Saturday, March 01, 2014

கிளி யின் மூலம் துப்பு துலங்கிய ஆக்ரா பெண் கொலை வழக்கு

ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி


தன் எஜமானியைக் கொன்றவரை ஒரு கிளி காட்டிக் கொடுத்துள்ளது. தடயமின்றித் தவித்து வந்த போலீஸாருக்கு உரிய நேரத்தில் கொலையாளியை அந்தக் கிளி அடையாளம் காட்டியிருக்கிறது.



உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேஷ்வர் பகுதியில் வசிப்பவர் விஜய்சர்மா. உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23-ம் தேதி விஜய்சர்மா ஒரு திருமணத்துக்குச் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம் சர்மா (45) மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட நீலம் சர்மாவின் மகள், கிளியுடன்.

இதை மிகவும் திறமையுடன் செய்த கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட சத்தா காவல்நிலையப் போலீஸார் வழக்கை தீர்க்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் நீலம் சர்மா வளர்த்து வந்த கிளி கொலையாளியை போலீஸாருக்கு அடையாளம் காட்டியது.



இது குறித்து விஜய் சர்மா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30) என் வீட்டில்தான் வளர்ப்பு மகன் போல் பாவித்து வளர்த்து வந்தேன். என் மனைவியின் கொலை வழக்கு விசாரணைக்காக போலீஸார் இங்கு வரும் போது என் வீட்டு செல்லக்கிளி, அசுதோஷ் சர்மாவின் (30) பெயரை ‘ஆஷு! ஆஷு!’ என சத்தமிட்டுக் கூறியது. அதன் பிறகு, அவன் வரும் போதெல்லாம், அந்தக் கிளி, இயற்கைக்கு மாறாக வினோதமான செய்கைகளுடன் சத்தம் போட்டது. இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸாரிடம் கூறினோம்’ என்றார்.
இதன் பிறகு, அசுதோஷை விசாரித்த போலீஸாரிடம் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.


இது குறித்து ஆக்ரா மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலாப் மாத்தூர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளை அடிக்கும் போது இந்தக் கொலையும் நடந்துள்ளது. அப்போது, நீலம் வளர்த்த ஒரு நாயும் கொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு உடந்தையாக இருந்த ரோனி மெஹில் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொபைல் எண்ணில் பேசப்பட்ட விவரங் களை எடுத்து கேட்ட பின் இருவரையும் கைது செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.



அசுதோஷ் அந்த வீட்டிலேயே இருந்ததால், அவர் உள்ளே வரும்போது நாய் குரைக்கவில்லை. அவர் நகை, பணத்துடன் வெளியேறும் போது குரைத்திருக்கிறது. நாய் காட்டிக் கொடுத்துவிடும் என்பதற்காக அதனைக் கொன்றுவிட்டனர். அப்போது புத்திசாலித்தனமாக அமைதியாக கூண்டுக்குள் இருந்த கிளி, அதன் பிறகு காட்டிக் கொடுத்துவிட்டது.


தன்னைப் பாசம் காட்டி வளர்த்த உரிமையாளர்களுக்கு தன் விசுவாசத்தை உரிய நேரத்தில் காட்டியிருக்கிறது அந்தக் கிளி.

நன்றி - த இந்து 


  •  Mannan Mannen  from Chennai
    பறவைகளும் ,வீட்டு விலங்குகளும் மிக உண்மையான அன்புடன் உள்ளன என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு ,சில மாதங்கள் முன் சீனாவில் என்று எண்ணுகிறேன் ஒரு நாய் தன் தோழன் இறந்து விட்டதால் இரண்டு தினங்கள்க்கு மேல் இறந்த உடல் அருகே மிக சோகமாக படுத்து இருந்தது டிவி செய்தியில் வந்தது, உண்மையில் மனிதன் தன் நடவடிக்கைகளின் (பல பாலியல் வன்முறை ) முலம் ஐந்து அறிவு உள்ளவனாக தெரிகிறான் இவ்வகை வளர்ப்பு பிராணிகளால் அவைகள் ஆறு அறிவு உள்ளவை யாக தெரிய வருகின்றது
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    • கிளியின் சாட்சியம் சட்டப்படி செல்லுமா?

    காவியத் தலைவன் - வெயில்', 'அங்காடி தெரு இயக்குநர் வசந்தபாலன் பேட்டி


    காவியத் தலைவன்: ரசிகர்கள் பார்க்காத உலகம்


    இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடினாங்க. அப்போ தமிழ் சினிமாவோட சிறந்த படங்களோட பேனர்களை அங்கங்கே வச்சிருந்தாங்க. அதுல 'வெயில்', 'அங்காடி தெரு' பேனர் இருந்துச்சு. அந்த வரிசையில் என்னோட 'காவியத் தலைவன்' படமும் கண்டிப்பாக இடம்பெறும்" என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.
    'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றார். தற்போது 'காவியத் தலைவன்' மூலம் நம்மை எங்கே அழைத்து செல்ல இருக்கிறார் என்று உரையாடியதிலிருந்து..



    'காவியத் தலைவன்' மூலம் எங்களை எந்த உலகிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறீர்கள்?


    இது ஒரு பிரீயட் பிலிம். சுதந்திரத்திற்கு முன்பு நிறைய நாடக கம்பெனிகள் இருந்தன. அங்குதான் எம்.ஆர். ராதா, காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜி எல்லாருமே பயிற்சி எடுத்த பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட நாடக கம்பெனிகள் இருந்தன. அந்த நாடக கம்பெனிகளைப் பற்றிய படம் தான் 'காவியத் தலைவன்'


    கிட்டப்பா - கே.பி.சுந்தரம்பாள் கதையைத்தான் படமாக எடுக்கிறீர்கள் என்ற செய்தி உலா வருகிறதே?


    கிட்டப்பா - சுந்தரம்பாள் கதை மிகவும் சுவாரசியமானது. அமர்த்துவம் வாய்ந்த ஒரு பெரிய காதல் கதை. கே.பி. சுந்தரம்பாள் கிட்டப்பாவிற்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தீர்கள் என்றால் தெரியும். பயங்கர காதல் ரசம் பொங்க, அன்பு பொங்க இருக்கும். பெரிய இன்ஸ்பிரேஷன் அது.


    எனக்கு சுயசரிதை எடுப்பதில் விருப்பம் கிடையாது. சுயசரிதை எடுத்தால் கிட்டப்பா மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும், கே.பி. சுந்தரம்பாள் மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும். கிட்டப்பாவின் சந்ததியினர் இன்னும் இருக்காங்க. அவங்க எதுவும் மனசு வருத்தப்படக் கூடாது. அவங்க கூட போன் பண்ணி கேட்டாங்க. நீங்க எங்க தாத்தாவோட கதையைத்தான் எடுக்கறீங்களான்னு. சுயசரிதை எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இது நாடக வாழ்க்கையில் இருக்கிற நடிகர்கள் சம்பந்தமான கதைதான். தனியா ஒரு ரெண்டு பேரோட கதை கிடையாது.


    நாடக கம்பெனிகளோட கதையைப் படமாக எடுக்கத் தோன்றியது எப்படி?


    ஜெயமோகனோடு திருநெல்வேலியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். இரவு ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போ ஜெயமோகன், அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ன்னு ஒரு புத்தகம் இருக்கிறதா சொன்னார். அதற்கு பிறகு நாடகம் சம்பந்தமா நிறைய பேச்சு வந்தது. எப்படியெல்லாம் நாடகம் நடக்கும், எப்படியெல்லாம் தயாராவாங்க அதுல இருக்கிற சுவாரசியமான சம்பவங்கள் இப்படி பேசிக்கொண்டே இருந்தோம்.


    இன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும், அன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள். அன்றைக்கு ஒரு குழுவா தங்கி பயிற்சி எடுத்துக்கிறது. சின்ன வயசிலேயே கொண்டுவந்து நாடகத்துல நடிக்கிறதுக்காக விட்டுறது. அப்புறமா, கட்டபொம்மனோட கூத்தைப் பார்த்துதான் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து நாடக கம்பெனில சேர்ந்திருக்கிறார். அவரோட பக்கத்து வீட்டுக்காரர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். எம்.ஆர். ராதா குழுவில் எல்லாம் சிவாஜி நடித்திருக்கிறார். இப்படி நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு.



    ராஜ பார்ட், கள்ள பார்ட், ஸ்த்ரீ பார்ட் அப்படினு அவங்களோட வாழ்க்கையே வேறு ஒரு உலகம். குருகுலம் மாதிரியான ஒரு வாழ்க்கை. ஜெயமோகன் பேசிவிட்டுப் போய்விட்டார். உடனே, நான் பழைய நாடகங்கள் சம்பந்தமா நம்ம கிட்ட என்ன தரவுகள் இருக்குன்னு தேடினேன். நிறைய புத்தகங்கள் கெடச்சது. நூலகங்களில் நிறைய தரவுகள் கிடைச்சது.



    இவ்வளவு சுவாரசியமா இருக்கே. இதை ஏன் படமா பண்ணக் கூடாது, ரொம்ப கலர்ஃபுல்லா வரும்னு நினைச்சேன். நிறைய கலர் கலரான துணிகள், மேக்கப்புகள், விதவிதமான கெட்டப்புகள்னு ஒரு பெரிய உலகம் அது. அந்த உலகம் தமிழ் சினிமால வரல. மக்களுக்கும் இலக்கியத்திற்கும் ஒரு பாலமா நாடகங்கள் இருந்திருக்கு. நாடகக் கலைஞர்தான் நேரடியா மக்கள்கிட்ட பேசியிருக்கார். அந்தக் காலத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டும்தான். கூட்டம் கூட்டமா போய் நாடகம் பாத்துருக்காங்க. இப்படி நிறைய தரவுகளை வைச்சு எடுத்திருக்கும் படம் தான் 'காவியத் தலைவன்'



    படப்பிடிப்பு தளங்களுக்கு நிறைய மெனக்கெடல்கள் இருந்திருக்குமே?


    ரொம்ப கஷ்டப்படல. மதுரை, காரைக்குடி இப்படி தென் மாவட்டங்களைச் சுற்றிதான் நாடகம் போட்டுருக்காங்க. எங்களுக்குக் காரைக்குடி ரொம்ப வசதியா இருந்தது. நாடகக் கொட்டகை செட் போட்டு எடுக்க வேண்டிய இடம். ஓலைகளால் செய்யப்பட்ட கொட்டகைதான். அதனால படப்பிடிப்பு தளத்திற்காக மெனக்கெடல் இல்ல. ஆனா காஸ்டியூம்ஸ், மேக்கப், மொழி, நாடக வார்த்தைகள் இதுக்குதான் ரொம்ப மெனக்கெடல் இருந்தது.


    இந்த மாதிரியான கதைக்கு இசை முக்கியமான பங்காக இருக்குமே?



    கர்நாடக இசையும், நாட்டுப்புற இசையும் கலந்த படம். 'காவியத் தலைவன்' ஒரு மியூசிக்கல் படம்னுகூட சொல்லலாம். 8 பாடல்கள் இருக்கு. சரியான இசையமைப்பாளர் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போது கனவு காண்றது பெருசா கனவு கண்டுற வேண்டியதுதானே. ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன். அவரை எப்படி சந்திக்கிறதுனு எனக்குத் தெரியல.



    சித்தார்த் கிட்ட ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு சொன்னேன். அவர்தான் ட்ரை பண்ணி ரஹ்மான் சாரை சந்திக்க ஏற்பாடு பண்ணினார். நான் போய் கதை சொன்னேன். கதையை கேட்டவுடனே அவருக்கு பயங்கர சந்தோஷமாயிடுச்சு. ஒத்துக்கிட்டார். இசை ஒரு புதிய தன்மையோட இருக்கும்.


    ப்ரீயட் படங்கள் மீது அப்படி என்ன காதல்?



    பார்க்காத உலகத்தை நீங்க ப்ரீயட் படங்கள்ல பார்க்க முடியும். டிஸ்கோத்தே, டாஸ்மார்க் பார், போன் உரையாடல்கள், பேஸ்ஃபுக், ட்விட்டர் இப்படி இப்போ இருக்குற உலகத்துல நிறைய விஷயங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அது நம்ம பார்க்குற படங்கள்ல பிரதிபலிச்சுகிட்டே இருக்கு. வித்தியாசமே இல்லாம போச்சு.



    புதுசா, வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கணும்னு எனக்கு ஆசை. எல்லாருமே பார்க்குற விஷயங்களைக் காட்டுறதைவிட, புதுசா, பல விதமான படங்களையும் கொடுக்கணும்னு ஆசை. என்னோட படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு விதத்தில் பார்ப்பவர்களுக்குப் புதுசாயிருக்கும். ரெண்டு வருஷத்திற்கு ஒரு தடவை படம் இயக்குறேன், நாலு வருஷத்திற்கு ஒரு தடவை படம் ரிலீஸாகிறது. 2002ல என்னோட முதல் படம் வந்தது, திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் ஒடிவிட்டன. இதுவரைக்கும் 5 படங்கள் பண்ணியிருக்கேன். அவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கிறப்போ ரசிகர்களுக்கு புதுசாதான் கொடுக்கணும்னு ஆசைப்படறேன். அதுக்கு மெனக்கெடல், கஷ்டம் எல்லாமே அதிகம்தான்.




    'அங்காடி தெரு' படத்தோட தாக்கம் இன்னும் இருக்கே?


    எல்லாருமே 'அரவான்' படத்தை மறந்துட்டாங்க. 'அங்காடி தெரு' படத்தை தான் ஞாபகம் வச்சிருக்காங்க. நான் எங்கே போனாலும், 'அங்காடி தெரு' படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஜவுளிக் கடைகளுக்கு போறப்போ 'அங்காடி தெரு' படம்தான் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.



    கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் உண்மையைப் பதிவுசெய்யும் சுதந்திரம் குறும்படங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதுன்னு சொல்றீங்களே… ஏன் திரைப்படத்தில் இது சாத்தியமில்லை?



    திரைப்படங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. கமர்ஷியலா நல்ல போகணும் அப்படிங்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனா, குறும்படங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லை. அழகா பண்ணிருந்தா மட்டும் போதும்.


    கடைக்கோடி ரசிகன் வரைக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டுபோகணும் என்றால், அதை தேன் தடவி தான் சொல்ல வேண்டியதிருக்கு. அந்த மாதிரி தேன் தடவி சொன்னாலே இருட்டு உலகம் அப்படிங்குறது போயிரும். உண்மையான விஷயங்கள் என்ன அப்படிங்கிறதை மக்கள்கிட்ட சேர்க்க முடியாமலே போய்விடுகிறது.


    ஒரு குறும்படத்தில் 'அங்காடி தெரு' படத்தை உலக தரத்தில் எடுத்திருக்க முடியும். அதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. நம் கண் முன்னாடி நடந்த மிகப் பெரிய கொடூரம் வந்து ஈழத்தோட போர். நம்மோட சந்ததியினர், இனம் அழித்து ஒழிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு பதிவும் நம்மிடம் இல்லை. அதை ஒரு குறும்படமாக, அந்த வலியை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அந்த நாட்டின் மீது போர்க் குற்றம் சுமத்த ஒரு குறும்படத்தால் முடியும்.


    உதவி இயக்குநர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?


    இலக்கியம் சார்ந்த அறிவு இருக்கணும்னு நினைக்கிறேன். நான் ரொம்ப இலக்கியம் படிக்கிற ஆள். எனக்கு விருப்பம், ஆசைகள் இருக்கிறது. இதையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய, விவாதிக்கக்கூடிய நபர்களைத்தான் நான் உதவி இயக்குநராக சேத்துக்கறே. இலக்கிய ரசனை இருக்கிறதா, எழுத்து ஆர்வம் இருக்கிறதா என்பதுதான் முதல் தகுதி. அடுத்ததா தொழில்நுட்ப அறிவு இருக்கணும். கேமிராவைப் பற்றி தெரியணும். கம்ப்யூட்டர் சம்பந்தமான அறிவு இருக்கணும்.



    இப்போ காமெடி படங்கள் தான் தொடர்ச்சியாக ஹிட்டாகுது. இதை எப்படி பாக்குறீங்க?



    சுவாரசியமான படங்கள் எப்போதும் ஹிட்டாகும். காமெடி படம், காமெடி இல்லாத படம் அப்படிங்கிற விதிவிலக்கு எப்போதுமே இல்லை. வரிசையாக காமெடி படங்கள் எடுத்த இயக்குநரின் கடைசி படம் மாபெரும் தோல்வி. இப்போ காமெடி படங்கள் பாத்தீங்கன்னா, கதை இல்லாததினால் ஓடல. எப்போதுமே சுவாரசியமான படங்கள் மக்கள் கிட்ட ரீச்சாகும். 'கோலி சோடா'னு ஒரு படம். சுவாரசியமான படம். மக்கள் கிட்ட எப்படி ரீச்சாச்சு பாத்தீங்களா. அதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது.

    thanx - the hindu

    காவியத்தலைவன்' படத்துக்காக ஹாலிவுட் வாய்ப்பை விட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான்


    'காவியத்தலைவன்' படம் இசையமைக்க என்னிடம் வந்ததால், ஹாலிவுட் படத்தினை விட்டு விட்டேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.



    வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'காவியத்தலைவன்'. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். சசிகாந்த் மற்றும் வருண்மணியன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


    இப்படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.


    படக்குழுவினர் அனைவருமே இப்படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது "எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் வசந்தபாலன் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். நானும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.



    நான் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கும் போது, ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப டார்க்கான படம் அது. இந்த படம் வந்த உடனே, ஹாலிவுட் படத்தை வேண்டாம் என்று விட்டு விட்டேன்.


    இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது. நாடகம் சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு பாட்டிலும் 8 பாட்டு இருக்கும். சின்ன சின்ன பாடல் எல்லாம் சேர்த்தால் படத்தில் 20 பாடல்கள் இருக்கும். 1930ல் நடக்கும் கதை என்பதால், எந்த மாதிரி பாடல்கள் பண்ணினால் மக்கள் கேட்பார்கள், அப்புறம் எந்த ராகம் உபயோகிக்கலாம் என்று நிறைய யோசித்து செய்திருக்கிறேன்.


    அக்காலத்தின் இசைக்கு கொஞ்சமாவது ஒட்டுற மாதிரி இருக்கணும். இப்படம் ஒரு குழு முயற்சி தான். இப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமையடைகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே." என்று கூறினார்.



    பனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்

    தினமலர் விமர்சனம்



    புலி உறுமும் - "பனிவிழும் மலர்வனம் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் "பனிவிழும் மலர்வனம் திரைப்படம் மெய்யாலுமே தமிழ் சினிமா இதுநாள்வரை கண்டிராத புலிஉறுமும் திரைப்படம் தான் என்றால் மிகையல்ல! அதற்காக அதன் இயக்குநர் பி.ஜேம்ஸ் டேவிட்டிற்கு ஆரம்பத்திலேயே ஒரு "ஹேட்ஸ் ஆப் சொல்லிவிடுவோம்! "ஹேட்ஸ் ஆப் யூ - பி.ஜேம்ஸ் டேவிட்!



    கதைப்படி., நாயகன் அபிலாஷூம், நாயகி சானியதாராவும் காதலர்கள். இருவரும் இருவீட்டு எதிர்ப்பால் நாட்டை விட்டு(அதாங்க ஊரைவிட்டு) ஓடி, தேனி பக்கம் ஒரு காட்டில் அடைக்கலாம் ஆகின்றனர். அங்கு சில வெறி கொண்ட மனிதர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பிக்கும், அதுவும் ஒருமலைவாழ் பெண்ணால் தப்பிக்கும் இருவரும், அப்பெண்ணின் உடம்பு முடியாத சிறுவனுக்கு உதவுவதற்காக அங்கேயே சில நாட்கள் தங்குகின்றனர். 






    ஒருநாள் சிறுவனின் மருத்துவத்திற்கு கிளம்பும் நால்வரும் ஒரு காட்டு புலியிடம் சிக்கி செய்வதறியாது ஒரு மரக்கிளையில் ஏறி தவிக்கின்றனர், தத்தளிக்கின்றனர். ஒரு முழு இரவு புலியின் கண்ணியில் சிக்கிய அதன் குட்டியும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்க., புலியிடமிருந்து உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் தன் மகனையும், மற்றவர்களையும் காக்க மரத்தை விட்டு இறங்குகிறார் அந்த தாய், கண்ணியில் மாட்டிக்கொண்டு இருக்கும் புலிக்குட்டியை மீட்கும் அவர், புலியிடம் சிக்கி சிதைகிறார். சிறுவனும், காதலர்களும் உயிர் பிழைக்கின்றனர். 



    தன் மகனுக்காக உயிரை இழந்த அந்த தாயின் வாயிலாக தாய்மையின் புனிதம் உணர்ந்து காதலை துறந்து, சிறுவனை அவனது தந்தையிடம் சேர்த்து விட்டு தங்களது பெற்றோரை நோக்கி புறப்படுகின்றனர் காதலர்கள். 






    அறிமுகம் அபிலாஷ், சானியதாரா, வர்ஷா அஸ்வதி, பாவா லெட்சுமணன், ஜெகன்.ஜி, செந்தியாதவ், அனுராதா, செவ்வாளை சுருளிமனோகர் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். புலியும், அதன் குட்டியும் கூட பிரமாதம். 



    புலியையும் அதன் உறுமலையும் கிராபிக்ஸோ, ஸ்பெஷல் எபெக்ட்ஸோ, எப்படியோ இயக்குநர் நம் கண்முன் மிரட்டலாக, இதுவரை தமிழ் சினிமாவை யாரும் காட்டிராத அளவிற்கு உலாவவிட்டிருக்கிறார். அது ஒன்றுக்காகவே "பனிவிழும் மலர்வனம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.





    "லைப் ஆப் பை ஹாலிவுட் ஸ்டைலில் புலியையும், அதன் உறுமலையும் நம் கண்முன் ரியலாக உலாவவிட்டிருக்கும் இயக்குநர், சில இடங்களில் கோட்டைவிட்டிருப்பதும் தெரிகிறது. குறிப்பாக மரக்கிளையில் இருக்கும் ஹீரோ அபிலாஷின் ரத்தத்தை ஒரு சந்தர்ப்பத்தில் ருசிபார்க்கும் காட்டுபுலி க்ளைமாக்ஸில் நாயகரையும், நாயகி மற்றும் அந்த சிறுவனுடன் கோட்டை விட்டுவிட்டு, புலிக்குட்டியை காபந்து செய்ய வரும் சிறுவனின் தாயரை கடித்து குதறுவது லாஜிக்காக இடிக்கிறது (பொதுவாக புலிமாதிரி பிராணிகள் முதலில் நுகர்ந்த ரத்த வாடை உடைய மனிதர்களை தான் சுவாகா செய்யும் என்று எங்கோ படித்த ஞாபகம்...)



    என்.ராகவ்வின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, பி.ஆர்.ரஜின் மரட்டும் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பி.ஜேம்ஸ் டேவிட்டின் எழுத்து-இயக்கத்தில், "பனிவிழும் மலர்வனம் - தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய புலி உறும்பும் ""திகில் வனம்


    thanx -  dinamalar


    diski 1 - 

    வல்லினம் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/02/blog-post_7592.html







    diski 2 - 

    தெகிடி - சினிமா விமர்சனம்



    நட ராஜர் தான் வி நாயகர்

    1. வழக்கமாக பின்னணி இசைக்கு 3,நாட்கள் மட்டுமே எடுத்துக்கும் இளையராஜா 5 நாட்கள் எடுத்துக்கொண்டு ரசித்து பிஜிம் செய்தது நிழல்கள் ,பிள்ளை நிலா



    ================


    2 இந்திய அளவில் பின்னணி இசை மட்டும் தனி கேசட்டாக வந்த முதல் படம் இளைய ராஜாவின் பிள்ளை நிலா தான் ( இயக்கம் = மனோபாலா)



    ====================



    3   விஜய் - என் படம் 3 மணி நேரம்.உங்க படம் 2 1/2 மணி நேரம் தான் ;-))


    அஜித் -நாங்க ஒரு ஷோ சேர்த்து ஓட்டிடுவோம்



    ==================



    4  விஜய் - நீங்க நல்ல கதைல தான் நடிப்பீங்கங்கற நம்பிக்கைல நான் கதை கூடக்கேட்கலை.



    மோகன் லால் - நான் கெஸ்ட் ரோல் தானே பண்றேன்?



    ====================


    5   நமீதா அரசியலுக்கு வந்தா போறவன் வர்றவன் எல்லாம் மேடை ஏறி கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்வான்



    =====================



    6   இந்தியா பாகிஸ் தான் பார்டர் ல குடி இருப்பதும் வீரம் ,ஜில்லா வை ஒரே காம்ப்ளெக்ஸ் ல ரிலீஸ் செய்யும் தியேட்டர் ஓனர் நிலைமையும் 1



    =======================



    7  மேடம்.எதுக்காக கடவுளை டெய்லி எழுப்பிட்டே இருக்கீங்க ? ;-))



     கேட்ட வரம் கிடைக்கலை.மழுப்பிட்டே இருக்காரு.


    ======================



    8   நீ வலது கன்னத்தில் கொடுத்தால் என் இடது கன்னத்தைக்காட்டுவேன்.பளார் ,இச் எதுவாகிலும்.


    =====================


    9  உலகின் கிளுகிளுப்பான இசை கொலுசு ,வளையல் எழுப்பும் ஓசை தான்


    ===================


    10  தம்பதிகள் எவ்வளவு பனி,குளிர் என்றாலும் போர்வை போர்த்திக்கொள்வது இல்லை



    =====================


    11   விளக்கை அணைத்த பின் ஆணின் தைரியம் இரு மடங்காகும்.பெண்ணின் வெட்கம் பாதியாகக்குறையும்




    ====================



    12   உன்னை மென்மையாக இறுக்கி அணைப்பது எப்படி? என்பதுதான் காதல் பாடத்தில் என்னால் விளங்கிக்கொள்ள முடியாத புதிர்




    =====================



    13   ஆண்கள் முருக பக்தர்களா ,கண்ணன் பக்தர்களா இருக்கறதுல ஒரு உள்ளர்த்தம் இருக்கு.ஆனா பொண்ணுங்க அவங்க பக்தைகளா இருப்பது ஏனோ?




    ====================



    14   ஏழேழு ஜென்மம் கடந்தாலும் ஒரு ஆண் தன் காதலை மறக்க மாட்டான். 7 வருசம் ஆனாலும் தான் பெற்ற தோல்விக்கு பதிலடி தராமல் விடமாட்டான்



    ======================



    15   ஆணின் வாழ்க்கையில் பெண்ணிடம் ஏமாந்த தருணங்கள் அதிகமாக இருக்கும்.பெண்ணின் வாழ்வில் ஆணை ஏமாற்றிய தருணங்கள் அதிகமாக இருக்கும்



    ======================



    16   எல்லா ஆண்களின் பலவீனமும் ஒரு பெண் தான். அதை தெளிவாக உணர்ந்து காய் நகர்த்துவது தான் பெண்ணின் பலம்



    ==================



    17   10 வதுல பெயில் ஆகி எக்சாம் சென்ட்டர்ல வீக்கா இருக்கலாம்.மேட்டர் அதில்லை.ஏ பி சி ஆல் சென்ட்டர் லயும் ஸ்ட்ராங்க் யாரு ? ;-)



    ===================



    18  பஸ்ல வரும்போது ஒரு பெண் மயில் பார்த்தேன். பெண் மயிலுக்குத்தோகை இல்லைனு யார்யா சொன்னது?


    ==================



    19    எங்க ஆபீஸ் ல வலது கண் துடிக்குதுன்னு சொன்ன லேடி ஸ்டாf க்கு 81 ரிப்லைஸ்... எனக்கு 2 கண்ணும் துடிக்குதுன்னேன்.ஒரு பய கண்டுக்கல



    =======================



    20 2014 பொங்கலுக்கு மட்டும் நட ராஜர் தான் வி நாயகர்



    ========================


    21 என்னைப்போல் டீ காபி குடிக்காத ஆளுங்களுக்கு ஆபீஸ் கேண்ட்டீன் ல என்ன ஒரு தர்மசங்கடம்னா கேரளா சேச்சி கிட்டே எப்டி கேட்பது?# பால்


    =======================


    22 ஒரு பொண்ணு டி எம் ல வந்து அண்ணா நலமா? னு கேட்குது.இதை டைம் லைன் லயே கேட்கலாமே? # அண்ணா னு கூப்ட்டா நோ ரிப்ளை ;-))


    =====================


    23  டே.மேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே " ஜிமிக்கி காது மடலுக்கு மேட்ச் இல்லை.பெருசா இருக்கு" ங்கறார் # ஏதாவது உள் குத்தா?



    ======================



    24 உழவர் சந்தை ,மார்க்கெட் ல மாலை 6 டூ 7 போனா கடைசி ஆனதால ரேட் கம்மியா இருக்கும் # குடும்பஸ்தன் ன் பட்ஜெட் டிப்ஸ்



    ========================



    25 இந்த டேமேஜருங்க லீவ் கொடுக்கறப்ப என்னமோ தன் பொண்ணையே கட்டிக்குடுக்கற மாதிரி கேள்வி கேட்கறாங்க ;-)))


    ======================



    Friday, February 28, 2014

    ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா

    1. லேடி ஜோசியர் - மீன ராசிக்காரங்க் இந்த வருசம் லவ் பிரபோஸ் செஞ்சா சக்சஸ் ஆகும்.



     ஓஹோ.இப்பவே செக் பண்ணிடுவோம்.மேடம்.ஐ லவ் யூ



    ======================


    2  என் கிட்டே 5 வருசமா வீட்டுக்கு வந்து ஜோசியம் பார்க்கறீங்க.ஆனா உங்களுக்கு கல்யாண ராசியே இல்ல.



    தப்பு மாமா.உங்க பொண்ணு 3,மாசம்


    ======================



    3  அத்தான்.விடிய விடிய கட்டிலைச்சுத்தி நடந்துட்டே இருக்கீங்களே ஏன்?


     என் ராசிப்படி முதல் இரவே நடக்காதுன்னு ஜோசியர் சொன்னத ்.பொய்யாக்கிட்டேன்


    =====================


    4   7 ல குரு பார்க்கறதால விருச்சிக்ச் ராசிக்கு நேரம் சரி இல்லை.



    ஜோசியரே! உங்க வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு குரு இருக்கான்.ஓடுங்க ;-))


    ====================


    5   DR.புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு அபார்சன் ஆகும்னு ஜோசியர் சொன்னதை பொய்யாக்கிட்டோம்.


    எப்டி?


    முதல் இரவே நடத்தலையே? # இப்போ என்ன செய்வீங்க?


    =======================



    6   டாக்டர்.கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுங்க ரெட்டை வாழைப்பழம் சாப்பிடக்கூடாதாமே?



    மிஸ்!,அதெல்லாம் மூட நம்பிக்கை.யூ கேரி ஆன்


    ======================



    7   வில்லனைப்பார்த்து ஹீரோ சுட்ருவேன் னு மிரட்ற மாதிரி போஸ்டர் டிசைன் பிரமாதம்.



    நீங்க வேற.இது சுட்ட கதை னு சிம்பாலிக்கா சொல்றாங்க



    ======================



    8    ஹீரோ முத சீன் ல சீட்டாடும் போது க்யூன் ஜாக்கி சீட் கூட சேர்க்க கிங் (K) ஸீட்டை ஓப்பண் பண்றார்.



    ஓஹோ.ஓப்பனிங் கிங் னு சொல்லிக்க?


    ====================



    9 சாப்ட்டாச்சா???


    சாப்ட்டேன் னா என்ன செய்வீங்க? சாப்பிடலைன்னா என்ன செய்வீங்க?




    =========================



    10   டியர்.என்னிடமுள்ள சுடிதார்ல்லாம் இப்போ அவுட் ஆப் ஃபேஷன் ஆகிடுச்சு.புதுசு வாங்கிக்கொடுங்க.



    நீ கூட பஞ்சாங்கமா ,அவுட் ஆப் பேஷனாத்தான் இருக்கே



    ========================



    11   டாக்டர்.2 நாள் ஜிம் போய் 4 கிலோ குறைக்கிற மாதிரி ஒர்க் அவுட் இருக்கா?



     இல்லை.ஆனா 6 நாள் ,கிச்சன் பக்கமே போகாம இருந்தா 1 கிலோ குறைக்கலாம்



    ======================



    12   டாக்டர்.நான் குண்டானது வேற யாருக்கும் தெரியாம இருக்க ஏதாவது வழி இருக்கா?



     வீட்டை விட்டு வெளில போகாதீங்க.யாரையும் உள்ளே விடாதீங்க மேடம்



    ========================



    13  டியர் !சுடிதார், சேலை கட்டிக்கிடடா்..எவ்ளோ குண்டாகிட்டோம்ன்னு தெரியாது.



    உனக்குத்தெரியாது.ஆனா எனக்குத்தெரியுமே?



    ======================


    14  லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது .



     நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்



    ======================



    15  ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.



    ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?



    =======================



    16 இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க.



     பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.



    =========================



    17 கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.




    இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?



    ============================



    18 ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா அப்புறம் இந்த ஜில்லா ல யே இருக்க மாட்டான்.



     ஏனுங்க்ணா? ஜில்லா ல ஹாஸ்பிடலே கிடையாதுங்களா?



    ============================



    19   டாக்டர்-,இந்த பேஷன்ட் ஏதோ சினிமா பார்த்த அதிர்ச்சில கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார்.எந்த ஜில்லாக்கு போனாலும் இவரைக்காப்பாத்த முடியாது




    ===========================



    20   ட்ரெய்லர் விடும்போது யாரும் கதையை யூகிக்க முடியாத படி ரெடி பண்ணுங்க.



     முழுப்படமே பாத்தாலும் ஒரு பயலாலும் கதையை கண்டுபிடிக்கவே முடியாது



    ===============================

    தெகிடி - சினிமா விமர்சனம்

    ஹீரோ  எம் ஏ கிரிமினாலஜி படிச்சவர். அவருக்கு பரத், நரேன் வேலை செஞ்ச மாதிரி ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி ல வேலை கிடைக்குது . அவரோட வேலை என்னான்னா அவருக்கு  ஒரு ஆள் ஃபோட்டோ, அட்ரஸ் குடுத்து அவரைப்பத்தின விபரங்களை  அவரை ஃபாலோ பண்ணி சப்மிட் பண்ணனும். 


    இந்த மாதிரி சில பிராஜெக்ட்சை அவர் வெற்றிகரமா செஞ்சு முடிச்சுடறார். கம்ப்பெனியோட  முக்கியமான விதி  அந்த நபரோட நாம எண்ட்ஜ தொடர்பும் வெச்சுக்கக்கூடாது . 


     இப்போ  ஹீரோயின் ஃபோட்டோ  கொடுத்து விசாரிக்கச்சொல்றாங்க . ஹீரோ ஹீரோயின் மேல லவ் ஆகிடறார். அவர்  கிட்டே பழகறார். 



    அப்போ ஒரு திருப்பம். இதுவரை அவர் உளவு பார்த்து தகவல் சொன்ன ஆட்கள் எல்லாம் வரிசையா கொலை செய்யப்படராங்க. இப்போ  ஹீரோயின் உயிருக்கு ஆபத்து . ஹீரோ  ஹீரோயினை எப்படி காப்பாத்தினாரு ? யார் அந்த கொலை களை செஞ்சாங்க ? எதுக்கு செஞ்சாங்க ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ் 


    பீட்சா , சூது கவ்வும் , அட்டகத்தி  போன்ற வித்தியாசமான படங்களைக்கொடுத்து நல்ல பேர் வாங்குன  பட  நிறுவனம் தான் இந்தப்படத்தையும்  கொடுத்து  இருக்கு . 

     திரைக்கதை , இயக்கம், எடிட்டிங்க்  தான் படத்தின்  முதுகெலும்பு . அபாரமா ஸ்கிரிப்ட்டுக்காக உழைச்ச இயக்குநர்  ரமேஷ்க்கு வாழ்த்துகள் . இவர் நாளைய இயக்குநர் பாகம் 2 இல் முதல் பரிசு வாங்கியவர். தமிழ் சினிமாவின்  சஸ்பென்ஸ் த்ரில்லர் இயக்குநர்கள் வரிசையில் உயர்ந்த இடம் உண்டு 


    ஹீரோ வில்லா பட  ஹீரோ அசோக். இவர் எப்போதும்  சோகமான தாடியுடன் ஏன் வர்றார்?னு தெரியல . க்ரைம் த்ரில்லர் படம்னா இப்படித்தான்  ஹீரோ இருக்கனும்னு யாராவது  டெஃபனிஷன்  கொடுத்து  வெச்சிருக்காங்களா? 


     சுபா கதையில் வரும் நரேன் போல் , பிகேபி கதையில் வரும் பரத்  போல் கல கலப்பான கேரக்டராக அமைத்திருந்தால் இன்னும் படம்  பி சி யில் ரீச் ஆகி இருக்கும் ,


    இருந்தாலும் பல இட ங்களில்  இயல்பான, அமைதியான நடிப்பால் மனம் கவர்கிறார் 

    \நாயகி ஜனனி அய்யர் , அவன் இவன் படத்தில்  லூஸ் போலீஸாக சாரி  போலீசாக வரும் லூஸ் இவர் தான்/ இதில்  மிக அழகான கேரக்டர் . நல்லா பண்ணி இருக்கார் . மிக கண்ணியமான ஆடை வடிவமைப்புகள்  சபாஷ் 



    போலீஸ் ஆஃபீசராக வரும்  ஜெயப்ரகாஷ் கம்பீரமான நடிப்பு . பலே போட வைக்கும்  பர்ஃபார்மென்ஸ்




    இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

    1.  ஹீரோ - ஹீரோயின் சந்திப்புக்காட்சிகள் , நட்பு , காதல்  உருவாகும் இடம்  எல்லாம் செம நேர்த்தி . குறிப்பாக  நாயகி பேசும் காதல் , நம்பிக்கை சார்ந்த வசனங்கள் தியேட்டரில்  கிளாப்ஸ் அள்ளுது 


    2  ஹீரோவின் நண்பனாக வரும் காளி அருமையான யதார்த்தமான் நடிப்பு . 


    3 படத்தை மிகச்சுருக்கமாக  2 மணி நேரத்தில்  முடித்தது . சஸ்பென்ஸ் காட்சிகளை கடைசி வரை காப்பாற்றியது .

     



    இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


    1. ஹீரோ  நவ நாகரீக இளைஞன் . டிடெக்டிவ் ஏஜென்சி வெச்சிருக்கார். ஆனால் அவர் கிட்டே ஒரு செல்  ஃபோன்  கூட  இல்லை. இது நம்பும்படி இல்லை. அதுக்கான காரணம் சரியா சொல்லப்படலை 


    2 சாதாரண   ஹோட்டல் சர்வர்  ஆக  இருக்கும்  ஆள் 30,000  ரூபாய் மதிப்புள்ல காஸ்ட்லி செல் ஃபோன் வைத்திருக்கார் 



    3  மூன்று  வில்லன்களில்  ஒருவர்  தன் உண்மையான பேரை மாற்றி பொய்ப்பேரில்  ஹீரோவை ஏமாத்தறார் . ஓக்கே. ஆனால் அவரைப்பற்றி  பேப்பரில்  நியூஸ் வரும்போது அந்தப்பொய்ப்பேரில்  எப்படி  நியூஸ் வரும் ? 


    4  காதலியிடம் ஆரம்பத்தில் எந்த உண்மையையும் சொல்லாமல்  இருப்பது  ஓக்கே, ஆனா அவளே என்னதான் நடக்குது ? என கேட்ட பின்னும்  ஹீரோ ஏன்  மென்னு  முழுங்கனும் . எல்லா உண்மையையும் சொல்லிடலாமே? 



    5 ஹீரோ கைது ஆன விஷயம்  ஹீரோயினுக்கு எப்படி தெரியுது ? அவர் எப்படி ஜாமீன் எடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தார் ? ( நண்பன் ஃபோனில்  இருந்து தகவல் சொல்லி அவர் வந்தார் என சமாளிக்க முடியாது , ஹீரோயின் வந்ததையே  ஹீரோ ஆச்சரியமாகவும் , அதிர்ச்சியாகவும் பார்க்கறார் ) 


    6  கொலை செய்யப்பட  இருக்கும் நபருக்கு   ஹீரோ  ஃபோன் பண்ணி “ ஒரு லைஃப் பிரச்சனை இருக்கு , அதைப்பத்திப்பேசனும் என இழுப்பது எரிச்சல் . சார் , உங்க உயிருக்கு ஆபத்துன்னா  வேலை  முடியுது . அதே  போல்   ஃபோனை அவர் கட் பண்ணியது  இவர் மேட்டரை எஸ் எம் எஸ்  கூட பண்ணி  இருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை ? 


    7   க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில்  3 வில்லன்கள் இந்த வேலை யை எல்லாம்  ஏன் செய்யறாங்க ? என தெரிய வரும்போது  “ ஏன் இவ்வளவு ரிஸ்க் ? தலையை சுத்தி  மூக்கைத்தொடனும் ? அதுக்கு பேசாம  ஒரு பேங்க்கை  ஒரு டைம்  கொள்ளை அடிச்சா போதுமே எனத்தோணுது  




    மனம் கவர்ந்த வசனங்கள்



    1. டிடெக்டிவா ஒர்க் பண்றப்ப நாம எந்த க்ளையண்டுக்காக வேலை செய்யறோமோ அவருக்குக்கூட நம்ம டெடிகேசன் தெரியாது # தெகிடி



    2 உன் மனசை உறுத்தும் எந்த வேலையையும் 2வது முறை செய்யாதே.செஞ்சா அதுவே உனக்குப்பழக்கிடும் # தெகிடி



    3 எனக்கு மட்டும் ஏண்டா இப்படி ?



     வாழ்க்கை விரக்தியா இருக்கும்போது எல்லாரும் இதைத்தாண்டா சொல்றாங்க # தெகிடி 



    தப்பை ஒத்துக்கறதுக்கும் ஒரு தைரியம் வேணும்.ஐ லைக் இட் # தெகிடி


    பொண்ணுங்க கிட்டே பேசும்போது என்ன பேசறோம் என்பதை விட எப்படிப்பேசறோம் என்பது தான் முக்கியம்



    லைப் ரொம்ப சின்னது.அதனால சின்னச்சின்ன விஷயத்தைக்கூட எஞ்சாய் பண்ணனும்



    7  செஞ்ச தப்பைப்பத்தியே பேசிட்டு இருந்தா தீர்வு கிடைக்காது


    8 நான் அவரோட பிரண்ட்.அவரைப்பார்க்கனும் 



    பிரண்ட் செத்தது கூடத்தெரியல.நீ எப்டி பிரண்டா இருக்க முடியும் 



    9 பொண்ணுங்க பொதுவா அவங்க மனசுக்குப்பிடிச்சவங்க எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவாங்க


    10  இந்த மாதிரி மாட்டும்போது எதிராளியின் கண்ணை மட்டும் பாத்துடக்கூடாது.அப்டிப்பார்த்தா நம்ம உருவம் முழுசா அவங்க மனசுல பதிஞ்சிடும்



    11  1000 தடவை யோசிப்பதை விட முக்கியம் ஒரு தடவை  செய்யனும் 



    12 காதலி டூ காதலன் = ஒண்ணை முழுசா நம்பும்போது அது நம்ம கூடவே கடைசி வரை வரும், நான் என்னை நம்பறதை விட உன்னை அதிகமா நம்பறேன்


    13 நமக்குத்தேவை இல்லைனு அலட்சியமா நாம நினைக்கும் சில சின்ன விஷயங்கள் கேசுக்கே முக்கியமான தடயம் ஆகிடும்



    14  தைரியமா நாம செய்யறதெல்லாம் சரியா செய்யறதா அர்த்தம் கிடையாது


    15  தேவைகள் தான் நம்ம வாழ்க்கையைத்தீர்மானிக்குது



    16 தெரியாம நாம செஞ்சுடும் தப்புகளை விட அந்த தப்பை மறைக்க ச்செய்யும் தப்புக்களே அதிகம் 



    17  நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம அதுவரை வெச்சிருந்த நம்பிக்கையையே மாத்திடும்



    18  நீ சொன்னதெல்லாம் நடக்குமா?ன்னு  தெரியலை, ஆனா நான்  சொன்னது நடந்துடுச்சு 




     




     படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


    1. டைட்டிலிலேயே இயக்குநரின் டச்.# ஜனனி தான்.ஜனனி அய்யர் இல்லை.சபாஷ் # தெகிடி



    காலேஜில் அப்செர்வேசன் கிளாசில் தன்னை குறை சொன்ன லெக்சரரின் வாதத்தை முறிக்கும் இடம் குட் # தெகிடி


    நாயகி புல் ஹேன்ட் சர்ட் போட்டு கழுத்து பட்டன் வரை போட்டிருக்கு.ரொம்ப கண்ணியம் போல.நற நற # ஜனனி அய்யர்


    4  லாங்க் ஷாட்க்கு ஒரு மாதிரி பிஜிஎம் ,க்ளோசப் ஷாட்களுக்கு வேறமாதிரி பிஜிஎம் என இயக்குநர் பின்றார் 



    5 தெகிடி @ இடை வேளை.புதிய கதை நேர்த்தியான திரைக்கதை.எடிட்டிங் ,பிஜிஎம் அபாரம்



    6  தெகிடி = சூதாட்டம் ,சாமார்த்தியமாய் விளையாடுபவன் ,தந்திரம்,சாதுர்யம், புரட்டு வேலை

     
    ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 45 


     குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று

    ரேட்டிங் = 3.25  / 5


    சி பி கமெண்ட் - தெகிடி - அபாரமான திரைக்கதை, 2014ன் முக்கியமான சஸ்பென்ஸ் த்ரில்லர்,சிறப்பான இயக்கம், பெண்கள் , மாணவ மாணவிகள் , எல்லோரும் பார்க்கலாம். ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 

     
     
     
    டிஸ்கி -

    வல்லினம் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/02/blog-post_7592.html