Showing posts with label KAMAL. Show all posts
Showing posts with label KAMAL. Show all posts

Thursday, January 24, 2013

கோர்ட்டில் கமல் அவசர வழக்கு, இன்றே ரிசல்ட் தெரியும் - கமல் பேட்டி

http://www.teluguone.com/tmdbuserfiles/kamal-hassan-andrea-stills.jpgகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இன்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். '3 டி ஆரவ்' ஒலி தொழில் நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 11-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டார். 10-ந்தேதி டி.டி.எச்.களிலும் ஒளிபரப்பாக இருந்தது. டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் வசூலித்தனர்.
 
டி.டி.எச்.களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்ததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் பேச்சுவார்த்தை நடந்து.
 
அதில் ஜனவரி 25-ந்தேதி ரிலீஸ் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. 500 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
 
இரு தினங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதையடுத்து முஸ்லீம் இயக்கத்தினருக்கு படத்தை கடந்த 21-ந்தேதி கமல் திரையிட்டு காட்டினார். படத்தில் முஸ்லீம்கள் பற்றியும், அவர்களின் தொழுகை முறைபற்றியும் தவறாக சித்தரித்து இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
 
விஸ்வரூபம் படத்தில் பின்லேடனுக்கு அடுத்து தலைவராக உள்ள அல்கொய்தா தீவிரவாதி முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக காட்சி இருப்பதையும் எதிர்த்தனர்.
 
'விஸ்வரூபம்' படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் முஸ்லீம் அமைப்பினர் மனு அளித்தனர். படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி கமலின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர்.
 
இதையடுத்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட 2 வாரங்களுக்கு தடை விதித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் படத்துக்கு 2 வாரம் போலீசார் தடை விதித்தனர்.
 
இதுபோல் ஊர்வலம் போராட்டங்கள் நடத்த தடை விதித்து தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது 'விஸ்வரூபம்' படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
 
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது போலீஸ் தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 'விஸ்வரூபம்' படத்தை தியேட்டர்களில் இரண்டு வாரத்துக்கு திரையிடமாட்டோம் என்றார்.
 
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இன்று 'விஸ்வரூபம்' படத்தை திரையிட்டு காட்டுகிறார். தமிழகத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதையடுத்து அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி படத்தை நாளை திரையிடலாமா அல்லது நிறுத்தி விடலாமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறார்.
 
வேறு மாநிலங்களில் படத்தை திரையிட்டால் தமிழகத்துக்கு திருட்டு வி.சி.டி. வந்து விடும் என அஞ்சப்படுகிறது. எனவே படத்தை 2 வாரங்களுக்கு திரையிடாமல் கமலஹாசன் நிறுத்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - மாலை மலர் 
 
 

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 



a



disci - தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடிhttp://www.adrasaka.com/2013/01/blog-post_294.html

தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0kqHH07KNXWBmTPq3EKdn-XBPrHQ5IrPCgKk9tTwgxxN1IBcIIW-NI-Bum4RzIh73pvUzSIJaZmiNQbSGX4bxD-y56MIPmlV-oF-zP_Eat_JyNu_5JOxn9K0T67KgC3Kwme17KLIiyY/s1600/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(4).jpgவிஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை! 
Posted Date : 21:37 (23/01/2013)Last updated : 21:43 (23/01/2013)
சென்னை: கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.

அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

விஷ்வரூபம் தடையா?- தமிழக அரசு க்கு கமல் பதில் அறிக்கை

நன்றி - கமல்ஹாசன்,http://ideas.harry2g.com/2013/01/blog-post.html



விஸ்வரூபம் படத்தை திரையிட எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் கடந்து படம் வெளிவர இறுக்கும் நேரத்தில் தமிழக அரசு இந்தப்படத்திற்கு இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கமல் இது சம்பந்தமாக விடுத்துள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு..


எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.
 
 
மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
 
 
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.
 
 
அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
 
 
இந்தப் படத்தில் தவறுகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழுவுக்கு படம் போன பொது அங்கு வைத்தே தடை செய்திருக்கலாமே ஏன் இறுதி வரை பொறுத்திருந்து தமிழ் நாட்டு அரசும் இஸ்லாமியக்குழுக்களும் இந்த தடையைக் கொண்டு வந்துள்ளன என்பதே தற்போதைய சூடான கேள்வி.
 
நன்றி - http://www.myoor.com/kamal-release-his-thoughts-about-viswaroopam-banning/
 
 
 மக்கள் கருத்து 
1. இந்த படத்தை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைத்து எதிர்ப்பவர்களுக்கும், தடை செய்தவர்களுக்கும் உண்மையை உணர்த்த அனைத்து மக்களும், ரசிகர்களும் துணை புரிய வேண்டும்.

இதன் மூலம் கமலுக்கு நமது பக்க பலத்தை காட்ட வேண்டும், மற்றவர்கள் போல இவர் ஷாப்பிங் சென்டரையோ, சொத்துக்களையோ வாங்கி குவிக்கவில்லை. சம்பாரித்த அனைத்தையும் சினிமாவிற்கே செலவழித்து தமிழ் சினிமா வளர உதவி செய்கின்றார், இவரை தமிழன் கை விட்டால் புரட்சி கவிஞர் பாராதியாரை வாழும் பொழுது கை விட்ட தமிழகம் போல ஆகி விடும், ஆம் இவரிடம் இப்பொழுது எந்த சொத்துக்களும் இல்லை ஆழ்வார் பேட்டை வீடும் கடனில்
2. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள்....தாலிபான் எல்லாம்.... மும்பை குன்டு வச்சு இப்ப பாகிஸ்தானுல இருக்கிர ...??!!! எல்லாம் எப்ப ஹின்டுவா மாரினாங்க...?????? 
3. இப்படி சினிமாவை சினிமாவாக பார்க்காமல், மத ரீதியாக எல்லோரும் பார்த்தால் என்னாவது? முஸ்லிம் கோபபடாமல் ஒரு படமாக பாருங்கள். இல்லாவிட்டால் இந்த படத்தை முஸ்லிம்கள் யாரும் பார்க்காதீர்கள். உங்களுக்காக நாங்களும் ஏன் பார்க்காம இருக்கணும்?..........
4. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக வைத்து உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லாம் படம் வருகிறது, அதை தடுக்க முடியுமா? அமிர் போன்ற இயக்குனர்கள், சீமான் போன்ற இயக்குனர்கள், இந்துக்களை மட்டமாக சித்தரித்து படம் மட்டும் எடுக்கலாம். ஆர்யா,கான் நடிகர்கள் அவர்களுடைய படங்களில் இந்துக்களை ஏதாவது ஒரு வகையில் புன்படுத்தி படமே எடுப்பதில்லையா? அரசு தடை செய்ததுக்கு காரணம் அவர்களுடைய ஓட்டு. முஸ்லிம்கள் மாதிரி இந்துக்களும் ஒன்றாக ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டா இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்ய முடியும். நாடு உருப்படனும்னா எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்கனும். இந்துக்களின் ஒற்றுமையின்மையை இவர்கள் சிருபான்மை இனத்தவர்கள் என்ற பெயரில் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்
5. இப்படித்தான் டான் பிரௌன் எழுதிய டாவின்சி கோட் படம் வெளியிட தமிழகம் தடை விதித்தது. அந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. உயர்நீதிமன்றம் இந்த தடையையும் நீக்கும். 
6. விஸ்வருபம் படத்துக்கு காசு கொடுக்காம விளம்பரம் கிடைத்துவிட்டது .துப்பாக்கி படம் வெற்றி பெற்றதற்கு தாங்களும் ஒரு காரணம்.நீங்கள் என்ன தான் கூவினாலும் அங்கே ஒன்றும் நடக்கபோவதில்லை.சினிமாவையும் நிஜத்தையும் பிரித்து பார்க்க தெரியாத நீங்கெல்லாம்.....
7. கமல் படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் கிடைத்தது. கமல் தன்னை நடிப்புக்கு அர்ப்பணித்தவர். அதனால் இந்த விளம்பரத்தில் குட தவறில்லை

முஸ்லிம் நண்பர்களே .... உங்கள திவிரவாதியா காட்டின தப்பு. ஆனா உங்க ஆளுங்க பண்ணுற திவிரவாதத்தை மட்டும் எதிர்க்க மாட்டீங்க. நல்ல இருக்குபா நியாயம். கமல் சொல்ற மாதிரி முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதின்னு சொல்லலை, தீவிரவாதி முஸ்லிம்மா இல்லாம இருந்தா நல்ல இருக்கும் தான் சொல்றேன்....



நன்றி - விகடன் 
இது சம்பந்தமா நான் போட்ட ட்வீட்ஸ் 
1. குற்றப்பத்திரிக்கை படத்தை ரிலீஸ் பண்ண ஆர் கே செல்வமணி படாத பாடுபட்டாரு.அடுத்து கமலின் விஸ்வரூபம் # சோதனை மேல் சோதனை 
2. எந்த அளவு படம் தள்ளிப்போகுதோ அந்த அளவு எதிர்பார்ப்பு எகிறும்.படத்துக்கு ஓப்பனிங் பிரம்மாண்டமா இருக்கும் # சியர் அப் கமல் 
3. இந்த அளவு தடை மேல் தடங்கல் வர அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என எண்ண வைத்ததே கமலின் வெற்றி! 
4. சகலகலாவல்லவன் மாதிரி மசலாப்படத்தை எடுத்து காசு பார்க்க நினைக்காமல் தமிழனின் ரசனையை முன்னேற்ற உழைத்த கமலுக்கு தமிழகம் தரும் பரிசு தடை 
5. சார்.கமலுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணலை ? 
 ரஜினி - என் படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும்தான் வாய்ஸ் தருவேன் 
6. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போராட்டத்தை ,எதிர்ப்பை சம்பாதித்த படங்கள் 1 உலகம் சுற்றும் வாலிபன் 2 குற்றப்பத்திரிக்கை 3 சண்டியர் 4 ,விஸ்வரூபம் 
7. சிலர் டேம் 999 படத்தடையை உதாரணம் காட்டுகிறார்கள்.அது முற்றிலும் வேறு மாதிரியான பிரச்சனை 
8. இந்தப்படத்துல முஸ்லீம் கேரக்டரே கிடையாது.எதுக்கு தடை ? ஹீரோயின் ஒரு சீன் ல "எனக்கு பாய் பிரண்ட்ஸ் நிறைய பேர் "னு சொல்றா 
9. உங்க படத்துல வில்லன் கேரக்டர் வேற்றுக்கிரகவாசின்னு காட்டின சாமார்த்தியம் பிரமாதம்.ஆனா அவர் என்ன மதம்? ஜாதி?னு தெளிவாக்குறிப்பிட்டாதான்் ரிலீஸ் பண்ண விடுவோம்
10. முழுக்க முழுக்க இந்துக்களை மட்டுமே காட்டி இருக்கீங்க.சமத்துவ சமுதாயம் உருவாக ஒரு படத்துல எல்லா மத ,சாதிப்பிரிவுகளும் சரி சமமா வரனும் 
11. ஹீரோயின் ஜிலேபி ஜீரா சாப்பிடும் சீனை ஏன் கட் பண்றீங்க? அது நா"ஜிரா" முஸ்லீம் பேரை அவமானப்படுத்துவது போல் இருக்கே? 
12. சாதிக்க்கப்பிறந்தவன் டைட்டில் ஏன் தடை பண்ணிட்டாங்க ?
 சாதிக் ஒரு முஸ்லீம் பேராச்சே? 
 
13. RT : ஒரு படத்துக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு உரிமைஇல்லை #டாவின்சி கோட் பட விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு
14. RT : உங்களுக்கு சண்டை கமல் கூட தான்,உங்க சண்டையில ஸ்ருதி மேல ஒரு சின்ன கீறல் கூட விழுந்தாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்.

14 வது ட்வீட் மட்டும்
Boopathy Murugesh இவர் ஃபேஸ் புக்கிலும் இருக்கு

Thursday, January 17, 2013

கமலின் டி டி ஹெச் - நான் ஆதரவு - பிரகாஷ் ராஜ் பேட்டி

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Cine-Family-Gallery/Prakash-Raj-Family/Prakash-Raj-Family-0000.jpg 
நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா !

எஸ்.கலீல்ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன்


படங்கள்: கே.ராஜசேகரன்

எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டால், ''அடுத்த நொடி நிச்சயமில்லை நண்பா. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கேன்!'' - பெரிய கண்கள் இன்னும் அழகாய் விரிய, வரவேற்கிறார் பிரகாஷ்ராஜ். நீண்ட நாட்களாக இந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருப்பவரிடம் பேசியதில் இருந்து...


''என்ன... தமிழ்நாடு பக்கம் பார்க்க முடியறதே இல்லை?'' 


''இதோ திரும்ப வந்துட்டேன். என் மகள், என் நண்பர்களின் மகன், மகள்னு நிறையப் பேரைப் பார்த்து, அவங்க படிக்க சிரமப்படுறதைப் பார்த்து 'என்ன கல்வித் திட்டம் இது?’ங்கிற கவலையும் கோபமும் வந்துச்சு. அதைத்தான் 'தோனி’யா எடுத்தேன். அதை இயக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு விதமான வலியோட இருந்தேன்.


 சரி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. 'சால்ட் அண்ட் பெப்பர்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அழகான ஒரு காதல் கதை. காதலைவிடக் கொண்டாட வேண்டிய விஷயம் வேற என்ன இருக்கு? நடுத்தர வயதுக் காதல், காதலோட வேற ஒரு பரிமாணம் காட்டுற படம் அது. சமையல், உணவு, உணர்வு, ருசி, காதல், தனிமைனு எல்லாருக்குமான கதை அது. அதை 'உன் சமையலறையில்’னு தமிழில் படமாப் பண்றேன். இளையராஜா இசை. தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் படம் ரிலீஸ் ஆகும்!''


''2012-ல் பெரிய படங்கள் நிறைய அடி வாங்கி, சின்னப் படங்கள் ஹிட் ஆகின. இதை எப்படிப் பார்க்கிறீங்க?'' 


''பொதுவா, சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க. மாற்றுச் சிந்தனையை அமுக்கிடுவாங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடிச்சுக்கிட்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றினு நான் பார்க்கலை. 


இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களோட ரசனையைப் புரிஞ்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி சினிமா மாறணும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பா நடக்கும். அதையும் தாண்டி இளைஞர்கள் வரணும். ஏன்னா, இன்னைக்கு டாப் டைரக்டர்கள், டாப் நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவங்கதான்!''


'' 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்ல ரிலீஸ் பண்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'' 


''கமல் எடுத்திருக்கிறது ரொம்ப முக்கியமான முடிவு. நான் வரவேற்கிறேன். காலம்காலமா... 'நான் இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன். தயவுசெஞ்சு தியேட்டருக்கு வந்து படம் பாருங்க’னு சினிமாக்காரங்க பிச்சை எடுக்கிற மாதிரிதான் கேட்டுட்டு இருக்கோம். சினிமாவில் இருக்கிறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம். என்னைக் கேட்டா, பணத்தைவிட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால வாடிக்கையாளர் எங்கே இருக்காங்களோ, அங்கேயே தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதைத்தான் கமலும் பண்ண நினைக்கிறார்.



சாட்டிங்ல என்னிடம் வந்தார் லண்டன் தமிழ் இளைஞர். 'தோனி பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது!’னு சொன்னார். நான் 'தோனியை அங்கே ரிலீஸ் பண்ணலையே?’னு கேட்டேன். அதுக்கு 'திருட்டு விசிடி-யில் பார்த்தேன் சார். நான் பிரகாஷ்ராஜ் படத்தை உடனே பார்க்க ஆசைப்பட்டேன். இங்க உங்க படம் வந்து சேர மூணு மாசம் ஆகுது. அதுக்காக 200 கி.மீ. நான் டிராவல் பண்ணணும். ரிலீஸ் அன்னைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணுங்க. நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்’னு சொன்னார்.


 இவரை மாதிரி ஒரு குரூப் தியேட்டருக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. சிலருக்கு நேரம் இல்லை. கமல் யோசிக்கிற டோர் டெலிவரி சிஸ்டம் இந்த குரூப் ஆடியன்ஸை திரும்ப சினிமா பக்கம் இழுத்து வரும். சரி, எதுவும் வேண்டாம். புது முயற்சிக்கு என்னதான் ரிசல்ட் கிடைக்குதுனு பார்க்கலாமே? ஒரு படம் இண்டஸ்ட்ரியோட வாழ்க்கையைத் தீர்மானிக்காதே!''



''சூர்யா பண்ணின 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ டி.வி. ஷோவை திடீர்னு நீங்க நடத்துறீங்களே?'' 



''அது நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். விகடன்ல 'சொல்லாததும் உண்மை’ எழுதினப்ப, எப்படி முகம் தெரியாத மனிதர்கள்கிட்டே அறிமுகம் ஆனேனோ, அதே மாதிரி விதவிதமான மக்கள்கிட்டே திரும்பக் கை குலுக்கப்போறேன். கட்டி அணைக்கப்போறேன். இன்னைக்கு டெலிவிஷன் ஸ்ட்ராங் மீடியா. அதில் நானும் இருப்பது சந்தோஷம்!''


''ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரும் பண்ற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லையே?'' 



''நிச்சயம் வருவாங்க. ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதுசா உள்ளே வர்றாங்க. உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும்.



 அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் ரெடியா இருக்கணும். பிரகாஷ்ராஜ் பெரிய நடிகன் ஆகிட்டான்னு சொல்றாங்க. அதுல எனக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. ஏன்னா, என்னைப் பார்த்து இளம் தலைமுறை ஆட்கள் பயப்படுறாங்க. சிலர் பார்த்த முகமா இருக்கேனு யோசிக்கிறாங்க. இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால 'நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா!’னு நான் கத்திச் சொல்ல வேண்டிஇருக்கு!''  



''டூயட் மூவீஸ்ல எடுத்த படங்கள் தரமா இருந்தாலும் வசூல்ல சரியாப் போகலைனு வருத்தம் உண்டா?'' 



''ஒரு தயாரிப்பாளரா நான் கணக்கு வழக்கு பார்க்கிறதே இல்லை. ஆனா, நடிகனா நான் பக்கா பிசினஸ்மேன். நடிகன் என்கிற வியாபாரிதான் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் இழப்புகளைச் சரிபண்ணிட்டே இருக்கிறான். நான் விரும்புற, நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சொசைட்டிக்குத் தரணும்கிற ஆசையில்தான் படங்கள் தயாரிக்கிறேன். 




நான் தயாரிக்கிற படங்கள் ஒரு கோடியோ, ஒன்றரைக் கோடியோ நஷ்டமாவது உண்மைதான். நடிகனா நான் வாங்கும் சம்பளத்துல இந்த இழப்புகளை என்னால் சரிசெய்ய முடியுது. சில பேர் சீட்டாடுவாங்க. சில பேர் ஊர் சுத்துவாங்க. எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். எனக்குக் கெட்ட பழக்கம் படம் தயாரிக்கிறது. படம் ஓடுதோ இல்லையோ, நாம சொல்ற கருத்து மக்களைப் போய்ச் சேருதான்னு தெரியலையேனு வருத்தமா இருக்கும். 'தோனி’ சரியாப் போகலை. ஆனா, இன்டர்நெட்ல 16 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இப்படியாவது பார்க்கிறாங்களேனு சந்தோஷமா இருக்கு!''



''பிரபுதேவா-நயன்தாரா சேர்றதுக்கு நீங்களும் ஒரு காரணம். இப்போ பிரிஞ்சிட்டாங்க?'' 



''காதல் வருவதற்கும் அது உடையறதுக்கும் அற்பமான காரணங்கள் போதும். அவங்க வாழ்க்கையில அவங்க ரொம்ப விரும்பினாங்க. அப்போ ஒரு நண்பனா நானும் கூட நின்னேன். ஏதோ ஒரு பெர்சனல் காரணம்... ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அது அவங்களோட நன்மைக்காகப் பிரிஞ்சுட்டாங்க. இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''



''பொண்ணுங்க நல்லா வளர்ந்திருப்பாங்க... எப்படி இருக்காங்க?'' 



''மூத்தவ பூஜா அழகா வளர்ந்திருக்கா... ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கா. போட்டோகிராஃபி, பெயின்டிங், மியூஸிக்னு கலைகள் மேல் ஆர்வம். போன சம்மர்ல பாரீஸ், இந்த வின்டர்ல ஜெர்மன்னு சந்தோஷமா ஊர் சுத்திட்டு இருக்கா. தனக்கு என்ன வேணும்கிறதில் ரொம்ப தெளிவா இருக்கா. அவ தொடர்ந்து 12 வருஷம் படிச்சிட்டா. அதனால, ஒரு வருஷம் கேப் எடுத்து நல்லா என்ஜாய் பண்றதுனு நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். சின்னவ மேனகா... எட்டு வயசு. ஜாலியா வளர்க்கிறேன். ஜாலியா வளர் றாங்க!''


நன்றி - விகடன் 



http://chennaionline.com/images/articles/September2012/60700240-64e2-42ed-9bc3-d4d20a055fb3OtherImage.jpg

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Thursday, January 10, 2013

உலக நாயகன் கமல்ஹாசனிடம் சில கேள்விகள்

http://www.indicine.com/images/gallery/bollywood/movies/vishwaroop/68871-vishwaroop4-large.jpg 

 கலைஞானி கமலின் திரை வாழ்க்கையை 2 பகுதிகளா பிரிக்கலாம். மணிரத்னத்துடன் இணைந்து  பணி ஆற்றிய நாயகன் ப்டத்துக்கு முன்பும் பின்பும் என . ஏன்னா நாயகன் படத்துக்குப்பிறகு கம்லின் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு . ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தனும், கெட்டப் சேஞ்ச் பண்ணனும்  , ஹேர் ஸ்டைல் , மேனரிசம் , டிரஸ்ஸிங்க் சென்ஸ் உட்பட வெரைட்டி காண்பிக்கனும் என்ற  தணியாத தாகம் கொண்டவர்  ஆனார். 

சத்யா படத்துல  ஆக்‌ஷன் காட்சிகளில் புது ஆக்ரோஷம் . ஃபைட் சீனில் டிஷ்யூம் டிஷ்யூம் சவுண்ட் இல்லாம புதுசா ட்ரை பண்ணாங்க , பேசும் படம் இந்திய சினிமாவில் யாரும் செய்யாத பரிசோதனை முயற்சி . வசனமே இல்லாம ஆனா பிரமாதமான நகைச்சுவை படம். ஆளவந்தான் ல  ஜிம் பாடி கொண்டுவந்தது , மகாநதில  முழுக்க முழுக்க ஜெயில்வாழ்க்கையின் அவலத்தை சொன்னது ( எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் ஜெயில் காட்சிகள் இவ்வளவு விஸ்தீரத்தோடு இல்லை )


மைக்கேல் மதனகாமராஜன்ல 4 வேடங்கள்ல அவர் செஞ்ச மாதிரி இதுவரை தமிழ்ல யாரும் செய்ய்லை. செம காமெடி படம். .அபூர்வ சகோதரர்கள்ல அவர்  குட்டி அப்புவா நடிச்ச ரகசியத்துக்கான விடை இதுவரை யாருக்கும் தெரியலை .

குருதிப்புனல் , மகாநதி ல அவரோட திரைக்கதை அறிவு பிரமாதமா பேசப்பட்டது . மிஸஸ் டவுட் ஃப்யரோட உல்டாவா இருந்தாலும் அவ்வை சண்முகி தமிழுக்கு புதிய முயற்சி ( பிரசாந்த் ஆணழகன் ல ஒரு முயற்சி பண்ணி இருக்கார் ) .

நிற்க . இவை எல்லாம் எதுக்கு? ஒரே கமல் புராணமா இருக்குன்னு யோசிக்கறீங்களா? நான் இப்போ கேட்கும் கேள்விகளை வெச்சு நீ ரஜினி ரசிகனா?  கமல்னா உனக்கு ஆகாதா? என நீங்க நினைச்சுடக்கூடாதே, அதுக்குதான் இந்த முன்னுரை , தமிழ் சினிமாவில்  கமல் ஒரு சகாப்தம் என்பதில் ஐயம் இல்லை .

 அன்பே சிவம் படத்தில்  சுனாமியை பற்றி சொன்னபோது நம்ம ஆட்களுக்கு சுனாமியின் தீவிரம் பற்றி தெரியலை . 10 வருடங்களுக்கு முன் கூட்டியே சிந்திப்பவர் தான் அவர். ஆனா இப்போ விஸ்வரூபம் பட பிரச்சனைல ஆழம் தெரியாம காலை விட்டுட்டார். அவரிடம் ஒரு சாதாரண பொது ஜனமா என்னோட கேள்விகள் .


சரித்திர நாயகன் கமலிடம் சாமான்யனின் கேள்விகள்



1. படத்தோட பட்ஜெட் எகிறிடுச்சு , 95 கோடி ஆகிடுச்சு என்கிறீங்க  அதனால தியேட்டர்காரங்க கம்மி ரேட்டுக்கு கேட்கறாங்க , கட்டுபடி ஆகலை , அதனலாதான் டி டி ஹெச் ரிலீஸ் திட்டம்னு சொல்றீங்க ஓக்கே . ஒரு வீடு கட்டனும்னா  ப்ளூ பிரிண்ட் போட்ட பின் முதல் வேலையா பட்ஜெட் போடுவோம் . இஞ்சினியர் சொல்லும் எஸ்டிமேட்டை விட நம்ம கிட்டே  டபுள் மடங்கு பணம் இருக்கனும்.  ஏன்னா அவர் 10 லட்சம் சொன்னார்னா 17 லட்சம் ஆகிடும். லோன்  சோர்ஸ் எல்லாம் நாம ரெடி பண்ணிக்கனும்
 உங்க மார்க்கெட் வேல்யூ எவ்ளவ்? என்ன ரேட்டுக்கு போகும்? என்ற கால்குலேஷன் இவ்வளவு வருட திரை உலக வாழ்வில் தெரியாம போயிடுமா? ஏன் அகலக்கால் வைச்சீங்க?சன் டி வி , சன் பிக்சர்ஸ் இப்படி காம்பினேஷன் போட்டிருக்கலாமே? 


2. உங்க டி டி ஹெச் திட்டம் விளம்பரங்கள் நம்பி பலர் பணம் கட்டி இருக்காங்க. எல்லாரும் உங்க முகத்துக்காகத்தான் பணம் கட்டி இருக்காங்க , இப்போ வந்து திடீர்னு அறிவிச்ச தேதில மாற்றம் , டி டி ஹெச் பணம் திரும்ப வருமா? என்பது டவுட் என்றால் எப்படி?

>>>>டி.டி.ஹெச். காசு திருப்பித் தரப்படுமா எனும் சட்ட விபரங்கள் எனக்குத் தெரியாது.


பணம் வசூல் பண்ணும்போது “ கடைசி நிமிடத்தில் வெளியிடுவதில் மாற்றம் நிகழ்ந்தால் பணம் வாபஸ் இல்லை , அல்லது அது பற்றி அந்தந்த நிறுவனங்கள்தான் முடிவெடுக்கும், எனக்கும் அதற்கும் எந்த சமப்ந்தமும் இல்லை “ என முன் கூட்டியே அறிவித்தீர்களா? 


3. இப்போ ஈரோட்டில் 6 தியேட்டர்கள் விஸ்வரூபம் புக் பண்ணி இருக்காங்க. உங்க டீலிங்க் என்ன? அட்வான்ஸ் வேண்டாம். DTH ரிலீஸ் என்பதால் ரிஸ்க் அதிகம் , அதனால் வர்ற லாபத்துல அதாவது வசூல் பணத்துல  60 %  எனக்கு 40 % உனக்கு அப்டினு அக்ரீமெண்ட் போட்டீங்க. உங்களை நம்பி கொங்கு மண்டலத்துல  உங்க படத்தை  புக் பண்ண தியேட்டர்ங்க கடைசி டைம் அறிவிப்பால் இப்போ எந்தப்படத்தை புக் பண்ணுவாங்க ? 

>>>> என்னுடைய செளகரியத்துக்காக மட்டுமே ரிலீஸை தள்ளி வைக்கிறேன் 


உங்க தனி நபர் சவுகர்யத்துக்காக எத்தனை பேர்க்கு அசவுகர்யம்னு பார்த்தீங்களா? வியாபார உலகில் இது சகஜம், ஆனா உங்க நம்பக்த்தன்மை குறைஞ்சுடுச்சே? இப்போ ஒரு கோர்ட் தடையோ , வேற எதிர்பாராத சிக்கலோ வந்து படம் ரிலீஸ் பண்ண முடியலைன்னா ஓக்கே , ஆனா உங்க தனிப்பட்ட முடிவால  ரிலீஸ் ஆகலைன்னா அதுக்கு நீங்க தானே தார்மீகப்பொறுப்பு ? 



4.  >>>> என்னுடைய படத்தின் தேதியை அறிவிக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தகுதியோ அருகதையோ இல்லை


இந்த ஸ்டேட்மெண்ட் ஓவரா  தோணலை? அப்புறம்  ஏன் ஜனவரி 11ன்னு அறிவிச்சீங்க ?  சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போகிறது  அப்டினு சொல்லி இருக்கலாமே? 


5.  டி டிஹெச்சில் படம் வந்தால் அதை காப்பி பண்ண முடியாது , அப்படி ஒரு தொழில் நுட்பத்துல வெளியிடுவோம் அப்டினு ஆணித்தரமா முதல்ல சொன்ன நீங்க கேபிள் ஆபரேட்டர்கள் “இல்லை , நாங்க காப்பி பண்ணுவோம் அப்டினு சவால் விட்டதும் பல்டி அடிச்சீங்க 


>>>>பாலில் தண்ணி கலப்பதே தப்பு தான். அதே போல தான் டி.டி.ஹெச்.சில் ரிகார்ட் செய்யக்கூடாது என்று சொல்லி செய்தால் அது தப்பு தான் 



6. யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை , நீங்க பதிலே சொல்ல முடியாத , சமாளிச்சு மழுப்ப முடியாத ஒரு கேள்வி

மக்கள் ரூ 1000 பணம் கட்டியதுக்கு முக்கியக்காரணம் என்ன?  தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகும்  முன்பே நாம படம் பார்க்கலாம் என்ற ஆர்வம் தானே? அப்படித்தானே முதல்ல மார்க்கெடிங்க் பண்ணுனீங்க>?  இப்போ வசூல் பண்ணிட்டு  படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் டி டி ஹெச்சில் ரிலீஸ் அப்டின்னா எப்படி?  இது மோசடி ஆகாதா?

 நீங்க நேர்மையானவர் எனில் என்ன பண்ணனும் ?  வாங்குன பணத்தை எல்லாம் எல்லாருக்கும் ரிட்டர்ன் பண்ணிட்டு புதுசா அறிவிக்கனும் .  அப்போ யார் புக் பண்றாங்களோ  அவங்களுக்கு படம் காட்டுனா ஓக்கே 




 7. ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லப்போனா நீங்க எதிர்பார்த்த அளவு டி டி ஹெச் புக்கிங்க் இல்லை. உங்க டார்கெட் மினிமம் 50 கோடி இதுல பார்த்துடலாம்னு இருந்தீங்க.. தமிழன் சிக்கனவாதி . மேக்சிமம் ரூ 200க்குள் முடிக்க வேண்டிய செலவில் ஏன் வீணாக ரூ 1000 கொடுக்கனும் அப்டினு நினைச்சு அதிகம் பேர் புக் பண்ணலை . அப்படி புக் பண்ணி இருந்தா நீங்க தியேட்டர்காரங்களை சட்டையே பண்ணி இருந்திருக்க மாட்டீங்க , இதான் உண்மை. உண்மை என்னைக்கும் கசக்கும். ஆனா மீட்டிங்க் முடிஞ்சு வந்து





>>>>அவங்க கெஞ்சினாங்க. நான் முடிவு செஞ்சிருக்கேன். வித்தியாசத்தைப் புரிஞ்சுக்குங்க’ 

 அப்டினு சொன்னீங்க... இது சரியா? அவங்க ஏன் உங்க கிட்டே கெஞ்சனும்? உங்களுக்குதான் தேவை இருக்கு.

 உண்மையிலேயே நீங்க இந்த விஷயத்துல ஜெயிச்சிருந்தா  இந்த 2 ல ஏதாவது ஒண்ணை நடத்தி காட்டி இருக்கனும்

1. சொன்ன தேதில சொன்ன தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்றது 

2. வாக்குத்தந்த படி , சவால் விட்ட படி டி டி ஹெச் ஒளிபரப்பை தியேட்டர் ரிலீஸ்க்கு முந்தின நாள் ஒளிபரப்புவது 


 இந்த 2 லயும் உங்களால நிகழ்த்திக்காட்ட முடியலைன்னா அப்போ அது தோல்விதானே?  


8. >>> டி.டி.ஹெச். ரிலீஸூக்கு எக்கச்சக்க enquiry வந்தது. நேரக் குறைவு! 

 இது அப்பட்டமான பொய். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எங்க ஊர் சென்னிமலைல  மொத்தமே 12 பேர் தான் புக் பண்ணி இருக்காங்க . ஈரோட்டில்  எனக்குத்தெரிஞ்சு  40 பேர் புக் பண்ணி இருக்காங்க.. எப்போ போனாலும் ஆஃபீஸ் காத்து வாங்கிட்டு இருக்கு.. 




9. >>>>திரைத்துறையிலிருந்து இல்லீகல் பிரஷர்கள் வந்தன.அதுக்குத்தான் போலீஸ்ல புகார் குடுத்தாச்சே?

>>>>>>13 பேருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 

உங்களுக்கு 3000 பேர் லீகல் நோட்டீஸ் அனுப்பப்போறாங்க , ஏன்னா நீங்க டி டி ஹெச் மேட்டர்ல சீட்டிங்க் பண்ணிட்டீங்க 







10. >>>>>>>புதியது என்றால் அது லேட்டாக வரக்கூடாது..

 ஆமா, உங்க படம் லேட்டாத்தானே வருது?


11. >>>>>>>>பிற்காலத்தில் மொபைல் ஃபோனில் கூட தமிழ் திரைப்படங்கள் காண ஆசைப்படலாம்

>>> நடிகர் சங்கத்திலிருந்து இது வரை ஆதரவு இல்லை. விரைவில் வரும் என்று நம்புகிறேன்

>>>>>படத்தின் வியாபார சங்கதிகளை பத்திரிகைகளுடன் விவாதிக்க முடியாது


>>>ஒரு பத்திரிகைக்காரர் நான் முடிவு செய்வதற்கு முன்பே அவர் முடிவு செய்திருக்கிறார். உங்கள் தலையங்கத்தை நான் முடிவு செய்ய முடியாது



>>>>என்னுடைய வழி தனி வழி இல்லை.. அது புது வழி.. நாளையே அது பொது வழியாகவும் ஆகலாம்



மேலே நீங்க சொன்னவைகளுடன் ஒத்துப்போகிறேன்



Wednesday, January 09, 2013

விஸ்வரூபம் எப்போ ரிலீஸ் ?புதிய தலைமுறை டி வி யில் கமல் பேட்டி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ‘விஸ்வரூபம்’படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில்,அப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை தானே பின்னர் அறிவிக்க உள்ளதாவும்,இது குறித்து வேறு யாரும் அறிவிக்க உரிமை இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில்  வெளியிடவில்லை என்றும் கூறினார்.   

முன்னதாக இப்படத்தை டி.டி.எச் மூலம் 10ம் தேதி முதலில் ஒளிபரப்புவது என்றும் அடுத்த நாளான 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்றும் கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால், தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 6 டி.டி.எச் நிறுவனங்கள் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்ப முன்வந்தன.இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், கமலுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  




நன்றி - விகடன் 


புதிய தலைமுறை  டி வி யில் இன்று மதியம்   1 ம்ணிக்கு அவர் அளித்த பேட்டியில் 


உங்களது தலையங்கத்தை நான் முடிவு செய்வதில்லை,அதேபோல் என் தொழில் அமைப்பை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்-


என்னுடைய ரசிகர்கள் அமைதியானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவர்கள் அமைதியாக இங்கு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருகிறார்கள். 



விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.


புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில் திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில் திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என்றார்.


விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள் காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.


மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.


சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம் படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில் ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.



What abt those who paid for DTH? 


அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்! 


"vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -1 

 

http://www.youtube.com/watch?v=P0nEEiZCpfc&feature=youtu.be&a

vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -2

 




நன்றி - புதிய தலைமுறை 


The premiering of Kamal Haasan's new movie 'Vishwaroopam/Vishwaroop' first on direct-to-home (DTH) platform may not happen on January 10 as Rajkamal Films has postponed the release date, say DTH operators.
"We have a communication (from Rajkamal Films) about the postponement of movie release on DTH platform and in theatres," Salil Kapoor, COO, Dish TV told IANS.
"In line with the postponement of the release date of the movie 'Vishwaroopam (Tamil and Telugu)/Vishwaroop (Hindi)' across theatres and on the DTH platform by Rajkamal Films, we have stopped taking bookings for the movie premiere that was scheduled for Jan 10, 2013 at 9:30 pm on Airtel DTH," Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel was quoted as saying in a statement issued by the company. 


we are awaiting confirmation from Rajkamal Films on the revised dates," he said.
The theatre release which was to happen Jan 11 too stands postponed and the revised dates are yet to be announced by Rajkamal Films.
Queried about the money paid by the subscribers to watch the movie Jan 10, Kapoor said: "We will go by what our customer want us to do. If they want a refund, we will refund the money."
Queried whether Dish TV would be able to get compensation from Rajkamal Films for the money it spent on promoting the movie, Kapoor said: "The release of the movie has been postponed and nothing else has happened."
Both Airtel and Dish TV are silent on the number of bookings they have got for the movie.
The decision to premiere the movie on DTH platform first is opposed by theatre owners.


நன்றி - IBN LIVE


diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((

Friday, January 04, 2013

கமல் -ன் விஸ்வரூபம் டி டி ஹெச் ரிலீஸ் - சாதக பாதகங்கள் - ஒரு அலசல்


ஒளிப்பதிவு - திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் ( )


 எடிட்டிங்க் - இலங்கை சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி (http://siththarkal.blogspot.com/)

Friday, December 28, 2012

மர்மயோகி- 4 கோடி மோசடி . கமல் மேல் கேஸ். விஸ்வரூபம் தடை வருமா?

http://mimg.sulekha.com/tamil/marmayogi/marmayogi_m.jpg 

CHENNAI: A film production company has approached the Madras high court seeking to stop the release of Kamal Haasan's big budget film 'Vishwaroopam', saying the actor had taken 4 crore to direct and act in a film titled 'Marmayogi' in 2008 but failed to keep his word.

Justice K Venkataraman, before whom the suit filed by Regent Saimira Entertainment Ltd came up for admission on Thursday, ordered notices to the actor and other partners of Rajkamal Films International, seeking replies by January 3, 2013. Vishwaroopam, a trilingual film made in Tamil, Hindi and Telugu, is set to be released through the Direct To Home platform on January 11, three days ahead of its scheduled screening in theatres. 
http://kollywood.myindianmovie.com/galleryimages/Heroin/Trisha-Krishnan-Images/trisha-in-marmayogi.jpg

Regent Saimira said it had entered into an agreement with Kamal in 2008 for 'Marmayogi' which was to feature, besides Kamal, Amitabh Bachchan, Hema Malini, Priyanka Chopra and Bipasha Basu. The film was to be produced in 18 months at 100 crore, the suit said. More than 6.5 crore was paid, and Kamal's salary for acting in and directing the film was 4 crore, it said. Shooting did not commence for months, though it was to start after Kamal's earlier film 'Dasavatharam', it said, adding that Kamal directed and acted in another film 'Unnaipol Oruvan' in the meanwhile in violation of the agreement.

He also failed to abide by the industry practice of returning the salary if the artist does not act in the film, it said. 'Unnaipol Oruvan' was released only after the actor deposited half the claim amount in the form of security, it said, adding the original civil suit is still pending in court. The production house said Kamal directed and acted in 'Vishwaroopam' violating the agreement conditions. 
 http://mimg.sulekha.com/tamil/marmayogi/stills/marmayogi-stills01.jpg

நன்றி -
TOI MOBILE

Monday, December 10, 2012

விஸ்வரூபம் -DTH -ல் வெளியீடு -கமல் -ன் தன்னிலை விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHdLqt_ncOMTJrEP_6yqWNEAG0y-jWn6Xwi-UkDwIOge5p756gnZs5-vsyYFs1Qvu_YWvSdZ-DydMrI875RMHSBIobcamBk5CrLQYspsaIR9xfAhEfUmZ9RJ7_A0XNxiJp5EbDsW_IUpg/s400/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(3).jpg 

 

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
kamal blasting statement on viswaroopam 
dth release
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை


புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.



ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.



ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.


இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


 http://www.cinepicks.com/telugu/gallery/viswaroopam/viswaroopam-stills-1759.jpg
இந்த DTH என்பதுஎன்ன?


எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.



சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.


இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.



என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.




முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.



ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.



இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?



DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.



விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.



DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.



7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.



திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.



இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.



பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.


கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg


முஸ்லீம்களுக்கு எதிரானதா?


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.



அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.



-இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

 

Kamal S Plan With Mani Ratnam Son


சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம்.


கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.


இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


http://www.tamilqueens.com/wp-content/uploads/2012/05/viswaroopam-on-location-stills-bf943a96.jpg


Saturday, December 08, 2012

விஸ்வரூபம் - கமல் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1G1lpHhhMZi_ZqgG8AolU8YEiziJ-XnF-BrJeqrImL-eRq8JuYeUky7FKc9PjI8qT367I3-LPariQ-4_iZdDpSG5kX028NUQUTBkp4f_znLKX1RPFGoysriu1Zz3jDsZ2YG54QLKzrIQ/s1600/Viswaroopam_latest_wallpapers+%25282%2529.jpgலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.



'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை.


 திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள். கமலின் இந்த வித்தியாசமான வெளியீட்டு முயற்சிக்கு, தமிழ் திரைப்படத் துறையில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையாக ரியாக்ஷன்கள். 



கடந்த 5-ம் தேதி மாலை ஃபிலிம் சேம்பரில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, பெப்சி அமைப்பின் தலைவர் அமீர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்தான் 'விஸ்வரூபம்’ குறித்து, தயாரிப்பாளராக தான் எடுத்து இருக்கும் புதிய முயற்சியைத் தெரிவித்தார்.




''கமல் பாணியை எல்லோரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தனிப்பட்ட முறையில் கமல் பொருளாதார ரீதியாக தன்னைக் காத்துக்கொள்வார். கமல் பக்கத்தில் இருந்து பார்த்தால், அவரது நியாயம் புரிகிறது. டி.வி-யில் திரையிடுவதால் திருட்டு வி.சி.டி. வெளிவர வாய்ப்பு இருக்குமே என்று கமலிடமே கேட்டேன். திருட்டு வி.சி.டி. எடுக்க முடியாத தொழில்நுட்பத்தில் 'விஸ்வரூபம்’ படத்தைத் தயாரித்து இருப்பதாக என்னிடம் சொன்னார்'' என்று ஆதங்கப்பட்டார் ஒரு திரையுலக வி.ஐ.பி. 



தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் இதுபற்றி பேசினோம். ''தமிழ் சினிமா​வில் நடிப்பு, படைப்பில் மட்டும் இல்லை; வியாபாரத்திலும் புதுமையைப் புகுத்துகிறார் கமல். 'விஸ்வரூபம்’ படத்தை 90 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார். செலவு செய்த பணத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும். 



அதனால், 'விஸ்வரூபம்’ படத்தை யாரிடமும் விற்கவே இல்லை. அவரே நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார். பணம் கொடுத்து வாங்கினால்தானே விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டம் அடைவார்கள். இதுவரை எத்தனையோ ரிஸ்க்கான படங்களைத் தயாரித்து நடித்து இருக்கிறார் கமல். அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நயா பைசா பாக்கி வைக்காமல் செட்டில் செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். இப்போது நிறைய நடிகர்கள் தயாரிப்​பாளரிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையே திருப்பித் தராமல் டிமிக்கி கொடுப்பதை கண் கூடாகப் பார்க்கிறேன்.



எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. இன்று கமல் செய்யாவிட்டால், நாளை வேறொருவர் செய்வார். அப்போது என்ன செய்வார்கள்? கமல் முன்னோடியாக இருக்கிறார். கமலின் இந்த துணிச்சலான முயற்சி எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் புது மாற்றத்தை உருவாக்கும்.


கூட்டத்துக்கு வந்த கமலை, சின்ன பட்ஜெட் படம் எடுத்தவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய படத்தையும் அதுமாதிரி விற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு டாக்டர் நோய்க்கான மருந்தை சீட்டில் எழுதித்தான் தர முடியும். அவரே மருந்து வாங்கித்தர முடியாது!'' என்று கமல் கருத்தை ஆதரித்தார்.



கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். ''கமல் தன்னோட சொந்தப் பணம் 90 கோடி ரூபாயை முதலாகப் போட்டு 'விஸ்வருபம்’ படத்தை எடுத்து இருக்கிறார். அந்தப் படத்தை எந்த முறையில் விற்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான் உண்டு. 


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் மினிமம் கியாரன்டி கேட்டு எங்களிடம் படம் கொடுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. கமல் 'விஸ்வரூபம்’ படத்துக்கு மினிமம் கேரன்டி கேட்கவே இல்லை. ஒரே ஒருநாள் பிரிமியர் ஷோ போடுவதால், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட சந்தோஷமாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.   



அடுத்து கமல் பாணியில் 'அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை வெளியிட இப்போதே பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாம்!


நன்றி - ஜூ வி 

 http://middaytimes.com/wp-content/uploads/2012/06/kamal-hassan-viswaroopam-photos00-640x960.jpg


சென்னை: ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம். இந்த பலம் இருக்கும்வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார் கமல்ஹாஸன்.



கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடந்தது.



இதற்காக கமல்ஹாசனும், படக்குழுவினரும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதலில் மதுரைக்கு சென்றார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் காலை 10-30 மணிக்கு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்ரிநாத் பெற்றுக்கொண்டார்.



மதுரை விழா முடிந்ததும் கமல்ஹாசனும், படக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார்கள். மாலை 3 மணிக்கு கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், பாடல் வெளியீட்டு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய ரசிகைகள் இரண்டு பேர் பெற்றுக் கொண்டார்கள்.


கோவை விழாவை முடித்துக்கொண்டு கமல்ஹாசனும், படக்குழுவினரும் அதே ஹெலிகாப்டரில் சென்னைக்கு வந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 8 மணிக்கு விழா தொடங்கியது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய மூவரும் மேடையில் தோன்றினார்கள். மைதானம் முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.




கமல் பேசுகையில், "இது பொங்கலா, தீபாவளியா என்று தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் என் மூத்த சகோதரர்-அண்ணன் இளையராஜாவுக்கு நன்றி. என்மீதான் அன்பு மட்டுமே அவரை இங்கே வரவைத்திருக்கிறது. இந்தப் பெருமையைத் தந்த அவருக்கு நன்றி. நீங்கள் (ரசிகர்கள்) சந்தோஷப்படுகிற மாதிரி ‘விஸ்வரூபம்' படத்தை எடுத்து இருக்கிறேன்.




ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சந்தோஷம். எவ்வளவு கரகோஷம் எழுந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பேராசை ஏற்படும். அதற்கான அருகதை இருக்கிறதா? என்று கூட யோசிப்பதில்லை.
மதுரையிலும், கோவையிலும் நடந்த விழாக்களில், அங்குள்ள சகோதரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லோரும் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது, இவர்களுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆர்வமும், பயமும் வருகிறது.



என்னை குழந்தையாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். வளர்ந்தபின் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் என் மீது அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள். அந்த அன்புதான் என் ஆணிவேர்-அச்சாணி என நினைக்கிறேன். நான் கழன்றுவிடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன்,'' என்றார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL7a_UzKoKBUj43j4EKqdeIK0Z-pnX3NoCkydSi-PV9G7NjkgNvz93EdG9uaUz3GPfPiGTiD1RdANPoI2z8iwsNtBJbxYBsNoty0bfuj3hVsWGo8ypD7O6fqsZdOTNmm7EplHedjyYE9c/s1600/viswaroopam+movie+stills+%25284%2529.jpg



சென்னை: புதுமைப் பித்தர்களாக நினைத்துக் கொண்டு படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் சினிமாக்காரர்கள், நிஜமாகவே ஒரு புதுமையான விஷயத்தை செயலுக்குக் கொண்டு வந்தால் மட்டும் ஏற்க மனம் வருவதில்லை.



சினிமாக்காரர்களிடம் போய் உங்களது தலையாய பிரச்சினை என்ன என்று கேட்டால் ஒரே குரலில் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூக்குரலிடாத குறையாக சொல்வது திருட்டு விசிடி மற்றும் டிவிடி பிரச்சினையைத்தான். சரி இதை ஒழிக்க என்ன நடவடிக்கை என்று அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டால், அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.




ஆனால் உண்மையில் திருட்டு விசிடி-டிவிடியை ஒழிப்பது என்பது சினிமாக்கார்ரகளின் கையில்தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை அல்லது முன்வருவதில்லை.



திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல்ஹாசன் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். இதை இதுவரை திரையுலகைச் சேர்ந்த யாருமே ஆமோதித்ததும் இல்லை, கருத்துச் சொன்னதும் இல்லை. அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அரசையே அண்டி வருவதை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளனர்.




தியேட்டருக்கு படம் வரும் அதேசமயத்தில் டிவி சேனல்களுக்கும் ரைட்ஸ் கொடுத்து ஒரே நேரத்தில் வெளியிடுவது, டிவிடி, இன்டர்நெட் உரிமைகளையும் ஹோல்சேலாக கொடுத்து விடுவது என்பது நிச்சயம் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடும் என்பதோடு அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைவதால், திருட்டு விசிடி, டிவிடிகளுக்கு வேலையில்லாமல் போகும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.



புதிய விஷயம் எப்போதுமே ஆரம்ப கட்ட சிக்கல்களையும், சிரமத்தையும் கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் அதைக் கொண்டாடத் தொடங்கி விடலாம். கமல்ஹாசன் கிட்டத்தட்ட தனது மிகப் பெரிய படத்தையே அடகு வைத்து, பெரும் ரிஸ்க் எடுத்து களத்தில் இறக்கத் தயாராக இருக்கும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகிறது.




நிச்சயம் கமல்ஹாசனைத் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வராது என்பது ஒருபுறம் இருக்க அவர் செய்யப் போகும் முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் கூட உட்கார்ந்து கவனிக்க தைரியம் இல்லை என்பதை ஆச்சரியம்தான்.




இதே கமல்ஹாசன்தான் டிவியால் சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அது உண்மையாகவும் உள்ளது. டிவி வந்ததால் சினிமாக்காரர்களுக்குத்தான் நிறைய லாபம் கிடைத்துள்ளது. அபரிமிதமான விளம்பரங்களையும், 'பில்டப்'களையும் செய்ய இன்று டிவியை விட்டால் வேறு மீடியாவே இல்லை. மேலும் ஓடாத குப்பைப் படங்களையும் கூட உச்சாணிக்குக் கொண்டு போய் விளம்பரம் செய்து ஓட வைக்க இன்று டிவிதான் சினிமாக்காரர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.


கமல்ஹாசன் செய்யப் போகும் முயற்சியை சற்று விட்டுத்தான் பார்ப்போமே... துணிச்சலா சப்போர்ட் பண்ணுங்க சினி்மாக்காரர்களே... அது சரி 'இன்டர்நெட்' என்பதையே 'இன்டர்காம்' என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும்போது கமல்ஹாசனை ஏற்க எப்படி இவர்களுக்கு மனம் வரும்...!


சென்னையில் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாஸனிடம் கேள்வி என்ற பெயரில் அபத்தமாகக் கேட்டு, அசடு வழிந்தார் நடிகர் ஜெயராம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தார் கமல்.


அவரோ, கமலைப் புகழ்கிறேன் என்ற பெயரில், விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்துக் கொண்டிருந்தார்.


கமல் பேசி முடித்ததும். அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். அது கமலையே நெளிய வைப்பதாக இருந்தது.


‘‘நீங்கள் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறீர்கள். அங்கு யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? ஜூலியா ராபர்ட்ஸுக்கா, ஏஞ்சலினா ஜோலிக்கா அல்லது வேறு யாருக்கு?'' என்று கேட்டார்.



அதற்கு கமல்ஹாசன், ‘‘அதற்காகவா ஹாலிவுட் போகிறேன்? இங்கிருந்து அங்கபோறது எச்சில் பண்றதுக்காகவா...? முடிந்தால், நல்ல நடிப்பை காட்டலாம் என நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.



 http://2.bp.blogspot.com/-7SjpCsZIExA/T9IDMw2UmrI/AAAAAAAAAJ8/pTnLj7czCSk/s1600/334034-viswaroopam.jpg


 நன்றி -தட்ஸ் தமிழ்


கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.


ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.


இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.


முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம்.
 
 
சென்னை: டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.


இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.



அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.



அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:



'விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்' என்று கூறினார்.



வேண்டுகோள்



என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.



எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.


திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.




ஒத்துழைப்பு கிடையாது


இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.


கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தகவலை சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.