Showing posts with label முதல்வர் ஜெயலலிதா. Show all posts
Showing posts with label முதல்வர் ஜெயலலிதா. Show all posts

Wednesday, August 26, 2015

சுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வாசித்த அறிக்கையில், சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களின் முதன்மையானவை:
1) நடப்பு ஆண்டில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் ஏற்படுத்தும் வண்ணம், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும்.
2) தாம்பரம், திருத்தணி, குடியாத்தம், ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக் காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமானவற்றிலிருந்து அவர்களை காப்பாற்ற, ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு பராமரிக்கும் 5 படுக்கை வசதி கொண்ட ஸ்டெப் டவுன் வார்டும் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
3) நடப்பு ஆண்டில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், முதல் கட்டமாக 50 பழைய ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்; ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு இளம் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இவற்றை வலுப்படுத்தும் பொருட்டு, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வெண்டிலேட்டர் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும்.
4) சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும். | முழு விவரம்: அடையார் புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடியில் வலுப்படுத்துகிறது அரசு
ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு...
5) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஏற்கும் வகையில், 10 கோடி ரூபாய் தொகுப்பு நிதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க, மாநில அரசின் பங்காக 10 கோடி ரூபாயும், காப்பீட்டு தொகையிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கப் பெறும் தொகையிலிருந்து ஒரு பங்கினையும் சேர்த்து ஒரு தொகுப்பு நிதி 2012-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியிலிருந்து, இதுவரை 2,506 பயனாளிகள் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கென 177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து வருவதால், இந்த தொகுப்பு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தொகுப்பு நிதிக்கு கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு...
6) சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க HbA1C அனலைசர் கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுன்டர் (Cell Counter) கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
7) நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டம், நகரும் மருத்துவப் பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்; 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
புதிய மருத்துவக் கல்லூரிகள்:
8) ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும்; தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
முழு உடல் பரிசோதனைத் திட்டங்கள்
9) சென்னை அரசு பொது மருத்துவமனையில்‚ 'அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்‛அதாவது, Amma Master Health Check-up தொடங்கப்படும்; மகளிருக்கு என்று தனியாக ‚ 'அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை', அதாவது Amma Women Special Master Health Checkup என்ற திட்டமும் தொடங்கப்படும்; மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்து கொள்ளும் வகையில் 'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்ற ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும். | முழு விவரம்: அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
10) குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாய் சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட 'அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும். இந்த மருந்துகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும்.

நன்றி - த இந்து

Tuesday, June 23, 2015

குப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் தர்க்க ரீதியிலான தவறுகள், கணிதப் பிழைகள் நிரம்பியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசு பட்டியலிட்டுள்ளது.
குறிப்பாக, அக்னிஹோத்ரி வழக்குடன் ஜெயலலிதா வழக்கை ஒப்பிட்டு மேற்கோள் காட்டியது மிகப் பெரிய தவறு என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.
பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:
'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.
கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.
மேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.
அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.
ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.



thanx - the hindu

  • வீ.இராமசாமி  
    முறையீடு முறையானதுதான்.கணக்குப்பிழைமட்டுமல்ல,திரு.குன்ஹாவின் வாதங்களுக்கு முறையான,ஏற்புடைய பதில்களும் திரு.குமாரசாமி அவர்கள் சொல்லவில்லை.
    about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
    • Nagarajan  
      ஹ்ம்ம்
      Points
      395
      about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Ragam Thalam  
        ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காக வேண்டுமென்றே கணக்கில் தவறு செய்து அளித்த தீர்ப்புதான் கர்நாடக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு. தவறாக தீர்பளித்த நீதிபதிகள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றதால் தைரியமாகக் கொடுத்த தீர்ப்பு . பார்ப்போம். உச்சநீதி மன்றம் என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.
        Points
        5790
        about 5 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
        • Ragam Thalam  
          சட்டப் படிப்பிற்கு கணிதத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
          Points
          5790
          about 5 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
          selva · JayennessJayaraman  Up Voted
          • Ravichandran  
            கூட்டல் மட்டும் தவறு என்று சொல்லவா 2700 பக்கங்களுக்கு மேலே தாக்கல் செய்து இருக்காங்க உச்ச நீதி மன்றத்தில்? நீதி ரொம்ப வெயிட் தான் போல.
            Points
            670
            about 6 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
            JayennessJayaraman  Up Voted
            • Krishnan  
              ஆச்சார்யா தீர்ப்பை சரியா படிக்கல கூட்டலை மட்டும் paarththaaru
              Points
              150
              about 6 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
              JayennessJayaraman · t  Up Voted
              • Mohan  
                சைடு பை சைடு , குமாரசாமியை மீண்டும் ஆரம்பகல்வி படிக்க அனுப்புங்கள், உச்ச நீதிமன்றமே.

              Monday, June 02, 2014

              தமிழகம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெ உத்தரவு

              மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களைத் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 



              இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், " 'குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது. 



              அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது. 



              மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் 'அம்மா உணவகங்களை' காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன். 



              தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 



              மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தற்போது 294 அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. 



              இந்த அம்மா உணவகங்களில், காலை 7 மணி முதல் 10 வரை இட்லி, சாம்பார் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகின்றன. 



              சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி தவிர, பொங்கல், சாம்பார் ஐந்து ரூபாய்க்கும்; மதிய உணவின் போது, எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும்; மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். 



              விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 




              புதிதாக 360 உணவகங்கள்


               
              ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அம்மா உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்கள்; ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம், 



              2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 



              இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும். 



              எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தரமான உணவை மேலும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பெற வழி வகுக்கும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 




               
               
              • pandaram  from Kumar
                பேசாம எல்லா நியாயவிளைக்கடைகளியும் அம்மா உணவகமாக மாத்திட்ட தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இராது.
                about 14 hours ago ·   (2) ·   (4) ·  reply (0) ·  promote to News Feed
              • ANTHONY  from Perth
                நல்ல திட்டம் .
                about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • ப.கவிதா குமார்  
                தமிழகத்தில் இதுவரை செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு ஏன் தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லையென்று கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாத முதல்வர், மேலும் கடை திறக்கப்போகிறேன் என ஏமாற்றுகிறார். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மாநகராட்சிகளின் நிதியை எடுத்து அம்மா உணவகம் நடத்துகிறார். மக்கள் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா என்றால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் ஒரு நாள் வசூல் பணத்தை வழங்கத் தயாரா? - ப.கவிதா குமார்,மதுரை.
                about 12 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
                tknithi   Up Voted
              • Naresh  
                அம்மா உணவகங்களைத் கிராமம் , பஞ்சயாத் பகுதியில் துவங்கினால் அ.தி .மு.க , வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும்.
                about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • dandy  
                தமிழா நாட்டில் மாத சாராய விற்பனை 90 கோடி அம்மாடியோவ் ....இதை தொடக்கி ..இலவச சாராயம் கொடுத்த கோபாலபுரம் கோமாளி யால் மக்கள் பட்டினி ...இந்த அம்மா உணவகங்கள் அவர்கள் வயிற்ரை நிரப்பட்டும்
                about 10 hours ago ·   (1) ·   (5) ·  reply (0) ·  promote to News Feed
                kailawsh   Down Voted
              • ramakrishnan  from Chennai
                மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் ,விலை வாசி குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுதான் சிறந்த அரசு நிர்வாகம் அதை விடுத்து இட்லி கடை தண்ணி வியாபாரம் ,மக்கள் வரிப்பணத்தில் செய்துவிட்டு ,தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாம்
                about 9 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) ·  promote to News Feed
              • saravanan  from Chennai
                ஒருவேளை அதிமுகாவின் மகத்தான வெற்றிக்கு இதுதான் காரணமாக இருக்குமோ? என்னதான் நாம் இந்த திட்டத்தை பற்றி குறை சொன்னாலும், இப்போது உள்ள விலைவாசியில் அடித்தட்டு மக்களுக்கு இந்த உணவகங்கள் ஒரு வரப்ரசாதம் தான்.
                about 9 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Vasudevan Venugopal  
                அட்ரா சக்க. எகிப்து பாதுஷா அம்மா கட இட்லியை சாம்பார்ல கொழச்சி அடிச்சாலும் அடிச்சாரு, நமக்கு அடிச்சுது சான்சு. இப்ப கூடுதலா 360 கட. ஒரு கடையில பொங்கல்னா இன்னொரு கடையில சப்பாத்தி!! கொண்டாட்டம்தான். உலகம் போற்றும் அம்மா வாழ்க. இனி திமுக அவ்வளவுதான் போல!!
                about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • Dorairaj Anandaraj  from Mumbai
                தனது கட்சியினரை வாழ்விக்க உருவாக்க பட்ட திட்டம்.சி.எ.ஜி. தணிக்கை செய்து அரசு ஏற்பாட்ட இழப்பினை தெரிவிக்க வேண்டும். இது பிச்சைக்கு போவது போல் உள்ளது. ஏழ்மையின் அடையாளம் தானே.
                about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              •  from Chennai
                அதென்ன 360 கூடு தொகை 9 ல வருது ?? இந்த அறிவிப்பு 37 தொகுதியில வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்கு நேர்த்திகடனா ?மக்கள் காசிலேயே மக்களுக்கு அல்வாவா ??
                about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • செந்தில் kumar  from Chennai
                திறந்து வைத்தார் சரி சாப்பிட்டாரா ??????????????????//
                about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
              • ஜெய்.ரமணா  from Chennai
                எந்த நம்பூதிரியின் கட்டளையோ தெரியவில்லை ? அப்படி நம்பூதிரியின் கட்டளையாக இருந்தால் இப்படி மக்களின் வரி பணத்தில் செய்யாமல் தனது சொந்த காசில் (60 ரூ .சம்பளத்தில் 69 கோடி சேர்த்த ) செய்து அம்மா உணவகம் ,இல்லைனா "ஜெயா உணவகம் " ன்னு பேர் வச்சு கிட்டா இன்னும் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் அல்லவா ?அப்படியே அறிவிக்கிறதும் அறிவிக்கிறீங்க ஜூன் 3 ம் தேதி அறிவிச்சா போனா போயிட்டு போகுது அந்த ஆளுக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும் இல்ல !
                about 8 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
              • vsankar Sankar  from Chennai
                rationil வழங்கப்படும் விலை இல்லா அரிசிக்கும் மலிவு விலை பருப்புkகும் ஆபத்து தான்.
               நன்றி - த இந்து