Showing posts with label தத்துவங்கள்.பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label தத்துவங்கள்.பெண்ணுரிமை. Show all posts

Thursday, September 23, 2010

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
(நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்