Showing posts with label விக்ரம் பிரபு. Show all posts
Showing posts with label விக்ரம் பிரபு. Show all posts

Thursday, August 06, 2015

இது என்ன மாயம் -திரை விமர்சனம்:

காதல் விஷயத்தில் மாய நாடகங்கள் நுழைந்தால் என்ன நடக்கும்? அதுதான் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்திருக்கும் ‘இது என்ன மாயம்’.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு மேடை நாடகம் போட்டு வருகிறார் நாயகன் அருண் (விக்ரம் பிரபு). மக்களிடையே நாடகத்துக்கு சரியான வரவேற்போ, லாபமோ இல்லாததால் வேறு என்ன தொழிலைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்ட்டில் எதிர்முனையில் அமர்ந்திருக்கும் லுத்புதின், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பெண் கோபமாகத் திட்டுவிட்டு புறப்படுகிறாள். இதை கவனிக்கும் விக்ரம் பிரபு, ஃபீலிங்கோடு அமர்ந்திருந்த லுத்புதின் அருகே சென்று, ‘உன் காதல் வெற்றியடைய நாங்க கியாரெண்டி’ என்று உத்தரவாதம் கொடுக்கிறார்.
மேடையில் நாடகம் போட்டவர்கள், அப்போது முதல் அந்தக் காதலை சேர்த்து வைக்க நாடகம் போடுகிறார்கள். திட்டம் வகுத்தபடி அவர்களை காதல் ஜோடிகளாக்கி வெற்றியும் அடைகிறார்கள். பின், அதையே வருமானம் ஈட்டும் தொழிலாகவும் மாற்றுகிறார்கள். தொடர்ந்து காதல் ஜோடிகளை இணைத்து வைக்கும் வேலையில் பிஸியும் ஆகிறார்கள். இந்தச் சூழலில் இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு சந்தோஷ் (நவ்தீப்) தான் நேசிக்கும் மாயா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைப் பற்றி விக்ரம் பிரபு குழுவினரிடம் சொல்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். அந்தப் பெண் யார் என்று விக்ரம் பிரபுவுக்குத் தெரியவரும் இடத்தில் ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சிக்கான காரணமும் விக்ரம் பிரபு எடுக்கும் முடிவும் மீதிக் கதை.
ஒருதலைக் காதலை உண்மைக் காதலாக மாற்ற விக்ரம் பிரபு தன் சகாக்களுடன் சேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ரசிக்க வைக்கிறது. இது முதல் முப்பது நிமிடங்களைக் கலகலப்பாக நகர்த்தவும் செய்கிறது. குறிப்பாக சார்லி, ஆர்.ஜே. பாலாஜி இருவரும் செய்யும் காமெடி அட்டகாசம் கலகலப்பு.
கதை கொச்சி கல்லூரிக்கு நகரும் இடத்தில்தான் திரைக்கதையில் நடுக்கம் ஏற்படுகிறது. தமிழ் சினிமா பல நூறு முறை பார்த்துவிட்ட கல்லூரி காதல் பின்னணி. அது தரும் அலுப்பு போக, கல்லூரியில் ஜூனியர் சீனியர் சண்டை, கிரிக்கெட் போட்டி என்று குறைவில்லாத க்ளீஷேக்கள். விக்ரம் பிரபு தன்னை அந்தக் கல்லூரியின் நட்சத்திரமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இடங்கள் எல்லாம் தேவையா? பொழுதுபோக்குப் படத்துக்கு ஹீரோயிஸம் தேவைதான். ஆனால் கொஞ்சமாவது புதிதாகச் சிந்திக்கக் கூடாதா? இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் கற்பனைக்கு என்ன ஆயிற்று?
காதல் காட்சிகள், பாடல்கள், சண்டை, தன்னுடைய காதல் விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று நண்பர்களைச் சந்தித்துக் கேட்டுக்கொள்ளும் இடம், தன்னுடைய சங்கடத்தை மறைத்துக்கொண்டு நவ்தீப்புக்கு உதவும் இடம் இப்படி எல்லா இடங்களிலும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் தருணங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் முதல் படம். நடிப்பிலும், தோற்றத்திலும் கவர்கிறார். கதைக்கும் கச்சிதம். கல்லூரி மேடையில் பாடகியாக அறிமுகமாகும் இடம் தொடங்கி காதலில் கலப்பது, காதல் தோல்வியைச் சந்திக்கும்போது கண் கலங்குவது என்று கலக்குகிறார்.
நவ்தீப்புக்கு லவ்லீ பாய் ரோல். நடிப்பில் குறையொன்றுமில்லை. நாசர், அம்பிகா இருவருக்கும் படத்தில் பெரிதாக வேலை இல்லை.
படத்தின் நாயகியைப் போல இன்னொரு அழகு ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் அவர் பெரிதாக மெனக்கெடவில்லை. அதேபோல நீரவ் ஷா ஒளிப்பதிவும், ஆன்டனியின் படத்தொகுப்பும் சிறப்பு. இவ்வளவு இருந்தும் மிகமிக மந்தமாக நகரும் திரைக்கதையும், புதுமையில்லாத பல காட்சிகளும் படத்தை மாயம் செய்ய விடாமல் தடுக்கின்றன.

thanx - the hindu

Friday, July 04, 2014

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

முன்னாள் அமைச்சர் சசி தரூர்  அவரோட சம்சாரம் சுனந்தா தரூரை போட்டுத்தள்ளிட்டார் -னு பேசிக்கறாங்களே, அதான் படத்தோட KNOT. அதை வெச்சு  கொஞ்சம் கற்பனை கலந்து  திரைக்கதை அமைச்சிருக்காங்க. இது எந்த அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் .

வில்லன்  ஒரு மத்திய அமைச்சர் . அவருக்கு  ஒரு அழகிய கள்ளக்காதலி . பொதுவா கள்ளக்காதலின்னாலே அழகா தானே இருப்பாங்க . ? இவர்  ஒரு சினிமா நடிகை . ( உடனே  இது நடிகை சுகன்யா கதை யா?னு கேட்கக்கூடாது ) 2 பேரும் 4 மாசமா நேசமா  இருக்காங்க . ரிசல்ட்  பாப்பா 3 மாசமா மாசமா  இருக்காங்க. அமைச்சர் கலைச்சிடுன்னு  சொல்றார் . இது என்ன  மைனாரிட்டி ஆட்சியா? டக்னு கலைக்க?  முடியாதுங்கறார்.  சின்ன  மோதல்ல  எசகு பிசகா லைட்டா  ஒரு கொலை நடந்துடுது . 


இது  ஒரு  வீடியோ காமிராவில் எதேச்சையா பதிவு ஆகிடுது . அந்த  வீடியோ  ஹீரோயின் அப்பா  கிட்டே  இருக்கு . அதை கை மாத்த   ஹீரோயினை கடத்தறார்  வில்லன் . ஹீரோ  எப்படி  வில்லனுக்கு  தண்ணி காட்டறார் என்பதே  மிச்ச மீதி விறுவிறுப்பான  டெக்னிக்கல் சேஷிங்க் ஸ்டோரி . 


ஹீரோவா   கும்கி  புகழ் லட்சுமி\ மேனன்  ஜோடி புகழ் விக்ரம் பிரபு . அண்ணனுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் , ஃபைட் சீன் கள்  எல்லாம் பிரமாதமா வருது . ஆனா   காதல் காட்சிகள் ல பாவம்  ரொம்பவே தடுமாறுகிறார். அதுக்காக அண்ணே  லவ்  சீன் ல  மட்டும்  கொஞ்சம்  ஒதுங்கிக்குங்க , நான் பார்த்துக்கறேன்னு சொல்ல  முடியுமா/ ?  இவருக்கு  நல்ல  எதிர் காலம்  இருக்கு . 



 ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் . இது  ரம்ஜான் மாதம் என்பதை எல்லோருக்கும்  சிம்பாலிக்கா உணர்த்த படம்  பூரா  பிறை நிலா க்கள்  தெரிய  வலம் , இடம்  எல்லாம் வர்றார் . இவர்  வீட்டில்  இருக்கும்  பீரோவில் சாதா  ஜாக்கெட்டே இருக்காது  போல . ஆல் 3 இஞ்ச் பிலோ  லோ கட் ஜாக்கெட்  தான் ., சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை . வந்தமா? ( படத்தை) பார்த்தமா?னு இருக்கனும் . 


சில  ஹீரோயின்கள்   லோ கட் ஜாக் போடுவதில்  சைக்காலஜிகல் ரீசன் இருக்கு . சுமாரான  ஃபிகர் ஆக இருந்தா   முகத்துல நடிப்பு வர்ல , எக்ஸ்பிரஷன்  வர்லை , வெங்காயம் வர்லைன்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசுவானுங்க . இப்டி  லோ கட்ல வந்தா  ஒரு பய  முகத்தைப்பாக்க மாட்டான் , கமெண்ட் அடிக்க மாட்டான்., வாட் ஏன் ஐடியா ஜி ? 


நேர்மையான  எஸ் ஐ ஆக  எம் எஸ் பாஸ்கர்  குணச்சித்திர நடிப்பில் கலக்கறார் . வில்லனாக  தெலுங்கு சத்யா சக்ரவர்த்தி  பொருத்தமான நடிப்பு . அவரை விட அவரது அடியாளாக வரும் அந்த  முஸ்லீம்  வில்லன் நடிப்பு  கலக்கல். அவருக்கு கீழே  வேலை செய்யும்  ரவுடியின் நடிப்பும்  தூள் 









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.   கரண்ட் பாலிடிக்ஸில் பரபரப்பான  கொலை வழக்கான சுனந்தா தரூர் கொலையை  கொஞ்சம் மாத்தி  அதுக்கு தக்கபடி  திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


2  ஏ ஆர்  முருகதாஸ் -ன்  சிஷ்யர் என்ற பெயரைக்காப்பாற்ற  படம்  முழுக்க குறிப்பாக  முன் பாதி டெம்ப்போ ஏற்றும்  விறுவிறுப்பான  திரைக்கதை கலக்கல் 


3  நான்  உன்னில் பாதி   நீ  என்னில் பாதி பாடல் காட்சியில்   குத்தாட்டம்  போடும்  ஹை கிளாஸ்  ஃபிகர் தேர்வு ,  க்ரூப் டான்சர்கள்  மும்பை அழகிகளாக  கொஞ்சம் , ஃபாரீன் ஃபிகர்ஸ்  கொஞ்சம்  போட்டு  பாட்டின் விஷுவலில்   பிரம்மாண்டம் காட்டியது 


4  இசை  டிரம்ஸ் மணி . சும்மாவே இவர்  போட்டுத்தாக்குவார் . சேஷிங் ஸ்டோரின்னா கேட்கனுமா ? அடி தூள்:  ஒளிப்பதிவு , எடிட்டிங்க்  கன கச்சிதம் . லொக்கேஷன்  செலக்சன் பல இடங்களீல்   பிர்மாதம் . ஆர்ட்  டைரக்‌ஷன்  அழகியல் ரசனை  கொண்டவர்  போல 



5   படத்தின்  ஹீரோ   யூ  ட்யூப் , ஃபேஸ் புக்  உபயோகிப்பாளராக காட்டி  டெக்னாலஜியை  சாமார்த்தியமாக நுழைத்தது


6   ஹீரோ   போலீஸை , வில்லன் ஆட்களை அலைக்கழிக்கும் டெக்னிக்கல் வ் வித்தைகள் அபாரம் 


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  என்ன தான் மாடர்ன்  ஃபிகரா  இருந்தாலும்  ஒரு ஃபேமிலி கேர்ள் அதிகம் அறிமுகம் இல்லாத பையனுடன்  தண்ணி அடிப்பாரா? மப்பில் அவர் இருக்கும்போது  இவன் எசகு பிசகா ஏதாவது  செஞ்சுட்டா  கற்பு ஸ்வாஹா ஆகிடாதா? 


2  வில்லனோட ஆள்  ஓப்பனிங்க் சீன்ல   ஹீரோவை சுட கன்னை  ரிலீஸ் பண்றார். அப்போ  ஹீரோ தாக்காம , ஓடாம , நகராம கண்ணை  மூடி பய பாவம் காடறார் . ஏன்? 


3 தன்  செல் ஃபோனை  டிராக் பண்\றாங்கனு  ஹீரோ  சிம்மை கழட்டி  வீசுவது  சரி, அதை ஏன் கொலை நடந்த  ஸ்பாட்லயே போடனும் ? அது சாட்சி ஆகிடாதா? அந்த இடத்தைத்தாண்டிப்[போய் போடலாமே? 


4  வில்லனின்  லீலைகள் , கொலை ஆதாரம்  கொண்ட   வீடியோ அடங்கிய சாட்சி மெம்மரி கார்டு  கைல கிடைச்சதும்   அதை ஏன் ஒரு காபி எடுத்து வெச்சுக்கலை .அட்லீஸ்ட்  ஹீரோயின் செல்  ஃபோனை வாங்கி அதிலாவது   ஒரு காபி டவுண் லோடு ஏன் பண்ணிக்கலை ?

5 செண்ட்ரல்  மினிஸ்டர்க்குனு  தனி பாதுகாப்பு அதிகாரி  இருக்க மாட்டாரா?அவரை அசால்ட்டா  ஹீரோ கார்னர் செய்வது எப்படி?

6  போலீஸ் கண்ட்ரோல்  ரூமில்  செண்ட்ரல்  மினிஸ்டர் வந்து கமிஷனரை கண்ட்ரோல் ல வெச்சு எல்லாருக்கும் ஆர்டர்  போட்டுட்டு   இருக்காரே ?  போலீஸ் இன்சார்ஜ்  சி எம்  கொட நாடு  போய்ட்டாரா?


7   வில்லன் ஆளுங்க  காரில்   பின் சீட்டில் ஏறி  ஹீரோ படுத்துக்கறார். கடைக்குப்போய்ட்டு வரும் வில்லன் ஆட்கள் பின் சீட்டைக்கூடப்பார்க்க மாட்டாங்களா?  அவ்வளவ் தத்திங்களா?


8  வில்லனோட ஆட்கள்  சேசிங்க் பண்றப்ப  ஹீரோ முன்னால்  ஒரு  ரிவால்வர்  விழுது ., அதை ஏன் அவர் எடுத்துக்கலை ? ஓட வேண்டியதில்லையே ? சுடலாமே?


9 ஹீரோ  நிராயுதபாணியா ஓடிட்டே  இருக்கார் . ஆனா வில்லன் ஆட்கள் அத்தனை பேரும்  ரிவால்வரில்  சுட்டுட்டே  இருந்தும்   ஹீரோ  மேல  ஒரு தூசு  கூட படலை .


10   வில்லன்  ஒரு மினிஸ்டர் . அவர் க்ளைமாக்சில்   அத்தனை  போலீஸ்  முன்பு  ஹீரோவிடம் நான் தான் அவளை  கொன்னேன் என சொல்வது ஏனோ?> அதுவே  ஒரு ஸ்டேட்மெண்ட் ஆகி விடாதா?


11  செண்ட்ரல்  மினிஸ்டர்   கள்ளக்காதலியுடன்  கில்மா பண்ணறப்ப  காண்டம்  யூஸ் பண்ணாம  செய்வாரா? பின்னாளில்  டி என் ஏ டெஸ்ட்டில்  மாட்டிக்குவார்  என்ற பயம்  வராதா? எப்படி  காதலி கர்ப்பம் ஆனார் ?


12   ஃபைவ் ஸ்டார்  ஹோட்டலில்  காமிரா கண்காணிக்கும் என்பது  தெரியாதா?   மினிஸ்டர் எப்படி அசால்ட்டா அப்படி ஒரு சாட்சியை  உருவாக்கறார் ?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணு கூட பார்ட்டிக்குப்போகும்போது குடிச்ட்டு போலாமா?



நீ அவளை கோயில் லயா பார்த்தே?பப் ல தானே மீட்? # அ ந



2 மிஸ்! உங்க கால் வலிக்கலையா?




ஏன்?



நேத்து உங்களைப்பார்த்ததுல் இருந்து என் மனசுல "ஓடிட்டே"இருக்கீங்க # அ ந


3 பொண்ணுங்க நாங்க பில் பே பண்ற மாதிரி நடிப்போம்.ஆனா பசங்க தான் பில் பே பண்ணனும் # அ ந



4 ஒரு பையனைப்பத்தி ஒரு பொண்ணு தெரிஞ்சுக்க 2 நாள் எல்லாம் தேவை இல்லை.ஒரே ஒரு டின்னர் போதும் # அ ந


5 ஹீரோ வும் ஹீரோயினும் ( குடும்பப்பெண் ) முதல் மீட் லயே சரக்கு அடிக்கறாங்க.வாட் எ முன்னேற்றம்? # அ ந


6 பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி பணம் தான்.ஷாப்பிங் ,செலவு #,அ ந




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


அரிமா நம்பி திரைக்கதை அமைத்த விதம் அமரர் சுஜாதா வின் நில்லுங்கள் ராஜா வே நாவல் ஸ்டைல். # ஏ ஆர் முருகதாஸ் சிஷ்யர் தான் இயக்குநர்


2 முன்னாள் அமைச்சர் சசி தரூர் செய்ததாக சந்தேகப்படும் கொலை வழக்கு பற்றிய படம் தான் அரிமா நம்பி # கொளுத்திப்போடு




சி பி கமெண்ட் - அரிமா நம்பி - பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் - முன் பாதி விறுவிறுப்பு ,பின் பாதி சுமார் = விகடன் மார்க் = 41 .ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41 


 சிபி மார்க் = 42 





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5  /  5
  
இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் நெய்வேலி மகாலட்சுமி