Showing posts with label ஜு வி. Show all posts
Showing posts with label ஜு வி. Show all posts

Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg

Sunday, August 19, 2012

சென்னை ஈ சி ஆர் ரோடு NH 47 ஆ? NH 143?யா?

http://www.ecrbeachhouse.com/images/chennai-beachhouseecr.jpgடான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க!


ஈ.சி.ஆர். பார்ட்டி... மைனர் பொண்ணு!



விபசாரத்தில் பெண்களைத் தள்ளுவதற்காக புதுசு புதுசாகத்​தான் யோசிக்கிறார்கள்.அப்படிக் கையாளப்பட்ட ஒரு டெக்னிக் அம்பலமாகவே, 11 புரோக்கர்களும், 23 பெண்களும் போலீஸாரிடம் சிக்கி இருக்​கிறார்கள்.



சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே சுதந்திர தினத்துக்கு முன் தினம் இரவு, ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. பேருந்துக்கு வெளியே சில பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க... அந்த வழி யாகச் சென்ற ஒருவர் போலீஸுக்குத் தகவல் தட்டிவிட்டார்.
 போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்ததும், ''இந்த ஆளு எங்களை டான்ஸ் ஆடினா போதும்னு கூட்டியாந்துட்டு, இப்போ வேற மாதிரி இருக்கச் சொல்றான் சார்'' என்று பெண்கள் குற்றம் சாட்டினர். 'ஆஹா... இது வேற விவகாரம்’ என்று உஷாரான போலீஸ், உடனே பஸ்ஸில் இருந்த பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்துக்கு அனுப்பினர். பிரச்னை செய்த புரோக்கர்கள் 11 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர்.


http://images03.olx.in/ui/11/06/41/1295810330_160350541_1-Farm-House-for-Daily-Rent-in-ECR-Chennai-ECREast-Coast-Road.jpg

காப்பகத்துக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பெண்களில் ஒருவரிடம் பேசினோம். ''என் பேரு சந்தியா. எனக்கு டான்ஸ் நல்லா ஆட வரும். சினிமாவுல முயற்சி செஞ்சேன். பெருசா வாய்ப்பு கிடைக்கலை. அதனால, ஹோட்டல்ல டான்ஸ் ஆடுறேன். நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் மட்டும் டான்ஸ் ஆடப் போவேன். ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் ஆடுவேன். டிப்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 2,000 ரூபா கிடைக்கும். சில பேர் டான்ஸ் முடிஞ்சதும் ரூமுக்குப் போகலாம்னு வம்பு பண்ணிக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.




போன வாரம் எங்க ஹோட்டலுக்கு அன்​சாரினு ஒரு புரோக்கர் வந்தார். 'ஈ.சி.ஆர். ரோட்டுல இருக்கிற பண்ணை வீட்டுல வெளிநாட்டுக்காரங்க விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 25 பேரு அந்த விருந்துல கலந்துக்கப் போறாங்க. அங்கே டான்ஸ் ஆடணும். நிறையத் துட்டு கிடைக்கும்’னு சொன்னார். என்கூட டான்ஸ் ஆடுற பொண்ணுங்க நாலு பேரு இருக்காங்க. அவங்ககிட்டேயும் விஷயத்தைச் சொல்லி, நாங்களே 13 பேரை ரெடி பண்ணிட்டோம். எனக்கு வீடு வடபழனி பக்கத்தில் இருக்கு. 'ராத்திரி 9 மணிக்கு பஸ் வரும் ரெடியா இருங்க’னு அன்சாரி எனக்குப் போன் பண்ணிச் சொன்னார். நாங்க எல்லோரும் வடபழனியில் நின்னுட்டு இருந்தோம். ஏசி பஸ் வந்து எங்களை ஏத்திக்கிட்டு கிளம்புச்சு.




பஸ்ல போகும் போது, அன்சாரி என்கிட்ட வந்து, 'ஃபாரீன்ல இருந்து வர்றவங்களுக்கு தமிழ்நாட்டுப் பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் முடிஞ்சதும் அவங்க ஆசைப்படுற மாதிரி நடந்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேணும்னாலும் கொடுப்பாங்க’னு சொல்லவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. என் கூட வந்த மத்த பொண்ணுங்ககிட்டயும், அன்சாரி கூட வந்த ஆளுங்க இதே மாதிரி பேசினாங்க. உடனே, எல்லா பொண்ணுங்களும் கத்திக் கூச்சல் போட்டு வண்டியை நிறுத்திட்டோம். அதுக்குள்ள போலீஸ் வந்துட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/Lohas-Hotel-New-Well-Being-Spa-Resort-Clark.jpg

''ஈ.சி.ஆர். ரோட்டுல மாயாஜால் தாண்​டிட்டா நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றன. அங்கதான் இது மாதிரி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க. வெளிநாட்டில் இருந்து வரும் சில பார்ட்டிகளைத் திருப்திபடுத்த சில நிறுவனங்கள் இது மாதிரியான பார்ட் டிகளுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. வெளி நாட்டுக்காரங்க, 'ப்ரஷ்ஷா’ வேணும்னு கேட்பாங்க. 
அதுக்காகத்தான் டான்ஸ் அது இதுன்னு பொய் சொல்லி பொண்ணுங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வச்சுப் பணத்தைக் காட்டினா சிலர் சைலன்ட் ஆயிடுவாங்க. பிடிக்காதவங்களை டான்ஸ் முடிஞ்சதும் அனுப்பி வைச்சிடுவாங்க. காசுக்காக சில ஸ்கூல் பொண்ணுங்க கூட இந்த பார்ட்டிக்கு வந்து போறாங்க. இந்த மாதிரி பார்ட்டிகளை அரேஞ்ச் பண்றதுக்காகவே நிறைய புரோக்கர்கள் இருக்காங்க'' என்று நம்மிடம் சொன்னார் ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர்.




இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கும் ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம் பேசினோம். ''மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர். ஏதாவது ஸ்கூல் பொண்​ணாக இருக்குமோன்னு நினைச்சோம். விசாரிச்சபோது அந்தப் பொண்ணு வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு வீட்டில் வேலை செய்வது தெரியவந்தது. 
பார்ட்டியில டான்ஸ் ஆட ணும்னு சொல்லித்தான் அந்த பொண்ணுங்க 23 பேரையும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இருந்தாலும் பிடிபட்ட புரோக்கர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புரோக்கர்களிலும் பெண்கள்தான் அதிகம். ஈ.சி.ஆர். பகுதியில் இதுபோல பார்ட்​டிகள் நடப்பது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியாக.



இருட்டுக்குள் இன்னும் என்னனென்ன  நடக்கிறதோ...!
http://mithunonthe.net/wp-content/uploads/2010/02/mamallapuram-chennai-ecr.jpg

thanx - ju vi