  வேணா புரிஞ்சுது 


9    கிங்க்ஸ்லி , புரூஸ்லீ , மூக்கு சளி 


10  சமையல்   செய்த  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும் , என்னது ? மோதிரம்  ஆல்ரெடி  சாப்பாட்டில் இருக்கு ? போட்டு விட்டுட் டாங்களா? 



11  அவ  உயிரோட  இருந்தா செம பீஸ் , செத்துட் டா ரெஸ்ட் இன்  பீஸ் 


12   ரேஷன்  கடைல 2000 ரூபா தர்ற  மாதிரி எல்லாரும் இங்கேயே  எதனால வர்றாங்க ? 


13   இந்தக்குழி  எவ்ளோ ஆழம்  இருக்கும்னு தெரியலையே? 


 நான் வேணா உன்னை தள்ளி விடறேன் , பார்த்துட்டு வர்றியா? 


14  அதுவரை  நான் என்ன செய்ய ?


 நிலாவை கிரகணம் பிடிக்காம பார்த்துட்டு இரு 


15  அந்த ஆப்  ஷேவ்டு  மண்டை ஆண்ட்டி இருக்கே ,,,,,,



16  போன  நியூ இயருக்கு வந்த  பத்து , பதினைந்து டைரிகளே  என் கிட் டே  சும்மா தான் இருக்கு . உன் டைரியை எடுத்து நான் என்னம்மா பண்ணப்போறேன் ?


17   எந்த லூசுன்னு  தெரியல ,  இத்துப்போன  இந்தக்கார் ல  இண்டிக்கேட் டரை ஆன்   பண்ணிட்டு போய் இருக்கு 


18   சாகப்போற நேரத்துல சாரி  வேற 


19  எனக்கு  2 அம்பு குத்திடுச்சு , உனக்கு 3 அம்பு குத்திடுச்சு 


 அது என்ன முட் டை  புரோட் டாவா? கணக்கு வைத்து அங்கலாய்க்க 



20    ஆட்டுக்கல்  பாயாவை  குக்கரில் வைத்த மாதிரி உஸ்னு ஒரு சவுண்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காமெ டி நடிகர்கள்  திரையில்    வந்தாலே ஆடியன்ஸ் சிரிக்க மாட் டார்கள் .ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருக்கணும் 


2 பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்  தமிழ்  திரையில்  அதிகம் வந்தது  கமல் படங்களில் தான் .  . இயக்குனர் கமல் ரசிகர் போல . பாத்ரூம்  , டாய்லெட்  சீன்கள்   ஓவர் .அதை வைத்து  செய்த   காமெடி எடுபடவில்லை  ,  உவ்வே  ரகம் 


3  பின் பாதி  ரொம்பவே இழுவை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எல்லோருக்கும்  படம் பிடிக்காது .குழந்தைகள்  ரசிக்கலாம் .முதல் பாகம் ,2 ம் பாகத்தை விட  இதில் காமெடி  குறைவு . விகடன்  மார்க் யூகம் 40 . ரேட்டிங்க்  2.5 / 5 



Devil's Double Next Level
Theatrical release poster
Directed byS. Prem Anand
Written byS. Prem Anand
Produced by
  • Venkat Boyanapalli
  • Arya
Starring
CinematographyDeepak Kumar Padhy
Edited byBharath Vikraman
Music byOfRo
Production
company
Release date
  • 16 May 2025
Running time
133 minutes[1]
CountryIndia
LanguageTamil

Wednesday, May 14, 2025

A DEADLY AMERICAN MARRIAGE (2025)- சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா டாக்குமெண்டரி ) @ நெட் பிளிக்ஸ்

                   

   இது  உண்மையில் நடந்த சம்பவம் .அயர்லாந்து  மீ டியாவில் பரபரப்பாகப்பேசப்பட்ட கொலை வழக்கு . கணவனைக்கொன்றதாக  மனைவி  மற்றும் , மாமனார்   கைது  செய்யப்பட்டு  25 வருடங்கள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டு  பிறகு  அப்பீலில்  7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு  குற்றவாளிகள்  இருவரும்  இப்போது   விடுதலை ஆன நிலையில்  அந்த கொலை வழக்கு .  பற்றிய   விபரங்கள்  ஓர் டாக்குமெண்டரி ஆக எடுக்கப்பட்டிருக்கிறது . சுவராஸ்யமான  இந்த வழக்கைப்பற்றிப்பார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  மிகப்பெரிய  கோடீஸ்வரன் கம் தொழில் அதிபர் . தனது  முதல் மனைவியுடன் காதல் திருமணம்  புரிந்தவருக்கு  3 வயதில் ஒரு மகனும் , ஒரு வயதில் ஒரு மகளும் உண்டு . குழந்தைகள் மேல்  அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் . 2006 ம் ஆண்டு  முதல் மனைவி க்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்பட்டு மரணம் அடைகிறார் .இப்போது  குழந்தைகள்  இருவரைப்பார்த்துக்கொள்ள ஆள் தேவை 


  நாயகன்   பேப்பரில் விளம்பரம் கொடுத்து  நாயகியை  நர்ஸ் ஆக நியமிக்கிறார் . குழந்தைகள்  இருவரைப்பார்த்துக்கொள்வதுதான்  நாயகியின் வேலை . நாயகி குழந்தைகள்  இருவரையம் நன்றாகக்கவனித்துக்கொள்வதோடு அவர்களிடம் பாசமாகவும் நடந்து கொள்கிறார் . இரு குழந்தைகளும்  நாயகியிடம் ரொம்ப அட்டாச்மெண்ட் ஆக   இருக்கின்றனர் 


 ஒரு கட்டத்தில்  நாயகன்   நாயகியைத்திருமணம் செய்து கொள்கிறார் . அதற்கு வரதட்சணையாக நாயகியின் அப்பாவுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றைக்கொடுக்கிறார் .


நாயகன் , நாயகி இருவரது திருமண வாழ்க்கை இனிமையாகப்போய் க்கொண்டிருக்கிறது .இருவருக்கும் குழந்தை இல்லை . முதல்  மனைவிக்குப்பிறந்த குழந்தைகளையே தன்  குழந்தைகளாகப்பார்த்துக்கொள்கிறார் நாயகி , அந்தக்குழந்தைகளும் நாயகியை அம்மா என்றே அழைக்கின்றனர் 


சில சட்ட   சிக்கல்களைக்களைய , பாஸ்போர்ட்  எடுக்க  அந்தக்குழந்தைகளை சட்டப்படி தத்து எடுத்துக்கொள்ள நாயகி ஆசைப்படுகிறார் . இது நாயகனுக்குப்பிடிக்கவில்லை . நாயகி எதோ சதித்திட்டம்  தீட்டுவதாக நாயகன் சந்தேகப்படுகிறார் 


இரு குழந்தைகளும்    தங்கள்   அப்பாவை நெருங்க , பழக   நாயகி அனுமதிப்பதில்லை . எப்போதும்   தன கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக்கொள்கிறார் . இதுதான் நாயகனுக்கு சந்தேகம் வரக்காரணம் .அதாவது  சட்டப்படி  நாயகி அந்தக்குழந்தைகளை  தத்து   எடுத்துக்கொண்டால்  ஒருவேளை  டைவர்ஸ்   அப்ளை  செய்தால் குழந்தைகளை   பராமரிக்க   மிகப்பெரிய  தொகையை   நாயகன்  நாயகிக்குத்தர வேண்டி இருக்கும் 


சம்பவம்   நடந்த  2015 ஆம்   ஆண்டு  நாயகி யின் அப்பா  நாயகி + நாயகன்   வீட்டில் தான் கெஸ்ட் ஆக வந்து இருக்கிறார் . நாயகன் , நாயகி    இருவருக்கும் எதோ சண்டை .பலத்த   வாக்குவாதம் .சத்தம் கேட்டு  நாயகியின்  தந்தை  மேலே   வந்து பார்த்த போது  நாயகியின் கழுத்தை   நாயகன் பிடித்து  நெறிப்பதைப்பார்த்ததாக கோர்ட்டில் தகவல் சொல்கிறார் 


 தற்காப்புக்காக  நாயகி  ஒரு செங்கல்லால் நாயகனைத்தாக்கியதாகவும் . தன்  மகளைக்காப்பாற்ற  ஒரு பேட்டா ல்   நாயகனின்   தலையை   அடித்ததாகவும்  வாக்குமூலம் தருகிறார்கள் .நாயகன் ஆள்  அவுட் 

ஒரு  கை கலப்பு , சண்டை நடந்தால் இரு தரப்புக்கும் காயம் இருக்க வேண்டும் . ஆனால்  நாயகிக்கோ  , நாயகியின் அப்பாவுக்கோ காயங்கள் ஏதும் இல்லை .போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்படி  நாயகனின்  தலை மிக பலமாக தாக்கப்பட்டிருக்கிறது . அது தற்காப்புக்காக தாக்குதல் அல்ல, வெறி கொண்ட வன்முறைத்தாக்குதல் என ரிப்போர்ட கூறுகிறது 


குழந்தைகள் இருவரும்   நாயகிக்கு ஆதரவாக வாக்குமூலம் தருகிறார்கள் 


  கொலைக்குற்றத்திற்காக   நாயகி , நாயகியின் அப்பா   இருவருக்கு 25 ஆண்டுகள்   சிறை  தண்டனை  விதிக்கபப்டுகிறது .குழந்தைகள்   இருவரும்   நாயகனின்  தங்கை குடும்பத்தாரால் பார்த்துக்கொள்ளப்படுகிறது . நாயகன்  இதை உயிலிலே  எழுதி   வைத்திருக்கிறார்


சில      ஆண்டுகள்   கழித்து  குழந்தைகள் இருவரும் வளர்ந்து  டீன் ஏஜ்  அடைகிறார்கள் . இப்போது  நாயகனின் தங்கை  ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் . மீண்டும் கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது . இரு குழந்தைகளும்  பொய் சாட் சி  அளித்ததாகவும்  அப்போது  நாயகி தான்   அப்படி சொல்லச்சொன்னதாகவும்  கூறுகிறார்கள் 


 இப்போது  நாயகி      தரப்பு   வக்கீல்  நாயகனின் முதல்   மனைவி  யின் மரணமே  இயற்கையானது  அல்ல .அதில் மர்மம் இருக்கிறது  என அந்த போஸ்ட்  மார்ட் டம்  ரிப்போர்ட்டை   சமர்ப்பிக்கிறார் . அந்த ரிப்போர்ட்டில்  முதல்  மனைவி  மூச்சு திணறி  இறந்ததாக இருக்கிறது  . கழுத்தை   நெரித்தும்  கொன்றிருக்கலாம் 

முதல் மனைவி   இருக்கும்போது +.இறக்கும்போது  முதல் மனைவியின் தங்கை  அங்கே  இருந்திருக்கிறாள் . ஒருவேளை  நாயகன் , தனது   மச்சினியுடன்   சேர்ந்து  அந்தக்கொலையை செய்திருக்கலாம் .அல்லது   நிஜமாகவே   அது ஒரு இயற்கை    மரணமாக  இருக்கலாம் 

கோர்ட்  தீர்ப்பிலேயே  முதல் மனைவியின்  மரணம்  மர்மம் நிறைந்தது   என சொல்லி இருக்கிறார்   ஜ்ட்ஜ் 

நாயகி  யின் அப்பீலில்  25 ஆண்டுகள் தண்டனை  7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு  2024ம் ஆண்டு   நாயகி , நாயகியின்  அப்பா    இருவரும்     ரிலீஸ்  ஆகி விட் டார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1   வழக்கில்  சம்பந்தப்பட் டவர்கள்  மட்டுமே  இதில்  தோன்றி இருக்கிறார்கள் .எல்லாம் லைவ் லொக்கேஷன் 


2    சிறப்பான , படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு 



  ரசித்த  வசனங்கள் 


1   குற்றவாளி   தரும் ஸ்டேட்மெண்ட்டை  100% அப்படியே  நாம் நம்பினால்; எங்கேயோ   நாம் தப்பு செய்கி றோம்  என்று  அர்த்தம் 


2  குழந்தைகளை     என்னிடம்  இருந்து நீ  பிரிக்க நினைத்தால்  உன்னிடம் இருந்து குழந்தைகளை    நான் பிரித்து விடுவேன் 


3  என்ன   சொல்லணும் என  குழந்தைக்கு சொல்லித்தருவது வேறு . , பொய் சொல்ல  சொல்லிக்கொடுப்பது வேறு 


4   வெளில   இருந்து பார்ப்பவர்களுக்கு இது சந்தோஷமான பேமிலி போலத்தோன்றும் 


5  இது   அழுவதற்கான நேரம் இல்லை , கோபப்படுவதற்கான நேரம் 


6 சித்தி மேல   அன்பு வெச்சிருந்தது   உண்மை , ஆனா   அதுக்காக   அவங்க   சொல்படி   எல்லாம்   கேட்க முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    நாயகனின்   முதல்   மனைவியின்   தங்கையிடம்  கோர்ட்  விசாரணை  செய்யவே  இல்லை  அது எதனால் ? 



2  நாயகியின்  அப்பா ஒரு முன்னாள்  அரசு  அதிகாரி , எப் பி ஐ  ஏஜென்ட்  ஆகத்திறன்படப்பணிப்புரிந்தவர்   என்பதால் அவருக்கு தண்டனைக்காலம் குறைக்கப்படுகிறது என தீர்ப்பில் இருக்கு.சட்டத்தின் முன் அனைவரும்   சமம்   இல்லையா ?


3   எப் பி ஐ  ஏஜென்ட்  ஆகபணி  புரிந்தவர்   என்பதால்  போலீஸ்   எப்படி எல்லாம் விசாரிக்கும் ? எப்படி பதில் சொல்ல வேண்டும்  என மகளுக்குப்  பயிற்சி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதே? 


4  நாயகி   நாயகனை மாட்டி  விட   அவர்கள்   இருவருக்கும் வாக்குவாதம் நடை பெறும்போதெல்லாம் ரகசிய டேப் ரெக்கார்டிங்  செய்திருக்கிறார் . அதை  கோர்ட்   கண்டு கொள்ளவில்லை 


5  நாயகன்   தனது   தங்கைக்கு   அனுப்பிய  மெயிலில் ஏதோ    தப்பு நடக்கிறது , திருமண   வாழ்க்கை திருப்தியாக இல்லை   என  கூறி   இருக்கிறார் .அது நாயகிக்கு எதிரான ஒரு பாயிண்ட் .அதையும் கோர்ட்   கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை 

6  அவ்வளவு   பெரிய கோடீ ஸ்வரன்   முதல் மனைவி   இறந்ததும்   வசதிக்குத்தக்கபடி  இரண்டாம்   திருமணமே  புரிந்திருக்கலாம்,   எதற்கு   நர்ஸ்   தேவை விளம்பரம் ?என தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் ?


7   நாயகி  தன சக்களத்தியின்   குழந்தைகளை   வைத்து  சொத்துக்களை அடைய  திட்டம்  போட்டதற்குப்பதிலாக  தன மூலம் ஒரு குழந்தையை  பிறக்க வைத்து  இன்னமும்   வலிமையாகப்போராடி இருக்கலாமே? எதற்காக  கர்ப்பத்தைக்கலைத்தார் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பான  சினிமா பார்ப்பது போல உள்ளது .அனைவரும் பார்க்கலாம், பெண்களும் ரசிக்கும்படியான குழந்தை  அம்மா சென்ட்டிமென்ட்  சீன்களும் உண்டு , ரேட்டிங் 3 / 5 

Tuesday, May 13, 2025

CHITHAMBARAM (1985) - சிதம்பரம் -( மலையாளம் ) - சினிமா விமர்சனம்(மெலோ டிராமா) @ YOU TUBE ( தேசிய விருது பெற்ற படம் )




மலையாள இயக்குனர் ஜி அரவிந்தன்  இதற்கு முன்னெடுத்த படங்களெல்லாம்  விருது  பெற்றிருக்கின்றன .மக்களின் பாராட்டுதல்களை அள்ளிக்குவித்து இருக்கிறது .ஆனால் இதுதான் கமர்ஷியல் சக்ஸஸ் பெற்ற படம் . சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.கேரளா  அரசின் மாநில விருதுகள்  நான்கினை  வென்ற  படம் . சிறந்த  படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த  நடிகர் , சிறந்த  இசை  அமைப்பாளர்   என நான்கு மாநில அரசின் விருதுகளை  வென்ற  படம் .


இந்தப்படம் பற்றி இதன் இயக்குனர் ஜி அரவிந்தன்  கூறுகையில்  "இது ஒரு சாதாரண  படம்   தான் .இதை என் மக்கள்  இந்த  அளவுக்குக்கொண்டாடினார்கள் என்பது தெரியவில்லை " என்கிறார் 


சி வி  ஸ்ரீராமன் எழுதிய  சிறுகதையை  மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்டது .இந்தக்கதையை  படமாக்க நினைத்ததும்  இதன்  இயக்குனர்  இதற்காக  பல தயாரிப்பாளர்களிடம் கதை  சொன்னார் . ஆனால் யாரும் தயாரிக்க முன் வரவில்லை .அதனால்  தானே  தயாரிக்க  முடிவு எடுத்தார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திருமண வயது கடந்த  பிரம்மச்சாரி . கேரளா - தமிழ் நாடு  பார்டரில்  உள்ள  அரசு பண்ணையில்  ஆபீஸ்  சூப்பிரண்ட்டண்ட்   ஆகப்பணி புரிகிறார் .வில்லன்  பீல்டு சூப்பர்வைசர்  ஆகப்பணிபுரிபவர் .வில்லனுக்கு எப்போதும்  வேலை வேலை  என  ஒர்க் அடிக்ட்  ஆக இருப்பவர் . தனக்குக்கீழ்  பணியாற்றும் பணியாளர்களிடம் கண்டிப்பாக இருப்பவர் . ஆனால்   நாயகன்  சகஜமாக எல்லோரிடமும்  பழகுபவர் 


இப்போது பண்ணையில்  வேலை செய்யும் சாதா பணியாள் முனியாண்டிக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது . 15 நாட்கள் லீவ் கேட் கிறான் . நாயகன்  லீவ் தந்து விடுகிறார் .ஆனால்   வில்லன்  2  நாட்களில்  ட்யூட்டியில் ஜாயின் பண்ண வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார் 



 திருமண  விழாவில் நாயகன் தான் ஸ்டில் போட்டோகிராபர் .,திருமணம்  ஆகி தன்  மனைவியுடன்  முனியாண்டி  வருகிறான் .. வில்லனுக்கு  அவள்  மேல் ஒரு கண் 



முனியாண்டி யின்   மனைவிக்கு  தனிமையில் இருக்க போர் அடிக்கிறது . தனக்கும் ஒரு வேலை  வேண்டும் என்கிறாள், ஆனால் கணவன் அவள் வேலைக்குப் போக சம்மதிக்கவில்லை 



முனியாண்டியின் மனைவிக்கு வில்லன் ஒரு வேலை  ரெடி பண்ணுகிறான் . ஆனால்   முனியாண்டி  நாசூக்காக வேண்டாம் என மறுத்து விடுகிறான் . இதனால் கடுப்பான வில்லன்  

முனியாண்டி க்கு இனிமேல் நைட்  ஷிப்ட்  ஒர்க் தான் என சொல்லி விடுகிறான் .


 வேறு வழி இல்லாமல்  நைட் ஷிப்ட்  பார்க்கும் முனியாண்டி ஒரு நாள்   நள்ளிரவில்  வில்லனின்   பைக்  சத்தம் கேட்டு  சந்தேகப்பட்டு  தன வீட்டுக்குப்போய்ப்பார்க்கிறான் 


அடுத்த நாள்  முனியாண்டி  தூக்குப்போட்டு   தற்கொலை   செய்த   நிலையில்   இருக்கிறான் 


 இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 

 முனியாண்டியாக   சீனிவாசன் நடித்திருக்கிறார் . ரஜினி நடித்த   குசேலன் (2008)  படத்தின்  ஒரிஜினல்  வீரன் ஆன கத பரயும்போழ் (2007) படத்தின்  கதாசிரியரும் , நாயகரும் இவரே . . அருமையான நடிப்பு .  பல  சீன்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் 


 நாயகன் ஆக பரத் கோபி   நடித்திருக்கிறார் .இவர் கேரளாவின் சிறந்த நடிகர்  மட்டும் அல்ல .இயக்குனர்   மற்றும் தயாரிப்பாளரும் கூட 


 நாயகி ஆக ஸ்மீதா படேல்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .இவர் ஒரு மராத்தி நடிகை 


வில்லன் ஆக   டாக்டர் மோகன் தாஸ்   நடித்திருக்கிறார் .இவருக்கு அதிக வாய்ப்பில்லை .சில சீன்கள் தான் வருகிறார் 

ஜி  தேவராஜன் இசையில் 6  பாடல்கள் , பெரும்பாலும் கோயில் களில்  வரும் பக்திப்பாடல்கள் தான் .பின்னணி இசை இதம் .ஆனால்  மாநில அரசின் விருது   வாங்கும் அளவுக்கு இசை இல்லை . ஒரு வேளை  அந்த ஆண்டின் ரிலீஸ்  படங்களில்  போட்டி இல்லையோ என்னவோ ? 


ஒளிப்பதிவு  ஷாஜி என் கருண்  ,பிரமாதம் .பாலு மகேந்திராவுக்கு இணையான தரம் .ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல  இருந்தது . எடிட்டிங்க்   ஓகே   ரகம் .டைம் டியூரேஷன்  100 நிமிடங்கள் .40 நிமிடங்களில்  முடிக்க வேண்டிய கதை ,இழுத்து விட் டார்கள் 


 திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர் ஜி அரவிந்தன் 


சபாஷ்  டைரக்டர்

1  தமிழகம் - கேரளா பார்டரில்  கதை நடப்பதாலும் , கதைப்படி நாயகி தமிழச்சி   என்பதாலும் பெரும்பாலான வசனங்கள் தமிழில் தான் 


2  கதையில்   கள்ளக்காதல்  சம்பவம்  இருந்தாலும்  ஒரு சீன்  கூட நேரடியாக  அதைக்காட் டாமல்  குறிப்பால் உணர்த்திய விதம் 


3  கணவன் , நாயகி முகத்தில்  சூடு போட் டான்   என்பது   சிறுகதையில்  சொல்லப்பட்டிருக்கு , ஆனால் படத்தில்  நாம் தான்    யூகித்துக்கொள்ள வேண்டும் . பல இடங்கள் நாசூக்காயத்தான் சொல்லப்பட்டிருக்கு 


4  நாயகன் ,நாயகி இருவரது கேரக்ட்டர்  டிசைனும்  கனகச்சிதம் 


5  ஒரு மனிதன் செய்யும் தவறால் ஏற்படும் குற்ற உணர்ச்சி  அவன் சாகும் வரை அவனைத்துரத்திக்கொண்டே இருக்கும் என்பதுதான் கதையின் மைய இழை 

ரசித்த  வசனங்கள் 

1  சரக்கு அடிக்கும்போது  எல்லா மனிதர்களும் சமம் 


2 திருமணங்கள்   சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகின்றன  என்பது அந்தக்காலம், இப்போது பணம் தான்  பிரதானம் 


3  உலகில்  அனைவருக்குமே அவங்கவங்க பண்ணுவதில் அவங்கவங்க நியாயங்கள் இருக்கும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1     100 நிமிடங்கள்   ஓடும் படத்தில்  நாயகன் , வில்லன், கொலீக்ஸ்  அனைவரும் தண்ணி அடிக்கும் சீன்கள் , சரக்கில் தண்ணீர் மிக்ஸ் செய்யும் சீன்கள் , தம் அடிக்கும் சீன்கள் , இவற்றை  நீக்கி விட் டால்   25 நிமிடங்கள்   மிச்சம் ஆகும் 



2  நாயகியின்  கணவன்   தற்கொலை  செய்து கொண்டதும்  ஒழுக்கமான  கள்ளக்காதலன்  நாயகியை திருமணம் செய்திருப்பான் , விட்டு விட்டு ஓட  மாட் டான் 


3   சிவபெருமான்  சிதம்பரம் என்ற  ஊரில்  எப்படி எதற்கு வந்தார் என்ற ஸ்தல புராணம்  க்ளைமாக்சில்  நாயகன் - நாயகி இணைந்தார்களா?   என்பதன்  விளக்கம்  ஆகிய இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்பது ஏ செண்ட் டர்   ஆடியன்ஸுக்கு மட்டும் தான் புரியும் .இன்னமும் தெளிவாக சொல்லி இருக்கலாம் 


4 ஒரு கள்ளக்காதல் கதைக்கு தேசிய விருது ,மாநில விருது எல்லாம் கொடுத்தால்  ஆளாளுக்கு   அதே டைப் கதைகளை எடுக்க மாட் டார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேசிய விருது  பெற்ற  படம் என்ற  ஒரே  காரணத்துக்காகப்பார்த்தேன் .ரொம்பப்பொறுமை  வேண்டும் .மகேந்திரன் , பாலுமகேந்திரா  படங்கள்   பார்ப்பபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2/ 5 


Chidambaram
Promotional poster
Directed byG. Aravindan
Screenplay byG. Aravindan
Story byC. V. Sreeraman
Produced byG. Aravindan
StarringBharath Gopi
Smita Patil
Sreenivasan
Mohan Das
CinematographyShaji N. Karun
Music byG. Devarajan
Production
company
Sooryakanthi
Distributed bySaj Movies
Release date
  • 8 March 1985
Running time
100 min
CountryIndia
LanguageMalayalam

Monday, May 12, 2025

DISCLAIMER (2024) - ஆங்கிலம் - அமெரிக்கன் வெப் சீரிஸ் விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் எரோட்டிக் த்ரில்லர் )@ அமேசான் ப்ரைம்,ஆப்பிள் டி வி 18+


 7  எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ்  இது .ஒவ்வொரு எபிசோடும்  45 நிமிடங்கள்  டூ  55 நிமிடங்கள் , ஆக மொத்தம் 350 நிமிடங்கள் , அதாவது  6 மணி நேரத்துக்கு  அருகில் .ஒவ்வொரு எபிஸோடிலும் கடைசி  5 நிமிடங்கள் ஸ்கிப் பண்ணிடலாம், டைட்டில்  தான் 


இதன் திரைக்கதை  நான் லீனியர்  கட்டில்   சொல்லப்பட்டிருக்கும் . விருமாண்டி  பட பாணியில்  பாதிக்கப்பட் ட   நாயகனின்  பார்வையில்  நாயகனின் அம்மா எழுதிய   நாவல் மூலமாக  சொல்லப்படும் சம்பவங்கள் தனி .கடைசியில்  நாயகியின் பார்வையில் சொல்லப்படும் சம்பவங்கள்  தனி 


2015ல் ரேணி நைட்  என்பவர்  எழுதிய   நாவலைத்தழுவி  எடுக்கப்பட் ட சீரிஸ் இது அபோன்சோ குரான்   என்பவர் தான் திரைக்கதை ,இயக்கம் 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  கணவன் திருமணம்  ஆகும் வரை  ஒழுக்கமாக இருந்தவன் . நாயகி தான் அவனுக்கு முதல் பெண்  ஸ்பரிசம் . ஆனால்  திருமணத்துக்குப்பின்  நாயகிக்கு அவன் உண்மையாக இல்லை .படத்தின் ஓப்பனிங்க் சீனிலேயே   நாயகியின் கணவன்  வேறொரு  பெண்ணுடன்  நெருக்கமாக இருப்பதில் தான் ஆரம்பிக்கிறது .



நாயகி  , அவளது   கணவன்   இருவருக்கும் ஒரு மகன் பிறக்கிறான் . 5 வருடங்கள்  இல்லற வாழ்க்கை  சுமூகமாகப்போகிறது . நாயகி தன குடும்பத்துடன் டூர்   போகிறாள் .கடைசி நேரத்தில் அவளது   கணவன்  வரவில்லை . என்னைத்தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம் என நாயகி மன்றாடிக்கேட்டுக்கொள்கிறாள் , ஆனால்  கணவன் கேட்கவில்லை 


 டூரில்   மகனுடன் நாயகி   ஜாலியாகப்பொழுதைக்கழிக்கிறாள் 



நாயகனுக்கு 18 வயது   , டீன் ஏஜ்  மாணவன் .அவனுக்கு ஒரு கேர்ள்  பிரன்ட்  உண்டு . இருவரும் ஜாலியாக ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் . அப்போது   நாயகனின்  காதலிக்கு அவளது  சித்தி  சீரியஸ் ஆக இருப்பதாகத்தகவல் வருகிறது . அவள்   கிளம்பி விடுகிறாள் .நாயகன் தனியாக இருக்கிறான் 


க்ளப்பில்  சரக்கு அடிக்கும்போது  நாயகன், நாயகி இருவருக்கும் அறிமுகம் உண்டாகிறது 


இப்போது   சொல்லப்போவது   நாயகனின் அம்மா   எழுதிய நாவல் வெர்சன்  ல சொல்லப்பட்ட சம்பவங்கள் .


 நாயகி   நாயகனை தூண்டி  மயக்குகிறாள் . உறவு கொள்கிறாள் . அடுத்த   நாள்   நாயகி கிளம்ப 

 இருக்கும்போது நாயகன் நானும் உன்னுடனே வருகிறேன் என்கிறான் . நாயகி   மறுக்கிறாள் . எனக்கு கணவன் உண்டு . நான் என் வழியே  போகிறேன் , நீ உன் வழியே   போ   என்கிறாள் . நாயகன் கேட்கவில்லை 



 மாலையில் பீச்சில்   நாயகி  தன்  மகனுடன்  ஓய்வெடுக்கும்போது  கண்  அசந்து   தூங்கி   விடுகிறாள் விழித்துப்பார்க்கும்போது அருகில் மகன் இல்லை . பதறி  தேடிப்பார்த்தால்   அவன் கடலில்  தூரத்தில்  மாட்டிக்கொண்டு விட் டான் . நாயகன்  நாயகியின் மகனைக்காப்பாற்றுகிறான் . ஆனால்   நாயகன்  கடலில் மூழ்கி  இறந்து விடுகிறான் 


  நாயகி நினைத்திருந்தால் நாயகனைக்காப்பாற்றி இருக்க முடியும் . ஆனால்   வேண்டும் என்றே   நாயகி அதைத்தவிர்த்து விடடாள் .காரணம்  நாயகனைக்காப்பாற்றினால்   நாயகிக்கு அபாயம் . நாயகி பின்னாலேயே வருவான் . எதற்கு வம்பு ? என விட்டு விடடாள் 


நாயகனின்  கேமராவில் இருந்த சில போட்டோ க்களை வைத்து நாயகனின் அம்மா வும் அப்பாவும் நாயகியை அடையாளம் அறிந்து கொள்கின்றனர்  . நாயகனின்  அம்மா   ஒரு ரைட் டர்   என்பதால்   தான் கண்ட  போட்டோ க்களை வைத்து  இது தான்  நடந்திருக்கும்    என்ற   யூகத்தில்   ஒரு நாவல் எழுதி   சொந்தமாக பப்ளிஷ்   செய்கிறார் 


நாயகன்   நாயகியை எடுத்த கிளாமரான  போட்டோக்களை  நாயகியின் கணவனுக்கும் , நாயகியின்   மகனுக்கும்  தனித்தனியே   அனுப்புகிறான்  நாயகனின் அப்பா . இதனால்  குடும்பத்தில்   குழப்பம் வருகிறது .


  தான் ஒழுக்கம் இல்லாதவனாக இருந்த போதிலும்   தன்  மனைவி   கற்புள்ளவள் ஆக இருக்க வேண்டும் என நினைத்து நாயகியின் கணவன் அவளைப் பிரிகிறான் . தன அம்மாவையே  மோசமான   நிலையில் பார்த்ததால்  நாயகியின் மகன்  மன பதட் டம்  அடைந்து  போதை மருந்து   உட்கொண்டு   சீரியஸ்   கண்டிஷனில்  ஹாஸ்ப்பிடலில் அட்மிட் ஆகிறான் 


 தன மகன்  இறந்த   துக்கத்தை  நாயகியும் அனுபவிக்க வேண்டும் என நினைத்த நாயகனின் அப்பா   நாயகியின் மகனைக்கொல்ல ப்போகிறார் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை 


நாயகியின்   தன்னிலை விளக்கமாக   வேறு  ஒரு பாய்ண்ட்  ஆப் வியூவில்  ஒரு கதை   சொல்லப்படுகிறது 



5  வயது   மகனின்  அம்மாவாக வரும்  25 வயது ஆன நாயகி ஆக  ஒரு நடிகையும் , 20  வருடங்கள்   கழித்து  45 வயது ஆன நாயகி ஆக  வேறு ஒரு நடிகையும் நடித்திருக்கிறார்கள் . முதலாமவர்  அழகு , இளமை .இரண்டாமவர்  குணச்சித்திர   நடிப்பு . இருவருமே  நடிப்பில்  சிறப்பு .நாயகியின்  கணவர் ஆக   வருபவர்   பரவாயில்லை ரகம் . நாயகன் ஆக வரும் டீன் ஏஜ்   மாணவன்  நடிப்பு சிறப்பு .நாயகனின்   அப்பா  வில்லன் போல  நடந்து கொள்வது  அருமை . ஒளிப்பதிவு ,இசை  கச்சிதம் 


சபாஷ்  டைரக்டர்

1  நான் லீனியர்  கட்டில் கதை  சொன்ன விதம் அருமை . பிளாஷ்பேக்  சீன் .தற்கால சீ ன்     என குழப்பம் இல்லாமல் சொன்ன விதம் அழகு 


2  நாயகி  தான் நாயகனை   மயங்கினாள்  என்பது போல  நாயகனின்   அம்மா  கற்பனையாக  நாவலில்   விவரிக்கும் சம்பவங்கள்  செம கிளு கிளுப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1 அவன்   பலமானவன் இல்லை , ஆனால் அப்படி நினைத்த்துக்கொண்டான் 


2  மேரேஜ்   என்பது டெலிகேட் பொசிசன் தான் ., ஆனால்  உனக்கு மட்டுமல்ல,உலகில் எல்லோருக்கும் தான் 


3    50  வருசமா   ஒரே பாடத்தை  திருப்பி திருப்பி நடத்தி போர் அடிக்குது 


4  அவளுக்கு உதவி செய்யவே என்னை விடமாட் டா 


5 இப்படி   ஒரு கொடூரம்  நடந்தது   தெரியாமலேயே  சூரியன் உதித்தது 


6 நல்ல   பெண்ணுக்கு  கள்ளக்காதலுக்கு டைம் இருக்காது 


7  ஹூம் , பேய் வந்து தானாக்கதவைத்தட்டுது 


8   அவள்   தன தவறுகளை உணரவுமில்லை , மன்னிப்புக்கேட் கவும் விரும்பலை 


9  வயதானவர்கள்  பேஸ்புக்  யூஸ் பண்றாங்க , யூத்-ங்க   இன்ஸடாகிராம் யூஸ் பண்றாங்க 


10  மகனுக்கு ஒரு ஆபத்து எனில் உடனடியாகக்களத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற  முயல்வதில் அம்மாக்களை விட அப்பாக்கள் தான் முன்னிலை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹாஸ்ப்பிடலில்  சி சி டி வி  கேமரா   இருக்கும்போது   வில்லன் எப்படி   நாயகியின் மகனைக்கொல்ல முயல்கிறான் ? 


2   வில்லனின்  மகனை   நாயகி  கொன்றதாக  வில்லன் நினைப்பதால் வில்லனால் தன மகனின் உயிருக்கு ஆபத்து என்பதை நாயகியின் கணவன் யூகிக்காதது எப்படி ? 


3  நீச்சல்   அறிந்த   நாயகன்  நாயகியின்  மகனைக்காப்பாற்றி  விட்டு  அவன் மட்டும்   கடல் நீரில் மூழ்கி  இறப்பது எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கதை   சொல்லும் உத்தி , நாயகியன்  அழகுக்காகப்பார்க்கலாம் .முதல்  4  எபிசோட்களில்  முடிக்க வேண்டியது .இழுத்து  விட் டார்கள்  .  7 வது   எபிசோடில்  நாயகியின்   வெர்சன்  சொல்லப்படுது . 5, 6  ஆகிய எபிசோட்களைப்பார்க்காவிடடாலும் கதை புரியும் . ரேட்டிங்க் 3/ 5 


Disclaimer
Promotional poster
Genre
Based onDisclaimer
by Renée Knight
Written byAlfonso Cuarón
Directed byAlfonso Cuarón
Starring
Narrated by
ComposerFinneas O'Connell
Country of origin
  • United States
  • Australia
  • Mexico
Original languages
  • English
  • Italian
No. of episodes7
Production
Executive producers
Production locations
  • London
  • Italy
Cinematography
Editors
  • Alfonso Cuarón
  • Adam Gough
Running time45–55 minutes
Production companies
Original release
NetworkApple TV+
ReleaseOctober 11 –
November 8, 2024

Sunday, May 11, 2025

EXTRA DECENT (2024) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( டார்க் காமெடி சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம் , மனோரமா மேக்ஸ் , சைனா பிளே






 த கிரேட்  இந்தியன் கிச்சன் , டிரைவிங்க்  லைசன்ஸ் உட்பட  பல படங்களில்  வித்தியாசமான  வேடங்களில்  நடித்த    சுராஜ் வெஞ்சாரமூடு வின் சொந்தப் படம் இது . கேரளாவில்  20/12/2024 அன்று திரை அரங்குகளில் வெளியாகி  ஏ சென்ட்டர்களில்  மட்டும்  ஓடிய படம் இது .அனைத்துத்தரப்பினரும் ரசிக்க  முடியும் என சொல்ல முடியாது .இப்போது அமேசான்  ப்ரைம் ,  மனோரமா  மேக்ஸ் , சைனா பிளே  ஆகிய  ஓ டி டி  தளங்களில்  தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது . மெலோ  டிராமா   தான் .மெதுவாகத்தான் படம் நகரும் .பெண்களும் , பெண்களைப்போல பொறுமை உள்ள ஆண்கள் மட்டும் பார்க்கலாம் 


அந்நியன்  படத்தில்  சீயான் விக்ரம் எப்படி   அம்பி , ரெமோ ,அந்நியன்  என  மூன்று   விதமான  கேரக்டர்களில்  நடித்துக்கலக்கினாரோ   அதே  போல இந்தப்படத்தின் நாயகனும் அப்பாவி ,சைக்கோ , கோமா ஸ்டேஜில் இருந்து மீள  விரும்புபவர்  என   மூன்று  மாறுபட் ட      கேரக்டர்களில்  கலக்கி இருக்கிறார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  குடி இருக்கும் அபார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  வறுமையின் காரணமாக ஜெயிலுக்குப்போனால் ஓ சியில் வேளாவேளைக்கு  சாப்பிடலாம் என நினைத்து   நாயகனை  தாக்குகிறான் .இதனால் தலையில் அடிபட் ட நாயகன் கோமா நிலைக்குப்போய் விடுகிறான் . ஹாஸ்ப்பிடலில் அ ட்மிட ஆகிறான்  . அங்கே  நாயகனை விசாரிக்க போலீஸ் வருகிறது . நாயகனின்  அம்மா, அப்பா , தங்கை , தங்கையின்  வருங்காலக்கணவன்  நால்வரும்  ஹாஸ்ப்பிடலில்  இருந்தாலும் அவர்கள் நடவடிக்கை மர்மமாக இருக்கிறது . நாயகனுக்குப்பிசகிய நினைவுகள் திரும்பி வருவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை . இன்னமும் சொல்லப்போனால் நாயகனைக்கொலை செய்ய  நாயகனின் குடும்பமே  திட் டம்  தீட்டுகிறது 





நாயகன்     சிறுவனாக இருந்தபோது  நாயகனின் அண்ணன்  நாயகனுக்கு  சமைக்க  கேஸ்  அடுப்பைப்பற்ற  வைக்கையில் கேஸ்   சிலிண்டர்   வெடித்து  மரணம் அடைகிறான் . அந்த  மரணத்துக்கு தானும் ஒரு வகையில் காரணம் என்ற  குற்ற   உணர்வும் , மரணத்தை  அருகில் பார்த்த கோடூரமும்  சேர்ந்து நாயகனை மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது . யாரிடமும்  பழகாமல் ,பேசாமல்  மூடி டைப்பாகவே நாயகன் வளர்கிறான் . நாயகனின் அப்பா   நாயகனை எப்போதும்  கரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார் . நாயகனுக்கு ஒரு தங்கை உண்டு .


 வளர்ந்து   பெரியவர்கள் ஆனதும்   நாயகனின் தங்கை அமேரிக்கா  போக இருப்பதாக சொல்கிறாள் . அப்போது  நாயகன் நானும் நன்றாகப்படித்திருந்தால் தங்கை போலவே அமெரிக்க போய் இருப்பேன் என்கிறான் . வழக்கம்  போல   நாயகனின் அப்பா   நாயகனை கிண்டல் செய்கிறார் . எப்போதும்   அமைதியாக இருக்கும் நாயகன் இந்த முறை  கோபம்  கிளம்ப  தன அப்பாவைப்பார்த்து  ஒரு பயங்கரமான கேள்வியைக்கேட்கிறான் 



அதைக்கேட்டு   நாயகனின்  அம்மாவும்  அப்பாவும்,  அதிர்ச்சி அடைகிறார்கள் . பொதுவாக யாருமே   தன்  பெற்றோரைப்பார்த்து   அப்படி  ஒரு கேள்வியைக்கேட்க மாட் டார்கள் . இதற்குப்பின் நாயகன்  தன பெற்றோரைத்துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோவாக மாறி விடுகிறான் . உங்களைப்பற்றிய இந்த ரகசியத்தை தங்கையிடம் சொன்னால் அவள் தற்கொலை செய்து கொள்வாள். சொல்லவா? என மிரட்டுகிறான் .


நாயகனின்   நண்பன்   சின்ன வயதில் இருந்தே  நாயகனின் தங்கையை  காதலிக்கிறான் .  திருமணம் செய்ய   முடிவெடுத்தபோது  நாயகனுக்கு அதில் விருப்பம் இல்லை .வீடடை  விட்டு  தங்கையை அனுப்பி விடுகிறான் 


 இப்படிப்பட் ட   சூழ்நிலையில்   தான் நாயகனுக்கு  தலையில் அடிபட்டு  கோமா ஸ்டே ஜ்   நிலை . இப்போது நாயகனின்   குடும்பத்தார்   ஒன்று   நாயகனுக்குப்பழைய   நினைவுகள்   திரும்பக்கூடாது .அல்லது  அவனைக்கொலை செய்து  விட வேண்டும்  என   நினைக்கிறார்கள் . இது   தெரியாத   ஹாஸ்பிடல் நிர்வாகம்  நாயகனைக்காப்பாற்ற  நடவடிக்கைகள்  எடுக்கிறது 


 இதுவரை   நான் சொன்னவை எல்லாம் படத்தின் முதல் 20 நிமிடக்கதைதான் .இதற்குப்பின் நடக்கும்   காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 



நாயகன்   ஆக சுராஜ் வெஞ்சாரமூடு  கலக்கலாக   நடித்திருக்கிறார் , வழக்கமாக   அவரை   தாடி மீசையுடன்  பார்த்து விட்டு  கனம் கோர்டடார் அவர்களே  சத்யராஜ் கெட் டப்பில்  வித்தியாசமான   கண்ணாடி  யுடன்   தாடி மீசை இல்லாமல் பார்க்க என்னவோ போல் இருக்கிறது, பின் பழகி   விடுகிறது 


நாயகனின்   தங்கை ஆக  கிரேஸ்  ஆண்ட்டனி  அசால்ட்  ஆக நடித்திருக்கிறார் . இவர் ஒரு நாயகி மெட் டீரியல் . கொழுக்   மொழுக் கன்னங்கள் . ஆப்பிள்  உதடுகள் பிளஸ் 


நாயகனின்   அம்மாவாக   வினயா   பிரசாத்   முக்கியமான   ரோலில் வருகிறார் . இவர் சந்திர முகி  படத்தில் நாசரின் மனைவியாக வருபவர் .இவர்  கேரக் டர்  டிசைன்   சிக்கலானது . திறம்பட நடித்திருக்கிறார் 




நாயகனின்   அப்பாவாக   சுதீர்கரமானா  வருகிறார் .இவரது கேரக் டர்  டிசைன்     நல்லவரா?   கெட்டவரா? எனக் குழப்பி க்ளைமாக்சில்  ஓப்பன்   பண்ணும் விதம் அருமை 


நாயகனின்   தங்கையின்   காதலன்  ஆக  ஷ்யாம் மோகன்  கலகலப்பான நடிப்பு , பிரேமலு  படத்தில்  நடித்ததைப்போலவே இதிலும் காமெடி  நடிப்பு அருமை 


நாயகனின்  நண்பனாக  பின் பாதியில் வரும்  வினீத்   தட்டில்   டேவிட்   கலகலப்பான  ரோல் .இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்   என அடிக்கடி   இவர் சொல்வது காமெடி 


அங்கித்   மேனனின்   இசையில்   இரு பாடல்கள்   ஓகே   ரகம் . பின்னணி   இசை ப ரவாயில்லை .இது மாதிரி சைக்கோ க்ரைம்  த்ரில்லர் படத்தில்   ஒளிப்பதிவு   டார்க்   டோனில்   இருக்கும், ஆனால்   இது காமெடி   டிராமா  என்பதால் ஸ்ரோன்  சீனிவாஸ்   தெள்ளத்தெளிவாக  பளிச்  ஒளிப்பதிவைத்தந்திருக்கிறார் .ஸ்ரீஜித்  சாரங்கின் எடிட்டிங்கில் படம்  125   நிமிடங்கள்   ஓடுகிறது .முதல்   பாதி நல்ல விறுவிறுப்பு ., பின் பாதி ரொம்ப ஸ்லோ 


 கதை , திரைக்கதை  ஆசிப் கக்கொடி , இயக்கம் அமீர்  பள்ளிக்கல் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகன்  அப்பாவி  யிலிருந்து  சைக்கோ ஆக மாறும் டிரான்ஸ்பர்மேஷன் சீன்களிரண்டும் அருமை 


2  வழக்கமாக   அம்மா கேரக்ட்டர்  டிசைன் ஒரே   மாதிரி  உருவாக்கப்படும், இதில் மாறுபட்டு  இருந்தது 


3   நீ கொடுத்ததை நான்   திருப்பிக்கொடுப்பேன் 10 மடங்காக என நாயகன்  நடந்து கொள்ளும்  விதம் செம 


4  ஒளிப்பதிவு  அருமை 

 ரசித்த  வசனங்கள் 

1    என்னது ? யு கே ஜி ல  இருந்தே  என்   தங்கையை நீ லவ் பண்றியா? கின்னஸ் ல  வரும் போலயே? 


2  நீ    என்னோட  பிரெண்ட்  ஆனதே  என் சிஸ்ட்ரை  லவ்  பண்ணத்தான் போல 


3  வாரிசைப்பார்த்துக்கொள்வது மட்டும் தான் பெற்றோரின்  கடமையா? 


4  இது ஆடு ஜீவிதம் இல்லை , பட் டி ஜீவிதம் , நாய் வாழ்க்கை 


5   உலகில்  உள்ள அனைவரையும்  வழி நடத்துவது எது ?  


சின்சியாரிட்டி ? 


 நோ 

 லவ் ?


 நோ . பயம் தான்  எல்லாரையும்  வழி நடத்துது 



6  எனக்கு எல்லோரிடமும் நட் பு கொள்ள ,அன்பு   பாராட் டத்தெரியாது ,ஏன்   எனில் எனக்கு அவை கிடைக்கவில்லை 


7  பயம் தான்   அனைத்து உறவுகளையும்  ஒருங்கிணைக்குது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனைக்கொலை செய்யும் அளவுக்கு அம்மா, அப்பாவுக்குப்போதிய காரணங்கள்  இல்லை .அனைத்த்து சொத்துக்களையும் நாயகன் தங்கை பெயரில் எழுதி வைத்து விடுகிறான் .அவனால்  பெரிய   பிரச்சனை இல்லை .சுலபமாக அவனை விட்டு விலகி இருக்கலாம் 


2  நாயகனின்   அம்மா கேரக்ட்டர்  டிசைன்  மாறுபட்டு  இருந்தாலும்   முழு   நிறைவு இல்லை . இன்னமும்  விளக்கி இருக்கலாம் 


3  நாயகி  அதாவது   நாயகனின் ஜோடி  சீன்கள்   எடிட்டிங்க்கில்  ட்ரிம் செய்யப்பட்டிருக்கலாம்.,. அவர் வரும் சீன்கள் ஒட் டவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+   aU/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்    மாறுபட்ட  திரைக்கதை  விரும்பிகள்  பார்க்கலாம் . வேகமான  திரைக்கதையில் உருவான ஜனரஞ்சசகமான படம் அல்ல . ரேட்டிங் 3 / 5 



Extra Decent
Theatrical release poster
Directed byAamir Pallikkal
Written byAshif Kakkodi
Produced byListin Stephen
Suraj Venjaramoodu
StarringSuraj Venjaramoodu
Grace Antony
Shyam Mohan
Sudheer Karamana
Vinaya Prasad
CinematographySharon Sreenivas
Edited bySreejith Sarang
Music byAnkit Menon
Production
companies
Magic Frames
Vilasini Cinemas
Distributed byMagic Frames
Release date
  • 20 December 2024
CountryIndia
LanguageMalayalam

Friday, May 09, 2025

BLACK MIRROR SESSION 7 (2025) -பிரிட்டிஷ் வெப் சீரிஸ் விமர்சனம் ( ஆந்தாலஜி சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் ) @ நெட்பிளிக்ஸ்

 

இதுவரை  ஆறு பாகங்கள்  வெளி வந்திருக்கின்றன .ஒவ்வொரு பாகத்திலும்  வெவ்வேறு  சிறுகதைகள்  இருக்கும் . தனித்தனி கதைகள் . எல்லாவற்றையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை . 2011 ல்  இருந்து  வந்துகொண்டிருக்கிறது . இந்த 7 வது பாகத்தில் 6 கதைகள் தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது நெட்பிளிக்ஸ்  ஓ  டி டி யில் காணக்கிடைக்கிறது .18+  சீன்கள்  உண்டு . குடும்பத்துடன் பார்க்க முடியாது .வித்தியாசமான கோண த்தில்  சொல்லப்பட்ட  நல்ல கதைகள் தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 1  காமன் பியூப்பிள் -  நாயகன் , நாயகி   இருவரும்  திருமணம்  ஆன தம்பதி .குழந்தை  இதுவரை இல்லை . வெயிட்டிங்க் . இருவரும் பணிக்கு செல்பவர்கள் . நாயகிக்கு திடீர் என  மூளைக்கட்டி  நோய்   தாக்குகிறது .நாயகனுக்கு என்ன செய்வது என்றே   தெரியவில்லை . நடுத்தரக்குடும்பம் . நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர் . நாயகன் பில்டிங்க் பணியாளர் . பெரிய வருமானம் எதுவும் இல்லை . இப்படிப்பட் ட  தருணத்தில்   ஒரு கம்பெனி  இவரை அணுகி  உங்கள் மனைவிக்கு  உண்டாகும் அனைத்து மருத்துவ  செலவுகளையும்   எங்கள் கம்பெனியே  பார்த்துக்கொள்ளும் . அனைத்தும்   இலவசம், ஆனால்  ஒரு கண்டிஷன் இருக்கிறது   என்கிறாள்   வில்லி , அந்தக்கம்பெனி யின்   எம் டி . அந்தக்கண்டிஷன் என்ன?நாயகன்  அதற்கு ஓத்த்துக்கொண்டாரா? பின் விளைவுகள்   என்ன ஆனது ? என்பது மீதி திரைக்கதை 


 நாயகன் , நாயகி , வில்லி என  மூன்றே   முக்கியக்கேரக்ட்டர்கள் . கச்சிதமான திரைக்கதை . இந்தக்கதை புரிந்து  கொள்ள  ஜியோ  சிம்மை  நினைவு கொண்டால் போதும் .நெட்    கனெக்சன்  தர  ஏர்செல் , ஏர்டெல் , பி எஸ் என் எல்  போன்ற  நிறு வனங்களெல்லாம்  பயங்கர சார்ஜ்  வசூலித்த கால கட்டத்தில் மலிவான விலைக்கு  நெட்  வசதி தந்து  ஏர்செல்லை  ஒழித்துக்கட்டி  ஜியோ  தனி  ஒரு ராஜாங்கம் அமைத்தது .பின் அது வைத்ததுதான் சட்டம் 


இந்தக்கதையில்   நாயகி , வில்லி   இருவருக்கும் நடிக்க   அதிக   வாய்ப்பில்லை .நாயகன் தான்  மொத்தக்கதையையும் தாங்கி நிற்கிறார் . நல்ல   நடிப்பு .க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு  பயங்கரம் 

2 சாக்லட்    நாயகி  ஒரு பிரபல  சாக்லட்  கம்பெனியில்   குவாலிட்டி செக்கர் ஆக   இருக்கிறார் .இவரது வேலை  சாக்லட் டை  டெஸ்ட்   பண்ணி டேஸ்ட்  பார்த்து   தரமானதா ?என சொல்வதுதான் .கம்பெனியில்  இவருக்கு நல்ல பெயர் . நீண்ட கால சர்வீஸ் . இப்போதுதான் வில்லியின்   எண்ட்ரி 


  வில்லி   நாயகியின்  ஸ்கூல் மேட் . அப்போதே   நாயகியை விட செம டேலண்ட்  இபபோது  இந்தக்கம்பனியில்   புதிதாக வேலையில்  சேர வந்திருக்கிறாள் . வில்லி   நாயகியை டாமினேட் செய்து விடுவாள் என்பது நாயகிக்கு தெரியவருகிறது . வில்லியை  மடக்க   நாயகியும் , நாயகியை மட்டம்  தட்ட   வில்லியும் போடும் திட்ட்ங்கள் தான் மீதி திரைக்கதை .இறுதியில்  வென்றது  வில்லியா?நாயகியா?என்பது க்ளைமாக்ஸ் 


இதில்   நாயகியாக நடித்த  நடிகை செம அழகு . அவரது கர்லிங்க் ஹேரும் ,ஆடை வடிவமைப்பும் அட்டகாசம் . வில்லியாக வருபவர்  நாயகியை விட செம கலர் என்றாலும்  நமக்கு நாயகியின் நந்திதாஸ்  கலர் தான் பிடிக்கிறது 





3  ஹோட்டல்  ரேவரி - நாயகி  பிரபல  சினிமா நடிகை . இவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது , அதாவது  பழைய  சூப்பர் ஹிட் படத்தின்  காட் சியில்  நாயகியின் நினைவுகளை அனுப்பி  புதுக்கதை  உருவாக்குவது தான் அவருக்குக்கொடுக்கப்படும் டாஸ்க் .


50 வருடங்களுக்கு  முன் எடுத்த  ஒரு கதை .அதில்  நாயகி  தன கணவனான  நாயகனை  விட்டு விட்டு  வேறு ஒருவருடன்  கள்ளக்காதல்  புரிகிறார் . இது  தெரிந்து  கணவன் நாயகியை சுட்டுக்கொலை செய்து விடுவதுதான் படத்தின் கிளைமாக்ஸ் . இந்தக்கதையில்   நாயகி  இடையில் புகுந்து  அந்தக்கதை நாயகியுடன்  பேச வேண்டும் .லெஸ்பியன் காதல் உருவாக வேண்டும் .புதுக்கிளைமாக்ஸ்  ரெடி  செய்ய வேண்டும் . இதற்காக டெக்னிக்கல் டீம் தயார் 


 இந்தக்கதையை  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் எனில்  எம் ஜி ஆர்  நடித்த  அண்ணா நீ என் தெய்வம்  படத்தில் சில  ஸீன்கள்  எடுக்கப்பட் டன . ஆனால்  அந்தப்படம்  முழுமை பெறவில்லை .ஒரு  பாட்டு சீன் ,ஒரு வசன சீன்  மட்டும்  எடுக்கப்பட்டது .அந்த கிளிப்பிங்க்ஸை  வைத்து கே பாக்யராஜ்  ஒரு திரைக்கதை   ரெடி பண்ணி   அவசரப்போலிஸ்  100   என்ற   படத்தை  எடுத்தார் .ஆனால்  இந்தக்கதை   அப்படி அல்ல.எம் ஜி ஆர்   நடித்த   ஆயிரத்தில்   ஒருவன் படம்  இருக்குதே   அதில்  ஜெ தான் ஜோடி . இப்போ  லதா  அந்த  கால கட்டத்தில்  போய்   ஜெ வுக்குப்பதிலாக  லதா எம் ஜி ஆரைக்காதலிப்பது போல  கதை  உருவாக்குவது 


இந்தக்கதை  மிக வித்தியாசமாக யோசிக்கப்பட் ட ஒரு கதை . மாறுபட் ட  அனுபவத்தை  தரும் . டோன்ட்   மிஸ் இட் .அந்தக்கால நாயகி  சிண்ட்ரெல்லா போல் கொள்ளை அழகு என்றால் இ ந்தக்கால  நாயகி  ஒரு நீக்ரோ அழகி . இருவரது   நடிப்பும் அருமை . இரு நாயகிகளும்  காதலிக்கும் சீன்கள்  மிக இயற்கையாக  , கண்ணியமாக  படமாக்கப்பட்டு உள்ளது 


முதல்  3 கதைகள்  போல  அடுத்த 3 கதைகள்    இல்லை . சுமார் ரகம் தான் .குறிப்பாக  5 , 6 ஆகிய இரு கதைகளும்  பொறுமையை சோதிக்கும் ,4வது  கதையும் , 6 வது   கதையும்   வீடியோ கேம்ஸ்  பிரியர்களுக்கு மட்டும் தான்  புரியும் , பிடிக்கும் 


சபாஷ்  டைரக்டர்


1  ஒவ்வொரு  கதையும்  ஒவ்வொரு  புதிய  மாறுபட் ட கதைக்களம் . யூகிக்க முடியாத   க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் 


2   முக்கியமான  கேரக்டர்கள்  அனைவரது நடிப்பும் அருமை .காஸ்ட்யும் டிசைன்  கலக்கல் ரகம் 


 ரசித்த  வசனங்கள் 

1  உயிர்  இருக்கும் வரை   முயற்சி செய்து கொண்டே  இருக்க வேண்டும் 


2  பணம்  கிடைக்குது என்ற  காரணத்துக்காக நம்ம ஆளுங்க என்ன எல்லாம் செய்யத்தயாரா இருக்காங்க  பாருங்க

அ டல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  PROPER ADULT CONTENTS 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


ஒவ்வொரு கதையும்  40 நிமிடங்களுக்குக்குறையாமல்  ஒரு மணி நேரத்துக்கு  மிகாமல்  இருக்கின்றன . டவுன் லோடு பண்ணி   வைத்து   வாரம் ஒன்றாகப்பார்க்கலாம் .சுவராஸ்யமானவை . ரேட்டிங்  3/ 5 


Black Mirror
Title card
Genre
Created byCharlie Brooker
Country of originUnited Kingdom
Original languageEnglish
No. of series7
No. of episodes33 (not including Bandersnatch(list of episodes)
Production
Executive producers
Running time40–90 minutes
Production companies
  • Zeppotron (2011–2013)
  • House of Tomorrow (2014–2019)
  • Broke & Bones (2023–present)
Original release
NetworkChannel 4
Release4 December 2011 –
16 December 2014
NetworkNetflix
Release21 October 2016 –
present

Thursday, May 08, 2025

JEWEL THIEF ; THE HEIST BEGIN (2025) -(ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( ஹெயிஸ்ட் ஆக்சன் த்ரில்லர் ) @நெட் பிளிக்ஸ்

 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு நகைத்திருடன் .ஒரு நகை  மட்டுமல்ல , கிடைத்தால் பல நகைகளை ஆட் டையைப்போடுபவன்  .இந்தியாவில் உள்ள  பல போலீஸ் ஸ்டேஷன்களில் இவனைத்தேடுகிறார்கள் . மோஸ்ட்  வாண்ட் டட்  கிரிமினல் .நாயகனின் அப்பா  ஒரு நேர்மையான டாக்டர்.  .வெறு ம்   10  ரூபா  மட்டும் பீஸ்  வாங்கிக்கொண்டு   மக்களுக்கு வைத்தியம் செய்யக்கூடியவர் . அப்பா,மகன்  இருவருக்கும் ஆகாது . ஆனால்  அப்பாவுக்கு மகன் மீது  வெறுப்பு உண்டு , ஆனால் மகனுக்கு அப்பா மீது அளவு கடந்த பாசம் . நாயகனுக்கு ஒரு தம்பியும் உண்டு 



வில்லன்  ஒரு பெரிய பிஸ்னஸ்மேன் , மோசமான ஆள் . ரெட் சன்   என்னும்  உலகப்புகழ்  பெற்ற  வைரத்தைக்கொள்ளை அடிக்கத் திட் டம் போடுகிறான் வில்லன்  . அதை  அடிக்கத்தகுதியான ஆள் உலகிலேயே நாயகன் ஒருவன் தான் என வில்லன் நினைக்கிறான் . எனவே   நாயகனை  மிரட்டிப்பணிய வைக்க   நாயகனின் அப்பாவின் கணக்கில் ஒரு பெரிய தொகையை அனுப்பி  டொனேஷன்  என சொல்லி சமாளித்து  மாட் ட வைக்கிறான் .அது   கருப்புப்பணம் . இன்கம்டாக்ஸ்க்குத்தக்கவல்   சொன்னால்   அப்பா ஜெயிலில் என வில்லன் நாயகனை மிரட்டி  பணிய வைக்கிறான் . 

500  கோடி ரூபாய்  மதிப்புள்ள   ஆப்பிரிக்கன் வைரம்  அதைக்கொள்ளை  அடித்து   வில்லன் கையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் நாயகனுக்குத்தரப்படும் டாஸ்க் அதை   நாயகன் சரியாக செய்தாரா? இல்லையா?   என்பது   மீதி திரைக்கதை 

நாயகன் ஆக சயிப் அலி கான் அசால்ட்   ஆக நடித்திருக்கிறார் . வழக்கமான  கமர்ஷியல் ஹீரோவுக்கான பில்டப் சீன்கள் இதிலும் உண்டு .வில்லன் ஆக  ஜெய்தீப் அஹ லாவத் கொடூரமான  ஆளாக  நடித்துள்ளார் . வில்லனின் மனைவியாக   அதாவது   நாயகி ஆக  நிகிதா தத்தா  அழகாக   வந்து போகிறார் . வில்லனின்   மனைவி எனில் அவள்   வில்லி தானே? என  யாரும்  லாஜிக்  மிஸ்டேக்  சொல்லக்கூடாது .வில்லனின் மனைவியை நாயகன் காதலிப்பார் .அப்போ  அவர்   நாயகி தானே ? 


குணால்  கபூர் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார் .நாயகன் , வில்லன் ,நாயகி  ஆகிய மூவரை சுற்றி தான் கதைக்களம் நகர்கிறது 


குணால்  கபூர் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார் .நாயகன் , வில்லன் ,நாயகி  ஆகிய மூவரை சுற்றி தான் கதைக்களம் நகர்கிறது 


படத்தில் நான்கு பாடல்கள் .பாடல்களுக்கான  இசையை சச்சின்  ஜிஹார்  கவனிக்கிறார் . பின்னணி இசை அமைத்தவர்  ஷேகான் ஷேக் . இருவருமே  அவரவர்   வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள் ஆரீப்  ஷேக்கின்   எடிட்டிங்கில்  படம் 118  நிமிடங்கள்   ஓடுகிறது ஜிஷ்ணு , பட் டாச்சரி ஆகிய இருவரும் தான் ஒளிப்பதிவு .இந்த மாதிரி  ஹெயிஸ்ட்  த்ரில்லர்   கதைக்கான பிரம்மாண்டம்  இதிலும் உண்டு 


திரைக்கதை  எழுதி   இருப்பவர்  டேவிட்  லோகன் . வசனம் எழுதி   இருப்பவர் சுமித்  அரோரா 

கூகி குலாட்டி , ராபி குருவால்  ஆகிய இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்


1 வைரத்தை  நாயகன்   எப்படிக்கொள்ளை  அடிக்கப்போகிறான் ? என்ற   எதிர்பார்ப்பை விட  வில்லனுக்குத்தெரியாமல் வில்லனின் மனைவியை நாயகன் எப்படிக்கரெக்ட் பண்ணப்போகிறான்  என்ற  த்ரில்லிங்கை கொடுத்த விதம் 


2  வைரத்தை  நாயகன் கொள்ளை   அடிக்கும் விதம் 


3 வழக்கமாக  இந்த மாதிரி கதைகளில்   என்ன பிளான் ?  நாயகனின் எக்சிக்யூஸன்  என்ன ?  என்பதை விளக்குவார்கள் . அவை  எதுவும் இல்லாமல்  நேரடியாக நாயகன் கொள்ளை அடிப்பதைக்காட் டிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1. ஒண்ணு தானா வந்தா தானாப்போக வாய்ப்பிருக்கு

2. ஒரு மனிதனோட ஏக்கம் ,தூக்கம் இரண்டையும் பேலன்ஸ். பண்ணனும்

3. இரண்டே விஷயங்களில் தான் என் விருப்பம் 1 காதல். 2 குடும்பம்

4. அழகான பொருள் ஆபத்தானதாக்கூட. இருக்கலாம்

5 எல்லாரிடமும் அவங்க தரப்புக்காரணம். இருக்கும்.அவங்க காரணம் நமக்குத்தெரியாது.நம்ம காரணம் அவங்களுக்குத்தெரியாது.


6. உங்களுக்கு நீங்களே ஒரு தடையா இருக்காதீங்க

7. உங்க சம்சாரத்தை நீங்க. நம்பறீங்களா?

உன்னை.  விட அதிகமா



8 நல்லவங்களை. நான்    தூரச்த்தில் இருந்தே கண்டுபிடிச்சுடுவேன்.ஆனா கெட்டஜ்அத்த்ட்த்த்த்த்ட்ந்ன்யவன் பக்கத்தில். இருந்தும் ப் கண்டுபிடிக்க. முடியலை

8 குடும்பத்துக்காக  அப்பப்ப. கெட்ட. விஷ்யங்களையும் செய்ய வேண்டி இருக்குது


9. உன் புருசன் மேல பயம் அதிகமா? என். மேல் நம்பிக்கை அதிகமா?

10.நீங்க. ராஜாவா. இருந்தீங்க.ஆனா இப்ப. இல்ல

11. உங்களால இந்த உலகததையே. ஏமாத்த. முடியும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 போலீஸ் கேரக்டர்கள்  அனைத்தும் டம்மி என்பதால் சுவராஸ்யம் இல்லை 


2  நாயகன் , நாயகனின் அப்பா   இருவருக்குமிடையே  ஆனா பாண்டிங்க்  செட் ஆகவில்லை . அப்பாவுக்கு மகனைப்பிடிக்காது ,  ஆனால் அப்பா மீது மகன் பாசமாக இருக்கிறார் என்ற  கான்செப்ட்  மனதைத்தொடும் விதத்தில் சொல்லப்படவில்லை 


3  வில்லனின் மனைவியைக்கரெக்ட் பண்ணுவதுதான் நாயகனின் காதல் கதை என்பதால்  அது எடுபடவில்லை .கள்ளக்காதல்  கதை என்றாலும்  அதில்   சுவராஸ்யம்  வேண்டாமா ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+   இரண்டு  லிப் லாக்  சீன்கள்  உண்டு . வில்லன் , நாயகன்  இருவரும் தலா ஒரு முறை நாயகியை லிப் கிஸ் அடிப்பது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்- போர்  அடிக்காமல் செல்லும் கமர்ஷியல் மசாலாப்படம் . பொழுது போகாதவர்கள் பார்க்கலாம் .

 ரேட்டிங் 2.25 /5