Showing posts with label ரெஜினா. Show all posts
Showing posts with label ரெஜினா. Show all posts

Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

Monday, March 16, 2015

ராஜதந்திரம் - சினிமா விமர்சனம்

இப்படித்தான் திருடப்போகிறோம் என்று நகைக் கடை உரிமையாளரிடம் வரைபடம் வரைந்து காட்டிவிட்டுத் தங்களின் வேலையைத் தொடங்கும் மூன்று தந்திரக்கார இளைஞர்கள் ஆடும் களவாட்டம்தான் இந்த ‘ராஜதந்திரம்’.
தர்மராஜாவின் (ஆடுகளம் நரேன்) சுக்ரா ஃபைனான்ஸ் திவாலாகி மக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியோடு தொடங்குகிறது படம். சிறை செல்லும் தர்மராஜா என்ன ஆகிறார் என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மூன்று இளைஞர்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறார் இயக்குநர் ஏ.ஜி. அமித்.
அர்ஜூன் (வீரா) தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சாமர்த்தியமான மோசடிகளில் ஈடுபடுகிறான். ஆனால் பெரிய மோசடிகளில் ஈடுபடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.
மிஷல் டிமெல்லோ (ரெஜினி) என்னும் பெண் எம்.எல்.எம். நிறுவனத்தில் இவர்களைச் சேர்த்துவிடு கிறாள். அவளுக்காகவே அந்தத் திட்டத்தில் சேரும் அர்ஜுனுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது.
சிறையிலிருந்து வெளியே வரும் தர்மராஜாவும் போலிச் சான்றிதழ்கள் தயாரித்துத் தருவதில் கில்லாடி யான மாதவ அய்யரும் (இளவரசு) சேர்ந்து ஒரு பெரிய நகைக்கடையைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டு கிறார்கள். தன்னிடம் தொடர்பில் இருக்கும் அர்ஜுன் தான் இதற்குச் சரியான ஆள் என்று மாதவ அய்யர் தீர்மானிக்கிறார். தந்திரங்களின் போர்க்களத்தில் இறுதி யில் வென்ற ராஜதந்திரம் எது என்பதுதான் கதை.
ஆரம்பத்திலிருந்தே திரைக்கதையில் ஒட்டிக்கொள் ளும் திரில்லரும் கலகலப்பும் படம் முழுக்க தொடர் கிறது. சின்னச் சின்னத் திருட்டுகளிலிருந்து நகைக் கடை கொள்ளை வரை எல்லாமே விறுவிறுப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஹோட்டலில் நடக்கும் தங்க பிஸ்கட் திருட்டு கலகலப்பும் விறுவிறுப்புமாய் சித்தரிக்கப்படுறது. படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுவது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.எம். உறுப்பினராக ரெஜினா செய்யும் பிசினஸ் முயற்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பணத்துக்காக அவர் ஏன் அப்படித் தவிக்கிறார் என்பதை விளக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. விஷயம் புரியாமல் தன்னைத் திட்டும் வீராவிடம் அவர் சண்டைபோடும் காட்சியில் வசனம், ரெஜினாவின் நடிப்பு இரண்டும் அருமை.
ஹோட்டலில் தங்க பிஸ்கட் பையைப் பறிகொடுத்த கோஷ்டி அதைப் பறித்த இளைஞர்களைத் தேடி அலையும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. காதல் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.
நகைக்கடையைத் திருடத் திட்டமிட்டிருக்கும் சம்பவம் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிய வரும் சூழலில் காவல் துறை அதைக் கையா ளும் விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. திட்டத்தைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் அதைக் கையாளும் விதமும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.
ஆனால் இதையெல்லாம் யோசிக்கவிடாத அளவுக்குத் திரைக்கதை றெக்கை கட்டிப் பறப்பது படத்தின் பலம்.
நடுநிசி நாய்களில் மனப் பிறழ்வு கொண்டவராக வந்த வீரா இதில் படம் நெடுகத் தந்திரக்காரத் திருடனாக வருகிறார். திட்டம் போடுதல், களத்தில் இறங்கித் திருடுதல், வாய் வீச்சு ஆகியவற்றில் அவர் நடிப்பு கச்சிதம். கலகலப்புடன் கூடிய கதையில் அவர் கொஞ்சம் இலகுவாக நடித்திருக்கலாம்.
மூவரில் ஒருவரான தர்புகா சிவா பொழியும் காமெடித் தூறல் ஈர்ப்பை விதைத்துச் செல்கிறது.
நரேன், ‘பட்டியல்’ சேகர் ஆகிய இருவரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். பட்டியல் சேகரின் முக பாவங்கள் மனதில் நிற்கின்றன. இளவரசு கொடுத்த வேலையை வழக்கம்போல ஒழுங்காகச் செய்கிறார்.
திரைக்கதையின் வேகத்தையும், போக்கையும் புரிந்துகொண்ட பிரவீண்குமாரின் எடிட்டிங், சந்தீப் சவுதாவின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன. பாடல் இசை ஜி.வி.பிரகாஷ் குமார். பரவாயில்லை என்று சொல்ல லாம்.
விறுவிறுவென நகரும் திரைக்கதையில் நகைக் கடைத் திருட்டை இரண்டாம் பாதியில் இருந்து தொடங்கியிருக்கிறார், இயக்கு நர். அதை இன்னும் சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கலாம்.
காவல்துறை இந்த விஷயத்தைக் கையாளும் விதத்தில் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.






மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  வாழ்க்கைல பணம் தரும் தைரியத்தை யாராலும் தர முடியாது # ரா த


2 அடுத்தவங்க பேராசையை நாம யூஸ் பண்ணிக்கிட்டா நம்ம ஆசை நிறைவேறும் # ரா த



3 சின்ன சின்ன தப்பா செஞ்சுட்டு இருப்பதால் தான் தப்பிச்ட்டு வரோம்.பெரிய தப்பா செய்ய நினைச்சா மாட்டிக்குவோம்.# ரா த



4 வேலைக்குப்போற எல்லாப்பொண்ணுங்களுக்கும் உள்ள பிராப்ளம் ஆண்.தான்.ஆனா எங்கே எப்போ அவனை கட் பண்ணனும்னு அவளுக்குத்தெரியும்#,ரா த


5 நாம கடன் வாங்கிட்டு அவஙளைக்கடன் காரஙக னு சொல்றோம் #,ரா த


6 எல்லா உண்மையையும் உன் கிட்டே சொல்லனும்னு அவசியம் இல்லை.ஆனா சொன்னதெல்லாம் உண்மை தான் #,ரா த


7 நல்லது செய்யனும்னு நினைக்கறவங்களுக்கு உதவியா இருப்பதும் ஒரு நல்லதுதான் #,ரா த


8 எதிரி நம்மை விட்டு தூரத்தில் இருந்தா அவன் என்ன பண்றான் ஏது பண்றான்னு தெரியாது.எதிரி நம் அருகில் இருப்பது நல்லது #,ரா த


9 பொய்யான தகவல் தரும்போது எதிரி நம்மை கிராஸ் செக் செய்வான் கற எண்ணம் எப்பவும் மனசில் இருக்கனும் #,ரா த



10 நாங்க என்ன செய்யனும்?னு நீங்க சொல்லாதீங்க.நீங்க என்ன செய்யனும்னு் சார் சொல்வார்.அதன்படி நடங்க #,ரா த



11 சதித்திட்டம் தீட்டனும்னா பதட்டத்துக்கும் பயத்துக்கும் இடம் தரக்கூடாது # ரா த



12 பெரிய அளவில் சாதிக்கனும்னு நினைச்சா ரிஸ்க்கும் ஜாஸ்தியா எடுக்கனும் # ரா த



13 இழந்தவங்களோட அழுகையை நான் பார்த்த்தில்லை.ஆனா இழந்தவையை திருப்பிப்பெற்ற சந்தோஷத்தை பார்த்துட்டேன் #,ரா த






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 எந்த ஊர்ல எப்போ தியேட்டருக்குப்போனாலும் மொத போணி நாமாத்தான் இருக்கோம்.பூரா பயலுக்கும் பொழப்பு இருக்கும் போல்


2 சதுரங்க வேட்டை பாகம் 2 போல் காட்சி அமைப்புகள் வசனங்கள் #,ராஜதந்திரம்


3 ஏன் இந்தப்பார்வைகள் ?ஏன் இந்த மவுனங்கள் அருமையான மெலோடி .படமாக்கப்பட்ட விதம் கவிநயம் # ரா த











சி  பி  கமெண்ட்   ராஜதந்திரம் = முன் பாதி சராசரி ராவடி ஜில்லர் பின் பாதி ராபரி த்ரில்லர் பிஜிஎம் வசனம் பட்டாசு -விகடன் =43 ரேட்டிங் = 3/5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)=  ஓக்கே



 ரேட்டிங் =  3 / 5


டிஸ்கி -  மகாபலிபுரம் - சினிமா  விமர்சனம்

http://www.adrasaka.com/2015/03/blog-post_80.html



கதம்  கதம்  - சினிமா  விமர்சனம்


http://www.adrasaka.com/2015/03/blog-post_66.html

Perundurai nallappaas (rajathanthiram -survival of the smartest) 2 30 pm
 Embedded image permalinka