Sunday, April 28, 2013

கோயம்பத்தூர் -ஊர் ஜாதகம் 2

ஊர் ஜாதகம் - கோயம்பத்தூர்- 2 
கடனை சரியாக திரும்பக் கட்டுகிறார்கள் !
பானுமதி அருணாசலம்,படங்கள்: தி.விஜய்.
அதிக வருமானம் ஈட்டித் தரும் கோயம்புத்தூரில் சுமார் 560 வங்கிக் கிளைகள் உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிகமான வங்கிக் கிளைகள் இருக்கின்றன. கோவையிலிருந்து 2009-2010-ம் ஆண்டில் மட்டும் சாஃப்ட்வேர் ஏற்றுமதி 710.66 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய சாஃப்ட்வேர் ஹப்பாகத் திகழ்கிறது.


இந்த மாவட்டத்தில் எவ்வளவு தொழிற் கடன் தரப்பட்டிருக்கிறது? சேமிப்பு எவ்வளவு என்பது போன்ற புள்ளிவிவரங்களைத் தெரிந்துகொள்ள இந்த மாவட்டத்தின் முன்னோடி வங்கியான (லிணிகிஞி ஙிகிழிரி) கனரா வங்கியின் மேலாளர் வணங்காமுடியுடன் பேசினோம்.


''தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் இங்கு, ஆண்டுக்கு (முன்னோடி வங்கிகளின் பங்களிப்பாக) சுமார் 6,750 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த வருடத்தில் 8,400 கோடி ரூபாயாக அதிகப்படுத்தவுள்ளோம். இது கடந்த வருடங்களைவிட 25 சதவிகிதம்வரை அதிகம். அதாவது வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மட்டும்தான் 100 சதவிகிதம் டெபாசிட் வந்தால், 130 சதவிகிதம் வரை கடன் கொடுக்கிறோம். டெபாசிட்டைவிட கடன் அதிகமாகக் கொடுப்பது ஏன் எனில், திரும்பச் செலுத்தும் திறமை இங்குள்ள தொழில்முனைவோரிடம் அதிகமாக இருப்பதுதான். டெபாசிட்டில் 25 சதவிகித வளர்ச்சியும், கடனில் 19 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது.


புதிதாக பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் வந்திருப்பதால், அவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வீட்டுக் கடன், வாகனக் கடன் என தனிநபர் கடனும் அதிகளவில் இங்கு வாங்கப்படுவது மட்டுமல்லாமல், விரைவாக கடனைத் திரும்பச் செலுத்தியும்விடுகின்றனர். இதனால் வாராக்கடன் என்பது கிடையாது.


இந்த மாவட்டத்தில் விவசாயமும் பிரதான தொழில் என்பதால் அதற்கான கடனையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளோம். கடந்த வருடத்தில் புதிதாக 80 வங்கிக் கிளைகள் வரை துவங்கினோம். இந்த வருடத்தில் 100 புதிய கிளைகள் துவங்க உள்ளோம். மேலும், மின்வெட்டினால் தொழில்கள் பாதிப்படைந் துள்ளதால் தொழிற் கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை சற்று நீட்டித்துத் தரவும் பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அவர்.


தமிழகத்தில் வெட் கிரைண்டர் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இடம் கோயம்புத்தூர்தான். சுமார் 700 கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊரில் கிரைண்டர் தயாரிக்க என்ன காரணம் என கோயம்புத்தூர் வெட்கிரைண்டர்ஸ் அண்ட்  உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.


''கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் செமி கற்கள், கிரைண்டர் தயாரிக்க ஏதுவாக இருந்தது. இதனால் இங்கு 1955-ம் வருடத்தில் சபாபதி என்பவர் கிரைண்டர் தயாரிக்கத் துவங்கினார். அதன்பிறகு சுமார் 200 நிறுவனங்கள் வரை கிரைண்டர் தயாரிப்பிலும், 500 நிறுவனங்கள் வரை கிரைண்டருக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரித்தும் வருகின்றன. தமிழ்நாடு மற்றும் சில வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து சப்ளையாகி வந்தது. தமிழ்நாடு அரசு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தபிறகு எங்களது தொழில் மிகவும் பாதிப்படைந்துவிட்டது. மாதத்திற்கு சுமார் 1.5 லட்சம் கிரைண்டர் வரை தயாரித்து வந்தோம்.


இப்போது சுமார் 20 சதவிகிதம் வரை மட்டுமே தொழில் நடக்கிறது. இந்த இலவசத் திட்டத்தில் ஏழு பெரிய நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் மூலம் ஆர்டர்கள் பெற்றதால் மற்ற நிறுவனங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இந்த இலவச கிரைண்டருக்குத் தேவையான மோட்டார்களைக்கூட சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். தொழில் இல்லாமல் சின்னச் சின்ன நிறுவனங்கள் மூடப்பட்டு, அவர்கள் வேறு தொழிலுக்குப் போய்விட்டனர். இதில்லாமல் மின்வெட்டு பிரச்னை வேறு எங்களைப் பாடாய்ப்படுத்துகிறது'' என ஆதங்கத்துடன் பேசினார்.


மோட்டார் மற்றும்  பம்புகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு இங்கிருந்துதான் நாட்டின்


40 சதவிகிதத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு பம்ப்ஸ் அண்ட் ஸ்பேர்ஸ் தயாரிப்பாளர்கள் அமைப்பின் தலைவர் கல்யாணசுந்தரத்திடம் இதுபற்றி பேசினோம்.  


''கோயம்புத்தூரில் பெரிய தொழிற்சாலை களைவிட குறுந்தொழில்கள்தான் அதிகளவில் உள்ளன. கடந்த பதினைந்து வருடங்களாக தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், அதற்கு தகுந்த தொழிற்சாலை உள்கட்டமைப்பு வசதிகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. தற்போது நகரத்திற்குள் தொழிற்சாலை துவங்க முடியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலையில் சிட்கோ கொண்டுவந்தார்கள். ஆனால், இன்னொரு சிட்கோ கொண்டுவர முயற்சிகள் எடுக்கவேண்டும். மின்வெட்டானது சாதாரண வளர்ச்சியைக்கூட தடுத்துவிடுகிறது. தொழிலுக்கு வாங்கும் கடன்களை சுலபமான முறையில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வேலையாட்கள் கிடைப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஒடிஷா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கின்றனர்.'' என்று ஆதங்கப்பட்டார்.  


விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், விவசாய வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு தலைவருமான கந்தசாமி, விவசாயம் சார்ந்த தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.


''நவீன விவசாயம் நடக்கும் இடம் இது. முன்பு பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்தது. ஆனால், ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தற்போது பருத்தி உற்பத்தி குறைந்துவிட்டது. தென்னை, பாக்கு, மஞ்சள், வாழை, காய்கறிகள் ஆகியவை முக்கியப் பயிர்களாக உள்ளது. இதுபோக சோளம், கொள்ளு, துவரை, உளுந்து போன்ற பயிர்கள் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. எனினும், மழை சரியாகப் பெய்யாத காரணத்தாலும், தடையற்ற மின்சாரம் கிடைக்காததாலும் விவசாயம் ஒழுங்காக நடைபெறவில்லை.


சென்ற வருடம் 700 மி.மீ. பெய்த மழை, இந்த வருடத்தில் 400 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இதனால் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடவேண்டியது 20,000 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. இதுவும், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டன.


 நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. தொடர்ந்து ஐந்து மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரிதாக இருப்பதால் விவசாயம் பெரியளவில் பாதிப்படைந்துள்ளது. கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள், மருந்துகள் போன்றவற்றுக்கு ஆகும் செலவு அதிகரித்துள்ளதால் பால் உற்பத்தி, விவசாயத்திற்கு தேவையான எருது ஆகியவைக் கிடைப்பதில்லை.


இதுபோதாது என்று இப்போது புது பிரச்னையாக கெயில் நிறுவனம் ஏழு மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களின் வயல் வழியாக பைப்லைன் மூலமாக எரிவாயு கொண்டுபோக முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். ஏற்கெனவே விவசாயம் பாதிப்படைந்து நிலத்தடி நீரும் குறைந்துள்ள சூழ்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக பைப்லைன் போகும். அதன் தாக்கம் நிலங்களைப் பாதிக்கும். இதற்கு பதில்


நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு நடுவே இருக்கும் டிவைடர் வழியாக இந்த பைப்லைனைக் கொண்டு செல்லலாம்'' என்றார்.


பருத்தி விளையும் பகுதி என்பதால் நூற்பாலை கள் அதிகம் இருக்கும் ஊர். சுமார் 200 சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் இருக்கின்றன. இந்தத் தொழில் குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசிடம் பேசினோம்.


''கோவை, உடுமலைப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சிறு நூற்பாலைகளின் உரிமையாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட அமைப்பு எங்களுடையது. பெரும்பாலான நூற்பாலைகள் கிராமத்தில் இருக்கின்றன. இதில் பெண்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். 

 மின்வெட்டு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. அடுத்து, நூல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பருத்தியின் விலை நிலையானதாக  இருப்பதில்லை. முன்பெல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விலை குறைவாகவும், ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகமாகவும் இருக்கும். ஆனால், இப்போது இடைத்தரகர்கள் அதிகம் இருப்பதாலும் விலையில் கடுமையான பாதிப்படைகிறது.


காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாகூட, விலை ஏறினால்தான் பருத்தியை விற்பனை செய்வோம்; இல்லையெனில் நஷ்டம் ஏற்படும் என கூறுகின்றனர். நூற்பாலைகள் நடத்துவதற்கு அதிக முதலீடு மற்றும் அதிகமான வேலையாட்கள் தேவை. சீனாவில் ரிசர்வ் ரேஷியோ என உள்நாட்டு பயன்பாடுபோக மீதியை ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் இங்கு அப்படியில்லை. அதனால் அரசு பருத்தி விலை சீராக இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எங்களால் நிம்மதியாகத் தொழில் செய்ய முடியும்'' என்றார்.


பல தொழில்கள் இருக்கும் கோயம்புத்தூரில் நகைகள் மிகவும் பிரபலமானது. ஆபரணங்கள் தயாரிப்பு, மெஷின் கட்டிங் கொண்டு நகைகள் செய்வது மற்றும் தென் இந்தியாவில் வைரம் கட்டிங் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. சுமார் 3,000 நகை செய்யும் நிறுவனங்களும், 40,000 பொற்கொல்லர்களும் இங்கு உள்ளனர்.


நாம் இந்த ஊரைச் சுற்றி வரும்போது சென்னை யில் இருக்கும் அனைத்து ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஓட்டல்கள் கோவையில் கிளை திறந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. மக்களும் மிக சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள். தொழில்வளம், இயற்கைவளம் மிகுந்த இந்த ஊரில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் சென்னைக்கு நிகராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

thanx - vikatan

உலகில் அழகான பிகருக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் எது?

1. ஒரு கெட்டவனிடம் ஏமாறும் பெண் பின் நல்லவனை சந்தேகிப்பாள்.


-----------------------


2. ஒரு ஜீவன் சமைத்தது . அதே ஜீவன் துவைத்தது.இனி நீ பெட் ( bed) டை விட்டு எழ வேணாம்.எந்த வேலையும் செய்ய வேணாம்.உன்னையே கட்டி மாரடிக்கிறேன். # கீதா ஞ்சலி ரீமிக்ஸ்


----------------------


3. முத்தத்தைக்கேட்டாலே கற்பையே கேட்ட மாதிரி பதறுகிறாயே! கற்பைக்கேட்டால் என்ன செய்வாய்? # தப்பு சங்கர ரீ மிக்ஸ்்


------------------------


4. தங்கம் எவ்ளவ் விலை குறைஞ்சாலும் இந்த பொண்டாட்டிங்க மட்டும் வெயிட்டே குறைய மாட்டாங்க



--------------------


5. திருமதி தமிழ் ஷுட்டிங் ஸ்பாட்ல சொந்த் சம்சாரம் கூடத்தான் டூயட்டானு ராஜகுமாரனுக்கு சலிப்பும் தேவயானிக்கு வெட்கமும் வந்திருக்கும்்



----------------------


6. ஹனிமூன் போறதுன்னா நீங்க பாட்டுக்கு போங்க.கார்ல ரோஸ் மல்லிகை எல்லாம் ஒட்டி நிலவைக்கொண்டு வா ( வாலி) பாட்டெல்லாம் போட்டு க்டுப்பேத்தாதீங்


------------------------

7. மெல்லத்திறந்ததுகதவு அமலா மாதிரி ஒரு பிகரு பஸ்ல.சத்யா கமல் மாதிரி கிஸ் அடிச்சுடலாம்னு பார்த்தா சின்னத்தம்பி வில்லன் மாதிரி 3 அண்ணன்க



-------------------

8. ஜட்ஜ் ,வக்கீல்களுக்குப்பிடிச்ச நடிகை - அமLAW பால்



-----------------------


9. ஒத்தைல மெத்தைல அத்தை பொண்ணு காத்திருக்கு # கவித கவித


---------------------


10. டியர்.நம்ம பையனுக்கு குழப்பம் இல்லாத ஒரு பேரு வைக்கனும்.



குழப்பாதேடி.நமக்குப்பொறந்தது பொண்ணு



----------------------------


11. தியேட்டரில் இடைவேளை விட்ட பின் இயல்பாய் இருக்க முடிவதில்லை ...கள்ளக்காதலர்கள்


-------------------


12. பளீர்னு பிகர் இருக்குன்னு லவ் பண்ணாதே.பளார்னு அறை.விழலாம் # டேவிட்டின் டைரியிலிருந்து


--------------------


13.  டாக்டர்.ஒரு பத்து வருசம் பின்னாடி போயிட்டா நல்லா இருக்கும் போல இருக்கு



.ரியாஸ்.-,10 ஸ்டெப் பின்னால போனாலே 10 டைம் இடிச்சுக்குவீங்க


--------------------------------


14. கர்ச்சீப்பை தொலைச்சுட்டேன். ( பஸ்ல சீட் போட்டப்ப) இன்னைக்கு பூரா ஜொள் விடாம இருக்கனும் குமாரு ;-)



---------------------


15. உலகில் அழகான பிகருக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் " மிஸ் டைம் ப்ளீஸ் " னு எதிர் ல வர்ற எல்லாரும் கேட்பதே


---------------------


16. நான் சின்னப்பையனா இருக்கும்போது ( அதாவது 5 வருசத்துக்கு முன்) போர் அடிக்காத படம் எல்லாமே போர் நோ (போர்னோ) பிலிம்னு நினைச்சேன் ;-)


------------------


17. மன்னன் விஜயசாந்தி மாதிரி அடாவடி பொண்டாட்டி அமைஞ்சுட்டா புருஷன் ஓ பி எஸ் மாதிரி பம்முனா போதும்


--------------------


18. கமலின் கலை உலக வாரிசா தனுஷை கமலே அறிவிச்சுட்டா தனுஷ்க்கு தர்மசங்கடம்.ஸ்ருதி தங்கச்சி முறை ஆகிடும்


----------------------


19. தனுஷ் - உங்க வாரிசு ஆகிடனும்னு கடுமையா உழைக்கிறேன் .



 கமல் - மாப்ளை ஆகிடாம இருந்தா சரிதான்.


---------------------


20. பஸ்ல ஒரு பிகரு - ஹாய் ஜென்ட்டில்மேன்.மே ஐ சிட் ஹியர்.



 மீ - தாராளமா உக்காந்துக்குங்க.ஆனா என்னைப்பத்தின தப்பான அபிப்ராயத்தை மாத்திக்குங்க



--------------------------------

Saturday, April 27, 2013

ஐந்து வருட வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை உண்டா?

ஐந்து வருட வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை உண்டா



மே, 2013-ல் 10 லட்ச ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்க உள்ளேன். கடன் காலம் ஐந்து வருடங்கள். குறுகியகாலம் என்பதால், வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகளை பெற முடியுமா? 

 
- ஜே.மகேஷ், செங்கல்பட்டு. சத்தியநாராயணன், ஆடிட்டர். 


''வீட்டுக் கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும், அசலுக்கும் வரிச் சலுகை பெற குறுகியகாலம், நீண்டகாலம் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை. இந்த மாதம் வாங்கி, அடுத்த மாதம் வட்டியோடு திருப்பிக் கட்டினால்கூட அதற்குரிய வட்டி மற்றும் அசலுக்கு வரிச் சலுகை கிடைக்கும். வீட்டுக் கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஒரு லட்ச ரூபாயும், வட்டிக்கு ஒன்றரை லட்ச ரூபாயும் ஓராண்டில் நீங்கள் வரிச் சலுகையாகப் பெற முடியும்.


மேலும், 2013 ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு வாங்கும் வீட்டுக்கான கடன் என்றால், திருப்பிச் செலுத்தும் அசலில் ஏற்கெனவே இருக்கும் 1.5 லட்சம் வரிச் சலுகையுடன் கூடுதலாக ஒரு லட்சம் சேர்த்து 2.5 லட்சமாக வரிச் சலுகை பெறலாம். கூடுதல் ஒரு லட்சத்தை முழுமையாக 2013-14-ல் க்ளைம் செய்யமுடியாவிட்டால், மீதமுள்ள தொகையை அடுத்த வருடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், இந்தச் சலுகையைப் பெற இது முதல் வீட்டுக்கான வீட்டுக் கடனாகவும், வீட்டின் மதிப்பு 40 லட்ச ரூபாய்க்கு மிகாமலும், கடன் 25 லட்ச ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.''

  

 ஒரு தனியார் நிறுவனத்தில் 11 வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்கியது. புதிய நிறுவனம் எங்களுக்கான பி.எஃப். எண்ணையும் மாற்றியது. இதனால் தற்போது இரண்டு பி.எஃப். எண்களோடு இருக்கிறேன். வேலையைவிட்டு விலகிய பின்னர் பி.எஃப். தொடர்பாக நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் இல்லை. என்ன செய்வது? 


- எஸ். செல்வகுமாரி, வேப்பம்பட்டு. 

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக அதிகாரிகள், ராயப்பேட்டை. சென்னை.  

'' பி.எஃப். கணக்கைப் பொறுத்தவரை, நீங்கள் பணியாற்றிய நிறுவனம் சரிவர பதில் அளிக்க வில்லை என்று காத்திருக்கத் தேவையில்லை. மேலும், இரண்டு பி.எஃப். கணக்கு இருந்தாலும் உங்கள் பி.எஃப். தொகையை பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி  அலுவலகத்திலேயே இதற்குரிய தீர்வு கிடைக்கிறது.


 பி.எஃப். அலுவலகத்தில் பி.எஃப். தொகையை க்ளைம் செய்வதற்கு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து தேவையான விவரங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள்.  உங்களது பி.எஃப். எண் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை அணுகவும்.''



நான் சென்னையில் இருக்கும்போது தபால் நிலையத்தில் பி.பி.எஃப். தொடங்கி கட்டிக்கொண்டிருந்தேன். தற்போது வெளிநாட்டில் பணியாற்ற வந்துவிட்டேன். இந்த நிலையில் அந்த பி.பி.எஃப். கணக்கிலிருந்து வெளியேறிவிடலாமா? அல்லது தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கு மாற்றிக்கொள்வதோ, ஆன்லைன் மூலமோ தொடர முடியுமா? 


- விஜய்.  அனிதாபட், முதலீட்டு ஆலோசகர். 


''பி.பி.எஃப். கணக்கைப் பொறுத்தவரை,  பதினைந்து வருடங்களுக்குள் வெளியேற முடியாது. கணக்கைத் தொடராமல் இருந்தாலும், பதினைந்து வருடங்களுக்குப் பிறகே உங்கள் சேமிப்பை வெளியே எடுக்கமுடியும். மேலும், கணக்கை தபால் நிலையத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அனுமதிக்கப்படுகிறது.


ஆனால், ஆன்லைன் மூலம் பி.பி.எஃப். கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி தற்போது இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, பி.பி.எஃப். கணக்கிலிருந்து இப்போது வெளியேற முடியாது. முதிர்வு காலம்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.''  



நான் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் கொடுக்கும் வாடகையை காட்டி வரிச் சலுகை பெற முடியுமா? 


- தேனம்மை, புதுக்கோட்டை. செந்தில்குமார், ஆடிட்டர். 

''உங்களது ஓய்வூதியப் பட்டியலில் வீட்டு வாடகை படி அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வீட்டு வாடகை வரிச் சலுகையை பெற முடியும். ஓய்வூதியப் பட்டியலில் வீட்டு வாடகை படி குறிப்பிடவில்லையென்றால் வரிச் சலுகை பெற முடியாது. அப்படி அனுமதிக்கப்பட்டிருந்தால், ஓய்வூதியக் கணக்கு இருக்கும் வங்கியிலேயே வீட்டு வாடகை தொடர்பான ஆவணங்களைக் கொடுத்தால் வரிப் பிடித்தம் செய்யாமல் இருப்பார்கள். ஆனால், பொதுவாக ஊழியராகப் பணியாற்றும்போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகை படி ஓய்வூதியதாரர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.''




மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். நீண்டகால நோக்கில் பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்யலாமா? ஒரே தடவையில் முதலீடு செய்வது அல்லது எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது இரண்டில் எது நீண்டகால நோக்கில் பயன்தரும்? 


- ராகவன், சென்னை. அழகப்பன், இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ். 


''உங்களிடம் இருக்கும் பணம் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு அதன் தேவை  இல்லையெனில், பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களிலேயே ஒரே தடவை முதலீடாகச் செய்யலாம். நீண்டகால நோக்கில் 12 - 14 சதவிகித வருமானம் எதிர்பார்க்கலாம்.


பேலன்ஸ்டு ஃபண்டுகள் தவிர, யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப், ஐ.சி.ஐ.சி. புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் போன்ற ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.


நீண்டகால நோக்கில் என்கிறபோது முதலீட்டிலும் பாதிப்பிருக்காது. பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களைவிட 2 - 3 சதவிகிதம் வருமானம் அதிகமாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.''

thanx - vikatan

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4 


சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அபாயம் விளைவிக்கும் ஆபத்து கொண்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறையை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விட்டு மத்திய, மாநில அரசுகள் ஆலை அமைக்க அனுமதி கொடுத்தன. மக்களின் கடுமையான எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. ஆலையை தடை செய்யக் கோரி போராட்டங்கள் வலுத்தபோதிலும், ஆலை செயல்பட தொடங்கியது.

அரசாங்கம், அதிகாரிகள், சில சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள் என முக்கியமான அங்கத்தினர் அனைவரும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக களம் இறங்கியதால் ஏழைகளில் கூக்குரல் எடுபடவில்லை. இதனால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997 நவம்பர் 7-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், "ஸ்டெர்லைட் நிர்வாகம் விதிமுறையை மீறி செய்லபட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறி விட்டனர்.ஆலையில் விபத்து ஏற்பட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படாமல் அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு இருக்கும் மன்னார் வளைகுடாவுக்கு வெகுஅருகில் இருக்கும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதே அடிப்படையான தவறு. மத்துய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வர்ரியமும் விதிமுறைகளை மீறி இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்து இருக்கின்றன. அதனால் இந்த ஆலையை தடை செய்ய வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


விபத்தும் உயிரிழப்பும்

இதனிடையே,ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கியதில் இருந்தே தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்வதற்கு பழகி விட்டனர்.1997-ல் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் திடீரென ஆலையில் ஏழு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.அந்த சமயத்தில் அந்த ப்குதியில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி நூலிழையில் உயிரை தக்க வைத்துக் கொண்டனர்.

சில மாதங்களுக்கு பின்னர் கந்தக குழாய் வெடித்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உடல் வெந்து உயிரிழந்தார்.அதே வருடம் ஜூலை 5-ம் தேதி ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேறியது. இதில் அருகில் உள்ள பூ கம்பெனியில் வேலை செய்த 165 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக இதில் தலையிட்ட அதிகாரிகள் மறுநாளே ஆய்வு செய்து அங்கு நடந்த விபத்து காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டனர்.38 நாட்களுக்கு பின்னர் ஆலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.ஆனால், அடுத்த மாதமே மற்றொரு விபத்து.அங்குள்ள செம்புக் கலவை உலை வெடித்து சிதறியதில் நெருப்பு ஜுவாலை பனை அளவுக்கு எரிந்தது.தூத்துக்குடி நகர மக்கள் இந்த விபத்தை கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய பெருமாள், சங்கர் என்ற இரு தொழிலாளர்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தனர். மூன்று பேர் பலத்த தீ காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தூத்துக்குடி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.இதனை சமாளிக்க நினைத்த மாவட்ட நிர்வாகம்,உடனடியாக ஆலைக்கு சென்று சோதனை நடத்தியது. அத்துடன் மறுநாளில் ஆலையை மூடவும் உத்தரவிட்டது.இரண்டு மாதத்துக்குள் மக்களிடன் கோபம் சற்று மறைய தொடங்கியதும் மீண்டும் ஆலை திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியது.

1998 நவம்பர் மாதத்தில் கசல்ஃப்யூரிக் அமிலம் செல்லும் குழாய் வெடித்து சிதறியது. அப்போது அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டு இருந்த 5 பொறியாளர்களும் ஒரு கூலித்தொழிலாளியும் அமிலம் தெறித்ததில் உடல் முழுவதும் வெந்து போனார்கள். அடுத்த சில நாட்களிலேயே ஆயில் டேங்க் வெடித்து தீப்பற்றியதால் தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்கள். 1999 மார்ச் 3-ம் தேதி மீண்டும் ஆலையில் இருந்து நச்சுப்புகை அதிகமாக வெளியேறியது.இதனால் ஆலைக்கு அருகில் உள்ள ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றிய ஊழியர்கள் 11 பேர் மயக்கம் அடைந்தனர்.உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.

அனுமதி இல்லாமலே விரிவாக்கம்

ஆலையில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை கொண்ட அமிலங்கள் கலந்து இருக்கின்றன.இந்த புகை காற்றில் கலந்து விட்டல் அதனை கண்டு பிடிக்க முடியாது.ஆனால், அதனை சுவாசிப்பவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.இந்த புகையானது காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்து விட்டால், அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால், ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் அளவு அடிக்கடி அதிகரித்து வந்ததால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நெஞ்சக நோய்கள்,தலை சுற்றல்,வாந்தி, கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகளை சுட்டிக் காட்டி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய கொடூரமான பக்க விளைவுகளை கொண்டிருக்கும் ஆலையின் செயல்பாடு லாபத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.இந்த ஆலை தொடங்கப்பட்டபோது, காப்பர் உருக்கு ஆலையில் இருந்து வருடத்துக்கு 70,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2005-ல் இந்த ஆலை நிர்வாகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,"ஆலையின் திறனை அதிகரித்து 3 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.இது தவிர காப்பர் கம்பிகள உற்பத்திக்காக புதிய பிரிவு தொடங்கபப்ட்டு இருக்கிறது" என தெரிவித்து உள்ளனர்.

ஆலைகளை பொறுத்தவரை, அதன் உற்பத்தியை அதிகரிக்கும் போது அதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டியது அவசியம்.அதே போல அந்த ஆலைக்கு அதன் துணை அமைப்புக்கான பிரிவுகளை புதிதாக நிர்மாணிக்கவும் அனுமதி அவசியம். ஆனால் இந்த அடிப்படை விதிகள் கூட ஆலை நிர்வாகத்தால் கடைபிடிக்கப்படவில்லை என்கிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 5


த்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வந்தது.ஆலையில் நடந்த விபத்துக்களுக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பல முறை அபராதம் கட்டிய சம்பவங்களும் நடந்தன.1997-ல் மே 3 ம் தேதி  65,000 ரூபாயும், ஆகஸ்ட் 30-ல் 3,60,000 ரூபாயும் அபராதமாக கட்டியது.அடுத்த ஆண்டில் ஒரு முறை 90,000 ரூபாயும்,மற்றொரு முறை நான்கரை லட்சமும் அபராதம் கட்டியது.
ஆனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில்,இந்தத் தொகை வெகு சொற்பம் என்பதால் ஆலை நிர்வாகம் இதற்காக பெரிதாக அலட்டிக் கொளளவில்லை. அதே போல விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் இதற்கு முன்பும் பலமுறை ஆலை மூடப்பட்ட வரலாறு இருக்கிறது.ஆனால், அதனை சமாளிக்கும் வித்தையை ஆலை நிர்வாகம் அறிந்த்து வைத்து இருந்ததால் அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வழக்கம் போல மீண்டும் உற்பத்தியை தொடங்கியது.

ஆலை தொடங்கப்பட்ட ஒராண்டு வரையிலும் உள்ளே நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்ததே இல்லை.ஓராண்டுக்கு பின்னர் ஓரளவுக்கு தகவல்கள் வெளியே கசிய தொடங்கின.அதன்படி 1996-ல் இருந்து 2004 வரை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும் 136 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதன் பின்னர் அமில லாரியில் ஏறிய ஊழியர் பலி,அமில டேங்கில் ஏற்பட்ட விபத்து என பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வந்தாலும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் வாய் திறப்பதே கிடையாது.

சுற்றுச்சூழல் துறையின் கண்டனம்

வனத்துறையையும் சுற்றுச்சூழல் துறையையும் இந்த ஆலை நிர்வாகம் மிகவும் மோசமாக ஏமாற்றியிருக்கிறது.வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் அமில கழிவுகளை கொட்டி வைத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் விதிமுறைக்கு புறம்பாக இருந்ததால் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து ஆலை செயல்பட்டு வருவதை அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் ஓப்பனாக கண்டித்தார்.

சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும்போது வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை தெரிவிக்காதது,ஓராண்டுக்கு ஒரு மில்லியன் டன் அலுமினிய சுத்திகரிப்புக்கு அனுமதியை பெற்றுக்கொண்டு,எந்த ஒப்புதலும் பெறாமல் அதனை ஆறு மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்தது சட்ட விரோதம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.

இதனால் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது? எனக் கேட்டு சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ஜெயராம் ரமேஷ், அந்த துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.அது தற்செயலானதுதானா அல்லது அதன் பின்னணியில் வேதாந்தா நிறுவனம் இருந்ததா என்பதையே சிலர் கேள்வியாக எழுப்புகிறார்கள்.

இது தவிர, இந்த நிறுவனத்துக்காக மூல கனிமங்கள் வெட்டி எடுக்கபப்டும் 14 சுரங்கங்களில், பத்து சுரங்கங்கள் சட்ட விரோதமாக தோண்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

வாதாடிய வைகோ
ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து நீண்ட நெடுங்காலமாக சட்ட போராட்டம் நடந்து இருக்கிறது. தற்போதும் அந்த சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 1996 நவம்பரில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ம.தி.மு.க. சார்பில் வைகோ இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில்,"காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.இந்த பாதிப்புகளையும் மக்களின் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு 1995-ல் அனுமதி கொடுத்து விட்டன.அதனால் இந்த பாதிப்புகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.இந்த வழக்கை இழுத்து அடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் வைராக்கியத்துடன் களம் இறங்கிய வைகோ, நீதிமன்ற நடவடிக்கைகளில் தானே ஆஜராகி வாதாடினார்.அவரது வாதத்திறமையை கண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் அவரை வளைக்க எத்தனையோ திட்டங்களை தீட்டியது.ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

அதிர்ச்சி அளித்த 'நீரி' அறிக்கை

இந்த நிலையில்,1998 அக்டோபர் மாதத்தில் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதன்படி, நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பு இந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அதிகாரிகள் குழுவினர் ஆலைக்குள் சென்று பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.வழக்கை தாக்கல் செய்திருந்த வைகோ உள்ளிட்டோரும் அந்த ஆய்வின் போது அக்குழுவுடன் பங்கேற்றனர்.

சுமார் இரண்டு மாத காலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆலை வளாகத்துக்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள்,எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் மலைபோல கொட்டப்பட்டு கிடந்ததை குழுவினர் பார்த்தனர்.சுற்றுப்புற கிராமங்களுக்கு அவர்கள் சென்ற போது அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் விவசாயத்தும் மக்கள் திண்டாடி வருவதை கண்டு அதிர்ந்தனர்.இது தவிர காற்றில் பெரும் அளவுக்கு சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத் தன்மை பரவி இருந்ததும் தெரிய வந்தது.
அந்த குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,"ஆலை வளாகத்திலும் அதனை சுற்றிலும் உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.அதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது" என தெரிவித்தது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்,  உடனடியாக ஆலையை மூட உத்தரவிட்டது.ஆனால், 'நீரி' அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று ஆலையில் மாற்றங்களை செய்திருப்பதாக ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு பின்னர் இந்த உத்தரவை மாற்றிக் கொண்டு மறு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி,"ஆலை இரண்டு மாதங்கள் இயங்கும்.அதற்குள்ளாக 'நீரி' அமைப்பு மறுபடியும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.இதனால் ஆலை மறுபடியும் இயங்க தொடங்கியது.

இரண்டாவது அறிக்கை என்ன சொன்னது..? நாளை பார்க்கலாம்...

நன்றி - விகடன்

டிஸ்கி -

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3
http://www.adrasaka.com/2013/04/1-2-3.html

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

 

யூ ட்யூப் ல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலை வெறி டி பாட்டு  இடம் பெற்ற சைக்கோ ஸ்டார் தனுஷ் -ன் 3 அட்டர் ஃபிளாப் ஆச்சே, அதுக்கு அடுத்த வாரிசு , ட்ரெய்லர்லயே செம கலக்கு கலக்கின யாருடா மகேஷ்  பட ட்ரெய்லர் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்ன ஆச்சு?னு பார்ப்போம் .


ஹீரோ 10 அரியர் வெச்சிருக்கும்  பாடாவதிப்பையன். ஹீரோயின் காலேஜ்லயே ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன   பொண்ணு. அந்த டக்கர் ஃபிகருக்கு இந்த டொக்குப்பையன் ரூட் விடறான். பெருசா அவன் 1ம் செய்யலை . சும்மா பார்க்கறான், சிரிக்கறான் , பின்னாலயே நாய் மாதிரி அலையறான் , அதுக்கே ஃபிகர் படிஞ்சுடுது. ( நாம எல்லாம் 4 வருஷம் அலைஞ்சாலும் யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை )

 அது கூடத்தேவலை. படிப்புல நெம்பர் ஒன்னா இருக்கும் ஃபிகரு படுக்கைல யும் நெம்பர் ஒன் ஆக ஆசப்படுது.  வீட்ல அம்மா, அப்பா இல்லாதப்ப ஹீரோவுக்கு ஃபோன் பண்ணி “ டாடி மம்மி வீட்டில் இல்லை , பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லை ,சீக்கிரம் வாடா  சண்டாளா ஜிகு ஜிகு ஜிச்சு ஜிச்சு  ஜிச்சு டன டன டனடைன் அப்டினு கூப்பிடுது .





 இவனும் போறான். டைனிங்க் டேபிள் ல டிஃபன் சாப்பிடறான், அப்புறம் பெட்ரூம் போய் ஃபுல் மீல்ஸும் சாப்பிடறான் . ( ஹி ஹி ) ஹீரோயினோட , ஹீரோவோட அம்மா , அப்பா எல்லாம் மாமா , அத்தை மாதிரி போல , கண்டுக்கலை . மேரேஜ் பண்ணி வெச்சுடறாங்க . ஒரு குழந்தையும் பிறக்குது .

 இங்கே தான் ஒரு ட்விஸ்ட். ஒரு டைம் ஹீரோயின் ஃபோன்ல “ டேய் , மகேஷ் , உன்னை விட பெரிய இளிச்சவாயன் சிக்கிட்டான் , உன் குழந்தைக்கும் அவனே அப்பா ஆகிட்டான்” அப்டிங்கறா. நமீதாவை 8 கஜம் சேலைல பார்த்த மாதிரி ஹீரோ ஜெர்க் ஆகிடறான். யாருடி அந்த மகேஷ்னு அப்பவே பளார் பளார்னு 2 அறை விட்டு கேட்டிருந்தா படம் 7 ரீல் லயே முடிஞ்சிருக்கும் , 14 ரீல் இழுக்கனுமே? அதனால ஹீரோ துப்பறியும் சாம்பு கணக்கா கிளம்பி உண்மையை கண்டு பிடிக்க முயற்சிக்கறது தான் மிச்ச மீதிக்கதை


ஹீரோ  கன்னட ஆள். சந்தீப். நம்ம சிரிப்பு இளவரசி சினேகாவோட  முன்னாள் நண்பரான ஸ்ரீகாந்த் முகச்சாயலில் இருக்கார் . ஆள் பர்சனாலிட்டி தான் .நமக்குத்தான் ஆம்பளைங்க பர்சனாலிட்டியா இருந்தா பிடிக்காதே . ஹி ஹி . ஆனா நடிப்பு சுமாராத்தான் வருது . டயலாக் டெலிவரி , டான்ஸ் , ரொமான்ஸ் எல்லாம் ஓக்கே . முயற்சி எடுத்தா முன்னுக்கு வரலாம் 


 ஹீரோயின்  டிம்ப்பிள் . முகத்துல ஒரு பிம்ப்பிள் கூட இல்லை .வழிச்சு வெச்ச மொசைக் தரை மாதிரி க்ளீனா இருக்கு . கண்ணா லட்டு தின்ன ஆசையா  ஹீரோயின் சாயல் ல இருக்கு , 65 மார்க் போடலாம். ( நாம வாங்கறது எப்பவும் ஃபெயில் மார்க்கு இந்த லட்சணத்துல ஊர் ல இருக்கறவங்களுக்கெல்லாம் மார்க் போடறது அலம்பல்டா ) .


பாப்பா கிட்டே டைரக்டர் உக்காரும்மான்னு சொன்னா பெட்ஷீட் குடுங்க சார் , விரிச்சு போட்டு படுத்துக்கறேன்னு சொல்லும் போல . ரொம்ப தாராள மனசு. படம் பார்க்கறவங்க 32 பல்லும் தெரியற மாதிரி சிரிக்கறாங்க , ஹி ஹி . பாப்பாவுக்கு முக பாவனைகள் , நடிப்பு நல்லா வருது ( பார்த்தீங்களா? நான்  ஹீரோயின் முகத்தை கவனிச்சிருக்கேன் , நீ நல்லவண்டா) 

 காமெடிக்கு விஜய் டி வி  நண்டு ஜெகன் .  சந்தானம் மாதிரி ஆக ட்ரை பண்ணி இருக்கார் 30 % கூட ஒர்க் அவுட் ஆகலை . 
 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. யூ ட்யூப் ட்ரெய்லர் ரெடி பண்ணியதுதான் இவரது பிரமாதமான  ஒரே காரியம். பலரையும் எதிர்பார்க்க வைப்பதே ஒரு ட்ரெய்லரின் முக்கியப்பணி என்பதால் 2013ஆம் ஆண்டின் சிறந்த கமர்ஷியல் ட்ரெய்லர் விருது ( ஏப்ரல் வரை வந்ததில் ) இதுக்குத்தான் . 


2. ஹீரோ , ஹீரோயின் செலஷன் அவங்க கிட்டே வேலை வாங்குனது எல்லாம் ஓக்கே .


3. படத்துல  5 பாட்டு . 3 தேறிடும் . ஓடும் உனக்கு இது ரொம்ப ரொம்ப புதுசு , ஆடும் எனக்கு இது ரொம்ப பழசு செம கிக் ஏற்றும் பாடல்.  புதுப்பார்வை தந்தாயே டூயட் சாங்க் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் அருமை , என்ன வரின்னே புரியாத, புரியத்தேவை இல்லாத ஒரு கில்மாப்பாட்டு , 


4. ஜெகனுக்கு  அந்த இடத்தில் ஒரு டைம் அடிபடுவது வழக்கமான காமெடி என்றாலும் 2 வது முறை அடிபடும்போது ஒரு முட்டை கிராஃபிக்சில் பறந்து வந்து 2 ஆக உடைந்து 2 குருவிகள் பறப்பதும் பின்னணியில் ஒரு கூட்டுக்கிளியாக , ஒரு தோப்புக்குயிலாக பாட்டு ( படிக்காதவன் ) இடம் பெறுவதும் கலக்கலான காமெடி 


5. ஆங்காங்கே விரச வசனங்களை ஒதுக்கிப்பார்த்தால் காமெடி நல்லா இவருக்கு ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது 





இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்( கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த மதன் குமார் )


1. பார்ட்டிக்குப்போன ஹீரோயின் ஹீரோ கிட்டே “ குழந்தையை பார்த்துக்கோ” என சொல்லிட்டுத்தான் போறா. ஹீரோ திடீர்னு லூஸ் மாதிரி குழந்தையை விட்டுட்டு பார்ட்டிக்கு வந்துடறான், பார்ட்டி முடிஞ்சு ரிட்டர்ன் போனதும் அப்போ வீட்டுக்கு வந்திருக்கும் ஹீரோவின் பெற்றோர் ஹீரொயினை திட்டும்போது  ஹீரோயின் ஏன் பம்மனும்? தப்பு உங்க பையன் மேல தான்னு சொல்லலாமே? 


2. பொதுவா பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டா அவளை விட்டு விலகனும் , அல்லது நேருக்கு நேர் அவ கிட்டேயே விசாரிக்கனும், அதை விட்டுட்டு சி ஐ டி மாதிரி வேவு பார்ப்பது , அலைவது (இந்தக்கதைக்கு )தேவை இல்லாதது . தெரிஞ்சு என்ன பண்ணப்போறான்?  (அவ வாயாலாயே கேட்டாச்சு , நோ டவுட் , அப்புறம் என்ன ? அவ கிட்டேயே கேட்டுட வேண்டியதுதானே? ) 


3. ஹீரோயின் பணக்காரி , ஜாப்க்கு போறா . ஹீரோ ஹவுஸ் ஹஸ்பெண்டா குழந்தையைப்பார்த்துக்கிட்டு பொறுப்பா வீட்டோட மாப்ளையா இருக்கான். இதுக்கு மேல ஒரு ஹை க்ளாஸ் ஃபிகருக்கு என்ன வேணும் ? அவன் வேலைக்கு போகலையேஅப்டினு எப்போ பாரு ஏன் புலம்பிங்க்? ஆம்பளைங்க நிம்மதியா இருப்பது இந்த பொம்பளைங்களுக்கு பிடிக்காது போல


4. ஹீரோ மேட்டரை முடிச்சுடறான் . ஹீரோயின் மேல் படிப்புக்காக ஃபாரீன் போறா . இவன் “ ஐ ஜாலி என் ஆள் ஊருக்குப்போய்ட்டா” அப்டினு ஜனகராஜ் மாதிரி துள்ளிக்குதிக்க வேணாமா? லூஸ் மாதிரி “ என்னை மறந்துட மாட்டியே?  அடிக்கடி ஃபோன் பண்ணுவியா? அப்டினு பேசிட்டு இருக்கான். இந்தக்காலத்துல மேட்டரை முடிச்ச ஒரு காதலனுக்கு  காதலி மேல இவ்ளவ் அஃபக்‌ஷன் வருமா? 


5. கில்மா காமெடி என்பது கே பாக்யராஜ் பண்ற மாதிரி லேடீசும் ரசிப்பது மாதிரி இருக்கனும் , எஸ் ஜே சூர்யா-து மாதிரி பட்டவர்த்தனமா இருக்கக்கூடாது , எப்போதும் இலை மறை காய் மறைக்கே மதிப்பு , ஆர்வம்  எல்லாம் 


6.  ரோபோ சங்கரின் 3 நிமிஷ காமெடி படு செயற்கை  விரசசத்தின் உச்சம், மாரியம்மன் கோவில் கரகாட்டக்கோஷ்டி கூட இப்படி பச்ச்சையா பேச மாட்டாங்க 


7. படம் நெடுக  நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு .


8. ஜெகனுக்கு ஜோடியாக வரும் மொக்கை ஃபிகரை செலக்ட் பண்ணினது யாரு?  நல்ல ஃபிகரா போட்டிருக்கலாம் 

9. இடைவேளை வரை வசனங்கள் காப்பாற்றி இருக்கு . இடைவேளை வந்ததும் படம் படுத்துடுது .  திரைக்கதை அமைப்பில் கோட்டை விட்டு விட்டார் இயக்குநர் . ஒரு ஆளைத்தேடிப்போகும் திரைக்கதை தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதே இல்லை


 10.  நமீதா  தன் தலைல தானே மண்னை  வாரிப்போட்டுக்கொண்ட மாதிரி எந்தப்பொண்ணாவது  தன் கேரக்டரை தானே ஸ்பாயில் பண்ணிக்கொள்வாளா?  டிராமா  என்று சால்ஜாப்பு சொன்னாலும் எடுபடவில்லை 


11. என்னதான் அப்பா , பையன் சகஜமா பழகினாலும் கில்மா சி டி காட்சிகள் எல்லாம் ஓவர் 



 மனம் கவர்ந்த வசனங்கள்   18 + 


1. ''ஏய்... கொஞ்சம் காட்டேன்...''



  ''ச்சீய்...'' -

  ''கொஞ்சம் காமியேன்...''

  ''போடா!''

  ''யாரும் பார்க்க மாட்டாங்க, நான் மட்டும் பார்த்துக்குறேன்.''


''சரி, பார்த்துத் தொலை!''

எக்சாம் பேப்பரைக்காட்ட இந்த சிலுப்பு?


2. ஒரு வயசுப்பையன் ரூமுக்குள்ளே கதவைத்தட்டிட்டு உள்ளே வர வேணாம்?


3. என்னை மாதிரி வயசுப்பையனைக்கூட நம்பிடலாம், ஆனா உன்னை மாதிரி வயசான ஆளை நம்பக்கூடாது

4. மேத்ஸ் எக்சாம் எப்டிடா எழுதுனே? அந்த SUM சுந்தரி மிஸ் முதுகு மாதிரி பெருசா இருக்குடா


5.  டேய் , முன்னாடி , பின்னாடி பார்த்து வண்டி ஓட்டுடா


முன்னால பார்த்தாச்சு , பின்னால இனிமேத்தான் பார்க்கனும்



6.  நாளைக்கு என்னடா பரீட்சை?

 இங்க்லீஷ் டாடி

 ஓஹோ , அதுக்குத்தான் அந்த இங்க்லீஷ் படம் பார்த்துட்டு இருந்தியா?



7.  சார், நிக் நேம் வெச்சு விளையாடறாங்க சார் , உங்களுக்குக்கூட பட்டபேரு இருக்கு

 அப்டியா? என்ன அது?

 வேணாம் சார், எனக்கே  வெட்கமா இருக்கு


 சும்மா சொல்லுங்க

 சின்ன மணிங்கற உங்க பேரை .........


8. இந்த எக்சாம்க்கு கால்குலேட்டர் எதுக்கு கொண்டாந்திருக்கே?


 மேத்ஸ்  எக்சாம்க்கு கால்குலேட்டர் கொண்டு வராம எஸ்கலேட்டரா கொண்டு வருவாங்க ?



9. உங்க 2 பேருக்கும் ஏன் சண்டை வந்தது?


 அவ மொபைல்ல எப்பவும் 50 பைசா தான் பேலன்ஸ் இருக்கும், எப்பவும் மிஸ்டு கால் தான் வுடுவா , நான் தான் பேசுவேன் . ஆனா ஒரு டைம் அவ மிஸ்டு கால் குடுக்கும்போது தெரியாம அட்டெண்ட் பண்ணிட்டேன் ,. இருந்த 50 பைசாவும் போயிடுச்சு , அவளுக்கு அவுட் கோயிங்க் கட். அதான் கோபம்


 த்தூ


10.  டியர் , சினிமாவுக்குப்போலாமா , இது ஒரு கில்மாப்படம்

 ச்சீ நான் வர்லை

 ம்க்கும், அன்னைக்கு போர்வைக்குள் போர்க்களம் மட்டும் வந்தே ?



11.  எனக்கு பாட்டுக்கேட்கலைன்னா தூக்கமே வராது


 நல்ல வேளை பால் குடிக்கலைன்னா தூக்கமே வராதுன்னு சொல்லாம விட்டியே . நீ அங்கே போ , ஏம்மா கொஞ்சம் போர்த்திட்டு படும்மா, எனக்கே ஒரு மாதிரியா இருக்கு . எவனாவது படம் எடுத்திடப்போறான்


12. நீ த்ரிஷா மாதிரியே இருக்கே


 நிஜமாவா? 


 சும்மா, நீ த்ரிஷாவை நேர்ல பார்த்ததே இல்லையா?



13. எங்கேடா போய்ட்டு வர்றே?

 உடம்பு சரி இல்லை,  டானிக் குடிச்சுட்டு வர்றேன்

 டாஸ்மாக்கில் டானிக்கா>?



14.  எங்கே ஆ காட்டு

 ஆ

 அடேங்கப்பா , எவ்ளவ் பெரிய வாய் . வாயே இவ்ளவ் பெருசா இருக்கே....



15.  பிரின்சி பால் - டேய் ராஸ்கல்

 சார், அது எங்கப்பா சார்


16.  இங்கே 1 ஃபிகர் கும்முன்னு இருந்துதே எங்கே காணோம் ?

 அட இங்கே கூட 1 இருக்கு

 மிஸ் , உங்க பேரென்னா?


 உங்களுக்குத்தான் எட்டலையே? ஏன் எம்பறீங்க?




17.  ரூமில் இருக்கும் பிரின்சிபால் ( பக்கத்தில் ஒரு டீச்ச்சர்)

 உள்ளே வாடா

 வேணாம், சார், நானும் வந்தா அது நல்லா இருக்காது


18.  நீ படும்மா


 சார்

 அட, உன் ரூம்ல போய்ப்படும்மா


19.  என்னமோ நீ பெருசா ஃபிலிம் காட்டுனே, அவ ளுக்கு அதை விடப்பிரமாதமா நான் காட்டிட்டு வந்துட்டேன்



20.  டேய் , என்னடா ஜட்டியோட வந்திருக்கே?


 சார். அது வந்து .. என் பேண்ட்டை காணோம், அதைத்தேடித்தான் வந்தேன் ஹி ஹி


21. மேடம், வாங்க உங்களை நான் டிராப் பண்றேன்

 யோவ், என்னமோ பென்ஸ் கார்ல டிராப் பண்ற மாதிரி சொல்றீங்க்ளே, இந்த ரூம் ல இருந்து அந்த ரூம் போகப்போறேன்


22.  என்னடி? நெஞ்சுல கை வைக்கறே? நான் வெச்சா என்ன ஆகும்னு தெரியுமில்ல?


23.  என்னடா ? இவன் பாலா பட ஹீரோ மாதிரி இருக்கான்? பார்த்துடா , கடிச்சு வெச்சுடப்போறான்


24. தூங்கிட்டியா?

 ம் , சொல்


தூங்கிட்ட மாதிரி நடிக்கறியா? போடா


25. அவ என் கூட விடிய விடிய ஃபோன் ல பேசுனாடா

 இப்போ பாரு அவன் கூட பேசிட்டு இருக்கா. ஒரு வேளை 2 பேர் கூடவும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு பேசி இருப்பளோ ?



26. உன்னை வாத்து மடையன்னு சொல்லிட்டுப்போறான்

 அவனுக்கு எப்டி தெரிஞ்சுது ?



27.  Y, O , U , T ,H  = YOUTH யூத்-னு சொல்றோம் . ஆனா  S, O , U , T ,H  = SOUTH  சவுத்னு ஏன் சொல்றோம்? ஹி ஹி



28.  டேய் , முதல்ல போடு


 வாட்?

 காலைப்போடு

 அவ மேல காலைப்போடனுமா?

 ஸ்டுப்பிட் , CALL  போடுடா


29.  ஏய்


 திரும்பாதடி, திரும்புனா அவன் தண்ணி அடிக்க காசு கேட்பான்


30.  ஜெகனுக்கு கிரிக்கெட் ஆடும்போது பந்து முக்கியமான படக்கூடாத இடத்துல பட்டுடுது , அப்போ ஹீரோயின் கமெண்ட் டூ தோழி


 உன் ஆள் அவர் வாழ்க்கைல அடிச்ச கடைசி ஷாட் இது தாண்டி



31.  டேய் , அங்கே அடி பட்டுடுச்சுடா


 தேய்ச்சு விடுடா

 அது என்ன அலாவுதீன் விளக்கா?



32. டேய் , நீ என் நண்பன் தானே> காண்டம் ஒரு பாக்கெட் வாங்கித்தாடா

 அதை வாங்கி நீ என்னடா பண்னப்போறே?

 ம், பலூன் ஊதி பறக்க விட


33. ம்க்கும் , இவன் காண்டம் வாங்கவே இப்படிப்பம்முறான்.. இவனெல்லாம்


34.  கடைக்காரர் - ஏம்ப்பா பம்முறே?

 மெல்லிய குரலில் - சார் , காண்டம் வேணும்



 ஏன் ஸ்லோவா சொல்றே? (சத்தமா )
 தம்பிக்கு காண்டம் பார்சல் 



35. ஹீரோயின் - வாடா , டைனிங்க் ஹால் போயிடலாம் 

 அங்கே எதுக்கு?

 அதுதான் கம்ஃபர்ட்டபிளா  இருக்கும்


அடிப்பாவி 


36.  நீதாண்டி எஸ் எம் எஸ் ல பி எஃப் க்கு கூப்பிட்டே?

 அடேய், பிரேக் ஃபாஸ்ட் தான் அது  BREAK FAST = BF ) 



37 . இந்தாடா , உனக்காக இட்லியும் வடையும் ரெடி பண்ணி வெச்சிருக்கேன் 


 இதுக்கா இவ்ளவ் தூரம் வந்தேன்?

 தெரியும்,  அதான் பூரியும் பண்ணி இருக்கேன் 



38 . காலையில் மேட்டரை முடிச்சுட்டு வீட்டுக்குப்போன ஹீரோ ஹீரோயினுக்கு ஃபோன் பண்ணி 

 காலைல பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டோம் , நைட் டின்னருக்கு வரலாமா? ஹி ஹி  ( ஏன் லஞ்ச்க்குப்போகலையா? ) 


39.  பெண்ணின் அப்பா - வாட்ஸ் யுவர் ஃபியூச்சர் பிளான்?

 10 அரியர்ஸ் இருக்கு , அதை க்ளியர் பண்ணனும் 


40.  இவனுக்கு எப்டிங்க நம்ம பொண்ணைத்தர்றது?

 இப்போ இருக்கும் பொண்ணுங்க எல்லாம் செம விபரம் . ஃபாரீன் போனதும் இவளே அவனை கழட்டி விட்டுடுவா பாரு 



41.  உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும் 

 எஸ் டாடி 

 அந்த கில்மா சி டி எங்கே ? 


 42  நான் கர்ப்பமா இருக்கேண்டா 

 நாம தான் காண்டம் யூஸ் பண்ணினமே?

 நீ எப்படா யூஸ் பண்ணினே? 


43. ஏய் , கல்லு ரொம்ப சூடா இருக்கு 


 உனக்கு தோசை வேணுமா? வேணாமா?  தள்ளி நில்லு 



44.  மேடம், உங்களை நான் எப்பவாவது  இப்படி கட்டிப்பிடிச்சு இருக்கேனா?

யோவ் , இப்போத்தான் அதை பண்ணிட்டு இருக்கீங்க 



45.  ரோபோ சங்கர் - உன்னை நம்பி இவ்ளவ் பெரிய வீட்டைகட்டி வெச்சிருக்கேன்


 மனைவி - ஹூம் வீடு பெருசா இருந்து என்னய்யா பிரயோஜனம்?



46.  வெளில போய்ட்டு வந்த தால அவர் மண்டை சூடாகிடுச்சு , வீட்லயே இருக்கற உனக்கு 


 என்னங்க

 உடம்பு சூடாகிடுச்சுன்னு சொல்ல வந்தேன் 


47. என்னடா மச்சான்? உன் பொழப்பு  என் பொழப்பை விடக்கேவலமா இருக்கு? 


48. ஃபியூஸ் போன பல்பு நீ . உனக்கே அவ்ளவ் கொழுப்பா? 



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 


 குமுதம் ரேங்க் - சுமார் 

 ரேட்டிங்க்  2 / 5 



சி.பி கமெண்ட் -  சி செண்ட்டர் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். திரு விழாக்களில் கரகாட்டகோஷ்டிகளின் டபுள் மீனிங்க் டயலாக்சை ரசிப்பவர்கள் பார்க்கலாம், மற்றபடி பெண்கள் குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க இது உகந்த படம் அல்ல . ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்


படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட் -யாருடா மகேஷ் - சொதப்பலான கதை ,திரைக்கதை .விரசமான மொக்கை வசனங்கள் - விகடன் மார்க் மே பி - 36

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26 .4.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.நான் ராஜாவாகப் போகிறேன் - உதயம் வி.எல்.எஸ். சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிக்கும் படம் நான் ராஜாவாகப் போகிறேன். இதில் நாயகனாக நகுல், நாயகியாக சாந்தினி நடிக்கின்றனர். நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லிகணேஷ், மயில்சாமி, அவனிமோடி, கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகிறது. பதினைந்து வருடம் கழித்து மக்கள் பயனடையும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி குரல் கொடுத்து திரிபவர் மணிவண்ணன். அவர் கருத்துக்களை சாந்தினி பின்பற்றினார். இதனால் மணிவண்ணனுக்கு பிரச்சினைகள் உருவாகி அது சாந்தினிக்கும் தாவுகிறது.

சாந்தினியை காதலிக்கும் நகுலையும் அது தொற்றுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. நகுல், ஐ.டி. படிக்கும் மாணவ ராகவும், சாந்தினி சட்டக் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள்.

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ், வசனம்: வெற்றிமாறன். பாடல்: கார்க்கி, எடிட்டிங்: கிஷோர், இணை தயாரிப்பு என்.வி.டி.தேவ ராஜ்.

ஈரோடு தேவி அபிராமி , ஸ்ரீலட்சுமி யில் ரிலீஸ்  


2.யாருடா மகேஷ் - யாருடா மகேஷ் படத்தின் பெயர். சமீபமாக இளம் இயக்குனர்கள் வழக்கமான திரைக்கதை அமைப்பை விடுத்து புதிதாக முயற்சி செய்கிறார்கள். யாருடா மகேஷின் ட்ரெய்லரைப் பார்த்தால் இதுவும் அப்படியொரு முயற்சி போலதான் தெரிகிறது. சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு யாருடா மகேஷின் ட்ரெய்லர்தான் யு டியூபில் ஹிட். செம ரகளை. ஆண்டனி நவாஸ், ஆர்.மதன் குமார், சத்திய நாராணயன் என்று மூன்று பேர் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இதில் ஆர். மதன் குமார்தான் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமும். கோபி சுந்தர் இசை.

சிவா என்பவன் மகேஷை தேடிச் செல்வதுதான் படத்தின் ஒன் லைன். ரொமாண்டிக் காமெடியாக உருவாக்கியிருக்கிறார்கள். கன்னடத்தில் நடித்து வரும் சந்தீப் கிஷன் ஹீரோ. ஹீரோயின் டிம்பிள். இவர்கள் தவிர நண்டு ஜெகன், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத், சுவாமிநாதன், சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஆர். மதன் குமார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டனின் முன்னாள் உதவியாளராம். 


ஆனால் குருவைப் போல சொதப்பலாக இல்லாமல் நன்றாக இயக்கியிருப்பதாக கேள்வி. நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார். கலர் பிரேம்ஸும், ரெட் ஸ்டுடியோஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. 

 தமிழ் சினிமாவில் முக்கிய ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு. இந்தியிலும் முன்னணியில் இருக்கிறார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் ரத்தினவேலு என்ற பெயரை சுருக்கி ராண்டி என்று செல்லமாக அழைப்பார்கள். இதனை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் யாருடா மகேஷ் என்ற படத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது யூ டியூப்பில் ஒளிபரப்பாகிறது. இதில் ஒருவர் "ரத்தினவேலுவை ராண்டின்னு கூப்பிடுவீங்க அப்போ குழந்தை வேலுவேவை.....டின்னு கூப்பிடுவீங்களா?" என்று பேசும் வசனம் வருகிறது. இது ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவை கடுமையாக கோபத்திற்கு ஆளாக்கியது.

இதுகுறித்து ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரத்தினவேலு புகார் செய்திருக்கிறார். சங்கத்திலிருந்து யாருடா மகேஷ் இயக்குனர் மதனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். "அதை சும்மா ஜாலிக்காகத்தான் வைத்தோம் யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. படத்தில் அந்த வசனத்தை மோட் செய்து விடுகிறோம்" என்று உறுதியளித்திருக்கிறார் என்கிறது ஒளிப்பதிவாளர் சங்க வட்டாரம்.

ஈரோடு   சண்டிகா , சங்கீதா வில் ரிலீஸ் 

பட இயக்குநர் பேட்டி @ விகடன்


http://www.adrasaka.com/2013/01/blog-post_9873.html


யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2013/04/blog-post_8161.html

 


3.ஒருவர் மீது இருவர் சாய்ந்து - விஜய் நடித்து ஹிட்டான 'லவ் டுடே' மாதவனின் 'ஆர்யா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் புதிதாக 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தை  கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஆட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் நாராயணராஜு தயாரிக்கிறார்.

இதில் நாயகனாக லகுபரன், நாயகியாக சுவாதி நடிக்கின்றனர். இவர்கள் 'ராட்டினம்' படத்தில் அறிமுகமானவர்கள். இன்னொரு நாயகியாக சான்யதாரா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பாக்யராஜும், கவுரவத் தோற்றத்தில் விசுவும் வருகின்றனர். மாஸ்டர் பரத், சிங்கம் புலி,  ராஜ்கபூர், ஆர்த்தி, பரவை முனியம்மா, பாண்டு, சின்னி ஜெயந்த், அரவிந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

காதல், காமெடி படமாக தயாராகிறது. இரு பெண்களை பற்றிய முக்கோண காதல் கதை சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்துள்ளன. யாரும் சொல்லாத விஷயம் படத்தில் இருக்கும். இளமை கலந்த கலர்புல் படமாக  வந்துள்ளது.

சென்னை, பழனி, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது  இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

இசை: ஷிவா, ஒளிப்பதிவு: விஜயகோபால், எடிட்டிங்: வி.டி.விஜயன்.

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 

4. IRON MAN 3 - ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற ‘அயன்மேன்’ படத்தின் மூன்றாவது பாகம் இப்போது தயாராகியுள்ளது. வழக்கம்போல, அயர்ன்மேன் ஸ்டார்க், தான் உருவாக்கி வைத்திருந்த உலகத்தை அழித்த எதிரிகளை தேடிச் செல்கிறார். அந்த போராட்டத்தில் தனது சக்தி அனைத்தையும் இழக்கிறார். துன்பமான காலகட்டத்தில் அவருக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு விடை தெரிகிறது. அதை வைத்து மீதி எதிரிகளை முறியடிப்பது கதை. ரோபர்ட் டோனிவே, கெய்நத் பல்ட்ரோச் நடித்துள்ளனர். ஷேன் பிளாக் இயக்கி உள்ளார். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 26,ம் தேதி யுடிவி ரிலீஸ் செய்கிறது. 

ஈரோடு அபிராமியில் ரிலிஸ். ஒரு வாரம் தான் ஓடும், ஏன்னா அடுத்த வெள்ளி இந்த தியேட்டரில் எதிர் நீச்சல் ரிலீஸ் 

5. Aashiqui 2 - The entire star cast of Aashiqui 2 was spotted attending a concert to celebrate its music in Mumbai last night. The main leads of the film, Aditya Roy Kapur and Shraddha Kapoor along with director Mohit Suri were seen enjoying the melodious songs that were sung by the talented singers. Aashiqui 2, which is produced by Bhushan Kumar, is all set to hit the theatres on 26th April 2013.

ஈரோட்டில் ரிலீஸ் இல்ல

6. ஓ -ோ டப்பிங்க் பம் போல . ெலங்குப்ப ஒரிஜினல் டைட்டில் என்னெரியை . காஜல் அகர்வால் மிரி ெரியு . வக்கஆம்ப்ளங்கஞ்சியார்ப்பில்லை என்பால் ஹீரோ யார்னெரிய

 ஈரோடு ஸ்டாரில் ிீஸ்   


ஐஸ்வர்யா வை சுருக்கமா , செல்லமா கூப்பிடக்கூடாதா? ஏன்?

1. பாண்டிச்சேரி ரத்னா தியேட்டர்ல எமரால்டு பாரஸ்ட் .2 தெய்வீகக்கள்ளக்காதலர்கள் க்யூ ல.படத்துல பிட் ஓட்றாங்ளோ இல்லையோ பொழுது போகிடும்



--------------------------


2. தேவயானி (தன் ) நெஞ்சைப்பிடித்துக்கொண்டே படிக்கவும்.பாண்டிச்சேரி ரத்னா தியேட்டரில் 7 ஷோ தான் ஓடுச்சாம்.எடுத்துட்டாங்க.திரு திரு தமிழ்


------------------------------


3. ராகு காலம் ரைட் ல வந்தா நாம லெப்ட் ல கட் பண்ணி ஓடிடனும்



------------------------


4. பள்ளித்தோழியை வழியில் சந்தித்தேன்.முகவரி கொடுத்து பேமிலியோட வா என்றாள்.தனியா வராதேன்னு அர்த்தம் போல


------------------------

5. கை ஆளத்தெரியாமல் தடுமாறினால் இந்தியா.கையாளத் தெரியாமல் தடுமாறினாள் சந்தியா


------------------------



கவிதைகள் அனைத்தும் இடம்பெயர்ந்துவிட்டது
காரணங்கள் எல்லாம் காணாமலே போய்விட்டன
நேரங்கள் எல்லாமே ‘ஏகபோகமாய்’ மிச்சமிருந்தன..
பர்ஸ் தனது எடைக்குறைப்பை நிறுத்திக்கொண்டது
‘டெம்பிள் ரன்’ ஆடியது போக, பேட்டரி லைஃப் மீதமிருந்தது..
மேனேஜர் கோவப்படுவதற்கான அவசியமே அற்றிருந்தது..

அம்மாவை கோயிலுக்கு அழைத்துபோவது..
அப்பாவுக்கு போஸ்ட் ஆஃபீஸ் வரை போவது..
தங்கையை கல்லூரியில் கொண்டுவிடுவது..
தம்பியுடன் கிரிக்கெட்..
நண்பர்களுடன் கேரம்...

என.....

எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்துவிட்டது காதல்.


6. சமஸ்கிருத வார்த்தையோ ,வடமொழிச்சொல்லோ தமிழனைப்பொருத்த வரை பிரம்மாண்டம் = நமீதா .பிரமிப்பு = ஆண்ட்ரியா



------------------------


7. நெடுந்தொலைவு பஸ் ,ரயில் பயணங்களில் அறிமுகமற்ற பிகரிடம் பழக எளிய வழி.வாட்டர்கேன் தண்ணீர் கேட்பதே


----------------------



8. அத்தான்.தேவயானி கிட்டே அவர் புருசன் எப்டி எல்லாம் அன்பு காட்டறார் பாருங்க.



 எனக்கும் காட்ட ஆசைதான்.அதுக்கு ராஜகுமாரன் ஒத்துக்கனுமே? 



-------------------------------


9. தமிழ்நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கறதும் ,அழகான மச்சினியுடன் சம்சாரம் கிடைப்பதும் அபூர்வம்



------------------------


10. உன் கண்ணுக்கு வாரம் ஒரு முறை ஞாயிறு தெரிந்தால் நீ விடுமுறை விரும்பி.தினம் தினம் தெரிந்தால் இயற்கை விரும்பி


-------------------------



Creativity!
Creativity!

11. டாக்டர்.பஸ் ட்ராவல் எனக்கு ஒத்துக்கறது இல்லை.வாமிட் வந்துடுது.என்ன பண்ண ?


- ரயில்ல போங்க. 


அப்போ பஸ்ஸை யார் ஓட்டுவாங்க? 


---------------------------


12. உப்புசமா இருக்குன்னு சொல்லியே இன்னும் 2 மாசம் பொண்டாட்டிங்க எஸ் ஆகிடுவாங்க.ஏதாவது ஐடியா பண்ணனும்


-------------------


13. எல்லாவற்றையும் நானே ''தின்னுடுவேன்'' என்கிறாய்,ஆஹா .கொஞ்சமாவது மீதி வைக்கக்கூடாதா எனக்கு? சமச்சது நானு.


-------------------------


14. ஐஸ்வர்யா வை சுருக்கமா செல்லமா கூப்பிடறேன் பேர்வழினு யாரும் வர்யானு கூப்பிட்றாதீங்க.வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வந்துடுவாங்க


----------------------


15. கைல வெறும் 50 ரூபாயை வெச்சுக்கிட்டு இந்த் பொண்டாட்டிங்க எல்லாம் உழவர் சந்தையை ஒரு அலாசு அலாசுவாங்க பாருங்க உஷ் அப்பா முடியல


------------------------


மீண்டும் மீண்டும் அவன்!!!
===================

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம்.

“பளார்” பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்த படி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும்.

நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை.

அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது. முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள்.

அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு. அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்ன பாத்துட்டு இருக்கீங்க.... புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்கள உரசரதுக்குன்னே வர்றானுங்க....” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள்.

அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்த காரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின் பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல்
கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது.

தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்த இரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியான புத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின் இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒரு நியாயம் இருப்பது போல் இவனுடைய தாபத்துக்கும் ஒரு நியாயம் இருக்கும்.

"என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க. காது மேல ரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க" என்று அந்த அதிவீர பெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள். நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாக ஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை.

யாரும் அவனை அடிக்க தயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில் நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை. தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்ற ஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான். அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்ட மரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல் தெறித்துவிடாமல் ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை.

நான் அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல் அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாக அவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள்.

அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் தான் செய்த காரியத்துக்காய் வருத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன் வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் காளரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஐந்தாறு பேர் பின்
தொடர்ந்து வந்தார்கள்.

போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட் கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்...

"சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும். சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள் எப்படி விசாரிப்பார்கள் எப்படி மிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும்.

ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்று கொண்டிருந்தான். எல்லோர் பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது. என் அருகில் இரண்டு சிறுமிகள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து "திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன். பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.

எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன் தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும் அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.

கூட்டத்தில் இன்னொருவர் "என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எ சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவன இப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம் சார்." என்று மன்றாடினார்.

“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்க பாத்துக்கறோம்” என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில் பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில் சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள் ஓடினார்கள்.

இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு கீழே போனது. கூட்டம் கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம் விசாரித்தார்கள். அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.

அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்த பெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்த பையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும் அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர்
இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்று கொண்டாள்.

எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது.....

"படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...." என்றாள். அவர்கள் இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின் கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் இரண்டு வாரம் கழித்து அவனை சந்தித்தேன். இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன் நின்றிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரென பேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக டிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம் வந்தார்.

“டிக்கெட் எடு.”

அவன் மௌனமாய் இருந்தான்.

“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்ததுவற கீழே இறங்கு....”

அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.

எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது அந்த பெண்மணி பேசினாள்.

“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட் எடுத்துட்டேன். இதா சார்.” என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர் டிக்கெட்டின் மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன் கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான்.

பேருந்து புறப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவனை சந்தித்தேன் மெரினா பீச்சில். கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான். நான் அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன் கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது.

அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில் என் காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன்.

அவன் என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான். அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு. அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.

“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. 
என் சுயநலத்துக்காக உன்னை அனாதை ஆக்கிவிட்டேன். 
என்னை மன்னித்துவிடு.
தயவு செய்து என்னை பின் தொடராதே. 
என் கணவருக்கு நீ வந்த பாவ வாசல் தெரியாது. 
என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”

அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாக வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்த பேருந்தில் வருவதில்லை.

இப்பதிவு "அடுத்தவன் போட்ட Status திருட்டுத்தனமாக திருடி போடும் சங்கம்" என்ற பக்கத்திலிருந்து எடுத்தது......



16. திருமதி தமிழ் இயக்கம் வேற ஆளா இருந்தா வில்லங்கம்.பொண்டாட்டியை எப்டி கட்டிப்பிடிக்கனும்னு புருஷனுக்கே டியூஷன் எடுத்த மாதிரி ஆகிடும்



-----------------------



17. DR. பொதுப் படையா எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அடிப் படையா ஒரே பிரச்சனை தான். 



,படை ,சொறி ன்னா ஸ்கின் DRஐப்பார் 



-----------------------------


18. திருமதி தமிழ் - இடைவேளை வரை பயங்கரமா இருக்காம்.அதுக்குப்பின் பயமா இருக்காம் # ராஜகுமாரன் ராக்ஸ் ( க்ளோஸப் ஷாட்ஸ்) ்




------------------------


19. கடலை ரசிக்காத மீனும்் இல்லை. கடலையை ருசிக்காத பிகரும் இல்லை


-----------------


20. எந்த ஊரில் நாம் இருந்தாலும் பசி எடுக்கும்போது சொந்த ஊர்நினைவு் வந்துிடுது.பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே ஆகச்சிறந்த கொடுப்பினை


----------------------------



டி வி டுடே

Thursday, April 25, 2013

மக்கள் மனசு - ஜூ.வி. சர்வேயின் இறுதி எபிசோட்

மக்கள் மனசு! - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்
ஜூ.வி. சர்வேயின் இறுதி எபிசோட் இது. 


தமிழக அரசியலையும் நடப்பு விஷயங்​களையும் கேள்விகளாக்கி, தொடர் சர்வே முடிவுகளை வெளியிட்டு வந்தோம். 48 கேள்விகளை உள்ளடக்கி இரண்டு கட்டங்களாக நடந்த இந்த மெகா சர்வேயில், தமிழக அரசைப் பற்றிய கேள்விகளும் அடக்கம். வரும் மே 16-ம் தேதியோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதையட்டியே கேள்விகளைத் தயாரித்திருந்தோம். 7,756 நபர்கள் பங்கேற்ற இரண்டாம் கட்ட சர்வேயின் தொடர்ச்சி இந்த இதழில்...
கடந்த காலங்களில் நாம் சர்வே எடுத்தபோது ''எங்களுக்கு இலவசப் பொருட்கள் கிடைக்கவில்லை. நிவாரணம் தரவில்லை'' போன்ற கோரிக்கைகளையே அதிகமாக நம் முன் வைத்தார்கள். ஆனால் இப்போதோ, ''மின்வெட்டுப் பிரச்னை எப்போது தீரும் சார். இதற்கு விடிவே கிடையாதா?'' என்று பட்டிதொட்டி எங்கும் கேள்விக்கணைகளால் துளைத்தார்கள். சர்வே முடிவிலும் இது எதிரொலித்தது. 'அ.தி.மு.க. ஆட்சியில் உங்களை அதிகம் பாதித்தது?’ என்கிற கேள்விக்கு 'மின்வெட்டு’ என 69 சதவிகித நபர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்னை... 'மோசம்’ என்று 47 சதவிகித நபர்களும் 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என 39 சதவிகித நபர்களும் கருத்தைப் பதிவுசெய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் இரண்டு வருட ஆட்சியைப் பற்றி மதிப்பீட்டுக்கு 'சுமார்’ என்றே பெரும்பாலானவர்கள் டிக் அடித்திருந்தார்கள். மோசம், மிக மோசம் என்ற நிலைமைக்குப் போகாததை நினைத்து அ.தி.மு.க-வினர் சந்தோஷப்படலாம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு காப்பாற்றப்படும் என்கிற இமேஜ் சரிந்திருக்கிறது. இப்போது சட்டம் - ஒழுங்கு சுமார்தான் என 54 சதவிகித மக்கள் சொல்கிறார்கள். தமிழக அரசைவிட மத்திய அரசின் மீது மக்களுக்கு ஏக வெறுப்பு. மத்திய அரசின் நான்கு வருட ஆட்சி பற்றிய கேள்விக்கு 'மிக மோசம்’ என 58 சதவிகித மக்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.